27 சிறையில் சிவகாமிநாதனைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பின், “இனிமேல் நீங்கள் நர்ஸிங்ஹோமில் படுக்கையில் தான் இருந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கட்டுப் பிரிக்கிற போது மட்டும் இங்கே நர்ஸிங்ஹோமுக்கு வந்தால் போதுமானது” என்று டாக்டர் முத்துராமலிங்கத்திடம் சொன்னார். அறை நண்பர் சண்முகம் அவனைத் தம்மோடு கோடம்பாக்கத்துக்கே வந்து விடச் சொன்னார். சிவகாமிநாதனின் மகன் பாண்டித்துரையும், மகள் கஸ்தூரியும் முத்துராமலிங்கத்தை நர்ஸிங்ஹோம் பக்கத்திலிருந்த காரணத்தால் சிந்தாதிரிப்பேட்டையிலேயே தொடர்ந்து தங்கச் சொன்னார்கள்.
அப்போ அவர்களுக்குப் பாதுகாப்பாகவும், பத்திரிகைக்குப் பாதுகாப்பாகவும் உடனிருக்க வேண்டியது அவசியம் என்று முத்துராமலிங்கத்துக்கே தோன்றியது. சிவகாமிநாதனுக்கு வாக்குக் கொடுத்திருப்பது நினைவு வந்தது. அவன் சிந்தாதிரிப்பேட்டையிலேயே தங்க முடிவு செய்தான். உதவி காமிராமேன் சண்முகம் இரண்டு மூன்று நாட்களுக்கு ஷூட்டிங் வேலைகள் எதுவுமில்லை என்று சொன்னதால், அவரையும் ‘தன்னோடு தற்காலிகமாகத் தங்க முடியுமா?’ என்று கேட்டான் முத்துராமலிங்கம். சண்முகம் அதற்குச் சம்மதித்தார். மங்கா தங்களோடு அந்த வீட்டில் தங்குகிற வரை தங்களுக்கு அவள் தந்தையான மந்திரியிடமிருந்து ஆபத்துக்களும், எதிர்ப்புக்களும் நிறைய இருக்குமென்று முத்துராமலிங்கத்துக்கும் மற்றவர்களுக்கும் நன்றாகப் புரிந்துதான் இருந்தது. ஆபத்துக்கோ, அபாயத்துக்கோ பயந்து, அடைக்கலம் புகுந்து வந்தவளைக் கைவிடுவதற்கும் அவர்கள் தயாராயில்லை. தான் தந்தைக்கு எதிராகப் புறப்பட்டு வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டதால் தான் அவர்களுக்கு இத்தனை தொல்லைகள் என்பதை மங்காவே மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருந்தாள். முதலிலேயே இதை எதிர்பார்த்து அநுமானித்த சிவகாமிநாதனின் தீர்க்கதரிசனத்தை இப்போது அவள் வியந்தாள். சண்முகம் இரண்டு மூன்று நாட்கள் சிந்தாதிரிப்பேட்டையில் முத்துராமலிங்கத்தோடு தங்கினாராயினும் வெளியிலே ஹோட்டலிலே போய்த்தான் சாப்பிட்டுவிட்டு வந்தார். வீட்டிலேயே சாப்பிட அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை. முத்துராமலிங்கத்துக்கு அவர் ஆறுதல் சொன்னார். “சினிமாவிலே வேலை போயிரிச்சேன்னு வருத்தப்பட வேண்டாம். என்னைப் போலொத்தவன் ஏதோ தாமரை எலைத் தண்ணி மாதிரி அங்கே இருந்துக்கிட்டிருக்கேன். உனக்கு இந்த ஃபீல்டு ஒத்துக்காதுன்னு நீ சேர்ந்தப்பவே நான் நினைச்சேன். தேனா இனிக்கிற சொளை உள்ளே இருந்தாலும் பலாப் பழத்தைப் பிரிச்சதும் சாக்கடைக்கு அடியிலேருந்து வர்ற மாதிரி அடிக்குமே ஒரு துர்வாடை, அதுபோல இந்த ஃபீல்டோட கவர்ச்சியிலிருந்து பிரித்து எடுக்க முடியாதபடி பொய், வஞ்சகம், ஏமாற்று, வேஷம், ஒழுக்கக் குறைவு, நாணயமின்மை, குழி பறிக்கிறது எல்லாம் சேர்ந்து நாத்தமடிக்கும். உன்னாலே இந்த நாத்தத்துலே காலந்தள்ள முடியாது.” “பாபுராஜ் எனக்குச் சீட்டுக் கிழிச்சதுக்காக நான் கொஞ்சங்கூட வருத்தப்படலே. ஊருக்குக் கொஞ்சம் பணம் அனுப்பிக்கிட்டிருந்தேன். இனிமே அதை அனுப்ப வழியில்லே! வேற வேலை கெடச்சுக் கையிலே மிஞ்சினாத் தான் அனுப்பலாம்.” “வேற வேலை கெடைக்கிற வரை நான் வேணும்னாப் பணம் தரேன். ஊருக்கு அனுப்பு, கெடைச்சதும் திருப்பிக் குடு. போறும். அனுப்பிக்கிட்டிருந்ததைத் திடீர்னு நிறுத்துவானேன்?” ‘நான் செய்கிறேன். நான் இருக்கிறேன். என்னால் தான் முடியும்’ என்பது போலெல்லாம் முனைப்போ செருக்கோ தெரியாமல் சகஜமாகவும், இயல்பாகவும் சண்முகம் தனக்கு உதவிகள் செய்ய முன்வருவதை நினைத்து முத்துராமலிங்கம் உள்ளூர வியந்தான். அப்படி உதவ முன் வருகிறவர்கள் இன்றைய சமூக அமைப்பில் மிக மிகக் குறைவாகவே தென்பட்டதுதான் காரணம். மறுநாளே டாக்டரின் முயற்சியால் சிவகாமிநாதன் விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்துவிட்டார். ஏற்கெனவே மங்காவும், முத்துராமலிங்கமும் மற்றவர்களும் நிறைவேற்றி வைத்திருந்ததால் ‘தியாகியின் குரல்’ தாமதமின்றி வெளிவந்தது. சிறையில் அதிக நாட்கள் வைத்தால் அது அவருக்குப் புகழ் தேடித் தரும் என்று கருதியோ என்னவோ தான் இரண்டொரு நாட்களில் சிவகாமிநாதனையும் அவர்கள் விடுதலை செய்துவிட்டிருந்தார்கள். சிந்தாதிரிப்பேட்டையில் அவர்கள் எந்த இடத்தில் கூட்டம் நடத்தினார்களோ, அதே இடத்தில் மந்திரி எஸ்.கே.சி.நாதனின் கட்சியும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. மந்திரிக்கு அடுத்தபடி இருந்த பேச்சாளர்கள் பட்டியலில் கலையரசி கண்மணியின் பெயரும் காணப்பட்டது. பொதுக் கூட்டத்தில் கலவரம் காரணமாகப் பேச இயலாமற் போன கருத்துக்களைத் தியாகியின் குரலில் தொடர்ந்து எழுதத் தொடங்கியிருந்தாள் மங்கா. “ஊழலின் உதாரண புருஷர்கள்” என்று அந்தக் கட்டுரைத் தொடருக்குத் தலைப்பு இடப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரைத் தொடர் ஆரம்பமான அந்த இதழ் ‘தியாகியின் குரல்’ பிரதிகள் எல்லாவற்றையும் ஆட்களையும் போலீஸையும் விட்டே விலைக்கு வாங்கிவிட்டார் எஸ்.கே.சி.நாதன். மந்திரியின் கூட்டம் நடைபெற இருந்த தினத்தன்று காலை யாரும் எதிர்பாராத விதமாகக் கண்மணி முத்துராமலிங்கத்தைத் தேடி வந்து சேர்ந்தாள். அவளோடு ஒரு பெரிய கும்பலே கூட வந்தது. சின்னி கூட அதில் இருந்தான். கசாப்புக் கடைக்காரர்கள் இராமலிங்க வள்ளலார் மன்றத்தைத் தேடி வந்த மாதிரி அந்தக் கூட்டம் சிவகாமிநாதனின் வீட்டைத் தேடி வந்திருப்பதைக் கண்டு சுற்றுப்புறம் ஆச்சரியத்தில் மூழ்கியது. தாக்க வந்திருக்கிறார்களோ என்று கூடச் சிலருக்குச் சந்தேகமாக இருந்தது. “அண்ணே, பத்திரிகையிலே சங்கதி பாத்ததிலேருந்து மனசு பதறிப் போச்சு! எந்தப் பாவி இப்பிடிப் பண்ணினான்” - என்று ஆறுதல் வினாவோடு அவனை அணுகினாள் கண்மணி. “வேற யாரு? எல்லாம் உங்க கட்சிக்காரங்கதான்! அடி, உதை, கலாட்டா, கல்லெறி, சோடா புட்டி வீச்சு, எல்லாத்தையுமே தேசிய நாகரிங்களாக்கினதே உங்க கட்சி தானே?” “அப்பிடியா சொல்றீங்க? நான் வேற மாதிரியில்லே கேள்விப்பட்டேன்? உங்க மேடையிலே எங்க கட்சி மந்திரியோட பொண்ணு பேசறேன்னு முன் வந்ததாலே உங்க தொண்டருங்களே கொதிப்படைஞ்சு ஆத்திரத்திலே எதிர்த்துக் கலாட்டாப் பண்ணிட்டாங்கன்னிலே சொன்னாங்க...?” இதைக் கேட்டு இன்னும் யாரென்று அறிமுகமாகாமல் அருகே நின்று கொண்டிருந்த மங்கா கண்மணையை முறைத்துப் பார்த்தாள். கண்மணியின் சிரிப்பும், கண்ணசைப்பும், விட்டுத் தெரிந்த கவர்ச்சிகளும், முத்துராமலிங்கத்திடம் அவள் காட்டிய அந்நியோந்நியமும் ஏற்கெனவே மங்காவுக்கு எரிச்சலூட்டியிருந்தன. பரஸ்பரம் ஏற்பட்டுவிடக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கடுமைகளைத் தவிர்ப்பதற்காக உடனே இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான் முத்துராமலிங்கம். “உங்க பேரு தான் கண்மணீங்கறதா? நீங்க இன்னிக்கு சாயங்காலம் எங்களை எதிர்த்துக் கூட்டத்திலே பேசப் போறீங்கன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காங்களே?” “ஆமா தங்கச்சீ! நானேதான். அரசியல் ரீதியாதான் அண்ணனுக்கு எதிர்ப்பக்கத்திலே இருக்கேன்... ஆனாலும் தனிப்பட்ட முறையில் அண்ணன் நம்ம ஏரியா ஆளுங்கறதாலே ஒரு ‘இது’ உண்டு.” அந்த ‘இது’வுக்கு என்ன அர்த்தம் என்று புரிந்து கொள்ள மங்கா மனதிற்குள் தீவிரமாக முயன்று கொண்டிருந்தாள். “அண்ணனைப் பார்க்க இங்கே தேடி வந்திருக்கேன்னு என்னோட கட்சி விசுவாசத்தைப் பத்தித் தப்புக் கணக்குப் போடாதீங்க... சாயங்காலம் கூட்டத்திலே வந்து கேட்டீங்கன்னா அண்ணனையும், தியாகி சாரையும் பிச்சுக் குதறிக்கிட்டிருப்பேன்.” பொறுமை மீறிச் சண்முகம் குறுக்கிட்டார். “எதுக்குக் கட்சி விசுவாசன், அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் பேசறீங்க... ரெண்டு பெரிய கள்ளச் சாராய கோஷ்டிகளுக்கு நடுவிலே சிக்கிக் கிட்டுத் திணறது நம்ப ஊரு! எதுக்கு உண்மையை மறைச்சிக்கிட்டு ரெண்டு பேரும் அநாவசியமா புத்தர் வேஷம் போட்டு ஊரை ஏமாத்தணும்?” “தியாகி சார் கட்சி நடத்தலே. தேர்தலுக்கு நிக்கலே... ஊரை ஏமாத்தலே... லஞ்சம் வாங்கலே. அதுனாலே தைரியமா மனசிலே பட்டதைச் சொல்றாரு.” “எங்க தலைவர் அப்படி இல்லே! நாங்க கொள்கைக்காகத் தீக்குளிக்கவும் தயார்.” “அதான் கொள்கைகள் எல்லாத்தையும் தீக்குளிக்க வச்சுச் சாம்பலாக்கிப் பத்துப் பதினாலு வருசம் ஆச்சே? இன்னும் என்ன மிச்சமிருக்கு இங்கே...?” “இதுக்கெல்லாம் பதில் சாயங்காலக் கூட்டத்திலே சொல்றேன்... கேட்டுக்குங்க...” கண்மணி உடம்பைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி முத்துராமலிங்கத்தை வேண்டி விடைபெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தாள். சண்முகம் அவள் போவதைப் பார்த்து மங்காவையும் முத்துராமலிங்கத்தையும் நோக்கி அர்த்த புஷ்டியுள்ளதாகச் சிரித்தார். சாயங்காலக் கூட்டத்தில் அமைச்சரும், கலையரசி கண்மணியும் வந்து முதலிலேயே மேடையில் அமர்ந்து விட்டார்கள். முதலில் கட்சியைச் சேர்ந்து நாலைந்து பேட்டை ரவுடிகள் பேசினார்கள். உபயோகப்படுத்தும் சொற்கள், மொழி நடை ஆகியவற்றின் தராதரம் முற்றிலும் மரத்துப் போகிற அளவிற்கு அவர்கள் பேசு முன் சாராயத்தில் மூழ்கி முக்குளித்து எழுந்து வந்திருந்தார்கள் போலிருக்கிறது. முத்துராமலிங்கத்தையும், தியாகியின் மகளையும் சம்பந்தப்படுத்தித் தாறுமாறாகப் பேசினார்கள். வீட்டிலிருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் எரிச்சலாயிருந்தது. தியாகி சிவகாமிநாதனின் குடும்ப விஷயங்களைக் கொச்சைப்படுத்திப் பேச்சுக்கள் தொடர்ந்தன. “அண்ணே, வாங்க போய் எலும்பை நொறுக்கிப் போட்டு வரலாம்” என்று கொதித்துச் சண்முகத்தையும் அழைத்தபடி எழுந்தான் முத்துராமலிங்கம். “பொறு தம்பீ, பதறாதே! தெரு நாய்களும், சொற் நாய்களும் குறைப்பதற்கு அஞ்சிச் சூரியன் அஸ்தமித்து விடுவதில்லை” என்று அப்போது அவனைத் தடுத்து உட்கார வைத்தார் சிவகாமிநாதன். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
எளிய தமிழில் சித்தர் தத்துவம் வகைப்பாடு : தத்துவம் இருப்பு உள்ளது விலை: ரூ. 195.00தள்ளுபடி விலை: ரூ. 175.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |