15. சபாரத்தினம் தெரிவித்த இரகசியம் அழகியநம்பி கூறிய தெருவின் பெயரைக் கேட்டதும் சிரிப்பும், மலர்ச்சியும் கொஞ்சும் சபாரத்தினத்தின் முகத்தில், இவை இரண்டுமே மறைந்தன. அழகியநம்பியின் முகத்தை இரண்டொரு விநாடிகள் இமைக்காமல் பார்த்தார் அவர். "அந்தத் தெருவில் நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும்?" அழகிய நம்பிக்கு வழி கூறாமல் இப்படி ஒரு எதிர்க் கேள்வியைச் சபாரத்தினம் கேட்டார். அழகியநம்பி இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அவன் திகைத்தான். "பூர்ணாவைப் பார்ப்பதற்காகப் போகிறேன்" - என்று சொல்வதற்கு அவன் மனம் ஒப்பவில்லை. எப்படிச் சொல்வது? என்ன சொல்வது? - என்று தயங்கினான் அவன். அந்த உண்மையைச் சொல்லிவிடத் துணிந்திருந்தால் அவன் அப்போதே சோமுவைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டுப் போயிருப்பானே?
சபாரத்தினம் மனத்தில் என்ன எண்ணிக்கொண்டு அவர் இப்படிச் சொல்கிறார் என்று அழகியநம்பிக்குத் தெரியவில்லை. அவன் திகைத்தான். ஒன்றும் புரியாமல் தயங்கினான். 'சபாரத்தினம் தங்கமான பிள்ளைதான். வஞ்சகமோ, கபடமோ உள்ளவராகத் தெரியவில்லை. அவரிடம் சொல்வதனால் என்ன கேடு வந்துவிடப் போகிறது?' - என்று ஒரு கணம் துணிந்தது அவன் மனம். 'யார் எப்படிப் பட்டவர்களோ? இரண்டொரு மணி நேரப் பழக்கத்திற்குள் ஒருவரைப் பற்றி நாம் எப்படித் தீர்மானிக்க முடியும்? எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? யார் கண்டார்கள்? இந்த இளைஞரை நம்பிச் சொல்லலாமா? கூடாதா?' - என்று மறுகணமே மறுத்தது அவன் மனம். சில விநாடி மனத்தோடு போராடினான் அவன். "வேண்டாம்! நீங்கள் சொல்லாவிட்டால் பரவாயில்லை. எனக்காக நீங்கள் வீண் மனத்துன்பம் அடையக் கூடாது" - என்று சபாரத்தினம் மறுபடியும் மன்னிப்புக் கேட்பது போன்ற குரலில் கூறினார். கூறிவிட்டு அவன் கேட்ட தெருவுக்கு வழி சொல்லத் தொடங்கி விட்டார். "சபாரத்தினம்! கொஞ்சம் இருங்கள். நாம் இருவரும் சேர்ந்தே வெளியில் போகலாம். பேசிக் கொண்டே போகலாம். போகும்போது எல்லா விவரங்களும் உங்களுக்கு நான் கூறுகிறேன். உங்களுடைய எச்சரிக்கைகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன்" - என்று கூறி அவரை இருக்கச் செய்தான் அழகியநம்பி. கடைக்குள்ளேயே சபாரத்தினத்திடம் பூர்ணாவைப் பற்றிக் கூறி அவள் தன்னை வீட்டிற்கு அழைத்திருப்பதையும் சொல்லி அவளைப் பற்றி அவர் அபிப்பிராயத்தை அறிந்து கொண்டு விடலாமா, என்று எண்ணினான் அழகியநம்பி. சிந்தித்துப் பார்த்ததில் கடைக்குள் வைத்து அவளைப் பற்றிப் பேசுவது சரியில்லை என்று பட்டது. சபாரத்தினத்தையும் உடன் அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தான் அழகியநம்பி. இருவரும் பஸ் நிற்குமிடம் வரை பேசிக்கொண்டே நடந்தனர். அங்கே போய் நின்றதும் சபாரத்தினத்திடம் பூர்ணாவின் 'விஸிட்டிங் கார்டை' எடுத்து நீட்டி, "இவள் தன்னுடைய வீட்டிற்கு ஆறு, ஆறரை மணி சுமாருக்கு இன்று வரச்சொல்லி என்னை அழைத்திருக்கிறாள் போகலாமா? வேண்டாமா? உங்கள் அபிப்பிராயம் எப்படியோ அப்படி நான் நடந்து கொள்வேன்" - என்று விசிட்டிங் கார்டில் இருந்த அவள் பெயரைச் சுட்டிக்காட்டி வினாவினான் அழகியநம்பி. அழகியநம்பியின் கேள்வியைக் கேட்டுச் சபாரத்தினம் சிரித்தார். "நீங்கள் கெட்டுப் போக வேண்டும் என்று நான் விரும்பமாட்டேன். என்னுடைய அன்புக்குரிய நண்பராக மனத்தில் இடம் பெற்று விட்டீர்கள். இன்று நீங்கள் ஒரு தவறான இடத்தில் போய் மாட்டிக் கொள்ள நான் சம்மதிக்க மாட்டேன். என்னால் இவ்வளவு தான் கூற முடியும். இதற்கு மேல் உங்கள் விருப்பம் போல் நீங்கள் செய்து கொள்ளலாம்." - சபாரத்தினத்தின் குரலில் அழுத்தம் ஒலித்தது. "ஏன் கூடாது என்கிறீர்கள்? ஒரு காரணமும் சொல்லாமல் இப்படி மொட்டையாகச் சொன்னால் நான் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?" "காரணங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; பல. அவற்றையெல்லாம் இப்படிப் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டே சுலபமாகப் பேசித் தீர்த்துவிட முடியாது. ஓய்வாக ஒரு இடத்தில் உட்கார்ந்து உங்களிடம் தனிமையில் விவரித்துக் கூற வேண்டும்." "அப்படியே செய்யலாம் சபாரத்தினம்! உங்கள் வார்த்தைகளை நான் நம்புகிறேன். இன்றைக்குப் பூர்ணாவின் வீட்டிற்கு நான் போகவில்லை. வேறு எங்காவது போய்த் தனிமையில் பேசிக் கொண்டிருக்கலாம்." "சரி! புறப்படுங்கள். கடற்கரைக்குப் போகும் பஸ் இதோ வந்து கொண்டிருக்கிறது" "இல்லை! கடற்கரை வேண்டாம். நேற்றே அங்கு போய்ச் சுற்றிப் பார்த்து வந்துவிட்டேன். வேறொரு புதிய இடத்திற்குப் போகலாமே?" என்றான் அழகியநம்பி. கடற்கரைக்குப் போனால் ஒரு வேளை லில்லியையும், மேரியையும், அங்கே சந்திக்க நேர்ந்தாலும் நேரலாம். அவர்களைச் சந்தித்து விட்டால் சபாரத்தினத்துடன் பேசுவதற்குத் தனிமையே வாய்க்காதோ, என்ற தயக்கம் அவன் மனத்தில் இருந்தது. "நீங்கள் கழனியாவிலுள்ள பௌத்த ஆலயத்திற்குப் போயிருக்கிறீர்களோ?" "இல்லை! இனிமேல்தான் போகவேண்டும்! அது இங்கிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது? இன்றைக்கு வேண்டுமானால் நாம் அங்கே போகலாமே!" "தொலைவைப் பற்றி என்ன கவலை? நடந்தா போகப் போகிறோம்? பஸ்ஸில் ஏறினால் கால்மணித்தியாலத்தில் கொண்டுபோய் விட்டு விடுவான்!" சிறிது நேரத்தில் பஸ் வந்தது. இருவரும் ஏறிக் கொண்டார்கள். 'நாமொன்று நினைத்தால் அது ஒன்று நடக்கிறது. இந்த இளைஞர் சபாரத்தினம் நம்மைச் சந்தித்துப் பேச வரப் போகிறார் என்று கனவிலாவது நினைத்திருந்தோமா? இந்த இளைஞர் வந்திருக்காவிட்டால் பூர்ணாவைப் பற்றிப் பிரமாதமாக நினைத்துக் கொண்டு அவள் வீட்டுக்குப் போக நேர்ந்திருக்கும். நல்ல வேளையாக வந்து தடுத்தாட் கொண்டார்." - என்று பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும் போதே தனக்குள் நினைத்துக் கொண்டான் அழகியநம்பி. கழனியாவில் இறங்கியது புனிதமும், புகழும் வாய்ந்த பௌத்த ஆலயத்திற்கு அழகியநம்பியை அழைத்துக் கொண்டு போனார் சபாரத்தினம். கண்கொள்ளாக் கவின் மிகுந்த தெய்விகக் காட்சிகளை அங்கே கண்டான் அழகியநம்பி. புத்தர்பிரானைப் பற்றியும், அவருடைய பொன் மொழிகளைப் பற்றியும், கல்லூரி நாட்களில் படித்திருந்த புத்தகங்களெல்லாம் அவன் நினைவில் மலர்ந்தன. உள்ளத்தில் நிர்மலமான தூய எண்ணங்கள் அந்த இடத்திற்குள் நுழையும்போது தாமாகவே உண்டாயின. உடல் முழுதும் சாமானியமான உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு பக்திச் சிலிர்ப்பு உண்டாயிற்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பெற்ற பௌத்த ஸ்தூபி, (டகோபா) ஆலத்துக்குள் பதிக்கப் பெற்றிருந்த அற்புதமான சந்திர காந்தக்கற்கள், புண்ணியம் நிறைந்த பழமையான போதி மரம் - எல்லாவற்றையும் சபாரத்தினம் சுற்றிக் காண்பித்தார். மழுங்க மொட்டையடித்துக் கொண்ட தலையும், கண்ணைப் பறிக்கும் பளீரென்ற மஞ்சள் நிற ஆடையும் தரித்த புத்த துறவிகளைக் காணும்போதும், இரண்டு உள்ளங்கைகளும் நிறையத் தாமரை, அல்லி, முதலிய பல நிற மலர்களை ஏந்திக் கொண்டு பயபக்தியோடு வழிபாட்டுக்கு வரும் சிங்கள யுவதிகளைப் பார்க்கும்போதும் அவன் நெஞ்சம் உணர்ச்சி மயமாக மாறியது. கழனியா ஆலயமும் அது அமைந்திருந்த இயற்கையழகு மிக்க சூழலும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு பெரிய அரச மரத்தின் கீழ்ப் பரந்த புல்வெளியில் ஒதுக்குப் புறமாக உட்கார்ந்தனர் சபாரத்தினமும், அழகியநம்பியும். சில கணநேரம் மௌனத்தில் கழிந்தது. இருவரும் ஒருவரோடொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கீழே குனிந்து புல்தரையைக் கீறிக் கொண்டே சும்மா உட்கார்ந்திருந்தனர். இருந்தாற் போலிருந்து சபாரத்தினம் நிமிர்ந்து உட்கார்ந்து அழகியநம்பியை நோக்கி, அவனுக்கு மட்டுமே கேட்கும்படி மெதுவான குரலில் பேச்சைத் தொடங்கினார். "நான் ஏதோ பொழுது போகாமல் பூர்ணாவின் மேல் எனக்குள்ள சொந்த வெறுப்பின் காரணமாக இங்கே உங்களைக் கூட்டிக் கொண்டு வந்து ஏதேதோ 'கதைக்கிறேனென்று' நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. 'உங்கள் நன்மைக்காகவே இவற்றை உங்களிடம் சொல்லி எச்சரிக்கிறேன்' என்று நீங்கள் நம்பினால்தான் நல்லது." - சபாரத்தினம் பீடிகையோடு ஆரம்பித்தார். "சபாரத்தினம்! நீங்கள் இன்னும் என்னைச் சரியாக நம்பவில்லை போலிருக்கிறது. உங்களுடைய வாயிலிருந்து வரும் எந்தச் சொற்களும் எனக்கு நன்மை தருவனவாகவே இருக்குமென்று நான் உறுதியாக நம்புகிறேன்" - அழகியநம்பி உறுதிமொழி கூறினான். "நல்லது! அந்த நம்பிக்கை இருந்தால் போது" - என்று சொல்லிவிட்டுச் சபாரத்தினம் இலேசாகச் சிரித்துக் கொண்டார். அவ்வளவு நேரமாக அவருடைய முகத்தில் தோன்றாமல் மறைந்துவிட்டிருந்த பழைய சிரிப்பு அது. "இப்போது பிரமநாயகம் உங்களை எந்த இடத்தில், எந்தப் பதவியில், உட்கார்த்தியிருக்கிறாரோ, அதை நினைத்து நீங்கள் மதிப்போ, பெருமையோ, கொண்டாடுவதற்கில்லை. மற்றவர்கள் நினைத்து அனுதாபப்பட வேண்டிய ஒரு இடத்தில் பிரமநாயகம் உங்களைக் கொண்டு வந்து உட்கார்த்தி விட்டார்." அழகியநம்பி பதில் சொல்லாமல் தலை குனிந்து கேட்டுக் கொண்டிருந்தான். 'கயிறுதான்' என்று நினைத்துத் துணிவுடனே காலால் மிதித்துவிட்ட பொருள் மிதித்தவுடன் நெளிந்து 'புஸ்ஸென்று' - சீறிப் படத்தை உயர்த்தினால் எப்படியிருக்குமோ, அப்படியிருந்தது அவன் நிலை. சபாரத்தினம் மேலும் தொடர்ந்து கூறலானார்: - "அந்தப் பெண் பூர்ணாவின் பகட்டிலும், இளமையிலும், அருவிபோலக் கொட்டும் ஆங்கிலப் பேச்சின் வேகத்திலும் நீங்கள் மயங்கிவிடக் கூடாது. எதையும், எப்போதும் செய்வதற்குத் துணிவுள்ள வஞ்சகி அவள். இந்த வயதில் அவளுக்குத் தெரிந்திருக்கிற சூழ்ச்சிகள், எந்த வயதிலும் வேறு எவர்க்கும் தெரிந்திருக்க முடியாதவை. அவளை இங்கிருந்து எப்படியும் கிளப்பிவிட வேண்டுமென்று பிரமநாயகம் தலைகீழாக நின்று பார்க்கிறார். அவரால் முடியவிலலியே. அவள் இல்லாத போது தாறுமாறாக அவளைப் பற்றிப் பேசுவார் அவர். 'எனக்குக் கீழே என்னிடம் சம்பளம் வாங்கித் தின்கிற கழுதைக்கு இவ்வளவு திமிரா?' - என்று இரைவார். ஆனால், எல்லாம் அவள் இல்லாதபோது தான். அவள் தலையைப் பார்த்துவிட்டால் மனிதர் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார். பேச்சு, மூச்சு, இருக்காது. அவள் சொன்னபடி ஆடுவார். இன்று, நேற்றல்ல, - மூன்று வருஷங்களாக இப்படித் தான் நடந்து கொண்டு வருகிறது. பூர்ணாவை அடக்கி வசப்படுத்தி விடவேண்டுமென்று இப்போதுதான் உங்களை முதன் முதலாகக் கொண்டுவந்து உட்கார்த்தியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்." "உங்களுக்கு முன்னாலும் ஐந்தாறு பேர் இதே வேலையில் இருந்திருக்கிறார்கள். உங்களுக்குச் செய்தது போலவே அவர்களையும் அதே அறைக்குள் மேஜை, நாற்காலி, போட்டு உட்கார்த்தியிருக்கிறார்..." "அப்படியா? இருக்காதே? என்னைத் தான் முதல் முதலாக அந்த அறைக்குள் உட்கார்த்துவதாக அல்லவா அவர் என்னிடம் கூறினார்." - அழகிய நம்பி குறுக்கிட்டுப் பேசினான். "கூறுவதற்கென்ன? அந்த வேலைக்கென்று வந்த ஒவ்வொருவரிடமும் அப்படித்தான் கூறியிருப்பார் அவர். பிரமநாயகம் கூறுவதெல்லாம் உண்மையென்று நீங்கள் நினைத்தால் அது உங்களுடைய தவறல்லவா?" அழகியநம்பி மறுபடியும் தலைகுனிந்து கொண்டான். "பூர்ணாவின் சூழ்ச்சிகளைத் தாங்க முடியாமல் ஒவ்வொருவனும் ஒவ்வொரு விதத்தில் போய்ச் சேர்ந்தான். அவைகளை எல்லாம் விவரித்துச் சொன்னால் ஒவ்வொன்றும் ஒரு கதைபோல் இருக்கும். எல்லோருடைய கதைக்கும் முதல் அத்தியாயம் ஒரே மாதிரித்தான் ஆரம்பமாகும். முடிவுகள் தான் வேறுவேறு விதமாக இருக்கும். இன்றைக்கு உங்களிடம் பூர்ணா நடந்து கொண்டாளே, இதே மாதிரிதான் அந்த இடத்தில் வேலைக்கு வந்து உட்காரும் ஒவ்வொரு இளைஞனிடமும் நடந்து கொள்வாள். அவளிடம் என்ன தான் மாயம், மந்திரம், வசியம், இருக்கிறதோ! இன்று வரை அவள் வலையில் சிக்காமல் போன ஆள் கிடையாது. இப்படித்தான் 'விஸிட்டிங்' கார்டைக் கொடுத்து வீட்டுக்கு வந்து சந்திக்குமாறு முதலில் அழைப்பாள். படுசூனியக்காரி அவள். 'மாந்திரிகம், பில்லிசூனியம்' - போன்றவைகள் கூட அவளுக்குத் தெரிந்திருக்குமோ, என்று எனக்கு அந்தரங்கமாக ஒரு சந்தேகம் உண்டு." "முதல் நாள் அவள் வீட்டுக்குப் போனவன் மறுநாளும் போவான். அதற்கு மறுநாளும் போவான். தொடர்ந்து போய்க் கொண்டே இருப்பான். அதன் பின்னர் அவனை யாராலும் தடுக்க முடியாது. கடைசியில் அவனை முற்றிலும் தன் ஆளாக மாற்றிக் கொண்டு விடுவாள் அவள். பிரமநாயகத்தால் அவருடைய கையாளாக வேலைக்கு வந்தவன் பூர்ணாவின் விளையாட்டுப் பொம்மையாக மாறி அவருக்கே எதிரியாகத் தலையெடுப்பது வழக்கம். வேலைக்கு வந்த பத்துப் பன்னிரண்டு நாட்களில் வந்தவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனைத் தன்னுடைய நாய்க்குட்டி போல் தன் பின்னாலேயே சுற்றவைத்து விடுவாள் அவள்." "ஆனால், அவளுடைய வலையில் சிக்கிய ஒவ்வொரு இளைஞனின் முடிவும் ஒரிரு மாதங்களில் பயங்கரமான விதத்தில் வெளியாகும். எனக்குத் தெரிந்து எத்தனை பேர் அப்படி முடிவுகளை அடைந்திருக்கிறார்கள் தெரியுமா?" "இன்னொரு இளைஞர். நன்றாகப் படித்தவர், திருச்சிப் பக்கமிருந்து வந்திருந்தார். அவர் முதலில் பூர்ணாவிடம் அளவு மீறிப் பழகிவிடாமல் 'வேலையுண்டு, தாம் உண்டு' என்று கட்டுப்பாடாக இருந்தார். அந்தக் கட்டுப்பாட்டையும், பிடிவாதத்தையும் இரண்டே இரண்டு வாரங்களுக்கு மேல் கொண்டு செலுத்த முடியவில்லை. அவரும் அவள் வலையில் விழுந்தார். ஈருடலும் ஓருயிரும் போல அவளைவிட்டுப் பிரியாமல் அவளோடு திரிந்தார். கடைசியில் ஒரு நாள் பிரமநாயகத்திடம் சண்டை போட்டுச் சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து வாங்கிக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் ஊருக்குக் கப்பலேறி விட்டார். "உங்கள் பக்கத்திலிருந்து வரும் இளைஞர்கள் தாம் இப்படி நிலைக்காமல் போய்ச் சேர்ந்தார்கள். துணிச்சலும், தன்னம்பிக்கையும், எதற்கும் அஞ்சாத இயல்பும் உடைய யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவரைக் கொண்டு வந்து பிரமநாயகம் அந்த வேலையில் நியமித்தாரே; அவராவது நிலைத்தாரா! இல்லையே! மூன்றே மாதங்களில் ஆயிரக்கணக்கில் கையாடல் செய்துவிட்டதாக அவர் மேல் பொய்க் கணக்குக் காட்டிப் பூர்ணாவே அவரைத் துறத்த வழி செய்துவிட்டாள். அந்த மனிதர் ஒரு பாவமும் அறியாதவர். அவரை எப்படியும் வெளியேற்றி விடவேண்டுமென்பதற்காகக் கணக்கில் மோசடி செய்து கையாடல் பழியை அவர் மீது சுமத்தி வெளியேற்றினாள் பூர்ணா. இப்படி இன்னும் இரண்டொருவர் வந்து நிலைக்காமல் போயிருக்கிறார்கள். அது தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்? ஒவ்வொருத்தர் கதையும் ஒவ்வொரு விதமாக முடிந்திருக்கிறது. முடித்துவைத்த சாகஸம் முற்றிலும் பூர்ணாவுக்குச் சொந்தமானது. அவள் கதையை முடித்து அவளை வெளியே அனுப்பிவைக்கத்தான் யாருக்கும் துணிவில்லை. இந்த நிலையில் ஏழாவது ஆளாக உங்களைத் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொண்டு வந்திருக்கிறார் பிரமநாயகம். எனக்கென்னவோ, நீங்கள் வந்த அன்றே - உங்களைப் பார்த்ததிலிருந்து உங்கள் மேல் நீக்கமுடியாத ஒரு அனுதாபமும் அன்பும் ஏற்பட்டுவிட்டன. இல்லையானால் வலுவில் உங்களைத் தேடி வந்து உங்கள் நட்பைக் கோரியிருக்கமாட்டேன்." - சபாரத்தினம் பயங்கரமும், எச்சரிக்கையும் கலந்த அந்த உண்மைகளைச் சொல்லி முடித்தார். அழகியநம்பி பெருமூச்சு விட்டான். நன்றாகக் கதை சொல்லத் தெரிந்த யாரிடமோ மர்மமான நிகழ்ச்சிகள் அடங்கிய ஒரு கதையைக் கேட்டு முடித்தது போலிருந்தது அவனுக்கு. "சபாரத்தினம்! உங்களுக்கு மட்டும் அந்த மாதிரி உணர்ச்சி ஏற்படவில்லை, எனக்கும் ஏற்பட்டது. உங்களை முதலில் சந்தித்தவுடன் யாரோ ஒரு புதிய மனிதரைத் தற்செயலாகச் சந்திக்கிறோம் என்று நான் நினைக்கவே இல்லை. வெகுநாள் பழகிய ஒரு உண்மை நண்பரைச் சந்திப்பது போன்றே இருந்தது." - என்று சொல்லி நிறுத்தினான் அழகியநம்பி. "இருக்கலாம்! எப்போதோ - ஒரு பிறவியில் நீங்களும் நானும் சகோதரர்களாக இருந்திருக்கிறோம் போலிருக்கிறது" - உருக்கமான குரலில் சபாரத்தினம் இப்படிக் கூறிய போது அதைக் கேட்டுக் கொண்டிருந்த அழகியநம்பிக்குப் புல்லரித்தது. பவித்திர மயமானதொரு புதிய சிலிர்ப்பு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை அவன் உடலில் பரவியது. ஆகா! 'சகோதரன்' - என்ற அந்தச் சொல்லின் ஒலிக்குத்தான் எவ்வளவு பெரிய சக்தி! என்று வியந்தான் அவன். அந்த வியப்பில், அந்தப் புனிதமான வார்த்தையைக் கேட்ட பூரிப்பில் - தெய்வீகச் சிலிர்ப்பில் அழகியநம்பி ஆழ்ந்து மூழ்கியிருந்த போது பின்னாலிருந்து ஒரு பெண் குரல் அவன் பெயர் சொல்லிக் கூப்பிட்டது. திடீரென்று யாரோ அதலபாதாளத்திற்குள் அவனைப் பிடித்து இழுப்பது போல் அவன் செவிப்புலனைத் தீண்டிப் பற்றியிழுத்தது அந்தக் குரல். அழகியநம்பியின் உடல் நடுங்கிக் குலுங்கியது. பலிக்களத்து ஆடுபோல் மிரண்டு தயங்கும் கண்களால் திரும்பிப் பார்த்தான். பூர்ணா இன்னும் யாரோ ஒரு பெண்ணோடு அவனும், சபாரத்தினமும், உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு, நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் வந்து கொண்டிருந்த இடத்துக்கும், அவன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கும் ஐந்தாறு கெஜதூரம் இருக்கும். 'சபாரத்தினத்தையும் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு அப்படியே எழுந்திருந்து ஓடிவிடலாமா?' - என்று நினைத்தான் அவன். 'இப்போது என்ன செய்வது?' - என்று கேட்கும் பாவனையில் பயக்குறிப்புடன் கூடிய பார்வையால் சபாரத்தினத்தின் முகத்தைப் பார்த்தான் அவன். "பயப்படாதீர்கள் - நான் இருக்கிறேன்" - என்று மெதுவாகச் சொல்லிக் கையமர்த்திக் காட்டினார் சபாரத்தினம். அதற்குள் அவள் பக்கத்தில் வந்து விட்டாள். திடமாக இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தவன் அவள் பக்கத்தில் வந்ததும் புல் தரையில் எழுந்து நின்றான். சபாரத்தினம் எழுந்திருக்கவில்லை. "வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லியிருந்தீர்களே! ஏன் வரவில்லை?" - அவள் குரல் அதட்டுவது போல் தான் இருந்தது. என்ன பதில் சொல்வதென்று விழித்தான் அவன். சிவப்புச்சாயம் பூசிய அவள் உதடுகளை அப்போது பார்த்தவுடன் கண்களில், - மனிதர்களை அடித்து இரத்தத்தைக் குடிக்கும் கோரமான பெண் அரக்கி ஒருத்தி இதழ்களில் பச்சை இரத்தம் புலராமல் தன் முன் நிற்பது போல் அவனுக்குத் தோன்றியது. |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
பார்வை யற்றவளின் சந்ததிகள் மொழிபெயர்ப்பாளர்: விலாசினி மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2020 பக்கங்கள்: 352 எடை: 400 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-87333-72-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 315.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: அமைதியாக சண்டையிட்டுக்கொள்ளும் தம்பதிகளுக்குப் பிறந்த அமர் ஹம்ஸா, பங்களா என்றழைக்கப்படும் நொறுங்கிவரும் தன் வீட்டில் துன்பங்களையும் அவமானங்களையும் எதிர்பார்த்து வளர்கிறான். அவனிடம் இருக்கும் இந்த முன்னெச்சரிக்கை குணத்தால் துரதிர்ஷ்டம் அவன் வாழ்க்கையில் அருவியாக நுழைகிறது. இருபத்தியாறு வயதில் தான் கற்பனை செய்துகொண்ட பார்வையாளர்களுக்குத் தன் கதையைக் கூற அவன் முடிவெடுக்க, பங்களாவின் ரகசியங்கள் வெளிவரத் தொடங்குகின்றன. ஆழ்ந்த வலியும் வறண்ட நகைச்சுவையும் தளும்பும் பார்வையற்றவளின் சந்ததிகள் நாவல், வாசகர்களை ஆட்படுத்தித் துன்புறுத்தும் ஒரு குடும்ப நாடகமாக, அனீஸ் சலீமை நம் காலத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட கதைசொல்லிகளில் ஒருவரென, உறுதிப்படுத்துகிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|