(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 17 மாலை சென்று இருள் கவிந்த நேரம்! தென்னன் ஒவ்வொரு அறையிலும் சென்று அங்கிருந்த விளக்கினை ஏற்றிக் கொண்டு வந்தான். இருட்டிவிட்டதால், அரண்மனைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாயிருக்கிறதா என்று அறிவதற்காக துணைத்தளபதி இரு வீரர்களுடன் ஒவ்வொரு இடமாய்ச் சுற்றி வர ஆரம்பித்தார். முந்தின நாள் அபாய நிலையிலிருந்த மன்னர் பட்டத்தரசியின் மாங்கல்ய பலத்தினாலும், கடார இளவரசியின் மருத்துவ சிகிச்சையாலும், இறைவன் அருளினாலும் பிழைத்துக் கொண்டார். ஆனால்,
மன்னரின் அறையிலிருந்த பாவை விளக்கை ஏற்றி தென்னனிடம், முகத்துக்கு நேரே இருந்த சரவிளக்கை சிறிது நகர்த்தித் தொங்கவிடும்படி, சக்கரவர்த்தி வீரராசேந்திரர் சாடையினால் தெரிவிக்க, தென்னனும் அவ்விதமே தொங்கவிட்டான். அரசரின் முகம் வெளுத்துப் போய் தெளிவில்லாதிருந்தது. மெல்லத் திரும்பி சற்று ஒருக்களித்துப் படுப்பதற்கு முனைந்த சக்கரவர்த்தியின் அருகில் வீரன் ஒருவன் வந்து, இராஜசுந்தரி வந்திருப்பதாகத் தெரிவித்தான். ‘எதற்கு இப்போது என்னைப் பார்க்க வர வேண்டும்?’ என்று மனதில் எழுந்த வினாவுடன், “வரச்சொல்!” என்றார். சாளுக்கிய இளவரசி உள்ளே வந்து, “தங்கள் உடம்புக்கு ஒன்றும் இல்லையே அப்பா!” என்றாள். “தற்போதைக்கு நன்றாகத்தான் இருக்கின்றேன். பிறகு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது” என்று பலவீனமாய் இருமினார். “நிரம்பவும் மெலிந்துவிட்டீர்கள்...” என்ற இராஜசுந்தரி, “ஏனப்பா வீணாய் நாட்டைப் பற்றிய எண்ணங்களை மனதில் போட்டுக் கொண்டு, கவலையில் உழல்கிறீர்கள்! பொறுப்பை உங்கள் மூத்த மகனிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்க வேண்டியதுதானே?” என்றாள். “அப்படித்தான் நானும் நினைக்கிறேன்! ஆனால் முடியவில்லையே அம்மா! அம்மாதிரி பொறுப்பை ஒப்படைக்கத்தானே அதிராசேந்திரனை மதுரையிலிருந்து இங்கு வரவழைத்தேன். ஆனால்...” என்று நிறுத்திய அரசருக்குத் தொடர்ந்து பேச முடியாமல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. “உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் தந்தையே. எப்படியிருந்தீர்கள்? எப்படி ஆகிவிட்டீர்கள். உங்களைப் பார்க்கும் போது எனக்கு வருத்தம்தான் ஏற்படுகிறது.” “செய்வதற்கு எங்கேயம்மா எனக்குத் துணிவு வருகிறது? இருப்பது அதிராசேந்திரன் ஒருவனே! அவன் ஒருவனால் இந்தச் சோழ அரசை நிர்வகிக்க முடியும் என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. என் பாட்டன் ராஜராஜன் காலத்திலிருந்தே பல சோழ இளவரசர்கள் அவருக்குத் உறுதுணையாக இருந்தார்கள். இப்போது அதை நினைக்கும் போது என் நெஞ்சம் வேதனையால் துடிக்கிறது அம்மா” என்றார். “நீங்கள் ஏன் இதுபற்றிக் கவலைப்பட வேண்டும். அண்ணனுக்குத் துணையாக என் தம்பி மதுராந்தகன் இல்லையா? அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுகிறது!” என்று அதற்கு மறுமொழி கூறினாள் இராஜசுந்தரி. “இதைக் கேட்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் மதுராந்தகனுக்கு அந்த அளவுக்குத் திறமையில்லையே! காஞ்சி நகரைவிட்டு இப்படியும் அப்படியும் கூட அவன் அசையமாட்டேன் என்கிறானே! அரசகுமாரன் என்றால் பல போர்களில் கலந்து அனுபவப்பட வேண்டுமே! நம் மதுராந்தகன் அப்படி அனுபவப்பட்டதாக எனக்குத் தெரியவில்லையே அம்மா!” என்றார் மாமன்னர். “இதற்கா நீங்கள் கவலைப்படுகிறீர்கள்? மனிதனுக்கு உள்ள திறமை அளவிட முடியாதது; ராஜ்ஜிய விவகாரங்களில் ஈடுபட ஈடுபட, மதுராந்தகனுக்கு அந்த அனுபவம் தானாக வந்துவிடுகிறது. அதனால் நாளைக்கே அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிடுங்கள்” என்றாள். சோழச் சக்கரவர்த்தி அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார். அவர் மௌனமாய்ப் புன்னகையுடன் இருப்பதைக் கவனித்த இராஜசுந்தரி, “அப்படித்தான் ஏதாவது குழப்பம் வந்தாலும், சமாளிக்க குந்தள நாட்டுச் சக்கரவர்த்தியும் தங்களின் மருமகனுமான விக்கிரமாதித்தன் இருக்கின்றார். ஒரு குடும்பத்தில் தகுதியான ஆள் இல்லை என்ற நிலை வரும் போது, அக்குடும்பத்தைக் காக்க மருமகப்பிள்ளைதானே முன் வருவார்! அவ்விதம் பலம் பொருந்திய அரசராய் தங்கள் மருமகப்பிள்ளை இருக்கும் போது, இந்தச் சோழ நாட்டைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்றாள். சக்கரவர்த்தி வீரராசேந்திரருக்குத் தூக்கிவாரிப் போட்டது போல் ஆகிவிட்டது. ‘முதலமைச்சர் என்னிடம் சொன்ன இந்த வார்த்தைகளைப் பக்கத்திலிருந்து கேட்டது போல் அல்லவா இவள் சொல்கிறாள்?’ என்று அவளை ஒருதரம் ஏறிட்டு நோக்கிய மன்னர், “நீ சொல்வதிலும் இருக்கிறது...” என்று சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது யாரோ நடந்து வரும் சப்தம் கேட்க, இராஜசுந்தரியும் அரசரும் திரும்பினர். பட்டத்தரசி உலகமுழுதுடையாள் வந்து கொண்டிருந்தாள். “எப்போது வந்தாய் இராஜசுந்தரி?” என்று வினவியபடி, வேந்தரின் அருகில் வந்து, “இப்போது தங்களுக்கு எப்படியிருக்கிறது?” என்றாள். “பயப்படும்படி ஒன்றும் இல்லை!” என்ற அரசர், மருத்துவரின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு எனக்குப் பழக்கமாகிவிட்டது” என்று உற்சாக மிகுதியால் மெல்ல சிரித்தார். அதைத் தாங்காமல் இருமல் வெளிப்பட, “உங்களைத்தான் அதிகம் பேச வேண்டாம் என்று அந்தப் பெண் சொல்லியிருக்கிறதே!” என்று நெஞ்சைத் தடவித் தடவிவிட்டாள் பட்டத்தரசி. சில நொடிகளில் இருமல் நின்றது. அரசர் ஒருக்களித்துப் படுத்துக் கண்களை மூடிக் கொண்டார். இருக்கையில் உட்கார்ந்த பட்டத்தரசி இராஜசுந்தரியிடம் “சாப்பாடு ஆயிற்றா மகளே?” என்று வினவினாள். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
யாதுமாகி மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: அக்டோபர் 2014 பக்கங்கள்: 208 எடை: 250 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-84598-01-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 180.00 தள்ளுபடி விலை: ரூ. 165.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த தேவி என்னும் பெண்மணியைப் பற்றிய கதை. ஒன்பது வயதில் அவரின் பால்ய விவாகம், ஒரு வருடத்திற்குள்ளே அந்த கணவரின் மரணம். அதன் பின் அவளின் தகப்பனார், பெண்ணுக்கு, தன் தாயின் பேச்சைக் கேட்டு தான் செய்துவைத்த பால்யவிவாகத்தால் மனம் வருந்தி, அவளைப் படிக்க வைக்கிறார். பள்ளிப்படிப்பு முடியும் தருவாயில் தகப்பனாரும் இறந்து போய்விட, வீட்டில் முடக்கப்படுகிறாள். மீண்டும் தன் தமையனின் துணையுடன் கல்லூரி படிப்பை முடித்து, ஆசிரியராய் பணியாற்றத் தொடங்குகிறார். மறுமணமும் செய்துக் கொள்கிறார் ஒரு ராணுவ அதிகாரியை. அவருக்கும் இது இரண்டாவது திருமணமே. அவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறாள். அதன் பிறகு கணவரின் மரணம், அம்மாவின் மரணம் என்று அடுத்தடுத்து. மகள் படித்து உயர்ந்து கல்லூரியில் பேராசிரியை ஆகிறார். அவளின் திருமணம் இவரைத் தாயாய் மதிக்கும் ஒருவருடன் அமைகிறது. ஆனால் அது வெளிவேஷம் எனப் புரிந்துப் போகிறது. அவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தாதால், மகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிறது. இப்போது மகள், பேத்தி என இருவரையும் சேர்த்தே சுமக்கும் ஒரு பொறுப்பினை தாங்கி, முன்னோக்கி நகர்கிறார். இதுதான் இந்த நாவலின் அம்சம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|