http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




ஒன்பதாவது அத்தியாயம்

     தொடக்கத்தில் தம்மோடு போட்டியிட்ட அதிகத் தகுதியுள்ள சிலரை வீழ்த்திவிட்டு இந்தப் பதவியைத் தாமே அடைய ஓரளவு அரசியல் செல்வாக்குள்ளவர்களை நாடித் துணைவேந்தர் தாயுமானவனார் போயிருந்தார். அதுதான் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்திருந்தது. பதவிக்கு வந்த பின் அதே அரசியல் செல்வாக்கு விநாடிக்கு விநாடி அவரைத் தேடி வந்து மிரட்டவும், நிர்ப்பந்தப்படுத்தவும் செய்த போது அவரால் அதிலிருந்து தப்ப முடியவில்லை. எது எப்படி இருந்த போதிலும் அன்று நண்பகலில் பூதலிங்கத்தை வரவழைத்துப் பேசிய பின்னர் 'மாணவர் பேரவைத் தேர்தல்' சம்பந்தமாக இனி எதிலும் தலையிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தார் தாயுமானவனார். நாகரிகமே இல்லாத முரடர்களான கோட்டச் செயலாளர் குருசாமியும், இராவணசாமியும் சொல்வதைக் கேட்டுக் கொண்டு எதையாவது தாறுமாறாகச் செய்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தம்மை முழுமூச்சோடு எதிர்க்கும் சூழ்நிலையைத் தூண்டி விட அவர் தயாராயில்லை. குருசாமியும், இராவணசாமியும் மாற்றி மாற்றி ஃபோன் செய்தும் ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி மெல்ல நழுவிவிட்டார் துணைவேந்தர். அதே சமயம் அவர்களைப் பகைத்துக் கொள்ளவும் அவர் தயாராக இல்லை. தந்திரமாகப் பேராசிரியர் பூதலிங்கத்தின் தலையில் எல்லாப் பழிகளையும் சுமத்தி விட்டுத் தப்பித்துக் கொண்டார் தாயுமானவனார். பாண்டியன் கடத்தப்பட்டு மீண்டதை ஒட்டி மாணவர்கள் மத்தியில் ஒரு விதமான கொந்தளிப்பும், கோபமும் இருந்ததால், குருசாமியும், இராவணசாமியும் வெளிப்படையாகப் பல்கலைக் கழக எல்லைக்குள் வந்து வேலை செய்யப் பயப்பட்டார்கள். கல்லெறி முதல் பாண்டியன் கடத்தப்பட்டது வரை சகலமும் பத்திரிகையில் வேறு வெளி வந்துவிட்டது. மாணவர்களை ஆதரித்து எழுதியிருந்த பத்திரிகைகள் கட்சிக்காரர்களின் தலையீட்டையும் வன்முறைகளையும், துணைவேந்தர் பல்கலைக் கழக எல்லையில் போலீஸைக் கூப்பிட்டதையும் கண்டித்து எழுதியிருந்தன. பாண்டியனின் அறையிலும் வெளியேயும் வராந்தாவிலுமாகக் காவலுக்கு இருப்பது போல நூற்றுக் கணக்கான மாணவர்கள் திரண்டிருக்க ஏற்பாடு செய்திருந்தார் மணவாளன். ஒரு பாதுகாப்புக்காக மோகன்தாஸையும் அதே அறையில் தங்கிக் கொள்ளச் சொல்லியிருந்தார்.

     மறுநாள் காலையில் விடிந்தால் மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடக்க இருந்தன. அந்த இரவும் அதையடுத்து விடிவதற்கிருந்த வைகறையும் மாணவர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டன. எங்கும் அமைதியாய் இருந்தாலும், எந்த விநாடியில் என்ன நடக்குமோ என்று எதிர்பார்க்கும் ஓர் ஊமைப் பரபரப்பும் பல்கலைக் கழக எல்லையில் உள்ளடங்கித் தெரிந்தது.

     குழப்பங்களை விளைவிக்கவோ, ஏதாவது கலவரம் செய்து தேர்தல்களைத் தள்ளிப் போடச் செய்யவோ, இனி இயலாது என்று கையாலாகாத்தனமும், அதனால் உண்டாகிய ஆற்றாமைக் கோபமுமாகத் துடித்துக் கொண்டிருந்தனர் அன்பரசன் குழுவினர். ஆற்றாமை - கையாலாகாத்தனம், பொறாமை இவை எல்லாம் உள்ளவர்களால் இனி இது இயலாது என்று எதிலும் அடங்கி விடவும் முடியாது. கடைசி விநாடி வரை அவர்கள் எதையாவது செய்து கொண்டே தான் இருப்பார்கள் கடைசி விநாடிக்கு குழப்பமாக எதைச் செய்யலாம் என்று சிந்தித்துத் தவித்து முடிவில் ஒரு குழப்பத்துக்குத் திட்டமும் போட்டார்கள் அவர்கள்.

     அங்கே பாண்டியனின் விடுதி அறையைக் காப்பதற்காக வராந்தாவிலும், அறைவாசலிலுமாகப் கம்பளிப் போர்வை, உல்லன் அங்கி, படுக்கை சகிதம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இரவிலும் தங்குவதற்கு நீடிக்கவே, அதே வரிசையைச் சேர்ந்த மற்ற அறைகளிலுள்ள மாணவர்கள் வெளியே வரவும், உள்ளே போகவும், நடமாடவும் அது இடையூறாக இருப்பதாகவும், பாண்டியனின் ஆதரவு மாணவர்கள் மற்ற அறை மாணவர்களை அடிப்பதாகவும், உதைப்பதாகவும், பயமுறுத்துவதாகவும் இரவு ஒன்பதரை மணிக்குமேல் ஹாஸ்டல் சீஃப் வார்டன் பேராசிரியர் பண்புச் செழியனிடம் போய்ப் பொய்யாக ஒரு புகார் செய்தார்கள் அன்பரசன் குழுவினர்.

     பேராசிரியர் பண்புச் செழியன் அன்பரசன் குழுவினரிடம் அநுதாபம் உள்ளவர் தான். என்றாலும் அந்த நள்ளிரவில் பெரும்பான்மை மாணவர்களின் அன்புக்கும் பிரியத்துக்கும் பாத்திரர்களாயிருக்கும் பாண்டியனிடமும், மோகன்தாஸிடமும் போய் மோதிக் கொள்வதற்குத் தயங்கினார் அவர்.

     அன்பரசன் குழுவினரின் வற்புறுத்தலை மீற முடியாமல்தான் அவர்களோடு பாண்டியன் தங்கியிருந்த விடுதிக்குப் புறப்பட்டார் அவர். புறப்படுவதற்கு முன் மனத்தில் ஏதோ தோன்றியதால், அன்பரசனையும் வெற்றிச்செல்வனையும் பார்த்து, "நீங்கள் இருவரும் என்னோடு அங்கே வரவேண்டாம் என்று நினைக்கிறேன். நானே போய் விசாரித்து அவர்களை எச்சரித்து விட்டு வருகிறேன்" என்றார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. "நாங்களும் வருகிறோம். எங்களுக்கு யாரிடமும் எதற்காகவும் பயம் கிடையாது" என்றார்கள்.

     "உங்களையும் என்னோடு சேர்த்துப் பார்த்தால் அவர்கள் ஆத்திரம் அதிகமாகும்" என்றார் பண்புச் செழியன்.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/sathiyavellam/sathiyavellam9.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs