54
அதிகமாக அன்பு செய்கிறவன் அதிகக் கவலைப்பட்டுத் தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவனுடைய கவலையின் எல்லைகள் அவனது அன்பு வியாபித்திருக்கிற எல்லாப் பரப்புக்கும் உரியது. "என்னடா, உன் அப்பா திடீரென்று கோபமாக வந்தார். திரும்பிப் போகும் போதும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு போகிறாரே? ஏன் இப்படி வந்ததும் வராததுமாக உடனே திரும்பிப் போய் விட்டார்?" என்று வந்து விசாரித்த நண்பன் குமரப்பனுக்குத் தன் தந்தை வந்துவிட்டுப் போனக் காரியத்தையும் நடந்தவற்றையும் விவரித்தான் சத்தியமூர்த்தி. அதைக் கேட்டுவிட்டு குமரப்பன், "நல்ல காரியம் செய்தாய்! எதிலாவது கையெழுத்து வாங்கிக் கொண்டு உன்னை நிரந்தரமாகக் கம்பி எண்ண வைக்க முயலுகிறார்கள். கவனமாக விழித்துக் கொண்டிரு. தூங்கிப் போய்விடாதே. ஜமீந்தாரும் கண்ணாயிரமும் தானே உன் தந்தையைக் காரில் இங்கே கொண்டு வந்து இறக்கி விட்டுப் போனார்கள்! நான் கடையிலிருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். திரும்பிப் போகிற போதும் அதே கார் தான் வந்து அவரை ஏற்றிக் கொண்டு போகிறது" என்று குமரப்பன் சத்தியமூர்த்திக்கு விவரத்தைக் கூறி எச்சரித்து விட்டுப் போனான்.
கடைவீதியிலிருந்த பிரபல பட்டு ஜவுளிக்கடை ஒன்றின் வாசலில் ஜமீந்தாரைப் பின் தொடர்ந்து மோகினி காரிலிருந்து கீழிறங்கி நடந்து கொண்டிருந்தாள். சத்தியமூர்த்தியின் தந்தையும் கண்ணாயிரமும் கூட அவர்களோடு உடன் வந்திருந்தார்கள். ஜமீந்தார் ஜவுளிக் கடையில் படியேறி உள்ளே நுழைந்து விட்ட பின்பும் கூட மோகினி கார் அருகிலிருந்து நகராமல் கண்கலங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தாள். அப்படிப் பின் தங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தவளைத் தன் தந்தை அருகிலிருந்து பயபக்தியோடு கடைக்குள் வருமாறு அழைப்பதையும் சத்தியமூர்த்தி கவனித்தான். 'ஜமீந்தாரு இங்கே ஒரு காரியமா ஒருத்தரைக் காரிலே மதுரையிலேருந்து அழைச்சிக்கிட்டு வான்னாரு! வந்தேன்?' என்று தந்தை பகலில் தன்னைச் சந்திக்க வந்திருக்கும் போது மதுரையிலிருந்து அழைத்து வந்ததாகக் குறிப்பிட்டது மோகினியைத்தான் என்பது இப்போது சத்தியமூர்த்திக்குப் புரிந்து விட்டது. 'அவங்க பரம்பரை பரம்பரையா ஜமீந்தார் குடும்பத்துக்குப் பழக்கம். நீ அந்தப் பெண்ணைப் பார்க்கிறதோ பேசறதோ கொஞ்சம் கூட நல்லாயில்லே. வீணா ஜமீந்தாரோட கோபத்துக்கு ஆளாகாதே' என்று மதுரையிலே தன்னை கண்டித்திருந்த தந்தை அதே மோகினியை ஜமீந்தாருடைய கட்டளையின்படி இப்போது மல்லிகைப் பந்தலுக்கு அழைத்து வந்திருப்பதைத் தெரிவிக்கத் தயங்கி, யாரையோ அழைத்து வந்திருப்பதாகக் கூறியதை நினைத்து அவன் சிறிதும் வியப்படையவில்லை. ஜமீந்தார் சொல்லித் தன் தந்தை மோகினியை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்குக் காரில் அழைத்து வந்திருப்பதாக இப்போது அவனால் தெளிவாகவும், பிரத்தியட்சமாகவும் புரிந்து கொள்ள முடிந்தது. குமரப்பனோடு வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த சத்தியமூர்த்தி பட்டு ஜவுளிக்கடை வாசலில் இந்தக் காட்சியைக் கண்ட போது நடையில் வேகம் குறைந்து தளர்ந்து நின்று விட்டான். குமரப்பனுக்கு இந்த எதிர்பாராத சந்திப்பு ஆச்சரியத்தை அளித்தது. அவனும் அப்படியே திகைத்துப் போய் நண்பனுக்கு அருகில் நின்று விட்டான். இந்த நிலையில் மோகினி மிகவும் பரிதாபத்துக்குரியவளாகத் தென்பட்டாள். காரிலிருந்து இறங்கித் தயங்கி நின்ற அவளுடைய கண்களில் அழுகையும் கண்ணீரும் முந்திக் கொண்டு வந்தன. 'தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற பற்கள் தெரியாதபடி மூடி மறைத்துக் கொண்டிருந்த அவள் உதடுகளில் அழுகை துடிதுடித்துக் கொண்டிருந்தது. அவர்களோடு அந்தக் கடைக்கு வருவதற்குப் பிரியமில்லாமல் வற்புறுத்தப்பட்டு பலவந்தமாகத் தான் அழைத்துக் கொண்டு வரப்பட்டிருப்பதைப் புலப்படுத்திக் கொண்டு நடைப்பிணமாய் நின்றாள் அவள். ஜமீந்தாரும், கண்ணாயிரமும் காரிலிருந்து இறங்கி... அப்படி அவர்களைப் போன்ற வசதியும் செல்வாக்கும் உள்ள புள்ளிகளுக்குக் கடைக்காரர்கள் வழக்கமாக அளிக்கும் மிக ஆடம்பரமான 'ஸிவிக் ரிஸப்ஷனை'யும் ஏற்றுக் கொண்டு உள்ளே போய்விட்டார்கள். மோகினி மட்டும் பிரமை பிடித்தாற் போல் அழுது கொண்டு நின்றாள். "வாங்கம்மா! ஐயா உள்ளாரக் காத்திருக்காரு" என்று கடைக்காரர்களும் காரருகே வந்து அவளை வியாபார விசுவாசத்தோடு மிகப் பணிவாக அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். கடைசியில் ஜமீந்தாரே உள்ளேயிருந்து எழுந்திருந்து வந்து கூப்பாடு போடவே, மோகினி தயங்கித் தயங்கிப் படியேறி கடைக்குள் சென்றாள். அந்த நிலையில் அவள் தன்னை அங்கே பார்த்துவிடாதபடி அவசரமாகக் கடைவீதியைக் கடந்து மேலே சென்று விட வேண்டும் என்று சத்தியமூர்த்தி எண்ணியிருந்தான். ஆனால் அவனுடைய எண்ணம் கடைசி விநாடியில் வீணாகிவிட்டது. படியேறிக் கடைக்குள் நுழைவதற்காகத் தயங்கித் தயங்கிச் சென்று கொண்டிருந்த மோகினி கடைசிப் படியில் ஏறிவிட்டுத் தற்செயலாக வீதிப்பக்கம் திரும்பியவள் - அவளுடைய பார்வையில் படக்கூடாது என்பதற்காகவே - அப்போது அவசர அவசரமாக வீதியைக் கடந்து கொண்டிருந்த சத்தியமூர்த்தியையும் குமரப்பனையும் பார்த்து விட்டாள். அந்தக் கணத்தில் அவளுடைய நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. தன்னையறியாமலே கால்கள் விரைந்து முந்தியதன் காரணமாகத் திரும்பி ஒரு படி கீழே இறங்கவும் செய்துவிட்டாள் அவள். அப்படியே கீழே இறங்கி வீதியில் ஓடிப்போய் விரைந்து நடந்து கொண்டிருக்கும் சத்தியமூர்த்தியின் பாதங்களில் வீழ்ந்து, 'தெய்வமே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று கதற வேண்டும் போலத் தவித்தது அவள் உள்ளம். ஆசைப்பட வைக்கும் அந்தப் பாதங்களில் ஓடிப் போய் வீழ்ந்து கதற வேண்டுமென்று அவள் நினைத்த அதே சமயத்தில் முன்புறம் நின்ற ஜமீந்தார் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவளை உள்ளே தள்ளிக் கொண்டு போய்விட்டார். பட்டு ஜவுளிக்கடை வாசலை ஒட்டி நடந்த போது அவள் தன்னைப் பார்த்து விட்டாள் என்பது சத்தியமூர்த்திக்குத் தெரியும். ஆனாலும் அவன் வேகமாக நடந்து கடையைக் கடந்து விட்டான். அவன் மனத்தின் ஒரு பகுதி அவளுடைய துயரங்களை நினைத்து மௌனமாகக் கலங்கி அழுது கொண்டிருந்தது. இன்னொரு பகுதி அவள் இப்படியெல்லாம் ஜமீந்தாருடைய கைப்பாவையாக - அவருக்குப் பயந்து அடங்கி ஒடுங்கி இயங்குவதைப் பற்றி நினைத்து நினைத்து உள் நெருப்பாய்க் குமுறிக் கொண்டிருந்தது. அவள் மேல் அளவு கடந்த பிரியமும் நம்பிக்கையும் வைத்துவிட்ட காரணத்தினால் அவள் இன்னொருவனுக்கு அடிமைப்படுகிறாள் என்று தெரிகிற போதெல்லாம் மனம் குமுறினான் சத்தியமூர்த்தி. யார் மேலும் மனம் வைத்து அன்பு செய்யாதவரை நாம் இன்னொருவருக்காகக் கவலைப்பட்டுக் கலங்கி அழ வேண்டியதில்லை. மனம் வைத்து அன்பு செய்ய ஆரம்பித்து விட்டால் அந்த அன்புக்கு ஆளாகிறவரைப் பற்றிய கவலைகளையும் நம்மால் தவிர்க்க முடியாமல் போகிறது. அதிக அன்பு செய்கிறவன் அதிகமாகக் கவலைப்பட்டுத் தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவனுடைய கவலையின் எல்லைகள் அவனது அன்பு வியாபித்திருக்கிற எல்லாப் பரப்புக்கும் உரியது. மோகினியைச் சந்தித்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் மௌனமாக நடந்து கொண்டிருந்த சத்தியமூர்த்தியிடம் உடன் சென்ற குமரப்பன் மெல்லப் பேச்சுக் கொடுத்தான். "மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வந்திருப்பது உனக்கே இப்போதுதான் தெரியுமா சத்தியம்?" பதில் பேச முடியாமல் மனம் கலங்கிப் போயிருந்த சத்தியமூர்த்தி 'ஆமாம்' என்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தான். குமரப்பனே மேலும் பேசினான். "பாவம்! அந்தப் பெண் அழுதுகொண்டே படியேறிக் கடைக்குள் போகிறாள். ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை மிகவும் மலிவாக விலைக்கு வாங்கிவிட முயல்கிற இந்த ஜமீந்தாரை நினைத்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது; ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை விலைக்கு வாங்கி விடுவதற்குப் பட்டு, தங்கம், வைரம், கார், பங்களா - இவையெல்லாம் மிகவும் சாதாரண விலைகள். சாதாரணமான விலைகளைக் கொண்டு அசாதாரணமான அன்பைப் பேரம் பேசி வாங்கிவிட முடியும் என்று நினைப்பதே பேதமை..." "உன் கோபம் காரணமற்றது சத்தியம்! அவள் என்ன செய்வாள் அபலைப் பெண்! பாவம்! அவளுடைய நிலையை எண்ணி அநுதாபப்பட வேண்டிய நீயே இப்படிப் பேசுவதை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது..." சத்தியமூர்த்தி இதைக் கேட்டு நண்பனுக்கு மறுமொழி ஒன்றும் கூறவில்லை. பேசாமல் நடந்தான். ஜமீந்தாருடைய உத்தரவுக்குப் பயந்து மனப்பூர்வமாக ஆசைப்பட்டு மல்லிகைப் பந்தலுக்கு அவள் வந்திருப்பாள் என்றோ, விருப்பத்தோடு பட்டுப்புடவைக் கடைக்குப் புறப்பட்டிருப்பாள் என்றோ சத்தியமூர்த்தியும் கூடத் தன் அந்தரங்கத்தில் நம்பவில்லை. அவளுடைய இதயம் தன்னிடம் தான் இருக்கிறதென்று அங்கீகரித்துக் கொண்டிருந்தும் இத்தகைய வேளைகளில் மனம் தடுமாறிக் குமுறாமல் இருக்க முடியாதபடி தானும் உணர்ச்சிகளால் உந்தப்படுவதைத் தவிர்க்க இயலாது தவித்தான் சத்தியமூர்த்தி. அநுதாபமும், கோபமும் கலந்த இந்த விநோத உணர்ச்சிக்கு அவன் பலமுறை ஆளாகியிருக்கிறான். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த உணர்ச்சி மோகினியின் காரணமாகவே தான் அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அநுதாபத்தை மறுபுறமாகக் கொண்ட ஆத்திரம் அன்புடையவர் மேல் தான் ஏற்பட முடியும். சத்தியமூர்த்தியின் மனத்தில் அந்த வேளையில் பொங்கிக் கொண்டிருந்த ஆத்திரமும் அத்தகையதுதான். மனம் குழம்பியிருந்த இந்த விநாடியிலும் கூட மதுரையிலிருந்து நவராத்திரி விடுமுறை முடிந்து தான் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு முன் கோச்சடையிலுள்ள மஞ்சள்பட்டி அரண்மனையில் மோகினிக்கும் தனக்குமிடையே நிகழ்ந்த ஓர் உருக்கமான உரையாடல் இப்போது சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. அவளைப் பற்றிய அந்தப் பழைய நினைவு இப்போதும் அவனுக்கு ஆறுதலாயிருந்தது. 'உன் மேல் கோபப்பட்டு என்ன பயன் மோகினி! நீ ஒரு பேதை! உன்னைச் சந்திக்காமல் இருந்தால் நானும் என்னுடைய வாழ்க்கையில் ஓர் அழகிய பேதையின் அவலங்களை நினைத்து இப்படிக் கணகலங்க நேர்ந்திருக்காது' என்று தான் கூறியவுடன், 'அப்படிச் சொல்லாதீர்கள்! உங்களைச் சந்திக்காமலிருந்திருந்தால் நான் வாழவே நேர்ந்திருக்காது' என்பதாக அவள் மறுமொழி கூறிவிட்டு அழுத உருக்கமான நிகழ்ச்சி இப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது. ஆஸ்பத்திரியில் வஸந்தசேனை சாருதத்தன் கதையை மோகினிக்குக் கூறிய சம்பவமும் நினைவு வந்து அவன் மனத்தைக் கலக்கிக் கொண்டிருந்தது. நண்பன் குமரப்பனோடு நடந்து சென்றவாறே சத்தியமூர்த்தி இப்படி மனம் வருந்தி வேதனைப்பட்டுக் கொண்டிருந்த இதே வேளையில் பட்டுப்புடவைக் கடைக்குள் நுழைந்த மோகினி தூண்டிற் புழுவைப் போல் அங்கு இருப்புக் கொள்ளாமல் தவித்தாள். ஜமீந்தாரோ அவள் மனத்தைக் கவர வேண்டுமென்பதற்காகக் கடைக்காரனிடம் சொல்லி விதம் விதமான பட்டுப்புடவைகளை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்தார். அவளுடைய மனமோ கடைக்குள் நுழைவதற்கு முன் சத்தியமூர்த்தியை அந்த வீதியில் சந்தித்த ஞாபகத்தில் ஆழ்ந்து போயிருந்தது. அப்போது ஒரு கணம் சத்தியமூர்த்தியின் பார்வையும் தன் பக்கம் திரும்பிக் கவனித்ததும் அவளுக்குத் தெரியும். 'தான் மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், கண்ணாயிரமும் உடன் வர ஜவுளிக்கடைக்குள் நுழைவதைப் பார்த்து அவர் என்ன நினைத்துக் கொண்டு போகிறாரோ?' என்று எண்ணியபோது அவளுக்கு வேதனை தாங்க முடியவில்லை. 'ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் அவருக்குப் பிடிக்காது! நான் இவர்களோடு எதற்காக மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு வந்தேன்? எப்போது வந்தேன்? எப்படி வந்தேன்? என்றெல்லாம் சந்தேகப்பட்டு அவராகவே தம் மனத்தில் ஏதாவது கற்பனை செய்து கொண்டு என் மேல் ஆத்திரப்படப் போகிறாரே?' என்று எண்ணிப் பயந்த போது, மோகினியின் அந்தப் பயத்தில், 'சத்தியமூர்த்தி தன்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாதே' என்ற சுயநல நோக்கமே இல்லை. ஓர் இந்துக் குடும்பத்தில் கணவனுக்கு மனைவி அடங்கி அஞ்ச வேண்டிய நியாயமான அடக்கம் - பரம்பரைப் பரம்பரையாகப் பெண்குலத்திலேயே 'இது தன் எல்லை' என்று புரிந்து அங்கீகரித்துக் கொள்ளப்பட்ட அடக்கம் தான் அப்போது மோகினியின் பயமாகவும் இருந்தது. மாலையில் திடீரென்று இருந்தாற் போலிருந்து புடவைக் கடைக்குப் புறப்பட வேண்டும் என்று கண்ணாயிரம் கூறிய போதே அவளுக்கு வெறுப்பாயிருந்தது. "அப்பா காலமாகி அதிக நாளாகவில்லை. நான் உங்களோடு புடவைக் கடைக்கு வந்தால் நன்றாயிருக்காது அக்கா! நீங்கள் மட்டும் போய்விட்டு வாருங்கள்" என்று சொல்லிப் பாரதி உடன் வர மறுத்து விட்டாள். ஜமீந்தாரும் கண்ணாயிரமும் 'போர்டிகோவில்' காரைக் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டு அவளையும் அழைத்து வருமாறு அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரை உள்ளே துரத்தியிருந்தார்கள். ஜமீந்தாருக்குப் பயந்து மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு வந்த போதே உணர்ச்சி செத்துப் போய்க் கொலைக் களத்துக்குப் புறப்பட்டு வருவது போல் வந்து சேர்ந்திருந்தாள் அவள். அவளைப் புடவைக் கடைக்கு அழைத்துப் போய் ஊரார் மெச்சும்படி வாங்கிக் கொடுத்து மகிழச் செய்ய வேண்டுமென்று ஜமீந்தாருக்கு ஆசையாயிருந்தது. அந்த ஆசையை அவள் வெறுத்தாலும் வெளிப்படையாகத் துணிந்து மறுக்க முடியவில்லை. அநியாயமாக ஜமீந்தாருக்குக் கோபம் வந்து பிறர் முன்னிலையில் ஒரு பெரிய கலகமும் கூப்பாடும் ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவாவது அவள் அவரோடு கடைக்குப் புறப்பட வேண்டியதாயிற்று. இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு மேல் ஜமீந்தாரிடமிருந்து பணம் 'செக்'காகக் கடைக்காரர்கள் கைக்கு மாறியது. கடைக்காரர்கள், மூட்டை கட்டிக் கொடுத்த ஜவுளியைக் கணக்குப் பிள்ளைக் கிழவர் வாங்கிக் கொண்டு போய்க் காரில் வைத்தார். உயிரற்ற பொம்மையாய் இறங்கி நடந்து போய் மோகினியும் காரில் உட்கார்ந்தாள். பக்கத்தில் ஜமீந்தாரும் உட்கார்ந்து கொண்டார். மோகினி ஜமீந்தார் மேல் பட்டுவிடாமல் விலகிக் கதவோரமாக ஒட்டினாற் போலக் காரின் மறுகோடியில் உட்கார்ந்து கொண்டாள். அவள் விலகி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து உள்ளூரக் கோபம் குமுறினாலும் வெளிப்படையாக அருகில் உட்காரச் சொல்லி மிரட்டுவதோ, கோபிப்பதோ சாத்தியமில்லையாதலால் ஜமீந்தார் சிரமப்பட்டுப் பொறுமையாயிருக்கும்படி ஆயிற்று. கண்ணாயிரமும் கணக்குப்பிள்ளைக் கிழவரும் முன் ஸீட்டில் ஏறிக் கொண்ட பின் கார் புறப்பட்டது. பூக்கடை வாசலில், "ஒரு நிமிஷம் காரை நிறுத்து" என்று சொல்லித் தாமே கீழே இறங்கிய ஜமீந்தார் ஒரு பெரிய பொட்டலம் பூவை வாங்கிக் கொண்டு வந்து மோகினியிடம் நீட்டினார். மோகினி இரண்டு விநாடிகள் தயங்கிவிட்டு அதை வேண்டா வெறுப்பாய் இடது கையால் வாங்கிக் காரில் வைத்தாள். முன் கோபக்காரரான ஜமீந்தார் தம்முடைய ஆத்திரத்தின் போக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டு உள்ளேயே எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தார். 'அவளுடைய பிரியத்தின் விலை என்னவாக இருக்க முடியும்?' என்று புரிந்து கொள்ள இயலாமல் தவித்தது அந்த ஜமீந்தாரின் முரட்டு இதயம். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
சேரமான் காதலி வகைப்பாடு : வரலாற்று புதினம் இருப்பு உள்ளது விலை: ரூ. 330.00தள்ளுபடி விலை: ரூ. 300.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |