18. பயங்கர எச்சரிக்கை கடைக்குள்ளிருந்த சுவர்க்கடிகாரம் மூன்று மணி அடித்தது. இரவின் அமைதியில் அறைக்குள் கரையில் இழுத்துப் போட்ட மீனைப் போலத் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த அழகியநம்பிக்கு அந்த ஓசை தெளிவாகக் கேட்டது. கண் இமைகள் கனத்தன. கை கால்களைச் சித்திரவதை செய்வது போல் வலித்தது.
மணி மூன்றடித்த பின் அவனுடைய கண்கள் அயர்ந்தன. அவனையறியாமலே தூக்கத்தின் இனிய கைகள் அவனைத் தழுவின. விடிகாலை நேரத்தின் குளிர்ந்த காற்று அறைக்குள் புகுந்து வீசியது. அழகியநம்பி போர்வையை இழுத்து விட்டுக் கொண்டான். அலுப்பிலும், சோர்விலும், துவண்டு போயிருந்த உடல் நல்ல - இனிய - தூக்கத்தில் சிக்கி நினைவிழந்தது. ***** நடுத்தெருவில் இரவு ஒரு மணிக்கு அவன் தலைதெறிக்க ஓடுகிறான்! இரண்டு முரட்டு சிங்கள ஆட்கள், கையில் பளபளவென்று மின்னும் பிச்சுவாக் கத்தியோடு அவனைத் துரத்திக் கொண்டு ஓடி வருகிறார்கள். அவர்களுடைய குரூரமான கண்களில் கொலைவெறி மின்னுகிறது. "பூர்ணாவுக்கு எதிரியாகவா வந்து முளைத்திருக்கிறாய்? இரு! உன்னைத் தீர்த்துக் கட்டிவிடுகிறோம்," - என்று கூச்சலிட்டுக் கொண்டே கத்தியை ஓங்கிக் கொண்டு பாய்ந்து வருகிறார்கள் அந்த முரடர்கள். எதிரே ஒரு பெரிய மாடி வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு இந்தக் காட்சியைக் கண்டு இராட்சஸி போல் கை கொட்டிச் சிரிக்கிறாள் பூர்ணா. இரண்டு முரடர்களும் அழகியநம்பியை நெருங்கிவிட்டார்கள். அவனால் ஓட முடியவில்லை. மூச்சு இரைத்தது. அடிக்கால்களில் இரத்தம் கட்டிக் கொண்டு 'விண் விண்' - என்று வலித்தது. 'ஐயோ' என்று அலறிக் கொண்டே அறுந்து விழும் கொடிபோல் கீழே சாய்ந்தான் அவன். அந்த முரடர்கள் பக்கத்துக்கு ஒருவராக வந்து குனிந்து கத்தியை நீட்டுகிறார்கள். "சரி! இவன் நம் வழிக்கு வரமாட்டான். இவனை இப்போதே தீர்த்துக்கட்டி விடுங்கள்." - அவள் அவர்களுக்கு உத்தரவிடுகிறாள். கத்தி அவன் நெஞ்சுக்குழியை நெருங்குகிறது. 'வீல்...' என்று அலறிக்கொண்டே கண்களை இறுக்கி மூடிக்கொள்கிறான் அவன். ***** "தம்பி! தம்பி! இதென்ன; சொப்பனமா?" - யாரோ தட்டி எழுப்பினார்கள். அறைக்குள் விளக்கு எரிந்தது. அழகியநம்பி வாரிச் சுருட்டிக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்திருந்தான். கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு பார்த்தான். சமையற்காரச் சோமு படுக்கைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். அறை வாசலில் பிரமநாயகம் பிரஷ்ஷில் பல் தேய்ப்பதற்காகப் பசையை ஊற்றிக் கொண்டிருந்தார். விடிவதற்கு இன்னும் சிறிது நேரமே இருக்கும் என்று தோன்றியது. கடிகாரத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தான். மணி ஐந்தரை ஆகியிருந்தது. "என்ன தம்பி! சொப்பனம் கண்டீர்களா? எவ்வளவு பெரிதாக அலறிவிட்டீர்கள்; என்னமோ, ஏதோ என்று பயந்து நடுங்கிப் போய் ஓடி வந்தேன்" - என்றான் சோமு. அழகியநம்பிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. "பச்சைக் குழந்தை பார்! அதனால் தான் சொப்பனத்தில் வாய் உளறுகிறது. இவன் போட்ட கூச்சலைக் கேட்டுவிட்டுத் தெருவில் போய்க் கொண்டிருந்த ரோந்து போலீஸ்காரன் எவனாவது கடைக்குள் கொலையோ, கொள்ளையோ - என்று ஓடிவராமலிருக்க வேண்டுமே! என்று எனக்குப் பயமாகப் போய்விட்டது." - பிரமநாயகம் கேலியாக இப்படிச் சொன்னார். தான் கண்ட கனவை அப்போது நினைத்தாலும் அழகியநம்பிக்கு மயிர்க்கால்கள் சிலிரித்து நின்றன. ஓட்டம் நின்று இரத்தம் உடலில் அங்கங்கே உறைந்து விடும் போலிருந்தது. 'அப்பப்பா! என்ன பயங்கரமான கனவு?' - அழகியநம்பி படுக்கையைச் சுருட்டி வைத்துவிட்டு எழுந்திருந்தான். பிரமநாயகம் பல் விளக்குவதற்காகக் குழாயடிக்குப் போனார். அழகியநம்பி சோமுவுக்குப் பக்கத்தில் சென்று, "முதலாளி கண்டிக்குப் போவதாக நேற்றுச் சாயங்காலம் என்னிடம் கூறினாரே; ஏன் போகவில்லை?" - என்று காதருகில் மெல்லக் கேட்டான். "ஐயா யாரைப் பார்ப்பதற்காகப் போகவேண்டுமென்று இருந்தார்களோ, அவர் நாளைக் காலையில் புறப்பட்டு இங்கேயே வருவதாகத் தந்தி கொடுத்து விட்டாராம்." - என்றான் சோமு. "சோமு! தூக்கத்தில் இரைந்து உளறிவிட்டேனா?" அசடு வழியச் சிரித்துக் கொண்டே மெதுவான குரலில் அழகியநம்பி கேட்டான். "உளறலா? அதையேன் கேட்கிறீர்கள்? நாலரை மணியிலிருந்து ஐந்தரை மணிக்குள் இரண்டு முன்று தடவை அலறி விட்டீர்கள். நானும் முதலாளியும் இல்லாததெல்லாம் நினைத்துப் பயந்து போய் விட்டோம்." - என்றான் சோமு. முதல் நாள் சாயங்காலம் தான் வெளியில் சென்று சபாரத்தினத்தோடு சுற்றிவிட்டுத் திரும்பியது பற்றிப் பிரமநாயகம் தன்னிடம் நேரில் ஏதாவது கேட்பார் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், அதுபற்றி அவர் அவனிடம் ஒன்றுமே கேட்கவில்லை. குளித்துச் சாப்பிட்டு அலுவலகச் சாவியை எடுத்துக் கொண்டு அவன் புறப்பட்ட போது மணி ஒன்பதரை. அதற்கிடையில் நான்கு மணி நேரத்தில் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவில்லை. அறைச் சாவியை எடுத்துக் கொண்டு கடைக்குள் அவன் புறப்பட்ட போது பிரமநாயகம் அவனைத் தனியாக ஒரு மூலைக்கு அழைத்துக் கொண்டு போய், "இதோ பார்! உன்னிடம் ஒரு செய்தி சொல்லவேண்டுமென்று நேற்றே நினைத்துக் கொண்டிருந்தேன். சொல்ல மறந்துவிட்டேன். பூர்ணா கூப்பிட்டாள் என்று அவள் வீட்டிற்கோ, வேறெங்காவதோ அவளோடு நீ போகவேண்டாம். சினிமாவுக்கு, கடற்கரைக்கு, விருந்துக்கு அங்கே - இங்கே என்று எதற்காவது கூப்பிட்டுக் கொண்டே இருப்பாள். நீ போகக்கூடாது. போனால் உனக்குத்தான் ஆபத்து. கத்தி நுனியில் நடப்பதைப் போல எண்ணிக்கொண்டு அவளிடம் மிகவும் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும் நீ." - என்று இரகசியமாக எச்சரித்தார். முதல் நாள் மாலை தான் வெளியே போய்ச் சுற்றிவிட்டு வந்ததைப் பற்றி அவர் மனத்தில் ஏதோ சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை தான் பூர்ணாவின் வீட்டிற்கே போயிருந்தாலும் போயிருக்கலாம், - என்று அவர் சந்தேகப்படுகிறார். அதனால் தான் தன்னை இரகசியமாகக் கூப்பிட்டு எச்சரித்திருக்கிறார் என்று அவனுக்குத் தோன்றியது. சபாரத்தினத்தின் எச்சரிக்கைக்கும், அவருடைய எச்சரிக்கைக்கும் ஒரு விதத்தில் ஒற்றுமை இருப்பதைக் கூட அவன் சிந்தித்தான். பூர்ணாவின் பிடியில் அயர்ந்து மறந்தும் அவன் சிக்கிவிடலாகாது என்பதை இருவருடைய எச்சரிக்கையும் வற்புறுத்தின. மற்றவர்கள் பயப்பட்டே தீரவேண்டிய ஏதோ சில அம்சங்கள் அந்தப் பெண் பூர்ணாவிடம் இருக்க வேண்டுமென்ற பயம் அழகியநம்பியின் மனத்தில் உறுதிப்பட்டது. ஒன்பது அடித்து முப்பத்தைந்து நிமிடங்களுக்கெல்லாம் அலுவலக அறைக்குள் தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டு விட்டான் அழகியநம்பி. முதல் நாள் அந்த இடத்தில் உட்கார்ந்த போது இருந்த தெம்பும், நம்பிக்கையும் அப்போது அவன் மனத்தில் இல்லை. மாறாக குழப்பமும், அச்சமுமே வளர்ந்திருந்தன. பத்தேகால் மணிக்குப் பூர்ணா வந்தாள். அவன் எழுந்திருந்து வணங்கினான். அவள் அதைக் கவனிக்காதது போல் தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவள் வீட்டுக்கு வராமல் ஏமாற்றிவிட்டுச் சபாரத்தினத்தோடு கழனியாவுக்குப் போனது பற்றித் தன்னைத் திட்டுவாள், அதட்டுவாள் என்று அழகியநம்பி எதிர்பார்த்தான். வழக்கம் போல் மூன்று மணியானதும் போய்விட்டாள். இப்படியே ஒரு விசேஷமும் இல்லாமல் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கழிந்தன. அழகியநம்பி பத்தேகால் மணியிலிருந்து மூன்று மணி வரை பூர்ணா என்ற பயங்கரமான அதிகார சக்தியின் ஏவலாளாகவும், மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை பிரமநாயகத்தின் உண்மை ஊழியனாகவும் நாட்களைக் கடத்தினான். அந்தச் சில நாட்களில் பூர்ணாவின் மௌனமும், தன்னிடம் கடுகடுப்பாகப் பேசி அதட்டி அதிகாரம் செய்கின்ற பண்பும் பயத்தை உண்டாக்கியிருந்தன அவனுக்கு. தாக்குவதற்காகப் பின் வாங்கி ஒதுங்கும் ஆட்டுக்கிடாயின் நினைவுதான் பூர்ணாவைக் காணும் போதெல்லாம் அவனுக்கு உண்டாயிற்று. நான்காவது நாள் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடந்தன. அன்று மாலை பூர்ணாவிடம் அவன் கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டுவிட்டான். அதே தினம் காலையில் அவன் மனம் பெரிதும் கலக்கமடைவதற்குக் காரணமான இன்னொரு நிகழ்ச்சியும் நடந்திருந்தது. காலையில் தபால்காரன் கடைக்குள் வந்து கடிதங்களைக் கொடுக்கும் போது பூர்ணா வந்திருக்கவில்லை. பிரமநாயகம் பின் கட்டில் கண்டியிலிருந்து வந்திருந்த வியாபார நண்பரொருவரோடு பேசிக் கொண்டிருந்தார். எல்லாக் கடிதங்களையும் அழகியநம்பிதான் தபால்காரனிடமிருந்து வாங்கினான். பிரமநாயகத்தின் பெயருக்கு வந்திருந்த சொந்தக் கடிதங்களை ஒரு ஆள் மூலம் பின் கட்டில் அவரிடம் கொண்டு போய்க் கொடுக்கும்படி அனுப்பிவிட்டான். மற்றவற்றில் வியாபார சம்பந்தமாகக் கடைக்கு வந்திருந்த பொதுக் கடிதங்களைத் தவிர அழகியநம்பியின் பெயருக்கு நான்கு கடிதங்கள் வந்திருந்தன. அவற்றைத் தனியே பிரித்தெடுத்துத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு எஞ்சிய கடிதங்களைப் பூர்ணாவின் மேசை மேலே கொண்டு போய் வைத்தான். பின்பு தன் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு தனக்கு வந்த கடிதங்களை ஆவலோடு ஒவ்வொன்றாகப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான். முதல் கடிதம் அவன் தாய் ஊரிலிருந்து எழுதியிருந்தாள். தாய்க்கு எழுதத் தெரியாது. அவள் சொல்லக் கேட்டு வள்ளியம்மை எழுதியிருப்பாள் என்று அவன் புரிந்து கொண்டான். அவன் கொழும்பு போய்ச் சேர்ந்ததும் எழுதிய கடிதம் கிடைத்ததென்றும், தென்காசியிலிருந்து முருகேசன் கடிதம் எழுதியிருந்தானென்றும், தொடங்கிப் பன்னீர்ச்செல்வம் வட்டிப்பணம் தரச்சொல்லி மிரட்டியதையும், காந்திமதி ஆச்சியின் உதவியால் வட்டிப்பணம் கொடுத்து வரவு வைத்து விட்டதையும், விவரித்திருந்தாள். 'வீட்டு நிலைமை மிகவும் கஷ்டமாக இருக்கிறது. விரைவில் நீ ஏதாவது கொஞ்சம் பணம் அனுப்பினால் தான் நல்லது. இதெல்லாம் நான் எழுதித் தான் உனக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை. நீ குடும்பக் கஷ்டம் தெரிந்த பிள்ளை. உன் தந்தை ஆயிரக்கணக்கில் கடன் வைத்து விட்டுப் போயிருக்கிறார். அவ்வளவையும் நீ தலையெடுத்துத் தான் அடைக்க வேண்டும். கலியாணத்துக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்பதையும் மறந்துவிடாதே. மாதா மாதம் எங்களுக்கு வீட்டுச் செலவுக்கு அனுப்ப வேண்டியதை அனுப்பு. சிக்கனமாக இருந்து நாலுகாசு மீதம் பிடித்து கடன்களை அடைப்பதற்கும் ஏதாவது சேர்த்து வைத்தால் தான் நல்லது. 'உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொள். புது இடம். புது தேசம். கடலைக் கடந்து போயிருக்கிறாய். எது ஒத்துக் கொள்ளுமோ? எது ஒத்துக் கொள்ளாதோ? கண்ட தண்ணீரில் குளித்துக் கண்டதைச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே! அடிக்கடி கடிதம் எழுது' - என்று கடிதத்தை முடித்திருந்தாள் அவன் அன்னை. இரண்டாவது கடிதத்தைப் பிரித்தான். அது காந்திமதி ஆச்சியிடமிருந்து வந்திருந்தது. நாய்க்காலும், பூனைக்காலும் போலச் சிறிதும் பெரிதுமான எழுத்துக்களால் கோமு எழுதியிருந்தாள். அவன் தாய்க்குத் தான் பண உதவி செய்ததைக் குறிப்பிட்டுவிட்டுப் பொதுவாக எழுதியிருந்தாள் காந்திமதி ஆச்சி. கடிதத்தின் ஒரு ஓரத்தில், 'அழகியநம்பி மாமாவுக்குக் கோமு எழுதிக்கொள்வது - அக்காவுக்கும், எனக்கும் சதா உங்கள் நினைவாகவே இருக்கிறது. மறுபடி உங்களை எப்போது பார்க்கப் போகிறோம்; என்று ஆசையாக இருக்கிறது,' என்று கிறுக்கியிருந்தாள். ஆச்சிக்குத் தெரியாமல் தபாலாபீஸில் கொண்டு போய்ப் பெட்டிக்குள் போடுவதற்கு முன்னால் கோமு தானாகவே அந்தச் சில வரிகளைக் கிறுக்கியிருக்க வேண்டுமென்று அழகியநம்பிக்குத் தோன்றியது. 'கோமுவாகவே எழுதினாளா? அல்லது பகவதி எழுதச் சொல்லித் தூண்டினாலா?' - இந்தச் சந்தேகம் உண்டான போது அழகியநம்பியின் உடலில் ஒரு இன்பகரமான புல்லரிப்பு மெல்லப் பரவியது. வயதுக்கு வயது அன்பும், அன்பைத் தெரிவிக்கும் முறையும் வித்தியாசப்படுவதை அவன் சிந்தித்து வியந்தான். மூன்றாவது கடிதத்தைப் படிப்பதற்காக அவன் பிரிக்கத் தொடங்கியபோது பூர்ணா உள்ளே நுழைந்தாள். அவளுக்கு யார் மேல் என்ன கோபமோ, 'ஸ்பிரிங்' கதவைப் படீரென்று இழுத்து விட்டுக் கொண்டு வந்தாள். அழகியநம்பி அவளுக்கு மரியாதை செய்யும் பாவனையில் ஒருவிநாடி எழுந்து நின்றுவிட்டு மறுபடியும் உட்கார்ந்து முருகேசனின் கடிதத்தில் மூழ்கினான். தென்காசி. .... 'அன்புமிக்க நண்பன் அழகியநம்பிக்கு முருகேசன் வணக்கம். நீ குறிஞ்சியூரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன் குறிஞ்சியூருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இன்று நீ கொழும்பிலிருந்து எனக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்த பின்பு தான் நீ எங்கேயிருக்கிறாய் என்பது தெரிந்தது. உன் விருப்பப்படியே இன்று நம்முடைய நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் உன் விலாச மாறுதலையும் - நீ இலங்கைக்கு போயிருப்பததயும் விவரமாக எழுதி விட்டேன்.' 'ஆரியங்காவுக் கணவாய், அச்சன் கோவில்மலை, பச்சை மலை, பாலூற்று - ஒரு நாளைக்கு ஒரு இடமாக இப்படி எத்தனையோ இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம் என்று திட்டம் போட்டிருக்கிறோம். ஆனால், நீ இப்போது இங்கே இல்லை...' -இன்னும் என்னென்னவோ சுற்றி வளைத்து ஒரு பெரிய தொடர் கதையையே கடிதமாக எழுதியிருந்தான் முருகேசன். அதை முழுதும் படித்து முடிச்சுவிடாது பூர்ணாவின் அதிகாரக் குரல் கடுமையாக ஒலித்து அவனை அழைத்தது. "இதோ! இந்தக் கடிதத்தை டைப் செய்யுங்கள். ஐந்தே நிமிஷங்களில் கடிதம் என் கைக்கு வரவேண்டும்." - தனக்கு வந்த கடிதங்களை மடித்துச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு அவள் கொடுத்த கடிதத்தை டைப் செய்வதற்காக அதை வாங்கிக் கொண்டு டைப்ரைட்டருக்கு முன்னால் போய் உட்கார்ந்தான். அவ்வளவிற்கும் அவள் கொடுத்த அந்தக் கடிதம் கடை வியாபார சம்பந்தமானதோ, ஆபீஸ் தொடர்புடைய அவசரக் கடிதமோ அல்ல. அவள் தன்னுடைய சிநேகிதகளில் எவளோ ஒருத்திக்கு எழுதிய கடிதம். இரண்டு பக்கத்துக்கு மேல் வழவழவென்று எழுதியிருந்தாள். அதை டைப் செய்து அவளிடம் கொடுக்கக் கால் மணி நேரம் ஆயிற்று. மீண்டும் தன் நாற்காலியில் உட்கார்ந்து கடிதங்களைப் பையிலிருந்து எடுத்தான். அதுவரை பிரிக்காமல் இருந்த நான்காவது கடிதத்தின் உரை மேலாக அவன் கைக்கு வந்தது. 'அது யாரிடமிருந்து வந்திருக்கும்?' - என்று அடக்க முடியாத ஆவலோடு பிரித்துப் பார்த்தான். அந்த உறையைப் பிரித்துக் கடிதத்தைப் படித்ததும் அவனுக்குத் தலை சுற்றியது. நெஞ்சில் திகில் புகுந்தது. ஒரு பெரிய வெள்ளைக் காகிதத்தில் நட்ட நடுவில் நல்ல சிவப்புமையால் 'பளிச்சென்று' - தெரியும் படியாக இரண்டு மூன்று வரிகள் எழுதப்பட்டிருந்தன. "அற்பனே! வேறு நாட்டிலிருந்து பிழைப்பதற்காக வந்திருக்கும் நீ பூர்ணாவின் வழிகளை எதிர்த்து அநாவசியமாகக் குறுக்கிடாதே!... இந்த எச்சரிக்கையை மீறினால் உயிரோடு தாய்நாட்டுக்குத் திரும்பிப் போக மாட்டாய்." - அதில் எழுதியிருந்தது இவ்வளவுதான். கடிதத்தின் மேலேயோ, கீழேயோ, எழுதியவரின் முகவரியோ, கையெழுத்தோ இல்லை. முன்னும், பின்னும், தொடங்குதலோ, முடிவோ இல்லாமல் மொட்டையாக ஒரு எச்சரிக்கை வாசகம் போலிருந்தது கடிதம். அழகியநம்பி கலக்கமடைந்தான். அதே சமயத்தில் அவனுக்கு ஆத்திரமும் உண்டாயிற்று. 'எங்கிருந்து யாரால் போஸ்ட் செய்யப் பட்டிருக்கிறது?' - என்பதற்குக் 'கடிதத்தின் உறைமேல் ஏதாவது அடையாள மிருக்கிறதா?' - என்று உறையைக் கையிலெடுத்துப் புரட்டினான். 'முதல்நாள் மாலை கொழும்பு ஜெனரல் போஸ்டபீஸில் போஸ்ட் செய்யப்பட்ட கடிதம்' - என்பதைக் குறிக்கும் தபால் முத்திரையைத் தவிர வேறெந்த அடையாளமும் உறையின் மேல் இல்லை. திடீரென்று மனக்குழப்பத்தினாலும், அச்சத்தினாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவன் உள்ளம் உணர்ச்சி மயமாக மாறியது. கொதிப்பும், கோபமும் நெஞ்சில் குமுறின. ஆண்பிள்ளையின் தன்மானத்தைச் செயலில் காட்டிவிடத் துடித்தன அவன் கைகள். நேரே பூர்ணாவுக்கு முன்னால் போய் நின்று கொண்டு அந்தக் கடிதத்தை அவள் முகத்தில் வீசி எறிந்து, "இது யார் எழுதியது? யாரை விட்டு எழுதச் சொன்னாய்? சொல்லுகிறாயா? உன் கன்னத்தில் அறையட்டுமா?" - என்று கேட்க வேண்டும் போலிருந்தது. நிதானமும், தன்னைப் பயந்த சிந்தனையும் அவனுடைய உணர்ச்சித் துடிப்பைச் சிறிது சிறிதாக அடக்கி அமைதியடையச் செய்தன. எல்லோரையும் போல அவளும் ஒரு பெண்பிள்ளையாக - சாதாரண வெறும் பெண் பிள்ளையாக மட்டும் இருந்துவிட்டால் அழகியநம்பி தன் கோபத்தை வெளிக்காட்டி உண்மையை அவளிடமிருந்து வரவைத்து விடலாம். ஆனால், அவள் தான் சாதாரணமான பெண் இல்லையே! அழகியநம்பி தன்னை - தன் உணர்ச்சிகளை நிதானமிழந்து விடாமல் காப்பாற்றிக் கொண்டுவிட்டான். 'சாயங்காலம் சபாரத்தினத்திடம் தனியே அந்தக் கடிதத்தைக் காட்டி அவனுடைய ஆலோசனையைக் கேட்டுக் கொண்டு மேலே என்ன செய்ய வேண்டுமோ செய்யலாம்' - என்று தீர்மானித்துக் கொண்டவனாய்க் கடிதத்தை மடித்துப் பைக்குள் போட்டான். பின்பு, ஒரு மாறுதலுக்கும் ஆளாகாமல் சுபாவமாகத் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான். வழக்கம் போல் பூர்ணா அவனை ஏவினாள். அதிகாரம் செய்தாள். அங்கே இங்கே போகச் சொல்லித் துரத்தினாள். பொறுமையுடனே சிரித்துக் கொண்டே அவைகளைச் செய்தான் அவன். வழக்கமாக மூன்று மணிக்கு அலுவலகத்தை விட்டுக் கிளம்பும் பூர்ணா, அன்று இரண்டரை மணிக்கே புறப்பட்டு விட்டாள். அவள் போவதைப் பார்த்து அவனாகத் தெரிந்து கொள்வானேயொழிய, போகும்போது அவனிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டோ, விடைபெற்றுக் கொண்டோ போகிற வழக்கம் அவளிடம் இல்லை. அன்று மாலை சபாரத்தினத்தைச் சந்தித்துத் தனியாகப் பேசவேண்டும் என்று அவன் எண்ணியிருந்ததால் சிக்கிரமே தன் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியேறக் கருதினான் அவன். பூர்ணாவின் நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டு அவள் செய்துவிட்டுச் சென்றிருந்த வேலைகளை ஒவ்வொன்றாகச் சரி பார்த்தான் அவன். கடிதங்கள், லெட்ஜர்கள், பைல்கள் ஒவ்வொன்றாகப் பார்த்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும் போல இருந்தது. அவன் பொறுமையாகக் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். மூன்றே முக்கால் மணிக்கு 'ஸ்பிரிங்' கதவி ஓசைப்பட்டது. நாற்காலியில் உட்கார்ந்தபடியே யாரென்று நிமிர்ந்து பார்த்தான். பூர்ணா நுழைந்ததைக் கண்டதும் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கையும் களவுமாக அவளுக்கு முன்னால் அகப்பட்டுக் கொண்டான் அவன். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் மொழிபெயர்ப்பாளர்: PSV குமாரசாமி மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஏப்ரல் 2019 பக்கங்கள்: 234 எடை: 250 கிராம் வகைப்பாடு : அறிவியல் ISBN: 978-93-89143-15-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 299.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நேரடியாக வாங்க : +91-94440-86888
|