(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 24 சோழச் சக்கரவர்த்தியின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த இரத்தினாதேவி புன்முறுவலுடனே, “இப்போது எப்படியிருக்கு?” என்று வினவினாள் மாமன்னரைப் பார்த்து. வீரராசேந்திரர் படுக்கையிலிருந்து எழுந்து தெம்புடனே சிரித்துக் கொண்டார். “இப்போது எனக்கு ஒன்றும் இல்லை!” என்று பஞ்சணையிலிருந்து இறங்கி, சிறிது தூரம் மெல்ல நடந்தார்.
“என்ன இளவரசி?” என்று அவர் அருகில் வர... “ஒரு மூலிகை மட்டும் கிடைத்துவிட்டால், நீங்கள் இருபது வயதுக் காளை போல் ஆகிவிடுவீர்கள்!” என்றாள் புன்முறுவலுடனே. மாமன்னருக்குச் சந்தோஷம் மிகுந்தது. ஒவ்வொரு மனிதனும் இளமையாகவே இருக்க ஆசைப்படுவான் அல்லவா? அதுவும் வயது முதிர்ந்துவிட்ட வயோதிகரைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. நோயினால் அவதியுறும் சோழ வேந்தருக்கு ‘இருபது வயதுக் காளை’ என்ற அவ்வார்த்தை அமுதமென செவிகளில் விழுந்துவிட்டதால், மனம்விட்டு உரக்கச் சிரித்தார். “அந்த மூலிகை எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா?” என்று பரபரப்போடு வினவினார். “நான் போகுமிடமெல்லாம் தேடிவிட்டேன் மன்னரே! அநேகமாக மலைப்பகுதியில்தான் அது வளரும், மிக அபூர்வ மூலிகையான அது, மதுரையொட்டியிருக்கும் காடுகளில் இருக்கலாம் என்று எனக்குப்படுகிறது” என்றாள். “அப்படியென்றால் நம் நாட்டு வில்லியர்களை அங்கே அனுப்பி தேடச் சொன்னால் என்ன?” “இல்லை, சக்கரவர்த்தி! எனக்குத்தான் அதைப் பற்றி நன்றாய்த் தெரியும். நான் போய்த் தேடுவதுதான் நல்லது!” என்றாள். “சரி; அப்படியென்றால் மதுரையிலிருக்கும் இராசேந்திரனுக்கு ஒரு கடிதம் தருகின்றேன். அங்கே நீ நமது விருந்தாளியாக தங்கி, மூலிகையைத் தேடிக் கொண்டு வந்துவிடு. துணைக்கு...?” என்று அரசர் வினவ, “தென்னனையும், சாமந்தனையும் அனுப்பினால் போதும்” என்றாள். “நல்லது இன்றே நீ புறப்படு!” என்று சக்கரவர்த்தி கூறிக் கொண்டிருக்கும் போதே முதலமைச்சர் பிரமாதிராசர் உள்ளே நுழைந்தார். அவரைப் பார்த்த வேந்தர், “நல்ல நேரத்தில் வந்தாய் பிரமாதிராசா! கடார இளவரசி உடனே மதுரை புறப்பட விரும்புகின்றாள். அதற்கான ஏற்பாட்டைச் செய். துணைக்குச் சாமந்தனையும் தென்னனையும் அனுப்பி வை!” என்று உத்தரவிட்டார். முதன்மந்திரிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இராசேந்திரனைக் கொல்லவே அவள் மதுரைப் பயணத்தை மேற்கொண்டிருக்கலாம்! என்று ஊகித்து, அதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், “குழப்பமான இந்நேரத்தில் பெண்கள் அங்கே போவது அவ்வளவு நல்லதாகப்படவில்லை” என்றார். இவள் விஷயத்தில் பிரமாதிராசன் எதற்கு எடுத்தாலும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கின்றான்! அத்துடன் கடார நாட்டிற்கு அனுப்பிவிட வேண்டும் என்று அடிக்கடி என்னிடம் சொல்லி வருகின்றான். எதற்காக இவனுக்கு இந்தப் புத்தி? என்று சோழச் சக்கரவர்த்தி சற்றே முனிவுடன், “நான் சொன்னதைச் செய் பிரமாதிராசா!” என்றார் உரத்த குரலில். சக்கரவர்த்தி இவ்விதம் பேசி, முதன்மந்திரி கேட்டதில்லையாதலால் வேறு வழியின்றி, “சரி!” என ஒப்புக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக, வேண்டா வெறுப்புடன் காவலனை அழைத்து விடையில் அதிகாரியை வரச் சொன்னார். இவள் போய்ச் சேருவதற்கு முன்பே, மதுரை வரும் விஷயத்தை இராசேந்திரனுக்குத் தெரிவித்து, எச்சரிக்கையுடன் இருக்கச் சொல்ல வேண்டும். அதற்கு என்ன வழி? என்றும் யோசிக்கலானார். பல்லக்கில் அவளை மதுரைக்கு அனுப்ப வேண்டும்! பல்லக்குத் தூக்கிகளிடம் சுற்றுவழியில் செல்லும்படி சொல்லி வைப்போம். அதற்குள் உயர்சாதிப் புரவியில் ஒரு வீரனை அனுப்பிச் செய்தியைத் தெரிவித்துவிடலாம் என்று திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விடையில் அதிகாரிக்கு உத்தரவிட்டார். ஆனால்... புரவியில்தான் செல்லப் போகிறேன் என்று கடார இளவரசி இரத்தினாதேவி கூறிவிட்டதால், ஆண்டவன்விட்ட வழி என்று தென்னனுக்கும், சாமந்தனுக்கும், அவளுக்குமாக புரவியைத் தயார் செய்து வைக்கும்படி கட்டளையிட்டார். காவிரிக் கரையின் வடக்குப் பக்கமாகச் சென்ற பெரு வழியின் மூலம், உறையூரை அடைந்து, அங்கிருந்து காவிரியாற்றைக் கடந்து, தென்கரைப் பக்கம் வழியாக, நெடுங்குளம் சென்று மதுரையை அடைய வேண்டும். அந்த வழியில்தான் மூன்று புரவிகளும் சென்று கொண்டிருந்தன. தூய்மையான வெள்ளை நிறத்திலிருந்த குதிரையில் இரத்தினாதேவி இருந்தாள். சாம்பல் நிறப் புரவியில் சாமந்தன் அமர்ந்திருந்தான். கருப்பும், பழுப்பும் கலந்த நிறக் குதிரையில் தென்னன் இருந்தான். மதுரையின் பாதுகாப்புப் பொறுப்பேற்றிருக்கும் இராசேந்திரனுக்குச் சோழச் சக்கரவர்த்தி தந்த ஓலை, இரத்தினாதேவியிடம் இருந்தது. பகலவன் செந்நிறக் கதிர்கள் கடுமையாய் மூவரையும் வறுத்த புரவியை ஓரிடத்தில் நிறுத்தி ஓய்வெடுத்துச் செல்லலாம் என்று தென்னன் இடம் தேடினான். தூரத்தில் பாழ் மண்டபம் ஒன்றும் அதையொட்டி ஆலமரமும் அதனருகே சிதலமுற்ற ஒரு குளமும் தென்பட்டன. அங்கே இளைப்பாறிச் செல்வோம் என்று அவன் கூற, மூவரும் அதை நோக்கிப் புரவியைச் செலுத்தினர். மண்டபம், இன்றோ நாளையோ என்பது போல ஒரு பக்கமாய் சாய்ந்து கீழே விழுந்துவிடுவது போல இருந்தது. குளத்தின் படிக்கட்டுகள் ஒழுங்காக இல்லை. ஆங்காங்கே இடிந்து கால் வைத்து இறங்குவதற்கு வசதியற்று இருந்தது. நீரில் அல்லிமலர்கள் நிறைய இருந்தன. கெண்டைகள் துள்ளிக் கொண்டிருந்தன. ஆலமரத்திலிருந்து உதிர்ந்த இலைகள் தரையை முழுவதும் மூடியிருந்தன. மூன்று குதிரைகளும் ஒன்றாய் அங்கே வர அதனால் ஏற்பட்ட சலசலப்புச் சப்தத்தில் மரங்களிலிருந்து பறவைகள் இப்படியும் அப்படியும் பறந்து சென்றன. “இந்தக் குளத்து நீரைக் குடிக்க முடியுமா?” என்று சுற்றுக்சூழலை நோட்டம்விட்டபடி கேட்டாள் இரத்தினாதேவி. “அல்லி இருப்பதால் தண்ணீர் அசுத்தமாவதற்கு வழியில்லை!” என்று புரவியிலிருந்து குதித்தான் சாமந்தன். கடார இளவரசிக்கு அந்தச் சுற்றுச் சூழல் சற்றும் பிடிக்காததால் அரை மனதுடனே புரவியிலிருந்து இறங்கினாள். அதைக் கவனித்த தென்னன், “பிரயாணம் என்று வந்துவிட்டால் இதையெல்லாம் பார்ப்பதற்கு இல்லை” என்று குதிரையிலிருந்து குதித்தான். இரத்தினாதேவி குளற்றங்கரையிலே நின்று கொண்டாள். தென்னனும், சாமந்தனும் எச்சரிக்கையுடனே குளத்தில் இறங்கி கை, கால், முகம் இவற்றைக் கழுவிக் கொண்டு கையினால் சிறிது நீர் அள்ளிக் குடித்தனர். வெய்யிலுக்கு அது மிகவும் குளிர்ச்சியாயிருந்ததால் இன்னும் கொஞ்சம் அள்ளிப் பருகலாயினர். மூவரும் ஆலமர நிழலில் அமர்ந்தனர். “மதுரைக்கு இன்னும் எத்தனை தூரம்?” என்று சாமந்தன் வினவினான். “உறையூரை எட்ட இன்னும் ஐந்து கல் இருக்கிறது. அதை அடைந்து ஆற்றைக் கடந்துவிட்டால் அப்புறம் மதுரைக்குப் போவது சுலபம்!” என்ற தென்னன், “எனக்கு ஒரு யோசனை...” என்று நிறுத்தினான். “என்ன யோசனை?” என்றாள் இரத்தினாதேவி ஆர்வமுடன். “மதுரைக்கு நீங்கள் இருவரும் போங்கள். நான் தூமகேதுவுடன் பின்னால் வருகின்றேன்!” என்றான். “தூமகேது வருவது நமக்கு நல்லதுதான். அதற்குள் பகைவன் எச்சரிக்கை பெற்றுவிட்டால்?” என்ற இரத்தினாதேவி இருவரையும் கவனித்து, “எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் ஒருத்தியே அவனைக் கொன்றுவிட முடியும்!” என்றாள். “இந்த இடத்தில் உங்களின் விவேகத்தோடு இளமையும் சேர்ந்து கொண்டால் அவனை வீழ்த்துவது சுலபம்” என்றான் தென்னன். “அவ்வளவு சீக்கிரம் அவன் இளமைக்கு அடிமைப்படுபவன் அல்லவே!” என்றாள் கடார இளவரசி குறுக்கிட்டு. “உங்கள் இளமை காமனையும் கிறங்க வைக்கும்!” என்று உறுதியோடு தென்னன் கூற... இரத்தினாதேவிக்கு அவ்வார்த்தைகளால் மகிழ்வே ஏற்பட்டது. ‘தான் அழகு’ என்ற வார்த்தையைக் கேட்பதில் ஒவ்வொரு பெண்களும் ஆனந்தம் கொள்ளவே செய்வர். அதற்கு இரத்தினாதேவி மட்டும் விலக்காக முடியுமா? எனவே உள்ளத்தில் எழுந்த அச்சந்தோஷத்தால் ஏற்கனவே தனிச் சோபையுடனிருந்த அவள் இளமை முகத்தில், இன்னும் கவர்ச்சி கூடவே செய்தது. “நான் சொல்வதை நீங்கள் இருவரும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் பகைவன் வீழ்வதில் முதலில் சந்தோஷப்படுவது நானாகத்தான் இருக்க முடியும். நீங்கள் அவசரப்பட்டு எதையாவது செய்ய முற்படமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இருந்தாலும் என் மன ஆறுதலுக்காக நான் கூறுகின்றேன். நீங்கள் சோழ அரசின் கௌரவ விருந்தினராக மதுரை செல்கின்றீர்கள். அதனால் உங்களுக்கு அங்கே சகல மரியாதையும் கிடைக்கும். இதைப் பயன்படுத்தி இராசேந்திரனை நீங்கள் நிச்சயம் கவரத்தான் செய்வீர்கள். அந்தக் கவர்ச்சியால் அவன் மயங்கி நிற்கும் சமயத்தில் நீங்கள் பகைவனைச் சந்திப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்! இந்தச் சந்தர்ப்பத்தில் அவனே உங்களைத் தேடி வருவான். அப்படி வரும்போது பாண்டிய இலச்சினைக் கொண்ட இந்தக் குறுவாளால் அவனைக் கொன்றுவிடுங்கள். பழி பாண்டியர் தலையில் விழ, உங்கள் மேல் யாரும் சந்தேகம் கொள்ளமாட்டார்கள்” என்றான் தென்னன். “சரி!” என்று ஒப்புக் கொண்டாள் கடார இளவரசி. “நேரமாகிவிட்டது புறப்படலாம்” என்று சாமந்தன் எழுந்து புரவியை நோக்கிச் செல்ல, இருவரும் அவனைத் தொடர்ந்து நடந்தனர். மூன்று புரவிகளும் மதுரை நகருக்கு வாயு வேகத்தில் பறந்தன. ஆனால் புரவி ஏறுமுன், கடார இளவரசியின் கையிலிருந்த பொருள் ஒன்று கீழே விழுந்துவிட்டதே! அது என்ன? போகும் வேகத்தில் அவள் அதைக் கவனிக்கவில்லையென்றாலும் பின்னால் அதற்காக நிச்சயம் வருத்தப்படத்தான் போகிறாள். இவர்கள் புறப்பட்ட அரை நாழிகை கழித்து அம்மையப்பன் குதிரையில் அங்கே வந்து சேர்ந்தான். உடம்பெல்லாம் ஒரே வியர்வை. நெற்றியிலும் உடம்பின் பல பகுதிகளிலும் அணிந்திருந்த திருநீற்றுச் சின்னம் கலைந்து போயிருந்தது. அதை அணிந்து கொள்வதற்காக வேண்டி அம்மையப்பன் புரவியை அங்கே நிறுத்தினான். குதிரைக்கு வாயில் நுரை தள்ளியது. அதைப் பார்த்து மிகவும் வேகமாகவே செலுத்திவிட்டேன் போலிருக்கிறது! என்று அருகில் சென்று செல்லமாய் தட்டிக் கொடுத்தான். குதிரையும் அதை ஏற்றுக் கொண்டது போல் தன் முகத்தை அம்மையப்பன் கைகளில் மெல்ல உராயலாயிற்று. சிறிது நேரம் புரவியைத் தடவிக் கொடுத்துவிட்டு, “சிவாய நம!” என்று முணுமுணுத்தபடி குளத்தில் இறங்கினான் குளிக்க. அடடே! இதன் முத்திரை கடார நாட்டிற்கு உரியவை போலிருக்கிறதே! அப்படியென்றால் இம்மோதிரம் இளவரசி இரத்தினாதேவிக்குச் சொந்தமானது. இது எப்படி இங்கே வந்திருக்க முடியும்? என்று சுற்று முற்றும் பார்த்த அம்மையப்பனுக்குக் குதிரையின் காலடிகள் புலப்பட்டன. குளத்தில் இறங்குவதை நிறுத்திவிட்டு அருகே சென்று பார்த்தான். ஏறக்குறைய நிறைய குதிரைகள் இங்கே வந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. அப்படியென்றால்... சிவ பக்தனாகிய அம்மையப்பனுக்கு ஒரு விஷயம் விளங்கியது. மதுரையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் அவர்கள் தன்னைப் போலவே இளைப்பாறுவதற்காக இங்கே இறங்கியிருக்க வேண்டும்! அச்சமயத்தில் இந்த மோதிரம் கடார இளவரசியின் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்திருக்கலாம். “சிவாய நம!” என்று சந்தோஷத்துடன் உச்சரித்துக் கொண்டே, மோதிரத்தைக் குதிரையின் கழுத்திலிருந்த தோல் பையில் பத்திரப்படுத்திவிட்டு, ஆனந்தமாய் நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தான். சீக்கிரம் புறப்பட வேண்டும் என்பதற்காக நீரிலிருந்து மனமில்லாமல் கரைக்கு வந்தான். திருநீற்றை நெற்றி, மார்பு என்று அணிந்து, புதிய ஆடையை இடுப்பில் தரித்துக் கொண்டு பழையதை நனைத்துப் பிழிந்து கொண்டான். காற்றில் அதைச் சிறிது நேரம் உலரவிட்டான். புரவி இப்போது தெம்பு பெற்றுவிடவே அதைத் தட்டிக் கொடுத்துவிட்டு, ஈர ஆடையைக் குதிரையின் கழுத்தில் சுற்றிவிட்டு அதன் மேல் அமர்ந்தான் அம்மையப்பன். அவர்களுக்கு முன்பு நான் மதுரை போய்ச் சேர வேண்டும். நேரான வழியில் சென்றால் என்னால் போக முடியாது. குறுக்கு வழியில் காட்டுப் பாதையில் செல்ல வேண்டும். கள்ளர் பயம் இருக்கத்தான் செய்யும். எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு போக வேண்டும். முதன்மந்திரி என்னிடம் ஒப்படைத்த இந்தக் காரியத்தை எந்தத் தடங்கலும் இன்றி நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு முன்பு மதுரை போய்விட்டால் நல்லது. இல்லையென்றாலும் கிடைத்த நேரத்தை வீணாக்காமல் எப்படியாவது இராசேந்திரனைச் சந்தித்து இரத்தினாதேவி எந்த நோக்கத்துடன் அங்கே வந்திருக்கின்றாள் என்பதைத் தெரிவித்துவிட வேண்டும் என்று புரவியைத் தட்டிவிட்டான். அது வாயு வேகத்தில் பறந்தது. பெருவழிப்பாதையிலிருந்து அதைத் திருப்பிய அம்மையப்பன் தன் அரைக்கச்சையைத் தடவிப் பார்த்துக் கொண்டு குதிரையின் வேகத்தைக் கூட்டினான். நிசப்தமான காட்டுப் பகுதியில் புரவியின் குளம்பொலி அப்பகுதியை அதிரடித்தது. மிக வேகமாய்ச் சென்ற அம்மையப்பன் கண்களுக்கு வழியின் குறுக்கே பெரும் பள்ளம் வந்துவிடவே கடிவாளத்தை இழுத்தான். புரவி ஆக்ரோஷமாக கனைத்துக் கொண்டே பள்ளத்தைத் தாண்ட முயற்சித்தது. ஆனால் அம்மையப்பன் வேறுவிதமாய் அல்லவா நினைத்திருந்தான். கடிவாளத்தை இன்னும் பலமாய் இழுத்துப் புரவியை நிறுத்தி வந்த வழியே திரும்பினான். இந்த முயற்சியினால் புரவி கனைத்தபடி இப்படியும் அப்படியும் ஓட முயற்சிக்க “ஈசுவரா! இது என்ன குழப்பம்!” என்று அதைத் தட்டித் திருப்பினான். அது அவனுக்குத் கட்டுப்படாமல் முரண்டு பிடிக்க எரிச்சலுற்ற அம்மையப்பன், கடிவாள வாரினால், அதை ஓங்கிப் பலமாக அடித்தான். ஆனால் புரவி திரும்பத் திரும்ப ஓடத்தான் முயற்சித்தது. அதற்குள், பக்கத்திலிருந்த புதரிலிருந்து பத்துப் பேருக்கு மேல் புரவியையும், அவனையும் சூழ்ந்து கொண்டனர். ஒவ்வொருவர் கையிலும் வெட்டிரிவாள் இருந்தது. கரிய மதயானை போன்று ஒவ்வொருவரும் கருத்த மேனியராய் திடகாத்திரமாயிருந்தனர். அவர்கள் விழித்த விழியிலிருந்து யாரென்று புரிந்துவிட்டது. “சாதாரண சிவபக்தனாய் இருந்தால் விட்டுவிட்டிருப்போம். புரவியோட்டும் சிவபக்தன் என்பதால் வழி மறித்துவிட்டோம்” என்றான் அவர்களில் ஒருவன். அனேகமாக அவன் தலைவனாய் இருக்க வேண்டும் என்று யூகித்த அம்மையப்பன், இடுப்பிலிருந்து சில பொற்காசுகளை எடுத்து அவனிடம் கொடுத்து, “வழிச் செலவுக்காக வைத்திருந்தேன்! நீங்கள் குறுக்கிட்டுவிட்டதால் உங்களிடம் தந்துவிட்டேன்! எனக்கு வழிவிட்டுவிடுங்கள்” என்றான். “ஆஹா! சிவபக்தருக்கு என்ன தாராளம். இப்படிப்பட்டவர் இன்று கிடைத்தது நாம் செய்த அதிர்ஷ்டம்தான்” என்றான் அவர்களில் ஒருவன். “பூசணி போல் எத்தனை தளதளவென்று இருக்கின்றார் பார்த்தாயடா!” என்றான் இன்னொருவன். “அவர் குதிரை மட்டும் என்னவாம்! அதுவும் அவரைப் போலவே கொழு கொழு என்றிருக்கிறது!” என்றான் மற்றொருவன். “சிவபக்தருக்குப் புடவை கட்டி மேலே முக்காடு போட்டால் அசல் பெண் போல் இருப்பார்!” என்று சொன்னவன் பக்கத்திலிருந்தவனிடம், “நீ கல்யாணத்திற்குப் பெண் தேடிக் கொண்டிருந்தாயே; பட்டுப் புடவை கட்டி இவரைத் தாலிக் கட்டிக் கொள்வேன்!” என்றான் கேலியுடன். “நன்று சொன்னாய் அப்பனே. பெண் பிள்ளை கூட இத்தனை மினுமினுப்பாய் இருக்கமாட்டாள்!” என்று அவன் அம்மையப்பனைப் பார்த்து, “கொஞ்சம் கீழே இறங்கப்பா!” என்றான். அம்மையப்பன் சினத்தின் கடைக்கோட்டுக்கே சென்றுவிட்டான். இது ஒரு அபாய வழி என்று தெரிந்திருந்தும் சீக்கிரம் போக வேண்டும் என்ற காரணத்தால் இப்பக்கம் மூடத்தனமாக வந்துவிட்டேன்! என்ன செய்வது என்று யோசிக்கலானான். அனைவர் கையிலும் ஆயுதம் இருக்கிறது. என் வாள் கடிவாளத்தையொட்டி இருக்கும் உறையில் வைத்துவிட்டேன்! என்ன செய்யலாம்? தனி ஒருவனாய் இவர்களுடன் முரண்டு பிடிப்பதைக் காட்டிலும் தற்போதைக்கு குதிரையிலிருந்து இறங்கிவிடுவதே உத்தமம் என்று கீழே இறங்கினான். அவனின் மொட்டைத் தலையை ஒருவன் தடவி “இத்தனை வழுவழுப்பான மண்டையை என் ஆயுளில் இதுவரை பார்த்ததில்லை” என்றான் கேலியுடன். “குதிரை பிரமாதம்! எத்தனைப் பொன்னுக்கு இதை நீர் வாங்கினீர்?” என்று கேட்டான் ஒரு திருடன். “நான் சோழ அரசைச் சேர்ந்தவன். மதுரைக்கு அரசாங்க விஷயமாக அவசரமாய்ச் சென்று கொண்டிருக்கிறேன்! அதனால் பொற்காசுகளை எடுத்துக் கொண்டு வழியை விட்டுவிடுங்கள்” என்றான் சிறிது கோபத்தோடு. “ஓ! தாங்கள் சோழ நாட்டினரா? அப்படியென்றால் நிச்சயம் மேல் உலகத்துக்கு உங்களை வழி அனுப்பி வைக்க வேண்டியதுதான்!” என்றான் கள்வர்களில் ஒருவன். “இருங்கடா! முதலில் குதிரை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். பிறகு சிவபக்தரைக் கைலாயத்திற்கு அனுப்பலாம்!” என்று ஒருவன் புரவியில் ஏறி உட்கார்ந்தான். இதுவரை அமைதியுடனிருந்த அசுவம் மேலேயிருப்பது தன் எசமானர் அல்ல என்பதையுணர்ந்து அங்கே நிலவிய சூழ்நிலையையும் புரிந்து கொண்டு முன் காலைத் தூக்கி ஆக்ரோஷத்துடன் கனைத்து அப்படியே அவனைத் தரையில் தள்ளியது. அதே வேகத்தில் பின் கால்களால் அருகிலிருந்த இருவரை மிக வலிமையுடன் உதைக்கவும் செய்தது. அந்த உதையில்... எடுத்த வேகத்தில் தன் பக்கத்திலிருந்த இருவரைப் பலமாய்த் தாக்கி அவர்களைக் கீழே வீழ்த்தினான். இதைக் கவனித்த மற்றவர்கள், “பிடியுங்கள் அந்த மொட்டைத் தலையனை!” என்று அம்மையப்பனை நோக்கி ஓடி வந்தனர். ஓடிவந்த அந்த ஐந்து பேரையும் அம்மையப்பன் மூர்க்கத்தனமாகத் தாக்கிப் புரவி பக்கமாக தள்ளினான். தன் பக்கமாக வந்த இருவரை முன் போலவே அது பின்னங்கால்களால் உதைத்தது. மற்ற மூவரில் இருவரையும் அம்மையப்பன் வாளுக்கு இரையாக, எஞ்சி நின்ற ஒருவன் ‘விட்டால் போதும்’ என்று ஓட்டம் பிடித்தான். ஏறக் குறைய இருவர் குற்றுயிராய் மரணத்துடன் போராடிக் கொண்டிருக்க இன்னும் இருவர் இடுப்பொடிந்து எழ முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தனர். இவர்களால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து ஓடிப் போனவர்கள் இன்னும் அதிகம் பேருடன் வரலாம் என்பதால் அங்கேயிருப்பது நல்லது அல்ல என்று அருகில் வந்த அசுவத்தில் ஏறிக் கொண்டு தக்க நேரத்தில் உதவிய அதை நன்றியுடன் தட்டிக் கொடுத்தான். சற்று கழிந்து... காட்டுப்பாதையிலிருந்து திரும்பி வழக்கமான பெருவழியில் அம்மையப்பன் குதிரை உறையூரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
பட்டத்து யானை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2015 பக்கங்கள்: 376 எடை: 450 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-8430-130-9 இருப்பு உள்ளது விலை: ரூ. 300.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: மல்லாந்து கிடந்த பிணங்கள் மிகவும் சொற்பம். எல்லாமே குப்புற, மண்ணைக் கவ்வியே கிடந்தன!நாலாயிரம் வீரர்களைப் பறிகொடுத்த மயிலப்பன், குண்டாற்றுக் காடுகளுக்குள் மறைந்து ஓடும் போது துடித்தானே… அந்தத் துடிப்பு, இன்று அடங்கியது. மயிலப்பனின் படை கொட்டிய ரத்தத்தை, கோட்டையும் குண்டாறும் குடிக்கவில்லை… பூசிக்கொண்டு வெகுகாலம் காத்திருந்தன. எவனாவது ஒரு மாவீரனை இந்த மண் பெற்றெடுக்கும்; அவன் அடக்குவான் நம் தாகத்தை!’ என பொறுமை காத்தன. பழி தீர்த்தது, ரணசிங்கத்தின் கருஞ்சேனை!- வேல ராமமூர்த்தி நேரடியாக வாங்க : +91-94440-86888
|