52
ஒரு பெண் தன் அந்தரங்கத்திலிருக்கிற உண்மையை உலகத்துக்குப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்ளத் தான் எத்தனை ஆயிரம் தடைகள்?
"நல்லாக் கொளுத்தட்டும்! நமக்கென்ன வந்திச்சு? உள்ளூர் ஏஜெண்டை இன்னும் நாலு கட்டுப் பார்சல் வரவழைச்சுக் கொளுத்துறவங்களுக்கு விற்கச் சொல்லு" என்று ஜமீந்தார் இதைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லாமல் கண்ணாயிரத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலை நிறுத்தத்துக்கு அநியாயமான முறையில் மாணவர்களைத் தூண்டியவன் சத்தியமூர்த்திதான் என்பதற்கு ஒரு 'ரிக்கார்டு' வேண்டுமென்பதற்காகக் குத்துவிளக்கில் அந்தத் தலையங்கம் வரச் செய்திருந்தார் ஜமீந்தார். அந்த வாரத்துக் 'குத்துவிளக்கு' இதழ் வெளியாகி நெருப்புக்கிரையான பின்னும் நம்பிக்கை போய்விடாதபடி அதற்கு மறுதினம் மோகினியை அழைத்துக் கொண்டு மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்த சத்தியமூர்த்தியின் தந்தையைக் கருவியாகப் பயன்படுத்தி மகனை ஒடுக்கி விடலாம் என்ற யோசனையைக் கண்ணாயிரம் ஜமீந்தாரிடம் சமயம் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த யோசனையை மறுக்க முடியாமல் நிர்ப்பந்தத்தின் காரணமாகச் சத்தியமூர்த்தியின் தந்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. காலஞ்சென்ற பூபதியின் மகள் என்ற உரிமையோடு பாரதி கல்லூரி வேலை நிறுத்தத்தைப் பற்றி இனி எதுவும் விசாரிக்க வாய்ப்பில்லாதபடி அவளை மோகினியிடம் நாட்டியம் படித்துக் கொள்ளச் சொல்லித் தந்திரமாக ஒதுக்கிவிட்டிருந்தார் ஜமீந்தார். மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்த மறுதினம் காலையில் ஜமீந்தார் அவளையும் பாரதியையும் வற்புறுத்தி நாட்டிய டியூஷனைத் தொடங்கி வைத்துவிட்டார். மோகினிக்கும் நாட்டியம் கற்பிப்பதற்கேற்ற அமைதியான மனநிலை அப்போது இல்லை. பாரதிக்கும் நாட்டியம் கற்றுக் கொள்வதற்கான ஏற்ற அமைதியான மனநிலை அப்போது இல்லை. இரண்டு பேரும் ஜமீந்தாருடைய கூப்பாட்டுக்குப் பயந்து கற்பிப்பது போலவும் கற்றுக் கொள்வது போலவும் நடிக்க வேண்டியிருந்தது. அடவு, விளம்பரகாலம், மத்தியகாலம், துரிதகாலம், திஷ்ர ஜதி, சதுரஸ்ர ஜதி, கண்ட ஜதி, மிஸ்ர ஜதி, சங்கீர்ண ஜதி, என்று சில வார்த்தைகள் காதில் விழுகிற வரை உடன் உட்கார்ந்திருந்து மருண்டு விட்டு அப்புறம் ஜமீந்தார் அங்கிருந்து எழுந்து போய்விட்டார். சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டு விட்ட துன்பங்களாலும், தந்தையை இழந்த சோகம் மாறாத மனநிலையாலும் பாரதி தளர்ந்திருந்தாளே ஒழிய உண்மையில் மோகினியைப் போல் பரத நாட்டியக் கலையில் வசீகரமான தேர்ச்சியுள்ள ஒருத்தியிடம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவளுக்கே அந்தரங்கமாக உண்டு. ஜமீந்தார் எழுந்திருந்து போனப் பின்போ பாரதியின் ஆசை வேறு விதமாகத் திரும்பியது. "அக்கா நீங்க ஆடுங்க... நான் பார்க்கிறேன்" என்று சொல்லித் 'தாயே யசோதா' என்ற தோடி ராகக் கீர்த்தனத்துக்கும், 'நாதர் முடிமேல்' என்ற புன்னாக வராளிப் பாட்டிற்கும் மோகினியை ஆடச் சொல்லிப் பார்த்து மகிழ்ந்தாள் பாரதி. ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த வானவில்லைப் போலவும், பூமியில் உள்ள பலநிற மலர்களாலும் தொடுத்த பூமாலையைப் போலவும் மோகினி சுழன்று சுழன்று ஆடிய ஆட்டத்தைக் கண்டு பாரதி அபூர்வமான சொப்பனங்கள் நிறைந்த ஒரு புதிய உலகத்திற்கே போய்விட்டுத் திரும்பி வந்ததைப் போன்ற உணர்வை அடைந்திருந்தாள். மோகினி ஆடி முடித்த பின்பு அந்த இடத்தைச் சுற்றிலும் அழகின் நவரச நயங்களும் பாவனைகளும் வந்து காத்துக் கட்டுண்டு கிடப்பன போல் ஒரு சூழ்நிலை உருவாகியிருந்தது. வியப்பு மிகுதியினால் உணர்ச்சி வசப்பட்ட பாரதி, "அக்கா! இந்த விநாடியில் நீங்கள் தெய்வமாகக் காட்சியளிக்கிறீர்கள்! இப்படியே உங்களை நிற்கச் செய்து கைகூப்பித் தொழ வேண்டும் போல இருக்கிறது" என்றாள். இந்த வார்த்தையைக் கேட்ட மோகினியோ கண்கலங்க நின்று கொண்டிருந்தாள். "எனக்குள்ளே சுயமாக நிறைந்திருந்த கலையுணர்வு செத்துப் போய் பலநாட்களாகி விட்டதம்மா! இன்னும் நான் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றால் என்னுள் யாரோ ஒருவருடைய நல்ல ஞாபகம் மீதமிருந்து ஆட்டிக் கொண்டிருக்கிறதென்று தான் சொல்ல வேண்டும்" என்றாள் மோகினி. அவள் இருந்த நிலையைப் பார்த்து அவளிடம் மேலே எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் பாரதி. அப்படி அமைதியாக உட்கார்ந்திருந்தவளுடைய கவனத்தைப் பங்களாவின் முன்பக்கம் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த வேறொரு நிகழ்ச்சி கவர்ந்தது. 'போர்டிகோ'வில் காரைக் கொண்டு வந்து நிறுத்திக் கண்ணாயிரமும் ஜமீந்தாருமாக - மதுரையிலிருந்து மோகினியை அழைத்துக் கொண்டு முன் தினம் மாலையில் மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்த அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரை எங்கோ புறப்பட வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். "நான் அவனைப் போய்ப் பார்க்கிறதுக்குக் கார் எதுக்குங்க...? நடந்தே போய்ப் பார்த்துச் சொல்ல வேண்டியதைச் சொல்லிப்பிட்டு வந்திடறேன்" என்று அந்தக் கிழவர் காரில் ஏற மறுத்ததையும் - காரில் தான் போக வேண்டுமென்று வற்புறுத்திக் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் அந்தக் கிழவரைப் பிடித்து உள்ளே தள்ளாத குறையாகக் காரில் ஏற்றிவிட்டுத் தாங்களும் பக்கத்துக்கொருவராக ஏறி உட்கார்ந்து கொண்டு எங்கோ அவசரமாகப் புறப்பட்டுப் போவதையும் பாரதி அப்போது கவனித்தாள். முந்திய நாள் மாலையில் இதே கிழவரிடம் ஜமீந்தார் ஏதோ சொல்லிப் பயமுறுத்திக் கொண்டிருந்ததையும் இப்போது நினைத்தாள் அவள். அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவர் யாரிடம் எதைச் சொல்லி எப்படிக் கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்தைத் தடுக்க முடியும் என்பதுதான் அவளுக்குப் பெரிய மர்மமாக இருந்தது. எவ்வளவு சிந்தித்தாலும் எதையும் தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரைப் பற்றி மோகினிக்கு ஏதேனும் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் அந்த நிலையில் இதைப் பற்றி அவளிடம் கேட்கத் தயங்கிக் கொண்டே கேட்டாள் பாரதி. "அக்கா! இந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இவர் யார்? இத்தனை வயதானவரை ஜமீந்தார் மாமா ஏன் இப்படி வேலைக்காரர்களை ஏவுவது போல் ஏவிச் சிரமப்படுத்தறாங்க?" "எனக்கு எதுவுமே தெரியாதம்மா? மதுரையில் மஞ்சள்பட்டி பங்களாவில் கணக்குப் பிள்ளையாக இருக்கிறாற் போல் இருக்கு. என்னிடம் அவர் அதிகம் பேசறதேயில்லை. மதுரையில் காரில் சாமான்களையும் என்னையும் ஏற்றிவிட்டு முன் ஸீட்டில் டிரைவருக்குப் பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டவர் இங்கே வந்து சேருகிற வரையில் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட என்னோடு பேசவில்லை. யாரோ பாவம்! அப்பாவி! என்னைப் போலவே இந்தப் பாவிகளிடம் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறார்..." என்றாள் மோகினி. கண்ணாயிரத்தையும், ஜமீந்தாரையும் மோகினி உள்ளூற வெறுக்கிறாள் என்பதைப் பாரதி முன்பே குறிப்பாகப் புரிந்து கொண்டிருந்ததனால், இதைக் கேட்டு அவள் அதிகம் வியப்படையவில்லை. இந்தப் புதிரைப் புரிந்து கொள்ள அவளுக்கு ஒரே ஒரு நம்பிக்கை மீதமிருந்தது. டிரைவர் முத்தையாதான் காரை ஓட்டிக் கொண்டு போயிருக்கிறான். திரும்பி வந்ததும் அவனைத் தனியே கூப்பிட்டு விசாரித்தால் அந்தக் கணக்குப் பிள்ளைக் கிழவரை அவர்கள் எங்கே அழைத்துக் கொண்டு போனார்கள்? என்ன செய்வதற்காக அழைத்துக் கொண்டு போனார்கள்? என்ற விவரமெல்லாம் தெரிந்து விடும். 'கார் திரும்பி வருகிற வரை பொறுத்திருப்போம்' என்று பொறுமையோடு இருந்தாள் அவள். அப்படியிருந்த போது அதுவரை தானாக வலுவில் அதிகம் பேசாமல் இருந்த மோகினியே பாரதியிடம் மெல்லப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினாள். "இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள் அக்கா? நீங்க 'நியூஸ்பேப்பரே' பார்க்கிறதில்லையா? அப்பாவுக்கு அப்புறம் ஜமீந்தார் மாமா காலேஜ் நிர்வாகக் கமிட்டித் தலைவராக வந்திருக்காரு. அதோடு காலேஜிலே 'ஸ்டிரைக்'கும் வந்திருக்கு...! எதுவுமே உங்களுக்குத் தெரியாதா?" என்று பாரதி கூறிய செய்தியைக் கேட்டதும் மோகினிக்குத் 'திக்'கென்றது. அவளுடைய உள்ளுணர்வு பயந்து நடுங்கியது. 'என்னைக் காப்பாற்றிக் கைப்பற்றி ஆட்கொண்ட தெய்வம் விரிவுரையாளராக வேலை பார்க்கிற இந்தக் கல்லூரிக்கும் ஜமீந்தார் தலைவராக வந்து விட்டாரே! இனி என் அன்பருக்கு என்னென்ன தொல்லைகளெல்லாம் வருமோ?' என்றெண்ணி மனம் கலங்கினாள் அவள். அவளை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்கு அழைத்து வந்த கணக்குப் பிள்ளைக் கிழவரும் "டிரங்கால் வந்தது! ஜமீந்தார் ஐயா உங்களைக் காரிலே மல்லிகைப் பந்தலுக்கு அழைச்சுக்கிட்டு வரச் சொல்லியிருக்காரு. நாளைக் காலையிலே புறப்படணும்" என்று மட்டும் தான் கூறியிருந்தாரே ஒழியக் கல்லூரி நிர்வாகியாக ஜமீந்தார் வந்திருப்பதையோ, வேலை நிறுத்தம் பற்றியோ, மல்லிகைப் பந்தல் அரண்மனையிலேயே இனிமேல் குடியேற வேண்டுமென்பதைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்கவில்லை. "நிஜமாகவே உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா அக்கா?" என்று மறுபடியும் வியப்பு மேலிட்டு வினாவிய பாரதிக்கு மோகினி கூறிய பதிலில் ஆற்றாமையும் துயரமுமே நிறைந்திருந்தன. "எனக்கென்னம்மா தெரிகிறது? மதுரையில் ஜெயில் கைதி மாதிரி அடைந்து கிடந்தேன். இனிமேல் இங்கே அடைந்து கிடக்கணும்...!" "இந்த ஜமீந்தார் மாமா ரொம்ப மோசம்! உங்களுக்குக் கூட அவர் இதெல்லாம் தெரிவிக்கிறதில்லையா?... வரட்டும் சொல்கிறேன்..." என்று பதில் சொல்லத் தொடங்கிய பாரதி, 'உங்களுக்குக் கூட' என்ற வார்த்தையை ஏதோ ஒரு தொடர்பை நினைவூட்டுவது போன்ற அர்த்தத்துடன் பேசியதைக் கேட்டு மோகினி உள்ளூர மனம் கொதித்தாள். ஆனால் அதை வெளியே சொல்லிக் கொள்ள முடியாமல் தவித்தாள். மோகினி ஜமீந்தாரை வெறுத்தாலும் அவள் அவருடையவள்தான் என்று தவறாகப் புரிந்து கொண்டு பேசி வந்தாள் பாரதி. மோகினியோ அந்தப் பேச்சினால் மனம் புழுங்கிச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் உள்ளேயே வெந்து துடித்தாள். அப்பப்பா! ஒரு பெண் தன் அந்தரங்கத்திலிருக்கிற உண்மையை உலகத்துக்குப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்ளத்தான் எத்தனை ஆயிரம் தடைகள்! மோகினியின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் பாரதி மேலும் மேலும் பேசிக் கொண்டே இருந்தாள். அவள் பேச்சு மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றித் திரும்பியது. "இங்கே ஓர் இளம் விரிவுரையாளர் உதவி வார்டனாக இருக்கிறார். அவர் ரொம்ப நல்லவர். மாணவ மாணவிகளுக்கு எல்லாம் அவர் மேல் உயிர். அவரைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென்று பிரின்ஸிபலும் ஜமீந்தார் மாமாவும் சதி செய்யறாங்க... அதனாலேதான் 'ஸ்டிரைக்கே' வந்து சேர்ந்தது" என்று அந்த இளம் ஆசிரியரின் பெயர், பதவி ஒன்றையுமே தெரிவிக்காமல் பொதுவாகவே பேசிக் கொண்டு போனப் பாரதி அப்போது தன்னையறியாமலே தன் பேச்சினால் மோகினியின் ஆவலைத் துடிதுடிக்கச் செய்து கொண்டிருந்தாள். சத்தியமூர்த்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை அடக்க முடியாமல் தான் மோகினி கல்லூரி நிர்வாகத்தைப் பற்றிய பேச்சையே பாரதியிடம் வலுவில் தொடங்கியிருந்தாள். வெளிப்படையாகச் "சத்தியமூர்த்தி என்ற ஆசிரியர் உங்கள் கல்லூரியில் இருக்கிறாரா?" என்று நேரடியாய் விசாரிக்க முடியாமல் பயமும் கூச்சமும் தடுத்த காரணத்தால் அவள் அப்படிச் செய்யவில்லை. 'மேலும் சத்தியமூர்த்தியைப் பற்றி மட்டுமே விசாரித்தால் பாரதிக்கு அதன் காரணமாகத் தன் மேல் என்ன சந்தேகம் மூளுமோ' என்ற தயக்கமும் மோகினிக்கு இருந்தது. அவள் வெளிப்படையாக எதைக் குறிப்பிட்டும் விசாரிக்காத காரணத்தால் பாரதி கல்லூரியைப் பற்றியும், மாணவர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றியும் பொதுவாகவே கூறிக் கொண்டிருந்தாள். அவள் அப்படிப் பொதுவாகக் கூறிய போதிலும் வேலை நிறுத்தத்துக்குக் காரணமாக இருந்த இளம் ஆசிரியரைப் பற்றி அவள் தெரிவித்த குறிப்புகளைக் கூர்ந்து கேட்ட மோகினி, 'அந்த விரிவுரையாளர் சத்தியமூர்த்தியாக இருப்பாரோ?' என்ற அநுமானத்தாலேயே மனம் பதறினாள். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
வெற்றி சூத்திரங்கள் பன்னிரண்டு வகைப்பாடு : சுயமுன்னேற்றம் இருப்பு உள்ளது விலை: ரூ. 225.00தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |