-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்



பாகம் மூன்று

2. கருப்பையாவின் தூது

     செல்லையா, காய்கறி மார்க்கெட்டில் அடிக்கடி வீட்டுச் சமையலாள் கருப்பையாவைச் சந்தித்து, அவ்வப்பொழுது முதலாளி வீட்டு நிலவரத்தை அறிந்து வந்தான். சமையலாள் கடைசியாகச் சொன்ன செய்தி, செல்லையாவை அதிரடித்து விட்டது. மரகதத்தை நாகலிங்கத்துக்குக் கட்டி வைக்கப் போவதாக வானாயீனா தீர்மானமாக அறிவித்து விட்டார். கப்பல் விட்டதும் ஊருக்குப் போய்க் கல்யாணம், மனைவியின் எதிர்ப்புக் காரணமாகத்தான் இதுவரை இறுதி முடிவாக எதுவும் சொல்லாமல் இருந்தார். தந்தையின் அறிவிப்பைக் கேட்டது முதல் மரகதம் யாரிடமும் பேசாமல் அழுது கொண்டே இருக்கிறாள்.

     மார்க்கெட்டில், பற்று வரவுப் புள்ளி கன் லிம் கடை முன் நாற்காலியில் அமர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் செல்லையா. சுற்றிலும், சீனர்களிடம் தமிழில் விலை பேசும் பெண்களின் கூச்சலும், மலாய்க்காரிகளின் இழுவையான இன்குரலும், சீனப் பெண்களின் ஙொய்ங் புய்ங் இரைச்சலும் கலந்து குழம்பி ஒலித்தன.

     “அட தவுக்கே, உருளகெளங்கு என்ன வெலையிடா... ஓங் கையில பாம்பு புடுங்க... தெராசை நல்லாப் பிடிச்சித் தூக்குடா... அந்தாந்த வெந்தயக் கீரை எம்புட்டுரா?...”

     வியாபாரிகளின் பதிலான சீன மொழியோசை கீச்சிட்டுக் காதைத் துளைத்தது. எப்படியா விலைகள் திகைந்து, பண்டமும் காசும் கை மாறின.

     மேற்கே, கூடையுடன் வந்த சமையலாளின் உருவம் தெரிந்தது. செல்லையா, எழுந்து விரைந்தான்.

     “கருப்பையாண்ணே! என்ன சேதி, மரகதம் நல்லாயிருக்கா?”

     “ம்ஹ்ம்... தங்கச்சி அழுதழுது கண்ணெல்லாம் வீங்கிப் போச்சி. ரெண்டு நாளாய் யார்ட்டையும் ஒண்ணும் பேசலை. அவுகம்மா கும்பிட்டு விழாத குறையாக் கெஞ்சிக் கேட்டுக் கிட்டதுக்கப்புறம், ராத்திரிதான் ஒருவாயி சாப்பிட்டுச்சு... தங்கச்சி உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லச் சொல்லுச்சி.”

     “என்ன சொல்லுச்சி.”

     “காலையில காலையில போயி, தண்ணிமலையானைக் கும்பிட்டுப்பிட்டு வருவிங்யளாம். மொதலாளி மனசு கோணாமல் கொஞ்ச நாளைக்கி, அதுக்காக விட்டுக்குடுத்து நடந்துக்குவிங்யளாம். ‘தினசரி சாமிய வேண்டிக்கிருக்கேன். தண்ணிமலையான் நம்மளைக் கைவிட மாட்டான்னி சொல்லுன்னி தங்கச்சி சொல்லுச்சி.”

     “சரி தண்ணிமலையான் கோயிலுக்குப் போய்த் தினசரி கும்பிடுறேன்... மரகதம் ரெம்ப இளைச்சுப் போயிருச்சா, கருப்பையாண்ணே?”

     “அந்தக் கண்றாவிய ஏண்ணே கேக்குறியக... மொதலாளிக்கு இரும்பிலதான் மனசச் செஞ்சி வெச்சிருக்கு... இன்னிக்குத்தான் தங்கச்சி கொஞ்சம் தெளிச்சியாத் தெரியுது. காலம்பர எந்திரிச்சுக் குளிச்சிப்பிட்டு ரொம்ப நேரம் சாமி கும்பிட்டுச்சு... அது தெய்வப் பிறவியண்ணே! என்னமோ, ஈரமில்லாத மனுசன் வயித்தில வந்து பிறந்திருச்சி.”

     “கருப்பையாண்ணே, மரகதத்தை எப்படியும் பார்த்துப் பேசணும். இல்லாட்டி கிறுக்குப் பிடிச்சிரும் போலருக்கு.”

     “அவசியம் வாங்க. ஒங்க முகத்தைப் பார்த்தா, அது கவலை கொஞ்சம் தீரும். முதலாளி கடைக்கிப் புறப்பட்டப்பறந்தான் அக்கா குளிக்யும். அந்நேரமா வாங்க.”

     “அவசியம் வர்றென் கருப்பையாண்ணே, மரகதத்தைப் பத்திரமாப் பார்த்துக்கங்க, அது பாட்டுக்கு என்னமாவது...”

     “தண்ணிமலையான் இருக்கான். ஒரு கோளாறும் வராதண்ணே. அது மனசு கோணுறாப்புல ஒண்ணு நடந்தால், ஊர்ல மழையேது?”

     “வர்றென், கருப்பையாண்ணே.”

     “சரி, போயித்து வாங்கண்ணே.”

     செல்லையா திரும்பி, பினாங் ஸ்ட்ரீட்டை நோக்கி மெய் மறதியோடு நடக்கலானான். காய்கறி வர்த்தக இரைச்சல் செவியில் படவில்லை. உராய்ந்து சென்ற உருவங்கள் உடலை உறுத்தவில்லை. காலைக் கதிரவனின் சுடரொளியில் கண் கூசவில்லை.

     கூட்டத்தினிடையே தோன்றியும் மறைந்தும் சென்ற செல்லையாவின் உருவத்தை இமை கொட்டாமல் பார்த்து நின்றார் கருப்பையா. ‘ம்ஹ்ம்... மொதலாளி கருமம் பிடிச்ச மனுசன். விடிஞ்சி எந்திரிச்சிப் படுத்துக்கிற வரை பணம் - தொழிலு, பணம், தொழிலுன்னு சாகுறாரே... இப்படி மருமகன் கிடைக்கிறதின்னாச் சும்மாவா இருக்கு. என்னமோ, தங்கச்சி குணத்துக்குச் செல்லையா வந்து கால்ல விழுகுது. நாகலிங்கத்தைத்தானே மொதலாளிக்கிப் பிடிச்சிருக்காம்! அவனும் அவன் மொகரையும், க்ர்ர்ர்...

     காறித் துப்பிவிட்டு, மேற்கே திரும்பி நடந்தார்.