10 நாலைந்து நாளாகவே மணியக்காரருக்கு உடம்பு ‘ஒரு மாதிரியாக’ இருந்தது. இன்ன வியாதி என்று சொல்வதற்கு இல்லை. அவரும் ‘இது தான்’ என்று ஒரு வியாதியையும் குறிப்பிட்டுச் சொல்லாமலே போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டே படுத்திருந்தார். பவளாக் கவுண்டர் மட்டும் அங்குமிங்கும் வீட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தார். என்னத்தையாவது தழைதாம்பை அறைத்துக் கொண்டு வந்து காலில் தடவச் சொல்லுவார். ஏதாவது பத்தியத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பார். “எதற்கு இது?” என்று யாரும் அவரைக் கேட்பதில்லை. அவரும் நின்று பதில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை!
மணியக்காரரும் வைத்தியர்களுடைய சங்கடத்தைத் தெரிந்து கொண்டுதான் மௌனமாக இருந்தார் போலும்? நாட்டு வைத்தியர்களிடம் பார்க்க விருப்பமில்லா விட்டாலும் கை அசைத்தால் காங்கயத்திலிருந்து செட்டியாரே பார்த்து ‘பட்டண வைத்திய’னையே அனுப்பி விடுவார். ஆனால் மணியக்காரர் எதிலும் ‘சோடை’ இல்லாமல் படுத்துக் கொண்டிருந்தார். காலைக்காற்று குளுமையாக வீசிக் கொண்டிருந்தது. அந்த அமைதியான காலை வேளையில் மோட்டார் ஆரன் சத்தம் கர்ண கடூரமாக விட்டு விட்டுக் கேட்டது. இந்தக் கடூரமான சத்தம் சில செவிகளில் தேவாமிர்தம் போல் விழுந்தது என்றால் அது ஆச்சரியப்பட வேண்டிய செய்திதான்! மணியக்காரருக்குக் காரில் வருகிறவர், வீரப்ப செட்டியார்தான் என்பது உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெரிந்து விட்டது. இந்த கிராமத்துக்கு வீரப்ப செட்டியார் காரைத் தவிர வேறு யாருடைய கார் வரப் போகிறது? அங்கங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு கண்மண் தெரியவில்லை. காரைக் கண்டதும் சந்தோஷ மிகுதியால் இன்னும் ஒரு கைமண்ணை வாரித் தலையிலே போட்டுக் கொண்டு குதியாகக் குதித்தன. மணியக்காரர் படுக்கையிலிருந்து எழுந்து உட்காரவும், செட்டியார், “அடடே!” என்று விசாரிக்கவும் சரியாயிருந்தது. கூர்ந்து பார்த்துக் கொண்டே, “எட்டு நாட்களாக வரவேணுமிண்ணு தான் பார்த்தேன். ஓய்வு ஒழிச்சல் இருந்தால் தானே? எங்கே நேரம்? அந்தக் கூத்தை ஏன் கேக்கறீங்க? இன்னும் கருப்பராயன் கோவில் பயணம் ஏதாச்சும் மீதி இருக்குதா? அல்லது எல்லாம் ஆச்சா? அடடே, நாளைக்கு வெள்ளிக்கிழமை இல்லே? அதுவும் ஆடி வெள்ளிக் கிழமை. மலைக்குப் போவீங்களே? எங்கே சேமலைக்கா? இல்லாட்டிச் சென்னிமலைக்கா?” என்றார். மணியக்காரர் மெதுவாகச் சிரிக்க முயன்றார். இதற்குள் செல்லாயா இரண்டு டம்ளரில் பால் கொண்டு வந்து வைத்தாள். செட்டியார் தலையைத் தடவிக் கொண்டே, “அம்மணி, என்னாயா அய்யம் படுத்துக் கிட்டாங்களே!” என்றார். “இனி நல்லாயிருமிங்க” என்றாள் செல்லாயா. செட்டியாருக்கு ரொம்ப சந்தோஷம். “பாத்தீங்களா? பாத்தீங்களா? நா வந்தாலே ஒரு ‘கலகல’ப்பு இல்லீங்களா? அம்மணிகூடக் கண்டிட்டா பாருங்க. எங்கே செல்லாயா, அய்யனுக்கும் கொஞ்சம் ‘காப்பி’ போட்டாயா. இந்தப் போர்வையை இப்படித் தூக்கி எறியுங்க. நாஞ் சொல்றபடி கேட்டாத்தான் இங்கே உட்காந்திருப்பேன். சோறு தின்பேன். இல்லாத போனா, இதே காரைத் திருப்பிட்டுப் போகறப் போறேன்” என்றார் செட்டியார். மணியக்காரருக்கு பேச்சைக் கேட்கக் கேட்க உடம்பு குணமாவது போல இருந்தது. மனசு என்ன நிலையில் இருந்தாலும், ஒரு உற்சாகமான பேச்சு, ஆதரவான வார்த்தை - இவைகளைக் கேட்டால் ‘கட்டுப் பிடித்து’ விட்ட மாதிரி குதூகலம் கொள்ளுகிறது. செட்டியாருக்கு அடிக்கடி இங்கு வந்து பழக்கம். ஆதலால் அந்த அறையில் துணிமணியும், கொள்ளு மூட்டையும் நிறைந்திருக்கவே, படுக்கை அறையிலேயே போய் மெத்தையின் மீது இருவரும் உட்கார்ந்தார்கள். செட்டியார் கொஞ்சங் காரமாகவே, “என்னுங்க மணியக்காரரே, நாளுக்கு நாள் ‘பதிரு’ப் பட்டம் எச்சாகறதைத் தவிர என்னத்தைக் கண்டோமுங்க?” என்றார். என்ன சொல்ல ஆரம்பிக்கிறார் என்பது நன்றாகத் தெரியவில்லை. “யாரு மேலே கோவிக்கிறீங்க?” என்றார் மணியக்காரர். “உங்க மேலெதான். எம்மேலெதான்!” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே தலையை இரண்டு தரம் தடவிக் கொண்டார். மறுபடியும், “உங்களுக்கு என்ன தெரியாதா? நாம ரண்டு பேரும் சேர்ந்து ஊரைக் கெடுக்கறமாம்? எப்படி யிருக்குது கதை” என்றார். “சொல்றவனுக்கு என்னுங்க? சொல்லிக்கிட்டுத்தான் இருப்பான். நாம காதிலே போட்டுக்காமே இருந்திட்டாப் போகுது” என்றார் மணியக்காரர். “அப்படிச் சொல்லுங்க. தலைபோற அவசரம்ணு ஆவிப்பறந்து கிட்டு ஓடியாறபோது ஓடியாறது. செட்டியாரே நீங்கதான் சகாயம், நீங்க குடுத்து ஒதவாட்டி குடி முளுகிப் போகும்கறது. அண்ணா உங்க சகாயம் இல்லாட்டி பொளப்புத்தனம் எப்படி நடக்கும்? நீங்கதான் செட்டியாருக்கு சொல்லோணும்னு உங்க காலைப் புடிக்கிறது. அட அப்பாவி போறாம்போண்ணு ஆபத்துக்கு ஒதவுனா அப்பற கெடைக்கிற பட்டம் என்ன தெரியுமுங்கல்லோ? செட்டி தம்பிடி வட்டி கொறைக்க மாட்டான். இந்தப் பாழாப்போன மணியக்காரன் நம்ம வாயிலே மண்ணைப் போட்டுட்டானேண்ணு நம்மளைத் துரத்தரதா? நாமளா கடனை வாங்குண்ணு சொன்னோம்? நாமளா வட்டி சல்லிக் காசு கூட கட்டவேண்டாம், பூமி ஏலத்திலே போற மட்டும் சும்மா இரப்பாண்ணு சொன்னோம்? மண்டை கிறுகிறுத்தவனைத் தவிர்த்து வேறே எவனாச்சும் பேசற பேச்சுங்களா இது?” என்று சொல்லி மூச்சு வாங்குவதற்காக செட்டியார் கொஞ்சம் நிறுத்தினார். அசையாமல் மணியக்காரர் கேட்டுக் கொண்டிருந்தார். “இன்னும் பாருங்க அக்கிரமத்தை. குடுக்கறதையும் குடுத்திட்டு நூத்தி எட்டு தடவை அவனைக் காலைக் கட்ட வேண்டியிருக்குதுங்க? கொஞ்சம் ‘நறு’க்கிணு கேக்கப் போனா, ‘வெட்டறன் குத்தறன்’கறது? குத்தறதுண்ணா இவங்க அப்பனூட்டுக் கிள்ளுக் கீரையிண்ணு நெனைச்சுக் கிட்டாங்களா?” என்று கோபத்தோடு கூறினார். தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே மணியக்காரர், “கடங் கொடுத்தவன் அதட்டற காலம் போய், கடன் வாங்கினவன் மெரட்டற காலமாக இருக்குதுங்களே? உங்களைப் போல இருக்கறவஞ்க தலையைக் குத்தீட்டுப் போற காலந்தானுங்க” என்றார். செட்டியார் என்னவோ யோசித்துக் கொண்டிருந்தார். “இந்த ஆத்தோரம் ராமசாமிக் கவுண்டன் ‘பொளி’க்குப் பக்கத்திலே யாருதுங்க? நல்ல பூமி, புகையிலை நல்லா வருமாமல்ல?” என்றார் செட்டியார். எப்போதுமே செட்டியார் யோசனை எடுத்துச் சொல்ல வேண்டியது. மற்றக் காரியங்கள் மணியக்காரர் மனத்திரையில் உருவகம் ஆகிவிடும். அடுத்த கணமே கோடுகள் கிழித்து மானசீகமாக கட்டிடம் கட்டிவிடுவார். சாயங்காலம் ஆற்றங்கரைக்குப் புறப்பட்டார்கள். மணியக்காரருக்கும் கொஞ்சம் ‘காலாற’ நடக்க வேண்டும் என்று தான் தோன்றியது. இருந்தாலும் செட்டியார் தூண்டுதலினால் அந்தப் பூமியை மனதில் வைத்துக் கொண்டு மணல் ஓரமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். தலையாரி கைத்தடியுடன் இவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தான். கரை மேட்டில் ஏழெட்டுப் புளிய மரங்கள் இருக்கின்றன. அது காய்த் தருணம். ஏலத்துக்கு விடுவதற்கு முன்பே மரத்தை மொட்டை அடித்து விடுவார்கள். ஆனால் அந்தப் பங்கில் ‘குடு குடு’ கிழவி பாவக்காளும் ஈடுபட்டிருந்ததைக் காண மணியக்காரருக்கு ஆச்சரியமாக இருந்தது. அடிக்கடி மணியக்காரர் வெளியே வருவதில்லை. வந்தாலும் தோட்டமுண்டு, வீடுண்டு. இந்த மாதிரி அவர் கண்ணில் ஒன்றும் படுவதில்லை. மணியக்காரர் ஏனோ சோர்வு தட்டியவராக இருக்கிறார் என்பதைக் கவனித்த செட்டியார், “என்னுங்க மணியாரே, இருந்தால் உங்களாட்ட இருக்கோணும். என்னுங்க பின்னே, பூமிக்கும் கேடாப் பொறக்கறதிலும் சும்மா இருந்திரலாமே” என்றார். “எடுத்த காரியத்தை முடிக்கறதிலே உங்களைப் போல கண்டதில்லீங்கோ. காரியத்துக்கு அப்புறந்தான் உங்களுக்குச் சோறு தண்ணி எல்லாம்” என்றார். அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம் சுற்றிலும் பரந்து கிடக்கும் எத்தனையோ தோட்டங் காடுகள் மணியக்காரர் சம்பந்தத்தால் செட்டியாருக்கு வசமாகி யிருக்கிறது. செட்டியார் உறவினால் மணியக்காரரும் பயன் பெற்றிருக்கிறார். நடைச் சலிப்புத் தெரியாமலே முக்கால் மைலுக்கு மேல் வந்து விட்டார்கள். தாங்கள் வாங்கப் போகும் நிலத்தை ‘நோட்டம்’ பார்த்துக் கொண்டே சின்ன அணைக்கட்டின் கரடுமுரடான கற்களின் மேல் உட்கார்ந்தார்கள். தலையாரி ஒரு அணிலைத் துரத்திப் பிடிப்பதில் மும்முரமாக முனைந்திருந்தான். மாலைக் கதிர்கள் எங்கே பார்த்தாலும் மாயாஜாலம் புரிந்து கொண்டிருந்தன. இளம் ராகி நாற்றுக்களின் உச்சியைப் பொன்னிறமாக்க முயலுகையில், தங்கமும் பச்சையும் கலந்த ஒரு வர்ணஜாலம் கண்ணைக் கருத்தைக் கவர்ந்தது. குறுகுறு என்று ஓடும் ஆற்று நீரின் மீதும் பாறைகளின் மீது உட்கார்ந்திருக்கும் வெண்ணிறக் கொக்குகளின் மேலும், பக்கத்திலுள்ள பசும் மைதானங்கள், மரத்தின் இடைவெளிகள், கரையோரப் புதர்கள் இங்கெல்லாம் மாலைக் கதிர்கள் ஓடிப் பாய்ந்து புதுப்புது வனப்புக் கோலத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. ஆனால், இந்த அற்புத அழகிலே இதயம் ஒன்றிப் பரவசப் படுவாரைத்தான் அங்கு காணோம்! மணியக்காரர் மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்தார். செட்டியாரும் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தீர்க்கமான குரலில், “கட்டாயம் உங்களுக்கும் ஒரு ‘கார்’ வேணுமுங்க. அது இல்லாத போனாச் செரிப்பட்டு வராதுங்க” என்றார். நாளதுவரை செட்டியார் பேச்சை தட்டியவரல்ல. அந்தப் பிராந்தியத்திலே பழைய சோற்றுக்குப் பதில் ‘காப்’பியைக் கைக்கொண்ட முதல் மனிதர் மணியக்காரர் தான். ஆனால் இதற்கு அவருக்குக் ‘குரு’வாக விளங்கியவரும், இன்றைக்கும் அந்த ஸ்தானத்தை வகித்து வருபவரும் நமது செட்டியாரவர்களே தாம். இன்னும் செட்டியாரோடு காங்கயம் போகும் போதெல்லாம் புதுப்புது அனுபவங்களை அவர் அடைந்தே வந்தார். அழகான திரைச்சேலைகள், மகளுக்கு விதவிதப் படங்கள். விநோதப் பொருள்கள் முதலியன அவர் வீட்டை வந்தடைந்தன. ஏற்கெனவே இப்படி எல்லாம் நிகழ்ந்திருக்க ஒரு கார் வாங்குவது என்ன பிரமாதமான காரியமா? தவிர அவருக்கும் வெகு நாளாக அந்த ஆசை உண்டு. “ஆகட்டும் நீங்களே நல்லதாப் பார்த்து ஒண்ணை முடிச்சுக் குடுங்கோ?” என்று அவரிடமே அதை விட்டு விட்டார். இருவரும் திரும்பி வீட்டிற்கு வரும்போது நன்றாக இருட்டிவிட்டது. செட்டியார் இரவில் ஆகாரம் சாப்பிடுவதில்லை. பாலும் பழமும் மட்டும்தான் உட்கொள்வார். நல்ல பலகாரமாக இருந்தால் தள்ளுபடி இல்லை. அன்றைக்கு அவர் விருப்பம் போலவே இரண்டு தினுசும் கிடைத்தது. ஆகையால், “செல்லாயா, தங்கமான பொண்ணு” என்று அவர் வாயார வாழ்த்துவதை பவளாக் கவுண்டர் மனப்பூர்வமான வாழ்த்துதல் என்றே எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |