(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 5. போரில் போர் ‘செக்கச் செவேல்’ எனத் தோன்றியது மேல்வான மெங்கும். சூரியனின் தோற்றம் மறைந்த பின்பும் அவனுடைய ‘கோப ஜ்வாலை’ என்று சொல்லும்படி மேல் வானத்தின் கீழிடம் செவ்வொளி பரவியிருந்தது. இந்தக் காட்சியைக் கண்டவண்ணம் மாளிகையின் மேல் உப்பரிகையில் நின்றுகொண்டிருந்தாள் மருதி. அவள் அந்தக் காட்சியைக் கண்டு திகில் கொண்டாள். ‘இரத்த ஆறு பெருக்கெடுத்தோடும் போர்க் களத்தின்’ நினைவே அவளுக்கு அப்போது எழுந்தது. அடுத்த கணமே, அந்தப் போர்க் களத்தில் தன் காதலன் அத்தி வாளும் வேலும் கொண்டு வீர நர்த்தனம் செய்வதாகக் கற்பனை செய்தாள்! அவள் செய்த கற்பனை அவள் உள்ளத்தைத் திடுக்கிடச் செய்தது. ‘ஐயோ! போருக்குப் போய், வரலாம் என்று சொல்லிவிட்டேனே! என்ன ஆகுமோ!’ என்று கலங்கினாள்; கலங்கிய சிந்தையோடு, செவ்வானத்தின் காட்சியைக் கண்டு நின்ற அவள் செவிகளில், ‘கடக்கடக்’ என்ற முழக்கம் கேட்டுச் சட்டென்று அம்முழக்கம் நின்றது. அவள் பார்வையும் சட்டென்று கீழே வீதிப் புறம் சென்றது. அத்தி குதிரையிலிருந்து கீழே இறங்குவதைக் கண்டாள்; ஓடினாள். வரவேற்றாள்.
“இதென்ன போர்ப்பறை!...” என்று கேட்டுக் கொண்டே அத்தியின் முகத்தை உற்று நோக்கினாள். “இன்று இரவில் நிலாப் பொழுதிலேயே போருக்கும். புறப்பட்டாக வேண்டும்” என்று சொல்லிவிட்டு, தன் ஆயுதங்கள் இருக்கும் அறைக்குள் புகுந்தான்; மருதிக்கு மிகவும் மனம் அல்லலுற்றது. அத்தி, இரும்புக் கவசங்களை எடுத்து அணிந்து கொண்டான். வயிர வாள் ஒன்றை எடுத்து அரைக் கச்சில் செருகிக் கட்டிக் கொண்டான். தோளில் அம்புப் புட்டிலையும் வில்லையும் கட்டிக் கொண்டான். வெற்றி வேலைக் கையில் எடுத்துக் கொண்டான். அதன் பின்பே மருதியை நிமிர்ந்து பார்த்தான். “என்ன இது?” - மருதி கேட்டுக்கொண்டே நிலையாக நின்றாள். “போருக்குப் புறப்படுகிறேன்! மருதி; உன் விரும்பத்தைப் பெற்ற பின்புதான்...” “இப்போதே ஏன் இந்தக் கோலம்? இவ்வளவு விரைவிலா?” - மருதியை அனைத்துக்கொண்டு மஞ்சத்தில் அமர்ந்தான். “மருதி, போருக்குப் புறப்பட்டுவிட்டேன்; இனி எந்தக் காரணத்தாலும் தங்கமுடியாது. பெரும் போர் நடக்கப் போகிறது. வெற்றியும் தோல்வியும் நிச்சயம் சொல்ல முடியாது. எவ்வளவு நாட்கள் போர் நடக்குமோ! அதுவும் சொல்ல முடியாது. திருப்போர்ப் புறத்தில் போர் தொடங்க வேண்டுமாம். எங்கெல்லாம் போகவேண்டுமோ தெரியவில்லை. உறையூரை முற்றுகையிடவேண்டும் என்றுகூட அரசன் கருதுகிறான். ஒன்றும் உறுதி இல்லை. இன்று போருக்குப் புறப்படவேண்டும்! அவ்வளவுதான்!-” “அப்படியானால் எப்போது திரும்பி வருவீர்கள் என்று சொல்ல முடியாதா? நாட்களை எண்ணிக் கொண்டாவது காலங் கழித்தால், குறிப்பிட்ட தினத்தில் பார்க்கலாம் என்று நினைத்தேனே! காலவரையறையின்றி நான் ஏங்கிக் கிடக்க வேண்டுமா? அது எப்படி முடியும் ஐயனே!” - மருதியின் கண்களில் நீர் துளும்பியது. “போருக்குப் போனல் அது எப்போது முடியுமோ? ஆனால் மருதி, உன் நினைவு எழுந்தால் உடனே திரும்பி விடுகிறேன்; நான் எந்த நிலையில் இருந்தாலும்-” “ஐயனே, அது முடியாத காரியம்! போர்க்களத்தில் புகுந்த பின்பு என் நினைவு தங்களுக்கு வராது! அப்படி என் நினைவோடு தாங்கள் போர் செய்வதென்றால் வெற்றி கிட்டாது என்பதை இப்போதே சொல்கிறேன்.” “நம் சந்திப்பு இங்கேயே கிட்டும்படி இறைவனை வேண்டுகிறேன்! அதோ ஆடக மாடத்துக் கோயிலின் மணியொலி கேட்கின்றது! போய் வருக, வெற்றியுடன்” என்று தழுவிக் கொண்டாள் மருதி. “விடங்கி! விடங்கி” என்று அழைத்தான் அத்தி. முதிய கிழவி ஒருத்தி உள்ளிருந்து அங்கே வந்தாள். அத்தியைப் புன்முறுவலோடு பார்த்தாள். மருதியை எடுத்து வளர்த்த செவிலித்தாய்தான் அந்தக் கிழவி. அவள் பெயர் விடங்கி என்பது. அத்தியிடம் எல்லையற்ற மதிப்புடையவள். அவன் அழைத்தவுடன் ஓடி வந்து நின்றாள். “நான் போருக்கு இப்போதே புறப்பட்டுப் போகிறேன். மருதியைப் பார்த்துக்கொள்; எல்லாம் சொல்லியிருக்கிறேன்; விரைவில் வந்து விடுகிறேன்” என்று எழுந்தான். “கவலைப் படாதே; பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் விடங்கி. “மருதி,யுத்த வாத்தியங்களின் கோஷத்தைக் கேட்டாயா? நான் போய் வருகிறேன்; இனி எனக்கு விடை கொடு அன்பே!” “போய் வாருங்கள், விரைவில்-வெற்றியுடன்!” மருதியை விட்டுப் பிரிந்து அத்தி வெளியேறினான். தன் வெண் புரவியில் ஏறி அரண்மனை நோக்கிக் கடுகினன். அரண்மனைக்குப் போகும் வழியிலேயே, படைகள் அணிவகுத்துப் போவதைக் கண்டான். தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை நான்கும் அணி அணியாகச் சென்றன. எள் விழ இடமின்றிக் கண் கண்ட இடமெல்லாம் சேனைத் தொகுதிகள் கூடிச் சென்றன. அத்தியின் கண்கள் வியப்பால் படபடப்புற்றன. ‘ஆ! இவ்வளவு படைகள் இருக்கையில், வெற்றிக்குச் சந்தேகமா? இல்லை! என்ன குதூகலத்தோடு போகின்றன படைகள்! இந்தப் போர் முழக்கமே என் தோள்களைப் பூரிக்கச் செய்கின்றன. இவ்வில்வீரர்களுக்கு முன் சோழ நாட்டு வீரர்கள் நிற்க முடியும்?’ என்று யோசித்தவாறே சென்றான். அரண்மனை முற்றத்தை அடைந்த அளவிலே, அரசன் ஆயத்தமாகத் தேரில் அமர்ந்திருப்பதைக் கண்டான்? நன்னன், ஏற்றை, கங்கன், கட்டி, புன்றுறை முதலிய சேனாபதிகள் அறுவரும் படைகளின் அணி வகுப்புக்கு நடு நடுவே நின்று கொண்டிருந்தனர். அரண்மனையிலிருந்து ஆமிராவதி நதிக் கரைவரை, படைகள் நின்ற வண்ணமாக இருந்தன. மதில் புறமெங்கும் நிலைப்படைகள் சூழ்ந்து நின்றன. அத்தி அரசனை அணுகி வணங்கினான். அரசனின் தேர் புறப்படத் தொடங்கியது; அச்சமயம், ஆடக மாடத்து அரவணைத் துயிலும் திருமால் கோயிலிலிருந்து வந்த வைணவ குரு ஒருவர், துளவ இதழ்களை அரசனுக்கு அளித்தார். திருமாலுக்கு அருச்சித்த துளவத்தை வைணவ குரு அச்சமயத்தில் கொணர்ந்து கொடுத்ததை விரும்பி ஏற்றுக்கொண்டான், அரசன். படைகள் புறப்படுவதற்கான பறை முழங்கியது. அடுத்த கணமே, ‘திமி திமி’ எனப் பூமி அதிர்ந்து கொள்ளும்படியாகப் படைகள் சென்றன; அரசனின் தேரும் கடுகியது. அத்தி வெண் புரவி மீதே, அரசனின் தேர் முன்பாகச் சென்றான். வேந்தனின் தேரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்காக தேர்களும், குதிரைப் படைகளும் சூழ்ந்து சென்றன. “வில்லின் செல்வன் வாழ்க! சேரர் கோமான் வாழ்க!” என்ற ஒலி எங்கும் முழங்கியது. படைகள் கடு விசையுடன் நகரை விட்டுப் புறப்பட்டன. மதில் வாயிலைக் கடந்து ஆமிராவதி நதியின் கரையோரமாகத் திருப்போர் நகர் நோக்கிச் சென்றன. படைகள் அணி வகுப்புப் பிறழாமல் அணி அணியாகப் போவதன் காட்சியை நெடுக நோக்கிய வாறே, சேரன் கணைக்காலிரும்பொறை தேர் மீது சென்று கொண்டிருந்தான். கடு விசையுடன் போகும் தேருக்குச் சமமாக அத்தியின் வெண் புரவி பாய்ந்து சென்றது. அவனைப் பின்தொடர்ந்து ஐந்நூற்றுவர் வீரர் ஆயுதம் தாங்கிச் சென்றனர், தத்தம் குதிரைகள் மீதே. ஆமிராவதி நதியின் கரையோரமான சாலையில் செல்லும் படைகளின் தோற்றம், நிலவொளி துளும்பிய நதியின் நீரில் பிரதிபலித்து, நிழல் சித்திரங்களை உண்டாக்கின. ‘ஓ’ என்று வீசும் மலயக் காற்று, படைகளின் போக்கைத் துரிதப்படுத்தியது. நால்வகைப் படைகளும் செல்லுகையில் உண்டான பேராரவாரம் நிச்சப்தமான அவ்விரவில் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது. அருகில் கரை துளும்பிச் செல்லும் நீரையுடைய ஆமிராவதியின் சலசலப்பும், படை முழக்கத்தோடு ஒன்றாகியது. ஆமிராவதியும் மணிமுத்தா நதியும் காவிரியும் சங்கமாகும் முக்கூடலைப் படைகள் அடைந்தன. சேர வேந்தனின் கட்டளைப்படி, படைகள் ‘திருப்போர்’ நகரை நோக்கி, காவிரியின் அருகிலே உள்ள சாலை வழியே சென்றன. சோழனின் படைத் தலைவனும் கொங்கணத்துப் போரிலே முன்பு கொல்லப்பட்டவனுமான பழையனுக்கு உரிய நகர் திருப்போர். பழையன் இறந்த பின்பு, அவ்விடத்திலே தன் பெரும் படையுடன் சோழன் செங்கணான் தங்கினான். அவ்வூரில் இருந்துகொண்டே, கழுமலப் போரை நடத்தினான். ஆகவே, திருப்போர் நகர் மீது சேரன் படையெடுத்துச் சென்றான். மிக எளிதில் சோழனைச் சிறை செய்து விடலாம் என்று ஆதுரத்தோடு சென்றான். திருப்போரை அணுக அணுக, மிக அமைதியாக படைகளை நான புறமும் வகுத்து, அந்நகரைச் சூழ்ந்து கொள்ள ஏற்பாடு செய்தான். சேனாபதிகள் அறுவரும் மிகுந்த ஊக்கத்தோடும் வேகத்தோடும் படைகளை அணிவகுத்து நகரைச் சூழ்ந்து கொள்ள முயன்றனர். நடு வானில் வெண்மதி முழுப் பொலிவுடன் உலகை எள்ளி நகையாடுவதுபோல் தோன்றினான். நிலவின் வெள்ளொளி எங்கும் பரவிக் கிடந்தது. அடர்ந்த சோலைகளையன்றி மற்ற நிலப்பரப்பு முற்றும், தூய வெண்ணிலவால் விளங்கிக் கிடந்தது. அகன்ற சாலை வழியே கடுகிச் செல்லும் சேரலாதன் படையின் தோற்றம் நன்கு புலப்பட்டது. “அதோ திருப்போரின் மதிள் புறம்! எவ்வளவு வெளிப்படையாகத் தெரிகிறது பாருங்கள்! நிலவின் ஒளியிலே எளிதாக முற்றுகையிடலாம்; விரைவில் சூழ்ந்து கொள்ளுங்கள்!” சேர வேந்தனின் கட்டளை, படைத் தொகுதிகளுக்கு உணர்த்தப்பட்டது. திகுதிகுவென்று படைகள் பாய்ந்தன. அதே சமயம், திருப்போர் நகரில் போர் முரசு அதிர்ந்தது. சோழ வீரர்களின் வீரக் கூக்குரல் முழங்கியது. ‘கல்’ என்ற ஒலி இடையறாமல் கேட்டது. அதைக் கேட்டுச் சேரன் படைகள் திகைத்துவிட்டன. சேரன் திடுக் கிட்டான். ‘என்ன அதிசயம்! நம் படையெடுப்பை இவ்வளவு விரைவில் உணர்ந்து கொண்டு விட்டார்களே! நம் முயற்சி வீணாகாமல் இருக்க வேண்டுமே!’ என்று கலங்கினான் சேரன் கணைக்கால் இரும்பொறை. “அத்தி, நன்ன! விரைவில் முற்றுகையிடுக! சோழனின் படை புறப்படுவதற்கு முன் சூழ்ந்து கொள்க! முற்றுகையிட்ட பின்பே, நாம் போர் செய்ய முடியும்! நகருக்குள் புகுந்து போர் செய்ய வழிதேட வேண்டும்” என்று கூவினான். அத்தியும் நன்னனும் குதிரையைத் தாவவிட்டுப் பாய்ந்தனர். படைகளை ஊக்கினர். “நகரைச் சூழ்க! நகரைச் சூழ்க!” என்ற கூக்குரல் கிளம்பியது. கணத்துக்குக் கணம் சேரனின் படைகள், அணி அணியாக முன்னே பாய்ந்து சென்று நகரைச் சூழ்ந்தன. பிடரி மயிர் மேலெழுந்து துள்ளும்படி, குதிரைகள் சீறிப் பாய்ந்தன நகர்ப்புறத்தே! யானைகள் நிலம் அதிர வீசி நடந்தன. வேலும் வில்லும் தாங்கிய மறவர்கள் கால் நிலம்பதியாதபடிப் பாய்ந்து சென்றனர். உருளைகள் ‘கடகட’ வென்ற பெரு முழக்கம் செய்யும்படி தேர்ப்படை பின்னே அணிவகுப்போடு சூழ்ந்துகொண்டன. “போ, நெருங்கு, தள்ளு, பிடி, ஓடு!” என்று கூவிக் கொண்டே சேரன் படை திருப்போர் நகரை முற்றுகையிட்டது. ஆனால், திருப்போர் நகருக்குள் இருந்து பெரு முழக்கம் கேட்டது. முளைத்துக் கிளம்புவதுபோல், சோழனின் படைவீரர், நகர்ப்புற மதிலிலிருந்து சேரனின் படைகள் மீதே தாவிக் குதித்தார்கள். வேலுடன் தாவினார்கள் ஒரு கூட்டத்தினர். ‘ஓ’ என்ற பேரிரைச்சலுடன் வீரர் கூட்டம் நிலை தடுமாறியது. ஈட்டியை முன்னர் நீட்டி, பின்னே பாய்ந்தார்கள் ஒரு கூட்டத்தார்; குத்துக் கோலை பாய்ச்சியவாறே, சேரனின் யானைப் படைமீது தாவினர் வேறு கூட்டத் தினர் . மரங்களிலிருந்து குதித்தனர் வேறு தொகுதியினர். எதிர்பாராதவிதமாக, மதிள் மேலிருந்தும், மரங்களிலிருந்தும் பாய்ந்து போர் புரியும் சோழன் படையைக் கண்டு சேரன் அஞ்சினன். என்ன ஆகுமோ என்று முடுகினன். அத்தி ஒருபுறம், நன்னன் வேறுபுறம், நடுவில் சேரன், ஏற்றை முன்படையில், கங்கன் பின்படையில், கட்டி விற்போரில், புன்றுரை யானைப்படையில் - இவ்வாறு பிரிவு பிரிவாக நின்று போர் புரியலானர்கள். சோழனின் முன் படையிலே அவன் மகன் - அரசிளங் குமரன் ‘நல்லடிக்கோன்’ நின்று போர் செய்தான். சேரன் படையும் எதிர்த்துப் பொருதது. பின்னிட்டு ஓடும் தன் படையை முன்னர் செலுத்திச் சோழனுடன் போர் செய்தான் சேரன். இடது புறத்திலே அத்தியும் வலப் புறத்திலே நன்னனும் நின்று போர்புரிய, நடுவிலே கணைக்காலிரும் பொறை நின்று பொருதான். விற்போரில் அவன் வல்லவன் அல்லவா? அம்புகளை, செங்கணான் மீதும், நல்லடிக்கோன் மீதும் செலுத்திக் கொண்டிருந்தான். மெள்ள மெள்ளப் படைகளின் நெருக்கத்திலே, மிக அணிமையில் செங்கணானும் கணைக்காலிரும்பொறையும் எதிர் நின்று பொருதார்கள். கடல் கிளர்ந்து எழுந்தாற் போன்ற படைத் தொகுதியின் நடுவில், வெண்ணிலாவின் வெள்ளொளியில், வாளும் வேலும் மின்னின! வில்லிலிருந்து புறப்படும் அம்புகள் மழைத் தாரையெனப் பாய்ந்தன. “கொல்லு, பிடி, வெட்டு, குத்து, தள்ளு, எறி!” என்று அவரவர் கூறிக்கொண்டே, மோதிப் பொருதார்கள். இரு திறத்திலும் வெட்டுண்டும் குத்துண்டும், அம்பு மட்டும், மிதியுண்டும், வேறு பட்டும் மாண்டவர் பலர்; நூற்றுக்கணக்காக வீரர் அழிந்த பின்பும் - படைகள் மடிந்த பின்பும் போர் நின்ற பாடில்லை. திடீரென்று செங்கணான் சிறு படையுடன், சேரனின் அணிவகுப்புக்குள் பிளந்து புகுந்தான். அவன் மகன் நல்லடிக்கோன் பெரும்படையுடன், பின் தொடர்ந்து சேரனின் படையை வளைத்துக் கொண்டான். முன் நின்று பொருத கணைக்காலிரும்பொறை அவனைச் சுற்றி நின்ற சிறு படைத் தொகுதியோடு வளைத்துக் கொள்ளப்பட்டான்; அவ்வளவிலே, பெருங் கூக்குரல் எழுந்தது. சேரனின் மாபெரும் படை நிலை கலங்கிக் கொந்தளித்தது. செங்கணான் வெற்றி முரசு கொட்டச் செய்தான். அடுத்த கணமே, சேரனின் படைகள் சிதறின. நல்லடிக்கோன், நின்ற இடத்தில் நிற்காமல் சேரநாட்டுப் படைகளைத் தாக்கித் துரத்தினான். வெற்றி முரசு கொட்டிய முழக்கம் காதில் விழவே, அத்தி திடுக்கிட்டான். சேரன் வளைத்துக் கொள்ளப் பட்டதைக் கண்ட கணமே, வெண் புரவியை மேற்குத் திக்கிலே தட்டி விட்டான், குதிரை வயல் வரப்புத் தெரியாமல் மனோ வேகத்தோடு பாய்ந்து சென்றது. அதைப் பின் தொடர்ந்த சோழனின் வீரர் திரும்ப வேண்டியதாயிற்று. அத்தி வெண் புரவியில் அம்பு வேகத்தோடு சென்று விட்டான். நன்னன் கொங்கணம் நோக்கிக் கடுகி விட்டான். முன் படையில் சிக்கியவர்கள், கங்கனும், கட்டியும், புன்றுரையும், கணைக்கால் இரும்பொறையுமே! சேரன் நிலை சோர்ந்து தேரில் சாய்ந்து விட்டான். படைகள் நானாபுறமும் ஓடிவிட்டன. வளைப் புண்ட படையில், சிறைப்பட்டு நின்றான் சேரன். அவன் வேறு என்ன செய்வான்? செங்கணான், சேரனைப் பார்த்து திக்கெட்டும் எதிரொலிக்க நகை செய்தான். அப்போதே அவன் மகன் நல்லடிக்கோனை நோக்கி, “நல்லடிக்கோன், படைகளை துரத்திச் சென்று, கருவூரைக் கைப்பற்றிக் கொள்! போ முன்னதாக” என்றான். நல்லடிக்கோன் பெரும் படையோடு, ஓடும் படைகளைத் துரத்தியவாறே கருவூர்க் கோட்டை நோக்கி கடுகிச் சென்றான். ***** கருவூர்க் கோட்டைக்குள் இருந்து காலை முரசம் அதிர்ந்தது. அதே சமயம் ஆராமிவதி நதியின் அணை முகப்பிலிருந்து நிமிர்ந்த தலையோடு சில வீரர்கள் சாலையின் வழியைக் கூர்ந்து பார்த்தார்கள். காலைக் கதிரவனின் ஒளி கண்களைக் கூசச்செய்தாலும், அவர்கள் மிகுந்த ஆதுரத்தோடு கீழ்த் திசையை உற்றுப் பார்த்தார்கள். மெள்ள மெள்ள ஆமிராவதியின் நடு அணையில் வந்து நின்று முன்னிலும் அதிகமாக உற்றுப் பார்த்தனர்; நெடுந்துரத்துக்கு அப்பால் சாலை வழியே வரும் ஓர் உருவம் தெரிந்தது. சிறிது நாழிகைக்கெல்லாம் குதிரையின் காலடிச் சப்தம் கேட்டது. அவர்கள் நெஞ்சமும் திடுக்கிட்டது. ஏன்? “என்ன வேகம் ஆ! இவ்வளவு துரிதமாக வருபவன் யார்? என்ன செய்தியோ! அதோ குதிரையின் வேகம்-” என்று கூறிக்கொண்டே ஒரு வீரன் மற்றவர்களைப் பார்த்துப் பிரமித் தான். சாலை வழியே தாவிவரும் குதிரையைப் பார்த்து உள்ளம் திடுக்கிட்டது யாவருக்கும். ஆம்! உண்மையில் வேகத்தைச் சாமனியமாகச் சொல்ல முடியுமா? அதில் ஏறி வருபவனும் சாமானிய வீரனாய் இருக்க முடியாது தான்! தெறித்த நடை! குதிரையின் பாய்ச்சலில் பொறி பறந்தது என்று தான் சொல்ல வேண்டும்! குதிரை வரும் வேகத்தைப் பார்க்கும் போது, சாலையின் மரங்கள் யாவும் - ஆமிராவதியோடு அணை முகப்பில் நிற்கும் வீரர் யாவரும் சுழல்வதுபோல் தெரிந்தது; பார்த்தவர்களின் கண்கள் சுழன்றன; குதிரையும் அணுகி விட்டது. அது அணையை நோக்கியே வருவதும் தெரிந்தது. வீரர்கள் சட்டென்று இருபுறமும் அகன்று நின்று உற்றுப் பார்த்தார்கள். என்ன ஆச்சர்யம்! குதிரை சாலையோடு மின்னலென பாய்ந்து சென்றது. அணையில் நின்றவர்கள் திடுக்கிட்டார்கள். அடுத்த கணமே தடாலெனப் பெருஞ் சப்தம் எழுந்தது. குதிரையின் மீது வீரன் இல்லை. ஆமிராவதியின் கரைப்புரத்தில் மணல் பாவிய நிலப் பரப்பிலே தாவிக் குதித்தான். இல்லையேல் குதிரை வந்த வேகத்தில் அவன் அவ்விடத்தில் எவ்வாறு உடனே இறங்க முடியும்? குதிரையும் வேகத்தோடு தாவிச் சென்று சிறிது தூரத்திற்கப்பால் மெல்ல ஓடியவாறே ஒரு மர நிழலில் போய் நின்றுவிட்டது. அவ்வீரன் குதித்த வேகத்தில் ஒரு கணம் அசைவற்று நின்றான்; மறு கணமே ஆமிராவிதி அணை மீது நிற்கும் வீரரிடம் ஓடி வந்தான், போர்க் களத்திலிருந்து ஓடிவரும் சேரநாட்டு வீரனே அவன் என்பதை உணர்ந்து அவ்வீரர்கள் குதூகலித்தார்கள். “ஆ! அரசர் சிறைப்பட்டாரா? உண்மையாகவா!” “ஆம்! இன்னும் சிறிது நாழிகைக்குள் சோழனின் படைகள் இந்நகரை வளைத்துக் கொள்ளும்.” “ஐயோ! என்ன விபரீதம்! வாருங்கள் விரைவில் கோட்டைக்குள் சென்று செய்தியை அறிவிப்போம்.” அதைக் கேட்டவுடன் வீரர் யாவரும் மனம் பதறியவர்களாய் கோட்டைக்குள் ஓடத் தலைப்பட்டனர். அப் போது செய்தி கொணர்ந்த வீரன் அவர்களை வழிமறித்தான்: “அடே என்ன இது? முதலில் இந்த அணையைத் தகர்த்து உடைப்போம். அப்புறம் மேற்கொண்டு செய்தியை யாவருக்கும் அறிவிப்போம். இல்லையேல் மிக எளிதில் பகைவன் படை நகருக்குள் புகுந்துவிடுமடா! இந்த அணையை உடைத்தால் தோணிகள் மூலமாகவோ புதிய அணை போட்டோதான் உள்ளே போக முடியும்! மதில் கதவுகளையும் சார்த்தி விட்டால் படைகள் சிறிது தாமதப்பட்டே கதவுகளை பிளந்துதான் புக முடியும்! அதற்குள்ளாக நாம் நகர ஜனங்களைத் தக்கபடி பாதுகாப்புடன் இருக்கும்படி சொல்லலாம்” என்றான். “ஆம், ஆம்!” என்று கூறி அந்த வீரர்கள் யாவரும் சேர்ந்து மிடுக்குடன் பல ஆயுதங்களாலும் அணையை உடைத்துத் தகர்த்தார்கள். அதைக் கண்டு மேன்மேலும் வீரர்கள் கூடிவிட்டார்கள். மிக விரைவில் அணை உடைக்கப்பட்டது. வீரர் கூட்டம் மிகுந்த வேகத்துடன் வேல்வேலியை நானுபுறமும் சுற்றிப்போட்டுவிட்டு மதில் கதவுகளைச் சார்த்திவிட்டார்கள். மதிலின் பின்னர் காவலாக நான்கு யானைகளையும் நிறுத்தி விட்டு அக நகருக்குள் செய்தி பரப்பிக்கொண்டே ஓடினார்கள். “சேரவேந்தர் சிறைப்பட்டார். சோழனின் படை கடுகி வருகிறது. எல்லோரும் பாதுகாப்புடன் இருங்கள்.” இவ்வித வார்த்தைகள் நானா புறமும் எதிரொலித்தன. செய்தி கேட்ட ஜனங்கள் அங்கங்கே ஓடி அவரவர் மாளிகையில் புகுந்து மறைந்தார்கள். வீதியெங்கும் குதூகலித்துச் சென்றவர்கள் யாவரும் நெஞ்சம் திடுக்கிட்டு ஓடி மறையலானார்கள். அரண்மனை வாயில் கதவுகள் சார்த்தப்பட்டன. அங்கங்கே நகர்க்காவலர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். பொலிவுடன் காணப்பட்ட அந்நகரம் செய்தி கேட்ட சிறிது நாழிகைக் கெல்லாம் நிலை கலங்கியது; அமைதி இழந்தது. ஜனங்களின்றி வெறிச்சிட்டன நகரின் ராஜ வீதிகள். யுத்த பயத்தால் தாக்கப்பட்ட நாடு நகரங்கள் - பகைவனின் கீழ் அகப்பட்ட பிற நாடு நகரங்கள் எவ்விதம் அமைதியோடு குதுகலத்தோடு இருக்க முடியும்? தமிழ்நாட்டின் முடி மன்னர் மூவரில் ஒருவனான ஒப்பற்ற சேர வேந்தன், சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு உரிய சோழனின் கீழ் சிறைப்பட்டது, அற்பமான நிகழ்ச்சியா? சேரநாட்டின் கதி என்ன ஆவது? நகருக்குள் அழுகைக் குரலும், கூக்குரலும் எதிரொலித்தன. கோப வார்த்தைகள் பொங்கிப் புறப்பட்டன, சேரநாட்டு மறவர்களிடமிருந்து, பகைவரைப் பழி வாங்கும் நேக்கத்தோடு சில வீரர் மனம் பதறி வஞ்சினம் கூறினார்கள். நகரைக் காவல் புரிந்த நிலைப்படை வீரர்கள் வில்லும் அம்புப்புட்டிலும் தாங்கியவர்களாய், வாள் களை உயர்த்தி வீசிக் கர்ச்சித்தும் ஜனங்களை அவரவர் மாளிகைக்குள் புகுந்து இருக்கும்படிக் கூவியும் இளங்காளைப் பருவமுடையவர்களை, போருக்கு வரும்படி முரசு கொட்டி அழைத்தும் ஒருவரோடோருவர் தோளோடு தோள் மோத வீதியெங்கும் திரிந்தும், வீரட்டகாசம் செய்தார்கள்! தம் தலைவன் சிறைப்பட்ட பின்பும் மனம் தளராமல், பகைவரைப் பழிவாங்கி எதிர்க்கத் துணிந்த அவர்களின் வீரத்தை என்ன என்பது! பகைவர் படை சீறி வருவது கண்டும் நகரைக் காக்கத் துணிந்த அவ்வீரர்களின் நாட்டுப்பற்றைச் சாமானியமாகச் சொல்ல முடியுமா? |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |