62
மனித மனத்தின் எல்லையற்ற சோகத்தையோ எல்லையற்ற சந்தோஷத்தையோ அப்படி அப்படியே சொல்லி முடிப்பதற்குப் பாஷையும் கூடப் பரிபூரணமாகத் துணை செய்வதில்லை. மனிதனை வலுப்படுத்துகிற சக்திகளில் பிறர் அவன் மேல் செலுத்துகிற மெய்யான அன்பும் ஒன்று. பிறர் நம்மேல் அன்பும் அக்கறையும் உள்ளவராக இருக்கிறார்கள் என்பதை உணர்வது எத்தனை சுகமாக இருக்கிறதோ அத்தனை வேதனையும் ஏமாற்றமும் அந்த அன்பு பொய் என்று புரிந்து கொள்ளும் போது வாழ்வில் உண்டாகிறது. சத்தியமூர்த்தி இளமையிலிருந்தே எதற்கும் எங்கும் தயங்கி நிற்காத தீரன். கீழே விழும்போதெல்லாம் அதை விட வேகமாக மேலே எழுந்திருக்க வேண்டும் என்ற உணர்ச்சியைத் தன் வாழ்வில் பலமுறை அடைந்திருக்கிறான் அவன். அவனுடைய வலது கால் முன்னால் அடியெடுத்து வைப்பதற்கு எப்போதும் தயாராயிருந்திருக்கிறது. 'இது இப்படித்தான் முடியும்' என்று எதைப் பற்றியும் ஒரேவிதமாகச் சிந்தித்து அது அப்படி முடியாததனால் ஏமாறித் தவித்ததில்லை அவன். இப்போது மோகினியின் செய்கையால் அவன் மனம் புண்பட்டிருக்கிறது.
'ஒரு மனிதனுடைய நேர்மையான சமுதாயத் தேவைகள் கூட அவன் நினைத்தபடி நிறைவேறாது. ஒவ்வொரு நல்ல மனிதனும் தன்னுடைய தேவைக்காக மட்டுமே போராட முடியாது. தன்னுடைய தேவைக்காகவும் பிறருடைய நியாயத்துக்காகவும் சேர்ந்தே போராடியாக வேண்டும்' என்பதுதான் அன்றும் இன்றும் என்றும் சத்தியமூர்த்தியின் வாழ்க்கையின் நோக்கமாயிருந்தது. அதனால் தான் மிகக் குறுகிய கால ஆசிரிய வாழ்க்கையிலேயே மல்லிகைப் பந்தல் கல்லூரியில் இவ்வளவு சோதனைகளும் அவனுக்கு ஏற்பட்டு விட்டன. புனித மனத்தின் எல்லையற்ற சோகத்தையோ எல்லையற்ற சந்தோஷத்தையோ அப்படியே சொல்லி முடிப்பதற்குப் பாஷையும் சில சமயங்களில் பரிபூரணமாகத் துணை செய்வதில்லை. தெரிந்தோ தெரியாமலோ மனித உணர்ச்சிகளின் சங்கமம் தான் வாழ்க்கையாயிருக்கிறது. ஆனால் உணர்ச்சிக்குப் பாஷை எப்போதுமே கருவியாக இருந்து ஒத்துழைப்பதில்லை. அந்தச் சில நாட்களில் குமரப்பனோடு கூடச் சத்தியமூர்த்தி அதிகமாகப் பேசவில்லை. வெளிநாட்டுப் பயணத்துக்கான உடுப்புகளைத் தைக்கக் கொடுப்பதற்காக மல்லிகைப் பந்தல் கடைத்தெருவில் உள்ள பிரசித்திபெற்ற தையற்கடை ஒன்றிற்குச் சத்தியமூர்த்தியைக் குமரப்பன் அழைத்துக் கொண்டு போயிருந்தான். அன்று தையற்கடையில் அளவு எடுத்துக் கொண்ட பிறகு மாலை வேளையாக இருந்ததனால் அப்படியே நண்பர்கள் உலாவப் போயிருந்தார்கள். அன்று கூட நண்பனிடம் மோகினியைப் பற்றியோ தன் வேதனைகளைப் பற்றியோ அவன் அதிகமாகக் கூறவில்லை. 'ஹிடல்பர்க்' யூனிவர்ஸிடியைப் பற்றியும், அது ஜெர்மனியின் ஜீவநதியான ரைன், நெக்கார் நதிகளின் கரையில் திராட்சைத் தோட்டங்கள் நிறைந்த சூழலில் இயற்கையழகுடன் அமைந்திருப்பதையும், 'ஆஃப் ஹியூமன் பாண்டேஜ்' என்ற தன் நாவலில் ஸாமர்ஸெட்மாம் அந்தப் புராதனமான ஜெர்மன் யூனிவர்ஸிடியைப் பற்றி எழுதியிருப்பதைக் குறித்தும் குமரப்பன் ஏதேதோ கூறிக் கொண்டு வந்தான். நோபல் பரிசைத் தியாகம் செய்த டாக்டர் ஷியா கோவின் ஆசிரியர் பாஸ்டர் நாக் சில காலம் தங்கிப் படித்த மார்பர்க் பல்கலைக் கழகத்தைப் பற்றியும் குமரப்பன் சில விவரங்களைக் கூறினான். ஜெர்மனிக்குப் போனவுடன் வழக்கப்படி ஜெர்மன் மொழியைப் பிற நாட்டினர்க்குக் கற்பிக்கும் 'கதே இன்ஸ்டிடியூட்டில்' ஆறு மாதம் சத்தியமூர்த்தி ஜெர்மன் மொழி கற்க வேண்டியிருக்கும் என்பதையும் குமரப்பன் கூறினான். மறுநாள் மாலை லேக்வியூ ஹோட்டலில் மாணவர்கள் சத்தியமூர்த்திக்கு ஒரு பிரிவுபசார விருந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விருந்துக்கு பிரின்ஸிபலோ, வார்டனோ, வேறு விரிவுரையாளர்களோ, பேராசிரியர்களோ யாருமே வரவில்லை. தமிழ்த் துறையைச் சேர்ந்த காசிலிங்கனார் கூட வரவில்லை. தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசன் மட்டும் தயங்கித் தயங்கி வந்து நின்றார். கல்லூரி லைப்ரேரியன் ஜார்ஜ் மிகவும் தைரியமாகவும் மனம் விரும்பியும் அந்த விருந்தில் கலந்து கொண்டார். விருந்து முடிந்ததும் சத்தியமூர்த்தியைப் பாராட்டி மேடையில் பேசும் போதே சில மாணவர்கள் கண்கலங்கி விட்டார்கள். மாணவர்கள் யூனியன் தலைவி என்ற முறையில் பாரதியும் அந்த விருந்துக்கு வந்திருந்தாள். அவள் ஜமீந்தாருக்கும் பிரின்ஸிபலுக்கும் பயப்படாமல் துணிவாக அந்த விருந்துக்கு வந்து கலந்து கொண்டதோடு மாணவர்கள் சத்தியமூர்த்தியைப் பாராட்டிப் பேசிய போதெல்லாம் மற்றவர்களோடு சேர்ந்து தானும் கைதட்டி மகிழ்ந்து கொண்டிருந்தாள். படிக்கிற மாணவர்கள் பதவியை விட்டுப் போகும் ஆசிரியருக்குக் கொடுக்கும் விருந்துபசாரம் என்ற முறையில் சத்தியமூர்த்தியின் மாணவியாகிய பாரதி அங்கு வந்திருந்தாலும், நிர்வாகத்தோடு பகைத்துக் கொண்ட ஓர் ஆசிரியரைக் கௌரவிக்கத் தன் தந்தை இறந்து அதிக நாளாகாத அந்த நிலையிலும் அவள் வந்திருக்கிறாள் என்பதே பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளோ, பிரிவுபசார விருந்துக்கு வருவது போல் வந்திருந்தாலும் சத்தியமூர்த்தியைச் சந்தித்துப் பேச வேண்டிய அவசரமான காரியமும் அவளுக்கு இருந்தது. அவள் இந்தப் பிரிவுபசார விருந்துக்கு வீட்டிலிருந்து புறப்படும் போது ஜமீந்தார் பேச்சுவாக்கில் அவளிடம், "நாங்கள் இன்னும் ஒரு வாரம் பத்து நாளைக்குள்ளாரப் புது வீட்டுக்குப் போயிடறோம் அம்மா! நீ அந்தப் படத்தை எடுத்தெறிஞ்ச மாதிரியே ஆளையே எடுத்தெறிஞ்சாலும் எறிஞ்சிடுவே. உங்கிட்டே எனக்கு ரொம்பப் பயமாக இருக்கு" என்று வேடிக்கையாகத் தொடங்குவது போல் தொடங்கிக் குத்தலாகச் சொல்லிக் காண்பித்திருந்தார். படத்தைத் தான் எடுத்தெறிந்தது பற்றிக் கண்ணாயிரம் ஜமீந்தாரிடம் கோள் மூட்டியிருக்க வேண்டும் என்று அப்போதுதான் பாரதிக்குப் புரிந்தது. வெளிப்படையாக மோகினியின் மேல் தான் அனுதாபப்படுவதைக் காண்பித்துக் கொண்டால், "எனக்கில்லாத அக்கறை உனக்கென்ன வந்தது? அவளுக்குப் பரிந்து பேச நீ யார்?" என்று ஜமீந்தார் முரட்டுத்தனமாகத் தன்னை எதிர்த்துக் கேட்பாரே என்று நினைத்து அவரிடம் மோகினி விஷயமாக எடுத்துச் சொல்லத் தயங்கினாள் பாரதி. அதே சமயத்தில் மோகினியை நிராதரவாக விட்டு விடவும் அவளுக்கு மனமில்லை. இதையெல்லாம் நன்றாகச் சிந்தித்த பின் அன்று நடக்கும் பிரிவுபசாரக் கூட்டத்தின் முடிவில் எப்படியும் சத்தியமூர்த்தியைச் சந்தித்து, "மோகினியை கைவிட்டு விடாதீர்கள்! அவள் புனிதமானவள். அவளைக் காப்பாற்றுங்கள்" என்று வேண்டிக்கொள்ள எண்ணியே அங்கு வந்திருந்தாள் பாரதி. ஆனால் அது முடியாமல் போய் விட்டது. மாலை ஆறரை மணிக்குத் தொடங்கிய விருந்து முடியவே ஏழரை மணி ஆகிவிட்டது. அப்புறம் மாலையிட்டுப் பாராட்டுரைகள் வழங்கிக் கூட்டம் முடிய ஒன்பதரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. கூட்டம் முடிந்த பின்னும் மாணவர்கள் பலாப்பழத்தைச் சுற்றிய ஈக்களைப் போல் சத்தியமூர்த்தியை மொய்த்து நெருங்கிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவரிடம் பேசுவதற்குரிய தனிமை அப்போது கிடைக்குமென்று தோன்றவில்லை பாரதிக்கு. மறுநாள் அதிகாலையில் அவரை அவருடைய அறையிலேயே போய்ப் பார்ப்பதென்ற முடிவுடன் திரும்பி விட்டாள் அவள். மாலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பதரை மணி வரை பாரதி வீட்டிலிருந்து லேக்வியூ ஹோட்டலில் நடைபெற்ற விருந்துக்குப் போயிருந்த அந்த மூன்றரை மணி நேரத்துக்குள் இங்கே வீட்டில் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் ஒரு பிரளயமே நடத்தியிருந்தார்கள். மல்லிகைப் பந்தலுக்கு வந்த முதல் தினத்திலிருந்து அன்று வரை ஒரு நாள் கூட மோகினி அவ்வளவு நேரம் தனியாக அந்தக் கிராதகர்களோடு வீட்டில் இருக்க நேர்ந்தது இல்லை. கல்லூரி மாணவர்கள் நடத்தும் அந்தப் பிரிவுபசார விருந்துக்குத் தான் எந்தத் தொடர்பைக் கொண்டும் போக முடியாத காரணத்தால் அன்று மோகினி வீட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று. என்ன பிரிவுபசார விருந்து யாருக்கு என்பதைப் பாரதியும் அவளிடம் சொல்லவில்லை. கண்ணாயிரமும், ஜமீந்தாரும் தன்னிடம் ஏதாவது வம்புக்கு வரலாம் என்று பயந்து பாரதி புறப்பட்டதும் மோகினியே தன் அறைக் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு ஏதோ புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கியிருந்தாள். பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அதற்குள் யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். 'புறப்பட்டுப் போன பாரதியே எதையாவது மறந்து போய்விட்டு மறுபடி வந்து கதவைத் தட்டுகிறாளோ' என்றெண்ணிக் கதவைத் திறந்தாள் மோகினி. அசடு வழியச் சிரித்துக் கொண்டே ஜமீந்தார் கதவருகே நிற்பதைப் பார்த்து அவளுக்குச் சர்வ நாடியும் ஒடுங்கிப் போய்விட்டது. அவ்வளவு பெரிய பங்களாவில் அப்போது வேறு யாருமே இல்லை. சுற்றிலும் மெல்ல இருட்டத் தொடங்குகிற நேரம். கண்ணாயிரமும் வெளியே போவது போல் எங்கோ நழுவியிருந்தார். டிரைவர் முத்தையாவோ பாரதியைக் காரில் அழைத்துக் கொண்டு 'லேக்வியூ' ஹோட்டலுக்குப் போயிருந்தான். சமையற்காரர் பின்கட்டில் எங்கோ இருந்தார். 'மோசம் போய்விடக் கூடாதே' என்ற பயமும் பதற்றமும் நடுங்கிடக் குமுறும் சொற்களால் "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று குனிந்த தலை நிமிராமல் ஜமீந்தாரைக் கேட்டாள் அவள். "இதென்ன கேள்வி? நீதான் வேண்டுமென்று வைத்துக் கொள்ளேன்" என்று கைகளை நீட்டிப் பல்லிளித்தார் ஜமீந்தார். கொடிய மிருகமாக எதிரில் வந்து நிற்கும் அந்தக் கயமையை அருவருப்போடு துச்சமாகப் பார்த்தாள் அவள். "ஏன் அப்படிப் பார்க்கிறே மோகீ? கொஞ்சம் என்னோட வந்து தோட்டத்துப் புல்வெளியிலே சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தா என்ன கொறைஞ்சு போவுதாம்?" "....." "இரு? இரு? இந்த வீட்டிலே சேர்ந்து இருக்கிற வரை தானே நீ அந்தப் பொண்ணு பாரதியோடயே இருக்க முடியும்? ஜமீன் வீட்டுக்குப் போனப்புறம் என்னதான் செய்யப் போறியோ?" என்று சொல்லி வயதுக்குப் பொருந்தாமல் சின்னத்தனமாகக் கண் சிமிட்டினார் ஜமீந்தார். 'தூ'வென்று காறித் துப்பிவிட்டு எதிரே வந்து நிற்கும் அந்த மிருகத்தை இலட்சியம் செய்யாமல் கதவைப் படீரென்று அடைத்து உட்புறமாகத் தாளிட்டாள் மோகினி. மீண்டும் கதவு உடைபடுவது போல் தட்டப்பட்டது. தானாகக் கை ஓய்ந்து போய்க் கதவைத் தட்டுவதை நிறுத்தட்டும் என்று உள்ளே புலிக்குப் பயந்து புதரில் பதுங்கிய புள்ளி மானாய் நடுங்கிக் கொண்டிருந்தாள் மோகினி. கதவு தட்டப்படுவது நிற்கவே இல்லை. சிறிது நேரத்துக்குப் பின் ஜமீந்தாரின் குரலோடு கண்ணாயிரத்தின் குரலும் வெளியே கேட்டது. உள்ளே தாழ்ப்பாள் போட்டாலும் வெளியே இருந்து சாவியால் திறக்கிற மாதிரிப் பூட்டு அது. அவர்கள் சாவியினாலேயே தாழ்ப்பாளைத் திறந்து விடுவார்களோ என்று அவள் பயந்தாள். பயந்தபடியே நடந்தது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே பாய்ந்த கண்ணாயிரம் எரிமலையாகச் சீறி இரைந்தார். "நீ உன் மனசில் என்னதான் நினைச்சிருக்கே! ஜமீந்தாரு... எவ்வளவு பெரிய மனுஷன்... தனியாய் ரெண்டு வார்த்தை பேச வந்தார்னா சந்தோஷமாப் பேசி அனுப்பாமே... காறித் துப்பினியாமே? ஆடறது கூத்துன்னாலும் போடறது பத்தினி வேஷம்னானாம்..." அவ்வளவு தான். இதைக் கேட்டு அதுவரை பொறுமையாயிருந்த மோகினி பத்திரகாளியானாள். "கண்ணாயிரம்!" என்று அவள் உரக்க ஒலித்த சீற்றக் குரலில் அந்த வீடே அதிர்ந்தது. பாதிக் கோழைத்தனமும், பாதிப் பயமும் உள்ள அந்தச் சாதுப் பெண் தன்னைப் பதிலுக்கு இரைந்து கோபிக்க மாட்டாள் என்றெண்ணியிருந்த கண்ணாயிரம், அவள் எதிர்பாராமல் போட்ட கூப்பாட்டினால் அப்படியே திகைத்துப் போய்விட்டார். "வேளைக்கு ஒருத்தியைப் பெண்டாள வலை வீசும் உங்களையும் ஜமீந்தாரையும் போன்ற சண்டாளர்களைப் பெற்ற குலமே பத்தினிக் குலமானால் பிறந்த குலத்தைத் தவிர வேறு பிழை செய்தறியாத நானும் பத்தினிதான். இந்த நாசகாரச் சமூகத்தில் நீங்கள் எல்லாம் பெரிய மனிதர்கள். நானோ கூத்தாடுகிறவள். குலத்தில் பிறக்காதவள். மானம் கெட்டவரே! என்னைக் குறை சொன்னால் உம் நாக்கு அழுகிப் புழு நெளியும்..." என்று உணர்ச்சி வசப்பட்டுக் குமுறி மண்டை வெடித்துவிடும் போல இரைந்து கத்திய அவளை ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்ற உணர்வே இன்றிக் கன்னத்தில் ஓங்கி அறையப் பார்த்து விட்டார் கண்ணாயிரம். மோகினி அவர் தன்னை அறையப் பாய்ந்து வருவதைப் பார்த்து சிறிதும் நகரவோ ஓடவோ விலகவோ இல்லை. தன்னுடைய நினைவின் புனிதத்துவம் தன்னைக் காக்கும் என்ற நம்பிக்கையோடு கம்பீரமாக நிமிர்ந்து பார்த்து நெருப்பாய் ஜொலித்துக் கொண்டு நின்றாள். அவள் நின்ற கம்பீரத்தில் ஒடுங்கி மிரண்டு நெருப்பருகே நெருங்க அஞ்சுகிறவரைப் போல ஓங்கிய கையோடு பின்வாங்கித் தயங்கினார் கண்ணாயிரம். அவளைக் கைநீட்டி அடிக்காத குறையைச் சத்தியமூர்த்தியை வாயில் வந்தபடி திட்டித் தீர்ப்பதன் மூலம் கண்ணாயிரம் அப்போது தணித்துக் கொண்டார். "அந்தத் தமிழ் வாத்தியார்ப் பயல் மேலிருக்கும் மயக்கத்தில்தான் நீ இப்படி ஜமீந்தாரை அலட்சியம் செய்யறே! உங்கம்மா இருக்கிறப்பவே நீ ஜமீந்தாருக்குன்னுதான் உன்னை அவரிட்ட ஒப்படைக்க முடிவு செய்திருந்தாள். நீயானா இன்னிக்கு இப்படித் திமிர்ப்பிடிச்சுத் திரியறே" என்று கண்ணாயிரம் இரைந்த போது, "இரு! இரு! சீரழியத்தான் நீ இவ்வளவு பேசறே" என்று கறுவிக் கொண்டு போனார் கண்ணாயிரம். "சும்மா பேசி இரசாபாசம் பண்ணாதே கண்ணாயிரம்! இதோட சேர்ந்து நம்ப பூபதி மகளும் கெட்டுப் போச்சு. நம்ம மேலே ஏதோ மட்டு மருவாதி வச்சிருந்த அந்தப் பொண்ணு பாரதியும் இதுனாலே நம்ம படத்தையே தூக்கி எறியிற அளவுக்கு வெறுக்குது. இந்த வீட்டிலே இருக்கிறவரை இது வழிக்கு வராது? நம்ம வீட்டுக்குப் போய்ப் படுத்தற விதமாப் படுத்தினா வழிக்கு வரும். சும்மா மயிலே மயிலேன்னா இறகு போடாது. பேசாமே வா... அப்புறம் பார்த்துக்கலாம்" என்று ஒத்துப் பாடினார் ஜமீந்தார். அவர்கள் போனதும் மறுபடியும் கதவைத் தாழிட்டுக் கொண்டு ஆற்றாமையோடு குமுறிக் குமுறி அழுதாள் மோகினி. அப்படி அழுத போது, "இந்தக் கைகள் உன் கண்ணீரைத் துடைப்பதற்கு எப்போதும் தயாராயிருக்கும்" என்று முன்பு ஒரு சமயம் சத்தியமூர்த்தி கூறியிருந்த வாக்கியம் அவளுக்கு நினைவு வந்தது. நாட்டரசன் கோட்டைக்குப் பக்கத்தில் ஏதோ கலியாணத்திலே சதிராடப் போய்விட்டுத் திரும்புகிற வழியில் சொகவாசம் கிராமத்தில் சந்தித்த அந்தப் பட்டிக்காட்டுத் தம்பதிகளும் இப்போது அவளுக்கு நினைவு வந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை அந்த எளிய இன்ப வாழ்க்கை அவளுள் ஒரு பொறாமையான முன் மாதிரியாய் உறைந்து கிடக்கிறது. தான் வாழ முடியாமல் தவிக்கும் போதுகளில் எல்லாம் அந்த வாழ்வின் அமைதி அவள் நினைவில் மேலெழுந்து உறுத்தியிருக்கிறது. புகழ், பணம், கலை, ஆடம்பரம் எல்லாவற்றையும் கழற்றி எறிந்து விட்டுச் சத்தியமூர்த்தியோடு அந்த மாதிரிச் சிறிய குடிசையில் போய் வாழ்ந்தாலும் அந்த வாழ்வில் நிறைவிருக்கும் என்று அவள் கனவு கண்ட நாட்கள் பல. மீண்டும் மதுரை மீனாட்சி கோவில் கிளிக்கூண்டு மண்டபத்தில் பார்த்த அந்தச் சிறைப்பட்ட கிளி நினைவு வந்தது அவளுக்கு. நினைக்க நினைக்க அவளுடைய இதயம் கனத்தது. அழுகையும் பெருகி வளர்ந்தது. "கூட்டிலிருந்து விடுபட்டால் சுதந்திரம் தான்! ஆனால், சுதந்திரமாகப் பறந்து போகவிட மாட்டார்களே பாவிகள்!" என்று அழுகைக்கிடையே தனக்குள் மெல்லச் சொல்லி முணுமுணுத்துக் கொண்டாள் மோகினி. விருந்து உபசாரக் கூட்டம் முடிந்து பாரதி வந்து கதவைத் தட்டியபோது எழுந்து போய்க் கதவைத் திறந்த மோகினியைப் பார்த்தால் அழுது அழுது கண்கள் சிவந்திருந்தன. அவளிருந்த கோலத்தைப் பார்த்து, "என்னக்கா இது? என்ன நடந்தது?" என்று பதறிப் போய் விசாரித்த பாரதியிடம், "இந்த அழுகைதான் நான் என் பிறவியோடு கொண்டு வந்த சீதனம் அம்மா! எல்லாம் என் தலைவிதி" என்றாள் மோகினி. பாரதி மேலும் தூண்டித் தூண்டிக் கேட்டாள். "கண்ணாயிரம், ஜமீந்தார் யாராவது உங்களைக் கோபிச்சுக்கிட்டாங்களா?" மோகினி பதில் சொல்லாமல் தலைகுனிந்து கண்ணீர் சிந்தினாள். ஜமீந்தாரும் கண்ணாயிரமும், கூச்சமின்றியும், பச்சையாகவும் தன்னைப் பேசிய வசைப் பேச்சுக்களையெல்லாம் அப்படியே கூட்டியோ குறைத்தோ பாரதியிடம் சொன்னால் அவள் மனம் கூட வேறுபடும் என்பதால் மோகினி அவற்றை அவளிடம் சொல்லவேயில்லை. "நாமெல்லாம் இப்படி அஞ்சி அழுது பயனில்லை அக்கா! தைரியமாக நம்மைத் துன்புறுத்துகிறவர்களைப் பதிலுக்கு அழ வைக்க வேண்டும்..." "அதையும் ஒரு நாள் செய்யத்தான் போகிறேன்" என்று எந்த அர்த்தத்திலோ பதில் கூறினாள் மோகினி. ஆனால் அந்த அர்த்தம் பாரதிக்குச் சரியாய்ப் புரிந்திருக்க முடியாது. மறுநாள் சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தலை விட்டுப் புறப்படுவதாக இருந்தது. மனத்தில் தனக்குத் தானே பெருந்தன்மையாக ஒரு திட்டம் வகுத்துக் கொண்டிருந்த பாரதி சத்தியமூர்த்தியை மறுநாள் அதிகாலையில் சந்தித்து, மதுரைக்கு அனுப்பிய கடிதத்தைப் பற்றி விசாரித்த பின், "என் வார்த்தைக்குத் தயவு செய்து செவி சாயுங்கள் சார்! மோகினியைப் போன்ற அழகிய அநாதைகளைச் சமூகம் எந்த நிலையில் வைத்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியும். வீண் சந்தேகங்களுக்கு இரையாகி அவளைக் கைவிட்டு விடாதீர்கள். அவளைப் போல் புனிதமான பெண் வேறொருத்தி இந்த உலகில் இருக்க மட்டாள். நீங்கள் மேற்கு ஜெர்மனிக்குப் புறப்படு முன் கடவுள் சாட்சியாக ஒரு காரியம் செய்யுங்கள். நீங்கள் தைரியமுள்ளவர். முற்போக்குவாதி. இதற்குத் தயங்க வேண்டிய அவசியமேயில்லை! எங்கள் வீட்டுக் காரில் நானே நம்பிக்கையான டிரைவருடன் உங்களையும் மோகினியையும் மதுரைக்கு ஏற்றி அனுப்புகிறேன். மதுரைக்குப் போய் ரிஜிஸ்தர் ஆபீஸில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு திருப்பரங்குன்றம் கோவிலில் ஓர் அர்ச்சனை செய்துவிட்டு உங்கள் மனைவி என்ற சட்டப்பூர்வமான அங்கீகாரத்தோடு மோகினியை மறுபடி என்னிடம் கொண்டு வந்து விட்டுவிட்டு நீங்கள் அப்புறம் எங்கு வேண்டுமானாலும் புறப்படுங்கள். நீங்கள் திரும்புவதற்கு யுகக் கணக்கில் ஆனாலும் நான் அவளைக் காக்கிறேன். வாழ்க்கையில் உங்களுக்காகவும், அவளுக்காகவும் இந்தத் தியாகத்தைச் செய்யவாவது என்னை அனுமதியுங்கள். உங்கள் மனைவி என்ற சட்டப்பூர்வமான அங்கீகாரத்தோடு நான் அவளை வைத்துக் காக்கிற போது, ஜமீந்தாரோ, கண்ணாயிரமோ என்னிடம் தொல்லை கொடுக்க முடியாது. தயை செய்யுங்கள். நீங்கள் வெளிநாட்டுக்கு விமானம் ஏறும் போது வெறும் புரொபஸர் சத்தியமூர்த்தியாக மட்டுமே புறப்படாதீர்கள்" என்று உள்ளமுருகி வேண்டிக் கொள்ள நினைத்திருந்தாள். இப்படிச் செய்தாலொழிய, 'நீங்கள் பாக்கியசாலி! அதனால் தான் காதலில் ஜெயித்திருக்கிறீர்கள்! அந்த ஐயத்தை இறுதிவரை நிரூபிக்க நான் துணையாயிருக்கிறேன்' என்று மோகினியிடம் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாதென்று பாரதிக்குத் தோன்றியது. 'மோகினி சட்டப்பூர்வமாகச் சத்தியமூர்த்தியின் தர்ம பத்தினியாகிவிட்டால் அப்புறம் கொடியவர்களான ஜமீந்தாரோ, கண்ணாயிரமோ அவளுக்குத் தொல்லை கொடுக்க முடியாது! நானும் தாராளமாகவும் உரிமையுடனும் இவளைப் பாதுகாத்துக் கொண்டு அவர்களைத் துணிந்து எதிர்க்கலாம்! என்னுடைய காதல் எந்த இடத்தில் தோற்றதோ அங்கேயே மோகினியின் காதல் வென்றது. அந்த வெற்றியையாவது நான் காத்துக் காப்பாற்றிக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அப்படிக் காப்பாற்றி விட்டால் ஜமீந்தார் தம்மோடு தமது மஞ்சள்பட்டி மாளிகையில் வந்து இருக்கச் சொல்லி மோகினியை வற்புறுத்த முடியாது. எப்படியும் இதை நான் செய்தே ஆக வேண்டும்' என்று கங்கணம் கட்டிக் கொண்டாற் போல உறுதியாயிருந்தாள் பாரதி. அப்படிச் சத்தியமூர்த்தி அவளைப் பதிவுத் திருமணம் செய்து கொள்ள அழைத்துப் போவதற்கு இணங்கி விடுவாரென்றும் அந்த நற்செய்தியோடு சேர்ந்தே அவர் வெளிநாடு சென்று இரண்டாண்டுகளுக்கு மேல் தங்கப் போகிற துயரச் செய்தியையும் மோகினியிடம் சொல்ல வேண்டுமென்றும் அதை அந்த விநாடி வரை இரகசியமாக வைத்திருந்தாள் பாரதி. ஆனால் அதே நாளில் அதே இரவில் மோகினியும் அந்தச் செய்தியைத் தெரிந்து கொண்டு விட்டாளென்றும், அப்படித் தெரிந்து கொண்டதால் ஏற்கெனவே நலிந்து தளர்ந்திருந்த அவள் மனம் இன்னும் தளர்ந்து நம்பிக்கை வீழ்ந்து விட்டதென்றும் பாரதி அறிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. பாரதி எந்தப் பிரிவுப்சாரக் கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பி வந்திருந்தாளோ அந்தப் பிரிவுபசாரக் கூட்டத்தில் வெவ்வேறு வகுப்பு மாணவர்கள் சத்தியமூர்த்தி மேற்கு ஜெர்மனிக்குப் பயணமாவதைப் பாராட்டி விடை கொடுத்து அனுப்பும் பாராட்டிதழகளின் அச்சுப் பிரதிகள் சிலவற்றைக் கூட்டத்தில் வழங்கியதால் பாரதியும் கையோடு காரில் அவற்றைக் கொணர்ந்திருந்தாள். இரவு பன்னிரண்டரை மணி சுமாருக்குத் தூக்கத்திலிருந்து தற்செயலாகக் கண்விழித்த பாரதி உள்ளே அறைக்குள் விளக்கு எரிவதையும், ஒரு நாளுமில்லாத அபூர்வமாக அன்று அந்த நேரத்துக்கு மோகினி உறக்கம் விழித்து உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருப்பதையும் பார்த்து ஆச்சரியப்பட்டாள். அந்த அகாலத்தில் கலைந்து சரிந்து சோர்ந்த கருங்குழலும் அழுத கண்களும் துயரம் தோய்ந்த வதனமுமாகச் சோகச் சித்திரமாய்க் காட்சியளித்தாள் மோகினி. அந்த அவலத்திலும் அவள் மிகவும் அழகாகத் தான் இருந்தாள். "இந்த அகாலத்தில் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டு என்ன எழுதுகிறீர்கள் அக்கா?" என்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டு வினவிய பாரதிக்கு முதலில் சிறிது தயக்கமும் தடுமாற்றமும் அடைந்த பின், "சின்ன வயசிலே அபிநயம் பிடிச்ச பழைய பாட்டு ஒன்று ரொம்ப நாளா மறந்து போயிருந்தது... இப்போ திடீரென்று ஞாபகம் வந்தது. அப்படியே எழுதி வைத்துக் கொள்ளலாமென்று உட்கார்ந்தேன். தூக்கமும் வரவில்லை. படுக்கையில் சும்மா கிடந்து புரள்வதற்கு 'இதையாவது செய்யலாமே' என்று எழுத ஆரம்பித்தேன்" என்று பதில் வந்தது மோகினியிடமிருந்து. அந்தப் பதில் குரலின் தளர்ச்சியிலேயே அவள் நீண்ட நேரம் குமுறிக் குமுறி அழுதிருப்பது தெரிந்தது. "அதிக நேரம் கண் விழிக்காதீங்க... நேற்றும் நீங்க இராத் தூக்கம் இல்லாமல் தவித்தீர்கள். முந்தாநாளும் தூங்கல. உடம்பு என்னத்துக்காகும்? அலமாரியிலே தூக்க மாத்திரை இருக்கும். அதையாவது ரெண்டை எடுத்து முழுங்கிப்பிட்டுப் படுத்துக்குங்க" என்று பரிவுடன் கூறிவிட்டுச் சிறிது நேரத்துக்குள் மறுபடியும் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டு விட்டாள் பாரதி. மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையை விட்டுவிட்டுச் சத்தியமூர்த்தி வெளிநாடு செல்லப் போகிறார் என்பதையும், அதற்காகத்தான் அன்று மாலையில் லேக்வியூ ஹோட்டலில் பிரிவுபசார விருந்து நடந்தது என்பதையும், எதற்காகப் பாரதி தன்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டாள் என்பது புரியாமல் மோகினியின் மனம் குழம்பியது. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
அறம் பொருள் இன்பம் வகைப்பாடு : கேள்வி பதில் இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |