36 சிவகாமிநாதனின் கடன் பளுவை குறைப்பதற்காக அவர்கள் ஏற்பாடு செய்த நேரம் அவரது மணிவிழாச் சமயமாகவும் இருந்தது. பண்பட்ட அறிவாளிகளும் பெரியோர்களும் தங்கள் சொந்தக் கஷ்டங்களைப் புன்னகை மாறாத மலர்ந்த முகத்தாலும் பெருந்தன்மையாலும் உலகுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டு விடுகிறார்கள் என்பதற்கு அவர் சரியான உதாரணமாயிருந்தார். முத்துராமலிங்கமும், சண்முகமும், மங்காவும் பிற தொண்டர்களும் இராப்பகல் பாராமல் ஓடியாடி மிகவும் உழைத்தார்கள், உதவி நிதிக்கான நாடகங்களுக்கு டிக்கெட் விற்றார்கள். வசூல் செய்தார்கள். விழா ஏற்பாடுகளை கவனித்தார்கள். பம்பரம் போல் சுழன்று உழைக்கும் சேவகர் பட்டாளம் ஒன்று சிவகாமிநாதனுக்காகக் காத்திருந்தது. அவர்களுடைய ஒத்துழைப்பு இப்போது முத்துராமலிங்கத்துக்குப் பயன்பட்டது.
ஒவ்வோர் ஆரோக்கியமான ஜனநாயக நாட்டிற்கும் இப்படிச் சில எதிர்நீச்சல்காரர்கள் வேண்டுமென்று முத்துராமலிங்கம் முதலிய இளைஞர்கள் உறுதியாக நம்பினார்கள். இந்த எதிர்நீச்சல்காரர்களுக்கு உதவி இவர்களைக் கட்டிக் காக்க வேண்டும் என்று நினைத்தார்கள். நிதி உதவிக்கான நாடகங்கள் மூலமாகவும், பிற வசூல்கள் மூலமாகவும் சேர்ந்த தொகையை ஓர் எளிய விழாவில் தியாகி சிவகாமிநாதனிடம் அளித்தார்கள். அவர்கள் பாராட்டுவிழா, புகழுரை, மாலை, முகஸ்துதி இதெல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதால் அவற்றை அவர்கள் தவிர்த்திருந்தார்கள். “இன்றைய உலகில் மூன்று விதமான லஞ்சங்கள் அதிகக் கவர்ச்சியோடு வழங்கவும் விரும்பவும் படுகின்றன. பணம், பெண், புகழ் மூன்றையுமே இடமறிந்து பாத்திரமறிந்து லஞ்சமாகப் பயன்படுத்துகிறார்கள். நியாயங்களும், உண்மைகளும் இந்த லஞ்சங்களுக்குப் பலியிடப்படுகின்றன. நவீன உலகில் முகஸ்துதி என்பது, பாதி விபசாரமாகப் பயன்படுகிறது” என்று அடிக்கடி சிவகாமிநாதனே மனம் கசந்து கூறுவதுண்டு. அதனால் அவருக்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த மணிவிழாவை அவர்கள் மிக எளிமையாக நடத்தி முடித்தார்கள். வீடு அச்சகம் ஆகியவற்றை உடனே கடனிலிருந்து விடுவிடுத்து ஜப்தியாகாமல் காப்பாற்றினார்கள். பத்திரிகைக்காக ஓர் அச்சியந்திரம் வாங்கப்பட்டது. மறுமாதமே தம் மகள் கஸ்தூரிக்கு எளிய முறையில் திருமணம் முடித்தார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கம், மங்கா திருமணத்தைப் போலவே அதுவும் மாங்காடு கோவிலில் தான் நிகழ்ந்தது. பெங்களூரில் ஏதோ ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாணயமான நல்ல தொழிலாளி ஒருவனுக்குத்தான் தன்னுடைய மகளை மணமுடித்துக் கொடுத்திருந்தார் அவர். மகளைக் கணவன் வீட்டுக்கு அனுப்பிய பின்பு பத்திரிகை வேலைகளிலும், பொதுப்பணிகளிலும், போராட்டங்களிலும் தீவிரமாக இறங்கினார் அவர். இப்போது வீட்டில் அவருக்கு உதவியாக மகன் பாண்டித்துரையும், மங்காவும், முத்துராமலிங்கமுமே இருந்தார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மங்கா ஏற்றுக் கொண்டிருந்தாள். அரசாங்கத்தையும், ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் பத்திரிகையாக இருந்ததனால் ‘தியாகியின் குரல்’ பத்திரிகை பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. மங்கா தன் தந்தையாகிய மந்திரியின் ஊழல்களை விமர்சித்து எழுதுகிறாள் என்பது அந்தப் பத்திரிகையின் மேல் மக்களின் கவனம் திரும்புவதற்கான மற்றொரு புதிய காரணமாயிருந்தது. நாடு முழுவதுமே பொது நலனுக்காக உழைப்பவர்களின் தொகை குன்றிக் கட்சிகளின் நலனுக்காகவும் சுயநலனுக்காகவுமே உழைப்பவர்கள் பெருகியிருந்தார்கள். மக்கள் நலனை விடப் பதவி நலன் தான் எங்கும் எல்லாருக்கும் பெரிதாயிருந்தது. கட்சிகள் என்பவை கொள்ளைக் கூட்டங்களை போல் செயலாற்றிக் கொண்டிருந்தன. தன் கட்சிக்காரன் என்ன தவறு செய்தாலும் கொண்டாடின, எதிர்க்கட்சிக்காரனின் தவறுகளைப் பெரிதுபடுத்தின. தவறு செய்த தன்னவர்களைப் பாதுகாக்கும் நிரந்தர ஏற்பாடுகளாகவே சில கட்சிகள் இருந்தன. தவறு செய்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், ஊழல் புரிகிறவர்கள் எந்தக் கட்சியிலிருந்தாலும் கெட்டவர்களே என்ற முனைப்போடு செயல்பட்டது சிவகாமிநாதனின் இயக்கம், “நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே” - என்று அந்த நெற்றிக்கண் பார்வையின் சூட்டில் வெதும்பிக் கொண்டே நிமிர்ந்து நின்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தார்கள் அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் அதனால் இவர்களுடைய குற்றச்சாட்டால் பாதிக்கப்பட்ட அத்தனை தலைவர்களும் கட்சிகளும் இவர்களைச் சபிக்கவும் வெதுப்பவும், துன்புறுத்தவும் தீவிரமாக முனைந்தனர். சிவகாமிநாதனின் மணிவிழாவை அவர்கள் கொண்டாடிய ஐந்தாறு மாதங்கள் கழித்து முன்பே எப்போதோ அரசாங்கம் அவர் மேல் போட்டிருந்த ஒரு பொய் வழக்கு விசாரணைக்கு வந்தது. பத்திரிகைகள் அது பற்றி அன்றாடம் பரபரப்பாகச் செய்திகளை வெளியிட்டன. “மகாத்மா காந்தி தலைமையில் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் பிரிட்டீஷ்காரர்களை நான் எதிர்த்துப் போராடின போதும் சிறைவாசம் தான் எனக்குப் பரிசாகக் கிடைத்தது. என் போன்றவர்கள் போராடிப் பெற்ற சுதந்திர நாட்டிலும் இப்போது சிறைவாசம் தான் எனக்குப் பரிசாகக் கிடைக்கிறது.” பத்திரிகையையும் இயக்கத்தையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை முத்துராமலிங்கம், மங்கா, சண்முகம், மகன் பாண்டித்துரை ஆகியவர்களிடம் ஒப்படைத்து விட்டு சிறிதும் கலங்காமல் சிறைக்குச் சென்றார் அவர். நீதிமன்றத்திலிருந்து அவரைச் சிறைச்சாலைக்கு வழியனுப்பிவிட்டு முத்துராமலிங்கமும், மங்காவும், சண்முகமும், பாண்டித்துரையும் மற்றத் தொண்டர்களும் வீடு திரும்பிய போது நகரமே நிசப்தமாகி விட்டதுபோல் ஒரு பிரமை நிலவியது... வேலை தேடிச் சென்னை நகருக்குள் நுழைந்த முதல் தினத்தன்று இருந்த அதே உணர்ச்சி தான் இன்றும் முத்துராமலிங்கத்துக்குள்ளே இருந்தது. ஆயிரம் கைகள் முளைத்து அந்த ஆயிரம் கைகளாலும் அநீதியை எதிர்த்துப் போரிட வேண்டும். ஓயக் கூடாது. ஒழியக் கூடாது! வீழக் கூடாது. தாழக் கூடாது, தயங்கவும் கூடாது! தளரவும் கூடாது. சிவகாமிநாதனின் வழக்கு விசாரணைத் தீர்ப்பும் சிறைவாச விவரமும் வெளியாகி இருந்த அன்றைய மாலைத் தினசரியில் மற்றொரு பத்தியில், ‘இராயப்பேட்டை விபசார விடுதியில் நளினி என்னும் இளம்பெண் மண்ணெண்ணையை ஊற்றித் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை’ - என்ற செய்தியையும் முத்துராமலிங்கம் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. “நல்லதோர் வீணை செய்தே அதை நலங் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?” என்ற அந்த இனிய குயிற் குரல் அவன் நினைவில் மீண்டும் ஒலித்தது. அவளுடைய முகம், புன்னகை, சோகம் கலந்த பார்வை எல்லாமே அவனுக்கு நினைவு வந்தன. அதே விபசார விடுதி வாசலில் தலைவிரி கோலமாகக் கிழிந்த உடைகளோடு, “ஐயோ! என்னை விட்டுடு விட்டுடு கொன்னுப்புடாதே” - என்று அபலைகள், அநாதைகள், ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர்கள், வேலைகள் கிடைக்காமல் தவிப்பவர்கள் அனைவருமே அந்தப் பெருநகரம் என்கிற கலாசாரச் சுடுகாட்டில் மௌனமாகவோ அல்லது வாய்விட்டுக் கதறியோ, எதனிடமிருந்தோ, எதற்காகவோ, அஞ்சிப் போய் நிலை குலைந்து அந்தப் பைத்தியக்காரியைப் போல நிரந்தரமாக ஓடிக் கொண்டிருப்பதாக அன்று தன் மனத்தில் தோன்றியதையும் இப்போது இந்தக் கணத்தில் திரும்பவும் நினைத்துப் பார்த்தான் அவன். பின்பு வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடி ஒரு ஸ்டூடியோவுக்குள் நுழைந்த போது அங்கு ‘ரேப் சீனுக்காக’ நடந்து கொண்டிருந்த ஓர் ஒத்திகையைக் கண்டுவிட்டு, “இந்தப் பெருநகரத்தில் அரசியல், கலை, இலக்கியம் முதலிய சகல துறைகளிலும் அந்தந்தத் துறைகளின் நியாயங்களையும், உன்னதங்களையும் கற்பழிப்பதற்காக ஒரு திட்டமிட்ட ஒத்திகை இப்படித்தான் பல்வேறு மட்டங்களில் நடந்து கொண்டிருக்கிறதோ” - என்று தான் மனம் கொதித்து நினைத்ததையும் இப்போது எண்ணிப் பார்த்தான். என்ன காரணத்தாலோ முன்பு தான் தங்கியிருந்த அந்த இராயப்பேட்டை விடுதிக்குப் போய்விட்டு வரவேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. யாரிடமும் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லாமலே அவன் புறப்பட்டான். இராயப்பேட்டை விடுதி வாசலில் சின்னி தென்பட்டான். “என்ன? ‘உங்க ஆளை’ மறுபடி உள்ரத் தள்ளிட்டாங்க போல்ருக்கே?” என்று சிவகாமிநாதனின் சிரை வாசத்தைப் பற்றி விசாரித்தான் சின்னி. “எதைக் கேட்கிறே?...” “அதான்ப்பா... அந்தச் சேலத்துப் பொண்ணு நளினி... விஷயம்...?” “ஆமாம்பா...! முதல்லேருந்தே அது இந்த ‘லயன்லே’ ஸெட் ஆகலே... ரொம்பத் தகராறுதான்! கடைசியிலே இப்படி ஆயிப்போச்சு...” “கொஞ்சம் கூட வருத்தப்படாமச் சர்வசாதாரணமாச் சொல்றியே அதை? உனக்கு அக்கா, தங்கச்சி இருந்து அது இப்படி மண்ணெண்ணையெ ஊத்தி உடம்புல நெருப்பு வச்சுக்கிட்டுப் போயிருந்தா இப்படிச் சொல்வியா...?” “அதானோ என்னவோ... எனக்கு உடம் பெறப்பே இல்லேப்பா” - இதையும் மிகவும் சகஜமாகத்தான் சொன்னான் சின்னி. அவனையும் உடனழைத்துக் கொண்டு உள்ளே சென்று தீப்பெட்டி தீப்பெட்டியாகத் தடுக்கப்பட்டிருந்த அந்த விடுதி அறைகளில் அவளுடைய அந்த அறைமுன் அடையாளம் கண்டு தயங்கி நின்றான் முத்துராமலிங்கம். அங்கே அன்று அந்த அறையும், அதே வரிசையிலிருந்த மற்ற அறைகளும் சகலமும் சாவு வீடு போல் நிசப்தமாயிருந்தன. ஒரு குரூரமான சோக அமைதி நிலவியது. ஆளரவமே இல்லை. “இன்னும் பத்து நாளைக்கு இங்கே பேச்சு மூச்சு இருக்காது...” இது சின்னி. அந்த நிசப்தத்திலிருந்து தான் முன்பு ஒருமுறை ஒரு சிறிய சங்கீதம் பிறந்தது - ஒலித்தது - தன்னைச் சில விநாடிகள் மகிழ்வித்தது என்பதை நினைத்த போது முத்துராமலிங்கத்தின் கண்கள் நெகிழ்ந்தன. எங்கோ எப்போதோ, ஏதோ ஓர் அவசரத்தில் சந்தித்த கேட்ட ஒருத்தியின் குரலாக அதை அவன் மறந்துவிட முடியவில்லை. கவியுள்ளம் படைத்தவனாகிய அவன் மனம் குமுறியது. சின்னி தன்னிடம் ஏதோ விசாரித்ததை - வினாவியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே அங்கிருந்து வெளியேறித் தெருவுக்கு வந்தான் அவன். “ஐயோ என்னை விட்டுடு, என்னை விட்டுடு... கொன்னுப்புடாதே” - என்ற குரல் தெருவின் எதிர்ச்சிறகிலிருந்து கேட்டது. இப்போது அந்தப் பைத்தியம் தலைவிரிகோலமாக ஓடிக்கொண்டிருந்தாள். ஏற்கெனவே மயானமான அந்த நகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தும் இப்போது ஓசை ஓலியற்று அடங்கி நிஜம் மயானமாகவே ஆகிவிட்டது போல் அவனுக்குத் தோன்றியது. எல்லாவிதமான ஓசைகளிலிருந்தும் சப்தங்களிலிருந்தும் உடனடியாக விடுபட விரும்பிய அவனுக்கு அந்தச் சோக நிசப்தம் கற்பனையே ஆனாலும் அப்போது இதமாக இருந்தது. ஓசைகளைக் கொன்றபின் எஞ்சும் இதமான மௌனத்தையும் சப்தங்களை அழித்த பின் எஞ்சும் இலகுவான நிசப்தத்தையும் அந்தப் பலவீனமான வேளையில் ஒருகணம் அவன் மனம் தற்காலிகமாக நாடியது. ஓசையில் கரைந்து போவதை விட, இந்த மௌனத்தில் கரைந்து போவதை அந்த நொடியில் விரும்பினான் அவன். சப்தத்தில் கரைந்து உருத்தெரியாமல் போவதை விட நிசப்தத்தில் உருத் தெரியாமல் கரைந்து போவது நல்லதென்று அவன் எண்ணினான். ஆனால் எல்லாம் ஒரே ஒரு கணம் தான்! அடுத்த கணமே அவன் மனம் விசுவரூபம் எடுத்தது. அவன் நினைவுகள் உயர்ந்து நின்றன. ஆயிரம் கைகளை அடைத்து அவை அத்தனையாலும் நல்லவற்றுக்காகப் போராட தர்மயுத்தம் நடத்தத் தயாராக வேண்டுமென்று தன் ஞானத்தந்தையாகிய சிவகாமிநாதனுக்கு வாக்களித்திருப்பது அவனுடைய நினைவில் வந்து உறுத்தியது. ‘ஒவ்வொரு சோக நிசப்தமும் ஒரு கவிதையைக் கருக்கொண்டிருக்கிறது. ஒவ்வோர் அமைதியும் ஒரு சலனத்தைக் கருக்கொண்டிருக்கிறது. அதைத் துணிந்து கலைக்கிறவரை காத்திருக்க வேண்டும்’ என்ற மன எழுச்சியோடு அவன் வீடு திரும்பினான். அவன் சிந்தாதிரிப்பேட்டையை அடைந்து விட்டுப் படியேறிய போது உள்ளே வானொலியிலிருந்து ‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா... உறுதி கொண்ட நெஞ்சினாய் வா...” என்று பாரதியாரின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. வீட்டின் நிசப்தத்தை ஏற்கெனவே கலைத்திருந்த அந்த நம்பிக்கைச் சங்கீதம் இப்போது அவன் மனத்தின் நிசப்தத்தையும் முழுமையாகக் கலைத்தது. அவன், மங்கா, சண்முகம் முதலிய அனைவருமே அடுத்துச் செய்ய வேண்டிய செயல்களுக்காகத் தயாரானார்கள். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF திருமால் வெண்பா - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நல்லை வெண்பா - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF முதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF திருவிடைமருதூர் உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF மேகவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF பாண்டிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
நவீனன் டைரி வகைப்பாடு : புதினம் (நாவல்) இருப்பு உள்ளது விலை: ரூ. 240.00தள்ளுபடி விலை: ரூ. 220.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |