4. கப்பல் புறப்படுகிறது அந்த நாட்களில் வியாபாரத்துக்காக அல்லது பணம் தேடுவதற்காக அக்கரைச்சீமை என்று செல்லமாக அழைக்கப்பட்ட இலங்கைக்குப் போவது எளிய செயலாக இருந்தது. பாஸ்போர்ட், விசா முதலிய தொல்லைகளெல்லாம் இல்லாத காலம் அது. தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு இரயிலேறுவது போலவே கொழும்புக்குக் கப்பலேறுவதும் சாதாரணமாக இருந்து வந்தது. ஆனாலும், 'கடலைக் கடந்து போதல்' என்ற எண்ணம் உணர்ச்சியளவில் ஒரு திகைப்பை உண்டாக்குவது வழக்கம். பிரமநாயகமும், அழகியநம்பியும் தூத்துக்குடிக்கு வந்து சேரும் போது மாலை நான்கு மணிக்கு மேல் ஆகியிருந்தது. பஸ்ஸில் பிரயாணம் செய்த சிலமணி நேரத்தில் அவர் பேசிய பேச்சுக்களும், பழகிய விதமும், அந்த மனிதரைப் பற்றி ஓரளவு நன்றாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை அவனுக்கு அளித்திருந்தன.
ஆள் குட்டையாக இருந்தாலும் மனிதர் முடுக்கிவிட்ட யந்திரம்போல வேகமாக நடந்தார். அவருடன் தொடர்ந்து நடக்க அவன் தன் இயல்பான நடையை வேகப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நடை ஒன்றில் மட்டுமல்ல; எல்லா வகையிலும் பிரமநாயகத்துக்குப் பக்கத்தில் தன்னைப் போன்ற ஒருவன் நடந்து செல்வது பொருத்தமற்றதாகத் தோன்றியது அழகியநம்பிக்கு. தூத்துக்குடி பஸ் நிலையத்தில் இறங்கி, பெட்டி படுக்கை மூட்டை முடிச்சுக்களை இரண்டு கூலிக்காரர்களிடம் பேசி ஏற்றிக்கொண்டு துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர் அவர்கள் இருவரும். அழகியநம்பிக்கு உடல் தளர்ந்திருந்தது. நடையில் உற்சாகமில்லை. காலையில் பதினோரு மணிக்குப் புறப்படுவதற்கு முன் ஊரில் சாப்பிட்ட சாப்பாடுதான். பஸ் தூத்துக்குடி வந்து சேருகிற வரை பச்சைத் தண்ணீர் கூட வாயில் ஊற்றிக் கொள்ளவில்லை. பிரமநாயகம் படு அழுத்தமான பேர்வழியாக இருந்தார். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதில் இரண்டு வகை உண்டு. அநாவசியத்துக்காகச் செலவழிக்காமல் இருப்பது ஒருவகை! அநாவசியத்துக்காக மட்டும் அன்றி அவசியத்துக்காகவும் செலவழிக்காமல் இறுக்கிப் பிடிப்பது இன்னொரு வகை. பிரமநாயகம் என்ற பணக்கார மனிதர் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவராக இருப்பார் போல் தோன்றியது. பணத்தை ஏராளமாகச் சேர்க்க வேண்டுமென்ற ஆவலும், சேர்க்கும் ஆற்றலும் உள்ளவர்களுக்கு அதைச் செலவழிக்கும் ஆற்றல் மட்டும் குறைந்திருப்பதற்குக் காரணம் என்ன? என்று சிந்தித்துக் கொண்டே நடந்தான் அழகியநம்பி. ஊரிலிருந்து புறப்படும் போது பிரமநாயகத்துக்கும் சேர்த்துப் பணம் கொடுத்து அவன் தான் டிக்கெட் வாங்கியிருந்தான். முறைப்படி அவர்தான் அவனை வேலைக்கு அழைத்துக் கொண்டு போகிறவர். டிக்கெட் அவனுக்கும் சேர்த்து அவர் வாங்கியிருக்க வேண்டும். அவர் அப்படிச் செய்யாதது அவனுக்கு வியப்பை அளித்தது. 'தம்பீ! நீயே டிக்கெட் வாங்கி விட்டாயா? அடேடே! என்னைக் கேட்டிருக்கலாமே?' என்று மரியாதைக்காகவாவது உபசாரமாக இரண்டு வார்த்தைகள் சொல்லுவார் என்று எதிர்பார்த்தான். அந்தப் பேச்சையே எடுக்கவில்லை அவர். பைக்குள் துழாவினான். சில்லறைக் காசுகளாக இருந்தவற்றை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் பன்னிரண்டே முக்காலணா தேறியது. பிரமநாயகத்திடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அப்படியே வெளிப்புறத்திலிருந்த ஓட்டலுக்குச் சென்று பசியைத் தணித்துக் கொண்டு வரலாமென்று தோன்றியது அவனுக்கு. அவரையும் உடன் அழைக்காமல் செல்வது நன்றாயிருக்குமோ என்று தயங்கினான். 'வாருங்கள்; சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு வரலாம்' - என்று தான் அவரை அழைத்தால் என்ன நினைத்துக் கொள்வாரோ என்று பயமாக இருந்தது. கோபித்துக் கொண்டு கூச்சல் போட்டால் என்ன செய்வது? கேவலம் பன்னிரண்டே முக்காலணாச் சில்லறைக்குச் சொந்தக்காரன் பன்னிரண்டு இலட்சத்துக்கு அதிபதியை உரிமையோடு காப்பி சாப்பிட அழைக்கலாமா? உயர்வு, தாழ்வு, மட்டு மரியாதை இல்லாமல் போய்விட்டதென்று அவர் திட்டுவாரோ என்னவோ? 'கை வறண்டு கிடக்கும் ஏழைக்குத்தான் அடுத்த விநாடியைப்பற்றிக் கவலைப்படாமல் இந்த விநாடியில் இருப்பதைச் செலவழித்து விட வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. பன்னிரண்டே முக்காலணாவில் இரண்டு பேர் காப்பி சிற்றுண்டி சாப்பிட்டு விடலாமென்று நான் நினைக்கிறேன். பன்னிரண்டு இலட்சத்துக்கு உரியவர் வயிற்றையும், பசியையும், பக்கத்திலிருப்பவனையும் மறந்து காரியத்தில் கண்ணாகச் சுங்கச் சாவடியின் வாசலில் நின்று கொண்டிருக்கிறார்.' - இதை நினைத்த போது அழகியநம்பிக்குச் சிரிப்புதான் வந்தது. உதடுகளுக்கு அப்பால் வெளிப்பட்டுவிடாமல் அந்தச் சிரிப்பை அடக்கிக் கொண்டு விட்டான். துறைமுகத்தில் சுறுசுறுப்பான நேரம் அது. ஐந்தேகால் மணிக்குக் கொழும்புக்குப் புறப்பட வேண்டிய கப்பல் ஒரு புறமும், நாலரை மணிக்குக் கொழும்பிலிருந்து வந்த கப்பல் ஒரு புறமுமாக நின்று கொண்டிருந்தன. ஏற்றுமதி, இறக்குமதி காரணங்களுக்காகக் கூடியிருந்த வியாபாரிகள், முத்துச் சலாபத்தில் சிப்பிகளை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் முத்துக் குளிப்பவர்கள், கப்பலில் வந்து இறங்கிச் சுங்கச் சோதனையை முடித்துக் கொண்டு வெளிவரும் பிரயாணிகள், சுமை தூக்கும் கூலிகள், போலீஸ்காரர்கள், துறைமுக அதிகாரிகள், - என்று பல்வேறு நிலையைச் சேர்ந்த மக்கள் அங்கே கூடியிருந்தனர். பல்வேறு விதமான குரல்கள் அங்கே ஒலித்தன. அந்த மாலை நேரத்தில் அந்தத் துறைமுகத்தில் ஒரு புதிய உலகமே தன் கண்களுக்கு முன்னே உருவாகித் தோன்றுவது போலிருந்தது அழகிய நம்பிக்கு. கடலின் நீல நெடும் பரப்பையும், அதற்கு இப்பால் வெண்மைக் கரையிட்டதுபோல விளங்கும் மணல் வெளியையும் ஒரு குழந்தை புதிய விளையாட்டுப் பொம்மைகளைப் பார்ப்பதுபோல் அவன் ஆர்வத்துடனே பார்த்தான். கடற்கரைப் பகுதிகளை அவன் இதற்குமுன் அதிகமாகப் பார்த்ததில்லை. எப்போதோ, அவனுக்கு இரண்டு வயதாகவோ, மூன்று வயதாகவோ இருக்கும்போது முடி இறக்குவதற்காக அவனைத் திருச்செந்தூருக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்களாம். அவன் தாயார் அடிக்கடி கூறுவாள். பிரமநாயகம் சுங்கச் சாவடிக்குள் நுழைந்து, அங்கிருந்த ஒரு அதிகாரியிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வெளியே திரும்பி வந்து, "தம்பீ! கப்பலில் வந்து இறங்கியவர்களை முதலில் சோதனை செய்து அனுப்பிய பின்புதான் உள்ளே போகிறவர்களைச் சோதனை செய்வார்களாம். அதுவரை சாமான்களைப் பார்த்துக் கொண்டு நீ இங்கேயே நின்று கொண்டிரு. நான் பக்கத்தில் ஒரு இடத்துக்குப் போய்விட்டு வருகிறேன்" - என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். "கொஞ்சம் பொறுங்கள். ஓட்டல்வரை போய்விட்டு வந்துவிடுகிறேன்," - என்று சொல்லிவிடத் துடித்தது அவன் நாக்கு. ஆனால், சொல்லவில்லை. அவனுடைய தலை அவனை அறியாமலே அவருக்குச் சாதகமாகச் சம்மதமென்று கூறுவது போல் அசைந்தது. பீப்பாய் உருளுவதுபோல விசுக்கு விசுக்கென்று நடந்து சென்ற பிரமநாயகத்தின் குறுகிய உருவத்தை ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டு நின்றான் அழகியநம்பி. அவர் யார்? அவரிடம் அவன் எதற்காகப் பயப்பட வேண்டும்? - அவனுக்கே புரியவில்லை. 'சொல்லிவிட வேண்டும், துணிவோடு சொல்லியே ஆகவேண்டும்' - என்று நினைக்கிறான். அவர் முகத்தைப் பார்த்ததும் மறந்துவிடுகிறான். எங்கும், எப்போதும், உலகம் முழுவதும் அடிமைத்தனம் என்ற ஒரு இழிந்த பண்பே இப்படிக் காரண காரியமற்ற ஒருவகைப் பயத்தினால் தான் உண்டாகிறதோ; என்று சிந்தித்தான் அவன். ஆனால், அவரிடம் அவனுக்கு ஏற்பட்ட பயத்துக்குக் காரணம் இல்லையென்று எப்படிச் சொல்லிவிட முடியும்? அவருக்குக் கீழே வேலை பார்த்து ஆளாவதற்குத்தானே அவன் போய்க் கொண்டிருக்கிறான்? அவருடைய தயவு அவனுக்கு வேண்டாமென்று சொல்லிவிட முடியுமா? அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்த அவன் அவர் நுழைந்த இடத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டான். துறைமுகத்து வாசலில் வலதுப் பக்கம் திரும்பி, அங்கிருந்த ஓட்டலுள் நுழைந்தார் பிரமநாயகம். மீன்வாடை, கடல் தண்ணீரின் முடை நாற்றம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அழகியநம்பி நின்றான். அவனுடைய கண்கள் ஓட்டலின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தன. அரைமணி நேரத்திற்குப் பிறகு ஏப்பம் விட்டுக் கொண்டே வாயில் வெற்றிலைச் சிவப்பு விளங்க ஓட்டலிலிருந்து வெளியேறி அவன் இருந்த இடத்தை நோக்கி வந்தார் பிரமநாயகம். அவருக்குத் தெரியும்படியாக நேருக்கு நேர் அவர் வருகிற திசையை எதிர்த்துப் பார்த்துக் கொண்டிருந்த அழகியநம்பி, அவர் ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறாரே என்று பார்வையை வேறுபுறம் திருப்பினான். அந்தப் பயம், தயக்கம் இவைகளில் எதுவுமே தன்னிடம் இருக்கக் கூடாதென்றுதான் அவன் எண்ணினான். ஆனால் அவை அவனிடமே மறைந்திருந்து சமயா சமயங்களில் வெளிப்பட்டுத் தொலைத்தன. பிரமநாயகம் வரும்போதே அவசரப் படுத்திக் கொண்டு வந்தார். "தம்பீ! நாழியாகிவிட்டது. கப்பல் புறப்படுவதற்கு இன்னும் முக்கால் மணி நேரம் தான் இருக்கிறது. வா; சாமான்களை ஆளுக்குக் கொஞ்சமாகத் தூக்கிக் கொள்வோம். உள்ளே சுங்கச் சோதனை முடிவதற்குக் கால்மணி நேரம் ஆகிவிடும்" - என்று சொல்லிக் கொண்டே வேகமாக வந்தார். பிரமநாயகத்தின் உண்மை உருவம் அழகியநம்பிக்குப் புரிந்துவிட்டது. அவன் பெரிதும் ஏமாற்றமடைந்தான். அவன் பிடித்த கிளை?... அது பலக்குறைவான முருங்கைக்கிளை என்பது சந்தேகமறத் தெரிந்துவிட்டது. கணநேரத்து ஆத்திரத்தில் அப்படியே, "சீ! நீயும் ஒரு மனிதனா?" - என்று கேட்டுவிட்டுப் பிரமநாயகத்தின் முகத்தில் காறித் துப்பவேண்டும் போல் தோன்றியது. துப்பிவிட்டு ஊருக்குத் திரும்பிப் போய் 'மூட்டை தூக்கியாவது பிழைக்கலாம்' - என்று எண்ணினான். தன்மானமும், மனக்கொதிப்பும், அப்படி எண்ணச் செய்தன அவனை. வெறும் எண்ணம்தான்! வெறும் கைத்துடிப்புத்தான். அடுத்த கணமே காரியவாதியாக, தன் எச்சரிக்கை மிக்க சராசரி மனிதனாக மாறினான் அழகியநம்பி. 'எந்த முன் கோபம் என்ற குணத்தை நான் வெறுக்கிறேனோ, அதே முன்கோபம் என்ற குணத்துக்கு நானே ஆளாகிவிடலாமா? பிரமநாயகம் செய்தது கேவலமான செயல்தான். ஆனால், நானும் என் எதிர்காலத்தில் ஒரு பகுதியும் எந்த மனிதரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறோமோ, அவரை இப்போதே பகைத்துக் கொள்வதில் பயன் இல்லை. பொறுமை எல்லோருக்கும் சாதாரணமாக வேண்டும். ஆனால், ஏழைக்கு அது கட்டாயமாக வேண்டும்.' அழகியநம்பி பசியைப் பொறுத்துக் கொண்டான். பிரமநாயகம் அவனுக்குத் தெரியாதென்று நினைத்துக் கொண்டு செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொண்டான். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு மூட்டை முடிச்சுக்களைச் சுமந்து அவரைப் பின்பற்றிச் சுங்கச் சாவடிக்குள் நுழைந்தான். வயிற்றுப் பசி, மனம், மானம் எல்லாவற்றையும் விட வாழ்க்கை பெரிதாகத் தெரிந்தது அவனுக்கு. சுங்கச்சாவடிக்குள் அவர்களுடைய சாமான்களைப் பரிசோதிப்பதற்கு அதிக நேரம் ஆகவில்லை. கால் மணி நேரத்தில் 'பார்த்தோம்' என்று பெயர் செய்தாற்போல் பரிசோதித்துவிட்டுக் கப்பலுக்கு அனுமதித்தார்கள். சுங்க இலாகாவில் வேலை பார்க்கும் பலருக்குப் பிரமநாயகத்தை நன்றாகத் தெரிந்திருந்தது. சிலர் அவரைப் பார்த்ததும் புன்னகை புரிந்தனர். இன்னும் சிலர் வணக்கம் செலுத்தினர். வேறு சிலர் ஒரு தினுசாகத் தலையை அசைத்தனர். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அர்த்தமும் குறிப்பும் இருப்பது போல் பட்டது அழகியநம்பிக்கு. பிரமநாயகத்தையும், அவரோடு தொடர்புடையவர்களையும், தொடர்புடைய நிகழ்ச்சிகளையும் உற்றுக் கவனிப்பது அவனுக்கு அவசியமான, தேவையான நிகழ்ச்சியாக இருந்தது. கப்பலுக்கு டிக்கெட்டுகள் அவரே வாங்கிவிட்டார். சாமான்கள் எல்லாம் ஏற்றப்பட்ட பின் பிரமநாயகமும் அழகியநம்பியும் ஏறிக்கொண்டனர். அன்றைக்குக் கொழும்புக் கப்பலில் அதிகக் கூட்டம் இல்லை. ஆண்களும் பெண்களுமாகத் தேயிலைத் தோட்டத்திற்கென்று கங்காணியாரால் அழைத்துக் கொண்டு போகப்படும் ஒரு சிறு கூலிக் கூட்டம், பட்டுக் கவுன் அசைந்தாடச் செவ்விதழ் திறந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்த இரண்டு ஆங்கிலோ - இந்திய யுவதிகள், இன்னும் சில பேர்கள். எல்லாம் சேர்த்துப் பார்த்தாலும் மொத்தம் இருபது, இருபத்திரண்டு பேருக்குமேல் இராது. கப்பல் புறப்படுமுன் அதற்குள்ளேயே இருந்த சிற்றுண்டிச் சாலைக்குள் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தான் அழகியநம்பி. சட்டைப் பையிலிருந்த பன்னிரெண்டே முக்காலணா, இப்போது நாலே முக்கால் அணாவாகக் குறைந்திருந்தது. மணி ஐந்து அடித்துப் பத்து நிமிஷம் ஆயிற்று. கப்பல் புறப்படுவதற்கான முதல் மணியை அடித்தார்கள். கப்பலின் சங்கு ஒலித்தது. வழியனுப்புவதற்காக வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராகக் கீழே இறங்கினர். நங்கூரம் அவிழ்க்கப்பட்டுக் கப்பல் கடலில் நகர்ந்தது. அழகியநம்பி கரைப் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய பிறந்த மண் சிறிது சிறிதாகப் பின்னுக்கு நகர்ந்தது. |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
எம்.ஜி.ஆர் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 452 எடை: 525 கிராம் வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு ISBN: 978-93-83067-11-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 333.00 தள்ளுபடி விலை: ரூ. 300.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திர வார்த்தையைக் கேட்டதும் மகுடிக்கு மயங்கும் பாம்பாக மாறிவிடுபவர்கள் தமிழக மக்கள். வெள்ளித்திரையிலும் சரி, அரசியல் களத்திலும் சரி, அவர் மட்டுமே வெல்லமுடியும்; அவரால் மட்டுமே வெல்ல முடியும் என்பது தமிழக மக்களின் பரிபூரண நம்பிக்கை. அதனால்தானோ என்னவோ, அவருடைய படத்துக்கு டிக்கெட் எடுக்கக் காட்டிய ஆர்வத்தை, அவருக்கு வாக்களிக்கும் விஷயத்திலும் கடைப்பிடித்தனர். அதுதான் அவரை வெற்றிக்கோட்டையின் உச்சியில் சென்று உட்காரவைத்தது. சினிமா, கட்சி, அரசியல், ஆட்சி என்று தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிக்கோட்டை எட்டிப்பிடித்தவர் எம்.ஜி.ஆர். அத்தகைய மனிதரின் வாழ்க்கையில் அரங்கேறிய அத்தனை அசைவுகளையும் முழுமையாகப் பதிவுசெய்வது என்பது அசாத்தியமான காரியம். அதைச் சாத்தியப்படுத்த பலரும் முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாமே “யானை தடவிய குருடன் கதை’ போன்றே முடிந்திருக்கின்றன. அதற்குக் காரணம், எழுத்தாளர்கள் அல்ல, எம்.ஜி.ஆரின் பிம்பம் அத்தனை உயரமானது. என்றாலும், எம்.ஜி.ஆர் என்ற ஆகப்பெரிய ஆளுமையின் முழுப்பரிமாணத்தையும் கொண்டுவர ஒருவரால் நிச்சயம் முடியும் என்று என்னுடைய மனம் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டே இருந்தது. அவர், மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பா. தீனதயாளன். பசித்த எம்.ஜி.ஆர், பரிதவித்த எம்.ஜி.ஆர், உழைத்த எம்.ஜி.ஆர், வீழ்ந்த எம்.ஜி.ஆர், வென்ற எம்.ஜி.ஆர், சாதித்த எம்.ஜி.ஆர், சறுக்கிய எம்.ஜி.ஆர், சர்ச்சைக்குரிய எம்.ஜி.ஆர், வாரிக்கொடுத்த எம்.ஜி.ஆர் என்று எம்.ஜி.ஆரின் அத்தனை அவதாரங்களையும் அழகுதமிழில் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் பா. தீனதயாளன். நேரடியாக வாங்க : +91-94440-86888
|