(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 39 ஆவணித் திங்கள் ஆயில்ய நாளில் கங்கைகொண்ட சோழனின் மகனாய் அவதரித்த சக்கரவர்த்தி வீரராசேந்திரர் பூதவுடல் நீத்து, புகழுடம்பு பெற்று விண்ணுலகம் எய்திவிட்டார். இராசகேசரி என்ற பட்டப் பெயருடன், சோழ அரசுப் பொறுப்பை ஏற்ற அவர் சோழநாட்டைக் காப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுமையும் போரிலேயே செலவிட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டார். அதற்காக மக்களிடம் வேலி ஒன்றுக்கு ஒரு கழஞ்சுப் பொன் வீதம் வரியாக வசூலித்தார். ‘வீரமே துணையாகவும், தியாகமே அணியாகவும்’ என்ற வரிகளுடன் தொடங்கும் மெய்க்கீர்த்தி இவரின் வீரச் செயல்களைக் குறிக்க...
அந்தச் சூழ்நிலையில்தான் யவன வீரனைப் போன்று உடையணிந்து உள்ளே புகுந்த இராசேந்திரனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அது... மன்னர் வீரராசேந்திரருக்கு அவசரம் அவசரமாக இறுதிக் கடன்களைச் செய்து முடித்துவிட்டார்கள் என்பதே! கடைசியாய் அவரின் உயிரற்ற உடலைப் பார்க்கலாம் என்று ஆவலுடன் வந்த அவனுக்கு இது பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. முதலமைச்சர் கூடப் பொறுப்பில்லாமல் நடந்துவிட்டாரே! என்ற கோபத்துடன் அவரின் மாளிகை நோக்கி காரனை விழுப்பரையனுடன் சென்றான். ஆனால்... மாளிகையின் முன்னாலிருந்த வீரர்கள், அவர்களைத் தடுத்துவிட்டனர். அத்துடன் யாரையும் உள்ளேவிட முடியாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டனர். ‘ஆட்சி மாறிவிட்டதின் அறிகுறி இங்கேயே தெரிகிறதே!’ என்று உணர்ந்து இராசேந்திரன், பின்பக்க வழியாக இரகசியமாய் நுழைந்தான். முதலமைச்சர் சோர்வுடனிருந்தார். யவன வேடத்திலிருந்த இராசேந்திரனைப் புரிந்து கொண்டு, தன் அந்தரங்க அறைக்குள் அவனை அழைத்துச் சென்றார். காரனை விழுப்பரையன் யாராவது வருகின்றார்களாவென்று வெளியே கண்காணித்தபடி இருந்தான். “இதற்குள் எப்படி நீங்கள் அரசருக்கு இறுதிக் கடன்களை முடிக்கலாம்? எனக்கு அவர் மாமன் முறை வேண்டும். நாங்களெல்லாம் இல்லாமல் எப்படி நடத்தினீர்?” என்று கோபத்துடனே கேட்டான் இராசேந்திரன். “என் கைகள் கட்டப்பட்டுவிட்டதப்பா. அரசர் இறந்ததும், அரசிக்கு சுயநினைவே இல்லை. யார் சொன்னாலும் சரி... சரி... என்று தலையாட்ட ஆரம்பித்துவிட்டார். இராஜசுந்தரியும் இளையராணியும் இதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். நீண்ட நாள் நோயுற்று இருந்ததால் இறந்த மறுநாளே உடலிலிருந்து ஒருவித வாசனை வர ஆரம்பித்துவிட்டது. அதனால், சீக்கிரம் இறுதிக் கடன்களை முடிக்க வேண்டும் என்று அவர்கள் செய்த முடிவுக்கு, கட்டுப்பட வேண்டியதாகப் போயிற்று.” “அது என் உத்தரவு அல்ல அப்பா. இப்போதைய சோழச் சக்கரவர்த்தி அதிராசேந்திரனின் கட்டளை. இதிலிருந்தே என் நிலைமையை நீ புரிந்து கொண்டிருக்க வேண்டும்!” என்றார் முதலமைச்சர் அமைதியாக. அத்துடன் சிறிது வருத்தம் தோய்ந்த குரலில் அவர் கூறிய விஷயமாவது: “நான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்துவிட்டது. சோழச் சக்கரவர்த்தி உயிருடன் இருக்கும்போதே உனக்கும் மதுராந்தகிக்கும் திருமணம் நடத்திவிட திட்டமிட்டிருந்தோம். அதற்கு அரசரின் பரிபூரண ஒத்துழைப்பும், பட்டத்தரசியின் ஆதரவும் இருந்தது. அந்த நம்பிக்கையில்தான் உன்னை மதுரையிலிருந்து இரகசியமாக வரவழைக்க ஆளை அனுப்பினேன். ஆனால் தெய்வத்தின் நினைப்பு வேறாக இருந்துவிடவே, என் திட்டங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டன. இனி நான் என்ன செய்ய முடியும்? இன்று காலையில்தான் சோழச் சக்கரவர்த்தியாக முடிசூடியிருக்கும் அதிராசேந்திரர் என்னைப் பார்க்க வந்தார். அவரிடம் என்னை வீட்டுக்குள்ளேயே இருக்கச் செய்வது மனவேதனையைத் தருகிறது என்று கூட சொன்னேன். அதற்கு அவர், ‘நீங்கள் பதவியிலிருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று மறுமொழி கூறிவிட்டார். இதைவிட ஒரு அவமானத்தை என் வாழ்க்கையில் இதுவரை நாள் சந்தித்ததில்லை. என்ன செய்வது? நேரம் சரியில்லை என்று பேசாமல் இருந்துவிட்டேன். என்னால் சிறை வைக்கப்பட்ட வீரசோழ இளங்கோ வேளான் அரசரின் மெய்க்காப்பாளனாக ஆக்கப்பட்டிருக்கிறான். சிறிய தன்மபாலர் சிறை வைக்கப்பட்டுள்ளார். அதற்குக் காரணமே இல்லை. தளபதிக்கு என்ன நேருமோ என்ற கவலை! நீண்ட நாளாய் மறைபட்டிருந்த இடங்கை, வலங்கை பிரிவு மறுபடியும் சோழப் படையில் தலைதூக்கும் போல் தெரிகிறது! குந்தள மன்னர் சொன்னபடியெல்லாம் அரசர் ஆடுகின்றார். கங்கரபுரியின் கோட்டை தலைமை குந்தள நாட்டைச் சேர்ந்தவருக்குத் தரப்போவதாக பேசப்படுகிறது. சோழ அரசர் அதிராசேந்திரர் எங்களையெல்லாம் நம்பாமல் செயல்படுகிறார். எத்தனை நாளைக்குக் குந்தள மன்னர் அவருக்குத் துணையிருப்பார்? இது தெரியாமல் அந்த இரு பெண்மணிகள் சொன்னபடி செயல்படும் பொம்மையாக இருக்கின்றார். சக்கரவர்த்திக்குரிய தன்னிச்சையாய்ச் செயல்படும் திறன் அவருக்கு இருக்கிறதா என்றால் சந்தேகமாயிருக்கிறது!” அவர் கூறிக் கொண்டிருக்கும் போது அந்தரங்க அறையிலிருந்த மூலப் பக்கத்திலிருந்து ‘தட் தட்’ என்று மூன்று முறை தட்டும் சப்தம் கேட்டது. “அது என்ன சப்தம்?” என வாளை உருவினான். சோர்ந்திருந்த முதலமைச்சரின் முகத்தில் புன்முறுவல் வெளிப்பட்டது. “இது அனுமதிக்கப்பட்ட சப்தம்தான்” என்றார். இராசேந்திரன் அதைப் புரிந்து கொண்டு, “நான் வெளியே இருக்கட்டுமா?” என்றான். “அப்படித்தான்!” என்ற அவர், அங்கிருந்து புறப்படத் திரும்பிய இராசேந்திரனை, “சற்று நில்!” என்றார். “என்ன முதன்மந்திரி?” என்று கேட்டவாறு அருகில் வந்தான். “மரியாதைக்குச் சோழச் சக்கரவர்த்தியாக ஆகியிருக்கும் அதிராசேந்திரனைப் பார்த்து வாழ்த்துத் தெரிவி! உன்னை இளவரசன் ஆக்குவதற்கு அதன் மூலம் அவருக்கு எண்ணம் வருகிறதா பார்க்கலாம். நானும் சக்கரவர்த்தியின் விருப்பம் என்று ஏற்கனவே அவரிடம் சொல்லியிருக்கின்றேன்!” “எனக்கு இளவரசனாக விருப்பம் இல்லை. இவர்கள் மத்தியில் அந்தப் பட்டத்துடன் உலவுவதைவிட எங்கேயாவது போர்க்கள முனைக்கு அனுப்பி வையுங்கள். போய்விடுகின்றேன்” என்றான் விரக்தியான குரலில். “நம்பிக்கையை இழந்துவிடாதே இராசேந்திரா! எனக்கு ஏற்பட்ட தோல்வியைவிடவா உனக்கு ஏற்பட்டுவிட்டது? இறுதி வெற்றி நமக்குத்தான்! கவலைப்படாமல் அதிராசேந்திரரைப் போய்ச் சந்தி. உன்னை ஒன்றும் அவர் செய்துவிடமாட்டார். அப்படி ஏதாவது நடந்தால் நானும் மற்றவர்களும் வேடிக்கை பார்க்கமாட்டோம். அதனால் துணிவுடன் அவரைச் சந்தித்துவிட்டு என்னை இரகசியமாய் வந்து பார். அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று தெரிவிக்கின்றேன்!” என்றார். அதற்குள் மறுபடியும், ‘தட் தட் தட்’ என்று மூன்று முறை தட்டும் சப்தம் கேட்டது. முதலமைச்சர் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டார். இராசேந்திரன், “அதிராசேந்திரரைப் பார்த்துவிட்டுப் பிறகு வந்து சந்திக்கின்றேன்” என்று அங்கிருந்து வெறியேறினான். மூலையிலிருந்த சுவரிலுள்ள புலித்தலையை அவர் வலப் பக்கமாய்த் திருப்பினார். மூலைப்பக்கத்தில் ஆள் நுழையுமளவிற்கு வழி கிடைத்தது. உள்ளே எட்டிப் பார்க்க, வெள்ளை முக்காடிட்ட உருவம் சுரங்கப் படிக்கட்டுகளின் நின்று கொண்டிருந்தது. அவ்விதம் கைகுவிக்கும் போது, விரலிலிருந்த வைர மோதிரத்தின் ஒளி அவரின் கண்களைக் கூச வைப்பது போல் பளிச்சிட்டது. அந்த வெளிச்சம் கண்களில் படாதிருக்க ஒருகணம் இமைகளை மூடிக் கொண்டார். “என்னப்பா வழக்கத்திற்கு விரோதமாய்” என்று கூறியபடி படிக்கட்டுகளில் கால் வைத்து மூலையில் உண்டான வழியை அடைத்துக் கொண்டார். அந்தக் கரகரப்புக் குரல்... அதே வாசனை... சுரங்க அறை முழுவதும் வீச உருவத்தின் அருகில் சென்றார். “சதி! பெரிய அளவில் நடக்கிறது. மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட முடிவு செய்து இரகசியமாய் சோதிடரை வரவழைத்துத் தேதியும் குறித்துவிட்டார்கள். பட்டத்தரசியைக் கொல்ல முடிவு செய்துவிட்டார்கள். மன்னர் இறந்த துக்கம் தாளாமல் நஞ்சுண்டு இறந்துவிட்ட மாதிரி வெளி உலகத்துக்குத் தெரியும்படி அவர் கைப்பட எழுதப்பட்ட ஒரு போலி ஓலை நறுக்கைத் தயார் செய்துவிட்டார்கள். இன்னும் மூன்று தினங்களில் அவர் கொல்லப்படலாம்” என்றது உருவம். முதலமைச்சருக்கு நெற்றி சுருங்கியது. “அவரைக் கொல்வதால் இவர்களுக்கு என்ன இலாபம்?” “எதுவாயினும் உங்களைக் கலந்து செய்யும்படி, அதிராசேந்திரருக்குக் கட்டளையிட்டிருக்கின்றார் பட்டத்தரசி. இது சோழ மன்னருக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அத்துடன் மதுரையிலிருந்து இராசேந்திரனை வரவழைத்து, அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டும்படி அடிக்கடி அதிராசேந்திரரை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.” “ஓ! கதை இப்படிப் போகிறதா?” புரிந்து கொண்ட முதன்மந்திரி, “இளவரசர் அதிராசேந்திரர் இந்த அளவிற்குத் துணிந்துவிட்டாரா?” என்றார். “அவர் சம்மதிக்கவில்லை. ஆனால் அவருக்குத் தெரியாமல், விக்கிரமாதித்தர் இம்மாதிரி ஒரு திட்டத்தைத் தீட்டி வைத்திருக்கிறார். அரசியின் நச்சரிப்புத் தாங்காமல் அவர்கள் சொல்லியபடி இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினால் என்ன? நம்மை மீறியா போய்விடுவான்? என்று தன் தங்கை இராஜசுந்தரியிடம் கேட்டிருக்கின்றார் அரசர். அதன் விளைவாய் அவர்கள் சோழச் சக்கரவர்த்திக்குத் தெரியாமல் இத்தகைய கீழ்த்தரமான செயலில் இறங்கியிருக்கின்றார்கள்.” “சோழப் பேரரசர் பட்டத்தரசி சொல்வது போல் தலையாட்ட ஆரம்பித்தால், அவர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடுமே! அதனால்தான் அவர்கள் அரசியைக் கொன்றுவிடுவதில் தீவிரமாயிருக்கிறார்கள்.” “இதைப் பட்டத்தரசிக்குத் தெரிவித்து, அவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்ல வேண்டுமே?” - முதன்மந்திரி குழம்பிக் கொண்டிருக்கும் போது, உருவம் குறுக்கிட்டு... “நீங்கள் அவரைச் சந்திக்க முடியாதா?” என்று கேட்டது. “முடியாது. எக்காரணம் கொண்டும் நான் இந்த மாளிகையைவிட்டு வெளியேற முடியாது!” “அக்கிரமம். இது அநியாயம். இதற்கு அவர்கள் பதில் சொல்லியேயாக வேண்டும்” என்று உருவம் பற்களைக் கடிக்க... சினத்தினால் அதன் கண்கள் கொழுந்துவிட்டெரியும் சுடரெனப் பிரகாசித்தன. “இரகசிய வழியின் மூலம் சந்தித்தாலென்ன?” உருவம் திரும்பவும் வினவ... “இந்த அறைக்கும் அவர்கள் இருக்கும் அறைக்கும் எந்தவித மறைவான வழியும் இல்லை. அதனால்தான் யோசிக்கின்றேன்!” என்றார் முதன்மந்திரி. “நான் நேரே போய் அவர்களுக்கு எச்சரிக்கை செய்யட்டுமா?” “அப்படியே செய்! ஆனால் இந்த உருவத்துடன் போக வேண்டாம். உன் பழைய உருவத்தில் சென்றுவிடு” என்று கூறினார். “அடுத்து உன்னுடைய வேலை என்ன?” “சிறிய தன்மபாலனை விடுதலை செய்வது. அதற்காகத்தான் தக்க நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்!” “எச்சரிக்கையுடன் செயல்படு. அவர்களிடம் மாட்டி கொள்ளாதே! இப்போதிருக்கும் சூழ்நிலைக்கு நீ ஒருத்தன்தான் எனக்கு வலக்கை போன்று இருக்கின்றாய். சாக்கிரதை” என்றார் முதன்மந்திரி. “நான் அவர்களிடம் சிக்கமாட்டேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்!” - பிரமாதிராசரிடம் விடைபெற்றுக் கொண்டு உருவம் அங்கிருந்து மறைந்தது. முதன்மந்திரி பழையபடி சுரங்க வழியைத் திறந்து வெளியேறி இருக்கையில் அமர்ந்து அடுத்து என்ன செய்யலாம்? என்ற யோசனையில் மூழ்கலானார். ***** பிரமாதிராசரின் மாளிகையிலிருந்து வெளியேறிய இராசேந்திரன், யவன வேடத்தைக் கலைத்துக் கொண்டு காரனை விழுப்பரையனுடன் பட்டத்தரசியின் மாளிகை நோக்கிச் சென்றான். அவனை வீதியில் மக்கள் அடையாளம் கண்டு கொண்டு சூழ்ந்து கொண்டனர். இராசேந்திரன் புரவியிலிருந்து இறங்கி அனைவரையும் வணங்கினான். சக்கரவர்த்தி இறந்தது பற்றிக் கூட்டத்தினர் கண் கலங்கி நிற்க இவனுக்கும் துயரம் தாளாமல் விழிகளில் நீர் சுரந்தது. அவனுடன் கடாரத்திற்குக் கூடச் சென்ற போர் வீரர்கள் சிலர் இராசேந்திரனைப் பார்த்துவிட்டு அருகே வந்து வணங்கி நின்றனர். அனைவரையும் நலம் விசாரித்து ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கும் போது சக்கரவர்த்தியின் மெய்க்காப்பாளனான வீரசோழ இளங்கோ வேளான் தன்னுடன் வந்து கொண்டிருந்த வீரர்களிடம், “அது என்ன கூட்டம்?” என்று வினவினான். “தெரியவில்லை!” என்று ஒரு வீரன் பதில் கூறவும் அதனால் கோபமுற்று “இம்மாதிரி அசட்டையாய் நாம் இருக்கக் கூடாது. வலங்கைப் பிரிவினரான நமக்கு எதிராக இடங்கை வகுப்பார் கலகம் செய்ய முயல்வதாக செய்தி வந்துள்ளது. வாருங்கள். என்னவென்று பார்ப்போம்!” எனக் கூட்டத்தை நோக்கிக் குதிரையைச் செலுத்தினான். “என்னப்பா நடுவீதியில் கும்பல்? எல்லோரும் கலைந்து செல்லுங்கள்!” என்று ஒரு வீரன் அதட்ட மக்கள் ஒன்றும் பேசாமல் மெல்ல கலைந்து செல்ல ஆரம்பித்தனர். குதிரையிலிருந்தவாறு இதைப் பார்த்துக் கொண்டிருந்த வீரசோழ இளங்கோ வேளான், கூட்டத்தினர் நடுவில் இராசேந்திரன் நிற்பதையும், அதற்குப் பக்கத்தில் காரனை விழுப்பரையன் இருப்பதையும் கவனித்துத் திடுக்கிட்டான். முன்பெல்லாம் இராசேந்திரனைக் கண்டால் அவன் வணங்குவது வழக்கம். ஆனால் இம்முறை அம்மாதிரி எதுவும் செய்யாமல் சற்று மிடுக்குடனே, “எப்போது மதுரையிலிருந்து வந்தீர்? முந்தின சக்கரவர்த்தி மறைந்த செய்தி எப்போது தெரிந்தது?” என்று கேட்டான். “சற்று முன்புதான் வந்தேன்” என்று கூறிய இராசேந்திரன், “அரசரை நான் பார்க்க வேண்டுமே!” என்றான். “அரசர் முக்கிய வேலையாயிருக்கின்றார். இப்போது நீங்கள் சந்திக்க முடியாது! வேண்டுமென்றால் நீங்கள் வந்திருப்பது பற்றி அவரிடம் தெரிவிக்கின்றேன்!” “பார்க்கலாம்”- அலட்சியத்துடன் கூறிய வீரசோழ இளங்கோ வேளான் கூட்டத்தினரிடையே, வீரர்கள் இருப்பதைப் பார்த்து, “இங்கே என்ன உங்களுக்கு வேலை!” என்றான் சீற்றத்தோடு. “ஒன்றுமில்லை” என்றபடி அவர்களும் கலைய, சில பேர் “உங்கள் அட்டகாசத்துக்கெல்லாம் சீக்கிரம் முடிவு வரத்தான் போகிறது!” என்று முணுமுணுத்தவாறு அகன்றனர். வீரசோழ இளங்கோ வேளான் இராசேந்திரனை ஒரு மாதிரி பார்த்தபடி, புரவியைத் தட்டிவிட்டான். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 216 எடை: 265 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-93-82577-12-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: எனக்குப் பணம் வேண்டும். அதைச் சம்பாதிக்க வழி சொல்லுங்கள். இப்படிக் கேட்பவர்கள் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள்.கையில் ஆயிரம் ரூபாய் நோட்டுக் கற்றைகளாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நிலையிலாவது உங்களுக்குத் திருப்தி ஏற்படுகிறதா? இவை இந்திய ரூபாயாக இருப்பதற்குப் பதில் ஈரோவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றுதான் உங்கள் எண்ண ஓட்டம் அமையும்.எத்தனை எத்தனை கோடிகளைக் கொடுத்தாலும் உங்கள் உள்ளம் அந்தக் கோடி மேலும் ஒன்று என்றுதான் அலையும். உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்? ஆயிரம்? லட்சம்? கோடி? அதை முதலில் முடிவு செய்யுங்கள்.நீங்கள் கேட்ட தொகை இதோ என்று எடுத்துக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? வீடு வாங்குவீர்கள், கார் வாங்குவீர்கள், நகை எடுப்பீர்கள், உலகத்தைச் சுற்றிப் பார்ப்பீர்கள், சொகுசாக வாழ்வீர்கள்.நீங்கள் இதையே தலைகீழாகச் சாதிக்கலாம்..எப்படி? முதலில் வாழ்க்கையை இனிமையாக வாழத்தெரிந்து கொள்வது... அப்புறம் பணமே உங்களைத் தேடி வரும்படி வழி செய்து கொள்வது...என்ன இது? இப்படிக்கூட நடக்குமா?நடக்கும் என்பதைக் காட்டத்தான் இந்தப் புத்தகமே..கட்டளைகளைப் பின்பற்றுங்கள்,காசு தானே வரும். நேரடியாக வாங்க : +91-94440-86888
|