(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953) மலர் 2 கரிய கங்குலைப் பிளந்து கொண்டு தன் பொன்மேனியுடன் மலர்ந்து உதய கன்னி என்னை வரவேற்க, நான் என் புது வாழ்வின் உதயத்தில் இணைய அடி எடுத்து வைத்தேன். வண்டியிலிருந்து என் கண்களில் முதல் முதலாக மைத்துனர் தென்பட்டார். அவருக்குப் பின்னால், மூன்று நாலு வயசிருக்க்ம் பெண் குழந்தை ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டு வெள்ளை நிஜாருடனும் ஷர்ட்டுடனும் என் கணவர், லேசான நகையுடனும் கனிவு கொண்ட விழிகளுடனும் என்னைப் பார்த்துக் கொண்டு நின்றார். காலை வேளையின் புத்துணர்ச்சி அவர்களிடம் நிரம்பி இருந்தது. எனக்கோ சரியாகக் கூட உட்கார இடமில்லாமையால், உடம்பெல்லாம் வலித்தது. தூக்கம் இல்லாததால் கண்கள் ஜிவு ஜிவுவென்று எரிந்தன. மரத்துப் போயிருந்த கால்களைக் கூட வண்டியில் அடைந்திருந்த கூட்டம் இறங்கிய பின்னரே நீட்ட முடிந்தது. ரெயில் சூட்டில் கருகித் தலையிலிருந்து தொங்கிய மல்லிகைச் சரத்தை எடுத்துக் கொண்டே வண்டியை விட்டு இறங்கினேன். பிரிந்த குழல் பறந்து பறந்து கண்முன் வந்து விழுந்தது. அப்பா சாமான்களை எடுத்துக் கொடுக்க, அவர் ஒரு கை பிடிப்பதைக் கண்ட என் மைத்துனர், “போர்ட்டர் போர்ட்டர்!" என்று கூலி ஒருவனைப் பார்த்துக் கூவினார்.
அவருக்குப் பக்கத்தில் என் மைத்துனர் மடியில் குழந்தையுடன் அமர்ந்து கொள்ள அப்பாவையும் என்னையும் பின்புற ஆசனத்தில் தாங்கிக் கொண்டு பட்டணத்தின் வழு வழுப்பான தார் ரோட்டில் கார் சென்ற போது எனக்கு வான ஊர்தியில் சஞ்சரிப்பது போல் இருந்தது. கண் மூடிக் கண் திறப்பதற்குள் வீடு வந்துவிட்டது போல் எனக்குத் தோன்றியது. முன் வாசல் முகப்பில் பிரம்பு நாற்காலி ஒன்றில் சாய்ந்து கொண்டிருந்த என் ஓரகத்தி எங்களைக் கண்டதும் எழுந்து நின்றாள். நாங்கள் எல்லோரும் வீட்டுக்குள் புகும் போது, அப்பாவின் எளிய தோற்றமும் உடை எல்லாவற்றையும் அந்தச் செல்வச் சூழ்நிலை மிகைப்படுத்திக் காண்பித்தது. சுகமாக உண்டு உறங்கிச் செல்வத்தில் புரளுபவர்கள் மத்தியில் வறுமையின் சின்னமாகவும், உழைப்பின் பிரதிநிதியாகவும் அவர் தென்பட்டது போல் எனக்குத் தோன்றியது. சிரமத்துடன் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றிருந்த என் ஓரகத்தி, “வா" என்று புன்னகை மலர்ந்த வதனத்துடன் என்னை வரவேற்றாள். அவள் தோற்றம், அவள் அப்போது கர்ப்பிணி என்பதைச் சுலபமாக எனக்கு அறிவித்தது. அதற்குள் எதிரே அவசர அவசரமாக வந்த என் மாமியார், “ஏன் பட்டு! ஆரத்தி எடுக்க வேண்டாமோ? அதற்குள் உள்ளே வந்துவிட்டாளே!" என்றாள். “எடுக்க வேண்டுமா? இதெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கிறது?" என்று கூறிய அவள் என்னை நோக்கி மறுபடியும் புன்னகை செய்தாள். திரும்பவும் வாசலில் போ என்பார்களாக்கும் என்று நான் தயங்கி நிற்பதைக் கண்ணுற்ற என் கணவர், “பரவாயில்லை, உள்ளே போகலாம்" என்று நகைத்தார். முன் சென்ற மாமியாரைத் தொடர்ந்து நான் சென்றேன். சமையலறையில் ஓர் அம்மாள் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். “இது தான் பட்டுவின் அம்மா; நமஸ்காரம் பண்ணு" என்றாள் என் மாமியார். கீழே குனிந்து பணிந்த என்னைப் பார்த்து, பர்வதம் போல் உட்கார்ந்திருந்த அந்த அம்மாள், “பாவம், கண்ணெல்லாம் சிவந்திருக்கிறது. ரெயிலிலே கூட்டம் போலிருக்கிறது" என்று மெல்ல நகைத்தாள். அவள் காதிலே இருந்த வயிர ஓலையும், கையிலே மின்னிய மோதிரங்களும், இடுப்பிலே தகதகத்த காவி நிறப் பட்டும் அவள் ஒன்றுக்குமில்லாமல் மகள் வீட்டில் வந்து இருக்கவில்லை என்பதை அறிவித்தன. அடுப்பைக் கவனிக்கப் போன என் மாமியாரிடம், “முதலில் காபியைக் கலந்து கொடுங்கள்" என்றாள். “இல்லை, நான் இன்னும் பல்லே தேய்க்கவில்லை" என்று கூறிய நான் சமயலறையைச் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டே நின்றேன். புது மனிதர்களும் புது இடமும் எனக்கு அங்கே எப்படிப் பழகுவது, சகஜமாக எப்படி வளைய வருவது என்பதே புரியாதபடி இருந்தன. அத்தையகத்து வாழ்க்கையின் வாசனை என் மனத்தில் லேசாகப் பரவியது. பட்டுப் பாவாடையின் இழையைத் தொட்டுக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்திருந்த பெண் குழந்தை, “இது தான் சித்தி! எனக்குத் தெரியுமே!" என்று தன் மழலை மொழியில் கூறி நகைத்தது. “ஏண்டா குமார், இந்தச் சித்திக்கும் ரொம்ப நன்றாகக் கணக்குச் சொல்லிக் கொடுக்கத் தெரியுமாம். அந்தச் சித்தி போல இரண்டைத் தொண்டையால் கத்திக் கத்தி அடிக்கவே மாட்டாளாம்!" என்று அழுத கண்களை ஷர்ட்டுத் துணியால் துடைத்துக் கொண்டு நின்ற எட்டு வயசுச் சிறுவனுக்கு என்னை பழக்கம் செய்வித்தார் அவர். ‘குழந்தைகள் இருக்கிறார்கள் இங்கு. அன்புடன் இருக்க வேண்டும்’ என்று நினைத்த வண்ணம் நான் அவர்களை நோக்கி முறுவலித்தேன். “ஓகோ! ஆசாமியை எங்கே காணோம் என்று பார்த்தேனே! அதற்குள் இங்கே மிஸஸ்ஸுடன் பேச வந்துவிட்டாரோ?" என்று இரட்டைத் தொண்டையில் கட்டைக் குரல் ஒன்று கேட்டதும் நான் திரும்பிப் பார்த்தேன். ஒரு பெண், அழகே உருவெடுத்தாற் போன்றவள், காலைப் பொழுதின் மனோகரத்தில் முழுகி எழுந்ததைப் போன்ற கவர்ச்சியுடன் நின்றாள். “இவர்களுக்கெல்லாம் ‘இன்ட்ரட்யூஸ்’ பண்ணிக் கொண்டிருந்தேன். வா, உனக்கும் சொல்லுகிறேன். இவள் தான் என் மிஸஸ் சுசீலா, எப்படி?" என்று எடுத்த எடுப்பிலேயே அவளை அபிப்பிராயம் கேட்டார் என் கணவர். தன் முல்லைப் பற்களை வெளியே காட்டிச் சிரித்துக் கொண்டு, அவள் கனிவு ததும்பிய பெண்மை விழிகளுடன் என்னைப் பார்த்தாள். “எப்படி என்றா சொல்ல வேண்டும்? இதோ சொல்லுகிறேன். கேட்டுக் கொள். கார்மேகக் கூந்தல், கருவண்டை யொத்த கொஞ்சும் விழிகள். குமிழ் போன்ற அழகிய மூக்கு!" என்று அவள் வர்ணித்ததைக் கண்டு நடுவே குறுக்கிட்ட என் கணவர், “ஏது ஏது? எனக்கு மூச்சுத் திணறுகிறது! பெரிய நாவலாசிரியர் தோற்று விடுவார் போல் அளக்கிறாயே!” என்று நகைத்தார். ஆண்களும் பெண்களும் சகஜமாகப் பேசுவது, வித்தியாசமின்றிப் பழகுவது என்பதை அறிந்திருந்தாலும் இப்படி எல்லாம் பேசி நான் கேட்டவளே அல்ல. “பார், பார். உண்மையைச் சொன்னால் நான் அளக்கிறேனாம்? நான் சொல்கிறேனே என்று நீ வேண்டுமானால் பார்; கருவண்டையும் கார் மேகத்தையும் கவனிக்கும் போது, சுசீலாவின் கூந்தல் இன்னும் கருப்பாக இருக்கும். அவள் கண்களின் கவர்ச்சி இந்தக் கருவண்டுக்கு வராது என்று தோன்றுகிறதா இல்லையா?” “இதெல்லாமா நான் உன்னிடம் கேட்டேன்? அழகு தான்” என்றார் அவர். “ஓகோ! என்னடாப்பா என்று பார்த்தேனே? ஏற்கனவே எனக்கு மதி மயக்கம் தலைக்கேறி இருக்கிறதே என்பதை ஒப்புக் கொள்கிறாயா? என் அபிப்பிராயத்தைச் சொல்லட்டுமா?” என்று என் அருகில் வந்து தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டு என் முகத்தைப் பார்த்து அவள் முறுவலித்தாள். ‘இவள் அபிப்பிராயம் என்னவாக இருக்குமோ? பீடிகை போடுகிறாளே!’ என்று எனக்கு உள்ளூறச் சிரிப்பு வந்தது. சட்டென்று கையை எடுத்த அவள், “கிடக்கட்டும். நான் யாரென்று அவளுக்கு நீ சொல்லவே இல்லையே?” என்று கேட்டாள். “நான் சொல்லுவானேன்? உன் தொண்டையே லீலா என்று அவளுக்கு அறிவித்திருக்குமே! இந்தக் குமார் அதற்குள் வந்து, சித்தி இரட்டைத் தொண்டையில் கத்திக் கத்திச் சொல்லிக் கொடுப்பது பிடிக்க வில்லை என்று புதுச் சித்தியிடம் புகார் சொல்ல ஆரம்பித்து விட்டான்” என்றார் அவர். “அடடே! இவ்வளவுக்கு வந்துவிட்டீர்களா நீங்கள்? இருக்கட்டும் இருக்கட்டும்” என்று பொய்க் கோபம் கொண்டு குழந்தைகளைப் பார்த்து அவள் கறுவினாள். அவளுடைய ஒவ்வொரு பேச்சையும் உண்டாகும் முக அசைவையும் எனக்கு அன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கலாம் போல இருந்தது. “அவள் வந்து இறங்கி இன்னும் காபி கூடச் சாப்பிடவில்லை. அதற்குள் உங்கள் அரட்டையைத் துவக்கி விட்டீர்களே; முகமெல்லாம் சோர்ந்து கிடக்கிறது” என்றாள் அவளுடைய தாய். “நீ மகா மோசம் ராமு. ஏதடா ரெயிலில் அவஸ்தைப்பட்டு வந்து இறங்கி இருக்கிறாளே, ஒரு ‘கப்’ காபி கொடுத்து உபசாரம் பண்ணுவோம் என்று தோன்றுகிறதா, பார்! அவளை உட்காரக் கூடச் சொல்லாமல் கால் கடுக்க நிற்க வைத்து இப்படியா அவமானம் பண்ணுவது? புது மனைவி வந்திருக்கிறாள் என்றால், எந்த நிமிஷம் கோபித்துக் கொள்வாளோ என்ற பயம் வேண்டாமோ?” என்று அவள் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கும் போதே, என் ஓரகத்தி, அவளுடைய சகோதரிதான், “ஏண்டி லீலா அவருக்குக் காபி கொண்டு வா என்று உன்னை அனுப்பினேனா? இல்லை இங்கு வந்து வாயாடச் சொன்னேனா? ஏய் நளினி! இந்தப் பட்டுப் பாவாடையை நாசமாக்காமல் அவிழ்த்து வை. இரவெல்லாம் ஜுரம் கண்ணைத் திறக்கவில்லை. வா, டாக்டர் வீட்டுக்குப் போக வேண்டும்” என்று கடிந்த குரலிலே கூறிக் கொண்டே வந்தாள். பலவந்தமாகக் குழந்தையைத் தரதரவென்று அவள் இழுத்துச் செல்கையில் குமாருக்கும் மைதிலிக்கும் கூட ஒரு சூடு விழுந்தது. “ஏண்டா தடியா, பள்ளிக்கூடத்துக்கு நேரமாகவில்லை? புத்தகத்தை எல்லாம் கடை பரத்தி வைத்திருக்கிறீர்களே. அடி மைதிலி, குளித்து விட்டு வாயேன். பின்னிக் கொள்ள வேண்டாம்?” என்று இரைந்து விட்டுச் சென்றாள். லீலா அப்பாவுக்குக் காபி கொண்டு போகிறாள் என்பதை அறிந்த நான், “வேண்டாம், அப்பா காப்பி சாப்பிடும் வழக்கம் கிடையாது. காலை வேளையில் அவர் ஒன்றும் சாப்பிடவே மாட்டார். அதுவும் ஸ்நானம் செய்யாமல்...” என்றேன். “என்னது? ஒன்றும் குடிக்க மாட்டாரா?” என்று அதிசயத்துடன் கேட்ட அவள், “பின் இந்தக் காபி இப்போது யாருக்கு வேண்டும்?” என்று கையில் தம்ளருடன் விளையாட்டுக் குழந்தை போல ஏலம் கூறினாள். “இங்கே கொண்டா” என்று அவளிடமிருந்த தம்ளரை வாங்கிக் கொண்ட என் கணவர், “எனக்கு அதிகாலையில் சாப்பிட்டது மறந்து போய் விட்டது” என்ரு தாம் அருந்தலானார். “அட ராமா! வாங்கி அவளுக்குத்தான் கொடுக்கப் போகிறானாக்கும் என்றல்லவா நினைத்தேன்? மடக் மடக்கென்று தான் குடிக்கிறானே!” என்று லீலா கூறிக் கொண்டிருக்கும் போதே புன்னகையுடன் அவர் அங்கிருந்து அகன்றார். அவர் பேச்சிலும் நடவடிக்கையிலும் புதுமை கண்ட நான் மனக் களிப்பிலே மிதந்தேன். குளித்துவிட்டு எல்லோருடனும் உணவருந்த வந்து உட்கார்ந்த என் மைத்துனர், “இன்று தான் நான் குளிக்கச் சென்ற போது அறை சுத்தமாக இருந்தது. வெந்நீரடுப்புப் புகையவில்லை. வெந்நீர் சரி சூடாக இருந்தது. புது மாட்டுப் பெண் வந்துவிட்டாள் என்பதைக் காட்டி விட்டது’ என்று கூறிய போது எனக்குச் சந்தோஷம் கரைபுரண்டது. ‘இந்த அற்ப விஷயத்திற்கே இத்தனை திருப்தி கொண்டாடுகிறாரே? வெகு சீக்கிரத்தில் இங்கு எல்லோரையும் கவர்ந்து விட முடியும்’ என்று உள்ளூற எண்ணிக் கொண்டேன். அப்பா பரிமாற வந்த என்னைப் பெருமையுடன் நோக்கினார். எல்லோரும் இலைகளை விட்டு எழுந்திருக்கவில்லை. என் ஓரகத்தி டாக்டர் வீட்டுக்குக் குழந்தையை அழைத்துப் போயிருந்தவள், உள்ளே வந்தாள். தட்டிலே கையைக் கழுவிக் கொண்டிருந்த என் மைத்துனர், “என்ன? குழந்தைக்கு உடம்பு ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டாரோ டாக்டர்?” என்று ஏளனம் தொனிக்கும் குரலில் அவளைக் கேட்டார். “ஆமாம்! உங்களுக்குக் கேலியாக இருக்கிறது. இந்த நெஞ்சுக் கட்டுச் சாதாரணமாக இல்லை என்று நான் அப்போதே சொல்லவில்லையா? அத்துடன் காலையிலே ராமு திரட்டுப் பாலை வேறு கொடுத்து வைத்திருக்கிறான். குழந்தை நோவுக்குக் கள்ளமில்லை என்று எழுந்து நடமாடியிருக்கிறது. ஜுரம் நூற்றுநாலு இருக்கிறது. இப்போது டாக்டர் நியுமோனியா என்று சந்தேகப்பட்டு ‘நர்ஸிங் ஹோமி’லேயே விட்டு விட்டுப் போங்கள் என்றார். கத்து கத்து என்று கத்துகிறது. விட்டு விட்டுக் குளித்துச் சாப்பிட்டுப் போகலாம் என்று வந்தேன். நான் சொன்னால் யார் கேட்கிறார்கள்? ராமுவினுடைய செல்லம் அதற்குத் தலைக்கு மேலே ஏறிப் போயிருக்கிறது!” என்று படபடப்பாக அவள் என் கணவர் மீது குற்றம் சாடினாள். “வெகு அழகுதான்! நானா திரட்டுப் பால் கொடுத்தேன். எல்லாம் உங்கள் அருமைத் தங்கையின் வேலை! கார் வந்த சப்தம் கேட்டவுடனேயே ஆளைக் கூட அவள் கவனிக்கவில்லை. பட்சணங்களை ஆராய ஆரம்பித்து விட்டாள். எல்லாம் காலியாவதற்குள் நான் நல்ல வேளை பார்த்தேன். குழந்தைகளுக்கெல்லாம் அவள் தான் விநியோகம் செய்தாள்” என்று அவர் லீலாவைச் சாடினார். “அதனாலேயே ஜுரம் இப்போது நூற்று நாலு வந்து விட்டதாக்கும்? நான் கண்டேனா ஜுரம் என்று? காலையில் பட்டுப் பாவாடை எல்லாம் கட்டிக் கொண்டு தடபுடலாக ஸ்டேஷனுக்கு வேறு போய் விட்டு வந்தது. எனக்கு எப்படித் தெரியும்? எல்லோரும் தின்னும் போது குழந்தை கேட்டது, கொடுத்தேன். உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடனேயே படுக்கையில் விடாமல் கண்டபடி அலையவிட்டால்? உங்களுக்குக் குழந்தையை வளர்க்கத் தெரிந்தால்தானே?” என்று முடிவாக ஒரு போடு போட்ட லீலா கலத்தை விட்டு எழுந்து போனாள். “ராமுவுக்குத் தெரியாதா ஜுரம் என்று? சிற்றப்பாவிடம் போகிறேன். சிற்றப்பாவிடம் போகிறேன் என்று ராத்திரி என் பிராணனை வாங்ன்கி அவனிடம் போய்ப் படுத்துக் கொண்டதே. ஸ்டேஷனுக்கு நான் கூட்டிப் போக வேண்டாம் என்று சொன்னதை யார் கேட்டார்கள். நீங்கள் தலைக்கு ஒரு விதமாகச் செல்லம் கொடுங்கள். அப்புறம் எனக்குக் குழந்தை வளர்க்கத் தெரியவில்லை என்று குற்றம் கூறுங்கள்” என்று பட்டு கடுகடுத்தாள். இந்தச் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாடிக் கொண்டு சிறு குழந்தைகள் போல் பேசிக் கொண்டது எனக்கு வியப்பைத் தந்தது. ஓடியாடும் குழந்தை உடம்புக்கு வந்திருக்கிறது. அதற்கு இத்தனை பிரமாதப்படுத்துகிறார்களே? எங்கள் வீட்டில் எங்களில் யாருக்காவது ஜுரம் வந்தால் அநேகமாக அது அப்பாவுக்குக் கூடத் தெரியாது. இரண்டு வேளை கஞ்சி கொடுப்பாள் அம்மா. அதற்கும் தணியாவிட்டால் லோகல் கண்டு ஆஸ்பத்திரியில் தருமத் தண்ணீர் இரண்டு வேளை வாங்கிக் கொடுப்பாள். அத்துடன் சரி. எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால் இப்படித்தான் இருக்கும் போலும்! அத்தை வீட்டில் ஹேமாவுக்கு வந்ததையும் நடந்ததையும் விட இது பெரிது அல்லவே? ரேடியோ, கண்ணாடி, அலமாரி, சோபாக்கள், எல்லாமாக அந்தக் கூடத்தை அலங்கரித்தன. ஒரு புற வாயில் வராந்தாவுக்கு வழி காட்டியது. இன்னொரு புற வாயில் வழியாக ஒரு குறுகிய தாழ்வரை சென்றது. அதை ஒட்டி அடுத்தடுத்து மூன்று அறைகள் இருந்தன. முதல் அறையின் கதவு திறந்திருந்தது. எதிரே பெரிய நிலைக் கண்ணாடி பொருத்திய மேஜையில் இருந்த அலங்காரப் பொருள்கள், புத்தக அலமாரி, கொடியில் மடித்துப் போட்டிருந்த புடவைகள் எல்லாம் அது லீலாவின் அரை என்று யாரும் சொல்லாமலே விளங்கின. கதவு சாத்திப் பூட்டப் பெற்றிருந்தது. கடைசி அறையும் திறந்தே கிடந்தது. மூலையில் ஒரு பிரம்பு மேஜை, நாற்காலி, ஓர் அகலப் பெஞ்சி, ஒரு கோட் ஸ்டாண்டு, துணிமணிகள் வைக்கும் அலமாரி ஒன்று எல்லாம் அந்த அறையில் இருந்தன. கோட் ஸ்டாண்டில் தொங்கிய ஷர்ட்டையும், பெஞ்சின் மேல் கிடந்த வேஷ்டியையும் கண்ணுற்ற நான் அது என் கணவருடைய அறை என்று ஊகித்துக் கொண்டேன். உள்ளே ஒரு தூசு தும்பு கூட இல்லாமல் எல்லாம் துப்புரவாக இருந்தது. கீழிருக்கும் என் பெட்டியைக் கூட இங்கே கொண்டு வைக்க வேண்டும் என்று எண்ணியவாறு அங்கிருந்து அடுத்த வீடு தெரியும் ஜன்னலில் கண்களை ஓட்டினேன். அடுத்த வீட்டு முற்றத்தில் அந்த ஜன்னல் இருந்தது. முற்றத்தை ஒட்டிய வராந்தாவின் கைப்பிடிச் சுவரில் அழகழகான பூந்தொட்டிகள் அலங்காரமாக வைத்திருந்தன. உட்புறச் சுவரிலே பெரிய பெரிய படங்கள் தெரிந்தன. ஆனால் ஜன நடமாட்டமே இல்லாதது போல் நிசப்தம் நிலவியது. என்ன இருந்தாலும் பட்டணத்துத் தினுசே அலாதிதான். புங்கனூராக இருந்தால் புது மாட்டுப் பெண் வந்த அன்று வீட்டுக்கு எத்தனை பேர்கள் வருவார்கள், போவார்கள்! சேர்ந்தாற் போல் வீடுகள் இருந்தும் இங்கு அவரவர்கள் ஜோலியைக் கவனித்துக் கொண்டு பேசாமல் இருந்து விடுவார்கள் போலும்! இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, அடுத்த வீட்டு மாடிக்கு ஒரு பெண் வந்தாள். அவள் தான் வீட்டுக்கு உரியவளாக இருக்க வேண்டும். நான் அவளைப் பார்த்த போது அவளும் என்னைப் பார்த்தாள். ஆனால் சிரிக்கக் கூட இல்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போய் விட்டாள். உள்ளே ரேடியோவைத் திருப்பி விட்டிருக்கிறாள் போலிருக்கிறது. ‘ஜம்’மென்று என் செவிகளில் இசை பாய்ந்தது. ‘இங்கும் இருக்கிறதே, அத்தை வீட்டைப் போல். கூசாமல் நானும் போட்டுப் பார்க்கலாமே! எனக்கும் உரிமை உள்ள வீடுதானே இது?’ என்று நினைத்துக் கொண்டு எழுந்து வந்தேன். கீழிருந்து, “சுசீலா! சுசீலா!” என்று மாமியாரின் குரல் ஒலித்தது. “இதோ வந்துவிட்டேன்” என்று குரல் கொடுத்தவாறு அப்படியே பின்புறம் சென்ற படிக்கட்டுகள் வழியாகக் கீழிறங்கி வந்தேன். “சற்றுக் கும்மட்டியைப் பற்ற வை. லீலா வந்துவிடுவாள். மணி ஒன்றாகப் போகிறது” என்றாள். ‘இப்போது இடைவேளைக்கு வருவாளாக்கும்! அவர் கூட வருவாரோ?’ என்று என்னுள்ளேயே கேட்டுக் கொண்டவளாக நான் வேலையில் முனைந்தேன். “ஒரு பில்டரில் காபிப் பொடி போட்டால் போதும். புருஷர்களுக்குச் சாயங்காலம் புதிதாகப் போடலாம்” என்றாள் மாமியார். “சாயங்காலந்தான் அவர்கள் வருவார்களோ?” என்று நான் மெதுவாகக் கேட்டேன். “ஆமாம், ஆறு மணியாகும். இந்தச் சேப்பாக்கம் ஆபீஸில் இருக்கும் வரை ராமுவும் வருவான், லீலாவுடன். இப்போது இதை விட்டுவிட்ட பிறகு வருவதில்லை” என்றாள் அவள். ‘இதை விட்டு விட்ட பிறகா? ஆனால் பழைய இடத்தில் இப்போது வேலை செய்யவில்லையா? அப்பா கூடச் சொல்லவில்லையே, இதைப் பற்றி?’ சிந்தையை இந்தக் கேள்விகள் கிளர்த்தின. ஆனால் கேட்கத் துணிச்சல் வரவில்லை. தானாகத் தெரிந்து போகிறது. அப்புறம் எனக்கு வேலை சரியாக இருந்தது. அப்பா ஊருக்குக் கிளம்புவது கூட உள்ளே எட்டிப் பார்த்து, “போய் வரட்டுமா அம்மா சுசீலா?” என்று கூப்பிட்ட பிறகுதான் நினைவுக்கே வந்தது. தூக்கிச் செருகியிருந்த புடவையை அவிழ்த்து விட்டுக் கொண்டே, “கிளம்பி வீட்டீர்களா அப்பா?” என்று வெளியே வந்தேன். அருகில் வந்து நின்ற என் மாமியாரிடம் அவர் “குழந்தையை உங்கள் பொறுப்பில் விட்டாச்சு அம்மா! இதுவரை அவள் வீட்டை விட்டு எங்கும் போய் இருந்ததில்லை. அதனால் ஏறவோ தாழவோ இருந்தாலும் மனசில் வைத்துக் கொள்ளக் கூடாது. உங்கள் பெண் அவள் இனிமேல்” என்று கூறும் போது தொண்டை கரகரத்தது. “கவலையே படாதேயுங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று சம்பிரதாயமாக அவள் விடை கொடுத்தாள். கூடவே வாயில் வரை போய் நின்ற நான், “அவர் வருகிறாரா அப்பா ஸ்டேஷனுக்கு?” என்று மெதுவாகக் கேட்டேன். யாருமே அப்பாவைக் கவனிக்கவில்லை போல எனக்குத் தோன்றியது. வீட்டு வேளைகள் முடிந்து விட்டன. ஸ்டேஷனுக்குச் சென்றிருந்த அவர் இன்னமும் வரவில்லை. எங்கள் அறையில் வந்து ஜன்னலைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த என் மனத்தில் அப்போது லீலாவைப் பற்றிய எண்ணங்களே நிரம்பியிருந்தன. ஆம், சற்று முன் தான் அவள் கேலியும் குறும்பும் கலந்த பேச்சுடனும் நகைப்புடனும் என் கூந்தலை வாசம் வீசும் மல்லிகைச்சரம் கொண்டு அழகு செய்துவிட்டுப் போயிருந்தாள். எத்தனை அன்பும் அநுசரணையும் வாய்ந்த வெகுளியான பெண் இவள்! படித்திருக்கிறாள்; அழகு இருக்கிறது; செல்வம் இருக்கிறது; துளி கர்வம் இல்லையே! அவள் வீட்டில் இருக்கிறாள் என்றாலே எனக்கு ஏதோ சொல்ல முடியாத சந்தோஷம் உண்டாயிற்று. ஒரு நாளிலேயே குறுகுறுக்கும் அவள் முகமும் கபடமற்ற இருதயத்திலிருந்து வந்த அவள் பேச்சும் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டன. அவளுடைய தோழமை எனக்குக் கிடைத்தற்கரிய பாக்கியம் எனக் கருதி மகிழ்ந்தேன். ஜன்னல் வழியாக நிலவின் கதிர்கள் என் மீது விழுந்தன. அதன் குளுமையை ரஸிக்க நான் எழுந்து விளக்கை அணைத்தேன். அடுத்த வீட்டு மாடியில் நான் பகலில் கண்ட பெண் பால் செம்பு சகிதம் வந்தாள். அதை உள்ளே கொண்டு வைத்துவிட்டு, அவள் பூந்தொட்டியின் அருகே வந்து நின்று கொண்டு வானைப் பார்த்தாள். சற்றைக்கெல்லாம் ஓர் ஆடவன் அங்கு வந்தான். வந்தவன் சப்தம் செய்யாமலேயே பின்னால் சென்று அவள் கண்களைத் தன் கரங்களால் மூடினான். அவ்வளவுதான் தண்ணென்ற வலிய கைகள் என் பார்வையை மறைத்தன. உடல் சிலிர்த்தது எனக்கு. “நாளைக்கு இந்த ஜன்னலுக்கு ஒரு திரை போட்டு விட வேண்டும்” என்று புன்னகை செய்தார் என் கணவர். ஊமைப் பெண்ணைப் போல நான் அந்தச் சமயத்தில் சங்கடப் பட்டேன். மனத்திலே கரை புரண்ட உணர்ச்சிப் பெருக்கு என் தொண்டையைத் தடை செய்தது. “வாயைத் திறந்து பேச மாட்டேன் என்கிறாயே சுசீ? இதோ இந்த நிலவு உன் பொன் முகத்தில் விழும் போது எப்படி இருக்கிறது தெரியுமா?” என்று என் முகத்தைப் பிடித்து நிமிர்த்தினார் அவர். வானத்துக் கருமேகங்களின் மீது தண்ணிய காற்றுப் படும்போது மழை பொழிகிறதே, அது போல என் நெஞ்சத்தைப் பிடித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகள் யாவும் அவருடைய ஸ்பரிசத்தால் கண்களை வந்து திரையிட்டன. “அழுகிறாயா என்ன? என்ன சுசீ?” என்று அவர் அதற்குள் பதறி விட்டார். கண்ணீரின் நடுவே நான் மெல்ல சிரித்தேன். “இல்லை, அழவில்லை” என்று திணறினேன். “நான் பயந்து போய்விட்டேன்! இன்னமும் அப்பா ஊருக்குப் போனதை நினைத்துத்தான் அழுகிறாயோ என்று. சுசீ, உன் கண்களில் நீர் வந்தால் என் நெஞ்சை யாரோ அமுக்கிப் பிழிவது போலல்லவா இருக்கிறது? இன்று காலையில் லீலா கூறினாளே, அது போல் உன் செவ்விதழ்களைத் திறந்து நீ நகை புரியும் போது என் ஆவி என் வசம் இருப்பதில்லை. காரியாலயத்தில் எனக்கு ஏதாவது வேலை ஓடினால்தானே?” என்று என் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்ட அவர் முகம் என் முகத்துக்கு வெகு சமீபமாக நேராக வந்தது. அவர் இதழ்கள் என் இதழ்களில் பொருந்தி இருக்கும். ஆனால்...? திடீரென்று அறைக்கு வெளியே, “ராமு! ராமு!” என்று என் மைத்துனர் கூப்பிடும் குரல் கேட்டது. இவ்வுலகையே மறந்திருந்த அவர் திடுக்கிட்டுப் பின் வாங்கினார். என் உள்ளம் துணுக்குற்றது. கதவைத் திறந்து கொண்டு, “என்ன அண்ணா?” என்ற அவருடையை கேள்வி எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதாக எனக்குத் தோன்றியது. “குழந்தைக்கு உடம்பு மிகவும் நன்றாக இல்லை. ராமு, சிற்றப்பா சிற்றப்பா என்று சாயங்காலம் நான் பார்த்த போதே அரற்றிக் கொண்டிருந்தாள். இப்போதும் அதே ஸ்மரணைதான். நெஞ்சு பாறையாகி மூச்சுத் திணறுகிறது. இந்த நிலையிலும் அவள் உன் நினைவாகப் பிதற்றுவது பார்க்கச் சகிக்கவில்லை. மன்னியைக் கொண்டு விடப் போயிருந்தேன் அல்லவா? டாக்டரே சொல்லுகிறார். உன்னைக் கூப்பிடவே எனக்கு...” என்று தயங்கினார் மைத்துனர். “அடாடா! அப்போதே சொல்லக் கூடாது? இதோ வந்துவிட்டேன்” என்று அவருடைய மறுமொழி எனக்குக் கனவிலே கூறுவது மாதிரி இருந்தது. அடுத்த கணம் அவருடைய செருப்பு, தாழ்வரையில் சிமிட்டித் தளத்தில் ‘சடக் சடக்’ கென்று உரசியது என் நெஞ்சில் உரசியது போலிருந்தது. வானத்திலிருந்து கல் மாரியோ, மண் மாரியோ பொழிந்து என்னை நெருக்குவது போல் உணர்ந்தேன். அவற்றின் நடுவே அந்தப் பழைய சம்பவங்கள். ஊர்வலத்தின் இறுதிக் கட்டம். புறப்படுமுன் கிழிந்த புடைவை. எல்லாம் ‘டங் டங்’கென்று இரும்புக் குண்டுகள் போன்று என் நினைவில் வந்து மோதின. செயலற்றுத் துவண்டு படுக்கையில் வீழ்ந்த என்னை நோக்கி ஜன்னல் வழியாக வந்த நிலவு, தலையிலே தொங்கிய மல்லிகையின் மனம் எல்லாம் பரிகசித்தன. பெண் குரல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
முடிவுரை
|
ஒரு நாள் ஆசிரியர்: க.நா. சுப்ரமண்யம்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
முதுநாவல் ஆசிரியர்: ஜெயமோகன்வகைப்பாடு : சிறுகதை விலை: ரூ. 330.00 தள்ளுபடி விலை: ரூ. 320.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|