இரண்டாம் பாகம் 1. மனம் புகுந்தாள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொள்ளும் எழில் வடிவில், வளமார் நங்கையாய், வசந்தத்தில் நாணிக் கண் பொத்தி நிற்கும் வனச் செல்வியாய், நீல மோகினியாய், வானவனின் காதலியாய் எழில் நிறைந்து திகழ்ந்தது அந்த மலைப் பிரதேசம். கண்களுக்கெட்டிய தூரமெல்லாம் ஒரே நீல மயம்; திரும்பும் இடமெல்லாம் குறிஞ்சித் தேன் உண்ணவரும் வண்டுகளின் ரீங்காரம்; அருவிக் கலகலப்பின் இனிமையை வர்ணிக்க இயலாது. காலமெல்லாம் கண் கொட்டாது நோக்கி நிற்கும் மலைக் காதலியை வானம் இறங்கி வந்து பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தழுவிப் போகுமோ? உடல் சிலிர்த்த மலை நங்கையின் உடலெல்லாம் பூந்துளிகளாகப் படிந்து மலர்ந்திருக்கும் அழகு, அந்த வானவனின் மேனி நிறமோ? அன்றி, வானவனின் மேனிக் கொப்ப இயற்கையன்னை பன்னிரண்டு ஆண்டுகளாக நூற்று நெய்த நீலப்பூம் பட்டாடையைச் செல்வ மகளுக்கு அணிவித்து மணமகனின் வருகைக்குக் காத்திருக்கிறாளோ? மெல்லிய மேகச் சல்லாத்துகில் கொண்டு மேனியெழிலை மறைத்தும் மறைக்காமலும் கள்ள நகை புரியும் கோலம் கண்டு இளங்கதிரோன் புன்னகை பூப்பது எதற்காக? “மடமகளே, உன் காதலன் நான்; வான்வெளியல்ல; நான் இல்லாத வானவெளியில் உயிர் இல்லை. என்னைப் பார்” என்று தான் நகை பூக்கிறானோ?
பிற்பட்ட சமூகத்தினர் என்ற வார்த்தையால் அவன் கண்ட வெளியுலகம் குறித்த ஓர் அடையாளம், விடுமுறை தோறும் மரகத மலைக்கு வரும்போதெல்லாம், கல்வி, நாகரிகம் என்று பண்படாத மக்களைக் காணும் போதெல்லாம் - அவன் மனசில் தைத்தது மட்டும் உண்மை. அவன் இப்போது கல்வி என்ற ஏணியில் ஏறிக் குறிப்பிட்டதொரு லட்சியத்துக்கு வந்து விட்டான். ஓய்வாக அம்மை, அப்பன், தம்பி, தங்கை என்று குலவ குடும்பத்தின் இனிய கற்பனைகளும் கனவுகளும் மனசைக் கிளர்த்தும் காலம்; திரும்பும் இடமெல்லாம் இயற்கையின் இளவேனிற் கோலம், தனிமையும் கூடி வந்த போது, கற்பனைகள் பொங்கியதில் அதிசயம் இல்லையே? உண்மையில் அந்த இளங்காலை வேலையில், குமரியருவி வீழும் காட்சியைப் பார்த்துக் கொண்டு மனதைத் தன் போக்கான கற்பனைகளில் படர விடுவதே அவனுக்குக் கடந்த இரண்டு மூன்று நாட்களாக வழக்கமாக இருந்து வருகிறது. மலைக்கு அப்பாலுள்ள மக்களையும், பல வண்ண நாகரிகங்களையும் கிருஷ்ணன் கண்டதும் அவற்றில் மோகம் கொண்டதும் ஓரளவில் உண்மையே. வண்ண வண்ணச் சேலைகள் தரித்துக் கார் குழலில் மல்லிகையும் முல்லையும் சூடி, வெளியுலகில் நடமாடிய பெண்களை முதல் முதலில் எத்தனை வியப்புடன் அவன் கண்டான். நேரான பாதைகள், மாடிக் கட்டிடங்கள், கல்லூரிகள், கடை கண்ணிகள், விரிந்து பரந்த நீலக்கடலைத் தழுவி வரம்போடு அடக்கி வைத்திருக்கும் அழகிய மெரினாக் கடற்கரை எல்லாவற்றையும் புதுமைக் கண்களுடன் கண்டு அதிசயித்திருக்கிறான். ஆனால், சொந்த மலையின் கவர்ச்சி என்றும் புதுமை வாய்ந்ததன்றோ? அதன் புதுமை என்றுமே மங்குவதில்லை. பருவங்கள் மாறி மாறி மலைப் பூமியை எவ்வளவு அழகாகக் காத்து வருகின்றன! ஒருவேளை அழகிய இயற்கையில் ஒன்றிவிட்டதனால்தான், அந்த மலைமக்கள் வாழ்க்கையில் முன்னேறவில்லையோ? தங்கள் சமூகம் ஓரளவில் நிறைவு கொண்ட சமுதாயம் என்பதே கிருஷ்ணனின் எண்ணம். மண்ணைக் கிளறித் தானியம் விளைப்பதும், தொழுவதும், உண்பதும், பெண்டிரைச் சேர்த்து மக்களைப் பெருக்குவதும் தவிர, வாழ்வில் ஏதுமில்லை, வேண்டாம் என்ற நிறைவு. மலையை வான அரசனின் காதலியாக எண்ணிப் பார்த்த தன் கற்பனையை உன்னிய போது கிருஷ்ணனுக்குப் பேரானந்தமாக இருந்தது. காதல் என்ற சொல் நினைவில் நிற்கவே, அவன் உடல் சிலிர்க்கக் கண்களை மூடிக் கொண்டான். அவன் தனக்குரிய அழகு மங்கையைத் தான் படித்திருந்த காவியங்களின் நாயகிகளைப் போலவும், தன்னை நாயகனைப் போலவும் பாவித்துக் கொண்டான். மாமன் மகள் என்று கூறிக் கொள்ள அவனுக்கு மாமன் இல்லை. தூர உறவான அத்தை ஒருத்தி தேன் மலையில் இருக்கிறாள். அவளுடைய மகள் ஒருத்திதான் முறைப் பெண் என்று சொல்லக் கூடிய நிலையில் உண்டு. அவளை எப்போதோ நாலைந்து பிராயத்தில் தீமிதித் திருவிழாவில் அவன் பார்த்திருக்கிறான். அவள் இப்போது பருவ மங்கையாக இருக்கக் கூடும். அவள் முகங்கூட அவனுக்கு நினைவில்லை. அவள் இப்போது எப்படி இருப்பாள்? அவர்கள் வழக்கப்படி, மார்புக்கு மேல் வெள்ளை முண்டுத்தான் உடுத்திருப்பாள். இளவேய்கள் போல் தோள்கள் தெரியும். உருண்டையான கைகளில் வெள்ளிக் கடகங்களும், தளிர் விரல்களில் மோதிரங்களும் அணிந்திருப்பாள். உச்சந்தலையை மூடி, வெளுப்பாக அவள் கட்டிக் கொண்டிருக்கும் வட்டுக்குக் கீழே, அடங்காத கருங்குழற்கற்றை, வட்டமதியன்ன முகத்தின் அழகுக்கு அழகு செய்யும். அரும்புப் பல் வரிசைகள் தெரிய, பவள இதழ்கள் விலக, அவனை ஓரக்கண்களால் நிமிர்ந்து பார்த்துவிட்டு, அவள் தலையைக் குனியும் போது!... குமரியாற்றின் பேரோசைக்கு மேல் கிண்கிணிச் சிரிப்புக்களும் பேச்சுக்களும் தனித்து ஒலித்து அவனைச் சிரிப்புடன் எழச் செய்தன. இரு மலைகளுக்கும் இடையில் குமரியாறு குதித்து வீழ்ந்து வட்டமிட்டுச் சுழித்து ஓடும் இடத்துக்கு, மேலிருந்து காடான செடிகளையும் புதர்களையும் விலக்கிக் கொண்டு, இளமங்கையர் கூட்டம் ஒன்று நீராட வந்து கொண்டிருந்தது. இளவேனிற் காலம்; ஒத்த பருவத்தினர்; சிரிப்புக்கும் கலகலப்புக்கும் ஏது பஞ்சம்? அங்கே மேலே பாறையில் இளங்காளை ஒருவன் அமர்ந்து தங்கள் சிரிப்பையும் கொம்மாளத்தையும் காணக்கூடும் என்ற நினைவே எழுவதற்கில்லாமல் அவர்கள் அந்த நதி மகளுக்கு மேல் அட்டகாசம் செய்தார்கள். இளம் பெண்களைக் கண்டு வானக் கதிரவனுக்கும் உற்சாகம் வந்துவிட்டது போலும்! அவன் மேகத்திரையை உதறிவிட்டு, காட்டிலும் மலையிலும் சிறு சந்துகளிலும் புகுந்து தன் கிரணங்களால் அந்த அருவிப் பெண்ணையும் மலரன்ன மங்கையரையும் தழுவிக் கொண்டிருந்தான். இடையிடையே பாறைகளையும் கற்களையும் முட்டி மோதிக் கொண்டு, பள்ளங்களில் சுழித்துச் சரிவுகளில் பளிங்காகி இந்திரஜாலங்களைப் புரியும் ஆற்றிலே, நடுநடுவே பாறைகளில் கால்களை நீரில் போட்டுக் கொண்டு உட்கார்ந்தவரும், நுரைத்து அழுக்குப் போக்கும் ‘வெக்கிச் செடி’ கொண்டு வந்து கல்லில் அரைத்தவரும், கரையில் முன்னேற்பாடாகத் தீமூட்டியவருமாக இருக்கையில், ஒருத்தி மட்டும் துணிச்சலாக இறங்கி முழுகிவிட்டு, மற்றவர் மீது நீரை வாரி இறைத்தாள். தீ எரியாதபடி அவள் இறைத்த நீர் கரையில் வாரி அடித்தது. தீமூட்டியவள் ஓடி வந்து அவளைத் துரத்தினாள். அந்தத் துணிச்சல் காரி, சொட்டச் சொட்ட, அரைத்த இலையைத் தலையில் தேய்த்துக் கொண்டு நீண்டகுழல் கருமேகங்களென நீர்ப்பரப்பில் தெரிய முழுகினாள். குளிரவில்லையோ? அல்லது பொறுத்துக் கொள்ளும் சக்தி அதிகமோ? தண்ணீரில் அவள் ஒருத்திதான் அப்படித் துளைந்தாள். மற்றவர்களைக் கேலி செய்து தண்ணீர் சொட்டச் சொட்ட நீரை வாரி இறைத்தாள். மறுபடியும் சருகுகள் சேகரித்துத் தீமூட்டிய நங்கைக்கு, அவள் அட்டகாசம் கோபத்தை வருவித்தது போலும்! அவளைத் துரத்திக் கொண்டே ஓடினாள். துரத்துபவளின் பிடிக்கு எட்டாமல் விலக முயன்ற மங்கை, பின்னால் பாறை சறுக்க, சுனைப் போல் தென்பட்ட இடத்தில் தொப்பென்று விழுந்து விட்டாள். பார்வைக்குச் சிற்றருவியாக, பல இடங்களிலும் முழங்கால் நீரே ஓடுவதாகத் தெரிந்தாலும், அணை போல் வட்டமாக இருந்த பாறைகளுக்கு நடுவே சுனைபோல் நிரம்பியிருந்த இடத்தில், நீரின் ஆழம் எவ்வளவு இருக்கும் என்பதைச் சொல்வதற்கில்லை. ஒரே சுழிப்பு, ஒரே வேகம்; காலை ஊன்றி வரமுடியாத வழுக்குப் பாறைகள். நல்ல ஆழத்தில் சுழன்று சுழன்று அவள் அபாயத்தில் திக்குமுக்காடியதைக் கண்டதும் அவர்கள் சிரிப்பும் கலகலப்பும் ஒரு நொடியில் அடங்கி விட்டன. “ஐயோ!” என்ற கூக்குரலுடன் அவர்கள் செய்வதறியாமல் கைகளைப் பிசைகையில் அங்கு ஒரு விந்தை நிகழ்ந்தது. உயரே, நதி விழும் இடத்துக்குச் சமீபத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், அருவியோடுதான் விழுந்து வந்தானோ என்ற வேகத்தில் பகலில் ஓடி வந்தான்; சுனையில் குதித்தான். கண்ணீரில் மூழ்கி மூழ்கித் தடுமாறும் மங்கையைத் தோளுக்கு மேல் பூப்பந்து போல் தூக்கிப் பாறைக்கு அப்பால் விடுத்தான். பின்பு கரையோரம் நகர்ந்து, வளைந்திருந்த மரக்கிளையைப் பற்றிக் கொண்டு எதிர்க்கரையில் ஈரம் சொட்டச் சொட்ட ஏறி நின்றான். குறும்புத்தனமெல்லாம் கண்களுக்குள்ளேயே அடங்கி ஒடுங்கிவிட்டாற் போன்ற ஓர் ஒளி சிந்த, அவள் தன் ஆடைகளைப் பிழிந்து கொண்டாள். “கிருஷ்ணண்ணன்!” என்று ஒருத்தி குறுநகை செய்தாள். “இவள் தான் பிடித்துத் தள்ளிவிட்டாள்!” என்று பொய்க்கோபம் கொண்டு புகன்றாள் அவள். “பார் பார், வேண்டுமென்றே விழுந்துவிட்டுப் பழியைப் போடுகிறாள்!” என்று சிரித்தாள் தீ மூட்டியவள். பின்னும் சருகு சேர்த்துக் கொண்டு. “இருக்கும், இருக்கும். இல்லையாடி பாரு? கிருஷ்ணனை மேலே பார்த்துவிட்டுத் தானே தண்ணீரில் விழுந்தாய்” என்றாள் இன்னொருத்தி. “அப்படித்தான், அப்படித்தான்!” என்று எல்லோரும் குபீரென்று சிரித்துக் கொண்டு, தீயில் சருகுகளையும் சுள்ளிகளையும் போட்டார்கள். பாருவுக்குக் கன்னம் சிவந்ததென்னவோ உண்மை. கருநீலமாகக் குளிரில் மாறிய அவள் இதழ்கள் தீயின் பக்கலில் வரவே அவசியம் இல்லாதபடி ரோஜாவாக மாறின. அவர்கள் ஆடைகளை மாற்றிக் கொண்டு வீடு திரும்பு முன் கிருஷ்ணன் வீடு சென்று விட்டான். விரிந்த விழிகளுடன் அவனை நோக்கிய அம்மை, “என்ன ஈரம் இது?” என்றாள். அம்மையானாலும் மங்கையொருத்தியை நீர்ச் சுழலிலிருந்து தப்புவித்ததைச் சொல்லிக் கொள்ள அவனுக்கு நாணமாக இருந்தது. “அருவிக்குப் போனேன். சுனையில் ஆழம் கொஞ்சமென்று இறங்கினேன்; நனைந்துவிட்டது” என்று சொல்லி, ஆடைகளை மாற்றிக் கொள்ளப் போனான். விரிந்த விழிகளை மாறாமலே அம்மை நோக்கினாள். எவ்வளவு உயரமாக வளர்ந்து விட்டான்! மாநிறத்தானென்றாலும் பாட்டனைப் போல நல்ல உயரம்; பெண்மையின் சாயை படிந்த முகம் வெயிலிலும் குளிரிலும் படாமல் பூவாய் வளர்ந்தவன், படிப்பில் தோய்ந்த உள்ளம். அன்னை உள்ளம் பெருமையில் பூரித்தது. எத்தனை புத்தகங்கள்! எத்தனை ஆண்டுகள் படித்து விட்டான் அவள் மகன்! அவனுக்கேற்ற பெண் ஒருத்தி வர வேண்டுமே! அவள் மண்ணைக் கிளறி மாயவேண்டாம். அவனுடைய புதுகைக் கண்களுக்கு உகக்க வேண்டுமே! பயிரிலும் விளைவிலுமே கவனத்தை ஊன்றியிருக்கும் கணவனின் கவனத்தை அவள் திருப்ப வேண்டும். அவள் வந்து, முற்றம் நிறைய அவளுடைய மைந்தனின் குழந்தைகள் விளையாட அவள் கண்டு களிக்க வேண்டும். தாயின் தீர்மானங்கள் ஒருபுறம் இருக்க, கிருஷ்ணன் உடைமாற்றிக் கொண்டு, வாசலில் வந்து நின்றான். அந்தச் செண்பகப்பூ மேனிக்கு உரியவள் அவனுக்குப் புத்தம் புதியவளாகத் தோன்றினாலும் புதியவள் அல்லள். அத்தனை மங்கையருக்குமிடையே அவள் ஒருத்திதான் வட்டமதி முகத்தினளாக, அரசிளங்குமரி ஒருத்தியைப் போல் தோன்றினாள். சின்னஞ்சிறு வயசிலிருந்தே அவன் கண்டுவரும் பாரு, இத்தனை அழகியாக எப்படி மாறினாள்? காதலைப் பற்றிக் கற்பனை செய்கையிலேயே இப்படி ஒரு நிகழ்ச்சி ஏன் நேர்ந்தது? உள்ளத்துக் குறுகுறுப்பு உடலெங்கும் பரவியது. அந்தக் குறும்புக்காரி, அவன் நோக்கிய போதே, அவனைப் புத்தம் புதிதாகப் பார்ப்பவளைப் போல் பார்த்தாளே, ஏன்? கல்வி கற்காவிட்டாலும் அறியாமையே மங்கைக்கு ஓர் அழகாக விளங்குமோ? ‘தனிப்பட்டவளாக, கொள்ளை அழகுடன் அண்டையிலே நான் காத்து நிற்பதை மறந்து, எவளோ தேன்மலைப் பெண்ணைத்தானே நினைத்தாய்?’ என்று அவள் பொய் கோபத்துடன் மன அரங்கில் நின்று அவனிடம் கேட்டாள். ‘நீ தேன்மலைக்காரியை நினைத்துக் கொண்டு கற்பனை செய்த பெண் நானே தவிர வேறு எவளும் அல்லள். தெரியுமோ? அப்படி நீ தேடினாலும் அவள் கிடைக்க மாட்டாள்?’ மின்னலைப் போல் பாய்ந்து ஓடினாள். கிருஷ்ணன் உள்ளம் இனிக்க, உலகம் மறக்க, சுனையில் முழுகித் தன்னுள் புகுந்து விட்ட அவளுடைய எண்ணங்களிலேயே திளைத்துக் கொண்டிருந்தான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
பேசும் பொம்மைகள் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2013 பக்கங்கள்: 230 எடை: 250 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-81-88641-37-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 180.00 தள்ளுபடி விலை: ரூ. 165.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான ‘டவுன் லோடிங்’ என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்திரத்துக்கு மாற்றிப் புகட்ட முடியுமா என்று பலர் வியந்து இதுசாத்தியமே இல்லை என்றார்கள். இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி நிலையில் இது சாத்தியமில்லைதான். ஆனால் இன்று அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளின் முற்போக்கு ஆராய்ச்சி நிலையங்களில் ‘செயற்கை அறிவு’ என்ற இயலின் ஒரு பிரிவாக இத்தகைய மூளைச் செய்தி மாற்றும் ஆராய்ச்சிகள் செய்து சிறிதளவு வெற்றி கண்டும் இருக்கிறார்கள். இந்த வெற்றியின் ஒரு கற்பனை விரிவாக்கம்தான் ‘பேசும் பொம்மைகள்’. நேரடியாக வாங்க : +91-94440-86888
|