34 ஒரு கவிதையை எழுதியதற்காகச் சிறை சென்று மீண்ட அநுபவமும், தன்னை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் வார்த்தைகளாலேயே அந்தக் கவிதை வானளாவப் புகழப்பட்டிருந்ததும் முத்துராமலிங்கத்தைப் பிரபலமாக்கின. அவன் பெயர் எங்கும் பரவியது. அவனை இரசிகர்கள் சுற்றிச் சூழ்ந்தனர். பின்பு, காமிராமேன் சண்முகத்தின் உதவியால் புதிய தயாரிப்பாளர் ஒருவருடைய படத்துக்குச் சில பாடல்கள் எழுதினான் அவன். நன்றாக வாய்த்துவிட்ட காரணத்தால் படம் பிரபலமாகி வெளிவருவதற்குள் பாடல்கள் வெளிவந்து பிரபலமாகி விட்டன. பாடல்களுக்கு இருந்த வரவேற்பைப் பார்த்து வேறு சில தயாரிப்பாளர்களும் அவனைத் தேடி வந்தனர்.
இப்போது முத்துராமலிங்கம் மாதம் தவறாமல் ஊருக்குப் பணம் அனுப்பினான். அவனும் மங்காவும் தொடர்ந்து சிவகாமிநாதனோடு கூடவே வசித்தார்கள். அவருக்காக உழைத்தார்கள். பொழுது விடிந்து பொழுது போனால் பத்திரிகைக் கடன்களுக்கும் அரசாங்கமும் ஆளுங்கட்சியும் தம்மேல் ஜோடிக்கும் பொய் வழக்குகளுக்கும் பதில் சொல்லவே சரியாயிருந்தது அவருக்கு. அத்தனை சிரமங்களுக்கும் வேதனைகளுக்கும் நடுவிலும் கூடச் சிறுமை கண்டு பொங்கும் இயல்பும், தீமைகளைச் சாடும் கோபமும் குறையாமல் அவர் வாழ்ந்ததைக் கண்டு முத்துராமலிங்கம் அவரை வியந்தான். வணங்கினான். பாடல்களோடு இரண்டொரு படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதும் வாய்ப்பும் சண்முகத்தால் அவனைத் தேடி வந்தன. “உன்னை யார் யாரோ சினிமா ஆளுங்க கார்லே தேடி வராங்க. அவங்களை வாங்கன்னு உள்ளே கூப்பிட்டு உட்காரச் சொல்லக் கூட வசதி இல்லாத வீடு இது! இப்ப உன்னாலே உன் கால்லே நிற்க முடியும்னா நீ அடையாறிலேயோ, மைலாப்பூர்லியோ ஒரு தனி வீடு பார்த்துக்கிட்டு போகலாமே?” என்று மெல்ல ஆரம்பித்தார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கம் கறாராகப் பதில் சொல்லிவிட்டான். “முடியாது ஐயா! இங்கே தான் இருப்பேன். வசதியில்லாதப்ப இங்கே ஒண்டிக்கிறதும், கொஞ்சம் வசதி வந்தப்ப ஒண்டியிருந்த எடத்தை உதறித் தள்ளிட்டுப் போறதும் என்னாலே முடியாது... எனக்கு இங்கே ஒரு வசதிக்குறைவும் இல்லே. என்னைத் தேடி வர்றவன் இங்கே வந்தா வரட்டும்... வராட்டிப் போகட்டும். முத்துராமலிங்கமும், மங்காவும் தொடர்ந்து அங்கேயே இருந்தார்கள். வழக்கம் போல் அவருக்கு எல்லா விதங்களில் உதவினார்கள். எல்லா வேலைகளையும் சுபாவமாகச் செய்தார்கள். மந்திரி எஸ்.கே.சி.நாதன் எதைப் பற்றிய நிலைமைகளையோ கண்டறிந்து வர அமெரிக்காவுக்கு ஒரு மாதப் பயணம் போயிருந்தார். மந்திரியாக வந்ததுமே சர்க்கார் செலவில் இப்படி நாலு பிரயாணம் போவதுதானே நடைமுறை, அவர் ஊரில் இல்லாததால் இவர்களுக்கு அதிகத் தொல்லைகள் இருக்கத்தான் செய்தன. ஒருநாள் மாலை இருட்டிய பின் கிரீன்வேஸ் ரோட்டிலிருந்து அம்மா மங்காவைத் தேடி வந்து பார்த்துவிட்டுப் போனாள். வழக்கம் போல் தெருவில் காரிலிருந்தபடியே, டிரைவர் மூலம் அவளைக் கூப்பிட்டனுப்பித்தான் பேசினாள் அவள். வழக்கமான திட்டு, வசவு, சாபம் எல்லாம் முடிந்த பின், “அப்பா தான் ஊரில் இல்லையே? நாலு நாள் எங்க கூட வீட்டிலே வந்து இரேன்... நான் தனியா இருக்கேன்” என்று அம்மா ஆரம்பித்த போது, மங்கா கண்டிப்பாக அதற்கு மறுத்து விட்டாள். அமெரிக்காவிலிருந்து அப்பா திரும்பும் போது லண்டன் வந்து பர்மிங்ஹாம் போய் அண்ணனோடு ஒருவாரம் தங்கி விட்டு வரலாம் என்று அம்மா தெரிவித்தாள். மங்காவை எப்படியாவது நைச்சியமாகப் பேசி மனமிளகச் செய்து தன்னோடு வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் விட வேண்டுமென்று அவளுடைய அம்மா செய்த முயற்சி அவ்வளவும் வீணாகி விட்டது. “என்னடீ இப்படிக் கறுத்து முகமெல்லாம் குழி விழுந்து இங்கே பஞ்சத்தில் அடி பட்டவ மாதிரி ஆயிட்டியே? சரியாச் சாப்பிடறியா இல்லியா?” என்று அம்மா கேட்ட போது கூடத் தன்னைத் தாழ்வு உணர்வில் சிக்க வைக்க அவள் முயல்வதை மங்கா சரியாகப் புரிந்து கொண்டாள். “நான் நல்லாத்தான் இருக்கேம்மா! உன்னைப் பார்த்தாத்தான் எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கு?” “ஆமாண்டீ பேச மாட்டியா பின்னே? பறிகொடுத்ததாலே தானே இப்பிடிக் கண்ட கண்ட எடத்துக்கெல்லாம் நான் உன்னைத் தேடி அலைய வேண்டியிருக்கு!” “இன்னொரு வாட்டி அப்படிச் சொல்லாதேம்மா! முன்னே ஒரு வாட்டி கூட இது மாதிரித்தான் ‘கண்ட கண்ட எடம்’னு சொன்னே? நீயும் அப்பாவும் இருக்கிற எடத்தை விட இது ஒண்ணும் கொறைவான இடம் இல்லே, ஞாபகம் வச்சுக்கோ...” “பின்னே நீ பாட்டுக்கு கண்ட கண்ட இடம்னா என்ன அர்த்தம்?” அம்மா விடை பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தாள். சிறிது நேரத்துக்கெல்லாம் முத்துராமலிங்கம் கோடம்பாக்கத்திலிருந்து வந்தான். “மங்கா! இன்னிக்கு நான் கொஞ்சம் ஃப்ரீ! மறுபடி நாளைக்குக் காலைல தான் எனக்கு வேலை. கடற்கரைக்கு போயிட்டு வரலாமா?” இந்த மாதிரி ஓய்வு கிடைத்து அவன் இப்படி அவளைக் கேட்பதே அபூர்வம். அவள் மலர்ச்சியோடு சம்மதித்தாள். தியாகி சிவகாமிநாதன் அப்போது வீட்டில் இல்லை. வக்கீல் வீட்டுக்கு ஒரு வழக்கு விஷயமாகப் பேசப் போயிருந்தார். கஸ்தூரியும், பாண்டித்துரையும் மட்டுமே வீட்டிலிருந்தார்கள். கஸ்தூரியும் சமையலறையில் ஏதோ கைக்காரியமாக இருந்தாள். பாண்டித்துரை அச்சகத்தில் அச்சுக் கோத்துக் கொண்டிருந்தான். மங்காவும் முத்துராமலிங்கமும் அவர்கள் இருவரையும் கூடக் கடற்கரைக்குக் கூப்பிட்டுப் பார்த்தார்கள். “வீட்டைப் பூட்டிக்கிட்டுப் போறத்துக்கில்லே. யாராவது தேடி வருவாங்க... அப்பாவும் வக்கீல் வீட்டுக்குப் போயிருக்காரு... நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க... நாங்க வீட்டைப் பார்த்துக்கிறோம்” என்று மறுத்துவிட்டார்கள் அவர்கள் இருவரும். முத்துராமலிங்கமும் மங்காவும் கடற்கரைக்குப் புறப்பட்டார்கள். கடற்கரையில் கூட்டமே இல்லாமல் ஓர் ஒதுக்குப்புறமான மூலையைத் தேடி அவர்கள் அமர்ந்த போது இரவு எட்டு மணிக்கு மேலாகியிருந்தது. அன்று என்னமோ கடற்கரை அவர்களுக்காகவே ஒழித்து வைத்த மாதிரி இருந்தது. கூட்டமே இல்லை. தன் வீட்டிலிருந்து அம்மா தேடி வந்து விட்டுப் போனதை அவனிடம் சொன்னாள் அவள். அவள் வீட்டுக்குக் கூப்பிட்டதையும் தெரிவித்தாள். அமுத்தலாக அவன் பதிலுக்குக் கேட்டான். “உனக்கு இஷ்டம்னாப் போயிட்டு வர்றதுதானே!” “எனக்குன்னு தனி இஷ்டம் எதுவும் கிடையாது! உங்களுக்கு இஷ்டமில்லாதது எனக்கும் இஷ்டமா இராது. உங்களுக்கு இஷ்டம்னா அது எனக்கும் இஷ்டமாத்தான் இருக்கும்.” “உள்ளதைச் சொன்னா உங்கம்மாவோட நீ போகாததுலேதான் எனக்குத் திருப்தி மங்கா.” “அம்மா அப்பா மாதிரி மோசம் இல்லே. ஆனால் அந்த வீட்டுக்குப் போக எனக்கு இஷ்டம் கிடையாது. தந்திரமா அம்மா மூலம் கூப்பிட்டுக் கொண்டு போய் அங்கே வேற விதமா ஏற்பாடு பண்ணி, என்னை ஒரு ரூம்லே தள்ளிக் கதவைப் பூட்டினாலும் பூட்டிடுவாங்க.” “உங்க வீட்டைப் பத்தி நீயே இப்படிப் பயப்படும்படி அத்தினி மோசமா இருக்கு மங்கா அது! இல்லியா... என்ன நான் சொல்றது... சரிதானே...?” “எங்கப்பா வெளிநாடு போயிருந்தாலும் அவரை நம்பறதுக்கில்லே. இப்பிடித் தந்திரமா ஏற்பாடு பண்ணிட்டுப் போனாலும் போயிருப்பாரு...” “பின்னென்ன? தியாகி சார் மாதிரியா எல்லாரும் இருப்பாங்க?... நாம கஷ்டப்பட்டப்ப ‘எங்ககூடத் தான் இங்கே இருக்கணும்’னாரு. இப்ப நான் கொஞ்சம் சம்பாதிக்கிறதைப் பார்த்து, ‘நீ ஏன் இங்கே இருந்து சிரமப்படணும் அப்பா? தனியா ஒரு வீடு பார்த்துக்கிட்டுப் போகலாமே’ங்கிறாரு?” “ரொம்பப் பெரிய மனுஷன்...” “ஆனா உங்கப்பா மாதிரிச் சின்ன மனுஷங்களுக்குத் தானே இது காலமாயிருக்கு?” “...” அதன் பிறகு தியாகியின் குரல் பத்திரிகை, வரப்போகும் தியாகி சிவகாமிநாதனின் மணி விழாவை எப்படிக் கொண்டாடுவது போன்ற பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் இருவரும் கடற்கரையிலிருந்து புறப்பட்டார்கள். இப்போது அவர்கள் மனத்தில் எந்தக் கவலையும் எந்தப் பயமும் இல்லை. கடற்கரை உட் சாலையில் ஒரே ஒரு அம்பாஸிடர் காரும் சுற்றி நாலைந்து ஆட்களும் சிதறினாற் போல் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அந்தக் காரருகே நடந்த போது உள்ளே இருந்த டிரைவர் கார் ஹெட்லைட்டைப் போட்டு அணைத்தான். அடுத்த நிமிஷம் அந்த நாலைந்து பேரும் ஒன்று சேர்ந்து குபீரென அவர்களை வளைத்துக் கொண்டனர். இருவர் இடுப்பிலிருந்து கத்தியை எடுத்துக் காட்டி மிரட்டி, “மூச்சு விடக் கூடாது! நீங்க ரெண்டு பேரும் உடனே காரில் ஏறியாகணும்” என்றார்கள். மங்கா நடுங்கிப் போனாள். முத்துராமலிங்கம் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாமும் தைரியமாக நின்று தப்பும் வழியை யோசித்தான். சட்டைப் பையிலிருந்து மணிபர்ஸை வெளியே எடுப்பது போல் அதை மணலில் வேண்டுமென்றே நழுவ விட்டான். நழுவிய மணிபர்சை எடுக்கக் கீழே குனிவது போல் குனிந்து இமைக்கிற வேகத்தில் மணலை அள்ளி எதிரே நின்றவர்கள் முகத்தை நோக்கி வீசினான். இன்னொரு கையால் ஒருவனைக் காலை வாரி விட்டான். எல்லாம் படுவேகத்தில் நடைபெற்றன... அவனால் காலை வாரி விடப்பட்டு விழுந்தவனிடமிருந்து நழுவிய கத்தியைக் கையிலே எடுத்துக் கொண்ட முத்துராமலிங்கம் புயலாக மாறி அவர்களைத் தாக்கத் தொடங்கினான். அவர்களும் அவனைத் தாக்கினார்கள். அப்போது டூரிஸ்ட் பஸ் ஒன்று கடற்கரைச் சாலைக்குள் புகுந்து அங்கே வரவே முரடர்கள் காரில் ஏறிக்கொண்டு ஓட்டமெடுத்தார்கள். முத்துராமலிங்கம் அந்தக் கார் நம்பரைக் குறிக்க முயன்றான். அது மிக மங்கலாக இருந்ததால் பாதி நம்பர் தான் தெரிந்தது. நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் வகைப்பாடு : சிறுகதை இருப்பு உள்ளது விலை: ரூ. 60.00தள்ளுபடி விலை: ரூ. 55.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |