30. இரவில் இணைந்த இரு உள்ளங்கள்
“உனதுள்ளம் நான் அறியேன் பிரியே! உன்னிடம் ஆசை கொண்ட அங்கங்களை இரவும் பகலும் கருணையின்றி காமன் காய்கிறான் அத் துன்பத்திற்கு காரணம் காமதேவன் - அதைத் தீர்ப்பவனும் அவனே ஆகிறான் - உலகத்தைக் கோடையில் கொளுத்தும் பகல், அதன் முடிவில் நீலமேகங்களால் சகிப்பது போலவே.” - காளிதாஸனின் சாகுந்தலம் சுலக்ஷணாவின் குரல் கேட்டு நீருள் பாய்ந்தான் சிவாஜி. தான் ஓர் இளவரசன் என்பதோ, தான் ஓர் இளம்பெண்ணைச் சுமந்து அனைவர் முன்னிலையிலும் நீந்திக் கரையேற வேண்டும் என்பதோ, அவனுக்கு முற்றிலும் மறந்து போயிற்று. எவ்வாறாகிலும் புவனமோகினியைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற ஓர் எண்ணம் மட்டிலுமே மனத்தில் மேலோங்கி நின்றது. கைகள் துடிக்க, சுழலில் பம்பரமாகச் சுழன்றவளின் கூந்தலைப் பற்றிப் பிடித்தான். மூழ்க இருந்தவளைப் பற்றிக் கொண்டு ஆவேசத்துடன் கை வீச்சைப் போட்டபடி அலைகளை எதிர்த்தான். மூக்கமான அலைகள் இருவரையுமே தாலாட்டிற்று. இடித்துச் செல்லும் ஆற்றின் வேகத்தைச் சமாளிப்பதும் ஒருகணம் சிரமமாகத் தோன்றிற்று. இந்த நிலையைத் தடுக்க முற்படுவது போலவே, காவலுக்கு வந்திருந்த வீரர்கள் நால்வர் ஆற்றில் கீழ்புறம் குதித்து எதிர் நீச்சல் போட்டு வருவது தெரிந்தது.
அவளைச் சகடத்தில் வைத்துச் சுற்றினார்கள். வைத்தியர் மூலிகைகளைக் கொண்டு வந்து முகரச் செய்தார். தோழிகள் உலர்ந்த துகிலைக் கொண்டு வந்து போர்த்தினார்கள். மெல்ல மெல்ல அவளுடைய நினைவு திரும்பிற்று. சுலக்ஷணா அவளுடைய கையைப் பற்றி மெல்ல தூக்கி அமரச் செய்தாள். தோழி ஒருத்தி வந்து அவளைத் தாங்கிக் கொண்டாள். “நான் எங்கே இருக்கிறேன்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் புவனா. “பத்திரமாக இருக்கிறாய். ஆற்றின் சுழலிலிருந்து தப்பி விட்டாய். இனி பயமில்லை!” என்று சிறிது நடுங்கும் குரலில் ஆறுதல் கூறினாள் சுலக்ஷணா. “மூழ்கிவிட்டேன் போல இருந்ததே? யார் எப்படிக் காப்பாற்றினார்கள்?” என்று ஆயாசத்துடன் கேட்டாள் புவனா. “பயமில்லை அம்மணி! உங்களை இளவரசரே நீந்தித் தூக்கி எடுத்து வந்து கரைசேர்த்து விட்டார்!” என்றாள் அவரைத் தாங்கி இருந்த தோழி. அதைக் கேட்டதும் அந்தப் பொன்னுடல் வெட்கத்தால் சிலிர்த்து நடுங்கி ஒடுங்கியது. கைகள் இயற்கையான கூச்சத்துடன் மார்பில் குறுக்காகப் படிந்து இறுகின. விழிகள் பார்க்க இயலாமல் துடித்துத் தாழ்ந்தன. சுலக்ஷணா அதைப் புரிந்து கொண்டாள். எல்லோரையும் விலகிப் போகச் சொல்லி, உடைகளை மாற்றினாள். அவள் காதோடு, “என் அண்ணன் ஒருவனே உன்னை இறுகப் பிடித்து தூக்கிக் கொண்டு வந்து கரை சேர்த்தான். போதுமா?” என்று குறும்பாகக் கேட்டாள். புவனமோகினியின் முகம் சிவந்தது. பார்வை மாறிற்று. கைகள் துவண்டன. தன்னை அணைத்துக் கொண்ட இளவரசியைப் பின்னித் தன்னோடு சேர்த்து இழுத்துக் கொண்டாள். நினைவு திரும்பத் திரும்ப, தன்னைப் பலர் முன்னிலையில் இளவரசன் தழுவிச் சுமந்து வந்த ஞாபகம், மனத்துள் மகிழ்வையும், அவஸ்தையையும் ஒருசேரத் தூண்டின. அதுவரை அவள் அறிந்திராத ஒரு சுகமான உணர்வு அவள் உடல் முழுவதும் பரவி நின்றது. “திருப்திதானே? உன்னை வேறு யாரும் தீண்டவில்லை போதுமா?” என்று கொழுவின அவள் கன்னத்தைக் கிள்ளினாள் சுலக்ஷணா. மீண்டும் மயங்கியது போல் நடித்து அவளுடைய மடியில் சொகுசாகப் படுத்துக் கொண்டாள் புவனா. மாலை முதிர்ந்து இருள் சூழத் தொடங்கிவிட்டது. கண்கள் சிவந்து, கூந்தல் கலைந்து, உடல் முழுவதும் சிறாய்ப்பும், இரத்தக் கீறல்களுமாக வந்திருந்த புவனா மோகினியைப் பார்த்துப் பதறிப் போனார் திலகவதி. சாம்பிராணிப் புகையில் தலைக் கூந்தலை ஆற்றி எடுத்தார். நெற்றிக்கு மஞ்சளும், திப்பிலியும், சுக்கும் கலந்து பற்றுப் போட்டாள். மனக்கொம்பையும் ருத்திராட்சத்தையும் இழைத்து உள்ளுக்குக் கொடுத்தாள். இரவு முற்றிவிட்டது. உப்பரிகையில் சாளரங்களை மூடி வைத்துவிட்டுக் கட்டிலில் படுத்துக் கொண்டாள் புவனா. கிடந்து தேறியதில் கண்களில் கருவட்டம் சூழ்ந்திருந்தது. இளைத்துப் போன உடலில் புதுமெருகு மங்கினாலும், நளினம் சற்றே கூடி இருந்தது. லேசான வியர்வை நெற்றியில் முத்து முத்தாகப் பூத்தது. மேல்துகில் எடுத்து நெற்றியில் ஒற்றிக் கொண்டாள். காற்றுப்பட சற்று நின்றால் தேவலை போல இருந்தது. திலகவதியார் பார்த்தால் அனுமதிக்க மாட்டார். ஆனால், அவருக்கு முன்னிரவுத் தூக்கம் ஆழ்ந்திருக்கும். இந்த வேளையில் லேசில் எழுந்திருக்க மாட்டார். அந்த தைரியத்தில் மெல்ல எழுந்து வந்து, தாமரை வடிவச் சாளரத்தின் கதவுகளைத் திறந்து விட்டாள். குளிர்ந்த காற்று கண்ணிமைகளை ஒற்றி எடுத்தது. சுகமான உணர்வுடன் கண்களை மூடிக் கொண்டாள். சாளரத்தின் வழியே அந்த மாதுளம் பிஞ்சு வந்து அவள் மீது விழுந்தது. திடுக்கிட்டவளாய்ச் சாளரத்தின் வழியே வெளியே எட்டிப் பார்த்தாள். கீழே சோலையில் அடர்ந்த இருளில் நிழலாட்டமாக யாரோ அசைவது புரிந்தது. நெஞ்சில் அச்சம் புகுந்து கொள்ள வேகமாகச் சாளரத்தை மூட முயன்ற போது, அந்தச் சிறு சந்தேகம் தலைகாட்டிற்று. மீண்டும் குனிந்து பார்த்தாள். சிப்பாயின் உருவத்தில் முண்டாசு அணிந்து நின்ற அந்த இளைஞன் தலைப்பாகையை எடுத்து உயர்த்தி, ஜாடை காட்டினான். சந்தேகமில்லை; அது இளவரசர் சிவாஜிதான்! சொல்லவொண்ணாத பயமும் நாணமும் கலந்து குழப்ப அங்கேயே ஒருகணம் நின்றாள். சிவாஜியின் கை உயர்ந்து காற்றில் அலைந்தது. அவளைக் கீழே இறங்கி வரும்படி அழைத்தது. அவளுக்குப் போக பயமாக இருந்தது. வீட்டில் யாரேனும் விழித்துக் கொண்டிருக்கலாம். அவள் வெளியே செல்வதைப் பார்த்துப் பின் தொடர்ந்து வரலாம். இளவரசருடன் அவள் தனித்திருப்பதை அவர்கள் பார்த்துவிட்டால்? நினைக்கும் போது நெஞ்சு கழைக்கொடியாய் சுழன்றது... அதற்காக வீடு தேடி வந்த இளவரசரை மறுத்து அனுப்பி விடலாமா? எவ்வளவு ஆதங்கத்துடன் அவளைப் பார்த்து விசாரிக்க வந்திருக்கிறாரே? அன்று அவர் துணிந்து ஆற்றில் குதித்துக் காப்பாற்றி இராவிட்டால் இந்த உயிர் ஏது? அவளை நாடி அவ்வளவு தூரம் வந்தவர் ஏமாற்றம் அடைந்து திரும்பிப் போகவா? அவளுடைய நினைவு இருவிதமாகவும் வாதிட்டது. எது மேலென்று புரியாமல் உணர்வுகள் அவளை இருபுறமும் இழுத்தன. ஒரு சீலையை முகத்திரையாகப் போட்டு மூடிக் கொண்டு, மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து, பூனை போல நடந்து வந்தாள். பின் கதவைத் திறந்து பொடி தூவினாற்போல் சூழ்ந்திருந்த இருளில் அடியெடுத்து வைத்தாள். அவள் வெளியே வரக் காத்திருந்ததே போல அந்தக் கரம் அவளை இடையைச் சுற்றிப் பிடித்து இழுத்தது. “ஐயோ!” என்று அலறப் போனவளின் வாயை மற்றொரு கரத்தின் விரல்கள் இறுக மூடின. முகத்தருகே வந்த முகம் கன்னத்தை ஒற்றி எடுத்தது. “நான் தான் புவனா! பயப்படாதே!” என்று காதருகே பேசிற்று அந்த ரகசியக் குரல். காதில் அது விழுந்ததும் இடையைச் சுற்றி அணைத்த கரங்களின் தொட்டுணர்வில் சுகம் கண்டு மெய் மறந்து போனாள் புவனமோகினி. அவளை மெல்லத் தூக்கி அழைத்தபடி நடந்து சென்றான், சிவாஜி. இருவரும் மரத்தடியில் இருளில் கருப்புக் கட்டமாகத் தெரிந்த கல்மேடை மீது அமர்ந்தார்கள். தூரத்தில் நடுச்சாமப் பூஜை மணி அடித்து ஓய்ந்தது. இருவரும் சிறிது நேரம் பேசவில்லை. அணைப்பில் இணைந்த இருவருமே மெய்மறந்து போனார்கள். சிறிதும் அசங்காமல் ஆடாமல் சித்திரம் போல் இருந்தாள் புவனா. இருவருடைய பார்வைகளும் நெடுநேரம் கலந்து நிற்க, அந்த மகிழ்ச்சியின் இனிய அனுபவமாக இருவரும் வாய்மூடி இருந்தனர். “உன் சுரம் தெளிந்துவிட்டதா? உன்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் வந்தேன். உன்னை இரவு நேரத்தில் எழுப்பித் தொந்தரவு கொடுத்து விட்டேன் புவனா!” “இது இன்பத் தொந்தரவு இளவரசே!” “ஆற்றில் மூழ்கியதும் நடிப்புத்தானோ? அதுவும் நான் தழுவிச் சுமந்து இன்புற வேண்டும் என்று அளித்த இன்பத் தொந்தரவுதானோ?” “அது நினைவு மூழ்கிய நிலை. இது நிலை மறந்த நினைவு இளவரசே!” “உனக்குப் பாடவும் ஆடவும் தான் தெரியும் என்றிருந்தேன். கேரளத்துக் குயிலுக்கு கவிதையும் வருமா?” “கவிஞர்களை ஆதரிக்கும் அரசன் ஆளும் மண்ணில் கால் பட்டதும், கவிதையும் மலரத் தொடங்கிவிட்டது இளவரசே!” “உன்னை வெல்ல என்னால் முடியாது புவனா!” “இதற்காகவே தான் அன்பே! இப்படி ஒரு சுகம் விழையாமலே வரவேண்டும் என்று தான்!” என்று சிறிது தாபத்துடன் கூறிவிட்டு, “நான் இளவரசனா?” என்று கேட்டு விலகினான் சிவாஜி ஒரு பொய்க் கோபத்தோடு! “ஆம்! எந்த நாட்டுக்கு இல்லாவிடினும் என் இதயத்தின் இளவரசர் நீங்கள் தாம்!” என்று கனிவுடன் புரண்டு குழைந்தாள் புவனமோகினி. மகிழ்ச்சிக் கடலில் மிதந்தவர்களாய் ஒருவரை ஒருவர் அணைய, அங்கே சுவர்க்கமே இறங்கிப் படிந்தது. நேரம் போவது தெரியாமல் நெகிழ்ந்து நழுவிற்று... “திரும்பி விடு என் அன்பே! குளிர்காற்றில் உனது பூவுடல் சுரம் காணும். அதற்கு நான் காரணமாக இருக்கக் கூடாது. புறப்படுகிறாயா?”என்று கேட்டான் சிவாஜி. தன்னைப் பிரித்துக் கொண்டு, சிறிதே நகர்ந்தவள், மீண்டும் ஓடி வந்து அவனுடைய அணைப்பில் புகுந்து கொண்டாள். அவளை அப்படியே அள்ளித் தூக்கியபடி கதவுவரை சேர்த்துவிட்டு, விடைபெற்றுக் கொண்டான் சிவாஜி. குதிகாலைப் படியவிடாமல் மெல்ல மெல்ல அவள் நடந்து சென்ற அழகைக் குத்துவிளக்கின் முத்தொளியில் பார்த்தவண்ணம் நின்றான். அவளுடைய உருவம் படிகளில் ஏறி மறைந்த பின், பெருமூச்சு விட்டபடி திரும்பி நடந்து வந்தான். மீண்டும் சிப்பாயின் உடையுடன், சோலையின் எல்லையில் இருந்த சுவரைத் தாண்டி மறுபுறம் குதித்து கயிற்றால் மரத்தில் கட்டப்பட்டிருந்த குதிரையை அவிழ்த்து, முதுகில் தாவி ஏறினான். குதிரையின் கழுத்தை ஆதரவுடன் தடவிக் கொடுத்தான். அதுவும் அன்புடன் கனைத்துவிட்டுப் புறப்பட்டது. அதுவரை இளவரசனின் அடியொற்றி, அவருக்குத் தெரியாமல் ரகசியமாக மறைவிலிருந்து கவனித்திருந்த குதிரை வீரனும், தனது மறைவான இடத்தில் கட்டி இருந்த குதிரையைப் பற்றி ஏறிக் கொண்டு, பின்னாலேயே புறப்பட்டுச் சென்றான். கயைக்கு வந்து சேர்ந்த சரபோஜி மன்னரையும் மனைவிமார்களையும் தமது அரண்மனையிலேயே தங்கச் செய்தார் கயை அரசர் மித்ரஜித்சிங். அங்கே ஐம்பது நாட்கள் தங்கி, ‘அக்ஷயதிருதியை’யிலிருந்து தொடர்ந்து நாற்பத்தேழு நாட்கள் சரபோஜி அரசர் தனது முன்னோர்களை வழிபட்டு அஷ்டகயை செய்தார். வழி நெடுக அவர் பல்வகைப் பயிர்கள், செடிகள், மரங்களையும் பார்த்துக் குறிப்புகள் எடுத்து வந்தார். தமிழ் நாட்டில் தஞ்சைத் தரணியில் கிடைக்காத சிலவற்றின் விதைகளைச் சேகரித்து தஞ்சை அரண்மனைக்கு அனுப்பி வைத்தார். மிர்ஜாபூரிலிருந்து ‘அங்குர்’ என்ற திராட்சைப் பழத்தின் விதையையும், ‘சேவ்’ என்னும் பழ விதைகளையும், மாதுளம் பழ விதைகளையும் தஞ்சைக்கு அனுப்பினார். விதம்விதமான பாக்கு வகைகளையும், ‘மசூரா’ என்ற தான்ய விதை மூட்டையையும் அனுப்பி வைத்தார். அபூர்வமான பறவை இனங்களையும், விதம் விதமான காட்சி ஓவியங்களையும் அனுப்பி, தஞ்சை அரண்மனையை அலங்கரிக்கச் செய்தார். அங்கங்கே கிடைத்த பல்வேறு நாணயங்களையும் சரசுவதி மகாலில் காட்சிப் பொருளாக வைக்கும்படி உத்தரவிட்டு அனுப்பினார். பட்டுப்பூச்சிகளைப் பற்றிய நுட்பமான தகவல்களையும் சேர்த்து தஞ்சையில் வளர்ப்புப் பண்ணை தொடங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ‘சாரஸ்’ என்ற பட்சி வகைகளைத் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்தார். தாஸ்தான் மகால் தோட்டத்திலும், சிவகங்கை தோட்டத்திலும் வளர்க்க ஏற்பாடு செய்தார். அவற்றுக்கு உரிய உணவு வகைகளையும் குறிப்பிட்டு அனுப்பினார். ‘சாமா’ என்னும் பட்சியைத் தஞ்சை அரண்மனையில் சுலக்ஷணாவுக்காக அனுப்பி வைத்தார். தொடர்ந்து காசிக்கு வந்து சேர்ந்த போது காசித் தம்பிரானுடைய மடத்தில் தங்கினார். மூவாயிரம் பேர்கள் கொண்ட அவரது குழுவிற்கு தங்க இடமும் உணவு வசதிகளும் ஏற்பாடு செய்வது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஏறத்தாழ பத்து மாதங்கள் தொடர்ந்து பிரயாணம் செய்தமையினால், அலுப்பு மேலிட்டு பலருக்கும் நோய் கண்டது. அவற்றை மருத்துவர்களைக் கொண்டு கண்டுபிடித்து உரிய வைத்தியம் செய்ய வேண்டியதாயிற்று. மூத்த ராணியாருக்கு உடல் நலம் குன்றியபோது ஆங்கில வைத்தியரிடம் கையும் முகமும் காட்ட மறுத்துவிட்டார். மன்னர் உடனிருந்து ராணியாரை ஒப்புக்கொள்ள வைத்து மருந்துகளை வாங்கிக் கொடுத்தார். அன்று பரங்கித் தபால் மூலம் இளவரசரைப் பற்றிய ஒரு குறிப்பு தஞ்சையில் இருந்த சார்க்கேலிடமிருந்து வந்தது. அதில் எழுதப்பட்டிருந்த தகவல் மன்னருக்கு அதிர்ச்சியை உண்டாக்கிற்று. “இளவரசர் மாலைக்கு முன் அரண்மனைக்கு வருவதில்லை. இரவில் உணவுக்கு வராமல் கட்டமுது எடுத்துக் கொண்டு போகிறார். மாறுவேடமணிந்து பல இடங்களுக்குச் செல்கிறார். இரவு பதினோரு மணிக்குமேல் திரும்புகிறார். கடைசியாக அவர் இவ்வாறு சென்ற இடம் சுப்பராய ஓதுவாரின் நடன மண்டபத்துக்கு எனத் தெரிவிக்கப்படுகிறது” என்று அவர் எழுதி இருந்தார். மாலையிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை, பாடங்களை ஆசிரியர்களிடம் கற்க வேண்டும் என்பது மன்னர் செய்து விட்டுப் போன ஏற்பாடு. ஆனால் அந்த வேளையில் சிவாஜி உலாவப் போய்விடுகிறான் என்பது புரிந்தது. அதுவும் சுப்பராய ஓதுவாரின் இல்லத்தை ஒட்டிய நடன மண்டபத்துக்கு என்பதும் தெரிய வந்தது. சிவாஜி அங்கே என்ன செய்கிறான்? புவனமோகினியின் ஒப்பற்ற அழகு அவனை ஈர்க்க ஆரம்பித்து விட்டதா? தனது கடமைகளையும் பொறுப்புகளையும் துறந்து அவன் காதல் மயக்கத்தில் தன்னை இழக்கத் தொடங்கிவிட்டானா? திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகுமே? அதுவரை சிவாஜியை எப்படிக் கட்டுப்படுத்துவது? இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி மன்னரின் உள்ளம் குமுறியது. தஞ்சைக்குத் திரும்ப இன்னும் பத்து மாதங்கள் ஆகலாம். அதற்குள் விபரீதம் ஏதும் நேர்ந்துவிடாமல் இருக்க வேண்டும். எத்தனையோ விதமாகத் தன்னை சமாதானம் செய்து கொண்டும் மன்னரின் கவலை அடங்கவில்லை. இரவு நெடுநேரம் தூங்காமல் விழித்திருந்தார். சார்க்கேலுக்கு கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டு, விளக்குகளை அணைக்கப் போகும் தருணத்தில், அந்தக் கெட்ட செய்தி வந்து சேர்ந்தது! புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|
கன்னிவாடி ஆசிரியர்: க.சீ. சிவகுமார்வகைப்பாடு : சிறுகதை விலை: ரூ. 140.00 தள்ளுபடி விலை: ரூ. 125.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
பெண்களுக்கான புதிய தொழில்கள் ஆசிரியர்: ஆர். வைதேகிவகைப்பாடு : வர்த்தகம் விலை: ரூ. 180.00 தள்ளுபடி விலை: ரூ. 165.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|