இரண்டாம் பாகம் 10. மனை புகுந்தாள் குறும்பன் அளித்த வேர், தந்தையின் காய்ச்சலுக்குக் குணமளித்ததே! தந்தையின் முறைக்காய்ச்சல் அந்த வேரில் வீரியம் குன்றி, அவருடைய மெலிந்த உடலைப் பிணைத்த பிடியினின்றும் தளர்ந்து வருவது கண்ட அவன், பாரு, தன் இனியவனுடன் கூடி வாழவே பந்தயம் அநுகூலமாகும் என்றல்லவோ தெம்புடன் இருந்தான்? அது பொய்யாகி விட்டதே! ரங்கனாலும் பந்தய விதிப்படி கல்லைத் தூக்கி கொண்டு நடந்து பஞ்சாயத்தார் முன்பு வர முடியவில்லை. கிருஷ்ணன் நிமிர்ந்த போது, கல் நழுவி விழ சாய்ந்து விட்டான். ரங்கன் முக்கி முனகி, கல்லைப் பூமியில் படாமல் தூக்கிக் கொண்டு நிமிர்ந்து நின்றான். அவ்வளவே. பந்தயத்தில் அவன் கெலித்ததாகத் தீர்ப்பாகி விட்டது.
அசட்டுத்தனந்தான். காய்ச்சலுக்குக் குறும்பன் தந்த வேர், கசப்பு மூலிகை. அவர்கள் அன்றுவரை அறிந்திராத அந்த மூலிகை இரத்தத்தில் கலந்து நோவைச் சிக்கென அறுத்தது. மந்திரமும் மாயமும் எண்ணி வாங்கும் வேர் மூலிகையாகுமா? அந்த ஞானம் ஏன் அவனுக்கு அப்போதே வரவில்லை! முன் சென்று தைரியமாக பந்தயம் வேண்டாமென்று, பாருவுக்காக அவன் விலகியிருக்கலாமே! சுற்றியுள்ள கோலாகலத்திலும் வேடிக்கையிலும் கலந்து கொள்ள மனமின்றி, ஜோகி தனியே கொட்டிலின் பக்கம் சென்றான். மாதிக்கு, மகன் தோல்வியடைந்தது கண்டதுமே மற்றவர் வெற்றி காணப் பொறுக்கவில்லை. விளைநிலத்தை நோக்கிக் கிளம்பிவிட்டாள். எதிர் வீட்டில் ரங்கம்மை பாருவுடன் வந்தவர்களில் பெரும்பாலோரைச் சேர்த்துக் கொண்டு விருந்துச் சோறு சமைப்பதில் மும்முரமாக முனைந்திருந்தாள். கைத்தடியை ஊன்றிக் கொண்டு ஜோகியைத் தேடும் விழிகளை உடையவராய் லிங்கையா வந்தார். வீட்டின் புறமனையில் பாருவையும் ஒன்றிரண்டு ஊர்ப் பெண்மணிகளையும் தவிர யாரும் இல்லை. கொட்டிலுக்கு நடந்தார். அவர் நினைப்புச் சரியே, சோகம் கப்பிய முகத்தினனாய், ஜோகி அங்கு இருக்கக் கண்டார். மங்கை ஒருத்திக்காக மனசை இடிய விடுவதா? அவர், மெல்ல அவன் முகத்தை நிமிர்த்தினார். “ஜோகி!” “என்ன அப்பா?” “வருத்தமா ஜோகி?” “எதற்கு?” என்றான் மகன். “உன் முகமே சொல்லுகிறதே! ரங்கன் தானே முதல் முறைக்காரன்?” என்று தந்தை சிரித்தார் மெள்ள. “ம்... அப்பா முறைக்காரனாக இருந்தாலும், இது பாவம்... நிறுத்தி விட வேண்டும்” என்றான் ஜோகி இதழ்கள் துடிக்க. அவர் திடுக்கிட்டார். “தேவர் அருளால் நிகழ்ந்திருப்பது மகனே. ஒரு நல்ல பெண் அந்தக் குடும்பத்துக்கு வரவேண்டும் என்று நினைத்தேன். பையனும் குடும்ப பொறுப்பு இல்லாமல் மண் ஒட்டாமல் போய்விடக் கூடாது என்று வேண்டினேன். அந்தக் குடும்பம் ஒன்றுக்கும் உதவாத செம்மண் பூமி போல் சீரழியக் கூடாதே என்று கவலைப்பட்டேன். இரிய உடையாரின் அருள், நல்ல பெண், பாரு வருகிறாள். மனசிலே பொறாமையுணர்வுக்கு இடம் கொடுக்கலாமா ஜோகி?” அவர் விரல்கள், அவன் தலைமுடிக்குள் இதமாகப் புரண்டன. உண்மை! ஆனால், ஆனால்! பாரு சிறுமியாக நின்ற நாள் முதலாக அவர் அவளைப் பார்த்திருக்கிறார். அவளிடம் சுயநலமும், சிறுமைக் குணங்களும் இருக்குமென்று அவர் நினைக்கவில்லை. அவள் ரங்கனின் தாயை நினைவுக்குக் கொண்டு வரும் அழகி; ஆனால் ஜோகியின் அன்னையைப் போன்ற அமைதி, அடக்கம் முதலிய அருங்குணப் பண்புகளைக் கொண்டவள். கட்டிய கணவனுக்கு உதவியாக இருந்து, தோழியாகப் பழகி அவனுடைய விளைநிலத்தைச் செம்மைப்படுத்தி குழந்தைகளைப் பெற்றுத் தந்து, தன்னைக் குடும்பத்துக்கு ஈயும் பெண்ணாக அவள் இருப்பாள் என்று அவர் எதிர்பார்த்திருக்கிறார். இக்காரணங்களினாலேயே, அவள் ஜோகிக்கு மனைவியாவதை விட, ரங்கனுக்கு மனைவியாவதே இசைவு என்று விரும்பியிருக்கிறார். வளமற்ற பூமியிலே, நல்ல வித்தையன்றோ இடவேண்டும்? அவன் கோணல் வழியிலே செல்ல முடியாதபடி, அவனை மண்ணோடு இணைய வைக்கும் மாண்பு அவளுக்கே உண்டு என்றெல்லாம் அவர் எண்ணியிருக்கிறாரே! “அப்பா, கிருஷ்ணனும் அவளும் ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு நேசிப்பவர், பிரிப்பது தகாத செயல்” என்றான் ஜோகி உணர்ச்சி துடிதுடிக்க. “இருக்கலாம் ஜோகி. தன் அன்பையும் ஆசையையும் தியாகம் செய்து, கலங்காமல் வாழ்வை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நல்ல பெண்ணையே ரங்கன் மணக்க வேண்டுமென்று நான் எண்ணுகிறேன்” என்ன நெஞ்சுரம்! “அப்பா!” என்று ஜோகி அலறுவது போல் கத்தினான். “கேள், மகனே, பொறுமையாகக் கேள். கல்யாணம் என்பது எதற்கு? நாம் கூடி வாழ்ந்த புமி திருத்தி விளைவிக்க வேண்டும். நிறையக் குழந்தைகள் நம் முற்றங்களில் விளையாட வேண்டும். கன்று காலிகள் பெருக வேண்டும். ஆணும் பெண்ணும் வாழ்வில் இதற்காகத்தான் பங்கு கொள்ள வேண்டும்!” ஜோகி வாயடைத்து நின்றான். அவர் தொடர்ந்தார். “கிருஷ்ணன் படித்தவன். பசையும் ஒட்டுதலும் நீங்காத குடும்பத்தில் பிறந்தவன். அவன் தன்னைத் திருப்தி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வருபவளாக இருந்தாலும் குடும்பத்தில் ஒட்ட வைத்துக் கொள்ளும் வசதிகள் அங்கு உண்டு. இங்கே, நிறைவை வேண்டி வருபவளாக இருந்தால் தான் பிரிவு உண்டாகும். பாரு இந்தக் குடும்பத்துக்கு நிறைவை அளிப்பாள்; ரங்கனின் வாழ்வைச் செம்மை செய்ய அவளைப் போன்ற பெண்ணே தேவை. கேட்டாயா ஜோகி? உன் பெரியப்பன் வாழ்விலேயே ஒட்டவில்லை. அவர் எதற்கும் கவலைப்படுவதில்லை. கிடைக்கும் இன்பத்தை அனுபவித்து விட்டுத் தம்மை மறந்து பாடிக் கொண்டிருக்கிறார். அவரைப் போன்ற மனிதர் எவரையும் நான் பார்க்கவில்லை. ஆனால், ரங்கன் அவரைப் போல இல்லை. மண்ணோடு இசைந்து சுதுவாது அறியாது வாழும் வாழ்வை விட்டு விலகி விட்டானென்று அஞ்சுகிறேன். மகனே, அதனால் தான் அவன் பந்தயத்தில் கெலிக்க வேண்டும் என்று வாழ்த்தினேன், ஜோகி.” ஜோகி அந்நேரம் வரையிலும் இளம் உள்ளத்திலே ஒரு பெண்ணுக்காக குமிழியிடும் ஆசைகளையும் கனவுகளையும் பிரதானமாக எண்ணியிருந்தான். அப்போதுதான் அந்த இளமை ஆசைகளுக்கப்பால் ஒரு பேருண்மை பொதிந்து கிடக்கிறது. வாழ்க்கை இன்பம் அநுபவிப்பதற்கு மட்டும் அன்று. முயற்சியின்றித் தானாகக் கிட்டுவது இன்பம். மண்ணை வெட்டும் போதும், விதையைத் தெளிக்கும் போதும், அது முளைவிட்டுச் செழித்துக் கதிர் சாயும் போதும், அருவியில் முழுகும் போதும், மாடுகள் கறக்கையில் பால் பொங்கி வரும் போதும் இன்பம் நினைத்தா செய்யப்படுகின்றன? இல்லை, நன்மைக்காகச் செய்யும் செயல்களாக அவை பழக்கத்தில் ஊறிவிட்டன. அப்போது இன்பம் வருகிறது. அதுபோலவே ஒரு பெண்ணைக் கொண்டு வந்து, இருவரும் சுயநலமின்றிக் குடும்பத்துக்காக, ஹட்டிக்காக, உலகுக்காகக் கூடி வாழ்கையிலே இன்பம் கிட்டும் போலும். அவனுடைய ஐயன் எவ்வளவு அழகாகக் கூறினார். அவனுடைய அம்மை அந்தக் குடும்பத்தில் கண்டதென்ன? ஆனால் அவள் அன்பும் தியாகமும் அல்லவோ உருவாக வந்தவள்? எத்தனை கஷ்டங்கள் வந்தும் அவள் குடும்ப பந்தத்திலிருந்து விலகாதது ஏன்? “நான் சிறுவனாகச் சொல்லிவிட்டேன், அப்பா. பாருவின் முகம் பார்த்து வருந்தியதால் படபடப்பாகக் கூறிவிட்டேன்” என்றான். “இந்த வயசில் அப்படித்தான் சலனம் உண்டாகும். வென்று விடு மகனே!” என்றார் தந்தை. புறமனையில் பாரு மட்டுமே இருந்தாள். அவர்களைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆத்திரம் கண்ணீர்த் துளிகளாகப் பீறி வந்தது. “பாரு, இதோ பார்; பாரம்மா!” லிங்கையா அன்பும் ஆதரவும் கனியும் குரலுடன் அவள் தலையைத் திருப்பினார். மலைகள் சரிந்து கடல்கள் பொங்குவது போன்ற உணர்ச்சிகளை அடக்குபவள் போல் கண்ணீரைச் சமாளித்துக் கொண்டு அவள் பார்த்தாள். “வருத்தப்படுகிறாயா பாரு?” முகம் தாழ்ந்தாள். கண்ணீர் சிந்தியது. “அசட்டுப் பெண்ணே, ஏன் வருத்தப்படுகிறாய்? இதோ பாரம்மா, பெண் அடுப்புத் தீப்போல, குடும்பத்தை நல்லவிதமாக உருவாக்கும் சக்தி; அவள் புகையலாமா? பாலைக் கூடக் குடிக்காமல் வீட்டுக்காகத் தியாகம் செய்யும் சக்தி ஒளிர, இந்த வீட்டுக்கு நீ வருகிறாயம்மா. மங்களத்துக்கு உரியவளாக, சீர்குலைந்து வரும் ஒரு குடும்பச் செல்வத்தை நிரப்ப, நீ வருகிறாயம்மா. சின்ன எண்ணங்களை விட்டுவிடு. பெரிய பொறுப்பு உன்னைத் தேடி வந்துவிட்டது. அன்பின்றித் தேய்ந்த ஓர் உள்ளத்துக்கு ஆக்கமளித்து, நல்ல குடும்பமாக ஒளிர, ஒளிகூட்ட வருகிறாயம்மா, குழந்தை!” “மாமா!” என்று தன்னையும் அறியாமல் அவர் கால்களில் பணிந்தாள் பாரு. ஓர் ஆவணி நன்னாளில், அவள் ரங்கனின் இல்லத்தை ஒளிரச் செய்யும் வைபவம் நிகழ்ந்தது. கோத்தர் இசை முழங்க புத்தாடை அணிந்த ரங்கன், ஜோகி, தந்தை, சிறிய தந்தை முதலியவருடன் பரிசுப் பொருள்களையும் இருநூறு ரூபாய் வெள்ளிப் பணத்தையும் சீரெடுத்து, மணிக்கல்லட்டி சென்று பெண்ணை அழைத்து வந்தான். செம்மண் தீட்டிப் புதுப்பித்த மனைவாயிலிலேயே மணப்பெண் வந்து நின்றதும், மாதி வீட்டின் முதியவள், மாமி என்ற ஸ்தானத்தில் நின்று, “குடத்திலிருந்து ஒழுகும் நீர் போல் வழி வழி வரும் இந்தக் குடும்ப வளர்ச்சியை ஏற்றுக் கொள்வாயாக!” என்று அவளிடம் ஒப்பிப்பதே போல், நீரைக் குடத்தினின்றும் மணப் பெண்ணின் கைகளில் மும்முறை வார்த்தாள். நீர் அவள் கைகளை நனைத்துக் கால்களில் விழுந்து ஓடிய பிறகு தட்டிலிருந்து, பொற்கம்பியில் கோக்கப் பெற்ற மணிமாலையை எடுத்துப் பாருவின் கழுத்தில் போட்டு, அவளை உள்ளே வரவேற்றாள். புறமனையில் கம்பள விரிப்பில் புது வட்டில் வைத்து, அண்ணன் மனைவியை ரங்கம்மை அழைத்து உட்கார வைத்தாள். புதுப்பாலுடன் சாமைச் சோற்றை மாதி வட்டித்தாள். பாருவுக்குப் பாலன்னம் இறங்கவில்லை. பெண்கள் குழுமிக் கேலி செய்தார்கள். ஒருத்தி ரங்கனை முன்பாக அழைத்து வந்து, “எடுத்துக் கொடு, ரங்கண்ணா” என்றாள். முகம் சிவக்க பாலும் சோறும் நாவில் பட வைத்த பாரு எழுந்ததும் ரங்கம்மை கைக்கு நீர் வார்த்தாள். பின்னர்க் கோத்தர் இசை முழக்கினார். புதுக்குடம் பொற்குடம் போல் சித்திர வேலைப்பாடுகளும் மஞ்சளும் சந்தனமுமாக விளங்கியது. ரங்கி குடத்தை எடுத்து அண்ணன் மனைவியிடம் கொடுக்க, கன்னிப் பெண்களும் சுமங்கலிகளும் புடைசூழ மணப்பெண் அருவி நீரெடுக்கச் சென்றாள். மங்கள இசையோடு அருவி நீர் எடுத்துக் கொண்டு அந்த வீட்டினில் மீண்டும் நுழைகையிலே, பாருவுக்கு மாமனின், சொற்களே நினைவில் பளிச்சிட்டன. ‘இந்த வீடு எனக்கு! இந்த வீட்டின் பொறுப்பு எனக்கு!’ என்று அவள் உள்ளத்திலும் உடலிலும் நிறைந்து நின்ற பெண்மை என்னும் ஆற்றல் பெருமையுடன் நிமிர்ந்தது. சின்னத்தனமான அற்ப உணர்வுகளுக்கே அப்போது அவளுள் இடமில்லை. குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|
வான் மண் பெண் ஆசிரியர்: ந. வினோத் குமார்வகைப்பாடு : பெண்ணியம் விலை: ரூ. 160.00 தள்ளுபடி விலை: ரூ. 145.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
புத்தர்பிரான் ஆசிரியர்: கௌதம நீலாம்பரன்வகைப்பாடு : ஆன்மிகம் விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 315.00 அஞ்சல்: ரூ. 50.00 |
|