8. உயிரை விட உயர்ந்ததல்லவோ உண்மை? - நான்காம் பாகம் - குறிஞ்சித் தேன் - Kurinji Then - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



நான்காம் பாகம்

8. உயிரை விட உயர்ந்ததல்லவோ உண்மை?

     நஞ்சன் தொடாத அடையும் வெண்ணெயும் தட்டில் அப்படியே இருந்தன. அடுப்புச் சுற்றி சூடேறி, சாம்பல் பூத்து அவிந்து போயிற்று. பாருவின் கன்னங்களில் கண்ணீரும் காய்ந்தது.

     பையன் உள்ளம் நொந்து பசியோடு சென்றானே! பசியோடு அவனை அனுப்பிவிட்டாளே பாவி! பெறாதவளுக்கு அருமை இல்லையா? அவன் பசியோடு செல்லப் பார்த்துக் கொண்டு கல்நெஞ்சாக அவளும் இருந்து விட்டாளே! ஓடிப்போய் அழைத்து வரத் தெரியாதவளாக இருந்து விட்டாளே! எட்டு மைல் நடந்து செல்பவன், வெறும் வயிற்றுடன், டீத் தண்ணீர் கூடக் குடிக்காமல்... அவன் கோபத்தை எப்படியோ கிளப்பி விட்டாளே!

     அடுப்படியிலே பிரமை பிடித்தவளாக அவள் உட்கார்ந்திருக்கையில் கிழவர் வந்தார். “ஏனம்மா தண்ணிக்குப் போகவில்லை? ஏன் உட்கார்ந்திட்டே” என்றார்.

     பிள்ளை பசியோடு சென்றதைக் கழுகுக் கண்களுடன் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டுக் கேள்வி கேட்கிறாரே!

     “நஞ்சன் ஒன்றும் சாப்பிடாமல் ஸ்கூல் போய் விட்டான், மாமா!” என்றாள் பாரு, கண்களில் மறுபடி நீர் பெருக.

     கிழவர் சிரித்தார். புகையேறிக் கறுத்த அந்தச் சிரிப்பு, அவளுக்கு நெருப்பாக இருந்தது. “பெரியவனாகிப் போகிறானே? இனிமேல் உன்னையும் என்னையுமா அவன் லட்சியம் செய்வான்?”

     “நீங்கள் இரக்கமில்லாமல் பேசுகிறீர்கள், மாமா?”

     “உனக்கு இரக்கப்பட்டுத்தான் சொல்கிறேன். உயிரைக் கொடுத்து என்ன படிப்பு? உனக்கு அது உதவப் போகிறதா? புத்தியில்லாத பெண்ணே, பிழைக்கும் வழியைப் பார்!”

     பாரு மறுமொழி என்ன சொல்வாள்? குழம்பிக் குழம்பி, உறுதிக்கு வந்தவளாய்க் கண்களைத் துடைத்துக் கொண்டாள். புருஷனிடமிருந்து அவள் விலகிவிட்டாளா? இல்லையே! ரங்கம்மை குடும்பத்துக்கு ஜோகியண்ணன் பயிரிட்ட நிலம் தானமா? விளைவில் சிறு பங்கேனும் அவர்கள் ஏன் கொடுக்கக் கூடாது? நஞ்சன் ஒத்தையில் படிப்பை முடித்துவிட்டுக் கோயம்புத்தூருக்குப் படிக்கச் சென்றால், இன்னும் அதிகப் பணம் தேவையாக இருக்குமே!

     தம்பி அண்ணன் குடும்பத்துக்கு எத்தனை நாட்கள் உதவியிருக்கவில்லை? இப்போது, அண்ணன் அந்த நன்றி கொண்டேனும் தம்பி மகனின் படிப்புச் செலவுக்கு உதவலாகாதா?

     ஜோகியிடம் மரகதமலைக்குச் சென்று உதவி கோரப் போவதை வெளியிட்டால், அவர் ஆமோதிக்கமாட்டாரோ என்ற சந்தேகம் அவளுக்கு உண்டு. ஆனால், எது எப்படியானாலும் அன்று மாலை, நஞ்சன் பசியுடன் சோர்ந்து வீடு திரும்பும் வரையில் அவள் கண்ணீர் விட்டுக் கொண்டு உட்கார்ந்திராமல் வேறு வழி தேட வேண்டுமே!

     அவசியமான வேலைகளை முடித்துவிட்டு, அவள் விளைநிலத்தின் பக்கம் செல்லுபவளைப் போல், மரகத மலைக்கு நடக்கலானாள்.

     இருட்டுக் கருக்கலுடன் அந்த மலையைவிட்டு அவள் இறங்கி அருவிக்கரை தாண்டி வந்த பின், அந்த ஹட்டிப் பக்கம் செல்லவே இல்லை. குமரியாற்றுக்கு அப்பால், என்ன என்ன மாறுதல் நிகழ்ந்திருக்கின்றன என்பதை யெல்லாம் கவனியாதவளாக, பொழுது சாய்வதற்குள் போய் வெற்றியுடன் திரும்பிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கில் நடந்தாள்.

     மரகதமலைப் பள்ளிக்கட்டிடம், தகராறுகள் தீர்ந்து, அப்போதுதான் ஒருவாறாக ஆரம்பமாகியிருந்தது. ரங்கனே கட்டிடக் குத்தகை எடுத்திருக்கிறான் போலும்! மரம் அறுப்பவர்களும் கொத்துக்காரர்களும் சிற்றாள்களும் சூழ நடுவே நீல ஸர்ஜ் கோட்டும் தலைப்பாகையுமாக ரங்கன் தான் அதிகாரம் செய்து கொண்டு நின்றான்.

     பாரு அங்கே மேலே ஏறாமலே சுற்றி வீட்டின் பக்கம் வந்தாள். லாரி நின்றது, ஒரு புறத்தில். ராமன் வீட்டில் சாப்பாட்டு நேரத்துக்கு வந்திருந்தான் போலும்! சாப்பிட்டுக் கைகழுவ வெளியே வந்த அவன் தான் முதலில் அவளைக் கண்டவன்.

     “நல்லாயிருக்கிறீர்களா மாமி? நான் இப்போதெல்லாம் தினமும் உங்களை நினைக்கிறேன். ஆரஞ்சு மரத்தை நேற்று வெட்டினார்கள். அங்கே இப்போதுதான் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டே சாப்பிட்டேன். எங்களை விட்டுப் போன பின் திரும்பியே இங்கு வராமல் இருந்து விட்டீர்களே!”

     “எங்கே நான் போய் விட்டேன்? நல்லா இருக்கிறீர்களா” என்றெல்லாம் பாரு விசாரித்தவளாக, சூழ்ந்த குழந்தைகளுக்கு, வழியில் வாங்கி வந்த ஓரணாப் பொரி கடலையைக் கொடுத்தாள்.

     தங்கச் சங்கிலியும் அரும்பு மீசையும் லுங்கியுமாக லிங்கன் வந்தான்.

     “எங்கே வந்தீர்கள் பெரியம்மா?” என்று விசாரித்தான்.

     ரங்கம்மை, கௌரி எல்லோருமே வந்து விசாரித்தார்கள். அவள் ஒட்டிப் பழகாமல் விட்டுப் போயுங் கூட, ஒரு மனை மக்கள் என்ற உறவில் சூழ்ந்து கொண்டு பேசிய போது எத்தனை ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் அவளுக்கு இருந்தது!

     ரங்கம்மை உபசாரங்களால் அவளைத் திணற அடித்தாள். ராமன் மேற்பரணியில் ஏறி, கூடையில் அவளுக்குக் கொண்டு வரத் தெரியாமல் வைத்திருந்த ஆரஞ்சுப் பழங்களை எடுத்தான். பழங்களைக் கண்டதும் பாருவுக்குக் கண்களில் நீர் கசிந்தது. அவள் குழந்தையைப் போல் வளர்த்த மரம்.

     ‘தாயே எங்களம்மை போய்விட்டாள்’ என்று கூடைப் பழங்களும் தன்னை நோக்கிக் கூவினாற் போன்ற ஒரு பிரமை உண்டாயிற்று அவளுக்கு.

     சுற்றி நின்ற குழந்தைகளிடமெல்லாம் ஆளுக்கு ஒரு பழம் தந்தாள்.

     “என்ன அண்ணி? இவர்கள் நிறையத் தின்றிருக்கிறார்கள். ராமா, மூலையில் எடுத்து வை. நஞ்சனுக்கும் ஜோகியண்ணனுக்கும் கொண்டு போட்டும்” என்று கூறிய ரங்கம்மை, “நஞ்சன் நல்லா இருக்கிறானா?” என்று விசாரித்தாள்.

     பாரு பெருமையும் சோகமும் இழையோடும் குரலில், அவன் நன்ராய்ப் படித்துப் புத்தகங்களாகவே பரிசுகள் வாங்கி வருவதையும், எட்டும் எட்டும் பதினாறு கல் ஏறி இறங்கி நடப்பதையும் கூறிக் கொண்டாள்.

     “நான் சந்தைப் பக்கம் லாரி கொண்டு போகையில் ஒத்தையில் பார்ப்பேன். மாமி, இந்தாருங்கள், நான் ஒரு பழம் உரித்துத் தருகிறேன். நீங்கள் சாப்பிடுங்கள். என்ன ராமி, நின்று விட்டாயே? அவர்களுக்குச் சாப்பாடு கொண்டு வா” என்று மனைவியையும் கையோடு விரட்டினான். இதற்குள் ரங்கம்மையே வட்டிலில் சோறும் கீரைக் குழம்பும் கோசும் வைத்து எடுத்து வந்தாள்.

     “நீயும் வாம்மே, நீயும், நீயும்” என்று பாரு சுற்றி நின்றவர்களை எல்லாம் அந்த விருந்துக்கு அழைத்தாள். வாயிற்படிக்கு அப்பால் நின்ற கௌரியும் வந்து ஒரு கவளம் எடுத்து உண்டாள்.

     எத்தனை நாட்களாயின, இப்படி உறவோடு கலந்து உண்டு!

     “லிங்கனப்பா எப்போது வீடு வருவாங்க?” என்று பாரு, கௌரியிடம் விசாரித்தாள்.

     “டீ குடிக்க வருவார்” என்று கூறியபடியே, கௌரி கைவளையல்களைச் சேலைத் தலைப்பால் துடைத்துவிட்டுக் கொண்டாள்.

     பொன் வளையல்கள் செலவழிக்கும் அவள் கணவன், நஞ்சனின் படிப்புச் செலவுக்கு மாசம் பதினைந்து ரூபாய் கொடுக்க மாட்டானா? தானே அவனைத் தேடி எப்படி அந்த மனைக்குச் செல்வது என்று அவள் தயங்கித் தடுமாற வேண்டியிருக்கவில்லை. ரங்கனே தம்பி மனைக்கு வந்தான்.

     “நல்லாயிருக்கியா? நஞ்சன் படிக்கிறானா?” நல்ல சூசகமாக வரும் விசாரணை.

     “இருக்கிறான்... நான்... நான்...” சட்டென்று அவளால் ஏதும் கேட்கக் கூட நா எழவில்லை. கட்டிய கணவனென்று, அந்த வீட்டில் மனைவி என்ற உறவுடன் இருந்த நாட்களில் கூட அவள் ஒன்றும் கேட்டதில்லையே?

     “என்ன பாரு? மாமா நல்லாயிருக்கிறாரா?”

     “நான்... எனக்குக் கொஞ்சம் பணம் வேண்டுமே. அதற்குத்தான் வந்தேன்” என்றாள் பாரு தலை நிமிராமலே.

     அவன் மறுமொழியே இல்லாமல் கோட்டுப் பைக்குள் கைவிட்டான். ஒரு பத்து ரூபாய் நோட்டை அவளிடம் எடுத்துத் தந்தான். நன்றி பளபளக்க, “மாமன் ஸித்தனுக்குப் பணம் அனுப்புகிறார். விளைவு சாப்பாட்டுக்கு போதும். நஞ்சன் பெரிய கிளாஸ் போகிறான். நோட்டுப் புத்தகம் துணி வாங்கப் பத்தவில்லை. எனக்கு மாசாமாசம் இது போல் கொடுத்தால்...” என்று நிறுத்தினாள் பாரு.

     “எனக்கு நினைவிருக்காது. வந்து கேள். இல்லையானால் நஞ்சனை அனுப்பு. ரங்கம்மா, அண்ணி சாப்பிட்டாங்களா? காபி வைத்துக் கொடுத்தாயா?” என்றெல்லாம் விசாரித்தான்.

     பாரு தலையை ஆட்டியவண்ணம் பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொண்டாள்.

     “இப்போதே போகிறாயா?”

     “ஆமாம், ஜோகியண்ணனிடங் கூடச் சொல்லாமல் வந்தேன்.”

     “ராமா, கீழ்மலை வரை லாரியிலே கொண்டு போய் விடு” என்று பணித்துவிட்டு, ரங்கன் சென்றான்.

     இரண்டு படிபோல் கோதுமை, கிழங்கு, ஆரஞ்சு கொண்ட சாக்கு மூட்டை இவற்றுடன் ராமன் அவளை அருகில் வைத்துக் கொண்டு லாரியை ஓட்டினான். நல்ல சாலை இல்லாத இடங்களில் அந்தச் சாமான் வண்டி குலுங்கிய போது பாருவுக்குத் தன்னையும் அறியாமல் சந்தோஷம் உண்டாயிற்று.

     அவள் கணவன் நல்லவன்; கௌரி, ரங்கம்மை, லிங்கன் எல்லாருமே நல்லவர்கள். ராமனுக்குத்தான் அவளிடம் எத்தனை பிரியம்! சொந்த மண், சொந்த ஜனங்கள், அந்த ஆனந்த நெகிழ்ச்சியில் அவளை அறியாமல் பேச்சும் வந்தது. “தேவகி ‘ஸ்கோல்’ போகிறாளா ராமா?”

     “ஓ! எனக்குத்தான் பெண் தருகிறேனென்று ஏமாற்றினீர்கள், நான் மறந்து விடுவேனா? நஞ்சன் பெரிய படிப்புப் படித்து வரும்போ, நான் பெண்ணை மட்டியாக வைத்துக் கொள்வேனா?” என்றான் ராமன்.

     அவள் மகிழ்ச்சியில் கண்களை மூடிக் கொண்டாள்.

     ‘ஆறேழு வருஷங்கள் வண்டியில் செல்வது போல் ஓடி விட வேண்டும். அப்போது... அப்போது...’ அந்த மனநிலையை அவள் தாங்க முடியாமல் உள்ளம் பூரித்துப் பொங்கியது.

     அந்தத் தேன்மலைக்காரியின் மகளைப் போலவே, காதுகளிலே தோடு, லோலாக்கு இழைய இழையப் பளபளக்கும் புடவை எல்லாம் அணிந்த தேவகியை, அவள் வளர்ந்து நின்ற நஞ்சனின் பக்கத்தில் நிறுத்திப் பார்த்தாள். அந்த நாள் விரைந்து வரவேண்டும்!

     வண்டி நின்று விட்டது.

     பாரு கோதுமைச் சுமையைத் தலையில் வைத்துக் கொண்டாள். லாரியில் வந்த கூலியாள் ஒருவன் கிழங்கு மூட்டையைச் சுமந்து கொண்டான்.

     “அவசரமாய் இப்போது போகிறேன். மாமனிடம் சொல்லுங்கள் - நான் அப்புறம் வருகிறேன்” என்றான் ராமன்.

     சுமையுடன் கூலியாளுக்குச் சமமாக அவள் விரைந்து மூக்குமலைமேல் ஏறினாள். மரகதமலைப் பாதைப் போல் செம்மைப் படாத பாதை. நஞ்சன் பசியோடு திரும்பியிருப்பானோ என்ற ஒரே நினைவுதான் அவள் உள்ளம் முழுவதும் வியாபித்து நின்றது. அவன் பட்டினி கிடக்கும் நினைவில் ரங்கம்மை வைத்த சோறு அவளுக்கு நாவில் வைக்கக் கூடப் பிடிக்கவில்லையே!

     மேலே அவள் ஏறி வருகையில், ஹட்டிப்பக்கம் வெள்ளை உடுப்புக்கள் அணிந்தவர்கள் ஐந்தாறு பேர்கள், தலையில் வெள்ளைக்காரர் தொப்பியணிந்த சீமான்கள் சென்றதை அவள் கவனித்தாள். ஜோகியண்ணனும் அவர்களுடன் சென்றதையும் அவள் கவனித்தாள்.

     யாரோ? காபியும் டீயும் வந்த பிறகு, அத்தகைய ஆபீசர்கள் வருவது சகஜமாகத்தானே இருக்கிறது?

     சட்டென்று, நாளை நஞ்சனும் அப்படி உடுப்புகளும் தொப்பியும் அணிந்து வருவான் என்ற எண்ணம், குபீரென்று மலர் போல் அடித்தளத்திலிருந்து எழும்பி மலர்ந்தது.

     வீட்டுக்குள் சென்றவள், கிழங்கை வேக வைத்து விட்டுக் கோதுமையைக் குற்றிக் கல் திரிகையில் இட்டு உடைத்தாள்.

     நேரம் மங்குமுன் தண்ணீர் கொணர்ந்து கிழவருக்குத் தேநீர் வைத்துக் கொடுத்தாள். கோதுமைச் சோறும் குழம்பும் ஆக்கிட்டு, மாடத்தில் விளக்கும் வைத்துவிட்டாள்.

     ஒவ்வொரு வீட்டிலும் வேலைக்குச் சென்ற ஆண்கள் திரும்பி வந்து விட்டார்கள். மாடுகள் கொட்டிலுக்குத் திரும்பி விட்டன. பெண்கள் சுள்ளிகள் சடபடவென்று வெடிக்க அடுப்புத் தீயை மூட்டிவிட்டார்கள். பாரு வாயிலில் வந்து வந்து பார்த்தாள்.

     காலையில் சென்ற பையன் இன்னும் வரவில்லையே! வழக்கமாக அவன் வரும் நேரம் தாண்டவில்லை, என்றாலும் அன்று வழக்கம் போல் அவன் சென்றிருக்கவில்லையே! கானகப் பாதையில் எங்கேனும் மயங்கி விழுந்திருப்பானோ? ஏன் வரவில்லை?

     ஜோகியண்ணனும் கூட வரவில்லையே! ஒரு வேளை அவர்கள் வேட்டைக்கு வந்த கறுப்புத் துரைமார்களோ? ஜோகியண்ணனுக்கும் வேட்டைக்கும் வெகுதூரம் ஆயிற்றே!

     நேரம் செல்லச் செல்ல அவள் துடிப்பு உச்சத்துக்கு ஏறியது.

     பனிப் போர்வையை விரித்து, மலையன்னை உறங்கச் சித்தமாகி விட்டாள்.

     ஜோகி, “அண்ணி!” என்று அழைத்துக் கொண்டு வந்தார். அவர் குரலில் என்றுமில்லாத உற்சாகம் இருந்தது.

     “நஞ்சன் இன்னும் வரவில்லையே?” என்றாள் அவள் அவர் எதிர்பட்டதுமே.

     “தினம் வரும் நேரமாகவில்லையே?” என்ற ஜோகி, “கேட்டாயாம்மே? சின்ன வயசில், நான், அண்ணன், கிருஷ்ணன் எல்லோரும் மாடு மேய்த்துக் கொண்டு படுத்திருப்போமே, உனக்குக் கூட நினைவிருக்கிறதா? காப்புக்கூட ஒருநாள் தொலைந்து போச்சே! அப்போது...”

     “இந்தப் பேச்சுக்கெல்லாம் இப்போது என்ன அவசரம்?” என்று பதறிய பாரு, “பையன் காலையில் எதுவும் சாப்பிடவில்லையே அண்ணா?” என்றாள் குறுக்கே புகுந்து.

     “கவலைப்படாதே அம்மே. அவன் என்ன பச்சைப் பிள்ளையா? ஏதேனும் சாப்பிட்டிருப்பான்” என்று கூறிவிட்டுப் பழைய வேகத்துடன், “இதைக் கேளும்மே; ஒரு நாள், இந்த மலை முழுவதும் பெரிய பெரிய விளக்குகள் போட என்ன செய்யலாம் என்று நான், அண்ணன், பெள்ளி - பெள்ளி கூடத்தான் எல்லாரும் சர்ச்சை பண்ணினோம். அப்போது கிருஷ்ணன் தான், ‘ஆற்றுத் தண்ணீரை மந்திரம் போட்டு எண்ணெயாக்குவோம். முட்டுக் கோத்தரைப் பெரிய பானை வனைந்து தரச் சொல்வோம்’ என்றெல்லாம் சொன்னான். நிசமாகவே, குமரியாற்றுத் தண்ணீரைக் கொண்டு, ஊர் மலை எல்லாம் விளக்கெரிக்கும் காலம் வருகிறதாம் அண்ணி!”

     பகைவன் என்று அவன் பேரைக் கூட உச்சரிக்கக் கூசும் ஜோகி, தம்மை மறந்த உற்சாகத்தில், இருள் மறைந்து ஒளி பரவப் போகிறது என்ற மகிழ்வில் பேசிக் கொண்டு போனார்.

     பாருவுக்கு அவர் பேச்சு அப்போது கொஞ்சமும் பிடிக்கவில்லை.

     “மத்தியான்னம் எல்லா ஆபீசர்மார்களும் இங்கெல்லாம் சுற்றினார்கள். காடு மலை எல்லாம் சுற்றி, ஆறு மழைத் தண்ணீர் எல்லாம் கணக்கெடுக்கிறார்கள். நானும் அவர்களுடன் சந்தனச் சோலை வரையில் போனேன். அங்கே கூடாரம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன என்னவோ கருவிகள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரே ஆச்சரியமாக இருக்கிறது.”

     அவர் பேச்சைப் புரிந்து கொள்ளுமுன், அவள் இருதயம் அந்த ஏங்கிக் கிடந்த அடிச்சத்தத்தைப் புரிந்து கொண்டு விட்டது. ஆவல் துள்ள, அவன் வாயிற்படிக்கு வருகையிலேயே அவனைச் சந்தித்து விட்டாள். அந்நேரம் வரை பசியால் வாடி, மெலிந்து சோர்ந்து விழுபவனாக அவன் வரவில்லை. அவன் நடையில், பார்வையில், புதியதோர் உறுதியைக் கண்டாள் அவள்.

     “நஞ்சா!”

     நஞ்சன் பதிலே பேசவில்லை. அவன் வந்ததை அறிந்து கிழவர் புறமனைப் பெஞ்சியிலிருந்து எழுந்து வந்தார்.

     “உங்கள் நாலணா, கீழே விழுந்துவிட்டது தாத்தா” என்று அவர் வாயைத் திறக்குமுன் கூறிய நஞ்சன், உள்ளே சென்றான். கைகால் முகம் கழுவிக் கொண்டு அடுப்படியில் வந்து அமர்ந்தான்.

     அடுப்பில் நெருப்புத் தகதகவென்று ஒளிர்ந்தது. மேலே ஒரு சட்டியில் கிழங்குக் குழம்பு. இன்னொன்றைத் திறந்து பார்த்தான்; உடைத்த கோதுமைக் களி.

     அருகில் நின்ற பாரு, அவன் கையில் ஓர் ஆரஞ்சை வைத்து, “அப்பனும் நீயும் சாப்பிடலாமா நஞ்சா?” என்றாள்.

     “ஏதம்மா ஆரஞ்சு? ஏதம்மா கோதுமை?”

     “நம் மரத்து ஆரஞ்சி. மரம் வெட்டினாராம் பெரியப்பன். ராமன் கொண்டு வந்தான். காலையில் அப்படிப் போனாயே; என் மனசு எப்படி இருக்குமடா குழந்தை நீ பட்டினியானால்?”

     நஞ்சன் அந்த அன்பின் ஒலியிலே மனம் நெகிழ்ந்தான். அந்தக் கண்களில் பெருகிய நீரைத் துடைத்தான்.

     “அம்மா, அம்மா! நீங்கள் கண்ணீர் விடக் கூடாது. அசட்டுத்தனமாய்க் கோபித்துக் கொண்டு போனேன்” என்றெல்லாம் அம்மையைத் தேற்றினான். உடனே சட்டையிலிருந்த ஓரணாப் பொட்டலத்தை எடுத்தான்.

     “வாயைக் காட்டுங்கள் அம்மா.”

     ஜோகி அப்போதுதான் அங்கு வந்தார். அவர் கைச்சாமானை வெடுக்கென்று பிடுங்கினார்.

     “உயிர் போனாலும் இந்த ஈன புத்தி வரலாமா நஞ்சா?”

     பாரு வெலவெலத்து நின்றாள்.

     “தினம் தினம் நம்மைப் பட்டினி போட்டு நம் உழைப்பில் அவர் உண்ணலாமா அப்பா?” என்றான் நஞ்சன்.

     “எனக்கு வேண்டும் என்று தாத்தாவைக் கேட்கலாம். இந்த ஈன புத்தி உனக்கு வரக்கூடாது நஞ்சா; கூடாது, கூடவே கூடாது. காசு தொலைந்து விட்டதென்று பொய் சொல்லலாமா நீ? உண்மை உயிரையும் விடப் பெரியதாயிற்றே! உன்னிடம் எவ்வளவு கொடுத்தார்? நீ படித்தது இதற்காகவா தம்பி?”

     “நாலணா.”

     பையன் அந்நேரம் பட்டினி கிடந்திருக்கவில்லை என்ற ஆறுதலுடன், பாரு, “ஜோகியண்ணா, பசியுடன் போன பையன் இனிச் செய்ய மாட்டான். மாமனுக்கு நான் நாலணாத் தருவேன், விடுங்கள்” என்றாள்.

     ஆனால் ஜோகி கேட்கவில்லை. அந்தப் பொட்டலத்தைக் கிழவரிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.

     நஞ்சனுக்கு, வேதனை படிந்த தந்தையின் முகம் தன் உள்ளத்தை அறுப்பது போல் தோன்றியது.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247


நூல்
விலை
தள்ளுபடி
விலை
அஞ்சல்
மேலும் விபரம்
ரூ. 650.00
ரூ.600.00
இலவசம்
ரூ. 500.00
ரூ.480.00
இலவசம்
ரூ. 90.00
ரூ. 90.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 260.00
இலவசம்
ரூ. 244.00
ரூ. 230.00
இலவசம்
ரூ. 175.00
ரூ. 170.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 650.00
ரூ. 580.00
இலவசம்
ரூ. 380.00
ரூ. 360.00
இலவசம்
ரூ. 175.00
ரூ. 165.00
இலவசம்
ரூ. 650.00
ரூ. 610.00
இலவசம்
ரூ. 400.00
ரூ. 380.00
இலவசம்
ரூ. 325.00
ரூ. 310.00
இலவசம்
ரூ. 450.00
ரூ. 425.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 360.00
ரூ. 340.00
இலவசம்
ரூ. 190.00
ரூ. 180.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 275.00
இலவசம்
ரூ. 425.00
ரூ. 400.00
இலவசம்
ரூ. 450.00
ரூ. 430.00
இலவசம்
ரூ. 500.00
ரூ. 470.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 260.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 500.00
ரூ. 490.00
இலவசம்
ரூ. 320.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 144.00
ரூ. 140.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 350.00
இலவசம்
ரூ. 790.00
ரூ. 740.00
இலவசம்
ரூ. 400.00
ரூ. 380.00
இலவசம்
ரூ. 150.00
ரூ. 145.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 215.00
இலவசம்
ரூ. 1800.00
ரூ. 1600.00
இலவசம்
ரூ. 320.00
ரூ. 300.00
இலவசம்