(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 9 புரவியிலிருந்து இறங்கிய அம்மையப்பன், கங்கைகொண்ட சோழேச்சுரத்தின் கோபுரத்தைப் பார்த்து, கும்பிடு ஒன்றைப் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த சத்திரத்திற்குள் நுழைந்தான்.
“அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்” என்று தலையாட்டினான் சத்திரத்தலைவன். சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு, அங்கிருந்து புரவியில் மீண்டும் கிளம்பினான் அம்மையப்பன். ***** இருட்டு அறை... தூரத்தில் மதுராந்தக வடவாறு சப்தித்து ஓடும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வெளியே இருந்த காவலனிடம் “பெரியவரைப் பார்க்க வேண்டும்” என்று கூறினான் அம்மையப்பன். கொஞ்சம் காத்திருக்கும்படி, உள்ளே சென்று திரும்பிய காவலன் வரச் சொன்னதாக அவனிடம் தெரிவித்தான். அம்மையப்பன் உள்ளே நுழைந்தான். ஒரே கும்மிருள். தட்டுத் தடுமாறி நடந்துதான், தாழ்வாரம் போன்று இருக்கும் அப்பகுதியைக் கடக்க வேண்டும்! ஆனால், அம்மையப்பன் சர்வசாதாரணமாக எந்தவிதத் தடுமாற்றமும் இல்லாது, வேகமாக நடந்து சென்றான். கூடம் வந்தது. அகன்று பெரியதாய் இல்லாவிட்டாலும், சற்று விசாலமாகவே இருந்தது. மருந்துக்குக் கூட வெளிச்சம் நுழைய முடியாதபடி இருட்டு அந்த இடத்தை நன்கு ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அதன் கூடத்தின் நடுவிலிருந்த தூணில் தீவட்டி ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில், தலையில் வெள்ளை முக்காடிட்ட உருவம் ஒன்று ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. பதிலுக்குத் தலையை அசைத்து “இந்தத் தடவை நீண்ட நாளாகிவிட்டதல்லவா?” என்றது கரகரப்புக் குரலில். “ஆம் ஐயா, எதிரிகளை நாகைவரை பின் தொடர வேண்டியதாகப் போயிற்று. விஷயங்களும் அதற்கு ஏற்றபடி நிறையவே...” என்றதும், உருவம் குறுக்கிட்டு, “எனக்குத் தெரியும். ஆனால் நாட்கள், நாம் திட்டமிட்ட காலத்திற்குள் அடங்காமல் போய்விட்டதால், எதிரிகளால் உனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிட்டதோ, என சந்தேகம் தோன்றிவிட்டது” என்றது. “ஐயா, எதிரிகளுக்கு நான்தான் யமன்; அவர்கள் அல்ல எனக்கு” என்றான் அம்மையப்பன் திடமான குரலில். “அதுவும் எனக்குத் தெரியும். அந்த ஒரு நம்பிக்கையில்தான், திட்டமிட்டபடி நாட்கள் கடந்து போனாலும், உன்னை எதிர்பார்த்துக் கொண்டு, இங்கே காத்திருக்கின்றேன்” என்றது வழக்கமான கரகரப்புக் குரலில். தீவட்டியின் ஒளி சற்று மங்கலாகியது. உருவம் ஆசனத்திலிருந்து எழுந்து, மூலையிலிருந்த எண்ணெய்ச் சட்டியை எடுக்கப் போக, “நான் செய்கின்றேன்; நீங்கள் இருங்கள்!” என்று சட்டியிலிருந்து எண்ணெயை ஊற்றி, பழையபடி பிரகாசத்துடன் தீவட்டியை எரியும்படிச் செய்துவிட்டான். உருவம் மெல்லக் கனைத்து, தன் போர்வையை விலக்கிச் செய்யும் போது, மார்பில் அரை முழ அளவிற்குப் பெரிய தழும்பு ஒன்று தெரிந்தது. சாதாரணமாய்ப் பெரும் போர்களில் ஈடுபட்டவர்களுக்கே அந்த அளவிற்குத் தழும்பு இருக்கும்! “போன விஷயம்..?” என்று உருவம் வினவ, “நம் அரண்மனையில் வேலை பார்க்கும் தென்னன், நாகை ஜோதிடரின் சீடன் காளிங்கராயனுடன் சேர்ந்து கொண்டு, சோழ அரசுக்கு விரோதமாய்ச் செயல்பட ஆரம்பித்துவிட்டான். இங்கிருந்து செய்திகளைத் தூமகேது என்ற பாண்டிய நாட்டான் மூலம், நாடிழந்த பாண்டியனுக்குத் தெரிவிக்கின்றார்கள்” என்றான். அமைதியுடனிருந்த உருவம், ஆத்திரத்துடன், “இராஜத் துரோகிகள்!” என்று பற்களைக் கடித்தது. “அரசர் இறந்துவிடும் நிலையிலிருக்கிறார். அடுத்து ஆட்சிக்கு வருவதில் இங்கே குழப்பம் இருக்கிறது! என்பன போன்ற விஷயங்கள், நம் பகைவர்களுக்குத் தெரிந்து போய்விட்டன.” “ம்...” -தலையில் சரிந்த வெண்முக்காட்டை மறுபடியும் நன்கு இழுத்து, முகத்தை மூடிக் கொண்டது. “கடாரத்திலிருந்து இருவர் இராசேந்திரனைத் தொலைத்துக் கட்ட, அவரைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி பெண்... அநேகமாக அவள் கடார அரச குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம். இன்னொருவன் கட்டுடலாய் இருக்கின்றான். அவளுக்குத் துணையாக அவன் வந்திருப்பதாகத் தெரிகிறது. வணிகத்தை முன்னிட்டு வந்ததாக என்னிடம் அவர்கள் தெரிவித்தார்கள். பாண்டிய நாட்டான் தூமகேது உதவியுடன் தமிழகம் வந்திருக்கின்றார்கள். கடார வெற்றி வீரர் வீரர் இராசேந்திரன் எச்சரிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும்...” என்று அம்மையப்பன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கூடத்தை ஒட்டி உட்புறமாகச் செல்லும் வழியிலிருந்து ‘தட், தட்’ என்று மூன்று முறை தட்டப்படும் சப்தம் எழுந்தது. உடனே உருவம் சுறுசுறுப்புப் பெற்றது. “சற்று வெளியே போயிரு அம்மையப்பா! கால் நாழிகை கழித்துக் கூப்பிடுகின்றேன்” என்று கூற, அவன் தலையாட்டிவிட்டுக் கூடத்திலிருந்து வெளியேறினான். ‘சுரங்க அறையில் யார் வந்து தட்டுவார்கள்? அடிக்கடி பெரியவரை யாரோ வந்து சந்திக்கின்றனர். ஒருவேளை என்னைப் போல் அவர்களும் பெரியவரின் நம்பிக்கைக்கு உரிய ஒற்றனா? அவரின் நம்பிக்கை பெற்றவன் நான் ஒருவன்தான் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது, புதிதாக வேறு ஒருவன் முளைத்திருக்கின்றான். யாராயிருந்தால் நமக்கு என்ன வந்தது? இன்னும் கடினமாக உழைத்து, பெரியவரின் முழு நம்பிக்கையைப் பெற வேண்டும். தீவில் மறைந்து வாழும் நாடிழந்த பாண்டியனையும், அவன் கூட்டத்தையும் கண்டு பிடிக்க வேண்டும். அந்தத் தீவு எங்கே இருக்கிறது? அதற்குப் போக வழி...! தூமகேதுவை ஒரு திங்கள் வரை மறைவாகப் பின் தொடர்ந்தால் எல்லாம் தெரிந்துவிடும். இதைக் கண்டு பிடித்துவிட்டால் நான் பெரியவரின் முழு நம்பிக்கையைப் பெற்றுவிடுவேன்!’ என்று எண்ணியபடி அம்மையப்பன் வெளியே வந்து நின்றான். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
தீம்புனல் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2020 பக்கங்கள்: 344 எடை: 400 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-87333-68-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 315.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இந்நாவலைப் படித்து முடிக்கையில் சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் சிக்கலான சுழல்வட்டப்பாதைகளில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்து வந்த பிரமிப்பும் பேருவகையும் ஏற்படுகிறது. இது குடும்பங்களின் கதை அல்ல. இது கிராமங்களின் கதை அல்ல. தமிழக சாதியப்பொருளாதார உறவுகளில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடந்திருக்கும் மாற்றங்களைத் துல்லியமாகச் சொல்லும் முதல்நாவல் இது. குடும்ப உறவுகளிலும் சமூக உறவுகளிலும் நிகழ்ந்த மாற்றங்களுக்கும் நில உறவுகளில், உற்பத்தி உறவுகளில நிகழ்ந்த மாற்றங்களுக்குமான தொடர்புகளை மிக நேர்த்தியாக இந்த நாவல் அடையாளம் காண்கிறது. கார்ல் மார்க்ஸின் மொழிநடை ஓர் எதார்த்தவாத நாவலின் எல்லைகளை மீறாமல் கவித்துவமான சித்திரங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. மிகத் துல்லியமான காட்சிப் படிமங்கள் அவரது கவித்துவமான சித்தரிப்புகள் மூலம் எழுகின்றன. இந்தச் சித்தரிப்புகள் காலம், இடம், பொருள் சார்ந்து வாசகனை முழுமையாக தனக்குள் இழுத்துக் கொள்கின்றன. பாத்திரங்கள் தம்மளவில் முழுமை பெற்றவையாகவும் இயல்பு மீறாதவையாகவும் இருக்கின்றன. உரையாடல்களின் வழியே நாவல் தன் பாதையைத் தானே உருவாக்கிக்கொண்டு செல்கிறது. - மனுஷ்ய புத்திரன் நேரடியாக வாங்க : +91-94440-86888
|