2. ஒரு தாயின் கலக்கம்
வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்பெலாம் உருக நோக்கி அம்பலத்தே ஆடுகின்ற என்பொலா மணியை ஏத்தி இனிது அருள் பருகமாட்டா அன்பு இல்லாதவரைக் கண்டால் அம்ம! நான் அஞ்சுமாறே... - திருவாசகம் திரும்பி வரும் வழியில் நெடுந்தூரம் சுலக்ஷணா பேசவேயில்லை. அவளுடைய கருவிழிகள் மட்டும் பல்லக்கில் இருந்த திரையில் உள்ள சிறு துவாரத்தின் வழியே ஆவலுடன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. மருண்டு நிற்கும் ஒரு மான்குட்டியைப் போன்ற அந்தப் பெண்ணின் சிறு கலக்கமும் பார்க்க ஒரு விதத்தில் அழகாகவே இருந்தது. இளமைப் பொலிவு இதழ் விரியக் காத்திருக்கும் அவளது தோற்றத்தைக் கண்டு ஒரு கணம் பூரித்துப் போனாள் அகல்யாபாய்.
“அவர்கள் ஏனம்மா அந்த இளைஞர்கள் மத்தியில் வரவேண்டும்? அந்த இளைஞர்கள் பார்க்கும் பார்வையை என்னால் கூடப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே? அவர்கள் எதற்காக அம்மா அந்த இளைஞர்களுடன் சிரித்துப் பேசிய வண்ணம் நடந்து வருகிறார்கள்?” என்று மனக்குமுறலுடன் கேட்டாள் சுலக்ஷணா. “உனக்கு இப்போது நான் சொன்னால் புரியாது மகளே! இது போன்ற இளைஞர்களின் உல்லாசத்துக்காகவும், மகிழ்ச்சிக்காகவுமே பிறந்த அழகிகள் அவர்கள். பேசினாலும், சிரித்தாலும், ஆடினாலும், பாடினாலும் அவர்கள் கவர்ச்சியைக் காட்டி மயக்கக் கூடியவர்கள். அதனாலேயே பணம் படைத்தவர்கள் அவர்களை நாடிச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்!” என்றாள் அகல்யாபாய். “அம்மா! என்னால் இதைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவர்களுடைய அழகும், அவர்களுடைய நடனமும் ஆராதிப்பதற்கு உரியவை. தெய்வீகமான அந்த எழில், அற்பமான ஆசைகளுக்காக ஏற்பட்டதல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. என்னை எப்படி நீ பிறர் கண் பார்வையும் படக்கூடாது என்று கட்டிக் காத்து வருகிறாயோ, அதேபோல அந்த எழில் மங்கையரைப் பெற்ற தாய்மார்களும் அந்தப் பேரழகிற்கு மதிப்பும் மரியாதையும் தரவேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்” என்றாள் சுலக்ஷணா. உலகந்தெரியாத அந்தப் பெண்ணின் மன உணர்வுகள் தாயின் நெஞ்சத்தைத் தொட்டன. மேலும் அதைப் பற்றி அவளிடம் பேசுவது சரியல்ல என்று புரிந்து கொண்டாள். பேச்சைத் திசை திருப்ப விரும்பியவளாய், “உன் அண்ணன் சிவாஜி கேரள நாட்டிலிருந்து நாளை திரும்பி வருகிறான். உனக்காக அவனிடம் என்ன கொண்டு வர வேண்டும் என்று சொல்லி அனுப்பினாய்? தந்தப் பொம்மையா? தங்க நகையா? போர்த்துக்கீசியர் அங்கே கொண்டு வந்து விற்பனை செய்யும் மிக மெல்லிய பட்டுத்துணிகளா?” என்று கேட்டாள். இளமைப் பருவத்தை எட்ட நினைக்கும் அந்தப் பெண்ணின் முகம் சட்டென்று ஒளி நிறைந்து ததும்பிற்று. “உன்னிடம் சொல்ல மாட்டேன் அம்மா! அது எனக்கும் என் அண்ணனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது தஞ்சையிலே நீ காணமுடியாத ஓர் அபூர்வப் பொருள்! இதுவரை நான் உபயோகித்தே இராத அழகுப் பொருள்!” என்று சொல்லிக் கையைக் கொட்டி ‘கலீர்’ என்று நகைத்தாள் சுலக்ஷணா. முதன் முறையாக அரண்மனைக்கு வெளியே சென்று நகரின் அழகையும், ஊர்வலத்தின் சிறப்பையும், ஈசன் தரிசனத்தையும் கண்டு திரும்பிய பெருமிதம் முகத்தில் ததும்பி நிற்க, தாயின் பின் கால் மெட்டி ஒலி எழுப்ப உள்ளே ஓடி வந்தாள் சுலக்ஷணா. தெய்வ சந்நிதியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த பிரசாதத்தையும், பழங்களையும், மலர்மாலைகளையும், சந்தன-குங்கும வகைகளையும் பெரிய வெள்ளித் தாம்பாளம் ஒன்றில் கொண்டு வைத்தான் பணியாள். அதிலிருந்து குங்குமத்தை மட்டும் தேர்ந்தெடுத்து மகளின் நெற்றியிலிட்டாள் அகல்யாபாய். “ஈசனே! இந்தக் குழந்தையின் வாழ்வில் ஒரு குறையுமின்றித் திகழத் தாங்கள் தாம் அருள் புரிய வேண்டும்!” என்று மனத்தினுள் வேண்டிக் கொண்டாள். “அம்மா! இன்று முதன் முறையாக வெளியே வந்து பெருவுடையார் கோவிலைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பிறகு, என்னுடைய மனத்தில் ஓர் ஆசை அரும்பி நிற்கிறது. உன்னிடம் மனம் விட்டுப் பேசலாமா?” என்று கேட்டாள் சுலக்ஷணா. “கேள் மகளே! என்னிடம் கேட்பதற்கு உனக்கு என்ன தயக்கம்? நீ விரும்புவது விலையுயர்ந்த நகைகளா? புதுமையான பட்டாடையா? மனத்தை மயக்கும் வாசனைத் திரவியங்களா? அல்லது...” என்று மேலே எதைச் சொல்லிக் கேட்கலாம் என்று எண்ணித் தயங்கி நின்றாள் அகல்யாபாய். “அவை எதுவுமே இல்லை அம்மா! அந்த அழகான பெண்கள் இன்று நடனமாடிய காட்சியைப் பார்த்த பிறகு, எனக்கும் பரதநாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஓர் ஆசை தோன்றி இருக்கிறது. நான் கற்றுக் கொள்ளலாமா? நீ ஏற்பாடு செய்வாயா?” என்று கூறிச் செல்லமாகத் தாயை அணைத்துக் கொண்டு, கழுத்தைச் சுற்றி நிற்க, முகத்தை அருகே இழுத்துக் கொண்டாள் அவள். சட்டென்று இளையராணிக்கு முகத்தில் இருந்த மென்மை கடுமையாக மாறிற்று. மகளின் விபரீத ஆசையைப் பொறாத மனத்துடிப்பு முகத்தில் தெரிய, “சீ! கண்டவாறெல்லாம் பேசாதே! இந்த ஆடலும் பாடலும் அதுபோன்ற பெண்களுக்கே உரியவை. அரசகுலத்தில் பிறந்த நீ அவர்களைப் பார்த்து இவ்வாறு ஆசைப்படுவதா? இன்னொரு முறை இதுபோன்ற சிந்தனை கூட உனது மனத்தில் எழக்கூடாது மகளே!” என்று கண்டித்துவிட்டு, கழுத்தை அணைத்த மகளின் கரங்களைப் பிடுங்கி எறிந்தாள் இளைய ராணி. தாயின் கோபத்தைச் சற்றும் எதிர்பாராத அவளால் அந்தச் சுடு சொற்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முகத்தில் தவழ்ந்த குறுநகை நொடியில் மறைந்து போயிற்று. தாங்கவொண்ணாத ஏமாற்றம் முகத்தில் தெரிய, கண்களில் நீர் அரும்பி நிற்கச் சட்டென்று திரும்பி உள்ளே ஓடிவிட்டாள் சுலக்ஷணா. என்னனென்னவோ எண்ணிக் கொண்டு ஈசனின் திருஊர்வலக் காட்சியைக் காண இந்தப் பெண்ணை அழைத்துச் சென்றேன். ‘அவளுடைய மனத்தில் விபரீதமான ஆசைகள் தோன்ற இதுவே காரணமாக ஆகிவிட்டதே. இதன் விளைவுகள் எப்படி இருக்குமோ?’ என்று கலங்கியவளாய் பிரசாதத் தட்டைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு தனது அறைக்குச் சென்றாள் அகல்யாபாய். முன்னிரவு நேரம். மாடத்தின் ஓரமாக அமர்ந்த வண்ணம் அகல்யாபாய் வெளியே தெரிந்த நிலவொளியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிலவின் கதிர்கள் பின்புறமிருந்த நிலைக்கண்ணாடியில் பட்டு, கிரணக்கற்றையாக அவளைச் சூழ்ந்து நின்றன. ஆலயத்துக்குச் செல்ல அணிந்திருந்த விலையுயர்ந்த பட்டுப் புடவையை அவிழ்த்து மாற்றிக் கொண்டு, மெல்லிய நூல் சேலை ஒன்றையே உடுத்துக் கொண்டிருந்தாள் இளையராணி. அவளுடைய சிற்றிடையை அலங்கரித்த ஒட்டியாணத்தைக் கழற்றி வைத்துவிட்டு, மெல்லிய அங்கி ஒன்றையே இடையைச் சுற்றி அணிந்திருந்தாள். தாம்பூலம் தரித்த செவ்விதழ்களும், லேசாகச் சிவந்த ரோஜா நிறக் கன்னங்களும் முகத்தின் அழகிற்கு மெருகேற்ற கண்களை மூடியவண்ணம் தான் அமர்ந்திருந்த ஆசனத்தில் மெத்தையில் சாய்ந்து கொண்டாள் அவள். அன்று அவள் எதிர்பார்த்திருந்த அந்த அபூர்வ மணம் பின்புறமிருந்து காற்றில் மெல்லத் தவழ்ந்து வந்தது. வேண்டுமென்றே கண்களைத் திறவாமல், மெத்தையில் சரிந்த முகத்தை சிறிதும் அசைக்காமல் அப்படியே சிலையாக அமர்ந்திருந்தாள் அகல்யாபாய். “அன்பே! என் மீது உனக்கு ஏதாவது கோபமா?” என்று கேட்டார் அரசர் சரபோஜி. இளையராணி பதில் சொல்லவில்லை. ஆனால் பதில் கூறுவதைப் போல முகம் நளினமாக அசைந்தது. “இந்த மென்மையான கோபமும் அதைக் காட்டும் அழுந்தி நின்ற இதழ்களும் உனது அழகுக்கு மெருகூட்டத் தான் செய்கின்றன அகல்யா!” என்று கூறி அவளைத் தூக்கி நிறுத்தினார் அரசர். இளையராணியின் கண்ணிமைகள் திறந்தன. முகத்தை நெருங்கி அரசரின் முகத்தைப் பார்க்க இயலாமல் ஒரு நாணம் அவளைச் சூழ்ந்தது. மனத்துள் ஏதோ ஒரு குமுறல் தெரிய அரசரிடமிருந்து விலகி நிற்க அவள் மென்மையான உடல் சிலிர்த்துத் துடித்தது. அவள் சற்றும் எதிர்பாராத வண்ணம் மன்னர் அவளுடைய இரு தோள்களையும் இறுகப் பற்றி அருகே இழுத்துக் கொண்டார். இளையராணியின் மென்மையான உடல் அவருடைய பரந்த மார்பில் அழுந்திப் புதைந்தது. இன்னும் யௌவனத்தின் மெருகு மங்காத அந்த மேனியைத் தழுவி அனுபவித்த வண்ணம், தனது வலது கரத்தால் முகத்தைப் பிடிவாதமாக நிமிர்த்தினார் அரசர் சரபோஜி. இதழ்கள் கலந்தன. தழுவிய இடது கரம் முதுகில் கோலமிட்டது. ஒயிலாக வளைந்த மெல்லுடலை அப்படியே பற்றித் தூக்கிக் கொண்டார் அரசர். தன்னுள் ஓர் ஆசைத்தீ பரவி அணு அணுவாக விரவி நிற்பதை உணர்ந்தாள் அவள். அவருடைய ஆர்வத் துடிப்பில் மூழ்கித் தன்னை மறந்துவிடத் துடித்தாள் இளையராணி. “அன்பே! உன்னுடைய கோபந்தான் என்ன? எனக்குத் தெரியக்கூடாதா?” என்று கேட்டார் மன்னர். “தங்களுக்குத் தெரியாதது இல்லை. கல்யாண மகால் பெண்கள் இப்போது யாவரும் அறிந்த மகளிர் ஆகிவிட்டனர். அரண்மனையிலேயே அஞ்சுமாடி கட்டப்படப் போவதாகப் பேசிக் கொள்கிறார்கள். தங்களைப் போன்ற பேரரசர்களின் ஆசையைப் பகிர்ந்து கொள்ளப் பலர் இருக்கலாம். ஆனால் அந்தரங்கமாக இருக்க வேண்டிய விஷயம் இப்படி பகிரங்கமாக வெளிவர தாங்கள் இடந்தரலாமா?” என்று கேட்டாள் அகல்யாபாய். பேசும்போதே குரலில் உறுதி தளர்ந்தது. கண்களைப் போல கலங்கி, இழுத்தாற் போல நின்றது. “இதில் நீ மனம் வருந்த ஒன்றும் இல்லை அன்பே! சிறிது நேரம் மணம் வீச மார்பில் மரியாதையாக அணியும் மலர் மாலைகளைப் போன்றவர்கள் அவர்கள். எப்போதும் அழகும் கம்பீரமும் தர மார்பில் துலங்கும் முத்துமாலையைப் போன்றவள் நீ. இந்த வேறுபாடு உனக்குப் புலப்படவில்லையா?” என்று கேட்டார் சரபோஜி. “எனக்குத் தெரியும். உங்கள் மகளுக்குத் தெரியுமா? அவளால் புரிந்து கொள்ள முடியுமா? அரசே! அவளுக்கு விவரம் தெரிந்து கொள்ளும் வயது வந்துவிட்டது. அதைத் தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா? நான் அவளுடைய கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லுவேன்?” என்று கலங்கினாள் இளையராணி. புலுபுலுவென்று கண்ணீர் மாலையாகக் கன்னங்களிலிருந்து இறங்கி அவரது மார்பைச் சுட்டது. “உனக்கு உறுதி கூறுகிறேன் அகல்யா! என்னுடைய அந்தரங்க வாழ்க்கை என் குழந்தைகளுக்கு ஒரு நாளும் தெரியாது. இன்று சுலக்ஷணா கேட்ட கேள்வியை நானும் கேட்டேன். ஓரளவு என்னை உலுக்கிய அந்தக் கேள்விக்கு விடை தேடியே உன்னை நாடி வந்தேன்” என்று அவளை அன்புடன் அணைத்துத் தூக்கி மஞ்சத்தில் மெல்ல அமர்த்தினார் சரபோஜி மன்னர். அவருடைய வலிய கரங்கள் அவளுடைய இடையை வளையமாகச் சூழ்ந்தன. பெருமிதம் ததும்ப புது மலர்ச்சியுடன் முகம் நிமிர்ந்த அகல்யாபாயின் பார்வை ஒரு கணம் அறை வாசலின் புறம் திரும்பி குத்திட்டு நின்றது. விவரிக்கவொண்ணாத நாணம் சூழ, குலுங்கி நிமிர்ந்து எழுந்து நின்றாள். அங்கே அறைவாசலில் கண் வைத்த பார்வை மாறாது நின்று கொண்டிருந்தாள் சுலக்ஷணா. தாயின் பார்வை தன் மீது விழுந்ததும் பட்டுப் பாவாடையை முழங்கால் வரை உயர்த்திய வண்ணம் அந்த இடை கழியைக் கடந்து தனது அறையை நோக்கி ஓடினாள் அவள். அறையின் கதவை மூடித் தாழிட்டாள். ஆடை நிலைகுலைய மஞ்சத்தில் ஏறிக் குப்புறப்படுத்துக் கொண்டாள். முகம் தலையணையில் அழுந்திற்று. பார்க்கக்கூடாத ஒரு காட்சியை கண்டுவிட்டது போலவும், இனம் தெரியாத கிலேசமும் வெட்கமும் தன்னைச் சூழ்ந்து கொண்டது போலவும் உணர்ந்தாள் சுலக்ஷணா. கண்களிலிருந்து நீர் சொரிய இமைகளை இறுக மூடிக் கொண்டு விசும்பலை அடக்கிக் கொண்டாள். நித்திரையின் இருட்போர்வை மெல்ல மெல்ல அவளை மூடி அணைத்துக் கொண்டது. கன்னங்களில் நீர்க்கறை காயுமுன் துயிலில் மெல்ல மெல்லத் தன்னிலை மறந்து போனாள்... அரசரும் அகல்யாபாயும் வசந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தார்கள். மூத்த ராணியார் யமுனாபாய் கேரளத்திலிருந்து திரும்பிவரும் இளவரசன் சிவாஜியை வரவேற்கத் தயாராகக் காத்துக் கொண்டு வாயிலில் நின்றிருந்தாள். மெத்தென்ற நடைபாதை விரிப்பு வாயிலிலிருந்து வசந்த மண்டபம் வரையில் நீண்டது. இருபுறமும் வெள்ளிக் கலசங்களில் மலர்கள் ஏற்றிய தாதிப் பெண்கள் காத்து நின்றார்கள். இடையில் குடத்தில் மங்கல நீரும் இடையில் செருக்குமாக இரு பெண்கள் வாயிலில் தெளிக்கக் காத்து நின்றார்கள். இளமையின் கீதமாக இசையை முனகியபடி ஆரத்தி எடுக்க மங்கையர் இருவர் தயாராக நின்றார்கள். மங்கல தீபம் கொழுந்தாக ஒளிவிட ஒரு சுமங்கலிப் பெண் படிக்கட்டில் எதிர்பார்த்து நின்றாள். சுலக்ஷணா வாயிலில் விரிந்த பூவாகப் போடப்பட்டிருந்த வண்ணக் கோலத்தின் நடுவே நின்றிருந்தாள். அண்ணன் சிவாஜி வரப் போகும் நிகழ்ச்சியை எதிர்நோக்கி அவள் முகத்தில் ததும்பிய பொலிவு தனிக்கவர்ச்சியுடன் மிளிர்ந்தது. பெரிய கோவிலிலிருந்து ஆலயமணியின் கார்வை காற்றில் தீர்க்கமாக இறங்கிற்று. வாத்தியங்கள் ஒலிக்க சாரட் வண்டி வாசலில் வந்து நின்றது. பணியாட்கள் கதவைத் திறந்து விட, மங்கள ஆரத்தி எடுக்கும் பெண்கள் நெருங்கிவர, தூபதீப வரவேற்புக்கு நடுவே இளவரசன் சிவாஜி கீழே இறங்கினான். யமுனாபாய் படி இறங்கி வந்து அவனைக் கைலாகு கொடுத்து உள்ளே அழைத்துக் கொண்டாள். சுலக்ஷணா ஓடி வந்து அவன் இடது கரத்தின் மோதிர விரல்களைப் பற்றிக் கொண்டாள். பெற்றோரின் பெருமிதம் ததும்பும் பார்வையோடு சரபோஜியும், அகல்யாபாயும் மகனைப் பரிவுடன் வரவேற்றனர். மங்கள இசை ஒலிக்க, மலர்கள் தூவிய விரிப்பில் நடந்து வந்து சிவாஜி அவர்கள் முன் மண்டியிட்டு இடைவாளை உருவிக் கீழே படிய வைத்து வணங்கினான். தந்தையின் ஆசியைப் பெற்றவனாய் நிமிர்ந்தான். “உன் ஆவல் தீர கேரளப் பிரதேசத்தை சுற்றிப் பார்த்தாயா சிவாஜி?” என்று கேட்டார் சரபோஜி. “வெயிலில் நிறைய அலைந்து களைத்திருக்கிறான். அவனுடைய செப்பு நிற மேனியில் அது தெரிகிறது” என்று பெருமையுடன் கூறிக் கொண்டாள் அகல்யாபாய். அண்ணனின் அருகே வந்து நின்று, கழுத்தைக் கீழே வளைத்து, கொஞ்சும் குரலில், “எனக்கு என்ன வாங்கி வந்தாய் அண்ணா?” என்று கேட்டாள் சுலக்ஷணா. “பின்னாலேயே பெட்டியில் வருகிறது. விரைவில் நீயும் அதைப் பார்க்கப் போகிறாய். அதுபோன்ற அழகான பொருளை நீ இதுவரை பார்த்திருக்க மாட்டாய்!” என்றான் சிவாஜி ரகசியக் குரலில்! “அழகான பொருளா?” என்று ஆவலோடு கேட்டாள் சுலக்ஷணா. “ஆமாம்... அழகானது மட்டுமல்ல; எதற்கும் கேள்விகள் கேட்டு உன்னை வாய் மூடி மௌனியாக்கிவிடக் கூடிய அளவுக்கு, அதற்கு சொக்க வைக்கும் கவர்ச்சியும் உண்டு!” என்று அவள் கன்னத்தில் கிள்ளினான் சிவாஜி. கிடைக்கப் போகும் பரிசை எதிர்பார்த்து நின்றாள் சுலக்ஷணா. அவர்கள் இருவருடைய ரகசியப் பேச்சையும் சிறிது மனக்கலக்கத்துடன் கவனித்தபடி அமர்ந்திருந்தாள் இளையராணி அகல்யாபாய். புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|
வெண்கடல் ஆசிரியர்: ஜெயமோகன்வகைப்பாடு : சிறுகதை விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 190.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
திருக்குறள் - மூலமும் விளக்க உரையும் ஆசிரியர்: புலவர் நன்னன்வகைப்பாடு : இலக்கியம் விலை: ரூ. 295.00 தள்ளுபடி விலை: ரூ. 275.00 அஞ்சல்: ரூ. 70.00 |
|