9. கைகொடுத்த பாதிரியார்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலத்தைப் போல, தம்மை இகழ்வோரையும் பொறுப்பதே தலையாய பண்பாகும்.) - திருக்குறள் (பொறையுடைமை) அந்த நிலாமுற்றம் உருகி வெள்ளி போன்ற ஒளி வெள்ளத்தில் குளித்திருந்தது. குளிர்ந்து வந்த காற்றில் அந்தக் கலை மண்டபத்தைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த மலர்ச் செடிகளின் மணம் மிதந்து வந்தது. அதே போல சரபோஜி மன்னரின் மனத்திலும் அந்த நாளைய நினைவுகளின் மணம் நிறைந்திருந்தது. உணர்ச்சி மிகுந்த குரலில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர் பேசத் தொடங்கினார்... “கல்கத்தாவில் இருந்தவர்கள் சென்னையில் இருந்த அதிகாரி சிராஜ் கமாலைத் தஞ்சைக்குப் போய் நேரில் விசாரித்து அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்கள். தஞ்சையிலுள்ள ஆங்கிலேய சர்தாரையும் இதில் கலந்து கொள்ளும்படி அவர்கள் யோசனையும் கூறி இருந்தார்கள். சென்னையிலிருந்து துரை தனது மனைவியுடன் தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்தார். சகல மரியாதையுடன் அவரை வரவேற்று, காவேரிக் கரையிலேயே ஓர் அழகான மாளிகையில் அமர்த்தி, இங்கே இருந்த சர்தாரும் அமர்சிங்கின் துணைவர்களும் அவருடைய மனப்பாங்கைத் தங்களுக்குச் சாதகமாக உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்...”
“ஆம் மகனே! இந்த நாட்டின் சரித்திரத்தைப் பற்றி பழைய நூல்கள் பலவும் இந்த சரசுவதி மகாலில் இருக்கின்றன. ஆங்கிலேயர் வந்த பிறகு நடந்தவற்றையும் எழுதத் தொடங்கி இருக்கிறோம். இவற்றை நான் காசிக்குப் போன பின்பு, உனக்கு அவகாசம் கிடைக்கும் போது, படித்துப் பார். அவற்றில் பல முடி மன்னர்களுடைய நல்ல ஆட்சியும், அவர்களைச் சார்ந்தவர்களுடைய சூழ்ச்சியாலேயே கவிழ்க்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்வாய்! வெளிநாட்டிலிருந்து படை எடுத்து வந்தவர்களுடன் சேர்ந்து கொண்டு, நம் நாட்டினரிடையே உள்ள வெகுசிலரே துரோகிகளாக மாறியதைத் தெரிந்து கொள்வாய். அப்படியெல்லாம் நாட்டில் பற்றும், நன்றி உணர்வும் இல்லாதவர்கள் நடந்து கொண்ட விதத்தினால் தான், இன்று இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்கள் வேரூன்றி விட்டார்கள். நல்ல உள்ளம் படைத்த சிலர் ஒதுங்கி மறைந்து செயலற்று வாழ வேண்டிய துர்ப்பாக்கியமான நிலையும் ஏற்பட்டிருக்கிறது!” “இங்கே அப்படி நடந்த சூழ்ச்சி என்ன தந்தையே?” “அமர்சிங்கின் பக்கத்தில் உள்ளவர்களையும், என் பக்கத்தில் உள்ளவர்களையும் கூப்பிட்டு விசாரணை நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பெயர் அளவில் தான் அப்படிச் சொன்னார்களே தவிர, என்னுடைய சார்பில் பேசக்கூடிய எவரையுமே அவர்கள் அழைக்கவில்லை. நடுநிலைமையில் உள்ளவர்களையும், ஆட்சிக்கலை தெரிந்தவர்களையும் துளஜா மன்னருடன் நெருங்ஞ்கிப் பழகியவர்களையும் அழைக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால் அங்கே போய் சாட்சி சொல்ல முன் வந்தவர்களோ, அரசியலைப் பற்றி ஏதும் தெரியாத சாஸ்திர பண்டிதர்கள். அவர்கள் அமர்சிங்கிற்குச் சாதகமாகவே கூறினார்கள். மரணத்துக்கு முன்பு, துளஜா மகாராஜா தனக்கு வாரிசாக அமர்சிங் வர வேண்டும் என்று விரும்பியதாகவும் கூறினார்கள். அந்த உண்மையை யாரும் விசாரித்து அறியக் கூடிய வாய்ப்பும் இல்லை. ஏனெனில் துளஜா மகாராஜா உயிர் துறந்த போது யாருமே அவருடன் இல்லை...” “ஒரே ஒரு சந்தேகம்! தங்களை அன்புடன் வளர்த்தவர் ஆயிற்றே ஸ்வார்ஷ் பாதிரியார்? அவர் ஆங்கிலேயருக்கு வேண்டியவராகவும் இருந்திருப்பார் அல்லவா? அவரையுமா விசாரிக்கவில்லை?” “சரியான கேள்வி கேட்டாய் மகனே! அவர் ஒருவர் மட்டுமே என் சார்பில் வாதாடக் கூடியவராக இருந்தார். இருப்பினும் அவரை அவர்கள் கூப்பிடவில்லை. இந்த நிகழ்ச்சிகள் நடந்த விவரமே அவருக்குப் பின்னர் தான் தெரியும். அதற்குள் விசாரணையை முடித்து, சிராஜ்காமல் தனது அறிக்கையை கல்கத்தாவுக்கு அனுப்பிவிட்டார். அங்கே இருந்தவர்களும் அவருடைய பரிந்துரையை ஏற்றுக் கொண்டு அமர்சிங்கையே அரசராக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்!” “அரண்மனையில் தான் இருந்தேன். அதனால் அமர்சிங்கிற்கு வேண்டியவர்கள் என்னை மடக்கி மறைத்து வைத்திருந்தார்கள். நாட்டில் எனக்குச் சாதகமாகப் பேசக் கூடியவர்கள் யாரையும் நான் சந்திக்கவும் முடியவில்லை. அமர்சிங்கும் என்னைப் பொறாமையினால் உபத்திரவம் செய்து கொண்டே இருந்தார். இருப்பினும் என்னைக் கொன்றுவிடக் கூடிய துணிச்சல் யாருக்கும் வரவில்லை. ஆலகால நஞ்சையும் உண்ட ஈசுவரன், உலகத்தையே ஆளும் பெருவுடையாராக இந்த ஊரில் கொலுவிருந்தது, என்னையும் - என் போன்ற எளியவர்களையும் காப்பாற்றுவதற்காகவே அல்லவா? அந்த இறையருளே எனக்கும் நல்லகாலம் பிறக்க வழி காட்டிற்று.” “அதற்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று தந்தையே?” “என்னுடைய கல்வி அறிவு எனக்கு வழி காட்டிற்று. என்னை ஆளும் அன்னை கலைமகளே என்னை நல்வழிப் படுத்தி, அரச பதவியில் அமர்த்தினாள். நான் எழுதிய குறிப்புக்களையும், இயற்றிய சில நூல்களையும் தஞ்சையில் அப்போது இருந்த சர்தாரிடம் கொடுத்தேன். அவர் அதைப் பற்றி மதிப்புரை தருமாறு ஸ்வார்ஷ் பாதிரியாரிடம் கொடுத்தார். அதன் அருமையை உணர்ந்த பாதிரியார் அவற்றை நகல் எடுத்துக் கும்பெனியாரின் தலைமையகத்துக்கு அனுப்பி வைத்தார். ‘இப்படிப்பட்ட அறிவாளியான ஒருவர் அரசர் ஆக முடியாதபடி துரோகம் நடந்து வருகிறது. இதைக் கும்பெனி நன்கு விசாரிக்க வேண்டும்!’ என்று மீண்டும் மீண்டும் கடிதம் எழுதினார். அதற்கேற்றபடி தஞ்சையிலும் ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டது!” “என்ன ஆயிற்று தந்தையே? அமர்சிங்கிற்கு ஏதாவது ஆபத்தா?” “இல்லை சிவாஜி! ஆங்கிலேயர்கள் கெட்டிக்காரர்கள். அப்படி ஒரு வம்பில் அவர்கள் நேரடியாக மாட்டிக் கொண்டதாகச் சரித்திரமே இல்லை. எனக்கும் அவர்கள் நேர்முகமாகத் தலையிட்டு உதவ விரும்பவில்லை. தஞ்சையில் இருந்த ரெசிடெண்டு துரையை மாற்றி, புதியவர் ஒருவரை நியமித்தார்கள். மாஸ்டர் ராம் என்ற பெயருடைய அவர் ஸ்வார்ஷ் பாதிரியாரிடம் மிகுந்த மரியாதை காட்டினார். அதனால் அவருடைய ஆலோசனையை ஏற்று ஒரு விரிவான அறிக்கையை சீமையில் இருந்த அதிகாரிகளுக்கே அனுப்பி வைத்து விட்டார். சாதாரணமாக மக்கள் நியாயம் கோரி முறையிட, அப்போதெல்லாம் ‘தர்பார் பிரசங்கம்’ என்ற நியாய சபை இருந்தது. ஆனால் என் போன்ற அரச குடும்பத்தினர் அங்கே போவது வழக்கம் இல்லை. ஆகையால், இது லண்டனில் இருந்த கோர்ட்டிலேயே விசாரிக்கப்பட்டது. அவர்கள் தீர விசாரித்ததுடன் ஸ்வார்ஷ் பாதிரியாரிடமும் தொடர்பு கொண்டார்கள்.” “கடைசியில் லண்டனிலிருந்தே தங்களுக்கு சாதகமான முடிவு அறிவிக்கப்பட்டதா, தந்தையே!” “ஆம் சிவாஜி! அவர்களுடைய உத்தரவுப்படி மாஸ்டர் ராம் என்னை அமர்சிங்கின் பிடியிலிருந்து விடுவித்தார். நானே அரசராக வேண்டும் என்ற ஆணையையும் பிறப்பித்தார். ஏற்கெனவே எனக்கு எதிராக சாட்சி சொன்ன பண்டிதர்கள், தமக்கு ஒன்றும் தெரியாதென்றும், கட்டாயத்தின் பேரில் அப்போது அவ்வாறு எழுதிக் கொடுத்து விட்டதாகவும் கூறினார்கள். இந்த வாக்குமூலத்தையும் ரெசிடெண்டு துரை வாங்கி மேலே அனுப்பி, கும்பெனியாரின் முடிவை உறுதிப்படுத்தினார். நானும் எனது தாயாரும் சென்னைக்குப் போய், அங்கிருந்த அதிகாரிகளுக்கு நன்றி சொல்லிவிட்டுச் சில நாட்கள் அங்கேயே தங்கிவிட்டுத் திரும்பினோம். எனக்கு அமர்சிங் மீது எந்தக் கோபமும் எழவில்லை. நான் அவரைப் பதிலுக்குத் துன்புறுத்த எண்ணவும் இல்லை!” “ஸ்வார்ஷ் பாதிரியார் தாங்கள் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது உடன் இருந்தாரா தந்தையே?” “அது தான் நடக்கவில்லை மகனே! தான் நேர்மையானது என்று நினைத்ததைச் செய்து முடித்த அந்தக் கடமை வீரர் பிப்ரவரி மாதமே இறந்து போய் விட்டார். அதற்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு ஜூன் மாத இறுதியில் தான் நான் அரசராக முடிசூட்டப்பட்டேன். என்னை ஒரு மாணவனாக ஏற்று, என்னை உயர்த்தி உரிய பதவியில் அமர்த்தி வைத்த அந்தப் பெரியவர் அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு உயிருடன் இருக்கவில்லை. அதனாலேயே அவர் மரணப் படுக்கையில் இருந்த சிற்பமும், அவர் என்னை மாணவனாக அழைத்து வந்த சிற்பமும் சரசுவதி மகாலில் இடம் பெற்றிருக்கின்றன. அவரை அடக்கம் செய்த இடத்தையும் நான் ஒரு நினைவு இல்லமாக அமைத்திருக்கிறேன். வருங்காலத்தில் நல்ல உள்ளம் படைத்த இந்தப் பெரியவரைப் பற்றி தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள இவை உதவும். அவற்றை நினைத்துத் தான் நான் இன்று கண் கலங்கினேன்!” என்று கூறி முடித்தார் மன்னர். சிவாஜியின் தோள் மீது கையை வைத்து அமைதிப்படுத்திவிட்டு எழுந்து நின்றார். இரவு முதிர்ந்து விட்டது. காவலாளியிடம் சொல்லி சுலக்ஷணாவைத் தூக்கி வரச் சொன்னார் சரபோஜி. சிவாஜியுடன் சுலக்ஷணாவை அந்தப்புரத்தில் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்தார். குதிரையில் ஏறித் தனது இருப்பிடத்திற்குத் திரும்பினார். திருவையாற்றில் திருமஞ்சன வீதியில் அந்த இல்லம் அன்று கலகலப்புடன் விளங்கிற்று. தஞ்சையில் நடைபெற இருக்கும் ஒரு திருமணத்திற்காக மணமகளின் தந்தை ஜாதகத்துடன் நாள் குறிக்க வந்திருந்தார். காலையில் நீராடிவிட்டு மனையில் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருந்த தியாகராஜ சுவாமிகள் வெளியே வருவதற்காக அவர் காத்துக் கொண்டிருந்தார். தியாகராஜ சுவாமிகளுக்கு ஜோதிடமும் மந்திர சாஸ்திரமும் தெரியும். அதனால் அவரை நாடிப் பலரும் வருவது உண்டு. வருபவர்கள் எல்லோருக்குமே அவர் உதவுவார். ஏழை என்றோ, செல்வந்தர் என்றோ வித்தியாசம் பார்த்தது கிடையாது. பூஜை முடிந்து தியாகராஜ சுவாமிகள் எழுந்து வந்தார். அந்தச் செல்வந்தர் அவருக்கு வணக்கம் கூறி ஜாதகத்தை எடுத்துக் கொடுத்து நாள் குறித்துத் தரும்படி வேண்டிக் கொண்டார். மணமகனின் ஜாதகத்தையும் எடுத்துக் கொடுத்தார். சிறிது நேரம் மணமகனின் ஜாதகத்தை உற்றுக் கவனித்தார் சுவாமிகள்... “இந்த ஜாதகத்துக்கு உரியவன் உங்களுக்குப் பழக்கமானவனா?” என்று கேட்டார். “ஆமாம்; எனக்கு நெருங்கிய உறவினனும் கூட...” “உங்கள் மகள் சௌக்கியமாக இருப்பாள். பையனின் ஜாதகத்தில் பாக்யாதிபதி செவ்வாயும், ஜீவனாதிபதி சுக்கிரனும் இணைந்து ‘தர்மகர்மாதிபதி’ யோகத்தை ஏற்படுத்துகிறார்கள். அதனால், அரசரிடம் பெரிய பதவிகள் வகிக்கக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. பல நாடுகளுக்குப் பயணம் செய்யக்கூடிய சந்தர்ப்பமும் கிடைக்கும். தினமும் ராமச்சந்திரமூர்த்தியை பூஜை செய்யச் சொல்லுங்கள்! என் ஐயன், உங்கள் மகளையும் மருமகளையும் எல்லா சௌபாக்கியங்களையும் தந்து சிறப்பாக வைப்பான்...” “சுவாமி! முகூர்த்தத்துக்கு ஒரு நாள் பார்த்துச் சொல்லுங்கள்!” “வரும் திங்கட்கிழமை சதயம் சித்தயோகம். பத்து மணிக்குமேல் அமிர்தயோகம். ஒன்பதரைக்கு மேல் ஜாதகர்களுக்கு திருமணம் செய்யப் பொருத்தமான முகூர்த்தம்!” என்றார் சுவாமிகள். செல்வந்தரின் முகத்தில் திருப்தி நிறைந்தது. கொண்டு வந்திருந்த பட்டுப் பையிலிருந்து பொற்காசுகளை எடுத்தார். வெற்றிலை பாக்கு, பழத்துடன் கதம்ப மாலையையும் வைத்து, சுவாமிகளின் பாதத்தில் வைத்து வணங்கினார். சுவாமிகள் மலர்மாலையை மட்டும் எடுத்து பட்டாபிஷேகக் கோலத்தில் இருந்த இராமபிரானுக்குச் சாத்தினார். செல்வந்தரையும் படத்துக்கு முன்னால் விழுந்து வணங்கச் சொன்னார். “இந்த அழகான கோதண்டராம சுவாமியின் படம், ராயலேலூர் பல்லவி எல்லய்யா எழுதியது. அவர் என்னுடைய சீடர் வெங்கட்ரமண பாகவதரிடம் இசை பயின்றவர். என்னுடைய குமாரத்திக்கு, அம்பாள் அக்கிரஹாரம் குப்புசாமி ஐயருடன் கல்யாணம் நடந்த போது, பரிசாகக் கொடுத்தார். அற்புதமான சித்திரம்...” என்று உணர்ச்சி பொங்கக் கூறி நிறுத்தினார் சுவாமிகள். “சுவாமிகள் ஒரு கீர்த்தனம்பாடி வாங்கிக் கொண்டிருப்பீர்களே?” என்று கேட்டார் அந்தச் செல்வந்தர். “ஆமாம், மோகனராகத்தில் ‘நன்னா பாலம்ப வசித்திலோ’ என்ற கீர்த்தனையைப் பாடினேன். சுவாமியைப் பாருங்கள். இந்திர நீலமணியைப் போன்ற தேகப்பொலிவுடன், அழகிய மார்பில் அசைந்தாடும் முத்துமாலைக் குவியலுடன், கையில் பற்றியுள்ள கோதண்டத்தின் பிரகாசத்துடன், எப்படி எழுந்தருளியிருக்கிறார் பார்த்தீர்களா? இதைத்தான் ‘சுரபதி நீலமணி நிபதனுவுதோ!’ என்று பாடினேன். ‘என் ஐயன் என்னைக் காக்க நடந்து வந்தானோ?’ என்று கூறி மனம் நெகிழ்ந்து பாடினேன்...” என்று சொன்னார். “சுவாமிகள் அந்தப் படத்துக்கு நான் கொண்டு வந்த மாலையைப் போட்டு என்னை வணங்கச் சொன்னது என்னுடைய பாக்கியம் அல்லவா? தங்கள் மகளுடைய திருமணத்துக்கு அளிக்கப்பட்ட சித்திரத்துக்கு என்னுடைய மகளின் திருமணத்துக்கு நாள் குறிக்க வந்தவன் வணங்குவது எவ்வளவு பொருத்தம்?” என்று நெகிழ்ந்து போனார் அவர். “சுவாமி! அது நான் ஒரு நல்ல காரியத்துக்காக தங்களை நாடி வந்து ஆசீர்வாதம் பெற்ற போது சமர்ப்பித்தது அல்லவா?” “இருக்கலாம். இரண்டு பழங்களை மட்டும் வைத்துவிட்டுச் செல்லுங்கள். சீடர்கள் வரும் போது பிரசாதமாக நறுக்கிக் கொடுக்கலாம். பொற்காசுகள் வேண்டாம்.” “அதைத் தாங்கள் ஏற்றுக் கொண்டால், எனக்கு தங்கள் பூரண ஆசீர்வாதம் கிடைத்ததாக எண்ணிக் கொள்வேன்!” “என் அப்பன் இராமபிரான் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பான், அதுபோதும்! இடையில் இந்த எளியவனுக்கு என்ன வேலை? என்னை மன்னித்து விடுங்கள். நான் யாரிடமும் எந்த சன்மானத்தையும் ஏற்பதில்லை. இராமபிரானின் அருள் மட்டுமே நான் பெறும் மிகப்பெரிய செல்வம்!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார் சுவாமிகள். செல்வந்தர் தயங்கினார். தியாகராஜ சுவாமிகள் இரண்டு பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, தட்டை அவரிடமே ராமநாமத்தைச் சொல்லியபடி திருப்பிக் கொடுத்தார். செல்வந்தரின் கண்களில் நீர் முத்து ஒளிர்ந்தது. “போய் வாருங்கள். உங்கள் மகள் சகல சௌபாக்கியங்களுடன் தீர்க்க சுமங்கலியா யிருப்பாள்!” சுவாமிகளை மீண்டும் கீழே விழுந்து வணங்கினார் அவர். “சுவாமி! தங்களைப் போன்றவர்களை நான் இதுவரைப் பார்த்ததில்லை. தங்களைத் தரிசித்தது என்னுடைய பாக்கியம்! என்னை ஆசீர்வதியுங்கள்” என்றார். “மங்களானிபவந்து!” என்று கூறி, கைகூப்பி விடை கொடுத்து அனுப்பினார், தியாகராஜ சுவாமிகள். வாசல் வரை வந்து அவரை வழி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். “கமலாம்பா! செம்பைக் கொண்டுவா, நான் உஞ்ச விருத்திக்குப் போக வேண்டும்” என்று உள்ளே திரும்பிச் சொன்னார். கமலாம்பாள் செம்பைக் கொண்டு வந்து சுவாமிகளின் காலடியில் வைத்து வணங்கினாள். மஞ்சள் பற்றிய முகத்தில் குங்குமம் ஜொலித்தது. பொன்னை வெறுத்து ஒதுக்கிவிட்டு, பிட்சையை நாடி செம்பும் கையுமாகப் புறப்படும் கணவரின் செல்வத்தைப் பெரிதாக மதித்து, அவளுடைய உள்ளம் பூரித்தது. சுவாமிகள் தம்பூரும் கையுமாகப் பாதக்குறடுகளை மாட்டிக் கொண்டு புறப்பட்டார். முடியைத் துறந்து கானகம் நாடிப் புறப்பட்ட கோசலைச் செல்வனை எண்ணி எண்ணி, “சித்தமு நா பாக்கியமு ஐயா!” (உன் சித்தம் என் பாக்கியம் ஐயா!) என்று பாடியபடி படி இறங்கினார். வாசல் வரையில் வந்து வழி அனுப்பினாள் கமலாம்பா. அவளுடைய கண்களில் நீர் துளிர்த்தது. உள்ளே சமையலுக்கு மணி அரிசி கூட இல்லை. ஆயினும் அந்தப் பெண்மணியின் உள்ளத்தில் அபூர்வமானதோர் அமைதி நிறைந்து நின்றது அப்போது. புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|
ஊக்குவிப்பு ஆசிரியர்: பிரையன் டிரேசிமொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 140.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
மருந்தும்... மகத்துவமும்...! ஆசிரியர்: டாக்டர் கு. கணேசன்வகைப்பாடு : மருத்துவம் விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|