நான்காம் பாகம் 7. பிரதிக்ஞை கோபாலனுக்கு அன்று அந்த வகுப்புக்குப் பாடம் எடுக்க வேண்டிய முறையன்று. ஆனால், அந்த வகுப்புக்குப் பாடம் எடுக்க வேண்டிய சமூக இயல் ஆசிரியர் அன்று வரவில்லை. எனவே நஞ்சனின் வகுப்புக்கு அன்று ஓய்வு வேளையில் அவன் பாடம் எடுக்க வந்திருந்தான். அம்மாதிரி ஓய்வு நேர வகுப்புகளில், கோபாலன் மாணவர்களுடன் இஷ்டம்போல் சகஜமாகப் பேசி உற்சாகம் எழும்பும் வகையில் அரட்டையில் காலத்தைத் தள்ளி விட்டுப் போவான். தலைக்குத் தலை மாணவர்கள் பேசினார்கள். சிரித்தார்கள்; பாடவும் தொடங்கினார்கள். “உஷ்!” என்று மேசையைத் தட்டிய கோபாலன், “என்ன சத்தம் போடுகிறீர்கள்” என்றான்.
“ஓகோ! இப்போது ஒரு கேள்வி போடட்டுமா?” என்று சிரித்த கோபாலன், “நாமெல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று முதலாக முழக்கியவர் யார் தெரியுமா?” என்று கேட்டான். சில விநாடிகளுக்கு அமைதி நிலவியது. “ம், எங்கே பீமா, சொல்லேன் நீதான்!” பீமன் என்ற பையன் எழுந்து நின்றான். “தெரியாதா? எங்கே நீ... நீ... நீ...” என்று ஒவ்வொருவராக ஆசிரியர் கைகாட்ட ஒவ்வொருவராக எழுந்து நின்றனர். வீச்சுள்ளி போலிருந்த பயல் ஒருவன் விறைப்பாக நின்று, “ஸினிமா ஸ்டார் பிரேம்குமார் ஸார்” என்றான். ஆசிரியருடன், விஷயம் புரிந்தவர், புரியாதவர் எல்லோரும் சிரித்தார்கள். “பிரேம்குமார் முழக்கினாரா? எத்தனை தடவைகள் வாழ்க்கைத் திரை பார்த்தாய்?” “ஐந்து தடவைகள் ஸார்” என்றான் பையன். மறுபடியும் சிரிப்புக் குபீரென்று அடுத்த வகுப்புக்குப் பரவ ஒலித்தது. அப்போதுதான் கோபாலனின் பார்வை சாய்வு மேசையில் தலையைச் சாய்த்துக் கொண்டு கூச்சலிலும் ஆரவாரச் சிரிப்பிலும் கலந்து கொள்ளாமல் அமர்ந்திருந்த நஞ்சனின் மீது விழுந்தது. கோபாலன் மேசையைத் தட்டிவிட்டு, “கிடக்கட்டும்; நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற துணிவில், சுதந்தரமாக ஒருவர் ஆனந்த நித்திரை செய்து கொண்டிருக்கிறார்; அவரைக் கேட்டுப் பார்க்கலாம். அவருக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்கும்” என்றான். “அனைவரின் கவனமும் நஞ்சன் மீது திரும்ப, சிரிப்பொலி கூரையைப் பொத்துக் கொண்டு போக எழும்பியது. நஞ்சன் திடுக்கிட்டவனாகத் தலை தூக்கிப் பார்த்தான். “எல்லோரும் எதற்குச் சிரிக்கிறீர்கள்? கப்சிப். அவர் விஷயத்தைப் புரிந்து கொண்டாரா! பார்ப்போம்” என்றார் ஆசிரியர். “எனக்கு ஒரே தலைவலி ஸார்” என்றான் நஞ்சன். வகுப்பில் அவன் ஒருநாள் கூட அவ்விதம் கவனக் குறைவாக இருந்து சிரிப்புக்கும் கிண்டலுக்கும் ஆளானதில்லை. தன்னந் தனியாக மூக்குமலை ஹட்டியிலிருந்து, ஏழைமையின் உருவமாகப் படிக்க வரும் நஞ்சன், வகுப்பிலும் தனியானவனே. வகுப்பில் அநேகமாக அவனே முதல்வனாக இருப்பான். எல்லோரும் தன்னைத் தாழ்வாகப் பார்ப்பது போன்ற பிரமை அவனுள் ஒத்தைக்கு வரத் தொடங்கிய நாளிலிருந்தே வளர்ந்திருந்தது. பெருமையாகச் சொல்லிக் கொள்ளக் கூடிய படித்த தந்தையோ, மாமனோ அவனுக்கு இல்லை. பெரிய தந்தை ரங்கன் கூடப் படிக்காதவர்; அவனைச் சேர்ந்தவர்கள் யாருமே கல்வியறிவில் மிக்கவர் அல்லர். ‘அந்தக் குடும்பத்திலே அவன் பேர் சொல்ல வேண்டும். படிக்க வேண்டும்’ என்ற ஒரே குறியுடன் அவன் படிக்க வந்து கொண்டிருந்தான். அவனை அறியாமல், கோபாலனைப் பார்க்கையில், அவர்கள் குடும்பத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இடையே இருந்த பகை, பொறாமை, லேசான மூட்டமாக, அன்று அவன் உள்ளத்திலும் பரவியது. “தலைவலி என்றால் வகுப்பில் படுத்துத் தூங்குவதா?” “அப்படியானால் வெளியே போகிறேன் ஸார்!” மறுபேச்சே இல்லாமல் நஞ்சன் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினான். எவருமே அப்படி அவன் துடுக்காக, துணிச்சலாக வெளியேறுவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. நஞ்சன் அப்படியே நடக்கும் மாணவன் அல்லன். ஏன் அவ்விதம் நடந்தான்? பசி. ஆம், அன்று காலையிலிருந்து அவன் ஏதும் சாப்பிட்டிருக்கவில்லை. கிழவர் ஆதரவாக அளித்த பூமியில் அம்முறை விளைவு சரியாக இல்லை. கிழவரின் மகன் கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பி நால்வர் உண்டு, நஞ்சனின் படிப்புச் செலவுக்கும் கண்டு மீறப் பணம் பற்றவில்லை. கைநீட்டி வாங்கியறியாத பாரு, ஒரு வேளை பட்டினி கிடந்தாள். மகனுக்கும் கிழவருக்கும் மட்டுமே காபி வைத்துத் தந்தாள். ‘இல்லாமை’ என்ற விஷயத்தை மகனிடம் மறைத்தாள்; அரைப் பட்டினி ஜோகியையும் தொற்றியது. அன்று காலை, இரண்டே இரண்டு ராகி அடை சுட்டு, அவனுக்கு ஒன்றும் கிழவருக்கு ஒன்றுமாக அவள் வைத்திருந்தாள். நஞ்சன் அடுப்படியைப் பார்த்துவிட்டு, “அப்பாவுக்கு? உங்களுக்கு?” என்று கேட்டான். பாரு வெண்ணையை வழித்து அவன் அடைமேல் வைத்தபடி, “இருக்கிறது; நீ சாப்பிடு” என்றாள். “எங்கே? காட்டுங்கள்.” உண்மையில் பாரு அடுப்புச் சுள்ளிகளை இழுத்து அணைத்திருந்தாள். கிழவருக்கு வயசான காலத்தில் வாய்க்கினிய பண்டங்கள் வேண்டியிருந்தன. நஞ்சனிடம் அவர் சில்லறை கொடுத்து, பள்ளி முடித்து ஒத்தையிலிருந்து வருகையிலே பஜ்ஜியோ, போண்டாவோ, லட்டோ வாங்கி வரச் சொல்வார். தொடக்கத்தில் மகனாக நினைத்து ஆதரவு தந்த முதியவர், பூமியைத் தந்தோம் என்ற நினைப்பில், அவர்களை அதிகாரம் செய்யும் முதலாளி ஆகிவிட்டாரோ என்று கூட நஞ்சனின் மனம் கொதித்தது உண்டு. கிழவரும் மகனும் மருமகளும் மலைப்பக்கம் வருவதில்லை. பெண்ணெடுத்த வீட்டுக்குத்தான் மகன் செல்வான். அவர்களுக்கு அந்த விளைவிலிருந்தும் பணம் மட்டுமே வேண்டும். அந்த வீடு, பூமி எதுவும் தேவையில்லை. இரண்டொரு மணி நேரம் வந்தாலும், மகன் தங்கள் உடைமைகளைத் தருமமாக அவர்களுக்கு வழங்கிவிட்டாற் போல் நடந்து கொண்டார்கள். நஞ்சனுக்கு இதெல்லாம் புரிய வயசாகவில்லையா? அன்றுங்கூடக் கிழவர், அவனிடம் இனிப்பும் காரசாரமான பொட்டலுமும் வாங்கிவரச் சொல்லி நாலணாத் தந்திருந்தார். பையன் வாங்கி வருகிறானே என்று, ஒருநாள் அவர் அவனுக்கு முழுசாக நாலணாக் கொடுத்தது உண்டா? பசி கவ்வும் வயிற்றுடன் குலுங்க குலுங்க அவன் எட்டு மைல் வந்து அவரிடம் தின்பண்டங்களைக் கொடுத்துவிட்டு, அம்மை பாடுபட்டு அன்புடன் தரும் தேநீருக்கு அடுப்படிக்குப் போவான். “இந்த வீட்டில் நான் மட்டும் பகாசுரனா? உங்களுக்கும் ஐயனுக்கும் ஒன்றுமில்லாமல், நான் இந்த அடையையும் காபியையும் தொடமாட்டேன்” என்றான். “இப்படியெல்லாம் எங்கள் மனத்தைக் கஷ்டப்படுத்தலாமா நஞ்சா? கோதுமை இருக்கிறது. ஆட்டிக் களி செய்யப் போகிறேன். எட்டும் எட்டும் பதினாறு மைல் நடந்து படிக்கும் பிள்ளையில்லையா நீ? இந்த வயசுக்கு இது போதுமா? சொன்னதைக் கேள்” என்று கண்ணீர் மல்க வேண்டினாள் பாரு. “மாட்டேன். இதில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் ஏற்க மாட்டேன். நீங்கள் தினமும் இதையே செய்து என்னைப் பாவியாக்குகிறீர்களில்லை?” என்று நஞ்சன் இரைந்தான். மாட்டை அவிழ்த்து விட்டு உள்ளே வந்து ஜோகி நஞ்சனின் கோபத்துக்குக் காரணத்தைப் புரிந்து கொண்டு விட்டார். அத்தகைய வறுமை பாரு வந்த பிறகு அவர்கள் அநுபவித்திருக்கவில்லை. மரகதமலை ஹட்டியில் அவர் இளைஞராக இருந்த காலத்தில் கூட வறுமை இல்லாமலில்லை. ஆனால் அப்போது எல்லாவற்றுக்கும் மேலான ஒற்றுமை மாய்ந்திருக்கவில்லை. வண்மையும் செல்வமும் தனியாகப் பிரிந்திருக்கவில்லை. பசியும் தெரிந்திருக்கவில்லை. ‘பாரெல்லாம் பச்சை விரிந்தும் மனத்தில் பசை இல்லாத நாட்கள் வந்து விட்டனவே! சொந்த மண்ணை விட்டு வந்ததற்கு இதுவோ தண்டனை!’ என்று ஜோகியின் மனம் விண்டது. துயரை விழுங்கிக் கொண்டு, கடைந்த மோரில் ஒரு குவளை குடித்து விட்டு அவர் வெளியே சென்றார். கிழவர் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாதவராகப் புகைபிடித்துக் கொண்டிருந்தார். நஞ்சனுக்கு மனம் பற்றி எரிந்தது. யார் மீதென்று தெரியாமல் கோபமும் ஆத்திரமும் வந்தன. அவற்றை அம்மையின் மீது காட்டுபவனாக எரிந்து விழுந்து விட்டு, புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்து விட்டான். முதல் மணியிலேயே வயிறு வழக்கப்படி கூவியது. கணக்கில் அவன் கவனத்தைச் செலுத்தினான். இரண்டாம் மணியில் பொறுமை இழந்த வயிறு, ‘மறந்து விட்டாயா அப்பனே?’ என்று அவனிடம் கூவிப் பார்த்தது. அக்கினியை நெஞ்சுக்கு அனுப்பியது. நஞ்சன் சொல்லிலக்கணத்தில் ஊன்றியிருந்தான். இடைவேளை மணி அடித்ததும் பையன்கள் எல்லோரும் சாப்பாட்டுக்குச் சென்றார்கள். நஞ்சன் வெளியே வந்தான். பள்ளிக்கூட மேட்டிலிருந்து கீழே இறங்கினால், சந்தைக் கடை; சினிமாக் கொட்டகைப் பக்கம் சிற்றுண்டி, தேநீர்க் கடைகள்; நாவில் நீரூறச் செய்யும் கார மசாலாவின் மணம். வயிற்றுக்குள் கிடந்த அசுரன் நிலை தெரியாமல் எழும்பி எழும்பிக் குதித்தான். நஞ்சன் பல்லைக் கடித்துக் கொண்டு, பள்ளி மேட்டுக்கே திரும்பினான். குழாய்த் தண்ணீரைப் பருகிவிட்டு, எவரையும் பார்க்க இஷ்டப்படாதவனாகப் புல்லுத் தரையில் உட்கார்ந்து ஆங்கிலப் பாடப் புத்தகத்தைப் பிரித்தான். ‘அன்பு எங்கே இருக்கிறதோ, அங்கே தெய்வம் இருக்கிறது’ என்ற தலைப்புடைய டால்ஸ்டாயின் சிறுகதை அன்று நடந்து முடிந்த ஆங்கிலப் பாடம். ஆப்பிள் திருடிய சிறுவனையும் கிழவியையும் பற்றி படிக்கையிலே, ஆப்பிளின் நினைவில் நாவில் நீர் ஊறியது, கன்னம் வலித்தது. புத்தகத்தை மூடிவிட்டுப் புல்லுத்தரையில் சாய்ந்தான். கணகணவென்று மணி ஒலித்ததும், தள்ளாடியவனாக வகுப்பறைக்குள் சென்றான் அவ்வளவே தெரியும். திரும்பி வருகையில், கோபாலனின் சிரிப்பில், அவன் முழுவதும் அறிந்தும் அறியாமலும் உணர்ந்திருந்த பகைமையுணர்வு பசித் தீயைப் போல் பொங்கி வந்தது. வெளியே ஹோட்டல் ரேடியோ, “அம்மா பசிக்குதே...” என்ற பாட்டை அலறியது. அந்தக் கார்த்திகை மாசக் கடைசியில், மழை ஓய்ந்து அடித்த வெயிலிலே உதகை பூங்காவைப் போல் காட்சியளித்தது. தன் நினைவின்றித் தோட்டச் சாலையில் நடந்து சென்ற அவனுக்குச் சட்டென்று, காலையில் கிழவர் தந்திருந்த நாலணாக்காசு நினைவுக்கு வந்தது. தோட்ட வழியில் தென்பட்ட ‘ஊட்டி பவனில்’ நுழைந்தான். இரண்டு தோசையும் டீயும் வாங்கிச் சாப்பிட்டான். ஓரணாவுக்கு ஒரு காரச் சாமான் பொட்டலம் வாங்கிப் பைக்குள் வைத்துக் கொண்டான். புல்லுச் சரிவில் ஐரோப்பியக் கான்வென்ட் பள்ளிச் சிறுமிகள், பூச்செண்டுகள் போல் உருண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரே மாதிரியான நீல உடைகள்; இரட்டைப் பின்னல்கள். செழுமையின் சின்னமாக, ரோஜாக் கன்னங்கள்; பவள இதழ்கள்; மகிழ்ச்சியின் ஒலிகள் காற்றில் இன்ப லயத்தோடு கலந்து வந்தன. வெள்ளைக்கார ஆசிரியை ஒருத்தி பெஞ்சில் அமர்ந்து, கம்பளி நீலநிற ரிப்பன் ஒன்றை வைத்துக் கொண்டு விளையாடிய அந்தச் சிறுமி... நஞ்சன் கூர்ந்து பார்த்தான். ஐரோப்பிய கான்வென்டிலே, பெரிய சீமான் வீட்டுச் செல்வியர், துரைமார்களின் புதல்விகளுக்கு நடுவே, அந்தப் பெண் டாக்டர் அர்ஜுனனின் மகள்; கிருஷ்ண கௌடரின் பேரப்பெண்! மரகதமலை ஹட்டிக்கு அவள் அதே ‘யூனிபாரம்’ உடையுடன் வந்து சென்றதை அவன் கண்டிருக்கிறானே! அந்தக் குடும்பத்தில் பெண்களுங்கூட உயிர் கல்வி கற்கிறார்கள்! அவன்... அவன்...? ஆயிரமாயிரம் எண்ணங்களுடன் அவன் அங்கே நின்றான். சற்றைக்கெல்லாம் சிறுமிகள் புடைசூழ ஆசிரியை அங்கிருந்து கிளம்பிவிட்டாள். நேரம் சாயத் தொடங்கிவிட்டது என்ற உண்மை நஞ்சனுக்கு அப்போதுதான் நினைவில் படிந்தது. புத்தகங்களைப் பற்றியவாறு அவன் வீடு செல்ல நடக்கையில், கால் செருப்பில் ஏதோ மாட்டிக் கொண்டது. அந்த நீல நிறப் பட்டு நாடா, அந்தப் பெண் தான் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அதை எடுத்து மடித்துப் பைக்குள் வைத்துக் கொண்ட அவன், ‘எத்தனை துன்பங்கள் வந்த போதிலும், உயர் கல்வி பயின்று, அந்தக் குடும்பத்துக்குச் சமமாக, பேர் சொல்ல முயல்வேன்!’ என்ற பிரதிக்கினையுடன் நடந்தான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|
தீட்டும் புனிதமும் ஆசிரியர்: சுப. வீரபாண்டியன்வகைப்பாடு : சொற்பொழிவு விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
நான்காவது சினிமா ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்வகைப்பாடு : சினிமா விலை: ரூ. 140.00 தள்ளுபடி விலை: ரூ. 130.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|