http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




6

     மிக அந்தரங்கமான விருப்பங்களில் பிரியமுற்று அழுந்தி நிற்கும் போதுகளில் அப்படி அழுந்தி நிற்கிற மனமும் அந்த மனத்துக்குச் சொந்தமானவரும் இந்த உலகில் அநாதையாகவும் நிர்க்கதியாகவும் தன்னந்தனியே கைவிடப் பெறுகிறார்கள்.

     தங்கக் கூண்டில் வளர்த்த தமனியப் பசுங்கிளியாய் அந்த வீட்டின் தனிமையில் ஏங்கி ஏங்கி வளர்ந்தவள் பாரதி. அவள் மனம் ஒப்பி ஆசைப்பட்டு நிறைவேறாமற் போன விருப்பங்கள் என்று எவையும் அந்த வீட்டில் அன்று வரை இருந்ததில்லை. அவள் நினைத்தது எதுவாயினும் அது அப்போதே நடக்க முடிந்த அளவுக்குச் செல்லமாகவும் சீராகவும் வளர்ந்திருகிறாள் அவள். 'இது நான் நினைப்பது போல் நடக்க முடியாதோ?' என்று எதை நினைத்தும் நேற்று வரை அவள் கவலைப்பட நேர்ந்ததில்லை. அவள் நினைத்ததை நிறைவேற்றப் பணியாட்கள் பலர் காத்திருந்தனர். அவளுடைய விருப்பங்கள் உடனே நிறைவேட்டப்பட்டனவா இல்லையா என்று கவலைப்பட்டு அக்கறை செலுத்தவும், அவை உடனே நிறைவேற்றப் பட்டிருந்தால் நிறைவேற்றியவர்களைப் பாராட்டவும், நிறைவேற்றாமல் தாமதம் செய்யப்பட்டிருந்தால், அப்படித் தாமதம் செய்தவர்களைக் கண்டிக்கவும் கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன அங்கே. ஆனாலும் எதற்காக ஏங்குகிறோம் என்று தெரியாத ஏதோ ஒன்றுக்காக அவள் ஏங்கி ஏங்கித்தான் வளர்ந்திருக்கிறாள். படிப்பதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் புத்தகங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருந்தன. அந்த வீட்டுக்குள் வராத பத்திரிகைகளும் செய்தித்தாள்களும் இல்லை. தோட்டத்தின் ஒரு பகுதியில் அவளுடைய அறைக்குள்ளேயிருந்து அவளே படியிறங்கிப் போய்ப் பறித்துக் கொள்வதற்கு வசதியாகச் சகலவிதமான மலர்ச் செடிகளும், கொடிகளும் பயிரடப்பட்டிருந்தன. அப்பா அவளை அரசகுமாரியாகத்தான் பேணி வளர்த்தார்.

     அவளோ பிச்சைக்காரியைப் போல் எதற்கோ ஏங்கிக் கொண்டே வளர்ந்தாள். சிறு வயதில் தாயை இழந்து விட்ட எந்தப் பெண்ணும் எத்தனை வசதிகளுக்கு இடையேயும் இப்படித்தான் வளர முடியும். தன் அழகில் நிரம்பிக் கிடக்கும் அந்தரங்கங்களும் தன் அந்தரங்கத்தில் நிரம்பிக் கிடக்கும் அழகுகளும் பிறருக்குத் தெரியாமலே வளர்ந்து விட்ட காட்டுமான் கன்று போல் மல்லிகைப் பந்தலின் தனிமையில் செல்வக் குடும்பம் என்ற உயரத்திலிருந்து வெறும் மண்ணில் கீழ் இறங்கி நடக்காமலே வளர்ந்து விட்டாள் அவள். நேற்றுவரை தன் மனத்தைப் பாதிக்கும் படியான எந்த எண்ணத்தையும் அவள் எண்ணியதில்லை. இன்று அவளைப் பாதித்திருக்கும் இந்த எண்ணமோ மற்றொருவரிடம் சொல்லி ஆதரவு தேட முடியாத ஒன்று. மிக அந்தரங்கமான விருப்பங்களில் பிரியமுற்று அழுந்தி நிற்கும் போதுகளில் அப்படி அழுந்தி நிற்கிற மனமும் அந்த மனத்துக்குச் சொந்தமானவரும் இந்த உலகில் அநாதையாகவும் நிர்க்கதியாகவும் தன்னந்தனியே கைவிடப் பெறுகிறார்கள். அதைப் பங்கிட்டுக் கொள்ளவோ அதற்கு ஆதரவு தேடவோ சரியான துணை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த வேளையில் பாரதியும் அப்படித் துணையற்றவளாகத் தான் இருந்தாள். அப்போது அவளுடைய அந்தரங்கத்தில் என்ன இருந்ததோ அதை அவள் இன்னொருவரிடம் சொல்ல முடியாது.



பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29
30   31   32   33   34   35   36   37   38   39   40  41  42  43  44  45  46
47  48  49  50  51  52  53  54  55  56  57  58  59  60  61  62  63  


இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu6.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs