7. புதிய பூமி அழகியநம்பியின் கப்பல் பயணம் இன்பகரமாக இருந்தது. எடுத்த எடுப்பில் பிரமநாயகம் என்ற மனிதர் அவனைப் பொறுத்தவரையில் முழு ஏமாற்றமாக இருந்தார். இருந்தும் அவரை நம்பிக் கப்பலிலும் ஏறியாயிற்று. கடலைக் கடக்கவும் ஆரம்பித்தாயிற்று. கப்பலில் கவலையும், சிந்தனையுமாகக் கழிந்த அவன் நேரத்தையும் நினைவுகளையும் மாற்றி மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தனர் லில்லியும் மேரியும். நிழலுக்காக மரத்தடியில் சோர்ந்து உட்கார்ந்தவனுக்கு அன்றலர்ந்த சண்பகப் பூக்கள் இரண்டும் மரத்திலிருந்து காலடியில் உதிர்ந்தது போல மேரியும், லில்லியும் அந்தக் கப்பற் பிரயாணத்தில் அவனுக்குப் பழக்கமாயினர்.
"மறந்துவிடாதீர்கள். கப்பல் பழக்கம் கப்பலோடு போயிற்று என்று நினைக்கக்கூடாது. நாம் அடிக்கடி சந்தித்துப் பழகவேண்டும். அளவளாவ வேண்டும்" - இந்தச் சொற்கள் லில்லியின் வாயிலிருந்து வெளிவந்த போது உணர்ச்சித்துடிப்பு - உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொற்கள் வெளிவரும் போது இருக்குமே; அந்தத் துடிப்பு இருந்தது. மேரி அன்போடு அவனருகே வந்து அவனுடைய இரண்டு கைகளையும் தன் பட்டுக் கரங்களால் பற்றிக் கொண்டாள். "மறந்து விட மாட்டீர்களே!" - அதற்குமேல் அவளுக்குச் சொற்களே வாயில் வரவில்லை. ரோஜா மொட்டுக்களைப் போன்ற அந்த யுவதியின் செவ்விதழ்கள் துடித்தன. நான்கு விழிகள் அவனுடைய இதய அந்தரங்கத்தையே துழாவுவது போல் அவன் முகத்தை ஊடுருவிப் பார்த்தன. "அதுசரி! உங்கள் விலாசத்தை எங்களுக்குத் தரவில்லையே; சொல்லுங்கள். எழுதிக்கொள்கிறேன்" - என்று பையைத் திறந்து டைரியையும் பேனாவையும் கையில் எடுத்துக்கொண்டாள் மேரி. "இப்போது நான் போய் இறங்கப் போகும் விலாசத்தை நானே இனிமேல்தான் தெரிந்து கொள்ளவேண்டும். நான் மறுமுறை உங்களைச் சந்திக்கும்போது என் விலாசத்தை உங்களுக்குச் சொல்கிறேன்" - என்றான் அழகியநம்பி. அவர்கள் இருவரும் விடைபெற்றுக் கொண்டு சென்றனர். அழகியநம்பி சிறிது நேரம் அவர்கள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றான். "நன்றாயிருக்கிறதே தம்பீ! யாரோ கப்பலில் வந்தவர்களோடு இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தால் உருப்பட்டாற்போலத்தான்" - குரலின் கடுமை தாங்கமுடியாமல் பின்னால் திரும்பிப் பார்த்தான். பிரமநாயகம் உலகத்திலுள்ள ஆத்திரம், கோபம், அத்தனையையும் தம் முகத்தில் தேக்கிக் கொண்டு நின்றார். "ஒன்றுமில்லை! என்றாவது ஓய்வு இருக்கிறபோது ஒருநாள் அவர்களுடைய வீட்டுக்கு வரவேண்டும் என்றார்கள். 'சரி' என்று சொல்லி அனுப்பினேன்." "சரி! சரி! உனக்கும் வேறு வேலையில்லை. சாமான்களை எடுத்துக் கொண்டு கப்பலிலிருந்து இறங்குவோம்; வா! சுங்கச் சோதனையை முடித்துக் கொண்டு போவதற்குள் நேரமாகி விடும்" - என்று அதட்டினார் பிரமநாயகம். "அப்பா தம்பீ; அழகு! காந்திமதி அம்மனையும் நெல்லையப்பரையும் மனத்திலே தியானித்துக் கொண்டு வலதுபாதத்தை முன்னால் கீழே வைத்து இறங்கு..." என்று முன்னால் போய்த் தொலைவில் நின்று கொண்டு கத்தினார் பிரமநாயகம். அழகியநம்பி அவர் கூறியதைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டான். மண்ணில் மிதித்து நடப்பதற்காகத்தான் இரண்டு கால்களையும் இரண்டு பாதங்களையும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான். வலது, இடது என்று மனிதர்கள் தாங்களாகக் கற்பித்துக் கொண்ட பேதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்! சுங்கச் சாவடியில் சோதனை முடிந்தது. சாமான்களுடன் இருவரும் துறைமுகத்திற்கு வெளியே வந்தனர். துறைமுக வாசலில் நின்றுகொண்டு கண்களின் பார்வைக்கு எட்டிய வரை அந்தப் பெரிய நகரத்தின் தோற்றத்தைப் பார்த்தான் அழகியநம்பி. உயர்ந்த கட்டிடங்கள், பசுமையான மரங்கள், போக்குவரவு மிகுந்த பெரிய வீதிகள், வியாபாரச் செழிப்பும் கூட்டமும் நிறைந்து காணப்படும் கடைகள், மழைக்காலத்து நீர்போல மூலைக்கு மூலை பணம் புழங்கும் செல்வ வளப்பம்; அத்தனையும் அடங்கிய ஒரு பெரிய நகரம் அவன் கண்களுக்குத் தெரிந்தது. கார்களும், டிராம் வண்டியும், மக்கள் கூட்டமும் நிறைந்த ஒரு அகன்ற வீதியை எதிரே கண்டான். பிரமநாயகம் இரண்டு கூலிக்காரர்களைக் கூப்பிட்டுக் கூலி பேசிச் சாமான்களைத் தூக்கிவிட்டார். "தம்பீ! இங்கேயிருந்து நம்முடைய கடை இருக்கிற வீதி இரண்டு பர்லாங்குக்குள்ளே தான் இருக்கும். காலார நடந்தே போய்விடலாம்" என்றார். "சரி! நடந்தே போய்விடலாம்" - என்று தலையசைத்தான் அழகியநம்பி. அப்போது இடுப்பில் கைலியும் கலர்ச் சட்டையும் தலைப்பாகையும் அணிந்த ஒருவர் பிரமநாயகத்துக்கு முன்னால் வந்து வணங்கினார். அவன் அதுவரை கேட்டிராத மொழியில் பிரமநாயகத்திடம் சிரித்துக்கொண்டே ஏதோ கூறினார். உடனே பிரமநாயகமும் பதில் வணக்கம் செலுத்திவிட்டு அவர் விசாரித்த அதே மொழியில் அவருக்குப் பதில் சொன்னார். அந்தப் புதிய மனிதரிடம் விடைபெற்றுக் கொண்டு சிறிது தூரம் நடந்ததும், "இவர் நமது கடைக்குப் பக்கத்துக் கடைக்காரர். சிங்களவர், மிகவும் வேண்டியவர். நீ இன்னும் இரண்டொரு மாதங்களில் சரளமாகச் சிங்களம் பேசவும், புரிந்து கொள்ளவும் பழகிவிட வேண்டும். இங்கே வியாபாரத் துறையிலிருப்பவர்களுக்கு அது மிகவும் அவசியமானதாகும்" - என்று பிரமநாயகம் தாமாகவே கூறினார். அழகியநம்பி "ஆகட்டும்" - என்று தலையை ஆட்டினான். மக்கள் நடமாட்டமும், கார், சைகிள், மோட்டார் சைகிள், லாரி போக்குவரவுகளும் அதிகமான வீதிகளின் வழியே அவர்கள் நடந்து சென்றனர். ஆடம்பரமும் ஆரவாரமும் நிறைந்த அந்த வீதிகளில் அவன் பலரைச் சந்தித்தான். நீலமும், பச்சையுமாகக் குறுக்கே கட்டம் போட்ட கைலிகளை அணிந்த சிங்களவர்கள், நாலு முழம் வேட்டியும் அரைக்கைச் சட்டையும் அங்கவஸ்திரமும் அணிந்த தமிழர்கள், ஆங்கிலேயர்கள், சிங்கள யுவதிகள், ஆங்கில யுவதிகள், அத்தனை வகையினரையும், கலகலப்பும் கூட்டமும் நிறைந்த அந்த வீதிகளில் சந்தித்தான் அழகியநம்பி. வியாபார நிலவரங்கள் பற்றியும், கடைவீதிகளைப் பற்றியும், தம்முடைய கடையைப் பற்றியும் அங்கே அவன் பழக வேண்டிய நடைமுறைகளைப் பற்றியும் சுவையற்ற விதத்தில் சளசளவென்று ஏதோ சொல்லிக்கொண்டே வந்தார் பிரமநாயகம். "ஊரையும், கடைவீதிகளையும் பார்த்துக் கொண்டே நடந்து செல்ல முடியாதபடி தொணதொணக்கிறாரே," - என்று நினைத்துக் கொண்டே அவர் கூறுவனவற்றைக் கேட்பதுபோல நடந்தான் அழகியநம்பி. வீதி முடிந்து வேறோர் திருப்பத்தில் திரும்பும் போது அவர்கள் இறங்கிவந்த துறைமுகத்தின் மேற்பகுதிக் காட்சி தூரத்து ஓவியம் போல் தொலைவில் தெரிந்தது. அப்பப்பா! எத்தனை பெரிய பெரிய கப்பல்கள் கரும்புகையைக் கக்கிக் கொண்டு நிற்கின்றன? கப்பல்களின் கூம்புகளில் அசைந்தாடிப் பறக்கும் கொடிகளில் தான் எத்தனை விதம்? எத்தனை நிறம்? சிறிதும் பெரிதுமாக வானத்தை நோக்கித் துருத்திக் கொண்டிருக்கும் ஏணிகளைப் போல் எத்தனை 'கிரேன்கள்' (கப்பலில் சாமான்களை ஏற்ற, இறக்க, உதவும் கருவிகள்) காட்சியளிக்கின்றன? "பராக்குப் பார்த்துக் கொண்டே நடக்காதே; வேகமாக வா! நேரமிருக்கும் போது ஓய்வாக இன்னொருநாள் ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொள்ளலாம்." - பிரமநாயகம் குரல் கொடுக்கவே தன்னுடைய ஆர்வம் நிறைந்த பார்வையைத் துறைமுகத்தின் பக்கமிருந்து மீட்டுக்கொண்டு அவர் பின்னால் நடந்தான் அழகியநம்பி. உடன் வருபவர்களைத் துட்டுச் செலவில்லாமல் நடத்தியே கூட்டிக் கொண்டு போய்விடுவதற்காகப் போகுமிடத்தின் தொலைவைச் சரிபாதியாகக் குறைத்துச் சொல்லிவிடுகிற சாமர்த்தியமான வழக்கம் சிலரிடம் உண்டு. பிரமநாயகம் அதே வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார் என்று அழகியநம்பிக்கு விளங்கிவிட்டது. நாலு பர்லாங்குக்கு மேல் நடந்தும் அவருடைய கடை வந்தபாடில்லை. அப்பப்பா! வியாபாரம் என்றால் இப்படியுமா ஒரு வியாபாரம்? தெரு ஓரங்களிலும், நடைபாதைகளிலும் கூட விலையுயர்ந்த பொருள்களை விற்கும் கடைகள். விலையுயர்ந்த துணிமணிகளை எல்லாம் நடைபாதையில் குவித்துக் கொண்டு கூவிக் கூவி விற்றார்கள். அந்த நெடிக்கடியில் தெருவில் நடந்து செல்வது காட்டாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்துவது போல் கடினமாக இருந்தது. பழக்கப்பட்ட பிரமநாயகம் வேகமாக நடந்தார். அழகியநம்பியால் முடியவில்லை. சோர்வும் தயக்கமும் நிறைந்த குரலில் "இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும்?" - என்று முன்னால் நடந்து கொண்டிருந்த பிரமநாயகத்திடம் கேட்டான். "இதோ வந்துவிட்டதே; இந்த வீதியின் கோடியில் வலது புறமாகத் திரும்பினால் தென்சிறகில் முதல் கட்டிடம் நம்முடைய கடைதான்" - என்றார் அவர். அழகியநம்பி அவர் சுட்டிக் காட்டிய திசையில் கண்பார்வை செல்லுந் தொலைவு வரை பார்த்தான். அந்த வீதியின் திருப்பத்தை அடைவதற்கே குறைந்த பட்சம் இன்னும் அரைமைல் தொலைவு நடந்தாக வேண்டும் போலிருந்தது. சிறிதைப் பெரிதாகவும், பெரிதைச் சிறிதாகவும், சமயத்துக்கு ஏற்றாற் போலச் சொல்லிச் சாதிக்கும் திறன் வியாபாரிக்கு வேண்டும். பிரமநாயகத்திடம் அந்த அம்சம் போதுமானவரை இருப்பதை அழகியநம்பி உணர்ந்தான். தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே எதிரே சந்தித்த ஒவ்வொரு மனிதரிடமும் விலைவாசிகள் வியாபார நிலவரம் ஆகியவற்றைப் பொறுமையாக நின்று விசாரித்துக் கொண்டு தான் மேலே நடந்தார் அவர். வழியில் அவரைச் சந்தித்த ஒவ்வொரு தெரிந்த மனிதரும் அவரைப் போலவே வியாபார மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பதை அவரவர்கள் பேச்சிலிருந்து அழகியநம்பி அனுமானித்தான். 'உலகத்தில் எங்கும் ஒவ்வொரு மனிதனும், சொல், உணர்வு, சிந்தனை, செயல் ஆகிய யாவற்றாலும் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறான். வியாபார உலகிலிருப்பவர்களுக்கு வியாபாரம் தான் வாழ்க்கை. அரசியல் உலகிலிருப்பவர்களுக்கு அரசியல்தான் வாழ்க்கை. இலக்கிய உலகிலிருப்பவர்களுக்கு இலக்கியம்தான் வாழ்க்கை. வட்டக் கோட்டில் சுற்றி வருகிறவர்களுக்கு திருப்பமோ, மாறுதலோ ஏது?' விலையுயர்ந்த ஸ்நோ, வாசனைத் தைலம் ஆகியவற்றின் மணம் நாசித்துளைகளில் புகுந்து கிறக்கியது. எங்கோ பார்த்துக் கொண்டே சிந்தனையோடு பிரமநாயகத்துக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்தவன் போதையூட்டும் அந்த மணத்தால் கவரப்பட்டு பார்வையை நேர் எதிரே திருப்பினான். மெல்லிய நீலநிற வாயில் புடைவையும், பாப் செய்த கூந்தலும், தலைக்கு மேல் சிங்காரப் பட்டுக் குடையும், செம்மை நிறம் மினுக்கும் உதட்டுச் சாயம் பூசிய உதடுகளுமாக ஒரு சிங்களப்பெண் அவன் மேல் இடித்து விடாத குறையாக நடந்து வந்து கொண்டிருந்தாள். வாசனை ஆளை மயக்கியது. அழகியநம்பி தடுமாறினான். திடுக்கிட்டுப் பின்னுக்கு நகர்ந்து கொண்டான். தனக்கு வழிவிட்டு நகர்ந்து கொள்வதற்காக அவன் அடைந்த பரபரப்பையும், பதற்றத்தையும் பார்த்து அந்தப் பெண் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே மேலே நடந்து சென்றாள். அவனுக்கு வியப்பாக இருந்தது. அப்போது அவன் தெருக்கோடிக்கு வந்திருந்தான். "தம்பீ! இதுதான் நம்முடைய கடை. உள்ளே வா" - என்று கூறிக்கொண்டே ஒரு பெரிய கடைக்குள் நுழைந்தார் பிரமநாயகம். |
கேரளத்தில் எங்கோ? ஆசிரியர்: லா.ச. ராமாமிர்தம்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 70.00 தள்ளுபடி விலை: ரூ. 65.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
குழந்தைகள் நிறைந்த வீடு ஆசிரியர்: நா. முத்துக்குமார்வகைப்பாடு : கவிதை விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 95.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|