3. பிரமநாயகத்தின் கோபம் சொல்லிக்கொள்ள வேண்டியவர்களைப் பார்த்துச் சொல்லிக் கொண்டபின் பஸ் போக்குவரவு நிலவரங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்வதற்காக அழகியநம்பி பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான். மணி எட்டரை - ஒன்பது இருக்கலாம். வெயில் சுள்ளென்று உறைத்தது. குளக்கரையிலிருந்து, ஈர ஆடைகளை மாற்றிக் கொள்வதற்காகத் திரும்பவும் வீட்டுக்கு ஒருமுறை போயிருந்தான் அழகிய நம்பி. வீட்டில் போய் ஆடைமாற்றிக் கொண்டு, சட்டைப் பையில் நனைந்து போயிருந்த மணிபர்ஸின் ரூபாய் நோட்டுகளை வெயிலில் காயவைத்து எடுக்கும் வேலையைத் தங்கை வள்ளியம்மையிடம் ஒப்படைத்துவிட்டு அதன் பின்பே மற்றவர்களிடம் விடைபெற்றுக் கொள்வதற்குக் கிளம்பியிருந்தான். இதனால் நேரம் அதிகமாகியிருந்தது.
அதுதான் காந்திமதி ஆச்சியின் இட்டிலிக்கடை. அழகியநம்பி உள்ளே செல்வதற்காகப் படியேறினபோது, "தம்பீ! கொழும்புக்கு எப்போது பயணம்?" "அக்கரைச் சீமைக்கா?" "நல்லபடியாகப் போய்விட்டுக் கையில் நாலு காசு மிச்சம் பிடித்துக் கொண்டு வரவேண்டும்" - என்று இப்படியாகப் படியில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்களிடமிருந்து அன்பும், அனுதாபமும், ஆசியும், விசாரணையுமாக எழுந்த பல கேள்விகளுக்குச் சிரித்துக் கொண்டே பதில்களைச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான் அவன். சிறுமி கோமு திக்கித் திணறி ஆட்டுக்கல்லில் சட்டினி அரைத்துக் கொண்டிருந்தாள். பெரிய பெண் பகவதி அடுப்பிற்கருகில் இட்டிலித் தட்டுகளில் மாவை ஊற்றி வைத்துக் கொண்டிருந்தாள். எழுந்து நடமாட முடியாத காந்திமதி ஆட்சி நார்க்கட்டிலில் உட்கார்ந்தபடி, 'இதை இப்படிச் செய்! அதை அப்படிச் செய்!' என்று விபரம் சொல்லிக் கொண்டிருந்தாள். அழகியநம்பி உள்ளே நுழைந்ததை முதலில் பார்த்தவள் தட்டில் மா ஊற்றிக் கொண்டிருந்த அந்தப் பெண்தான். குழியில் மா ஊற்றுவதற்காக எழுந்த வளைக்கரம் அவனைக் கண்டதும் தயங்கியது. முகத்தில் ஆவலும் மலர்ச்சியும் போட்டி போட்டுக் கொண்டு பரவின. "ஆச்சி! இதோ அவர் வந்திருக்கிறார்." அந்தப் பெண் இனிய குரலில் ஆச்சிக்கு அவன் வரவை அறிவித்தாள். சின்னப் பெண்ணுக்குச் சட்டினி அரைக்கும் விதத்தில் ஏதோ யோசனை கூறிக் கண்டித்துக் கொண்டிருந்த ஆச்சி திரும்பிப் பார்த்தாள். "என்ன ஆச்சி? சௌக்கியமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டுக் கொண்டே சிரித்த முகத்தோடு கட்டிலுக்குப் பக்கத்தில் வந்து நின்றான் அழகியநம்பி. "ஊர் இருக்கிற நிலையில் இந்த மாதிரி அதிகாலையில் ஒன்றுமறியாத சிறு பெண்களை ஒரு குடம் தண்ணீருக்காகப் பெருகிக் கிடக்கிற குளத்துக்கு யாராவது தனியே அனுப்புவார்களா?" என்று ஆச்சியைக் கடிந்து கொள்வது போன்ற குரலில் கேட்டான் அழகியநம்பி. "எனக்குக் கையும் காலும் இருக்கிறபடி இருந்தால் இப்படிச் செய்வேனா தம்பி? உனக்குத் தெரியாததில்லை. என்ன பாவத்தைச் செய்தேனோ; என்னை இப்படி முடக்கிப் போட்டிருக்கிறானே?" - ஆச்சி அலுத்துக் கொண்டாள். "இன்றைக்கு நடந்ததைப் பற்றி மறந்து விடுங்கள். இனிமேலாவது கிணறு, குளம், என்று தண்ணீருக்குப் போகும் போது கவனமாக இருக்க வேண்டும்" - அழகிய நம்பி இதைக் கூறிவிட்டு காந்திமதி ஆச்சியிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்திருக்கத் தயாரானான். "இந்தா பகவதீ! தம்பிக்கு நாலு இட்டிலி கொண்டு வந்து வை." "இல்லை ஆச்சி! நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் வருகிறேன். நான் வந்த காரியத்தை மறந்து விட்டேனே? இன்றைக்குத் தூத்துக்குடிக்குப் புறப்பட்டுப் போய் நாளைக்கோ, நாளைக் கழித்து மறுநாளோ, கொழும்புக்குக் கப்பலேறுகிறேன். அம்மாவும், தங்கை வள்ளியம்மையும் இங்கே ஊரில்தான் இருக்கப் போகிறார்கள். இரண்டு வருஷமோ, ஏழு வருஷமோ எவ்வளவு காலத்துக்குப் பிறகு திரும்புவேனென்று எனக்கே தெரியாது. வீட்டையும், அம்மா, தங்கையையும் கவனித்துக் கொள்ளுங்கள்." அவன் இதைச் சொன்னதும் ஆட்டு உரல் ஓசை நின்றது. கரண்டியால் மாவூற்றும் ஓசை நின்றது. மூன்று திசைகளிலிருந்து ஆறு வேறு கண்கள் வியப்புடன் அவனை நோக்கின. பகவதி கோமு, ஆச்சி மூன்று பேரும் அவனை ஏறிட்டுப் பார்த்தார்கள். அடுப்பு எரியும் ஒலி, உலைநீர் கொதிக்கும் ஓசை, வாசலில் அரட்டைக் குரல்கள், இவைதவிர ஒரு கணம் பேச்சரவமற்ற அமைதி அங்கே நிலவியது. "இன்றைக்கே இங்கிருந்து புறப்படுகிறாயா தம்பி?" - அமைதியைக் கலைத்துக் கொண்டு ஆச்சி கேட்டாள். அதற்குப் பதில் சொல்வதற்காக அவன் வாய்திறந்த அதே சமயத்தில் ஒரு இலையில் சூடாக ஆவிபறக்கும் இட்டிலிகளை அவனுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தாள் பகவதி. "கோமு! இந்த மாமாவுக்குக் கெட்டிச் சட்டினியாகக் கொஞ்சம் கொண்டு வந்து போடு." - ஆச்சி கோமுவை ஏவினாள். பகவதி தண்ணீரையும் செம்பையும் பக்கத்தில் கொண்டு வந்து வைத்தாள். "இதெல்லாம் எதற்கு ஆச்சி? வீணாகச் சிரமப்படுத்திக் கொள்கிறீர்களே?" "பரவாயில்லை! உட்கார்ந்து சாப்பிடு! சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்." அழகியநம்பி கட்டிலிலிருந்து இறங்கி இலைக்கு முன்னால் உட்கார்ந்தான். கோமு முழங்காலுக்கு மேல் தூக்கிக் கட்டிச் சொருகிய பாவாடை நடையைத் தடுக்க, ஒரு கையில் எண்ணெய்க் கிண்ணமும், இன்னொரு கையில் சட்டினியுமாக அவனை நோக்கி வந்தாள். அவள் பாவாடையைத் தூக்கிச் சொருகிக் கொண்டிருந்த விதமும், தயங்கித் தயங்கி நடந்து வந்த நடையும் அழகியநம்பிக்குச் சிரிப்பு மூட்டின. உடனே அவன், "ஆச்சி! ஒரு காலத்தில் நான் கொழும்பிலிருந்து நிறையச் சம்பாதித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பினால் ஆண்டவன் புண்ணியத்தில் உங்கள் கோமுவைத்தான் கட்டிக் கொள்ளலாமென்றிருக்கிறேன்." - என்று கேலியாகச் சொன்னான். கோமுவுக்கு வந்த வெட்கத்தைப் பார்க்க வேண்டுமே! கெட்டிச் சட்டினியையும் எண்ணெய்க் கிண்ணத்தையும் அப்படியே அவனுடைய இலைக்கு முன்னால் வைத்துவிட்டு முகத்தை இரண்டு உள்ளங் கைகளாலும் பொத்திக் கொண்டு ஓடிவிட்டாள். இந்த வேடிக்கையான நிகழ்ச்சியைக் கண்டு காந்திமதி ஆச்சி, பகவதி, அழகியநம்பி, மூன்று பேரும் கிளப்பிய சிரிப்பின் ஒலி அலைகள் அடங்குவதற்குச் சில விநாடிகள் ஆயின. அழகியநம்பி காந்திமதி ஆச்சியின் இட்டிலிக் கடையிலிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியேறியபோது நேரம் சற்று அதிகமாகவே ஆகிவிட்டது. கூடத்து நிலைக்கதவைக் கடந்து வெளிவாசலுக்கு வருவதற்குள் உட்புறமிருந்து இரண்டு ஜோடிக் கண்கள் தன்னையே பார்த்துக் கொண்டு செயல் மறந்து நிற்பதை அழகியநம்பி உணர்ந்தான். வெளிவாசலில் இறங்கு முன் மனத்தில் ஒரு சிறிய சபலம் எழுந்தது. பின்புறம் திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண் பகவதியும் அவள் தங்கை கோமுவும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவர்களுடைய அந்தப் பார்வையில், அன்பா, ஏக்கமா, அல்லது அனுதாபமா, எது அதிகமிருந்தது என்பதைக் கண்டுபிடிப்பது அரிதாயிருந்தது. இருவர் பார்வைக்குள்ளும் வேறுபாடு இருந்தது. வளைக்குள்ளிருந்து மிரண்ட பார்வையோடு தலை நீட்டிப் பார்க்கும் முயல் குட்டி போற் பார்த்தாள் கோமு. பகவதியின் பார்வைக்கு என்ன பொருள் கற்பித்துக் கொள்ளலாமென்று ஆனமட்டும் முயன்று பார்த்தான் அழகியநம்பி. கெண்டை மீனைப்போலப் பிறழும் அந்த அழகிய நீள் விழிகளில் மிதக்கும் உணர்ச்சி என்னவென்று அவனால் புரிந்து கொள்ள முடியவே இல்லை. அவர் அருகில் வந்ததும் மரியாதைக்குக் கைகூப்பினான். பிரமநாயகம் அவனை ஏற இறங்கப் பார்த்தார். முகத்தைச் சுளித்தார். அவனுடைய வணக்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகப் பதில் வணக்கமோ, புன்முறுவலோ, அவர் செய்யவில்லை. அவர் மனத்தில் வெறுப்போ, கோபமோ, ஏற்பட்டிருக்கிறதென்று தீர்மானித்துக் கொள்ள அழகியநம்பிக்கு அதிக நேரமாகவில்லை. "துரை மகனுக்குச் சொன்னால் சொன்ன தேதிக்கு ஒழுங்காகக் கப்பலேறுவதற்கு வந்து சேர முடியவில்லையோ?" - குத்தலாகக் கேட்டார் பிரமநாயகம். "இங்கே ஒரு வாரமாக ஊரெல்லாம் ஒரே வெள்ளக்காடு. ஊரிலிருந்து நகர முடியவில்லை" - அழகியநம்பி அவருடைய இடிக்குரலுக்கு முன்னால் இரைந்து பதில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினான். அதற்கு மேல் பஸ் ஸ்டாண்டு போன்ற ஒரு பொது இடத்தில் நின்று கொண்டு அவனைத் திட்டவோ இரைந்து கொள்ளவோ முடியாதென்ற காரணத்தினால் பேசாமல் முன்னால் நடந்தார் அவர். ஏதோ பெரிய குற்றத்தைச் செய்துவிட்டுப் பின்னால் தலை குனிந்துகொண்டு போகிறவனைப் போலச் சென்றான் அழகியநம்பி. வீட்டில் அம்மாவுக்கு முன்னால் வைத்துக்கொண்டு தன்னை எப்படிக் கோபித்துக் கொள்வார், எப்படித் திட்டுவார் - என்பதை நடந்து கொண்டே கற்பனை செய்ய முயன்றான் அவன். பிரமநாயகம் முன்கோப சுபாவமுடையவர் என்பதும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. அவன் கற்பனை வீண் போகவில்லை. வீட்டிற்குள் நுழைந்ததும் தம்முடைய கோபத்தின் முழு உருவத்தையும் வெளிக்காட்டிச் சண்டையிடத் தொடங்கிவிட்டார். சண்டையென்றால் அடிபிடி சண்டையல்ல, வாய்ச் சண்டைதான். "ஏண்டா, மனிதனுக்குச் சொன்னபடி நடந்து காட்டத் தெரிய வேண்டாமா? வாக்கிலே நாணயமில்லா விட்டால் அவன் என்னடா மனிதன்?" - என்று அவனைப் பதில் சொல்ல விடாமல் பொரிந்து தள்ளினார். "நீங்கள் அவனைக் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. ஊரிலிருந்து பத்து நாட்களாக யாரும் வெளியேற முடியாமல் செய்துவிட்டது வெள்ளம். உங்களிடம் புறப்பட்டு வருவதாகச் சொல்லியிருந்த தேதியில் பிரயாணத்துக்குத் தயாராக எல்லா ஏற்பாடுகளையும் செய்துதான் வைத்திருந்தான் அவன்" - அழகியநம்பியின் தாயார் அவரைச் சமாதானப்படுத்துவதற்கு முயன்றாள். "எனக்கு வந்த ஆத்திரத்தில் நான் மட்டும் தனியாகக் கப்பலேறிப் போயிருப்பேன். கோபமும் கொதிப்பும் ஒருபுறம் இருந்தாலும் மனம் கேட்கவில்லை. வருகிறானா? இல்லையா? என்று நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொண்டு போய்விடலாமென்று தான் புறப்பட்டு வந்தேன்." "நீங்கள் வராவிட்டாலும் நான் இன்றைக்குப் புறப்பட்டு வந்திருப்பேன். இதோ பாருங்கள்; பெட்டி, படுக்கை மூட்டை முடிச்சுகளை எல்லாம் கட்டி வைத்திருக்கிறேன். பஸ் போக்குவரவு பற்றிய விவரங்களை விசாரிப்பதற்காகத்தான் உங்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்தேன்" - என்று சிறிது துணிவை வரவழைத்துக் கொண்டு அவருக்குப் பதில் கூறினான் அழகியநம்பி. "சரிதான்! உன்னைக் கோபித்துக் கொண்டு என்ன பயன்? ஊரில் வெள்ளம் வந்தால் அதற்கு நீ என்ன செய்வாய்? போனால் போகிறது. இன்றைக்குப் பகல் பன்னிரண்டு மணி பஸ்ஸிற்கு நாமிருவரும் புறப்பட வேண்டும். ஐந்தேகால் மணிக்குத் தூத்துக்குடியில் கப்பலேறி விடலாம்..." திடீரென்று கோபம் மாறி அனுதாபத்தோடு அவர் பேசியதைக் கேட்ட போது எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. இந்த ஒரு சிறிய நிகழ்ச்சியிலிருந்து அழகியநம்பி பிரமநாயகத்தைப் பற்றி ஒருவாறு புரிந்து கொண்டான். 'பிரமநாயகம்' குறுகிய காலத்தில் உணர்ச்சி வசப்படக்கூடியவர் என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. கோபம், தாபம், அன்பு, ஆத்திரம், அனுதாபம் யாவும் வேகமாக உடனுக்குடன் மாறி மாறி இடம் பெறக்கூடிய மனம் அவருடையதென்று தெரிந்து கொண்டான். அத்தகைய மனிதரோடு ஒவ்வொரு விநாடியும் நெருங்கிப் பழக வேண்டிய வாழ்க்கையை நோக்கித் தான் சென்று கொண்டிருப்பதை நினைத்த போது அவனுக்குப் பயமாகத்தான் இருந்தது. அம்மா பதினோரு மணிக்குள் அவசர அவசரமாகச் சமையல் செய்திருந்தாள். அழகியநம்பியும், பிரமநாயகமும் சாப்பிட்டு முடிக்கும் போது மணி பதினொன்றரை. சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு இருவரும் பஸ்ஸுக்குப் புறப்பட்டார்கள். விடைகொடுக்கும் போது அவன் தாய்க்கு அழுகையே வந்துவிட்டது. அவர்கள் இருவருடைய உருவமும் தெருக்கோடியில் திரும்புகின்றவரை அம்மாவும், வள்ளியம்மையும், கலங்கிய கண்களோடு வீட்டு வாயிலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். பிரமநாயகத்தோடு நடந்து கொண்டிருந்த அழகியநம்பி தெருக்கோடியில் காந்திமதி ஆச்சியின் இட்டிலிக்கடை வந்ததும் அதன் வாயிற் பக்கமாகத் திரும்பிப் பார்த்தான். யாரோ சொல்லிவைத்து ஏற்பாடு செய்தது போல அங்கே அந்தக் கண்கள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. பகவதி நின்று கொண்டிருந்தாள், கோமுவின் தலையும் தெரிந்தது. அந்த நான்கு விழிகளைச் சந்தித்த அவனுடைய இரண்டு விழிகள் அவற்றில் ஏக்கத்தைக் கண்டன. |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
மேற்கின் குரல் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2020 பக்கங்கள்: 112 எடை: 150 கிராம் வகைப்பாடு : இலக்கியம் ISBN: 978-93-87484-90-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் , ரே பிராட்பெரி, ஜார்ஜ் ஆர்வெல், மார்க்ரெட் யுவான் ரூல்போ, தன்பினார், கெவின் மெக்ரே எனப் புகழ்பெற்ற சர்வதேச எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தின் ரகசியங்களையும் எழுத்தாளர்களின் ஆளுமையையும் அறிந்து கொள்வதற்கு உதவி செய்கிறது இந்நூல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|