(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 31 அந்த முன்னிரவின் இருள் மதுரைக் கோட்டையில் மெல்லப் பரவிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே யவன வீரர்கள் நகரை வலம் வந்தபடி எச்சரிக்கை ஒலி எழுப்பிக் கொண்டிருந்தனர். வீதிகள் எங்கும் நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தன. ஏதாவது அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்று புரவிப்படை ஒன்று நகரை வலம் வந்து கொண்டிருந்தது.
நடுச்சாமம் வந்துவிட்டது; நகரின் ஒதுக்குப்புறமான அந்தச் சிவன் கோயிலிலிருந்த ஆலமரத்தடியில் இருவரும் புரவியை நிறுத்தினர். “பரவாயில்லை. மதுரைநகர் நான் எதிர்பார்த்ததைவிட அமைதியுடனே இருக்கிறது” என்று திருப்தியுற்ற இராசேந்திரன், திருவரங்கனை நோக்கி, “என்னப்பா! நானும் கவனித்துக் கொண்டு வருகின்றேன்! நீ இரண்டு நாட்களாகவே மனநிலை சரியில்லாத ஆள் போலவே இருக்கின்றாயே?” என்றான். “ஆமாம். எனக்கு மனம்தான் சரியில்லை!” என்று அவனும் அதை ஆமோதித்தான். இவன் மனத்தைச் சரிப்படுத்த என்ன செய்யலாம்? என்று யோசித்த இராசேந்திரன் நினைவு வந்தவன் போல, “கடார இளவரசிக்கு மூலிகை தேட ஆள் துணை வேண்டுமாம்! நீ போயேன். மனம் சரியாகும்” என்றான் வேடிக்கையாக. திருவரங்கன் மனத்தை உற்சாகப்படுத்த இராசேந்திரன் கூறிய வார்த்தைகளை, திருவரங்கன் வேறுவிதமாய்ப் பொருள் செய்து கொண்டு சற்றுக் காட்டமாகவே, “நான் அரசகுடும்பத்தில் பிறந்திருந்தால் இப்படியெல்லாம் கூறியிருக்கமாட்டீர்கள்!” என்றான். இராசேந்திரனுக்கு அப்பதில் என்னவோ போலிருந்தது! திருவரங்கன் போக்கில் ஏன் திடீர் மாற்றம்? என்று குழம்பியபடியே, வீரர்களுக்கு எதிரில் இம்மாதிரி வாக்கு வாதம் செய்து கொள்வது நல்லது அல்ல என்று எண்ணி, தீப்பந்தத்தை வாங்கிக் கொண்டு அவர்களைப் போகும்படி உத்தரவிட்டான். அங்கிருந்து அவர்கள் சென்றதும்... “உன் போக்கே எனக்குப் புரியவில்லை! நான் என்ன கூறிவிட்டேன் என்று நீ அப்படிக் கோபத்துடன் பதில் சொன்னாய்?” திருவரங்கனும் அவன் பின்னே குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தான். முன்னே சென்ற இராசேந்திரன் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி, “சக்கரவர்த்தியிடமிருந்து ஒரு தூதுவன் வந்திருக்கின்றான்” என்றான். மெதுவாய்ப் புரவியை ஓட்டிக் கொண்டு வந்த அவன், காலினால் அதைத் தட்டி, இராசேந்திரன் அருகில் சென்று, “கேள்விப்பட்டேன்!” என்றான். “எதற்காக வந்திருக்கின்றான் தெரியுமா?” “தெரியாது!” பதில் கூட விறைப்பாக இருக்கிறது! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட இராசேந்திரன், “இரத்தினாதேவியை அழைத்துப் போகவே வந்திருக்கின்றான்” என்றான். இரத்தினாதேவி என்ற வார்த்தையை இராசேந்திரனிடமிருந்து கேட்டதுமே திருவரங்கன் எரிச்சலடைந்தான். அந்தப் பேதைப் பெண்ணை இவர் மிகவும் கேவலமாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஒருவேளை எனக்கும் அவளுக்கும் இருக்கிற காதல் தொடர்பைத் தெரிந்து வைத்துக் கொண்டுதான் அப்படிக் கேலி செய்கின்றாரோ என்னவோ என்று எண்ணியவாறு புரவியைச் செலுத்தத் துவங்கினான். அந்தச் சமயத்தில்... “அந்த மாயப்பிசாசு இங்கிருந்து போவது ஒருவிதத்தில் நல்லதே!” என்றான் வேங்கி இளவரசன் காட்டமாக. நிச்சயம் எனக்கும் அவளுக்கும் இருக்கிற தொடர்பு இவருக்குத் தெரிந்தே இருக்கிறது! அதனால்தான் முதலில் அவளை இங்கிருந்து துரத்த முடிவு செய்துவிட்டார். அவள் கங்கைகொண்ட சோழபுரம் போனதும், முதன்மந்திரியைக் கைக்குள் போட்டுக் கொண்டு, அவளைச் சிறையில் தள்ளிவிடுவார்கள். அதனால்தான் என்னைக் காப்பாற்றுங்கள் என்று என்னிடம் கதறினாள் என்று தவறான முடிவுக்கு வந்த திருவரங்கன், “நீங்கள் அவளை மாயப் பிசாசு என்று கூறுவதை நான் எதிர்க்கின்றேன்!” என்றான். இராசேந்திரன் புரவி சடக்கென்று நின்றது. “என்ன சொல்கின்றாய்?” என்று கேட்ட அவன் கண்கள் சினத்தீயை உமிழ்ந்தன. “இரத்தினாதேவி மாயப் பிசாக அல்ல என்று சொன்னேன்.” “இல்லை; அவள் நிச்சயம் ஒரு மாயப் பிசாசுதான். இல்லையென்றால் நான் போகுமிடமெல்லாம் அவள் என்னைத் துரத்திக் கொண்டு வரமாட்டாள்” என்றான் வேகத்தோடு. ‘அவள் சொன்னது முற்றிலும் சரியாகிப் போய்விட்டது’ என்று எண்ணிக் கொண்டு, “நீங்கள் நினைப்பது போல் அவள் உங்களைத் துரத்திக் கொண்டு வரவில்லை; கடாரத்திலிருந்து நல்லெண்ணத் தூதாகத் தமிழகம் வந்திருக்கிறாள்; அரசரின் நோய் தீர மூலிகை தேடி இங்கே வந்திருக்கின்றாள்! அவ்வளவுதான்” என்றான். அவன் சொன்ன பதிலால் திகைப்படைந்த இராசேந்திரன், அவளைப் பற்றி இவ்வளவு விஷயமும் இவனுக்கு எப்படித் தெரிந்தது. ஒருவேளை இரத்தினாதேவி சொல்லியிருப்பாளோ என்று வியப்புற்றான். பரவாயில்லை. நன்றாகவே அவளுக்குப் பக்கமேளம் கொட்டுகிறான் என்று எண்ணியவாறு, “உனக்கு ஏன் அவளைப் பற்றிச் சொன்னால் கோபம் வருகிறது?” என்று வினவினான். “எனக்கு ஏன் கோபம் வருகிறது. ஒருவரைப் பற்றி அவதூறு சொன்னால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது!” என்றான் திருவரங்கன். இராசேந்திரனுக்கு அளவுக்கு அதிகமாகவே கோபம் உண்டாகியது “நன்றாகவே அந்தக் கள்ளி வலையில் நீ சிக்கிக் கொண்டாய். நமக்குள் பிளவு ஏற்படுத்த வந்த அந்த மாயப் பிசாசை வெட்டிப் போட்டால்கூடப் பாதகமில்லை!” என்றான் ஆத்திரத்தோடு. “இப்படிச் சொல்வதற்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நான் இருக்கும்வரை இரத்தினாதேவிக்கு உங்களால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்” என்றான் திருவரங்கன். “உங்கள் வீரம் ஒரு பெண்ணைக் கொல்வதால் பெருமைப்பட்டுவிடாது” என்றான் திருவரங்கன் பதிலுக்கு. அந்தக் கூற்றால் கோபமுற்ற இராசேந்திரன், “யாரிடம் பேசுகிறாய் என்பதை நினைவுபடுத்திக் கொள் முதலில்” என்றான். “அதனால்தான் சொன்னேன்! நான் அரசகுலத்தில் பிறக்கவில்லை என்று!” என்று திருவரங்கன் பணிவுடனே கூறினான். “நீயும் கங்கைகொண்ட சோழபுரம் போய்ச்சேர்; உன் சேவை எனக்குத் தேவையில்லை. நாளை அவள் போகின்றாள்; கூடவே நீயும் போ!” என்று ஆக்ரோஷமுற்றுப் புரவியை வாரினால் அடிக்க, அது நாலுகால் பாய்ச்சலில் அங்கிருந்து கிளம்பியது. பெண் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கிடைத்துவிட்டது. இருவரையும் பிளவுபடுத்தித் திருவரங்கன் மூலமாகவே இராசேந்திரனைக் கொல்ல வேண்டும் என்று தற்போதைய சூழ்நிலையை வைத்து அவள் கட்டிய முடிவுக்கு முதல்கட்ட வெற்றி என்பது போல் நண்பர் இருவரும் மனக்கசப்பு அடைந்துவிட்டனர்; இதைவிட என்ன வேண்டும் அவளுக்கு? அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்) மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : சிறுகதை ISBN: 978-93-87484-63-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 1000.00 தள்ளுபடி விலை: ரூ. 900.00 அஞ்சல் செலவு: ரூ. 0.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும்.இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன. இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ள என்பதற்கான சான்றுகள் நேரடியாக வாங்க : +91-94440-86888
|