(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 44 கங்காபுரிக் கோட்டையையடைந்த அம்மையப்பன், கதவுகள் மூடப்பட்டிருப்பதையறிந்து கோட்டைக் காவலனிடம் உள்ளே போக வேண்டியதைப் பற்றிக் கூறினான். “சிவபக்தரான தங்களுக்குக் கோட்டைக்குள் என்ன வேலை?” என்று கேட்டான் அவன். “முதன்மந்திரியைப் பார்க்க வேண்டும்?” “எந்த மந்திரி... பழையவரா? புதியவரா?”
கோட்டைக் காவலனிடமிருந்து சிரிப்பு வெளிப்பட்டது. “என்னிடம் சொன்னது போல் வேறு யாரிடமும் இம்மாதிரி சொல்லாதீர்கள். கோட்டைக்குள் நிலைமை தலைகீழாக ஆகிவிட்டது. நான் சைவப் பற்றுள்ளவன் என்பதால் கூறுகின்றேன். முதலில் இங்கிருந்து போய்விடுங்கள்!” அம்மையப்பன் தயங்கி நின்றான். “ஐயா! தங்கள் சிவ வேடம்தான் உங்களை என்னிடமிருந்து காப்பாற்றியிருக்கிறது. வேறு யாராக இருந்தாலும் இந்நேரம் விலங்கிட்டுத்தான் மறுவேலை பார்த்திருப்பேன். அதனால் முதலில் இங்கிருந்து போய்விடுங்கள்.” ‘இனிமேல் அங்கிருப்பதும் கோட்டைக்குள் புக முயற்சிப்பதும் வீண்’ என்று பட்டது அம்மையப்பனுக்கு. வேறு முறையைப் பின் பற்றி வேறு வழியாகத்தான் கோட்டைக்குள் போக வேண்டும் என்று எண்ணியபடி, மதுராந்தக வடவாற்றின் பக்கம் புரவியைச் செலுத்தினான். ஆற்றின் ஓரமாயுள்ள அரசமர நிழலில் அதைக் கட்டிவிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் தென்படவில்லை. அரசமரத்தின் கீழ் இருந்த மேடையும், அந்த மேடையின் ஒரு பக்கமாயிருந்த கருங்கல் மண்டபமும், ஏற்கனவே அவனுக்குப் பழக்கப்பட்ட இடம்தான். என்றாலும் சற்று நேரம் யோசித்தபடி நின்றான். பிறகு, “சிவாய நம!” என்று அவனது வாய் முணுமுணுக்க மண்டபத்திற்குள் புகுந்து மறைந்துவிட்டான். கொஞ்ச நேரம் கழித்து வெள்ளை முக்காடு போட்ட உருவத்தை முதன் முதலில் சந்தித்த அந்த இருட்டு அறையின் வாயிலின் முன்பாக நின்றான் அம்மையப்பன். இப்போது அங்கே காவல் பலத்திருந்தது. எப்பொழுதும் ஒரு ஆள் இருக்கக் கூடிய அவ்விடத்தில் தற்போது நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். தயங்கியபடியே அருகில் சென்று “பெரியவரைப் பார்க்க வேண்டும்” என்றான். அம்மையப்பன் அதற்குச் சம்மதித்து அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான். ஆனால் நேரம் கடந்து கொண்டே போனதால் மதுராந்தக வடவாற்றின் பக்கம் சிறிது நேரம் உட்கார்ந்து வரலாம் என்று வீரனிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். கங்கைகொண்ட சோழபுரம் வந்து சேர்ந்த திருவரங்கன் கோட்டைக்குள் புக முடியாத நிலையில் பலத்த காவல் இருப்தைப் பார்த்துத் திகைப்புற்று, கோட்டையின் மேற்புறம் வீரர்களின் நடமாட்டம் குறைந்தும், சாளுக்கிய வீரர் நடமாட்டம் அதிகரிப்பதையும் உணர்ந்து, ‘இது என்ன சாளுக்கிய நாட்டின் தலைநகரமா? அல்லது கங்கைகொண்ட சோழபுரம்தானா?’ என்று அவனுக்குச் சந்தேகம் எழவே செய்தது. ‘உடனே புறப்பட்டு வருக!’ என்ற அரச உத்தரவைக் காண்பித்துத் தான் உள்ளே செல்ல வேண்டிய அவசியத்தைக் கோட்டைத் தலைவனிடம் கூறினான். சற்று யோசனை செய்துவிட்டுத் திருவரங்கனை மட்டும் கோட்டைக்குள் விடும்படிக் காவல் வீரர்களுக்கு உத்தரவிட்டான் தலைவன். திருவரங்கனுடன் இரு சாளுக்கிய வீரர்கள் துணையாக வந்தனர். இவ்விதம் வீரர்கள் வருவது அவனுக்குப் பிடிக்காததால் “எனக்கு அரண்மனை போக வழி தெரியும்” என்று எரிச்சலுடன் கூற, “உங்களுடன் கூடச் செல்லும்படி எங்களுக்கு உத்தரவு. இது தவிர ஒன்றும் தெரியாது” என்றனர் இருவரும். ‘சோழப்படையில் முக்கிய பொறுப்பு வகிக்கும், எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடிமகன் நிலைமை எப்படியிருக்கும்?’ - இந்தக் கேள்வியுடன் மனத்தில் தோன்றிய எரிச்சல் அதிகமாக, சோழச் சக்கரவர்த்தியிடம் இது பற்றிப் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். சக்கரவர்த்தியிருக்கும் சோழ கேரளன் மாளிகை வந்தது. வழக்கம் போல் அங்கேயும் அவனுக்கு உள்ளே புக அனுமதி கிடைக்காததால் திரும்பவும் அரச உத்திரவைக் காண்பித்து விளக்கம் கூற, வீரர்கள் திருவரங்கனைச் சோழப் படையின் தளபதியான வீரசோழ இளங்கோ வேளானிடம் அழைத்துச் சென்றனர். இதுவரை துணையாக வந்த இரு வீரர்களும், தங்கள் பணி முடிந்துவிட்டதென்று கோட்டைக்குத் திரும்பிவிட்டனர். தளபதி பதவி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், முகம் என்றுமில்லாத மலர்ச்சியுடனிருக்க, தனது மெல்லிய மீசையை நன்கு முறுக்கிவிட்டுக் கொண்டு, “என்ன விஷயம்!” என்றான் திருவரங்கனிடம். குரங்கு கையில் பூமாலை கிடைத்துவிட்டது போல் வீரசோழ இளங்கோ வேளானுக்குத் தளபதி பதவி கிடைத்துவிட்டது. அதனால்தான் என்னையே, ‘என்ன விஷயம்?’ என்று கேட்கின்றான் என புரிந்து கொண்ட திருவரங்கன் “சக்கரவர்த்தி அவர்கள் மகளிர் கையிலுள்ள பந்து என நினைத்துவிட்டார் போலும்! மதுரையில் எனக்கு விதிக்கப்பட்ட பணியைச் செய்து கொண்டிருக்கும் போது, எதற்கு இங்கே அவசரமாக வரவழைக்க வேண்டும்? வந்த இடத்தில் இங்கேயும், அங்கேயும்...” என்ற திருவரங்கனை மேற்கொண்டு பேசவிடாமல் இடைமறித்து, “யாரிடம் பேசுகின்றாய் என்பது நினைவிருக்கிறதா?” என்றான் இளங்கோ வேளான் முனிவுடனே. “ஓ! நன்றாகவே நினைவிருக்கிறது. தாங்கள் சோழத்தளபதி என்பதும், தங்கள் முன் நிற்கும் நான் சோழர் படையில் முக்கிய பொறுப்பு வகிப்பவன் என்பதும் தெரிகிறது” என்றான் சற்றுக் காட்டமாகவே. வீரசோழ இளங்கோ வேளானுக்கு கோபம் அதிகரித்தது. இருக்கையிலிருந்து சடாரென்று எழுந்து திருவரங்கன் அருகில் வந்தான். சுற்றியிருந்த வீரர்கள் என்ன நேருமோ! என்று அச்சத்துடன் இருவரையும் பார்க்க, ‘இந்த நேரத்தில் இவனிடம் எதற்குத் தகராறு?’ என்று சினத்தையடக்கியபடி “நீ அதிகமாகவே பேசுகின்றாய்!” என்றான் சோழத்தளபதி. “சற்று முன்பு கோட்டையில் எனக்குக் கிடைத்த மரியாதை, வேறு யாருக்காகவாவது கிடைத்திருந்தால் பெரிய ரகளையே பண்ணியிருப்பார்கள்!” “அப்படி என்ன உனக்கு நேர்ந்துவிட்டது?” “என்னைக் காவற் கைதி போல் நடத்தியிருக்கிறார் கோட்டைக்காவலர். இரு வீரர்களை என்னோடு துணைக்கு அனுப்பியிருக்கின்றார். அது...!” என்று மேற்கொண்டு பேசமுற்பட்டவனைச் சிரித்தபடி குறுக்கிட்டு “உன்னைப் பற்றி அவருக்குத் தெரியாது. அவர் சாளுக்கிய படைப் பிரிவைச் சேர்ந்தவர்” என்றான் சோழத்தளபதி. “அப்படிப்பட்ட தெரியாத நபரை முக்கிய பொறுப்பில் எப்படி அமர்த்தினீர்?” “கேட்கத்தான் போகின்றேன். கேட்காமல் நான் விடப்போவதில்லை” என்று சொன்ன திருவரங்கன் “சக்கரவர்த்தியை உடனே பார்க்க வேண்டும்” என்றான். ‘இவன் இடங்கைப் பிரிவைச் சேர்ந்தவன்! அதனால்தான் துடுக்குத்தனமாய்ப் பேசுகின்றான்! சமயம் வரும் போது இவனைப் பழிதீர்க்க வேண்டியதுதான்’ என்று மனதிற்குள்ளே கூறிக் கொண்ட சோழத்தளபதி, “சக்கரவர்த்தியை இப்போது பார்க்க முடியாது. முக்கிய வேலையாயிருக்கிறார். அவரைப் பார்க்கும் வரை நீ விருந்தினர் மாளிகையில் தங்கியிரு” என்றான். மேற்கொண்டு இடம் கொடுத்தால் இன்னும் அதிகப்பிரசங்கித் தனமாகவே பேசுவான் என பக்கத்திலிருந்த வீரர்கள் பக்கம் திரும்பி “சக்கரவர்த்தியைப் பார்க்கும்வரை இவர் விருந்தினர் மாளிகையிலேயே தங்க சகல வசதியும் செய்து கொடு” என்று உத்தரவிட்டான். ‘இனிமேல் இவனிடம் ஏன் பேசிக்கொள்ள வேண்டும்!’ என்று தன்னை அழைத்துப் போகத் தயாராக இருந்த வீரனுடன் விருந்தினர் மாளிகை நோக்கிப் புறப்பட்டான். இரத்தினாதேவியைப் பற்றிய நினைவு வந்தது. எல்லாம் நல்லதிற்காகத்தான். கடார இளவரசியைச் சந்திக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியுடனே வீரன் பக்கம் திரும்பி, “இரத்தினாதேவி எங்கே தங்கியிருக்கிறார்கள் என்று தெரியுமா?” என்றான் மெல்லிய குரலில். கங்கைகொண்ட சோழபுரத்திலிருக்கும் அரசகுல இளைஞர்களெல்லாம் ஏன் இவள் மேல் இப்படியரு சபலம்? -கேள்வியை எழுப்பிய அந்த வீரன், அதற்காக மனதிற்குள் சிரித்துக் கொண்டு, “அவர்களும் விருந்தினர் மாளிகையில்தான் தங்கியிருக்கின்றார்கள்!” என்றான். நல்லதாகப் போய்விட்டது! - சந்தோஷமுற்று மிக வேகமாய் வீரனுடன் அம்மாளிகை நோக்கி நடக்கலானான் திருவரங்கன். அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
அகிலம் வென்ற அட்டிலா மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2013 பக்கங்கள்: 144 எடை: 180 கிராம் வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு ISBN: 978-93-82577-63-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 110.00 தள்ளுபடி விலை: ரூ. 100.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: அட்டிலா உண்மையாக வாழ்ந்தவன். உலகத்தையே வென்றவன். அசைத்துக் கொள்ள முடியாதது என்று இறுமாந்திருந்த உரோமானியப் பேரரசை வீழ்த்தியவன். பரம்பரை, பாரம்பரியம், செல்வாக்கு, வசதி, வாய்ப்புகள் என்று உறுதிமிக்க அடித்தளம் கொண்ட ஆட்சியாளர்களை இந்த நாடோடி வென்று காட்டினான். இவனது இனம் ஓரிடத்தில் நில்லாமல் ஊர் ஊராய்ப் போய்க் கொண்டிருந்தது ஒரு காலத்தில். அப்படிப்பட்ட இவர்கள் எப்படி உரோமப் பேரரசை வீழ்த்த முடியும் என்கிற சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல அட்டிலாவின் இனத்தவர்களுக்கே ஏற்பட்டது. எல்லாம் உன்னால் முடியும் தம்பி என்று ஊக்கம் கொடுத்துத் தன் எண்ணத்தை ஈடேற்றியவன் அட்டிலா.ஆறாவது வட்டத்திற்குத் துணைத் தலைவர் என்றாலே ஆளுயர மாலை கேட்கும் நம் ஆட்கள் மத்தியில் அகண்ட தேசத்தை ஆண்டவனாக இருந்தபோதிலும் மர வட்டிலிலேயே உணவருந்திய எளிமைக்குச் சொந்தக்காரன். தலைமுறை தலைமுறைக்கும் சொத்துச் சேர்க்க நினைப்பவர்கள் மத்தியில் தனது தலைக்கே விலையாகப் பேசப்பட்ட பொன்னைக்கூடத் தானே கைப்பற்றி அதை முற்றிலுமாகத் தன் இன நலனுக்கே செலவிட்டான் இவன். வரலாற்றுக்கும் தெரிந்தவரையில் வரலாற்றுக் கால ஆய்வின்படி உலகின் மிகப் பெரிய படை வரிசைகளில் இரண்டாவதுதான் பெரிய படைக்குத் தலைமை தாங்கியவன் அட்டிலா. நேரடியாக வாங்க : +91-94440-86888
|