(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 9. நாட்டிய விருந்து மருதியின் மனம் சிந்தனை செய்தது. அம்பையின் வார்த்தைகளைப் பற்றி அவள் ஆராய்ந்தாள். இவள் பேச்சை நம்புவது தகுமா? என்று யோசித்தாள். சிறிது நாழிகை மௌனமாக இருந்து சிந்தித்தாள். அவளுடைய சித்தக் கடலிலே ஆட்டனத்தியின் நர்த்தனக் காட்சி அலை மோதிக்கொண்டிருந்தது. ‘என் நாட்டியத்தால், இவனை மகிழ்வித்து நான் விடுதலை பெறுவதா? என் காதலன் என் நிலையை அறிந்தால் இவன் நிலை என்ன ஆகும்? விதியின் காரியம்! என்னை இவனுக்குப் பணிந்து நடக்கும்படிச் செய்தது விதிதான்; அம்பை சொல்வது போல் இவன் நல்ல குணமுடையவனாயிருந்தால், என் நிலையை உணர்ந்தவனாயிருந்தால் என் நாட்டியத்தின் உயர்வைக் கண்டு என்னை என் விருப்பப்படி விடுதலை செய்து விடுவான்! இல்லையேல் நான் உயிரை இழக்க வேண்டியதுதான். ஆனால் என் பாக்கிய வசமாக என் காதலர் இவனிடமிருந்து என்னை விடுதலை செய்தால் எனக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்!’ - மருதியின் உள்ளம் இவ்வாறு சிந்தித்தது.
“மருதி, உனக்குத் தெரியாததை நான் சொல்லப் போகிறேனா? இயல்பாகவே சாதுர்யமும் சாகஸமும் கொண்ட நீ, எங்கள் இளவரசரிடம் எப்படி நடந்து கொள்வது என்று யோசனை செய்கிறாயா?” “என் நாட்டியத்தைக் கொண்டு அவர் வேட்கையைத் தணிக்க வேண்டும் என்கிறாயா? அப்படி என் நாட்டியத்தை அவர் உள்ளத்தில் நிலைகொள்ள வைத்தால் - அவர் வேட்கை விபரீதமாகி விடாதா? மூண்டு எரியும் தீயை நெய்யால் அவிக்க முடியுமா?” “இல்லை; அவ்விதம் விபரீதம் ஏற்படாது. அவரை நீண்ட நாட்களாக நான் அறிவேன். அவர் இயல்பும் எனக்கு நன்றாகத் தெரியும். அவ்வளவு தூரம் மனத்தை நெகிழ விடமாட்டார். நாட்டியத்திலே உள்ளத்தைப் பறி கொடுத்து, உன்னிடம் உயர்வான மதிப்பைப் பெறுவார்; உன்னிடம் கொண்ட வேட்கையை மாற்றித் தீவிரமான தூய பக்தியை உன்னிடம் கொள்வார்...” “அம்பை, உன்னுடைய யோசனையை நான் மேற் கொள்கிறேன். என்னுடைய நாட்டிய விருந்தை அவருக்கு அளித்தால், எனக்கு விடுதலை கிட்டும் என்று நம்புகிறேன். மாறான எண்ணம் அவருக்கு உண்டாகு மென்று தெரிந்தால் என் உயிரை வெறுத்து விடுகிறேன். இதில் சந்தேகமே இல்லை. எவ்விதமேனும் நான் விடுதலை பெற்று என் காதலரைச் சந்தித்தால் போதும்.” “மருதி, இன்னும் யோசனை ஏன்? இப்போதே உண்மையைப் பரீக்ஷித்து விடலாம்; அதோ விடியல் வெள்ளி உதயமாகப் போகிறது: இளவரசரும் விழித்துக் கொண்டுதான் இருப்பார்; உன் நினைவாகத் தான் இருப்பார்; அந்தப்புர மாளிகைக்குப் போவோம், வா.” “அம்பை, எனக்கு ஏதோ பயமாகத் தான் இருக்கிறது; இளவரசர் எங்கேயிருப்பார்?” “அவர் முன் மாடத்தில் இருப்பார்; பயமில்லாமல் வா.” மருதி, அம்பையுடன் தன் சிறைக் கோட்டமாகிய அந்தப்புர மாளிகைக்குச் சென்றாள். நிசப்தமான அந்த இடத்தில் மருதி அம்பையுடன் மௌனமாக நின்றாள். நிலவொளியும் விளக்கொளியும் சேர்ந்து அந்தப்புரத்தை அழகு செய்தன. சாளரங்களிலிருந்து, காலைக்காற்று குளிர்ந்து வீசியது. காலை மலர்களின் இனிய நறுமணம் எங்கும் கமழ்ந்தது. “மந்திரவாதி குழலெடுத்து ஊதினால், புற்றி லிருக்கும் பாம்புகள்கூடப் படமெடுத்து ஆடிவரும்; நாகண வாய்ப் பறவையும் கிளியும் பறந்து வரும்” என்று சாதுர்யமாகப் பேசினாள் அம்பை. “பாம்பினிடம் விஷம் இருப்பது உண்மைதான்; ஆனால் அந்த விஷப் பாம்பையும், மந்திரவாதி, தன் குழலோசையால் மயக்கி, பெட்டிக்குள் அடக்கி மூடிவிடுவான்; அவனிடம், பாம்பின் விஷம் என்ன செய்யும்?” என்றாள் அம்பை. மருதி நகைத்துவிட்டாள். அம்பையின் சாதுரியம் மிகுந்த பேச்சைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தாள். “அம்பை, நீ பேச்சில் வல்லவள்தான்! ஒன்று சொல்கிறேன் கேள்; நானும் விஷமுடைய பெண் நாகம் என்று அறிந்துகொள்.” “பின், ஏன் பயம்? நடக்கட்டுமே நாட்டியம்!” “அம்பை, இதுவும் விதியின் விளையாட்டுப் போலும்” என்று கூறிக்கொண்டே காலில் அணிந்திருந்த பாடகத்திலிருந்தும் சிலம்பிலிருந்தும் இன்னொலியை எழுப்பினாள் மருதி. அமைதி நிலவிய அந்தப்புரத்தில், பாடகமும் சிலம்பும் கலீர் கலீர் என்று நாதத்தை எழுப்பின; அந்த இன்னொலியால் மெய் சிலிர்த்தது அம்பைக்கு. பிரமித்து நின்றாள் மருதியைப் பார்த்து. சிலைப்பெண், தெய்வ சாந்நித்தியத்தால் ஜீவகளை பெற்று நாட்டியம் ஆடுவதுபோல் இருந்தது. பூங்கொடி மென்மெல நெளிவது போன்றிருந்தது அவள் மேனியின் குழைவு. பாம்பின் உடல் நெளிவதென, அவள் கைகள் வளைந்து கொடுத்தன. கை வளையல்களின் சப்தமும், கால் சிலம்புகளின் முழக்கமும், பாடகத்தின் ஒலியும், இடையில் கட்டிய மேகலாபரணத்தின் ஓசையும் முறையே இன்பநாதத்தை உண்டாக்கின. ‘இதென்ன, பலவித சப்த ஜாலங்கள்!’ என்று கூறும்படியிருந்தது மருதியின் நாட்டியத்தின்-முதல் பகுதி! ஆம்; அப்போது வெறும் சப்த ஜாலமே அவளுக்கு முக்கியமாக வேண்டியிருந்தது. அவ்வித நாட்டியத்தை அம்பை கண்டதே இல்லை; அதனால் அவள் மருதியின் நாட்டியத்திலேயே மெய்மறந்து விட்டாள். ‘கல் கலீர், கல் கல் கலீர்’-இவ்வித இன்னொலியால் மாளிகையின் நானாபுறமும் எதிரொலியை உண்டாக்கி, எங்கும் இன்ப நாதத்தை எழுப்பிவிட்டாள்; ஏன்!-- இன்ப மயமாக்கி விட்டாள் சப்த ஜாலத்தால். எந்த எந்த வகையில் சப்த ஜாலத்தால் நாட்டியத்தைச் சோபையுறச் செய்ய வேண்டுமோ, அவ்வித மெல்லாம் தன் திறமையைக் காட்டினாள். விடியற்போதிலே ஆங்காங்கே அயர்ந்து உறங்கும் யாவரையும் இன் துயில் எழுப்பிப் புளகாங்கிதமடையச் செய்து, ‘இது என்ன? நாட்டிய அரங்கத்தின் வசீகர ஒலி!’ என்று திகைக்க வைத்தது, மருதியின் நாட்டியஜாலம்; அவள் பாதங்கள் லாவகமாக பூமியில் பதிந்து உண்டாக்கும் இன்னொலியும், கை வளையல்களின் மெல்லொளியும், கேட்டவர் செவி வழியே புகுந்து இருதயத்திலே இன்ப உணர்ச்சியை ஊட்டின. இவ்விதச் சப்த ஜாலங்களுக்கு இடையே நெஞ்சை அள்ளும் மணிக்குரலில் தன் கண்டத் தொனியை எழுப்பினாள்; இருதயத்தில் இன்பவூற்றைச் சுரக்கச் செய்யும் அவள் கண்டத் தொனியைக் கேட்டு மயங்காதவரும் உண்டோ? அமைதி நிலவிய அம்மாளிகையில் ஆங்காங்கே பேச்சுக்குரல் கேட்டது; அந்தப்புரத்தை அணுகியும் அணுகாமலும் பலர், மருதியின் நாட்டியத்திலே ஈடுபட்டார்கள். அவள் நாட்டியத்தைக் கண்ணால் காணா விடினும், சப்த ஜாலத்திலே மனதைப் பறிகொடுத்தார்கள். இந்நிலையில் திடீரென்று, முன்மாடத்திலிருந்து மிகவேகமாகக் கடுநடையுடன் வந்தான் நல்லடிக்கோன். அவன் வருகையைக் கண்டு பலரும் ஓடி மறைந்தனர், யாரையும் மதிக்காதவனாய், மிகுந்த ஆதுரத்தோடு அந்தப்புரத்தை அணுகினான். அணுகியவன், சற்று அகல நின்று அந்தப்புர மாளிகைக்குள், கொடிபோல் நுடங்கியாடும் மருதியைக் கண்டான். என்ன அதிசயம்! அப்படியே பிரமித்து நின்றான். கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது அவனுக்கு. மெள்ள மறைவாக அணுகினான். அவன் உள்ளத்தையும் உடலையும் வசீகரித் தது மருதியின் நாட்டியம்; அவளுடைய நாட்டிய சப்த ஜாலமும், மணிக் குரலில் அவள் பாடும் கண்டப்பாடலும் வாடிய அவன் உள்ளத்தை மலரச் செய்தன. தான் காண்பது கனவா நினைவா என்று பிரமித்தான் என்னிடம் கோபாவேசத்துடன் சீறிவிழுந்த மருதியா இவள்! இவள் நாட்டியம் இப்போது காணக் கிடைத்ததற்குக் காரணம் என்ன? இந்த அமுதின் சாயலாளை அடையப் பெற்றவன் பெரும் புண்ணியம் செய்தவன் என்பதில் சந்தேகம் இல்லை; இவ்வளவு வசீகரத் தன்மையோடு நாட்டிய மாடும் இவள் தெய்வப்பிறவியா? இவள் குரல் என்ன, தேவகண்டமா? மானிடகண்டமா? ஆ! மேனியின் குழைவில் எவ்வளவு கவர்ச்சி! எவ்வளவு அழகு! இவள் கண்களில்தான் என்ன, எவ்வளவு களிமயக்கம்! ஆடவரைக் கொல்லாமல் கொல்லும் இவள் புன்னகையை என்னென்பது? இவளுடைய நாட்டியத்தை இப்போது யாருக்காக அபிநயித்துக் காட்டுகிறாள்? இவள் முகத்தில் சந்தோஷத்தின் நிறைவு துள்ளலாடுகிறதே! தன் நாட்டியத்தைக் கண்டு, ரஸிப்பதற்குத் தகுந்த கலாரஸிகன் இல்லையென்று எண்ணி, தனக்குத் தானே மகிழ்ந்து ஆடுகிறாளா? இவள் என்ன, சக்தியின் அம்சமா? ஆ! அதோ சிலை போல் அம்பை நின்று கொண்டிருக்கிறாளே! ஆம்! இனி என்னால் பொறுக்கமுடியாது; இவள் நாட்டியத்தை நன்கு கண் குளிரக் காண்பேன்!-- நல்லடிக்கோன் மனவுறுதியோடு, அந்தப்புரத்துக்குள் மெள்ளப் புகுந்தான்; புகுந்தவன் அவளுக்கு அருகில் இருந்த மஞ்சத்தை அணுகினான்: நல்லடிக்கோனின் வரவைக் கண்டு மருதி திகைப்படையவில்லை, நாட்டியத்தை நிறுத்தவும் இல்லை; அதைக்கண்டு அவன் பிரமித்துவிட்டான்; அம்பை, சட்டென்று ஒரு மஞ்சத்தை அவனுக்கு முன் கொணர்ந்து போட்டாள். நல்லடிக்கோன் வியப்பும் பெருமிதமும் கொண்டவனாய் அந்த மஞ்சத்தில் அப்படியே அமர்ந்து கொண்டான்; மெய்மறந்து மருதியின் நாட்டியத்திலே ஈடுபட்டான். அவளிடம் அவன் கொண்ட கோபம் மாய்ந்தது; என்னைக் கண்டு சீறிப்பாய்ந்தவள், இப்போது நான் இங்கே வந்த பின்பும், சிறிதும் மாறுபாடில்லாமல் நாட்டியம் ஆடுகிறாளே! என்னைக் கண்டால் ஒருகால், நாட்டியத்தையே நிறுத்தி விடுவாளோ என்று நான் அஞ்சினேனே! இது என்ன அதிசயமாயிருக்கிறது! இவள் போக்கை இவள் மனத்தியல்பை அறிவது முடியாது போல் இருக்கிறதே! இவ்வளவு நாட்டியத் திறமையும் தேவ கண்டம் போன்ற குரலும், திகைக்க வைக்கும் அழகும் கொண்ட இவள், அந்தப் பேதை ஆட்டனத்தி என்னும் கூத்தனோடு திரிவேன் என்கிறாளே! இவளை நம் சபைக்கு அலங்கார மாகப் பெற்றால் எவ்வளவு பெருமை, நம் நகரத்துக்கு: நம் நாட்டுக்கே பெருமையல்லவா!-இவள் இப்போது எதிர்பாராவிதமாக என்னைக் கண்ட பின்பும் நாணாமல் நாட்டியத்திலே ஈடுபட்டிருப்பது ஆச்சரியமாயிருக்கிறது! இவள் எண்ணந்தான் என்ன? இவளை இச் சமயத்தே பெற்ற நான், தகுந்தவாறு இவளைப் பயன் படுத்திக் கொள்வேன். தந்தையின் கட்டளைப்படி ‘கொங்கர் உள்ளிவிழா’வை சிறப்பாகக் கொண்டாடி, அதில் இவள் நாட்டியத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும்! வழக்கம்போல் உள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் நாட்டியம் ஆடுவதற்கென்றே இவள் என்னிடம் சிறைப்பட்டாளா? - ஆனால் இவள் உயிர்க்காதலனாகச் சொல்லும் ஆட்டனத்தியைப் பிரிந்த இவள், இப்படி நாட்டியத்திலே ஈடுபடுவதற்குக் காரணம் என்ன? எப்படியிருந்தால் என்ன? இவளை எப்படியேனும் உடம் படச் செய்து உள்ளிவிழா நம் நகரில் நடக்கப் போவதையும் அதில் நாட்டியமங்கை மருதியின் நாட்டியம் நிகழப் போவதையும் எங்கும் முரசறைந்து இன்றே செய்தி தெரிவிக்கச் செய்வேன்!’ - இவ்வாறு கற்பனையில் மனத்தைச் செலுத்தியவனாய், மருதியின் நாட்டியத்தைக் கண்களால் கண்டு களிகூர்ந்திருந்தான். காண்பவரை யெல்லாம் வருத்தும் வடிவழகும், கேட்பவரின் உள்ளத்திலேயே குதுகுதுப்புக் கொள்ளச் செய்யும் கண்டத்தொனியும், நாட்டியத்தால் ஆண் பெண் யாவருடைய உள்ளத்திலும் உணர்ச்சி குமிழியிடச் செய்யும் நடிப்புத் திறமையும் அவளிடம் ஒருங்கே அமைந்திருந்த அற்புதத்தை நல்லடிக்கோள் கண்ணால் கண்டு களிகொண்டான். உள்ளத்தின் உணர்ச்சிகளையும் - நினைவுச் சுழல்களையும்-இன்ப துன்பங்களின் எண்ணக் குவியல்களையும்-கருணை, சோகம் சிருங்காரம் முதலிய ஒன்பது வகைச் சுவைகளின் உணர்ச்சி வைசித் திரியங்களையும் தன் கருவிழிகளின் இயக்கத்தாலும், இருபுருவங்களின் நெளிவிலும், முல்லையரும்பன்ன இளநகையாலும், கொவ்வை இதழ்களின் அசைவிலும், முகவிலாஸத்தாலும், மற்றைய அங்கங்களின் குழைவிலும் - லாகவ அபிநயத்தாலும் தெள்ளத் தெளிய பாவ நிறைவுடன் நடித்துக்காட்டினாள். நாட்டியத்தின் பிரதான அம்ச மாகிய பாவம் வியக்கத்தக்க முறையில் அவளுடைய அபிநயத்திலே பிரதிபலித்தது. அவளுடைய நாட்டியத்தை அழகுபடுத்த, அங்கே, யாழும் குழலும் இல்லை; நாட்டியத்தின் மற்றோர் அம்சமான ‘ராகத்’திற்கு, அவளுடைய கண்டத்தொனி, யாழையும் குழலையும் காட்டிலும் அழகுபடுத்தியது. தன்னுடைய கண்டத் தொனியால் ‘ராகப்’ பகுதியையும் பூர்த்தி செய்தாள். அவளுடைய காலணிகளாகப் பாடகமும், சிலம்பும், கை வளையல்களும் நாட்டியத்திற்கு ஏற்ற தாளத்தை அளித்தன. நாட்டியத்திலே, பாவம், ராகம், தாளம் என்ற மூன்றிலும் தாளம் பிரதானம் அல்லவா? ஆனால் அந்த இடத்திலே அப்போது, நாட்டியத்திற்கு அங்க மான மத்தளம் கொட்டுவோன் இருந்தானா?-இல்லையே! தாளத்தை நிறைவாக்கி, நாட்டியத்தைச் சிறப்பிக்கும் வாத்தியங்கள் இல்லாவிட்டாலும், அவள் கால்கள் நிலம் பதியும்போது, விதவிதமாகச் சிலம்புகளிலிருந்தும் பாட கத்திலிருந்தும் எழும் சப்த ஜாலங்களும், கை வளையல் களின் இன்னொலியும், ஏற்ற தாளம் தந்தன. பாவம், ராகம், தாளம் என்ற மூன்று அம்சங்களும் நிறைந்த அவள் நாட்டியத்திலே - அழகுணர்ச்சி துளும்பும் வசீகர அபிநயத்திலே - குழலினும் இனிய கண்டத் தொனியிலே - பாடகச் சிலம்புகளிலிருந்து எழும் சப்த ஜாலங்களிலே நல்லடிக்கோன் தன் இருதயத்தைப் பறி கொடுத்தான். மெய்சோர்ந்து கண் இமைக்காமல், மருதியின் நாட்டியத்திலே ஈடுபட்டான் - அவளுடைய நாட்டியத்திலே அவன் ஐக்கியமாகி விட்டதாகவே எண்ணி மயங்கினான். சிறிது நாழிகைக்குப் பின், திடீரென்று நாட்டியம் நின்றது; நாட்டியம் நின்ற பின்பும் பிரமை பிடித்தவனாய் அப்படியே விழித்த கண் இமைக்காமல் அமர்ந்திருந்தான் நல்லடிக்கோன். அவனுடைய நிலையைக் கண்டு வியப்புற்ற மருதி, கலகலவென்று நகைத்து விட்டாள். அவளையறியாமல் சிரித்துவிட்டாள். வசந்த காலத்திலே தளிரும் பூவுமாகத் தளிர்த்து நிற்கும் பூங்கொடிபோல் தோன்றினாள் அவள். அவள் நகைப் பொலியைக் கேட்டவுடனேதான் நல்லடிக்கோன் நல்லுணர்ச்சி பெற்றான்; எனினும் அவன் மௌனமாக அவளை நோக்கியபடியே, உள்ளத்தின் வியப்பை முக பாவத்தால் வெளிக்காட்டினான். “என்ன நீங்கள் சிலையா என்ன? இப்படிக் கல்லாய்ச் சமைந்து விட்டீர்களே!” என்று இளந்கையோடு மருதியின் வார்த்தை வெளிவந்தது. நல்லடிக்கோன் திடுக்கிட்டான், மருதியின் வாய் மொழியைக் கேட்டு. “மருதி, இது கனவா, நனவா? நீ தான் பேசு கிறாயா?” என்றான். “இன்னும் மயக்கம் தெளியவில்லையா? இன்னும் சிறிது நாழிகை நான் நாட்டியம் ஆடியிருந்தால், உருகிப் போயிருப்பீர்கள் போலிருக்கிறது!” என்று மருதி சிரித்தாள். அந்தச் சிரிப்பில், எவ்வளவு மாயம் கலந்திருக் கிறது என்பதை அவன் உணரவில்லை. “ஏன்? அதில் சந்தேகமில்லை; உன்னுடைய நாட்டியத்தைக் கண்டு உருகாதவன் கல்தான்; அதனால்தான் என்னைக் கல் என்று சொல்லிவிட்டாயா? மருதி உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? எதிர்பாராத விதமாக எனக்கு நாட்டிய விருந்தை உதய காலத்தில் அளித்த உனக்கு என்றும் கடமைப்பட்டவன். விடுதலை ஒன்றைத் தவிர்த்து நீ என்னவேண்டினாலும் அதை நான் மறுக்கவில்லை.” “இளவரசரே, எனக்கு வேண்டியதை நான் கேட்க வேண்டுமா? என் விருப்பத்தை மீறி என்னைத் தாங்கள் அணுகித் துன்பம் செய்வது கூடாது; என்னிடம் எல்லை மீறிய பேச்சையும் பேசலாகாது. இவையே நான் வேண்டுவன.” “மருதி, உன் விருப்பம்போல் நடப்பேன்; இனி உன்னை நான் அற்பமானவளாகக் கருதுவேனா? கணிகை என்ற எண்ணத்தால் கலங்கிவிட்டேன். உன் நாட்டிய விருந்து ஒன்றே எனக்கு எப்போதும் இன்பத்தை அளிக்கும்: அதுவே போதும்; உன்னிடம் நான் கொண்ட தீய சிந்தையை மாற்றிக் கொண்டேன். உன்னுடைய நாட்டியத் திறமையின் உயர்வுக்குத் தலை வணங்குகிறேன்; வேண்டும்போது உன்னுடைய நாட்டியத்தை நான் காணக் கிடைத்தால் போதும்” என்று கூறிக்கொண்டிருக்கையில் சேடி ஒருத்தி முன் வந்து, “கரூரிலிருந்து தூதுவர் வந்துள்ளனர்” என்று வணங்கினாள். திடுக்கிட்டு, மரு தியும், நல்லடிக்கோனும் திரும்பிப் பார்த்தனர்; தூதுவரை உள்ளே வருமாறு கட்டளையிட்டான். இரு தூதுவர் முன் வந்து ஓர் ஓலையை நீட்டி வணங்கினார்கள். செய்தி என்னவோ என்று இருவருக்கும் தனித்தனியே திகில் மூண்டது. நல்லடிக்கோன் ஓலையை வாங்கிப் பிரித்துப் படித்தான். செங்கணானின் ஓலையைப் படித்தவுடன், நல்லடிக்கோனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. மருதியைப்பற்றி ஓலையில் குறிப்பிட்டிருந்ததை சிரமேல் ஏற்றுக் கொண்டான். ஆனால் மிகுந்த உவப்பை அவனுக்கு உண்டாக்கிய செய்தி என்னவென்றால், ‘உள்ளி விழாவை உறையூரில் நடத்துக’ என்பதே. “மருதி, கவலை ஏற்படுமானால் ஒருங்கே மேன்மேல் வந்துகொண்டிருக்கும்; அதுபோலவே மகிழ்ச்சி பிறந்தால் மேன்மேல் மகிழ்ச்சி தரும் செய்திகள் வருகின்றன: இன்று என் தந்தையிடமிருந்து ஓலை, வந்திருப்பதில் ‘உள்ளி விழாவை’ உறையூரில் நடத்தக் கட்டளையிட்டிருக்கிறார்; இதைவிட மகிழ்ச்சி தரும் செய்தி என்ன இருக்கிறது? உள்ளி விழாவில் வழக்கம் போல் உன்னுடைய நாட்டியத்தை..” என்று உவகையால் தழுதழுத்த குரலில் கூறினான். நெடு நாட்கள் பழகியவன் போல் பேசும் அவன் வார்த்தைகளைக் கேட்டு மருதி திகைப்படைந்தாள்: எனினும் வருங்காலத்தில் நம்பிக்கை கொண்டு. அவனுக்குத் தலை வணங்கினாள். “இளவரசே, தங்கள் கட்டளை. சோழ சாம்ராஜ் யத்தின் அரசிளங்குமரரின் கட்டளையை, நாடகக் கணிகையான நான் மீற முடியுமா?” என்று குறு நகை, செய்தாள். அந்தக் குறு நகையிலும் முடிவில்லாச் சோகத்தின் நிழல் பரவியிருப்பதை அவன் உணராமல் இல்லை. ‘என் நிலை இவ்வாறு ஆக வேண்டுமோ!’ என்று எண்ணி அவள் ஏங்குவதை, அவள் கண்கள் நன்கு எடுத்துக் காட்டின. ஆயினும் என்ன? நல்லடிக்கோன் அவற்றையெல்லாம் கவனித்தானா என்ன? “மருதி, விரைவில் விழாவுக்குரிய காரியங்களை ஆயத்தம் செய்கிறேன்; என் தந்தை கட்டளைப்படி, பட்டத்து யானையை அலங்கரித்துக் கருவூர் அனுப்பியாக வேண்டும்; போய் வருகிறேன்; அம்பை, பார்த்துக் கொள்!” என்று கூறிவிட்டு நல்லடிக்கோன், அந்தப்புர மாளிகையை விட்டு வெளியேறினான். நல்லடிக்கோனிள் குதூகலப் போக்கைக் கண்டு மருதி, சோர்வடைந்தாள் என்று சொல்லவும் வேண்டுமோ! நாட்டியம் ஆடியதால் ஏற்பட்ட களைப்பும் அதோடு சேர்ந்துகொண்டது. சற்றுப் பிரமையோடு சுற்று முற்றும் பார்த்தாள்; இளஞ் சூரியனின் பொன் கிரணங்கள் சாளரத்து வழியே, பொன் கொடிபோல் பாய்ந்தன. அம்பையைப் பார்த்தாள் மருதி. அவள் கண்கள் பேரிரக்கத்தோடு மருதியைப் பார்த்தன. “நீ சொல்லியதில் நம்பிக்கையோடு இருக்கிறேன்; ஆனால் தெய்வம் என்ன நினைத்திருக்கிறதோ! நான் சிறிதே களைப்பாறுகிறேன். மயக்கமாக இருக்கிறது” என்று சொன்னவள், அம்பையின் மறுமொழியை எதிர்பாராமலே கட்டிலில் பஞ்சணை மீது சாய்ந்தாள். சாய்ந்தவள் அப்படியே கண்கள் இமை மூடி அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தாள். பொன் கொடி போன்ற அவள் மேனியின் சாயலைப் பார்த்தவாறே, மருதியின் கால்பக்கம் உட்கார்ந்து கொண்டாள் அம்பை. “மருதி, மருதி!” என்றாள்; பேச்சில்லை. அம்பை வியப்புற்றாள். “மருதி, என்ன இது? கனவா, நினைவா?” என்று மருதியின் கால்களை அசைத்தாள். “இரண்டுந்தான்” என்று கூறிக்கொண்டே மருதி கண்களைத் திறந்தாள். அவளுக்குக் களைப்பு நீங்கி விட்டது. எழுந்து உட்கார்ந்து கொண்டாள். ஆட்டனத்தியைப் பிரிந்த அவளுக்குத் துக்கம் எப்படி வரும்? |
கொலையுதிர் காலம் ஆசிரியர்: சுஜாதாவகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 280.00 தள்ளுபடி விலை: ரூ. 255.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஆசிரியர்: ஸ்டீபன் ஹாக்கிங்மொழிபெயர்ப்பாளர்: நலங்கிள்ளி வகைப்பாடு : அறிவியல் விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 330.00 அஞ்சல்: ரூ. 50.00 |
|