ஐந்தாம் பாகம் 1. என் இடம் அது! மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில், மலைக்கு வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் வந்து நிற்க வேண்டியதுதான் தாமதம். உதகை செல்லும் முதல் வகுப்புப் பஸ்ஸைப் பிடிக்க ஓட்டமாக ஓடும் பிரயாணிகளைப் பார்க்கலாம். “போர்ட்டர், போர்ட்டர்!” என்ற கூவல் விளிகளைச் சட்டை செய்யாமல், நஞ்சன் கைப்பெட்டியுடன் ஓட்ட ஓட்டமாக ஓடிவந்தான். அப்படி ஓடாமற் போனால், ரெயிலடியில் காத்து நிற்கும் அந்தப் பஸ்ஸுக்கு இடம் கிடைப்பது துர்லபம். அவன் உத்தியோகம் ஏற்கு முன்சென்னைக்குப் பேட்டிக்குச் சென்று திரும்புகிறான். நஞ்சன் விரைகையில், அவன் பெட்டிக்கு முன் இருந்த உயர்வகுப்புப் பெட்டியிலிருந்து, இரட்டைப் பின்னலும் கிரேப் தாவணியும், வெல்வெட்டுச் செருப்புமாக நங்கையொருத்தி குதித்து விரைவு நடை போட்டாள். ஆள் ஒருவன் முன்னே, ஒரு சிறிய தோல் பெட்டியைச் சுமந்து ஓடினான்.
அவன் நினைத்தாற் போலவே, அதற்குள் இருபது ஆசனங்களுக்கு மேலில்லாத அந்தப் பஸ்ஸுக்கு, உள்ளிருந்து வெளியே ரெயிலடியைத் தொட்டுக் கொண்டு, ஒரு ‘க்யூ’ டிக்கெட்டுக்கு நின்றது. நஞ்சன் இடித்துப் புடைத்துக் கொண்டு பஸ்ஸுக்குள்ளே ஏறினான். “ஸார், க்யூவிலே போங்க. க்யூவிலே நில்லுங்கள்” என்று கண்டக்டர் கத்திய குரல் அவன் செவிகளிலும் விழவில்லை; அவனைத் தொடர்ந்து வந்த கூட்டத்தினரின் செவிகளிலும் விழவில்லை. “கூனூர், ஒன்று” என்று கையை உயர்த்திக் கொண்டு இரண்டு ரூபாய் நோட்டை எல்லாக் கைகளுக்கும் மேல் தூக்கிப் பிடித்த நஞ்சனுக்கு ஒரு வழியாக டிக்கெட் கிடைத்து விட்டது. ஓர் ஆசனத்தில் தன் கைக்குட்டையைப் போட்டு, செய்தித் தாளை வைத்து, ‘ரிஸர்வ்’ செய்துவிட்டு, நஞ்சன் காபி குடித்து விட்டு வர இறங்கிச் சென்றான். மனம் கட்டுக்கு அடங்காத ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தது. நாடி நரம்புகளிலெல்லாம் விடுதலை கண்ட இன்பத் துடிப்பு. அவன் கண்ட கனவு நிறைவேறி விட்டது. அம்மையின் அபிலாஷை பூர்த்தியாகி விட்டது. ஆறு ஆண்டுகள், அவன் படிப்புக்கு ஐம்பதும் நூறுமாக வழங்கி, ராமன், மாமிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டான்! கட்டிட இயற்கலையில் பட்டம் பெற்ற இளைஞனாகி விட்டான் நஞ்சன். நற்கல்வி பெற்றுவிட்ட நஞ்சன், நாட்டுப் பணியிலே ஈடுபட வரும் இளைஞர் சமுதாயத்தில் பிரதிநிதியாகிவிட்டான். எத்தனை எத்தனை ஆண்டுகளாகவோ பின் தங்கி இருந்த மலை மக்களின் சமுதாயம் ஓர் அற்புதமான வருங்காலத்தை ஆக்க விழிப்புக் கொண்டு துடிதுடிக்கும் இளைஞர் உலகைப் படைத்து விட்டது என்பதன் பிரத்தியட்ச நிரூபணமாகி விட்டான் நஞ்சன். நீலமலையிலே, அவன் பிறந்து வளர்ந்த மரகதமலைப் பகுதியிலே நிகழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான சாதனையில் பங்கு பெறும் பேறு பெற்ற பொறியியல் வல்லுநரின் இளம் படையிலே அவனும் ஒரு வீரனாகி விட்டான். வாழ்நாளில் இதை விட ஓர் ஆனந்தம் கிடைக்க இருக்குமா? உகந்த கல்வி, உகந்த வேலை; தானாக நூற்றுக் கணக்காக அவன் சம்பாதித்து, அம்மையிடம் கொடுத்து மகிழ்விக்கப் போகிறான். இட்டிலியையும் காபியையும் முடித்துக் கொண்டு பஸ்ஸுக்கு அவன் ஆனந்த நடைபோடுகையிலே, பஸ் கிளம்பத் தயாராகி விட்டது. அவன் கைக்குட்டையைப் போட்டு, தன் ஆசனம் என்று ஒதுக்கியிருந்த ஒற்றை ஆசனத்தில், அந்தக் கிரேப் சுந்தரி, நகத்தைக் கடித்துக் கொண்டு அலட்சியமாக ஏதோ ஒரு பொம்மைப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தாள்! நஞ்சனுக்கு இயல்பாகவே பெண்களின் முன் நிற்கவும் பேசவும் சங்கோசம் உண்டு. ஆனால், சுற்றுமுற்றும் அவன் உட்கார இடமே இல்லாமல் நிறைந்திருந்ததையும் கண்ட பிறகு, அவளைக் கிளப்புவதைத் தவிர வேறு வழி இல்லை என்று அவன் உணர்ந்தான். ஆமாம், அந்தக் கைக்குட்டையையும் தினத்தாளையும் கீழே தள்ளி விட்டு அதில் உட்கார, அவளுக்குத்தான் எத்தனை துணிச்சல்! “எக்ஸ்க்யூஸ் மீ. அது, என் இடம்” என்றான் நஞ்சன் கூட்டிக் குழப்பிக் கொண்டு. அவள், அவனொருவன் நிற்கிறான் என்பதைக் கவனிப்பவளாகவே இல்லை. தலை நிமிர்ந்தே பார்க்கவில்லை. “கண்டக்டர், அது என் இடம்?” என்று வேறு வழியில்லாமல் குரலை எழுப்பினான் நஞ்சன். கணக்கைப் பார்த்துக் கொண்டே, ‘ரைட்’ சொல்ல வாயெடுத்த ‘கண்டக்டர்’ நஞ்சனை நிமிர்ந்து பார்த்தான். அலட்சியமாக, “இடமில்லை ஸார்! இறங்கி விடுங்கள்!” என்றான். “நான் டிக்கெட் வாங்கிவிட்டேன். முதலிலேயே இந்த இடத்தில் நான் என் சாமானை வைத்து ‘ரிஸர்வ்’ செய்து விட்டுப் போனேன். கீழே தள்ளி இருக்கிறார்கள்!” என்றான் நஞ்சன், ஆத்திரத்துடன் டிக்கெட்டைக் கையில் எடுத்துக் காட்டிய வண்ணம். “அட” கவனியாமல் கண்டக்டர் இந்தத் தகராறுக்கு உள்ளாகிவிட்டதை உணர்ந்தான். “இப்போது என்ன ஸார் செய்வது? நீங்கள் ஏன் இறங்கிப் போனீர்கள்? இறங்குங்கள். நம் பஸ் ஒன்று இதோ பின்னே வருகிறது” என்றான் சமாதானமாக. நஞ்சனுக்கு முகம் சிவந்தது. “இது என்ன ஐயா அக்கிரமம்? நான் இடம் போட்டு விட்டுப் போயிருக்கிறேன்” என்று குரோதத்துடன் நஞ்சன் ‘அவளை’ விழித்துப் பார்த்தான். அவள் ஜாடை அப்போது அவனுக்கு நெஞ்சில் சட்டென்று உறைத்தது; திடுக்கிட்டான். “அட, போட்டுவிட்டுப் போனாலென்ன? ‘லேடீஸ்’ என்று நீங்கள் தான் ஒதுங்கிப் போக வேண்டும். ஸ்டாண்டுக்கு வந்ததும் இறங்கி வேறு பஸ்ஸில் போங்கள். கூனூர்தானே?” என்றான் மீண்டும் கண்டக்டர். நஞ்சனின் ஆத்திரம் அடங்கி விடவில்லை. “பெண் பிள்ளைகளா இருந்தால் நியாயமில்லாமல் நடக்கலாமோ? அடுத்த பஸ் ஒரு மணி தாமதமாகப் போகும். என் இடத்தைக் காலி பண்ணச் சொல்லுங்கள்” என்றான் இளைஞனுக்கு உரிய ரோசத்துடன். அவள் விடுக்கென்று எழுந்து ஓரமாக ஒதுங்கினாள். “நீங்கள் உட்காரலாம், உங்கள் இடத்தில்” என்றாள் ஆங்கிலத்தில். வண்டிக்குள் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. சற்று திகைத்த நஞ்சனுக்கு முகம் கறுத்து விட்டது. என்றாலும் ரோசத்துடன் ஆசனத்தில் அமர்ந்தவன், பத்திரிகையைப் பிரித்து முகத்துக்கு நேராகப் பிடித்துக் கொண்டான். காரணமில்லாமலே அவனுக்குப் படபடப்பு உண்டாயிற்று. கண்டக்டர் தருமசங்கட நிலையில் தவித்தான். வண்டிக்குள் கசமுசவென்ற கலகலப்பு வேறு. “என்ன ஸார் இது?” என்று கண்டக்டர் முணுமுணுத்து விட்டு, இரட்டை ஆசனங்களில் இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்திருந்த பெண்மணி ஒருத்தியை, “மடியிலே ஒரு குழந்தையைக் கொஞ்சம் வைக்கிறீங்களா அம்மா!” என்றான். அந்தப் பெண்மணிக்கு அதில் இஷ்டமில்லை. இதற்குள் பின்புற ஆசனத்தில் இருந்த ஒருவர் எழுந்தார். “நீங்கள் உட்காருங்கள்” என்று கூறிவிட்டுக் கைப் பையுடன் கீழிறங்கி அடுத்த பஸ்ஸுக்குப் போனார். அவள் அந்த இடத்தில் போய் உட்கார்ந்தாள். நஞ்சனுக்கு யாரோ முகத்தில் அடித்தாற் போல் இருந்தது. கசமுசவென்று சத்தமும் இரைச்சலும் குழம்பிய கூனூர் பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றது. நஞ்சன் கீழிறங்கி வருகையிலே, “என்ன அம்மா விஜயா, பரீட்சை நன்றாக எழுதியிருக்கிறாயா?” என்று குரல் கேட்டுத் திரும்பினான். அவனுக்கு அங்கு நிற்கவே மனம் கூசியது; ஆனால் அவனுடைய சிறிய கைப்பெட்டி மேலே இருந்ததே! கிருஷ்ண கௌடர், கைத்தடியும் பாகையுமாக அருகில் வந்ததும், கிரேப் தாவணிக்காரி சிரிப்பும் குறுகுறுப்புமாகக் கீழே குதித்தாள். முன்புறம் விழுந்த தலைமயிர் ஒதுக்கிக் கொண்டு, “ஓ, நன்றாய் எழுதினேன் தாத்தா. நீங்கள் எங்கே வராமல் இருந்து விடுவீர்களோ என்று இருந்தேன்” என்றாள். “வராமல் இருப்பேனா? நேற்றே நீ வருகிறாய் என்று டிரைவரிடம் சொல்லி அனுப்பினேனே! இவ்வளவு தூரம் வந்த பெண்ணுக்கு ஊட்டி வரை வரவா தைரியம் இல்லை? இடம் சௌகரியமாக இருந்ததா?” அவளுடைய நோக்கி, சற்று எட்ட மேலே பெட்டியைப் பார்ப்பவனாக நின்று கொண்டிருந்த நஞ்சன் மீது விழுந்தது. தாத்தாவும் நஞ்சனைத் திரும்பிப் பார்க்கத் தவறவில்லை. “ஓ! நஞ்சன் இந்த வண்டியில்தான் வருகிறானா? ஏம்மா தெரியுமா நஞ்சனை உனக்கு?” என்று கேட்ட வண்ணம், அவர் அவன் பக்கம் திரும்பினார். அவள் முகத்தில் குறுநகை மிளிர்ந்தது. மரியாதை தெரியாத அவனுடைய பட்டிக்காட்டுத்தனத்தை எண்ணிக் குறுநகை செய்கிறாளோ? குடும்ப வைரியாகிய அவருக்கு அவனிடம் என்ன பேச்சோ? நஞ்சன் திரும்பிப் பார்க்கவில்லை. “இப்போதான் ‘இன்டர்வ்யூ’ முடிந்து வருகிறாயா நஞ்சா?” நஞ்சன் சற்றுக் காரம் நிறைந்த குரலில், “ஆமாம்” என்றான். “குமரியாற்றுத் திட்டத்தில் தானே அப்பாயின்ட்டுமென்ட்?” “ஆமாம்.” “விஜயா! நம் ஊர் ஜோகி கௌடர் மகன். தெரிந்து கொள். ரொம்பப் பெருமை நஞ்சா, உன்னால் நம் ஊருக்கே!” என்றார், விஜயாவையும் அவனையும் நோக்கியவராக. காரணமில்லாமல் அவள் கலுக்கென்று சிரித்தாள். பட்டுக் குட்டையால் பவள இதழ்களை மூடிக் கொண்டாள். நஞ்சனுக்கோ, ஒரு சிரிப்புக் கூட எழும்பாத புழுக்கமாக இருந்தது. பெட்டி வந்துவிட்டது. “வருகிறேன்” என்று முணுமுணுத்துவிட்டு அவன் திரும்பினான். ராமன் குமரியாற்றுத் திட்டத்தில் ஜீப் ஓட்டும் ‘டிரைவராக’ இருந்தான். முடிந்தால் கூனூரில் சந்திக்கிறேன் என்று அவன் புறப்படுகையிலேயே கூறியிருந்தான். ஆனால் கூட்டத்தில் அவனைக் காணவில்லை. அவன் குமரியாற்று அணைப்பக்கம் போகும் பஸ்ஸுக்காகக் காத்து நிற்கையில் பெரிய நீலநிற வண்டி ஒன்று, கிருஷ்ண கௌடரையும் விஜயாவையும் கொண்டு சென்றது. நஞ்சனுக்கு இன்னும் கிருஷ்ண கௌடர், கோவைக் கல்லூரியில் படிக்கும் பேரப் பெண்ணுடன் வலிய வந்து தன்னிடம் பேசிச் சென்ற விந்தை அதிர்ச்சி தீரவில்லை. அவள் அவரிடம் அவனைப் பற்றி என்ன என்ன கூறி நகைப்பாளோ! எப்போதோ, ஐரோப்பியக் கான்வென்டின் நீல யூனிபாரத்திலே, அவளை அவன் பார்த்தான். எத்தனை உயரமாக வளர்ந்திருக்கிறாள்! அவர் எதற்காக அவனை அறிமுகம் செய்து வைத்தார்? குமரியாற்றுப் பக்கம் போகும் சிறிய பஸ் முக்கி முனகிக் கொண்டு வந்து நின்றது. முண்டியடித்துக் கொண்டு அதில் ஏற, எத்தனை பேர்? அவன் பிறந்த மரகதமலை ஹட்டிப் பக்கம் இத்தனை மக்களா? அணைத் திட்டத்தை நிறைவேற்ற, பாரத தேசத்தின் பல பாகங்களிலிருந்தும் பல வண்ண மக்களல்லவோ அந்த மூலையைத் தேடி வந்திருக்கிறார்கள்? “எங்கே நஞ்சா?” மரகதமலை ஹட்டியில் அவனுடன் படித்த சின்னையன், கண்டக்டர், கேலியாகக் கேட்டான். நஞ்சன் சிரித்துக் கொண்டே, “கீழ்மலை” என்றான். வண்டி, நன்றாகச் செப்பனிடப்படாத புதுச்சாலையில் நகர்ந்த போது, நீலமலைக்குப் புதிதாக வரும் குடும்பத்தினரின் அறிமுகமும் அவர்களின் பேச்சுக்களும் அவனுக்குக் கலகலப்பையும் சிரிப்பையும் ஊட்டின. “அவ்வளவும் டீ ஸார், டீ. அதோ பார்த்தாயா, மீனு? அதுதான் காபி போல் இருக்கிறது” என்று நடுத்தர வயசில், சட்டை, கோட்டு, கம்பளி, மப்ளர் முதலியவற்றால் மூடிக் கொண்டு பிரயாணம் செய்த குடும்பத் தலைவர் இடையிடையே துள்ளிக் குதித்தார். “மீனு, மீனு, என்ன?” என்று இடையிடையே மனைவியையும் அவர் விசாரித்தார். மனைவியாகிய அந்தப் பெண்மணி, காஞ்சீபுரம் பட்டுச் சேலையை இழுத்துப் போர்த்துக் கொண்டு, “எனக்குக் குளிரே தாங்கவில்லை. என்ன ஊர் இது?” என்று முணுமுணுத்தாள். சுட்டிப் பயல் ஒருவன், “ஏம்பா? அங்கே ரோட்டில் எல்லாம் புலி, சிறுத்தை வருமில்லையா?” என்று ஆவலுடன் விசாரித்தான். “ராத்திரியானால் கதவு திறக்கக் கூடாது. ரோட்டில் அப்போது வரும்” என்றார் தந்தை. நஞ்சன் சிரிப்பை அடக்கிக் கொண்டான், சிரமப்பட்டு. அவர் உடனே அவனைப் பார்த்து, “ஏன் ஸார்? நீங்கள் ‘பிராஜக்ட்’ இடத்துக்குத்தானே போகிறீர்கள்?” என்று விசாரித்தான். நஞ்சனுக்கு முதல் முதலாகத் தானும் ஓர் இளம் இஞ்சினியர் என்று சொல்லிக் கொள்ள நேர்ந்த சந்தர்ப்பம் அது. இந்த வருஷந்தான் படிப்பு முடித்தேன். இன்டர்வ்யூவுக்குப் போய்த் திரும்புகிறேன்” என்றான் மகிழ்ச்சியுடன். “ஓ, அப்போது நீங்களும் புதிதுதான் இந்த மலைக்கு, ஏன் ஸார்? இப்போதே இப்படிக் குளிருகிறதே; டிசம்பர் மாசத்தில் குழாய் ஜலம் ஐஸாகிவிடுமாமே! எப்படி இருப்பது?” என்றார். நஞ்சன் சிரிக்காமலே, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் இந்த மலையில் பிறந்து வளர்ந்தவன்” என்றான். அவர் கண்கள் அகன்றது; “ஓ! அப்படியா? நிசமாகவா ஸார்? நீங்கள் ஊட்டியிலே ‘ஸெட்டிலா’னவர்களா?” “இல்லை, நான் மரகதமலை ஹட்டியிலேயே பிறந்து வளர்ந்தவன். இந்த மலைவாசியே. தாய் தகப்பன் இப்பொழுதும் கீழ் மலைப்பக்கம் இருக்கிறார்கள்” என்றான் குறுநகையுடன். “நிஜமாக, அப்படியா ஸார்? எனக்கு உங்களைப் பார்த்துப் பேசுவதே ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது ஸார். பிராஜக்டில் அக்கௌண்டென்டாக நான் வருகிறேன். பஞ்சாமிர்தம் என் பெயர். நான் ரொம்பப் பயந்து கொண்டு இருந்தேன் ஸார். கீழ்த் தேசத்துக் குளிரையே இவள் தாங்க மாட்டாள்” என்று ஆரம்பித்து, அவர் நஞ்சன் அறிந்திராத விவரங்களை எல்லாம் அவனிடம் கேட்டுத் திணற அடித்தார். “ஏன் ஸார், இங்கே இந்த வருஷம் குறிஞ்சிப்பூப் பூக்குமாமே, பூத்துவிட்டதா? எது குறிஞ்சிப் பூ?” என்றார். “எனக்குங்கூடத் தெரியாது, ஸார். நான் பிறந்து நினைவு தெரிந்து அந்தப் பூவைப் பார்த்ததில்லை.” “அட! வருஷத்தைக் கூட உங்களவர்கள் குறிஞ்சியில் கணக்குப் பண்ணுவார்களாமே?” “ஆமாம், அதெல்லாம் பெரியவர்களைக் கேட்டால் தெரியும். ‘கட்டேகிட’ என்று எங்கள் பாஷையில் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்” என்றான் நஞ்சன். கீழ்மலையில் பஸ் நிற்கும் இடம் வருவதற்குள் மிக நெருங்கியவராகப் பழகிய அவரிடம் விடை பெற்றுக் கொண்டு நஞ்சன் இறங்கினான். பஸ் நிற்கும் இடம் முன்போல் காட்டுப் பாதையாகவா இருந்தது? வழியெல்லாம் பிளவுபட்டுப் பாளம் பாளமாகப் பெயர்ந்த பாறைகள். பாளம் பாளமாகப் பெயர்ந்த பாறைகளை உடைக்கும் வளைக்கரங்கள் ஒன்றா, இரண்டா? காட்டுச் சோலைக்குள்ளே, பல்லாயிரக்கணக்கான மனித சக்திகள் இயங்கும் ஆரவாரம் அவனுள்ளத்திலே புதுச் சிலிர்ப்பை உண்டு பண்ணியது. பஸ்ஸிலிருந்து நஞ்சன் இறங்கியதுமே, டீக்கடையின் அருகிலிருந்து சிரித்த முகத்துடன் ராமன் அவனை நோக்கி வந்தான். அவனை ஆதரவாக விசாரித்துப் பெட்டியைக் கையில் வாங்கிக் கொண்டான். ஐயன் எங்கே? கல்லூரி விட்டு வரும்போதெல்லாங் கூட, பஸ் நிறுத்தத்தில் வந்து நிற்பாரே! அவன் கண்கள் ஐயனைத் தேடுமுன், மூக்கு மலை ஹட்டிக்குச் செல்லும் பாதையிலே அம்மை நிற்பதைக் கண்டு விட்டான். அவன் அம்மையின் பக்கம் நடையை எட்டிப் போட்டான். பாருவுக்குப் பேச்சு எழவில்லை. பனித்த பார்வையில், அவள் நஞ்சன், அவள் பையன், அவள் வாழ்வு, உயர்ந்து வளர்ந்தவனாக, ஒளி தவழும் கண்களை உடையவனாக கனவின் நிறைவாக நின்றான்! குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஆகஸ்டு 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : சிறுகதை ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 125.00 தள்ளுபடி விலை: ரூ. 115.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: கடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல்வரையான இந்தச் சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்றன. தனது புனைவெழுத்தின் வழியே எஸ்ரா உருவாக்கும் சித்திரங்கள் விசித்திரமானவை. நேரடியாக வாங்க : +91-94440-86888
|