நான்காம் அத்தியாயம் துணைவேந்தரின் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது. அங்கே வந்து உட்கார்ந்திருந்த கோட்டச் செயலாளரைத் தான் அவர்கள் அந்நியராகக் குறிப்பிடுகிறார்கள் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. அந்த ஆளிடம் தம் வாயால் அதை எப்படிச் சொல்வது என்று பயந்தார் அவர். தம்முடைய பயத்தை மறைக்க முயன்று கொண்டே அவர்கள் யாரை அங்கிருந்து வெளியேற்ற விரும்புகிறார்கள் என்பது புரிந்தும் புரியாதது போல, "அப்படி அந்நியராக இங்கே யாரும் இல்லையே?" என்று ஒவ்வொரு வார்த்தையாக இழுத்து நிறுத்தியபடி மாணவர்களை ஏறிட்டுப் பார்த்தார் துணைவேந்தர். அவர் வேண்டும் என்றே ஒன்றும் தெரியாதது போல் நடிப்பது பாண்டியனுக்கு ஆத்திரமூட்டியது.
இந்த நிலையில் கோட்டச் செயலாளருக்கே ரோஷம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. "உங்களை நான் அப்புறமா வந்து பார்க்கிறேங்க" என்று மேல்துண்டு தரையில் புரள நடந்து வெளியேறினார், அந்த ஆள். அவருக்கு ஆதரவாக 'வாக்-அவுட்' செய்வது போல் அன்பரசன் முதலியவர்களும் தொடர்ந்து வெளியேறி விட்டார்கள். துணைவேந்தர் பாண்டியன் மோகன்தாஸ் முதலிய மற்ற மாணவர்களிடம் பேச தொடங்கினார். "பல்கலைக் கழக எல்லையில் இப்போது நிலவும் நெருக்கடி நிலையை உத்தேசித்துத் தேர்தல்களையெல்லாம் தள்ளிப் போடலாம் என்று நினைக்கிறேன். நாளையே 'ஓரியண்டேஷன் டே' செலபரேட் செய்து விட்டுப் படிப்பிலும், வகுப்புகளிலும், பாடங்களிலும் கவனம் செலுத்தலாம் என்று தோன்றுகிறது. வழக்கமாக ஜூலை கடைசியிலேயே 'ஓரியண்டேஷன் டே'யை முடித்துவிடுவோம். இந்த வருடம் தான் எல்லாமே தாமதமாகிவிட்டது. இனி மேலாவது தாமதமில்லாமல் காரியங்களைச் செய்வதற்கு நீங்கள் எல்லாரும் என்னோடு ஒத்துழைக்க வேண்டும். அன்பரசன் தரப்பினரும் அவர்களைச் சேர்ந்த மற்ற மாணவர்களும் ஏற்கெனவே இதற்கு ஒப்புக் கொண்டு தங்கள் ஒத்துழைப்பைத் தர இணங்கியுள்ளனர்." "அவர்கள் இவருக்கு ஒத்துழைப்பைத் தர இணங்கியிருக்கிறார்களென்பது பொய். இவர் அவர்களோடு ஒத்துழைக்க இணங்கியிருக்கிறார் என்பதுதான் மெய்" என்று பாண்டியன் மோகன்தாஸின் காதருகே மெல்லச் சொன்னான். "நீ பேசாமல் இரு. இவர் நம்மையெல்லாம் முட்டாளாக்கப் பார்க்கிறார். இவருக்குச் சரியான பாடம் கற்பிக்கலாம்" என்றான் மோகன்தாஸ். ஏறக்குறைய மோகன்தாஸைப் போன்ற அதே மனநிலையில் தான் மற்ற மாணவர்களும் இருந்தனர். துண்டுப் பிரசுரங்கள் வழங்கிச் சுவரொட்டிகள் ஒட்டி எல்லா ஏற்பாடுகளும் செய்து வெற்றிக்காகக் கடுமையாக உழைத்துவிட்ட பின் மாணவர் பேரவைத் தேர்தலே கிடையாது என்பதை அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாமலிருந்தது. மேலும் தங்கள் முன்னிலையிலேயே அன்பரசன் முதலியவர்களிடமும் இதைப் பற்றிப் பேசாமல், 'ஏற்கனவே இது பற்றி அவர்களிடம் நான் தனியே பேசி இணங்கச் செய்துவிட்டேன்' என்று துணைவேந்தர் கூறியது அவர் மேல் சந்தேகம் கொள்ள வைப்பதாயிருந்தது. "இனி நீங்கள் நினைப்பதைச் சொல்லலாம்" என்று அவர்களை நோக்கி வேண்டினார் துணைவேந்தர். மோகன்தாஸ் மாணவர்கள் சார்பில் மறுமொழி கூறினான். "பேரவைத் தேர்தலும் நடந்து முடிந்த பின்பு தான் ஓரியண்டேஷன் நாள் கொண்டாடப்படுவது வழக்கம் சார்! பழைய வி.சி. காலத்திலிருந்து அப்படித்தான் நடக்கிறது." "வீணாகப் பழைய காலத்தை ஏன் இழுக்கிறீர்கள்? இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்." "மன்னிக்க வேண்டும் சார்! இப்போது நாம் எதைச் செய்ய வேண்டாமோ அதைப் பற்றித்தான் நீங்கள் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நம்முடைய பல்கலைக் கழக விதிகளில் - பக்கம் அறுபது - மாணவர் உரிமைகள் - முப்பத்தாறாவது பிரிவின்படி ஒவ்வொரு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான உரிமைகளை நாங்கள் பெற்றிருக்கிறோம்." "அதே அறுபதாவது பக்கத்தில் நாற்பத்தேழாவது விதியின்படி அசாதாரணமான நிலைகள் நிலவுகையில் துணைவேந்தரோ, பதிவாளரோ, மாணவர் பேரவைத் தேர்தலை நிறுத்தவோ, பேரவையைக் கலைக்கவோ உரிமை பெற்றிருக்கிறார்கள் என்றும் இருக்கிறது அல்லவா?" "எந்த அசாதாரணமான நிலைமையும் இங்கு இப்போது இல்லை. எல்லாம் சாதாரணமாகவும் அமைதியாகவும்தான் இருக்கிறது. தேர்தல்களை நடத்திப் பேரவைத் தலைவர், செயலாளர்களைத் தேர்ந்தெடுத்த பின் மறுநாளே நீங்கள் ஓரியண்டேஷனை வைத்துக் கொள்வதில் எங்களுக்கு மறுப்பில்லை. தேர்தலுக்காக நாங்கள் எல்லா ஏற்பாடுகளையும் சிரமப்பட்டுச் செய்திருக்கிறோம். இந்த நிலைமையில் நீங்கள் எங்களை ஏமாறச் செய்யக் கூடாது." இதைக் கேட்டுத் துணைவேந்தர் தாயுமானவனார் பிரதம தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கத்தைப் பார்த்தார். "மிஸ்டர் பூதலிங்கம்! இது சம்பந்தமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?" "மன்னிக்க வேண்டும் சார்! தேர்தல்களை நிறுத்துவதற்கான எந்த அவசியமும் நேர்ந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இன்று மாலையிலும், முன்னிரவிலும் நம் சர்வகலாசாலை எல்லையில் தெரிந்த பதற்ற நிலைமை செயற்கையாக உண்டாக்கப்பட்டதாகும். அதை ஒரு நெருக்கடி நிலைமையாகக் கருதித் தேர்தல்களைத் தள்ளிப் போட வேண்டியதில்லை" என்று பேராசிரியர் பூதலிங்கம் துணைவேந்தருக்கு மறுமொழி கூறியபோது மாணவர்கள் அவரை நன்றியோடு பார்த்தார்கள். பதிவாளரும், துணைப் பதிவாளரும் வாயையே திறக்கவில்லை. துணைவேந்தர் உடனே எந்த மறுமொழியும் கூறாமல் சிந்தனையில் ஆழ்ந்தவர் போல் காணப்பட்டார். மாணவர்களும் பேராசிரியர்களும் கூறியதை உடனே ஏற்கவோ இசையவோ அவர் தயங்குவதாகத் தெரிந்தது. இது தொடர்பாக அவர் தமக்குத் தாமே செய்து கொண்ட ஒரு முடிவிலிருந்து மாற விரும்பாதது போல் தோன்றினார். "ஹிஸ் மைண்ட் இஸ் மேட் அப். ஹி வோண்ட் சேஞ்ஜ் ஹிஸ் டிஸிஷன்" என்று மோகன்தாஸ் பாண்டியனின் காதருகே மெல்லச் சொன்னான். துணைவேந்தர், பதிவாளர், துணைப் பதிவாளர் - மூன்று பேரும் உட்புறம் இருந்த அறைக்குச் சென்று கலந்து பேசினார்கள். பேராசிரியர் பூதலிங்கத்தை அவர்கள் கூப்பிடவும் இல்லை. அவராக அவர்களோடு உள்ளே போகவும் இல்லை. துணை வேந்தர் முதலிய மூவரும் தனியே கலந்து பேச உட்புறம் சென்றிருந்த பத்துப் பதினைந்து நிமிஷங்களில் இங்கே வெளியே மாணவர்கள் தங்கள் பொருளாதாரப் பேராசிரியரோடு மனம் விட்டுப் பேச முடிந்தது. பாண்டியன் பேராசிரியரைக் கேட்டான்: "பல்கலைக் கழக எல்லையில் பேரவைத் தேர்தல் நடத்தப் போதுமான டிஸிப்ளின் இருக்கும் போது இவர் ஏன் சார் அதைத் தடை செய்து விடத் துடிக்கிறார்?" "'முதியவர்கள் எவற்றையெல்லாம் வெற்றிகரமாகச் செய்யமுடியவில்லையோ அவையெல்லாம் இளைஞர்களுக்குத் தடை செய்யப்படுகின்றன, அல்லது ஒழுக்கக் குறைவானவையாகப் பிரகடனம் செய்யப்படுகின்றன' - என்பதாக ஆண்டன் செகாவ் கூறியிருக்கிறான். இதைத் தவிர வேறு எந்தப் பொருத்தமான பதிலை இப்போது உங்களுக்கு நான் சொல்ல முடியும்?" என்று கூறிப் புன்னகை பூத்தார் பேராசிரியர். "இந்தக் கூட்டத்தில் நீங்கள் ஒருவராவது எங்கள் மனநிலையைப் புரிந்து கொண்டவராக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது சார்!" இதற்குள் துணைவேந்தரும் மற்ற இருவரும் உட்புறம் ஆலோசனை முடிந்து திரும்பி விட்டார்கள். "எங்கள் முடிவு நாளைக் காலையில் பத்துமணிக்கு ரிஜிஸ்திரார் ஆபீஸ் நோட்டீஸ் போர்டில் அறிவிக்கப்படும். இப்போது நீங்கள் போகலாம். இந்த அகாலத்தில் என் வேண்டுகோளை ஏற்று வந்ததற்கு நன்றி" என்ற துணைவேந்தர் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். கலந்து பேசி விவாதித்து முடிவு செய்வதற்குக் கூப்பிட்டுவிட்டுத் தாமே செய்து கொண்ட ஒரு முடிவை, மறுநாள் காலையில் அறிவிப்பதாகத் துணைவேந்தர் சொல்லியது அவர்களுக்கு அதிருப்தி அளித்ததோடு எரிச்சலூட்டியது. உட்புறம் சென்ற துணை வேந்தர் யாருடனாவது டெலிபோனில் பேசிவிட்டு வந்திருக்கக் கூடும் என்று மாணவர்களால் மிக எளிதாகவே அநுமானித்துக் கொள்ள முடிந்தது. நல்லவேளையாகப் பேராசிரியரிடம் 'டார்ச்' இருந்தது. 'டார்ச்' ஒளியில் அவர்கள் இணைந்து நடந்த சென்ற போது முதல் மின் விளக்குக் கம்பத்தைக் கடப்பதற்குள்ளேயே பக்கவாட்டிலிருந்து சரமாரியாகக் கற்கள் மேலே வந்து விழுந்தன. பாண்டியனையும் மோகன்தாஸையும் பெயரைச் சொல்லித் திட்டும் வசைக் குரல்களும் இருளிலிருந்து ஒலித்தன. கல்லெறி நிற்காமல் தொடரவே இவர்களும் கூப்பாடு போட்டு கத்தியபடி கைக்குக் கிடைத்தவற்றை எடுத்துக் கல்லெறி வந்த திசை நோக்கிப் பதிலுக்கு வீசத் தொடங்கினார்கள். பாண்டியன் பேராசிரியர் கையிலிருந்து டார்ச்சை வாங்கிக் கொண்டு பத்துப் பதினைந்து சக மாணவர்களோடு காலிகள் ஒலிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக இருளில் பாய முற்பட்டான். ஆனால் அதற்குள் அவர்கள் ஓடிவிட்டார்கள். டார்ச் ஒளியில் அன்பரசனையும் கோட்டச் செயலாளரையும் நன்றாக அடையாளம் தெரிந்த வேறு சில மாணவர்களையும் அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் நிலையிலும் பாண்டியனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. "அந்த ஆளைத் துணைவேந்தர் மாளிகையிலிருந்து நீங்கள் வெளியேற்றிய போதே இப்படி ஏதாவது நடக்கும் என்று நினைத்தேன்" என்றார் பேராசிரியர். விடுதிகளுக்கு விரைந்து ஆயிரக் கணக்கில் மாணவர்களை எழுப்பி வந்து அந்தக் காலிகளைத் துரத்திப் பிடித்து மரங்களிலே கட்டிப் போட்டுவிட்டு அப்புறம் வி.சி.யைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்று துடித்தார்கள் மாணவர்கள். பாண்டியனுக்கு அந்தக் கல்லெறியால் நெற்றியில் ஒரு சிறு காயம் ஏற்பட்டிருந்தது. "இப்படி ஒரு கலகமும் மோதலும் ஏற்பட்டு அதைச் சாக்காக வைத்தாவது தேர்தல்களை நிறுத்தி விட வேண்டும் என்றுதான் அவர்கள் தவிக்கிறார்கள். தயவு செய்து இதை ஒரு பெரிய கலகமாக்கி விட்டால் அவர்களுக்கு ரொம்பவும் வசதியாகிவிடும். வேண்டாம் வாருங்கள். முதலில் கல்லெறியில் காயமுற்ற நண்பர்களைச் சர்வகலாசாலை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுவோம். மெடிகல் ஆபீஸரிடமே இந்தக் கல்லெறிக்கு ஒரு சாட்சியமும் பெற்ற மாதிரி ஆகும்" என்று உடன் வந்த பொருளாதாரப் பேராசிரியர் தான் அவர்கள் உணர்வை அப்போது கட்டுப்படுத்தினார். அவர் சொல்வதில் உள்ள நியாயம் அவர்களுக்கும் புரிந்தது. பல்கலைக் கழகத்தின் வடகோடிப் பகுதியிலிருந்த மருத்துவக் கல்லூரியின் அருகில் அவர்கள் போய்ச் சேரவே இரவு ஒரு மணியாகிவிட்டது. அதற்கு மேல் மெடிகல் ஆபீஸரை எழுப்பிக் கொண்டு வந்து விவரங்களைச் சொல்லிச் சிகிச்சை பெற்றுத் திரும்பும் போது இரவு இரண்டே கால் மணி ஆகியிருந்தது. பத்திரமாக ஒவ்வொரு மாணவரையும் விடுதி அறைக்குக் கொண்டு போய்ச் சேர்த்த பின்பே பேராசிரியர் பூதலிங்கம் வீடு திரும்பினார். பாண்டியனும், மோகன்தாஸும், "நீங்கள் தனியாகப் போகக் கூடாது ஸார்! நாங்கள் வீடுவரை உங்களுக்குத் துணையாக வந்துவிட்டுத் திரும்புகிறோம்" என்று அவரோடு புறப்பட்டார்கள். ஆனால் அதை அவர் மறுத்து விட்டார். "நான் தனியாகப் போவதை விட என்னோடு துணைக்கு வந்து விட்டு நீங்கள் தனியாகத் திரும்புவதுதான் அதிக அபாயம் நிறைந்தது. எனக்கு ஒரு கெடுதலும் வராது. நான் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்து விடுவேன்" என்று கூறி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். அவர் புறப்படு முன் 'உணர்ச்சி வசப்படாமல் இருக்கும்படி' மீண்டும் அவர்களை எச்சரித்துவிட்டுப் போனார். நேரம் அதிகமாகிவிட்டதால் தன் அறைக்குப் போகாமல் மோகன்தாஸும் பாண்டியன் அறையிலேயே படுத்து விட நினைத்தான். இருவருக்கும் அறைக் கதவைத் திறந்து விட்ட பொன்னையா நெற்றி மேட்டில் பிளாஸ்திரி ஒட்டுடன் பாண்டியனைப் பார்த்ததும் திடுக்கிட்டான். நடந்தவற்றைக் கேள்விப்பட்டதும் தூக்கம் கலைந்து அவர்களோடு அவனும் பேச உட்கார்ந்து விட்டான். பேச்சுக்குரல் கேட்டுப் பக்கத்து அறைகளிலிருந்தும் இரண்டொருவர் வந்து விட்டனர். பாண்டியன் மோகன்தாஸைக் கேட்டான்: "பல்கலைக் கழக எல்லையில் நெருக்கடி நிலைமை இருப்பதாகத் துணைவேந்தர் சொல்லியபோது நீயும் நானும் அப்படி இல்லை என்று மறுத்தோம் அல்லவா? அதற்குப் பதிலாக நெருக்கடி நிலைமையைப் பிரத்யட்சமாக நமக்கு நிரூபிப்பதற்குத்தான் இந்தக் கல்லெறித் தாக்குதலே நடத்தப்பட்டிருக்கிறது. தம்முடைய ஆபீஸ் நோட்டீஸ் போர்ட்டில் அறிவிக்கப் போவதாக வி.சி. சொல்லிவிட்டார். ஒருவேளை அவர் திட்டப்படியே 'பல்கலைக் கழகத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாகத் தேர்தல்களைத் தள்ளிப் போடுவதாக' அறிவித்துவிட்டால் மாணவர்களாகிய நாம் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை இப்போதே முடிவு செய்து கொள்ள வேண்டுமே? நாம் என்ன செய்யலாம்?" "பேரவைத் தேர்தல் நடைபெறுகிற வரையில் வகுப்புகளுக்குப் போவதில்லை என்று அறிவிப்போம். நாளை மாலை 'ஓரியண்டேஷன்' என்ற பேரில் எல்லா மாணவர்களையும் பூபதி ஹாலுக்கு எதிரே மைதானத்தில் கூட்டி வைத்துக் கொண்டு, 'மை டியர் ஸ்டூடண்ஸ் ஹியர் ஆஃப்டர் வீ மஸ்ட் பி ஸீரியஸ் எபௌட் அவர் ஸ்டடீஸ்' என்று லெக்சர் அடிக்கலாம் என்பதாகக் கனவு கண்டு கொண்டிருக்கிறார் வி.சி. அது நடக்காது. அவர் ஓரியண்டேஷன் தினத்துக்காக சொற்பொழிவைத் தொடங்கும்போது எதிரே மைதானம் காலியாக இருக்கும். அப்படியும் அவர் வழிக்கு வரவில்லை என்றால் எல்லாப் பிரிவு மாணவர்களும் சேர்ந்து ஊர்வலமாகச் சென்று அவரிடம் நம் கோரிக்கையை மீண்டும் வற்புறுத்துவோம்." "இன்னொரு விஷயம் மோகன்தாஸ்! நாளன்றைக்கு மாலையில் பல்கலைக் கழகப் படிப்பு முடிந்து வெளியேறும் பழைய மாணவர் தலைவர் மணவாளனுக்கு நாம் லேக் வியூ ஹோட்டலில் ஒரு தேநீர் விருந்து கொடுக்கிறோம். அவர் இப்போது மதுரையில் இருக்கிறார். இந்த விருந்துக்காகவே வந்து போகச் சொல்லி அண்ணாச்சியும், நண்பர்களும் மணவாளனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். கான்வொகேஷனுக்கு அவர் வருவாரோ அல்லது தபாலிலேயே பட்டத்தை வரவழைத்துக் கொள்வாரோ, தெரியவில்லை. அதனால் தான் இப்போதே அவரை வரவழைத்துப் பாராட்டையும் பிரிவுபசாரத்தையும் நடத்திவிட முடிவு செய்தோம். அவரிடமும் இதைப் பற்றி யோசனை கேட்கலாம்." "அருமையான ஐடியா பாண்டியன்! இந்தப் பல்கலைக் கழகத்திலேயே ஒரு குறிப்பிட்ட இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மாணவர் இயக்கத்தைப் பிரமாதமாகத் தலைமை ஏற்று நடத்திய அசகாய சூரன் மணவாளன் தான். இப்போது இங்கே மணவாளன் வர நேர்வது நம் பாக்கியம். வரட்டும், அவரிடமும் நாம் யோசனை கேட்கலாம்." மறுநாள் காலையில் விடியும் போதே மலையின் எல்லாப் பகுதிகளிலும் பன்னீர் தெளிப்பது போல் பூஞ்சாரல் பெய்து கொண்டிருந்தது. விடிந்த பின்னும் மெல்லிய மங்கலான இருள் மூட்டம் மலையைச் சூழ்ந்திருந்தது. கவலையும் சிந்தனையும் கனத்த அந்த மனநிலையிலும் அன்று மல்லிகைப் பந்தல் இருந்த அழகை எண்ணிய போது,
"அருவிகள் வயிரத் தொங்கல் அடர்கொடி பச்சைப் பட்டே குருவிகள் தங்கக் கட்டி குளிர்மலர் மணியின் குப்பை இருந்த ஓர் கருந்திரைக்குள் இட்ட பொற் குவியல் போலே கருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே கருத்துக்கள் இருத்தல் போலே இருள் மூடிற்றுக் குன்றத்தை" என்ற பாரதிதாசனின் அழகின் சிரிப்புப் பாட்டு பாண்டியனுக்கு ஞாபகம் வந்தது. தூரத்து மலை முகடுகளில் வைரக் கற்கள் உருகி ஒழுகுவது போல் அருவிகள் தெரிந்தன. வானிலிருந்து மாவைக் கொட்டுவது போல் சாரல் மேகங்களிலிருந்து இறங்கும் அழகு கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. இந்த இருள் மூட்டத்தினால் மணி ஆனதே தெரியவில்லை. பாண்டியன் எழுந்திருக்கும் போதே காலை எட்டரை மணி ஆகியிருந்தது. மோகன்தாஸ் ஏழு மணிக்கே எழுந்து தன் அறைக்குப் போய் விட்டதாகவும் பத்தேகால் மணிக்கு ரிஜிஸ்திரார் அலுவலக நோட்டீஸ் போர்டு அருகே சந்திப்பதாகப் பாண்டியனிடம் தெரிவிக்கச் சொன்னதாகவும் பொன்னையா கூறினான். விடிந்ததுமே முதல் நாள் நள்ளிரவு துணைவேந்தர் வீட்டில் பேச்சு முடிந்து மாணவர்கள் திரும்பும் போது சாலையில் நடந்த கல்லெறிக் கலவரம் பற்றி எல்லா விடுதிகளிலும் செய்தி பரவிவிட்டது. ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையும் உருவாகிவிட்டது. அறை நண்பன் பொன்னையா பிளாஸ்கை எடுத்துப் போய்ப் பாண்டியனுக்காக அறைக்கே காப்பி சிற்றுண்டியை வாங்கி வந்துவிட்டான். மாணவர்கள் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் - குடையோடும் குடையின்றி நனைந்து கொண்டும் பாண்டியனைக் காணக் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கி விட்டார்கள். உடனே பார்க்க வருவதற்காகத் துடிப்பதாகவும் வார்டன் அம்மாள் பெண்கள் விடுதியிலிருந்து யாரையும் வெளியில் அனுப்புவதற்குக் கண்டிப்பாக மறுப்பதால் வர முடியாமல் இருக்கிறது என்றும் கண்ணுக்கினியாள் ஃபோன் செய்தாள். ஃபோனில் அவள் குரல் கவலை நிறைந்து ஒலித்தது. கண்கலங்கி அழுது கொண்டே பேசுகிறாற் போன்ற குரலில் பேசினாள் அவள். "பழைய வி.சி. உலக நாடுகளில் உள்ள பிற பல்கலைக் கழகங்களையெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு அந்தப் பல்கலைக் கழகங்களின் தரத்துக்கு இதை உயர்த்த வேண்டும் என்ற ஆசையில் ஓரியண்டேஷன் டே, ஃப்ரீக்ஸ் டே (Freaks Day) போன்றவற்றையெல்லாம் இங்கே ஒரு வழக்கமாக ஏற்படுத்தினார். இவர் என்னடா என்றால் அந்த நல்ல பழக்கங்களை வைத்தே மாணவர்களின் உரிமைகளை ஒடுக்கப் பார்க்கிறார்..." என்று கோபமாகச் சொன்னார் ஓரளவு வயது மூத்த ஒரு எம்.ஏ. மாணவர். "செய்கிற காரியங்களைப் பார்த்தால் இவருக்குத் தாயுமானவனார் என்ற அன்பு மயமான பெயர் சற்றுக் கூடப் பொருத்தமாயில்லை!" என்பதாக ஆத்திரத்தோடு கத்தினான் மற்றொரு மாணவன். நேரம் ஆக ஆக மாணவர் கூட்டம் அதிகமாகியது. ஒன்பதரை மணிக்கு அண்ணாச்சி அவனை வந்து பார்த்து ஆறுதல் கூறினார். காலை பத்து மணிக்கு மாணவர்கள் பெருங் கூட்டமாக ரிஜிஸ்திரார் அலுவலக முகப்பில் கூடிவிட்டார்கள். பாண்டியனும், மோகன்தாஸும், கண்ணுக்கினியாளும், இன்னும் இரண்டொரு மாணவிகளும் கூட்டத்தின் முன்னணியில் நோட்டீஸ் போர்டு அருகே நின்று கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு நடந்த கல்லெறிக்குப் பின் அன்பரசனையோ, வெற்றிச்செல்வனையோ எங்குமே காணவில்லை. அவர்கள் வகை மாணவர்களிலும் சிலரைக் காணவில்லை. தேர்தல்கள் தள்ளிப் போடப்படுவது பற்றி அவர்கள் தரப்பைச் சேர்ந்த மாணவர்களில் யாருமே கவலையோ, வருத்தமோ அடைந்ததாகத் தெரியவில்லை. தேர்தல்கள் நடக்காமல் நிறுத்தப்படுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி கூட இருக்கும் போல் தெரிந்தது. பத்தே கால் பணிக்கு ரிஜிஸ்திரார் ஆபீஸ் பியூன் பல்கலைக் கழக முத்திரையோடு கூடிய நீளமான் தாளில் டைப் செய்யப்பட்டிருந்த அறிக்கை ஒன்றைக் கொண்டு வந்து பலகையில் ஒட்டினான். அறிக்கையின் கீழே ரிஜிஸ்திரார் கையெழுத்து இருந்தது. முதல் நாள் இரவு இருவேறு தரப்பைச் சேர்ந்த மாணவர் குழுக்களிடையே நடந்த ஒரு மோதலை ஒட்டிப் பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தல்கள் கால வரையறையின்றித் தள்ளிப் போடப்படுவதாகவும் - இன்னும் பதினைந்து நாட்களுக்குப் பல்கலைக் கழக எல்லைக்குள் பதிவாளரின் முன் அனுமதியின்றிக் கூட்டங்களோ, ஊர்வலங்களோ கூடாது என்ற உத்தரவை மேலும் இரண்டு வாரம் நீட்டிப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது. கால்மணி நேரம் கழித்து ஒட்டப்பட்ட மற்றோர் அறிக்கையில் அன்று மாலையிலேயே நடைபெறும் ஓரியண்டேஷன் நாள் கூட்டத்தில் துணைவேந்தர் மாணவர்களுக்குச் சொற்பொழிவாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கைகளைப் பார்த்ததும் மாணவர்களிடையே உணர்ச்சி பெருக்கெடுத்து பொங்கியது. 'துணைவேந்தரே! மாணவர் உரிமைகளை ஒடுக்காதீர்' என்று கரியால் சுவரில் பெரிதாக எழுதினான் ஒரு மாணவன். அடுத்த கணம் அதே வாக்கியம் பல்லாயிரம் குரல்களாக மைதானத்தில் எதிரொலித்தது. மாணவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு பாண்டியனுக்கும் மோகன்தாஸுக்கும் இருந்தது. அங்கே நோட்டீஸ் போர்டு வைக்கப்பட்டிருந்த அந்த மேஜை மேல் அப்படியே தாவி ஏறினான் பாண்டியன். கைகளை உயர்த்தி மாணவத் தோழர்களிடம் அமைதியைக் கோரினான் அவன். நெற்றியில் காயத்தோடு மேலே நின்ற பாண்டியனைக் கண்டதும் மைதானத்தில் கூடியிருந்த மாணவர்களின் பெருங்கூட்டம் மெல்ல மெல்லக் கட்டுப்பட்டு அமைதியடைந்தது. மேலே பேசத் தொடங்கினான். "மாணவ நண்பர்களே, தோழியர்களே! இப்போது இங்கே ஒட்டப்பட்டிருக்கும் துணைவேந்தரின் அறிக்கை நம்முடைய நியாயமான உரிமைகளை ஒடுக்குகிறது. நேற்றிரவு நம் துணைவேந்தர் பேரவைத் தேர்தல் பற்றிப் பேசுவதற்காக எங்களைக் கூப்பிட்டனுப்பியதும், அவரோடு பேசிவிட்டு விடுதிகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது நாங்கள் காலிகளால் கல்லெறிப்பட்டதும் பற்றி நம் நண்பர்கள் உங்களிடம் சொல்லியிருப்பார்கள். இன்று அந்தக் கல்லெறியையே காரணமாகச் சொல்லி நம் பேரவைத் தேர்தல்கள் காலவரை இன்றித் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக ரிஜிஸ்ட்ரார் அறிவித்திருக்கிறார். அந்தக் கல்லெறியை நடத்திவிட்டு இந்த அறிக்கையை ஒட்ட வேண்டும் என்று காத்திருந்து ஒட்டினாற் போல் இப்போது இங்கே இந்த அறிக்கை ஒட்டப்பட்டிருக்கிறது. அமைதியான சூழ்நிலையை வேண்டும் என்றே திட்டமிட்டுக் கெடுத்துவிட்டுச் செயற்கையாக ஒரு நெருக்கடியை உண்டாக்கித் தேர்தல்களைத் தட்டிக் கழித்துவிடப் பார்க்கிறார்கள். இதை நாம் அனுமதிக்கக் கூடாது. ஒற்றுமையாகவும் அமைதியாகவும் இருந்து நம் உரிமைகளுக்காக நாம் போராட வேண்டும். அரசியல் செல்வாக்காலும், பதவி அதிகாரங்களாலும் யார் அடக்க முயன்றாலும் நாம் அடங்க மாட்டோம். அடங்கியிருக்க நமக்குத் தெரியும். ஆனால் பிறர் நம்மை அடக்கியிருக்க நாம் அடங்கிவிடப் போவதில்லை. நம்முடைய வேண்டுதலுக்குப் பல்கலைக் கழக நிர்வாகத்திடமிருந்து நியாயமான பதில் கிடைக்கிற வரை நாம் வகுப்புக்களைப் புறக்கணிக்கிறோம். இன்று மாலை இதே மைதானத்தில் வி.சி. நிகழ்த்த இருக்கும் பாடத் தொடக்க விழா சொற்பொழிவையும் நாம் பகிஷ்கரிக்க வேண்டும். யாருடைய நிர்பந்தத்துக்காகவோ பயந்து இந்தப் பல்கலைக் கழகத்தில் மாணவர் இயக்கத்தையே ஒடுக்கிவிடப் பார்க்கிறார்கள். இதை எதிர்த்து நாம் போராடியே ஆகவேண்டும். நமக்குச் சுதந்திரம் தருகிறவர்களுக்கு முன் நாம் அடங்கியிருக்கலாம். ஆனால் நம்மை அடக்க விரும்புகிறவர்களுக்கு முன் நாம் சுதந்திரமாக இருந்தேயாக வேண்டும்." பாண்டியன் பேசி முடித்ததும் மைதானத்தில் திரண்டிருந்த மாணவர்களின் கைதட்டல் ஓய ஐந்து நிமிடம் ஆயிற்று. மைதானத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே வகுப்பு நேரத்துக்காக விடுதியிலிருந்து வந்த மாணவிகளும் அங்கே நிறையக் கூடிவிட்டார்கள். அதைக் கவனித்த பாண்டியன் உடனே "பெண்கள் சார்பில் யாராவது பேசினால் நல்லது. நீ பேசு!" என்று கண்ணுக்கினியாளைக் கைலாகு கொடுத்து மேஜை மேல் ஏற்றிவிட்டுத் தான் கீழே இறங்கிக் கொண்டான். "இது சுயநலமிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும்" என்றாள் அவள். கண்ணுக்கினியாளின் தோற்றத்துக்கும் இனிமையான குரலுக்கும் கூட்டத்தை அப்படியே வசீகரித்துவிடும் சக்தி இருப்பதைப் பாண்டியன் கண்டான். அடுத்து மோகன்தாஸ் பேச இருந்தான். அதுவரை மெல்லிய பூஞ்சாரலாக இருந்த தூரல் திடீரென்று பெருமழையாக வலுத்துவிடவே மாணவர்கள் கலைந்து போக மாட்டார்கள் என்ற நிலை இருந்தும் மோகன்தாஸே இரண்டு வாக்கியத்தில் சுருக்கமாகப் பேசி முடித்துவிட்டான். 'வகுப்புகளுக்குப் போக வேண்டாம்' என்ற கோரிக்கையோடு அவர்களே மாணவர்களை விடுதிகளுக்குக் கலைந்து போகச் சொல்லிவிட்டார்கள். ரிஜிஸ்திரார் ஆபீஸ் வராந்தாவில் பாண்டியனும், கண்ணுக்கினியாளும், மோகன்தாஸும் மற்றும் சில் மாணவர்களும் கூட்டமாகப் பேசிக் கொண்டு நின்றார்கள். ஆனால் அந்த இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிள்களும் சொல்லி வைத்தது போல் தங்களை நோக்கி வரவே பாண்டியனும் மோகன்தாஸும் திகைத்தனர். இன்ஸ்பெக்டர் அருகே வந்து கூறினார்: "நேற்றிரவு வி.சி. வீட்டருகே நடந்த கல்லெறி சம்பந்தமாக உங்கள் இருவரையும் கைது செய்ய வந்திருக்கிறோம்." பாண்டியன் ஆத்திரம் தாங்காமல் எரிச்சலோடு அந்த இன்ஸ்பெட்கருக்கு பதில் கூறினான்: "கல்லெறிந்தவர்களை விட்டுவிட்டுக் கல்லெறி பட்டவர்களைத் தேடி வரும் போலீஸ் இன்ஸ்பெட்கரை நாங்கள் இன்று தான் முதன் முதலாகச் சந்திக்கிறோம் சார்." "ஆன் வாட் அதாரிர்ட்டி ஹாவ் யூ எண்டர்டு இன் டு தி யுனிவர்சிடி காம்பஸ்?" என்று கண்ணுக்கினியாள் சீறியபோது, "யுவர் வி.சி. ஃபோன்டு மீ..." என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினார் இன்ஸ்பெக்டர். சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|
கல்பனா சாவ்லா ஆசிரியர்: டாக்டர். ம. லெனின்வகைப்பாடு : வெற்றிக் கதைகள் விலை: ரூ. 140.00 தள்ளுபடி விலை: ரூ. 130.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் ஆசிரியர்: இரா. பொன்னாண்டான்வகைப்பாடு : ஆன்மிகம் விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|