ஐந்தாம் பாகம் 6. நீர்வீழ்ச்சியின் அருகில் உள்ளூற மனம் தன்னை மறந்த லயத்தில் ஒன்றினாலும், நஞ்சன் தாய்க்காக வேண்டி, வேண்டாம் என்று ஒதுங்கக் கூடிய எதிர்பாராத சந்திப்பு மறுநாள் நேர்ந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. நஞ்சன் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் தான் அணைப்பக்கம் சென்றான். அணைக்கட்டு எழும்ப இருக்கும் இடத்திலே நிகழ்ந்து கொண்டிருந்த பூர்வாங்க வேலைகளைப் பார்த்தபடியே நின்றிருந்தான். மணலும் கல்லும் சுமந்த லாரிகளுக்கிடையே அழகிய பச்சை வண்டி ஒன்று பாதையில் வந்து நின்றதையும், அதிலிருந்து உயரமாகப் பச்சை பட்டுச் சேலைத் தலைப்புப் பறக்க ஒரு நங்கை இறங்கியதையும் அவன் கண்டான்.
அவள்... அவள், விஜயா! அவன் நெஞ்சம் கட்டுக்கு அடங்காமல் துள்ளியது. “நல்ல வேளை, முதல் முதலாக நீங்களே எங்கள் பார்வையில் பட்டு விட்டீர்கள். நாங்கள் இங்கே நடக்கும் வேலைகளை யெல்லாம் பார்க்க வந்தோம். எங்கள் காலேஜ் புரொபஸரும் லெக்சரரும் வந்திருக்கிறார்கள்” என்றாள் அவள். அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, பருமனாக ஓர் அம்மாளும், வற்றல் காய்ச்சிபோல் ஒரு பெண்மணியும் அவள் பின் இறங்கி வந்தார்கள். “இவர் மிஸ் உமாதேவி; இவர் மிஸ் சந்திரா” என்று அறிமுகம் செய்து வைத்த அவள், “நான் எங்கே போய் யாரைத் தேட வேண்டுமோ என்று நினைத்தேன். இவர் இங்கேதான் புதிதாக வந்திருக்கிறார். எங்கள் ஊர் மிஸ்டர் நஞ்சன்” என்று தெரிவித்தாள். “நாங்கள் இங்கே நடக்கும் வேலைகளையெல்லாம் பார்க்க விரும்புகிறோம், மிஸ்டர் நஞ்சன். அழைத்துப் போக முடியுமா?” என்றாள். பருமனான உமாதேவி, கீச்சுக் குரலில். “மகிழ்ச்சியுடன் காண்பிக்கிறேன்” என்று விருப்பம் தெரிவித்த அவன், அங்கேயே அணை விவரங்கள் எல்லாம் கூறலானான். அணை ஸ்தலம் முடித்த பிறகு, இங்கிருந்து குகைக் கால்வாய் செல்லும் வழியையும், குகை அடையும் இடங்களையும் அவர்களுடன் சென்று விவரித்தான். பின்னர், நீர்க்குழாய்கள் செல்லும் சரிவையும், மின்நிலைய அடித்தள நிர்மாணத்தையும் அழைத்துச் சென்று விவரித்தான். ஒருபுறம், ‘விஜயாவினிடம் தனியே அன்றைய பண்பற்ற நடத்தைக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது’ என்று அவனை உள்ளம் குடைந்து கொண்டிருந்தது. மின்நிலையப் பகுதியைக் கண்டு முடிந்ததும் விஜயா, “ஆயிற்றா? இவ்வளவுதானா வேண்டியவை இருக்கும்” என்றாள். “இப்போதே களைத்து விட்டது. இந்த உடம்பைத் தூக்கிக் கொண்டு இந்த நடையே முடியவில்லை. விஜயா, எங்கோ நீர்வீழ்ச்சி இருக்கிறதென்றாரே உன் தாத்தா? மறந்துவிடப் போகிறாய்!” என்றாள் உமாதேவி. “நம் ‘லஞ்ச்’ அங்கேதான். மிஸ்டர் நஞ்சன், நீங்களும் வந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்” என்றாள் சந்திரா. “வருவார். பின்னர், இவ்வளவு நேரம் சுற்ற வைத்து விட்டு, அவரை விட்டு விட்டுச் சாப்பிடுவோமா? குமரியாறு விழும் இடம் இங்கிருந்து ரொம்பத் தூரம் இல்லையே! அங்கே போய்ச் சாப்பிடலாம் அல்லவா?” என்றாள் விஜயா. “ஏன்? தாத்தா இறங்கலாம் என்று கூறினாரே!” என்றாள் விஜயா. “உங்களால் இறங்க முடியாது என்று தானே கூறினேன்?” என்று முறுவல் செய்தான் நஞ்சன். “உங்களால் என்றால்?” “பெண்களால் என்று பொருள்” என்று சிரித்தாள் சந்திரா. விஜயா முகம் சிவக்க, “பெண்கள் அவ்வளவு மோசமானவர்களா உங்கள் எண்ணத்தில்?” என்றாள். “வலுச்சண்டைக்கு வருகிறீர்களே! நீங்கள் வந்து பாருங்கள். சரிவு செங்குத்தாக இருக்கும். சாலையிலிருந்து, இரண்டு மலைக்கிடையில் நூறு அடிப் பள்ளத்தில் ஆறு விழுந்து ஓடுகிறது. இரண்டு பக்கங்களிலும் போக வழியில்லாத புதர்கள், காபித் தோட்டங்கள்” என்று நஞ்சன் விவரித்தான். “தண்ணீர் விழுவதைப் பார்த்துக் கொண்டு, பாறையில் அமர்ந்து ஆனந்தமாகச் சாப்பிடலாமென்று நினைத்தோமே!” என்றாள் உமாதேவி. “நீங்கள் எங்களால் முடியாதென்று சொல்லி விட்டீர்கள் அல்லவா? வீம்புக்காகவேனும் உருண்டு வருவோம் கீழே!” என்று விஜயா சிரித்தாள். “ஐயையோ! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். என் மீது பழிவரும்” என்று நஞ்சனும் சிரித்தபடியே வண்டியில் ஏறினான். வண்டி செல்கையில், சந்திரா விஜயாவிடம், “உங்கள் ஊர் என்கிறாய்; நீ வந்ததில்லையா இங்கே” என்றாள். “ஹ்ம், எப்போதோ ஹட்டிக்கு வருவோம். உடனே திரும்பி விடுவோம். மிஸ்டர் நஞ்சன் அடிக்கடி வந்திருக்கலாம்” என்றாள் அவள். வண்டி நின்றது. நஞ்சன் முதலில் இறங்கி நீர் வீழ்ச்சியைச் சுட்டிக் காட்டினான். குத்தான சரிவுகளுக்கிடையில் மலை முகட்டில் உருண்டு விழுந்து, பள்ளத்தில் குறுகி நெளிந்து, பாறையடியில் செல்லும் பாம்புபோல் கீழே கீழே ஓடிக் கொண்டிருந்தது, ஆறு. காபித் தோட்டங்கள் சரிவு முழுவதும் காணப்பட்டன. கீழே, ஆற்றின் இருமருங்கிலும் அடர்ந்த புதர்கள். அங்கு மனித நடமாட்டமே இல்லாதைக் காட்டின. மேலே சாலையிலிருந்து பார்க்க அழகாக இருந்தாலும், புதர்களும் சரிவும் காலை வைத்துத் துணிந்து செல்ல, நகரத்தில் பழகிய அவர்களுக்கு அச்சம் தருவதாக இருந்தது. இதற்குள் வண்டிக்குள் இருந்த சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு வண்டியோட்டி வந்த சுப்பையா, “கீழே போகலாமா அம்மா?” என்றான். “இத்தனை அழகான இடம், நல்ல பொழுதுபோக்கு ஸ்தலமாயிற்றே? ஏன் நன்றாகக் கட்டக் கூடாது? மிதமான உயரம் வீழ்ச்சி, இரு புறங்களிலும் இழையாக ஒழுகுகிறது; குளிர்காலம்” என்றாள் சந்திரா. “இங்கே சாலைகள் போட்டு இத்தனை முன்னேற்றம் செய்திருக்கிறார்களே; நீர் வீழ்ச்சியின் பக்கம் போக புதர்களை வெட்டிப் பாறைகளை வழியாக ஒழுங்கு செய்யக் கூடாதா?” என்று விஜயா கேட்டாள். “இந்த யோசனையைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கிறேன். ஆனால், நீங்கள் இப்போது கீழே இறங்கி வரவில்லை என்கிறீர்களா?” என்றான் நஞ்சன். “யார் சொன்னார்கள்?” என்று விஜயா காபித் தோட்டத்தில் புகுந்து விடுவிடென்று இறங்கினாள். “சரிதான், விஜயா வீம்பைச் செயலில் காட்டுகிறாள், என்னால் நடப்பது சாத்தியம் இல்லை” என்று உமாதேவி, அங்கு இரண்டடி உயரம் விட்டு அறுக்கப்பட்டிருந்த ஒரு ஸைப்பிரஸ் மரத்தை ஆசனமாகக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். சந்திராவோ, சாலையோரப் புல்லுத்தரையில் காலை நீட்டிக் கொண்டு ஓய்ந்து விட்டாள் முன்பாகவே. விஜயா மட்டும் பச்சைக் காபிச் செடிகளுக்கு மத்தியிலே பசுங்கொடி போல் நீள இறங்கிக் கொண்டிருந்தாள். நஞ்சன் இன்னொரு வழியில் இறங்கி, சாப்பாட்டுக் கூடையுடன் ஆற்றின் பக்கம் சென்றுவிட்ட ஆலைக் கூப்பிட விரைந்தான். விஜயா ஒரு பர்லாங்குத் தூரத்தில் திரும்பி, நஞ்சன் ஆளைக் கூப்பிடுவது கண்டு அவனருகில் வந்தாள். “ஏ சுப்பையா! வா, வா” என்று அவள் சைகை காட்டினாள்; கூவினாள். ஆறு விழும் இரைச்சலில், பேச்சுப் புரியுமா? சுப்பையா மருள மருள விழித்துக் கொண்டு திரும்பலானான். “இவ்வளவு துன்பங்களையும் கடந்து அங்கே சென்றால், அத்தனை அழகாக இருக்கும்! நான் போய்விடுவேன். அவர்கள் இருவரும் நடக்க மாட்டார்கள்.” முன் நெற்றிச் சுரிகுழல் அசைய, அவள் பேசுகையில் நஞ்சன் மிகமிக அருகில் இருந்தான். “உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கவேண்டும், விஜயா!” மெதுவான குரல், இதயம் திறந்து அவளுக்குக் கேட்கக் கூடிய குரல் அது. “நீங்கள் எங்களுக்கு ஜன்ம விரோதிகள்” என்றாள் அவள். விழிகளில் குறும்பு சொட்ட, நேருக்கு நேர் அவனை ஒரு கணம் நோக்கிவிட்டு. “ஜன்ம விரோதிகளின் பகை, எப்படி முடியவேண்டும் என்று தாத்தா விரும்புகிறாராம் தெரியுமோ?” என்றான் அவனும். “நல்ல வேளை! அன்று பஸ்ஸில் நீங்கள் போட்ட சத்தத்தில், நான் ஜன்ம விரோதியானதனால் தான் சண்டைக்கு இழுக்கிறார் என்று அறியாமல் ஒதுங்கினேன். தெரிந்திருந்தால், கோர்ட்டு வரைக்கும் இழுக்கடித்திருப்பேன்!” “ஓகோ! அந்தப் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி! தாத்தா எனக்கு ஒரு செய்தி சொல்லிவிட்டிருக்கிறார். அது... உன் சம்மதத்துடன் வந்ததா என்பதை நான் அறியலாமா?” “என்ன செய்தி?” “நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா விஜயா?” “ஜன்ம விரோதிகளுக்குள் எத்தனை எத்தனையோ இருக்கும். நான் எப்படி அறிவேன்?” அவள் உதடுகளில் தான் அப்படிப் பேச்சு வந்தது; கண்களோ, தெரியும் தெரியும் என்று தமுக்கடிக்கும் வகையில் கொஞ்சலாகக் கீழே தாழ்ந்தன. “உனக்குத் தெரியும். விஜயா, உண்மையில்...” முகம் சிவந்து ஒளிர, அவள் திரும்பி ஓட்டமாக மேலேறினாள். மேலே, சுப்பையா வந்ததே காரணம். “ஓ, விஜயா! எங்கே அங்கே போய் உங்களை விட்டு விட்டு மூவரும் ஊர்க்கதைகள் பேசிக் கொண்டு கூடையைக் காலி செய்ய ஆரம்பித்து விடுவீர்களோ என்று சந்திரா பயந்து விட்டாள்!” என்று சிரித்த உமாதேவி, “மிஸ்டர் நஞ்சன், உங்களுக்கும் விஜயாவுக்கும் ஒரே ஊர் மட்டுமா, உறவும் உண்டா?” என்று விசாரித்தாள். நஞ்சன் சிரித்துக் கொண்டே, “எங்கள் தாத்தா நாளில் நல்ல உறவு இருந்தது. அப்புறம் சண்டை வந்துவிட்டது” என்றான். “அடாடா!... அப்ப... இப்போது?” என்றாள் சந்திரா. “சண்டையும் சமாதானமும்” என்றாள் மீண்டும் சிரித்துக் கொண்டே விஜயா செம்மை படர்ந்த முகத்தினளாய், உணவுப் பொட்டலங்களைப் பிரிக்கலானாள். வானவெளியில் பறக்கும் வானம்பாடியின் நிலையிலே அன்று பிற்பகல் நஞ்சன் வீடு திரும்பி வந்த போது, பாரு, கவலை படிந்த முகத்துடன் அவனை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். “இத்தனை நேரம் ஆயிற்றா, நஞ்சா? சாப்பாட்டுக்கு நேரம் ஆகிவிட்டதே!” “எனக்குச் சாப்பாடு வேண்டாம் அம்மா!” அவன் வெளியே சென்று வருகையிலே, அவளுக்கு இல்லாத சந்தேகமெல்லாம் தோன்றியது. “ஆ! எங்கே சாப்பிட்டாய்?” “நஞ்சா, நீ என்னை ஏமாற்றுகிறாய், அவளைப் பார்த்து விட்டு வருகிறாய்!” என்றாள் அவள், கண்ணீர் வெடிக்க. “அட, என்னம்மா! பெரிய ரோதணையாய் விட்டீர்கள்! மனிதனை நிம்மதியாக விடமாட்டீர்களா?” எரிந்து விழுந்து விட்டு அவன் மீண்டும் வெளியே சென்றான். உலகமே தலையில் இடிந்து விழுந்து விட்டாற் போல் இருந்தது. பாருவுக்கு, பையன் அவளை விட்டு ஏற்கனவே பிரிந்து விட்டான்! அவள் அருமையாகக் காத்து நின்ற ஒரே பாசம், அவளை விட்டு அகல அவள் எப்படிப் பார்ப்பாள்? எப்படிப் பொறுப்பாள்? படித்த பையன்களில் நஞ்சன் தானா அகப்பட்டான், அந்த கிருஷ்ணனுக்கு? எத்தனை எத்தனை சீமான் வீட்டுச் செல்ல மக்கள் இல்லை? அவள் குமுறலுக்கு ஆறுதலே கிடைக்கவில்லை. ஜோகியோ, நிலம் இல்லை, வேலை இல்லை என்று ரங்கனுடன் அவனை ஒத்த அவன் தலைமுறையைச் சேர்ந்த மக்களிடம் சென்று, ஆற்றாமையைக் கொட்டுவதும், திட்டங்கள் வகுப்பதுமாக நெஞ்சுத் தீயை விசிறி விட்டுக் கொண்டிருந்தார். அவர்களுடைய விளைநிலங்களில் தகரக் கொட்டகைச் சாமான் கிடங்குகள் வந்தன; அலுவலகங்கள் முளைத்தன. சாலை வேலைக்காகப் பாறையைப் பிளக்கும் ஒலிகள், மலை முகடுகளை எல்லாம் முட்டி எதிரொலித்தன. அந்த ஒலியைக் கேட்கையிலே ஜோகி நெஞ்சைப் பிடித்துக் கொள்வார். பாருவுக்கோ, பூமித்தாய் அதிர்ந்து துடிக்கும் ஒலியாக அது துன்ப அதிர்வைத் தரும். உன்மத்தம் பிடித்தவளைப் போல் சூனியத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையிலே அவள் உடல் குலுங்கும். நஞ்சன் சம்பளம் வாங்கி ஒரு பகுதியைப் பாருவிடம் கொடுப்பதும், பெரும்போது வெளியில் கழிப்பதுமாகக் குடும்பத்தை விட்டே விலகிப் போய்க் கொண்டிருந்தான். இரவு வேலையன்று வீடு வருவதை நிறுத்தினான்; பின்னர் மூன்று நான்கு நாட்களுக்கு ஒருமுறை மாலையில் மட்டும் வந்து கொண்டிருந்தான்; மெல்ல மெல்ல அதுவும் நின்றது. அணைக்காலனியில் அவன் தங்க வீடும், ஒத்த சகாக்களும் அவனை இரவிலும் இழுத்துப் பிடித்து நிறுத்தி விட்டனர். என்றோ ஒரு நாள் ஒப்புக்கு வீடு வருவது வழக்கமாயிற்று. குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
காந்தியைக் கொன்றவர்கள் மொழிபெயர்ப்பாளர்: க. பூரணச்சந்திரன் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2014 பக்கங்கள்: 331 எடை: 350 கிராம் வகைப்பாடு : அரசியல் ISBN: 978-93-84646-06-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 300.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நாதுராம் விநாயக் கோட்ஸே, 1910 மே 19 அன்று ஒரு சநாதன பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் குழந்தைப் பருவத்திலேயே மூன்று பிள்ளைகள் இறந்துவிட்டதால் அவருடைய பெற்றோர்கள், தீயசக்திகளுக்குப் பரிகாரம் செய்விக்க, அடுத்த மகனைப் பெண்ணைப்போல வளர்ப்பதென்று முடிவுசெய்தனர். அதனால் அவர் மூக்குப் பொட்டு (நாது£, தமிழில் நத்து) அணிந்து வளர்ந்தார். ஆகவே நாதுராம் என்ற பெயர் ஏற்பட்டு விட்டது. அக்கம்பக்கத்தவர்க்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தவர். நேரடியாக வாங்க : +91-94440-86888
|