31. உழைப்பு! உழைப்பு! உழுது பழகாத கைகள் தொடக்கத்தில் வருந்தின. மலைப்பு அடைந்தன. அதைரியமோ, சோர்வோ அடைந்து விடாமல், பொறுமையாக வேலை செய்தான் அழகியநம்பி. ஆற்றுப் படுகையாதலால் தரை அதிகமாக இறுகியிருக்கவில்லை. கலப்பையின் கொழு நுனி சுலபமாகவே மண்ணில் நுழைந்து கீறிக்கொண்டு போயிற்று. நிலா நாட்களில் இரவிலும் ஏர் பூட்டி உழுதான். மேழியைப் பிடித்து அவன் கைகள் சிவந்து கன்றின. கால்கள் நடந்து அலுத்தன.
ஊரை மறந்து, வீட்டை மறந்து, தன்னையே மறந்து அந்த நிலமே கதியென்று கிடந்தான். கண்ணை இமைகாப்பது போல் அந்த நிலத்தைக் காத்து வந்தான். இந்த ஒன்றரை மாதத்திற்குள் அவன் உடல் கறுத்து அழகிழந்து போயிருந்தது. தசைகள் இறுகி உழைப்புக்கே உரிய முரட்டுத் தன்மை ஏறியிருந்தன. சட்டை, பனியன், போட்டுக் கொண்டு சுற்றியது மறந்தே போய்விட்டது அவனுக்கு. அரையில் அழுக்கடைந்த நாலுமுழம் வேட்டியோடும், திறந்த மார்போடும், வெயிலென்றும், பனியென்றும் பாராமல் காத்துக் கொண்டு கிடந்தான் அவன். மாடு கட்டிக் கொள்வதற்கும், வண்டி நிறுத்திக் கொள்வதற்கும், விவசாயக் கருவிகளை வைத்துக் கொள்வதற்கும், - அந்த அருவிக் கரையில் ஒரு கீற்றுக் குடிசை வேய்ந்து கொண்டான். நாள் செல்லச் செல்ல அவன் ஊருக்குள் வருவதே குறைந்து விட்டது. தென்காசியில் வாங்கிய கடனில் எஞ்சியிருந்ததை அப்படியே வீட்டில் கொடுத்து விட்டான். வேளாவேளைக்குப் படுகை நிலத்தைத் தேடிக் கொண்டு உணவு வந்தது அவனுக்கு. வள்ளியம்மை கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனாள். கிழக்கு வெளுக்கும் நேரத்தில் நிலத்தின் நடுவிலிருக்கும் பரண் மேல் ஏறி நின்று கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் நான்கு புறமும் ஒரே பசுமைப் பரப்பாகத் தெரிந்த தனது படுகையைப் பார்க்கும் போதெல்லாம் அவன் உள்ளம் பூரிக்கும். நம்பிக்கை பொங்கும். உழைத்த தோள்கள் உயர்ந்து விம்மும். எத்தனையோ காலமாக ஆற்று வணடலைத் தேக்கிப் படியவைத்துக் கொண்டு மேடாகியிருந்த அந்தக் குறிஞ்சியாற்றுப் படுகை தன் நிலவளத்தையெல்லாம் அவன் உழைப்போடு சேர்த்து ஒத்துழைக்கச் செய்திருந்தது. பயிர்களின் எழுச்சியில், புடைத்து மேலெழும் பசுமையின் கொழிப்பில், அந்த ஒத்துழைப்பைக் காண முடிந்தது. ஒருநாள் அருணோதயத்தில் அவன் அப்படிப் பரண் மேல் நின்று கொண்டிருந்த போது வட்டிக் கடைப் பன்னீர்ச்செல்வமும் அவருடைய ஆட்களும் அந்தப் பாதையில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். மலையில் விறகு வெட்டி கரி மூட்டைக்காகத் தீ மூட்டம் போடுவதற்கு அவர் போய்க் கொண்டிருக்கிறாரென்று அவன் நினைத்துக் கொண்டான். வழக்கமாக ஒன்றரை மாதம், இரண்டு மாதங்களுக்கொரு முறை அந்த வழியாக அவர் மலைக்குப் போவதுண்டு. இந்த முறை இதுவரை காணாத புதுமை அந்தப் படுகைப் பரப்பில் தெரிவதைக் கண்டு அவர் பிரமித்துப் போனார். அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. கல்லும் முள்ளும் சிதறிக் கிடந்த மேடு பள்ளமான தரை வளமான காய்கறித் தோட்டமாக மாறியிருப்பதைப் பார்த்து வியந்தார். "அந்தக் கொழும்புப் பிள்ளையாண்டான் இராப்பகலாக உழைத்து மண்ணைப் பொன்னாக்கி விட்டாருங்க..." என்று அவரோடு வந்திருந்த கூலியாட்களில் ஒருவன் கூறினான். சாம்பல் நிறத்தில் 'கொழுகொழு'வென்று வளர்ந்த முட்டைக்கோஸ் செடிகள், பூவும், பலனுமாகத் தக்காளிச் செடிகள், வளமாக வளர்ந்த சீமை வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, - எல்லாப் பயிர்களையும் பார்த்த போது பன்னீர்ச்செல்வத்தின் மனத்தில் பேராசை எழுந்தது. மனத்தையும், கண்களையும் அடக்க முடியாமல் நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம் தெரியும் அந்தப் பசுமையை மீண்டும் பார்த்துக் கொண்டே மேலே நடந்து செல்லத் தோன்றாது தயங்கி நின்றார் அவர். பரண்மேல் அழகியநம்பி நின்று கொண்டிருப்பதையும் அவர் கண்டார். மனத்திற்குள் ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவராக, நின்று கொண்டிருந்த வரப்பின் புல் தரையின் மேல் துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தார். "அதோ பரண்மேல் நிற்கிறான் அந்தப் பையன்; போய் நான் கூப்பிடுகிறேனென்று கூப்பிட்டுக் கொண்டு வா." - என்று தம் ஆட்களில் ஒருவனைத் துரத்தினார். அழகியநம்பி தக்காளிச் செடிகளுக்குக் கொத்தி விடுவதற்காக அப்போதுதான் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு பரணிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான். பன்னீர்ச்செல்வம் அனுப்பிய ஆள், "இந்தாங்க; தம்பீ! உங்களை ஐயா கூப்பிடுகிறார்." - என்று அவனருகே வந்து சொன்னான். "வருகிறேன் போ." - என்று சொல்லிவிட்டு மண்வெட்டியோடு அவனுக்குப் பின்னால் நடந்தான் அழகியநம்பி. "வா தம்பீ! உன் திறமையைப் பார்த்தேன். எனக்கு கண் கூசுகிறது. இரண்டரை மாதத்துக்கு முன்னாலே வெட்ட வெளியாய்க் கிடந்த இடத்தை இப்படிப் பசுமை குலுங்கச் செய்துவிட்டாயே; நீ சாமர்த்தியக்காரன் தான் அப்பா. நான் கூட ஆரம்பத்திலே ஏதோ மட்டமாக நினைத்தேன். பைத்தியகாரத்தனமாக நீ வீணுக்கு உழைக்கிறாய் என்று எண்ணினேன். இப்போது தெரிகிறது உன் உழைப்பின் அருமை." "முகஸ்துதி, புகழ்ச்சி, இவையெல்லாம் இப்போது எனக்குத் தேவை இல்லை. கூப்பிட்டனுப்பிய காரியத்தை முதலில் சொல்லுங்கள். எனக்கு உங்களோடு நின்று பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. வேலை இருக்கிறது." - என்று அவரை இடைமறித்தான் அழகியநம்பி. "ஆளே மாறிப் போய்விட்டாய்! உன்னைப் பார்த்தால் பழைய அழகியநம்பி மாதிரியே தெரியவில்லையே?" - அவன் இடைமறித்துக் கூறியதையும் அவனுடைய ஆத்திரத்தையும் அவசரத்தையும் பொருட்படுத்தாதவர் போலப் பேசிக் கொண்டே அவன் தோற்றத்தை ஏற இறங்கப் பார்த்து விட்டுச் சிரித்தார் அவர். அழகியநம்பி முகத்தைச் சுளித்தான். பன்னீர்ச்செல்வம் தம் பக்கத்தில் இருந்த ஆட்களுக்கு ஏதோ ஜாடை காட்டினார். உடனே அவர்கள் தூரத்தில் விலகிப் போய் நின்று கொண்டார்கள். "உட்கார் தம்பீ!" அவர் அவனிடம் ஏதோ அந்தரங்க விஷயம் பேசப் போகிறவரைப் போல் பக்கத்தில் உட்காரச் சொல்லி உபசரித்தார். "சும்மா சொல்லுங்கள். எனக்கு உட்கார நேரமில்லை" - "சொன்னால் உனக்குக் கோபம் வராதே?" "சுற்றி வளைக்காதீர்கள். எனக்கு நேரம் வீணாகிறது. நேரடியாகச் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்" - அவனுடைய குரலில் ஆத்திரம் ஏறியிருந்தது. அவர் கூறியதைக் கேட்டதும் அழகியநம்பிக்கு இரத்தம் கொதித்தது. "என்ன சொன்னீர்?" - என்று ஆத்திரத்தோடு கத்திக் கொண்டு மண்வெட்டியை ஓங்கிவிட்டான். பன்னீர்ச்செல்வம் அலறிப்புடைத்துக் கூச்சலிட்டுக் கொண்டே எழுந்து விலகி நின்றார். "புத்திகெட்ட மனிதரே! உம்மிடம் கடன் வாங்கிவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று அர்த்தமா? வாய் கூசாமல் எப்படி ஐயா கேட்டீர்?" - என்று கூச்சலிட்டான் அவன். "கடன்காரப் பயலுக்கு ரோஷத்தைப் பார்!" - என்று அடிபட்ட நாய் போல் முணுமுணுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தார் பன்னீர்ச்செல்வம். "அயோக்கியன்! விறகுக்கும், கரிக்குமாக மலையை மொட்டையடிப்பது போல் மனிதர்களையும் மொட்டையடிக்கப் பார்க்கிறான்." - என்று அவர் காதில் கேட்கும்படி இரைந்தே சொன்னான் அழகியநம்பி. அவர் போன மறுகணமே ஒரு திருஷ்டிப் பொம்மை கட்டி வயலுக்கு நடுவே நிறுத்தினான். இன்னொரு நாள் மணியக்கார நாராயணபிள்ளை, புலவர் ஆறுமுகம், முன்சீப் புன்னைவனம், கந்தப்பன், - எல்லோரும் அருவியில் குளிப்பதற்காக மலையடிவாரத்துக்கு வந்திருந்தார்கள். குளித்துவிட்டுத் திரும்பிப் போவதற்கு முன் அழகியநம்பியின் காய்கறித் தோட்டத்தைப் பார்க்க வந்தனர். "என்ன ஐயா புன்னைவனம்? ஏன் இப்படி மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படுகிறீர்? அன்றைக்கு உம்மிடமும், என்னிடமும் வந்து யோசனை கேட்டபோது கேலி செய்தோமே? இன்றைக்குப் பார்த்தீரா? புழுதி மண்ணாய்க் கிடந்த ஆற்றுப்படுகையைப் பொன் விளையும் பூமியாக்கி விட்டானே?" - என்று புன்னைவனத்தை நோக்கிக் கூறினார் நாராயணபிள்ளை. "என்ன இருந்தாலும் படித்தவன் மூளையே தனி. எவ்வளவு அருமையாக யோசித்துத் திட்டமாக வேலை செய்திருக்கிறான் பார்த்தீர்களா. இத்தனை வருஷமாக இந்த ஆற்றுப் படுகையை நாம் பார்த்துக் கொண்டு தானே இருந்தோம்? நம்மில் ஒருத்தனுக்காவது இப்படிச் செய்ய வேண்டுமென்று புத்தியில் பட்டதா?" - என்றார் புலவர் ஆறுமுகம். "பையன் கூடிய சீக்கிரம் இதில் முன்னுக்கு வந்துவிடுவான் போலிருக்கிறதே!" - என்றார் புன்னைவனம். கந்தப்பன் அந்தப் பசுமை வளத்தைப் பார்த்துப் பேச வாயின்றி நடந்து வந்து கொண்டிருந்தார். தண்ணீர் பாய்கிற வாய்க்காலில் மண் சரியாமல் செப்பனிட்டுக் கொண்டிருந்த அழகியநம்பி வயலுக்குள் கூட்டமாகப் பேச்சுக்குரல் கேட்டுத் தலைநிமிர்ந்தான். அவர்கள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் எதிர்கொண்டு வரவேற்று, "வாருங்கள்." - என்று கூறிப் புன்னகை செய்தான். "என்னப்பா; அழகியநம்பீ! பெரிய பண்ணைக்கு முதலாளியாக மாறிவிட்டாற் போல் இருக்கிறதே?" - என்று புலவர் ஆறுமுகம் சிரித்துக் கொண்டே கேட்டார். "நீங்கள் சொல்வது தவறு! இன்றும், நாளையும், என்றுமே ஒரு சாதாரண உழைப்பாளிதான் நான். எனக்கென்று தனிப் பெருமை எதுவும் இல்லை. எல்லாம் இந்த மண்ணின் பெருமை!" என்று விநயமாக அவர்களுக்கு அவன் பதில் சொன்னான். "அப்படிச் சொல்லிவிட முடியுமா அப்பா? ஊரெல்லாம் உன்னைக் கிறுக்கனாக நினைத்துக் கேலி செய்தபோது அலுக்காமல் சலிக்காமல் இந்த மண்ணில் நீதானே உழைத்தாய்?" "எனக்கு நம்பிக்கை இருந்தது. வைராக்கியம் இருந்தது. உழைத்தேன்." - என்று பெருமையாகச் சொன்னான் அவன். சிறிது நேரம் அவனோடு அளவளாவிக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் போய்ச் சேர்ந்தார்கள். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
உன் சீஸை நகர்த்தியது நான்தான் மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2012 பக்கங்கள்: 120 எடை: 150 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-81-8322-309-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 125.00 தள்ளுபடி விலை: ரூ. 115.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இப்புத்தகம் மருத்துவம் மற்றும் மனித நடத்தையியல் தொடர்பான பல ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளதால் இதில் கூறப்பட்டுள்ளன பல விசயங்களை நடைமுறைப் படுத்தமுடியும் என்பதை அறிந்து கொள்வதோடு அதன் பலனையும் அனுபவிப்பீர்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். மேலும் குட்டிக்கதைகள் மூலமாக நடைமுறைக்கு உகந்த கருத்துகளை சிறப்பாக கூறுகிறார். நேரடியாக வாங்க : +91-94440-86888
|