30. இருபது நாட்களில்... எல்லோரும் பாடிய அதே பல்லவியை முன்சீப் புன்னைவனமும் பாடியானர். "தம்பீ! நிலம் கிடைப்பதில் தகராறு ஒன்றும் இருக்காது. இன்றைக்குத் தபாலில் நான் இதைச் சிபாரிசு செய்து அனுப்பி விட்டால் இரண்டே நாளில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வந்து பார்வையிட்டுத் தீர்வை நிர்ணயம் செய்து விசாரித்துக் கொண்டு போய் நிலத்தை உனக்கு ஜாரி செய்யச் சொல்லி உத்தரவு அனுப்பச் செய்துவிடுவார். அந்தப்படுகை மேட்டுக்கு முழுதும் தீர்வையே வருஷத்துக்கு முந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வரும். வருஷம் தவறாமல் தீர்வையைக் கட்டிவிட்டு அந்த நிலத்தில் நீ என்ன பயனடைய முடியும். நிலத்தை ஒருமுறை ஜாரி செய்து வாங்கிக் கொண்டால் பிறகு நீ தலைகிழாக நின்றாலும் பட்டாவை மாற்ற முடியாது. உனக்கு விளைகிறதோ, விளையவில்லையே, தீர்வையைக் கட்டியாக வேண்டும்! இதையெல்லாம் நன்றாக யோசித்துப் பார்த்துக் கொண்டு அப்புறம் மனுவை என்னிடம் கொடு." - என்று அவன் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்த காகிதத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்தார் முன்சீப்.
இருவரும் பகல் உணவு நேரத்திற்கு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். சாப்பிடும்போது வழக்கமாக அதிகம் பேசும் அவன் அன்னை, அன்று பேசவே இல்லை. "நீங்கள் வெளியில் போன சிறிது நேரத்துக்கெல்லாம் பன்னீர்ச்செல்வம் வந்து தேடிவிட்டுப் போனார் அண்ணா!" - என்று வள்ளியம்மை அவனிடம் கூறினாள். அவர் எதற்காக வந்திருப்பாரென்று அவனால் அனுமானிக்க முடிந்தது. சாப்பிட்டு விட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, "அந்த நிலத்தில் எடுத்த எடுப்பில் நெல்லோ, வேறு தானியமோ பயிரிட வேண்டாம். முரட்டு உழவாக இரண்டு உழவு உழுது தக்காளி, முட்டைக்கோஸ், சீமை வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், - என்று இப்படிக் காய்கறி வகைகளாகப் பயிர் செய்தால் பத்தே மாதங்களில் பணத்தைக் குவித்து விடலாம்" - என்று இருந்தாற் போலிருந்து சொன்னான் முருகேசன். "உன்னை நம்பிக் காரியத்தில் இறங்கிவிட்டேன். பணத்துக்கு வழி செய்ய வேண்டியது உன் பொறுப்பு. என்னைக் கைவிட்டுவிடாதே!" - என்றான் அழகியநம்பி. அன்று மாலை மறுபடியும் அவர்கள் மலையடிவாரத்துக்குப் போய் அந்தப் படுகை மேட்டை நிதானமாகச் சுற்றிப் பார்த்தனர். நிலம் உரமுள்ளதாக - சத்து வாய்ந்ததாகவே தெரிந்தது. இடை இடையே இருந்த கற்களை அப்புறப்படுத்தி, மேடு பள்ளங்களைச் சரிசெய்து நிரவி உழுதுவிட்டால் தங்கமான நிலமாகிவிடும் என்று தோன்றியது. அவர்கள் எதிர்பார்த்தபடி இரண்டே நாட்களில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார். அவர் நிலத்தைப் பார்வையிடும் போது அழகியநம்பி, முருகேசன், முன்சீப் புன்னைவனம் ஆகியோரும் உடன் இருந்தனர். ரெவின்யூ இன்ஸ்பெக்டர் நல்ல மனிதராக இருந்தார். பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். மற்றவர்களைப் போல் அவநம்பிக்கையூட்டுவாரோ என்று அழகியநம்பிக்கு ஒரு பயம் இருந்தது. "சபாஷ்! உன் திட்டத்தையும் முயற்சியையும் பாராட்டுகிறேன். நீ வெற்றி பெறுவாய்." - என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் அவர். தன் நோக்கங்களை அவரிடம் விரிவாக எடுத்துக் கூறினான். "உன்னைப் போல் நம் நாட்டுப் படித்த இளைஞர்களில் நூற்றுக்குப் பத்துப் பேராவது முன் வந்திருந்தால் இந்த நாடு எப்போதோ உருப்பட்டு முன்னேறியிருக்குமே!" - என்று அவர் கூறியபோது அவனுக்குப் பெருமையாயிருந்தது. "நான் போய் உத்தரவு அனுப்பிவிடுகிறேன்!" - என்று சொல்லிவிட்டுப் போனார் அவர். மறுநாளே பணம் தயார் செய்வதற்காக அழகியநம்பியைக் கூட்டிக் கொண்டு முருகேசன் தென்காசிக்குப் புறப்பட்டான். தென்காசியில் அழகியநம்பி மூன்று, நான்கு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. முருகேசனும், அவன் தந்தையுமாக, அவனைக் கூட்டிக் கொண்டு பணம் படைத்தவர்களிடமெல்லாம் அலைந்தனர். கடைசியில் முக்கால் வட்டிக்குப் புரோநோட்டு எழுதிக் கொடுத்து மூவாயிர ரூபாய் கடன் வாங்கினர். கடன் கொடுத்த பணக்காரர் முருகேசனின் தகப்பனாருக்கு மிகவும் வேண்டியவர். அழகியநம்பிக்காகவோ, அவன் எழுதிக் கொடுத்த புரோநோட்டை நம்பியோ அவர் கடன் கொடுக்கவில்லை. முருகேசனின் தந்தையை நம்பியே கொடுத்திருந்தார். பணத்தைப் பெற்றுக் கொண்டு அவன் தென்காசியிலிருந்து புறப்படும்போது, "அடுத்த மாதம் நானும் நண்பர்களும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உல்லாசப் பிரயாணம் செய்யத் திட்டமிட்டிருப்பது பற்றி முன்பே உனக்குக் கடிதத்தில் எழுதியிருந்தேனே! நீயும் வரமுடியுமா?" - என்று கேட்டான் முருகேசன். "தெரிந்திருந்தும் கேட்கிறாயே? என்னுடைய உல்லாசப் பிரயாணமெல்லாம் இனிமேல் அந்த மலையடிவாரத்துப் படுகை நிலத்தின் மேல் தான். ஏற்கனவே நான் கடனாளி. இப்போது இன்னும் பெரிய கடனாளியாக மாறி 'மண்ணில்' பணத்தைப் போடுகிறேன். என் நம்பிக்கையை அந்த மண் காப்பாற்றுமோ? ஏமாற்றிவிடுமோ? எல்லாம் இனிமேல் தான் தெரியவேண்டும்." - என்று அவனுக்குப் பதில் சொன்னான் அழகியநம்பி. "கவலைப்படாமல் போய்க் காரியங்களைத் துணிவோடு செய். எல்லாம் வெற்றிகரமாக முடியும்." - என்று ஆறுதல் கூறினான் முருகேசன். "நீயும் உடன் வந்தால் நல்லது. எல்லா ஏற்பாடுகளையும் உன் யோசனைகளைக் கேட்டுக் கொண்டு செய்வேன். மறுபடியும் வந்து பத்து நாள் இருந்து விட்டுத் திரும்பலாமே?" - என்று அவனையும் உடனழைத்தான் அழகியநம்பி. "இப்போது எனக்குச் சௌகரியப்படாது! முடிந்தபோது பின்பொரு சமயம் வருகிறேன். அப்படி நான் வரும்போது உன்னுடைய ஆற்றுப் படுகையில் பசுமை குலுங்க வேண்டும்!" - என்று சிரித்துக் கொண்டே சொன்னான் முருகேசன். அழகியநம்பி விடை பெற்றுக் கொண்டு குறிஞ்சியூருக்குப் புறப்பட்டான். ஊரில் கிராம முன்சீப் அவன் வரவை எதிர்பார்த்துத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தார். "தம்பீ! படுகை நிலத்தை உன் பெயருக்கு ஜாரி செய்து உத்தரவு வந்திருக்கிறது. தீர்வைப் பணத்தைக் கட்டிப் பட்டா வாங்கிக் கொள்." - என்று அவன் போய்ச் சேர்ந்ததும் அவனிடம் கூறினார் அவர். உடனே அவன் தீர்வையைக் கட்டித் தன் பெயருக்குப் பட்டா எழுதி வாங்கிக் கொண்டான். இடையே பன்னீர்ச்செல்வம் வந்து தம் கடனுக்கு வழி சொல்லுமாறு மிரட்டினார். "பொறுத்துக் கொள்ளுங்கள்! தவணை முடிவதற்குள் உங்கள் கடனை எப்படியும் தீர்த்து விடுகிறேன்." - என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பினான். காந்திமதி ஆச்சி கூப்பிட்டனுப்பினாள். போனான். "என்ன தம்பீ! நான் அன்றைக்குச் சொல்லிய விஷயத்தை அம்மாவோடு கலந்து ஆலோசனை செய்தாயா? உங்கள் முடிவு என்ன? தெரிந்து கொள்வதற்காகத்தான் உன்னைக் கூப்பிட்டனுப்பினேன் நான்..." என்று கேட்டாள் ஆச்சி. ஆச்சிக்கு என்ன பதில் சொல்வதென்று தயங்கினான் அவன். திடீரென்று அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டைப் பையிலிருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து ஐந்து பச்சை நோட்டுக்களை எண்ணி வைத்தான். "ஆச்சி! ஐநூறு ரூபாய் இருக்கிறது. நான் கொழும்பிலிருக்கும் போது நீங்கள் என் தாய்க்குக் கொடுத்த கடனை அடைத்துவிட்டேன். எடுத்து எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்." "அடே! அசட்டுப் பிள்ளை; ... அதை யார் கொடுக்கச் சொல்லி அவசரப்படுத்தினார்கள் உன்னை இப்போது? நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் ஏதோ ரோஷப்பட்டுக் கொண்டு பணத்தை எண்ணி வைக்கிறாயே?" "இதோ பாருங்கள் ஆச்சி! உங்கள் பெண் பகவதியைத் தவிர வேறு யாரையும் நான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை. ஆனால், நீங்கள் இன்னும் ஒரு வருஷம் எனக்காகப் பொறுத்திருக்க வேண்டும். உங்களுக்குப் பொறுமை இருக்குமானால் அதுவரை காத்திருக்கலாம். இந்தப் பதிலைத் தான் இப்போது நான் உங்களுக்குச் சொல்ல முடியும்." "ஏன்? ஒரு வருஷம் என்ன செய்யப் போகிறாயாம்?" "அது உங்களுக்கே தெரியும்." "அந்தப் படுகை மேட்டு நிலத்தில் உழைப்பையும் பணத்தையும், வீணாக்கப் போகிறாயாக்கும்." "ஆச்சி! பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நான் வருகிறேன்." - அழகியநம்பி அவள் கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் விடைபெற்றுக் கொண்டு கிளம்பி விட்டான். கதவிடுக்கிலிருந்து அவனை நோக்கும் அந்தக் கண்கள் அன்றும் அங்கிருந்து அவனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தன. ஆனால், அவன் அவற்றைப் பார்க்கவில்லை. "மாமா! மாமா! உங்களை... உங்களை அம்மா கூப்பிடுகிறாள்" - என்று தெருவாசற்படி வரை அவனைத் துரத்திக் கொண்டு வந்தாள் கோமு. அவன் காதில் கேட்காதது போல் தெருவில் இறங்கி வேகமாக நடந்தான். "அம்மா! நான் கூப்பிட்டேன். அவர் பேசாமல் போய்விட்டார்." - என்று ஏமாற்றத்தோடு திரும்பி வந்து ஆச்சியிடம் கூறினாள் கோமு. "போனால் போகட்டும் போ." - என்று கோமுவுக்குச் சொல்லிவிட்டு, "அசட்டுப் பிள்ளை! தான் பிடித்தால் முரண்டு தான்." - என்று தனக்குள் கூறிக்கொண்டாள் ஆச்சி. "கோபித்துக் கொண்டு போகிறாரா அம்மா?" - தாயின் மனநிலை தெரியாமல் மறுபடியும் பேச்சுக் கொடுத்தாள் கோமு. "எப்படிப் போனால் உனக்கென்னடி! பேசாமல் போ உள்ளே." - என்று சிறுமியின் மேல் ஆச்சி எரிந்து விழுந்தாள். உள்ளே நின்று கொண்டிருந்த பகவதிக்கோ அழுகையே வந்துவிடும் போலிருந்தது. அந்தப் படுகை நிலத்து முயற்சியில் இறங்கிய நாளிலிருந்து அழகியநம்பிக்கு ஒரு வகையில் அல்ல; பலவகையில் மன வேதனைகள் ஏற்பட்டன. காந்திமதி ஆச்சியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு இட்டிலிக் கடைப் பக்கம் போவதே நின்றுவிட்டது. வீட்டில் அம்மா அவனோடு பேசுவதையே நிறுத்திக் கொண்டு விட்டாள். இருவருக்கும் பேச்சு வார்த்தை நின்று இரண்டு வாரத்துக்கு மேலாகிவிட்டது. ஊரில் பெரியவர்கள், - வயது வந்தவர்கள் அவனைப் பைத்தியக்காரன் போல் ஒதுக்கி நடத்துவது போன்று ஒரு பிரமை - ஒரு தாழ்வு மனப்பான்மை அவனுக்கு ஏற்பட்டது. சிலர் நேரிலேயே அவனைக் கேலி செய்தார்கள். இன்னும் சிலர் அவன் இல்லாத இடத்தில் கேலியும் ஏளனமும் செய்தார்கள். தெருவில் அவன் நாலு பேர் கண்களில் படும்படி நடந்து சென்றாலே அவனை ஒரு விநோதப் பொருளாகச் சுட்டிக் காட்டிச் சிரித்துப் பேசுகிற வழக்கம் அந்த ஊரில் ஏற்பட்டுவிட்டது. ஆனால், இவற்றாலெல்லாம் அவன் தளர்ந்து விடவில்லை. அவனுடைய நம்பிக்கை வெறியை - உழைப்பு வெறியை இவை வளர்த்து விட்டிருந்தன. அவன் மற்றவர்களிலிருந்து விலகித் தனியே ஒதுங்கினான். ஊரின் தோற்றத்தில் தனியே உயர்ந்து தெரியும் கோபுரம் போல் அவன் தனக்குத் தானே உயர்ந்து விளங்கினான். மறுநாளே அவனுடைய அசுர உழைப்பு அந்தப் படுகை நிலத்தில் ஆரம்பமாயிற்று. பக்கத்து ஊர் மாட்டுச் சந்தைக்குப் போய் எண்ணூறு ரூபாய்க்கு அருமையான காளைமாடுகளாகப் பார்த்து ஒரு ஜோடி பிடித்துக் கொண்டு வந்தான். ஏர், கலப்பை, மண்வெட்டி, கட்டைவண்டி, இந்த மாதிரி வகையில் ஒரு ஐநூறு ரூபாய் செலவாயிற்று. கிராமத்தில் அவனை நம்பி வந்து உழைக்க எந்தக் கூலியாளும் தயாராயில்லை. அதையெண்ணி அவனும் வருந்தவில்லை. 'பத்துக் கூலிகள் உடன் வந்து உழைத்தால் பத்து நாளில் பயிர் செய்து தண்ணீர் பாய்ச்சி விடலாம். தனியாகவே உழைத்தால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்; ஆகட்டுமே! நான் தனியாகவே உழைக்கிறேன். பத்தே மாதத்தில் இந்த மண்ணிலிருந்து பத்தாயிரம் ரூபாய் எடுக்கவில்லையானால் என் பெயர் அழகியநம்பியில்லை. இன்றைக்கு இந்தத் தொழிலில் பழக்கம் விட்டுப் போயிருக்கலாம்! என் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகப் - பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்த அதே வேளாண்மைத் தொழிலை நானும் ஏன் செய்யக் கூடாது? ஏன் செய்ய முடியாது? அதே வேளாளன் இரத்தம் தானே என் உடலிலும் ஓடுகிறது? அந்த இரத்தத்தின் சக்தியை இந்த நிலத்தில் உழைத்துக் காட்டுகிறேன்.' - நிலத்தில் இறங்கி வேலை செய்யும் முன் அவன் தனக்குத்தானே இப்படி ஒரு பிரதிக்ஞை செய்து கொண்டான். அந்த நிலத்திலிருந்த கற்களை அப்புறப் படுத்தவே முழுமையாக ஐந்து பகல்கள் அவன் தனியனாய் உழைத்தான். காலையில் ஒரு வாய் கஞ்சி குடித்துவிட்டு ஐந்து மணிக்குக் கருக்கிருட்டோடு வீட்டை விட்டுப் புறப்படுவான். பகல் சாப்பாட்டை வள்ளியம்மை வயலுக்குக் கொண்டு வந்து விடுவாள். கிராமத்துக்கு வந்த இருபத்தொன்றாவது நாள் காலையில் முதல் முதலாக அந்த நிலத்தில் ஏர் பூட்டினான் அவன். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
இதுதான் நான் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : சினிமா ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நாடறிந்த நடனக் கலைஞர், இயக்குநர், நடிகர் என்கிற பன்மைத்துவம் வாய்ந்த கலைகளில் கைதேர்ந்த ஒருவர் தனது தடங்களை நமக்கு அடையாளம் காட்டுகிறார். இது அவரது ஞாபகத் தடம்தான். இதை வாசிக்கிறவர்களையும் அந்தத் தடத்தில் சக பயணியாக்கிவிடுகிறது அவர் சொல்கிற செய்திகள். ஒரு சினிமா கலைஞர், யதார்த்த உலகுக்கு ஏற்ற வடிவில், உலகியல் தன்மையோடு தன்னை எவ்விதம் தகவமைத்துக்கொண்டுள்ளார் என்பதை இப்புத்தகத்தின் பல அத்தியாயங்கள் சுவையாகச் சொல்கின்றன. நேரடியாக வாங்க : +91-94440-86888
|