(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 22 பாதாள அறை... அரண்மனையின் நடுவில் மிகவும் பாதுகாப்புடன் இருந்த அந்தப் பகுதிக்குச் செல்ல, நிலாமுற்றத்தினருகிலிருக்கும் படிக்கட்டுகளில் சென்று, வலப்பக்கம் திரும்ப வேண்டும். அங்கிருந்து சுரங்கம் போன்று பூமிக்கு அடியில் சென்று கொண்டிருந்த படிகளில் இறங்கினால், மேலே இருப்பது போல், கூடம் போன்ற அமைப்பு கீழேயும் இருக்கும். அதன் நடுவே பெரிய இரும்புக் கதவுகள் கொண்டு மூடப்பட்டிருந்த அந்த இடத்தைத் தாண்டினால், இருபுறமும் சிறு சிறு அறைகள் இருக்கும். அவைகளில்தான் பயங்கர குற்றம் புரிந்த குற்றவாளிகளை அடைத்து வைத்திருந்தார்கள்.
அத்துடன் நில்லாது, இருபது வீரர்களுக்கு மேல் உருவிய வாளுடன், அப்பகுதியை அடிக்கடி வலம் வந்து கொண்டிருந்தனர். அத்தனைப் பாதுகாப்புடனிருக்கும் பாதாளச்சிறையில் ஒருவர் சிறை வைக்கப்பட்டால், அவரின் முடிவு காலம் நெருங்கிவிட்டது என்றுதான் கொள்ள வேண்டும். பொய்ப்பாகர் வேடத்தில் கலகம் செய்ய வந்த பாண்டியர் இருவரும் இங்கேதான் அடைக்கப்பட்டிருந்தனர். மதுரையின் தற்காலிக அரசப்பிரதிநிதியாகப் பதவி ஏற்றுள்ள இராசேந்திரன், திருவரங்கனுடன் அங்கே சென்றான். பாதாளச்சிறையின் தலைமைக் காவலன் இரும்புக் கதவைத் திறந்து அவர்களை வரவேற்றான். “அவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்ததா?” என்று இராசேந்திரன் கேட்டான் உள்ளே நுழைந்தபடி. “கொடுமையின் எல்லைக் கோட்டுக்கே சென்று துன்புறுத்திவிட்டோம். அவர்களிடமிருந்து எதையும் வரவழைக்க முடியவில்லை” என்றான் சிறைத்தலைவன் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு. “சரி, பார்க்கலாம்.” என்று சிறை வைக்கப்பட்டிருந்த அறை முன் தலைவனுடன் சென்றான். காவல் வீரன் இரும்புக்கதவைத் திறந்துவிட, உள்ளே திருவரங்கனுடன் சென்றான் இராசேந்திரன். உத்தரத்தில் தொங்கிய இரு சங்கிலிகளைப் பின்பக்கமாக மடித்து, இருவரையும் பிணைக்கப்பட்டிருந்தது. அவர்கள் கை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, கால்கள் இரண்டும் முன்பக்கமாய் இழுத்துத் தரையில் கட்டப்பட்டிருந்தது. இது ஒன்றே போதும் அவர்களுக்கு! ஆனால்... செய்தியை வரவழைப்பதற்கு நிரம்பத்தான் துன்புறுத்திவிட்டார்கள். இருந்தாலும் ஒன்றுமே இவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடியவில்லையே! பாதாளச் சிறைக்காவல் தலைவனைக் கூப்பிட்டுக் கைகளையும் கால்களையும், அவிழ்த்து விடுவிக்கும்படி கூறினான் இராசேந்திரன். கைதியை அம்மாதிரி செய்யும் வழக்கம் இல்லையே! என்று பொருள்படும் விதத்தில் சிறைத்தலைவன் இவனைக் கவனிக்க... “பரவாயில்லை. இவ்வளவு கட்டுக் காவலையும் மீறி இவன் ஓடிவிடமாட்டான். நாமும் மனிதர்கள்தான். ஒருவனைத் துன்புறுத்துவதற்கு அளவு என்று ஒன்று இல்லையா?” என்றான் இராசேந்திரன். சங்கிலிகளை அவிழ்த்து, இருவரையும் பிணைப்பிலிருந்து விடுவித்தனர். நிற்க முடியாமல் அவர்களின் கால்கள் நடுங்கின. கைகள் அசைக்க முடியாமல் மரத்துப் போயிருந்தன. உட்காரும்படி இருவரையும் பார்த்துக் கூறினான் இராசேந்திரன். ஆனால், கீழே உட்கார முடியாமல் மிகவும் சங்கடப்பட்டனர். குடிப்பதற்கு தண்ணீர் தரும்படி காவல்தலைவனுக்குக் கட்டளையிட்டான். மட்பாண்டத்தில் குளிர்ந்த நீர் கொண்டு வரப்பட்டது. சிறைத்தலைவனிடமிருந்து அதை வாங்கி, கை, கால், முகம் ஆகியவற்றைக் கழுவிக் கொண்டு, “அப்பாடா!” என்று இருவரும் பெருமூச்சுவிட்டனர். சற்று நேரம் சென்றதும், இராசேந்திரன் அவர்கள் அருகில் சென்றான். “உங்களைத் துன்புறுத்த வேண்டாம் என்று இவர்களுக்குக் கட்டளையிட்டுவிடுகிறேன். இனிமேல் உங்கள் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களை ஏவிவிட்டவர் யார்? எதற்காக யானைகளை அவிழ்த்து மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில்விட்டுக் குழப்பம் ஏற்படுத்த முனைந்தீர்கள்? இதையெல்லாம் தெரிவித்துவிட்டால் உங்கள் இருவரையும் மன்னித்து விடுதலை செய்துவிடுகின்றேன்!” என்றான் மிகவும் கனிவாக. அன்புடன் நடந்து தங்களிடமிருந்து செய்தியை வாங்க முயற்சிக்கின்றான் என்பதைப் புரிந்து கொண்ட இருவரும், “மன்னித்துக் கொள்ளுங்கள்; நாங்கள் சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம்” என்றனர். இராசேந்திரன் அதைக் கேட்டு முறுவலித்தான். “என்னைப் பகைவன் என்று எண்ண வேண்டாம். உங்களுக்கு உதவி புரிய வந்த நண்பன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்” என்றான். தலை குனிந்தபடியிருந்த இருவரில் ஒருவன் நிமிர்ந்தான். அவன் கண்கள் இராசேந்திரன் மேல் ஆழமாய்ப் பதிந்தன. “நீங்கள் என்ன கூறினாலும் எங்களின் பதில் இதுதான். அது...” என்று நிறுத்தி திரும்பவும் தலைகுனிந்தவாறு, “சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றான். “என்ன திமிர்!” என்று கோபமுற்ற சிறைத்தலைவன் அடிப்பதற்காகக் கைகளை ஓங்கியபடி அவர்கள் மேல் பாய்ந்தான். இராசேந்திரன் அவனைத் தடுத்து, “ஆத்திரப்படுவதால் எந்தப் பயனும் கிடைத்துவிடாது. கொஞ்சம் அமைதியுடன் இரு!” என்று கூறி, “நீங்கள் சொன்ன இப்பதில் எனக்குத் தேவைப்படாத ஒன்று. இருந்தாலும் நான் கோபப்படாமல் கேட்க விரும்புகின்றேன். உங்கள் பெயர்தான் என்ன?” என்றான். இருவரும் ஒருவரையருவர் பார்த்துக் கொண்டனர். சொல்வதா? வேண்டாமா? என்பது போல சில நொடிகள் மௌனமாயிருந்துவிட்டு, “ஐயா, தயவு செய்து உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறோம். எங்களைப் பற்றி எதுவும் கேட்க வேண்டாம்” என்று உறுதியான குரலில் கூறினார்கள். அவர்களின் கட்டுக்கோப்பான உறுதியைக் கண்டு வியந்த இராசேந்திரன், “பெயரைச் சொல்வதால் எந்தவிதத் தவறும் இல்லையென்று எனக்குப்படுகிறது. அதனால் உங்கள் இரகசியங்கள் எங்களுக்குத் தெரியவும் போவதில்லை. எனவே பெயரைச் சொல்வீர்கள் என்று நம்புகின்றேன்!” என்று புன்முறுவலுடனே கூறினான். “மன்னிக்கவும், உங்கள் நம்பிக்கையை நாங்கள் நிறைவேற்ற முடியாத நிலையிலிருக்கிறோம்” என்று உறுதியுடன் கூறினான் இருவரில் ஒருவன். “இத்தனை உறுதியுடன் இருக்கும் உங்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்” என்றான். “நன்றி!” என்று அவர்களில் ஒருவன் முறுவலுடன். “நன்றி சொன்னது பற்றி எனக்கு மகிழ்ச்சிதான்! இருந்தாலும் உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்வதில் எந்தவிதப் பாதகமும் ஏற்படாது என்றே நினைக்கின்றேன்!” என்றான் இராசேந்திரன் திரும்பவும். இனிமேல் அவர்களிடம் எப்பதிலையும் வரவழைக்க முடியாது என்று அறிந்து கொண்ட இராசேந்திரன் சிறைத் தலைவன் பக்கம் திரும்பி, அவர்களுக்கு வயிறு நிறைய உணவு தரும்படி உத்தரவிட்டு வெளியே வந்தான். பின் தொடர்ந்த சிறைத்தலைவன், “நஞ்சு கலந்த உணவுதானே?” என்று கேட்க, “ஆமாம்!” என்று தலையாட்டிவிட்டுப் பாதாளச் சிறையின் படிகளைக் கடக்கலானான் இராசேந்திரன். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
The One-Minute Sufi மொழி: English பதிப்பு: 5 ஆண்டு: 2009 பக்கங்கள்: 216 எடை: 250 கிராம் வகைப்பாடு : Self Improvement ISBN: 978-81-7992-517-0 Stock Available விலை: ரூ. 275.00 தள்ளுபடி விலை: ரூ. 250.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: This book provides short inspirational Sufi principles that are designed to be read in a minute and reflected on throughout the day as we go about our daily business. These principles can change the course of an entire day – and gradually, our destiny. Is a minute a day enough to change the course of our lives? With grace, spiritual enlightenment can happen in a fraction of a second. We need to be open and receptive to this blessing. The One-Minute Sufi uses down-to-earth stories and examples to guide readers through the practical realities of the Sufi approach to life and to help us become open and receptive to this grace. நேரடியாக வாங்க : +91-94440-86888
|