35 அவர்கள் இருவரும் கடற்கரை உழைப்பாளிகள் சிலையருகே மேலே ஏறி வந்திருந்தார்கள். “என்ன நடந்திச்சுப் பார்த்தியா? உங்கப்பா இன்னும் ஓய்ந்து அமைதியடைந்து விடவில்லை. வெளிநாட்டுக்குப் போயிருந்தாலும் நமக்கு ஆள் ஏற்பாடு பண்ணித் தொல்லை கொடுத்துக்கிட்டுத் தான் இருக்காரு...” “இந்த டூரிஸ்ட் பஸ் மட்டும் சமய சஞ்சீவியா வரலேன்னா நம்மைக் கடத்திக்கிட்டே போயிருப்பாங்க.” “என் உடம்பிலே உயிர் உள்ளவரை அப்படி நடக்க முடியாது. விடமாட்டேன் மங்கா.” அவன் குரலில் நிச்சயமும் இரும்பின் உறுதியும் ஒலித்தன. பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தின் அருகே சவாரி இறக்கி விட்டுவிட்டுக் காலியாகத் திரும்ப இருந்த ஓர் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி வீடு திரும்பினார்கள் அவர்கள். அவர்கள் வீடு திரும்பியபோது சிவகாமிநாதன் வீட்டில் இருந்தார். வழக்கமாக அவர் இரவு உணவை முடிக்கும் நேரத்துக்குமேல் ஆகியிருந்தும் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
“உங்க ரெண்டு பேரையும் பழி வாங்கற வேலையை ரௌடிகளிடம் ஒப்படைச்சிட்டுத்தான் உங்கப்பா வெளிநாடு போயிருக்கார் போலிருக்கு.” “எங்கப்பாவே ஒரு ரௌடிதானே ஐயா?” “கொஞ்சம் உயர்தரமான ரௌடிங்க பெரிய பெரிய பதவிகளிலே இருக்காங்க. சுமாரான ரௌடிங்க அவங்களுக்கு உதவிபுரியிற நிலையிலே இருக்காங்க. அதுதான் இன்னிக்கு இந்த நாட்டு நிலை. நீ சொல்றது சரிதான்.” “எங்கம்மா இங்கே தேடி வந்திருந்தப்பச் சொன்னாங்க! ‘தியாகியின் குரலை’ வாரம் வாரம் வரவழைச்சு அவரைப் பத்தி நான் எழுதற கட்டுரையை அப்பா இரகசியமாப் படிக்கிறாராம். ரொம்பக் கோபமாம்.” “இந்தச் சண்டை தகராறு அடிபிடி எல்லாம் நிற்கணுமானா நீ இனிமே அதை எழுதாம விட்டுட்டாலே போதும்னு எனக்குத் தோணுது.” கூறிவிட்டு அவளுடைய முகத்தை உற்றுப் பார்த்தார் சிவகாமிநாதன். அவர் தன்னுடைய உறுதியைச் சோதிக்கிறார் என்று தோன்றியது அவளுக்கு. “அவர் திருந்தறவரை அல்லது மக்கள் அவரது அசல் உருவத்தைப் புரிஞ்சுக்கறவரை அதை நான் நிறுத்தப் போறதில்லே...” என்று அவருக்கு அப்போது உறுதியாக மறுமொழி கூறினாள் அவள். முத்துராமலிங்கத்தையும், மங்காவையும் அதிகமான கவனத்துடனும் ஜாக்கிரதை உணர்வுடனும் இருக்குமாறு எச்சரித்தார் அவர். இரவு உணவு முடிந்த பின்னும் நெடு நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். மறுநாள் காலை கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போக வேண்டும் என்று முத்துராமலிங்கத்தை உடனழைத்தாள் மங்கா. முதல்நாள் இரவு கடற்கரையில் தங்களை காரில் கடத்திக் கொண்டு போக முயன்ற ரௌடிகளிடம் இருந்து தப்ப வழியருளும்படி அவள் கற்பகாம்பிகையை மனத்துக்குள் வேண்டிக் கொண்டிருந்தாளாம். அம்பிகையின் அருள் தான் அந்த வேளையில் ஒரு டூரிஸ்ட் பஸ்ஸாக வந்து தங்களைக் காப்பாற்றியது என்று அவள் நம்பினாள். அதனால் விடிந்ததும் உடனே போய் அங்கே அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அவளைத் தனியே அனுப்புவது பாதுகாப்பில்லை என்று அவனுக்குப்பட்டது. அவனும் அவசர அவசரமாக நீராடி உடை மாற்றிக் கொண்டு புறப்பட்டான். கோவிலில் அர்ச்சனை தரிசனம் எல்லாம் முடிந்து வலம் வரும்போது பிராகாரத்தில் தற்செயலாக அம்மாவைச் சந்திக்க நேர்ந்தது. எதிரெதிரே பார்த்துக் கொண்ட போது இருவருக்கும் ஒரு நிமிஷம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. இருவரும் சில விநாடிகள் அப்படியே திகைத்துப் போய் நின்று விட்டனர். தாய்க்கும் மகளுக்கும் நடுவே குறுக்கிட விரும்பாமல் முத்துராமலிங்கம் ஒதுங்கி நின்று கொண்டான். ஒருவேளை தான் மங்காவுடன் அருகே நின்றால் அவள் தாயின் கோபம் அதிகமாகலாம் என்ற தயக்கமும் அவன் மனதில் அப்போது இருந்தது. அவன் விலகி ஒதுங்கி நின்று கொண்டதற்கு அதுவும் ஒரு காரணம். அம்மா தான் முதலில் பேசினாள்: “நீ நல்லா இருக்கணும்னு தாண்டீ அம்மனை வேண்டிக்கிட்டேன்.” “உன் நல்லெண்ணத்துக்கு நன்றி அம்மா! ஆனா அது பலிக்குமா இல்லையான்னுதான் எனக்குச் சந்தேகமா இருக்கு. அப்பா என்னடான்னா எங்களைக் கடத்திக்கிட்டுப் போறத்துக்கும், உதைக்கறத்துக்கும், அடிக்கிறத்துக்கும் ரௌடிப் பசங்களை ஏற்பாடு பண்ணித் துரத்திக்கிட்டிருக்காரு. நீ நினைக்கிறது நடக்குமா, அவர் நினைக்கிறது நடக்குமான்னு தெரியலே!” என்று தொடங்கி முந்திய இரவு கடற்கரையில் நடந்ததை விவரித்தாள். கேட்டு முடிந்ததும் அம்மா அழத் தொடங்கிவிட்டாள். “தனியா எங்கேயும் போகாதே! ஜாக்கிரதையா இரு. உடம்பைக் கவனிச்சுக்க” என்று ஜபம் பண்ணுவது போல் திரும்பத் திரும்பக் கூறிவிட்டுப் போனாள் அம்மா. அம்மாவை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு வந்து முத்துராமலிங்கத்துடன் சேர்ந்து கொண்டாள் மங்கா. கபாலீஸ்வரர் கோயிலிலிருந்து வீடு திரும்பும் போது அம்மாவுக்கும் அப்பாவின் போக்குகள் பிடிக்கவில்லை என்று முத்துராமலிங்கத்திடம் விவரித்துக் கொண்டு வந்தாள் மங்கா. அவன் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மங்காவிடம் சொன்னான்: “பதவியில் இல்லாத காலத்துக்குப் பணம் சேர்த்துக் கொள்வதற்காகப் பதவியைப் பயன்படுத்துவது என்பது இங்கு ஒரு வழக்கமாகவே வந்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாக உன் தந்தை இதில் இன்று முன்னணியில் இருக்கிறார்.” அவர்கள் கோயிலிலிருந்து வீடு திரும்பிய போது சிவகாமிநாதனிடம் யாரோ ஒரு சேட் வாயிலிலேயே நின்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். “பணத்துக்கு வழி சொல்லலேன்னா பிராப்பர்ட்டி மேலே அட்டாச் பண்ணி இந்த வீட்டை ஜப்திக்குக் கொண்டாந்துட வேண்டியதுதான்” என்று இரைந்து கொண்டிருந்த அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார் சிவகாமிநாதன். சேட் போகிறவரை ஒதுங்கி நின்றிருந்த முத்துராமலிங்கம் அந்த சேட் எதற்காக இரைந்துவிட்டுப் போகிறார் என்று சிவகாமிநாதனிடமே விசாரித்தான். அவர் பதில் சொல்லாமல் மழுப்பினார். “உனக்கு எதற்கு அதெல்லாம்? என் சிரமங்களைக் கூடிய வரை நான் பிறரிடம் சொல்கிற வழக்கமில்லை.” “என்னையோ, மங்காவையோ, சண்முகத்தையோ நீங்க அந்நியமா நெனைக்கக் கூடாது ஐயா! காரணம், நாங்க உங்களை ஒரு விநாடி கூட அந்நியமா நெனைக்கிறதில்லே...” “நீங்க அப்படி நெனைக்கலேங்கிறதுக்காக என் கஷ்டங்களை எல்லாம் உங்க தலையிலே திணிக்கிறது நியாயமா இருக்காது அப்பா!” “உங்க கஷ்டங்களை நீங்க எங்களுக்குச் சொன்னா அதைச் சுமக்கிறதிலே எங்களுக்கும் பங்கு உண்டுன்னு அந்தச் சுமையைச் சந்தோஷமா நாங்க ஏத்துப்போம் ஐயா! தயவுசெய்து சொல்லுங்க...” “பிரஸ், வீடு எல்லாத்து மேலேயும் கடன் இருக்கு. எல்லாத்தையும் ஏலத்துக்குக் கொண்டாந்துடுவேன்னு தான் கூப்பாடு போட்டுட்டுப் போறான்.” முத்துராமலிங்கத்துக்கு அவர் கூறிய செய்தி வேதனையளிப்பதாக இருந்தது. தேசபக்தியும், பொதுத்தொண்டும் வீசை என்ன விலை என்று கேட்கக்கூடிய சந்தர்ப்பவாதிகளான பலர் கோடி கோடியாகப் பணம் பண்ணக்கூடிய காலத்தில் சிவகாமிநாதன் போன்ற சத்ய விவசாயிகள் வீடு வாசலைக் கடனுக்குப் பறி கொடுக்கக் கூடிய நிலையில் இருப்பது நெஞ்சைப் பிழிந்தது. என்ணத்தை உருக்கி அழ வைத்தது. அரசாங்கம் தானே அவருக்குத் தியாகிகளுக்குரிய மாதாந்திரப் பென்ஷன் கொடுக்க முன் வந்து விவரங்களை விசாரித்த போது கூட, “என் தியாகம் நாட்டுக்காக நானே விரும்பிச் செய்த தொண்டு ஆகும். அதற்கு விலை தர உங்களுக்கும் தகுதியில்லை. பெற எனக்கும் விருப்பமில்லை” என்று கடுமையாக மறுத்துப் பதில் எழுதிவிட்டார் அவர். விலை மதிக்க முடியாத உயர்ந்த சாதனைகளைச் சுலபமாக அவமதிக்கும் வழி அதற்கு மிகவும் மலிவான ஒரு விலையை நிர்ணயிக்க முயல்வது தான்” - என்று சிவகாமிநாதனே அடிக்கடி கூறுவது உண்டு. அன்று மாலையிலேயே முத்துராமலிங்கமும் காமிராமேன் சண்முகமும், வேறு சில நண்பர்களும் ஓரிடத்தில் சந்தித்து ஆலோசனை செய்தார்கள். அன்றே எல்லாருமாக முடிவு செய்து சில உதவி நாடகங்கள் மூலம் தாங்களே முயன்று பெரிய அளவில் டிக்கெட் விற்பனை செய்து அவருக்குக் கணிசமாக ஒரு நிதி திரட்டிக் கொடுத்துக் கடன்களை அடைக்கத் திட்டமிட்டனர். சில நாடகக் குழுக்களின் தலைவர்கள் சிவகாமிநாதன் மேல் அபாரபக்தி வைத்திருந்தனர். அவர்கள் இந்த ஏற்பாட்டுக்கு உடனே இசைந்தனர். ‘சிவகாமிநாதன் இப்படி நிதி வசூலை ஏற்பாரோ மாட்டாரோ’ என்ற சந்தேகத்தை மட்டுமே அவர்கள் முதலில் தயக்கத்தோடு தெரிவித்தார்கள். அவர் ஏற்பதாக இருந்தால் அவருக்கு உதவுவதைப் போல் தங்களுக்கு மனநிறைவு அளிக்கும் காரியம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதையும் உற்சாகமாகத் தெரிவித்தனர். ‘தியாகியின் குரல்’ உதவி நாடகங்களுக்கு ஏற்பாடாயிற்று. சண்முகமும் முத்துராமலிங்கமும் மங்காவும் டிக்கெட் விற்பனையில் முழு மூச்சாக இறங்கினார்கள். எப்படியோ விவரம் அறிந்து தியாகி சிவகாமிநாதன் அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்தார். கடிந்து கொண்டார். “இது எனக்குப் பிடிக்கவில்லை! இப்படி எல்லா அரசியல் கட்சிகளும் செய்கின்றன. எனக்காகவும் இப்படி மடிப்பிச்சை எடுக்கக் கிளம்புகிறீர்களே?” முத்துராமலிங்கமும், சண்முகமும், மங்காவும் பல மணி நேரம் விவாதித்து அவரை அதற்குச் சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது. அவர்களுடைய வற்புறுத்தலுக்கும், விவாதத்துக்கும் பிறகு வேண்டா வெறுப்பாக அவரும் அதற்குச் சம்மதித்திருந்தார். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
பொன்னி வகைப்பாடு : புதினம் (நாவல்) இருப்பு உள்ளது விலை: ரூ. 280.00தள்ளுபடி விலை: ரூ. 255.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |