10. கடன் தொல்லைகள் "வள்ளியம்மை! உன்னைத்தானே? வாசலில் யாரோ வந்து கூப்பிடுகிறாற் போலிருக்கிறதே? போய் யாரென்று பார்த்துவிட்டு வா." - உள் வீட்டில் சமையற் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்த தாயார் மகளை வாசற்புறம் போய்ப் பார்த்துவிட்டு வரச்சொல்லி அனுப்பினாள். வாசலில் போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்த வள்ளியம்மையின் முகத்தில் பதற்றமும், திகைப்பும் தெரிந்தன. "என்னடி பெண்ணே? வந்திருப்பது யார்?"
பெண் சொல்லிய பெயரைக் கேட்டதும் அந்த அம்மாளுக்கு மனத்தில் திக்கென்றது. நெற்றி சுருங்கிக் கவலையைக் காட்டும் மடிப்புக்கள் விழுந்தன. "அவரிடம் என்ன பதில் சொல்லி அனுப்புவது?" - தாயின் திகைப்பைப் புரிந்துகொள்ளாத பெண் அடுத்த கேள்வியைக் கேட்டாள். "நீ என்ன பதிலைப் போய்ச் சொல்லப் போகிறாய்? போ உள்ளே! அடுப்பைப் பார்த்துக்கொள். நான் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பிவிட்டு வருகிறேன்." பெண்ணை உள்ளே அனுப்பிவிட்டு வட்டிக்கடைக்காரருக்குப் பதில் சொல்லி அனுப்புவதற்காக வாசலுக்கு வந்தாள் அந்த அம்மாள். வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த மனிதர் பன்னீர்ச்செல்வத்திற்குத் தப்பித் தவறிக்கூட முகத்தில் சிரிப்போ, மலர்ச்சியோ, உண்டாகாது போலிருந்தது. முகத்தில் அசாதாரணமானதொரு கடுகடுப்பு, சாதாரணமாகவே எந்த நேரத்திலும் அமைந்திருந்தது. ஒருவேளை வட்டிக்கடைக்காரர்களெல்லாம் முகத்தை அப்படித்தான் வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்று ஏதாவது இலக்கணம் இருக்கிறதோ, என்னவோ? இயற்கையாகவே, பிறவியிலேயே புலிமுகத்தைப் போலப் பயங்காட்டும் முகம் வாய்த்திருந்தது அவருக்கு. அதில் அரிவாள் நுனிபோல் வளைந்த மீசையும் சேர்ந்துகொண்டது. வட்டி வசூல் செய்யும் மிடுக்குடனே உள்ளேயிருந்து வந்த அந்த அம்மாளை நிமிர்ந்து பார்த்தார் பன்னீர்ச்செல்வம். தோள் புடவையை இழுத்துவிட்டுக் கொண்டே ஒடுங்கிப்போய்க் கதவோரமாக வந்துநின்ற அந்த அம்மாளுக்கு அவர் முகத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. "என்னம்மா? பிள்ளையைக் கொழும்புக்குக் கப்பலேற்றி அனுப்பியிருக்கிறீர்களாமே! போய்ப் பணம் ஏதாவது அனுப்பினானா? வட்டி தலைக்குமேல் ஏறிக்கொண்டே போகிறதே." - முகத்தின் கடுகடுப்புக்குச் சிறிதும் குறைவில்லாத குரல். பேசும்போதே யாரையோ அதட்டுவது போலிருந்தது. "அவன் போய்ச் சேர்ந்தே இன்னும் முழுமையாக ஒரு வாரம் கூட ஆகவில்லையே? அதற்குள் எப்படிப் பணம் அனுப்புவான்? 'சௌக்கியமாகப் போய்ச்சேர்ந்தேன்' என்று அவனிடமிருந்து ஒரு வரி கடுதாசி கூட வரவில்லையே?" "நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாயிற்று. இரண்டாயிரம் ரூபாய்க்கு நாலுவருட வட்டி ஐநூறு ரூபாய்க்குமேல் ஆகிறது. இந்த நாலு வருடத்தில் ஒருதரமாவது வட்டித் தொகையையும் கொடுக்கவில்லை. இனிமேல் உங்களிடம் கொடுப்பதற்குத்தான் என்ன இருக்கிறது? இடிந்த சுவரும், செங்கல் பெயர்ந்த தரையுமாக இந்த வீடு ஒன்று மீதமிருக்கிறது. இன்றைக்கெல்லாம் கூவிக்கூவி விற்றாலும் எழுநூறு ரூபாய்க்கு மேல் போகாது. பிள்ளையையும் அக்கரைச் சீமைக்கு அனுப்பிவிட்டீர்கள். வட்டியும் முதலுமாக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு நான் தலையில் துணியைப் போட்டுக் கொண்டு போக வேண்டும் போலிருக்கிறது." வட்டிக் கடைக்காரரின் பேச்சில் படிப்படியாக அந்தத் தொழிலுக்கே உரிய அழுத்தம் ஏறிக்கொண்டிருந்தது. "அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் ஐயா! இனிமேல் மாதா மாதம் அவன் ஏதாவது அனுப்புவான். மொத்தமாக அடைத்துத் தீர்க்க முடியாவிட்டாலும் உங்கள் கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிடுகிறோம்." - அந்த அம்மாள் அவரைச் சமாதானப் படுத்திக் கெஞ்சுகிற பாவனையில் பேசினாள். "இதோ பாருங்கள்; நான் வட்டிக்கடைக்காரன். தயவு தாட்சணியம் காட்டி நாலுபேரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற அவசியம் எனக்கில்லை. ஆரம்ப முதல் இந்தத் தொழிலில் கெட்ட பெயர்தான் வாங்கியிருக்கிறேன். குடிகெடுப்பவன்; 'கருமி' என்று எத்தனையோ விதமாக ஊரில் பேசிக் கொள்கிறார்களாம். இனிமேல் நல்ல பெயரெடுத்து எனக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை. எனக்கு யாரும் வள்ளல் பட்டம் கட்ட வேண்டாம்..." சம்பந்தத்தோடும், சம்பந்தமின்றியும் தெருவில் போவோர் வருவோருக்குக் கூடக் கேட்கும் குரலில் இரைந்து கூப்பாடுபோடத் தொடங்கி விட்டார், அவர். "கோபித்துக் கொள்ளாதீர்கள். பார்த்துக் கொடுத்து விடுகிறோம். எங்கள் குடும்பநிலை உங்களுக்குத் தெரியாததில்லை. நீங்களே இப்படிக் கோபித்துக் கொண்டு சத்தம் போட்டால் நாங்கள் என்ன செய்வது?" ஒரு பெண் தன் சாமர்த்தியத்தாலும் வாழ்க்கை அனுபவங்களாலும் என்னென்ன பதில்களையும் சமாதானங்களையும் சொல்ல முடியுமோ, அவ்வளவையும் சொல்லிச் சமாளிக்க முயன்றாள் அந்த அம்மாள். குடும்ப வாழ்க்கையின் மேடு பள்ளங்களை நன்கு அறிந்து வாழ்க்கை அனுபவங்களில் தோய்ந்தவர்களால் மட்டுமே இந்த மாதிரி நிலைகளைச் சமாளிக்க முடியும். உடல் உழைப்பை அறியாத அந்த வளமான சரீரம், இரக்கம், பச்சாதாபம் போன்ற உணர்வுகளை எல்லாம் பணத்தைப் போலவே இரும்புப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிடுவதுண்டு. காலுக்குச் செருப்பு, தலைக்குக் குடை, கடன் தஸ்தாவேஜிகளும் பத்திரங்களும் அடங்கிய ஒரு துணிப்பை, மல்வேஷ்டி, மல் சட்டை, கையகலத்துக்குச் சரிகைக் கரைபோட்ட அங்கவஸ்திரம், பன்னீர்ச்செல்வம் தோற்றத்தில் கூடத் தாம் அசல் சீமான், பச்சைப் பணக்காரர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் காட்சியளித்தார். "உங்களுக்கு ஆயிரம் துன்பங்கள் இருக்கலாம். அதையெல்லாம் பற்றி நான் கவலைப்படமுடியாது. போனால் போகிறதென்று இன்னும் பதினைந்து நாள் தவணை கொடுக்கிறேன். அதற்குள் வட்டிப் பணம் ஐநூறு ரூபாயாவது கைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் நான் மிகவும் பொல்லாதவனாக இருப்பேன்." - கொடுத்த கடனை வசூலிப்பவர்களுக்கே உரிய விதத்தில் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகப் பேசினார் அவர். அந்தச் சமயத்தில் வள்ளியம்மை உள்ளேயிருந்து வந்து தாய்க்குப் பின்னால் நின்றாள். பன்னீர்ச்செல்வத்தின் பார்வை அந்தப் பக்கமாகத் திரும்பியது. "அது யாரு? உங்களுக்குப் பின்னாலே நிற்கிறது?" "என் பெண் வள்ளியம்மை. அழகியநம்பிக்கு இளளயவள்." பன்னீர்ச்செல்வம் 'பெரிய மனிதர்' அல்லவா? அதனால், யாரை இன்னார் என்று தெரிந்து கொண்டிருந்தாலும் தெரியாது போல் கேட்கிறவழக்கம் அவரிடம் உண்டு. "இந்தா, பெண்ணே! நாவரட்சியாய் இருக்கிறது, ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டுவா குடிக்கவேண்டும்." - என்று உரிமையோடு கட்டளையிட்டார் பன்னீர்ச்செல்வம். வள்ளியம்மை உள்ளே ஓடினாள். தலைப்பின்னல் கருநாகம் போல் அசைந்தாடத் தண்ணீர் கொண்டு வருவதற்காக அவள் ஓடிய காட்சியைப் பன்னீர்ச்செல்வம் ஆவலோடு நோக்கினார். "உங்களுக்கு இந்த வயதில் கல்யாணத்திற்கு ஒரு பெண் இருக்கிறதா? எனக்கு தெரியவே தெரியாதே; யாரோ பக்கத்து வீட்டுப் பெண் என்று அல்லவா நினைத்தேன்" - அவர் பேச்சில் வியப்பு நடித்தது. "தெரியாமல் என்ன? நீங்கள் சிறு குழந்தையில் இவளைப் பார்த்திருப்பீர்கள். இப்போது வயதாகிவிட்டதனால் மதமதவென்று வளர்ந்திருக்கிறாள். அதனால் அடையாளம் தெரியவில்லை." - அந்த அம்மாள் வேண்டா வெறுப்பாகப் பதில் கூறினாள். மனத்தில் சிறிது ஆத்திரமும் வருத்தமும் ஏற்பட்டிருந்தது. 'கடன் கேட்க வந்தால் கடனைக் கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? இந்த விசாரணை எல்லாம் இவனுக்கென்ன வேண்டிக்கிடக்கிறது?' - அந்த அம்மாள் மனத்துக்குள் அவரைப் பற்றி வெறுப்பாக நினைத்துக் கொண்டாள். கடன் பட்டுவிட்டால் கடன் கொடுத்தவனுடைய எல்லா அசட்டுத்தனங்களளயும் பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டியிருக்கிறது. "நீ இப்படி கொடுத்துவிட்டுப் போ! நான் கொண்டு போய் அவரிடம் கொடுக்கிறேன்." - கதவுக்கு இந்தப்புறமே பெண்ணை வழிமறித்து நிறுத்திவிட்டுத் தண்ணீர்ச் செம்பையும், டம்ளரையும் தன் கையில் வாங்கிக் கொண்டாள் அந்த அம்மாள். வள்ளியம்மை தாயின் முகக் குறிப்பைப் புரிந்து கொண்டு உடனே வேகமாகச் சமையலறைப் பக்கம் திரும்பிச் சென்றுவிட்டாள். அந்த அம்மாள் கதவுக்கு அப்பால் கடந்து செல்லாமல் நிலைப்படிக்கும் உட்புறம் இருந்துகொண்டே கைகளை எட்டி நீட்டி வாசல் திண்ணைமேல் தண்ணீர்ச் செம்பையும் டம்ளரையும் வைத்தாள். "இதோ தண்ணீர் வைத்திருக்கிறேன், எடுத்துக் கொள்ளுங்கள்." - பன்னீர்ச்செல்வத்திற்கு அவளுடைய அந்தச் செய்கை முகத்தில் அடித்த மாதிரி என்னவோ போல் இருந்தது. "பெண்ணுக்குக் கலியாணம் எப்போது செய்யப்போகிறீர்களோ? வயது ஆகிவிட்டாற்போலத் தெரிகின்றதே?" - பன்னீர்ச்செல்வம் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு கிளம்புகிற வழியாகக் காணோம். திண்ணையில் பதிவாக உட்கார்ந்து, கையோடு கொண்டு வந்திருந்த வெற்றிலைப் பெட்டியைத் திறந்தவாறே அந்த அம்மாளிடம் பேச்சுக் கொடுத்தார். 'இதேதடா சனியன்! சீக்கிரம் போய்த் தொலைய மாட்டார் போலிருக்கிறதே? இந்த மனிதர் இவற்றை எல்லாம் விசாரிக்கவில்லை யென்று யார் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடன் பணத்தைக் கேட்க வந்தவர் கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே?' - அவளுக்கு எரிச்சலாக வந்தது. அந்த மனிதர் அங்கிருந்து எப்போது எழுந்து செல்வார்? என்று சலிப்பு ஏற்பட்டது. "கலியாணத்திற்கு என்ன அவசரம்? கடன் உடன்களை அடைத்துவிட்டு நிதானமாகப் பார்த்துச் செய்யவேண்டும்" - என்று சுவாரஸ்யமில்லாத குரலில் எங்கோ பார்த்துக் கொண்டு பதில் சொன்னாள். "பெண்ணுக்கு ஆவதற்கு முன்னால் உங்கள் பையன் அழகியநம்பிக்கு ஆகவேண்டாமா?" "உம்... எல்லாம் நடக்க நடக்கப் பார்க்கலாம். நான் உள்ளே போகிறேன். எனக்குச் சமையல் வேலை பாக்கி இருக்கிறது." - அதற்கு மேலும் பன்னீர்ச்செல்வத்தின் தொண தொணப்புக்கு ஆளாக விரும்பாமல் உட்புறம் நகர்ந்தாள் அந்த அம்மாள். "சரி! நானும் இப்படிப் போய்விட்டு வருகிறேன். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் சொன்னால் சொன்னதுதான். பதினைந்து நாளில் வட்டிப்பணம் கைக்கு வந்து சேரவேண்டும். உங்கள் பிள்ளைக்கும் எழுதிவிடுங்கள். சொன்ன தேதியில் பணம் கைக்கு வரவில்லையானால் நான் மிகவும் கெட்டவனாயிருப்பேன்" - பன்னீர்ச்செல்வமும் கிளம்பி விட்டார். அத்தனை குழைந்து, இரக்கம் காட்டுபவர்போல் வம்புப் பேச்செல்லாம் பேசி முடிந்த பின்பும் தொழில் முறைக்குச் செய்ய வேண்டிய எச்சரிக்கையைக் கொடுமையாகச் செய்துவிட்டுத் தான் போனார். திண்ணையிலிருந்த செம்பையும் டம்ளரையும் எடுத்துச் செல்வதற்காகத் திரும்பி வந்த அந்த அம்மாள் தபால்காரன் வருவதைக் கண்டு தயங்கி நின்றாள். 'அழகியநம்பி கடிதம் எழுதியிருந்தாலும் எழுதியிருப்பான். அவனைத் தவிர வேறு யாரிடமிருந்து இப்போது நமக்குக் கடிதம் வந்திருக்கப்போகிறது?' - நினைத்துக் கொண்டே ஆசையோடு நின்றாள். மனம் வேகமாக அடித்துக் கொண்டது. தபால்காரன் எதிர்ச் சிறகிலிருந்த வீட்டில் கடிதம் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தான். எதிர்பார்த்தது வீண்போகவில்லை. தபால்காரன் "முத்தம்மாள் அண்ணி" என்று பெயரை இரைந்து வாசித்தான். இரண்டு கடிதங்களைத் திண்ணையில் வீசி எறிந்துவிட்டுப் போனான். குடும்பப் பாங்கிலும் அடக்க ஒடுக்கப் பண்புகளிலும், பழமையான கட்டுப்பாடுகளிலும் தழும்பேறிப் போயிருந்த அந்த அம்மாளுக்குத் தபால்காரன் நட்ட நடுத்தெருவில் நின்றுகொண்டு தன் பெயரை அப்படி இரைந்து கூவிக் கடிதங்களை வீசி எறிந்தது என்னவோ போலிருந்தது. ஒரு கணம் சிறிய நுணுக்கமான கூச்சம் ஒன்று அந்த அம்மாளைப் பற்றிக் கொண்டது. ஒரு கையில் செம்பையும், டம்ளரையும் எடுத்துக் கொண்டு இன்னொரு கையில் கடிதங்களோடு உள்ளே வந்தாள். "ஏ வள்ளியம்மை! இந்தா, கடுதாசி வந்திருக்கிறது பார்! யார் எழுதியிருக்கிறார்களென்று படித்துச் சொல்லேன்." 'கடிதாசி' என்ற பெயரைக் கேட்டவுடனே அடுப்படியில் உட்கார்ந்திருந்த வள்ளியம்மை மிட்டாய்ப் பொட்டலத்தைப் பார்த்து ஓடிவரும் சிறு குழந்தையைப் போலத் துள்ளிக் குதித்து ஓடிவந்தாள். தாயின் கையிலிருந்து கடிதங்களைவாங்கிப் பார்த்தாள். "அம்மா! ஒரு கடிதாசி அண்ணன் கொழும்பிலிருந்து போட்டிருக்கிறது. இன்னொன்று தென்காசியிலிருந்து அண்ணனுடைய சிநேகிதர் ஒருத்தர் எழுதியிருக்கிறார். முருகேசன் என்று பெயர். அண்ணன் புறப்பட்டுக் கொழும்புக்குப் போனது தெரியாது போலிருக்கிறது. இங்கே இருப்பதாக நினைத்துக்கொண்டு எழுதியிருக்கிறார்." "இரண்டையுமே, படியேன், கேட்கலாம்." - தாயின் விருப்பப்படியே இரண்டு கடிதங்களையுமே படித்துக் காட்டத் தொடங்கினாள் மகள். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
இன்னொரு வனின் கனவு மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2014 பக்கங்கள்: 320 எடை: 350 கிராம் வகைப்பாடு : சினிமா ISBN: 978-81-924609-5-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 220.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஒவ்வொரு சினிமாவும் ஒரு தனிமனிதனின் கனவு. அந்த கனவுகளை சமகால வாழ்வின்முன் வைத்து சுவாரசியமாக ஆராய்கிறது இந்நூல்.இதை எழுதியிருக்கும் குமரகுருபரன் (39), திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கால்நடை மருத்துவம் பயின்றவரான இவர், தமிழின் முன்னணி ஊடக நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர். தற்போது சென்னையில் வசிக்கும் இவரது முதல் நூல் இது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|