49
தங்களுடைய சொந்தப் பலத்தை நியாயத்துக்கு எதிராகவும் கூடப் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்கிற ஆசை உள்ளவர்களால் வெற்றி கிடைக்கிற வரை சூதாட்டத்தைப் போன்ற அந்த ஆசையை இழக்கவே முடியாது.
குமரப்பன் அங்கு வந்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரோடு எவ்வளவோ வாதாடிப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தியை அரஸ்ட் செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினார். அவசியமானால் குமரப்பன் போலீஸ் ஸ்டேஷனுக்கு உடன் வந்து ஜாமீனில் சத்தியமூர்த்தியைத் திருப்பி அழைத்துக் கொண்டு போகலாமென்று அந்த இன்ஸ்பெக்டர் விரைவாகப் பேச்சை முடித்துக் கொண்டு புறப்படத் தயாராகி விட்டார். போலீஸ்காரர்கள் புடைசூழ இன்ஸ்பெக்டருக்குப் பின்னால் விலங்கு மாட்டப்படாத கைதியாய் - ஆனால் அதே சமயத்தில் உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் - பல்லாயிரம் விலங்குகள் விழுந்து அழுத்தி உறுத்துவதைப் போன்ற கூச்சத்தோடு சத்தியமூர்த்தி படியிறங்கி நடந்து சென்ற போது மல்லிகைப் பந்தலின் அழகிய வீதிகளில் பொழுது நன்றாக விடிந்திருந்தது. மனிதர்கள் நடமாடத் தொடங்கியிருந்தார்கள். செய்யாத குற்றத்திற்காக அநியாயப் பழி சுமத்தப் பெற்றுப் போலீஸ்காரர்களுக்குப் பின்னால் நடந்து போய்க் கொண்டிருந்தாலும் தன் மேல் பொய்யாகக் குற்றம் சுமத்திவிட்ட இந்த உலகத்தை நிமிர்ந்து பார்க்க மன விருப்பமில்லாமல் வெறுத்தாற் போல் தலைகுனிந்து சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. ஜாமீன் கொடுத்துத் திரும்ப அழைத்துக் கொண்டு வருவதற்காகப் பின்னால் சென்று கொண்டிருந்த குமரப்பனோடு ராயல் பேக்கரி ரொட்டிக்கடை நாயரும், அறையில் உடனிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் கூடச் சென்றார்கள். மல்லிகைப் பந்தலைப் போல் சிறிய நகரம் ஒன்றில் பலருக்கு அறிமுகமான கல்லூரி விரிவுரையாளர் ஒருவரைப் போலீஸ்காரர்கள் தெரு வழியே அழைத்துக் கொண்டு போனால் மக்கள் எவ்வாறு பரபரப்பாகக் கூடி நின்று கவனிப்பார்களோ அப்படிக் கவனிப்பதற்குச் சத்தியமூர்த்தியும் அன்று பாத்திரமானான். இவ்வாறு போலீஸ்காரர்களால் அவன் தெரு வழியே அழைத்துக் கொண்டு போகப்படும் காட்சியைக் கண்டவர்களில் சில மாணவர்களும் இருந்தார்கள்; மாணவிகளும் இருந்தார்கள். மல்லிகைப் பந்தலைப் போன்ற சிறிய ஊரில் கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தத்திலிருந்து காய்கறிக் கடை வாசலில் நடைபெறுகிற சிறிய பூசல் வரை எதுவுமே இரகசியமாக இருக்க முடியாது. நல்ல வேளையாக அந்த ஊரிலிருந்து தினசரிப் பத்திரிகைகள் எதுவும் பிரசுரித்து வெளியிடப்படுவதில்லை. தினப் பத்திரிகை இருந்திருந்தாலோ, 'விடுதிக்கு நெருப்பு வைக்கும்படி மாணவர்களைத் தூண்டியதாகத் தமிழ் விரிவுரையாளர் கைது' என்று சாயங்காலப் பதிப்பிலேயே கொட்டை எழுத்துக்களால் அச்சிட்டு முதற் பக்கத்தில் தலைப்பிலேயே வந்துவிடும். அத்தனை அவசரமாகச் செய்தி எங்கும் பரவிவிட்டது. சத்தியமூர்த்தியும் உடன் வந்தவர்களும் போலீஸ் ஸ்டேஷன் இருந்த சாலையை நெருங்கிவிட்ட சமயத்தில் அந்த நிலையில் அங்கே சந்திப்பதற்கு மனம் கூசக்கூடிய ஒருத்தியைச் சத்தியமூர்த்தி எதிர்பாராமல் அங்கே சந்தித்து விடும்படி நேர்ந்தது. மல்லிகைப் பந்தல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவதற்காகக் கீழ்நோக்கி இறங்குகிற மலைச் சாலையும், சற்றே மேடான இடத்தில் உள்ள பூபதியின் பங்களாவுக்காக மேல்நோக்கி ஏறுகிற மலைச்சாலையும் 'வி' என்ற ஆங்கில எழுத்தைச் சாய்த்து வைத்தாற் போல் அருகருகே இருந்ததனால் தந்தையை இழந்த துக்கத்தில் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்து விட்டு நீண்ட நாட்களுக்குப் பின்பு வீட்டிலிருந்து காரில் எங்கோ புறப்பட்ட பாரதி - கீழ்ப்புறத்துச் சாலையில் போலீஸ்காரர்கள் புடைசூழச் சத்தியமூர்த்தி செல்வதைப் பார்த்துவிட்டாள். அவனும் அவளுடைய காரைப் பார்த்தான். உடனே டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லிவிட்டுத் துடிக்கும் நெஞ்சுடன் பாரதி கீழே இறங்கி நின்று பார்த்தாள். "இவரு ஏதோ பையன்களைத் தூண்டிவிட்டு ராத்திரியோடு ராத்திரியா... ஹாஸ்டலுக்கு நெருப்பு வச்சிட்டாராம். அதனாலே ஜமீந்தார்... போலீசிலே சொல்லி ஆளை உள்ளார வைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறாரு" என்று அவள் கேட்காமலே தானாகச் சொல்லத் தொடங்கினான் உடன் இருந்த டிரைவர். இதைக் கேட்டுப் பாரதியின் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கீழே வளைவாகச் சரிந்து இறங்கும் செம்மண் சாலையில் நோக நோக நடந்து செல்லும் சத்தியமூர்த்தியின் பொன்னிறப் பாதங்கள் மேற்புறத்துச் சாலையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அவள் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தன. நெடு நாட்களுக்குப் பின்பு அந்தப் பளிங்கு நிறப் பாதங்கள் அவளுக்கு இன்று காட்சி கொடுத்தன. அவள் நின்ற இடத்திலிருந்து அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவனுடைய நடையில் அதே பழைய கம்பீரமும் பெருமிதமும் இருந்தன. ஆனால் பொய்யும் அநீதியும் மலிந்து விட்ட இந்த உலகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூசினாற் போல் அவனுடைய தலை மட்டும் சற்றே தாழ்ந்து கீழ்நோக்கிக் குனிந்திருந்தது. அவனுடைய கைகளும், கால்களும் படிகிற இடமெல்லாம் ரோஜாப்பூப் பூத்துக் கொட்டுவதாகத்தான் முன்பு ஒரு சமயம் அவள் கற்பனை செய்திருக்கிறாள். கல்லூரி விடுதிக்கு நெருப்பு வைக்க அவனுடைய கைகள் தூண்டியிருக்க முடியுமென்று இன்று அவளால் நினைப்பினுள் கற்பனை செய்யவும் முடியவில்லை. தந்தையின் மரணத்துக்குப் பின் பல நாட்களாக அவள் கல்லூரிக்கே போகவில்லை. அதனால் கல்லூரி நடைமுறைகள் எதுவும் அவளுக்கு விவரமாகத் தெரிய வழியில்லாமல் போய்விட்டது. "காரை நேரே பெண்கள் ஹாஸ்டலுக்கு விடு" என்று ஏறி உள்ளே உட்கார்ந்து கொண்டு டிரைவருக்குக் கட்டளையிட்டாள் பாரதி. கார் அங்கிருந்து நேரே பெண்கள் ஹாஸ்டலுக்கு விரைந்தது. கல்லூரிக் காம்பவுண்டைச் சுற்றிலும் சாலைகளிலும், விடுதி முகப்பிலும், முதல்வர் அறையருகேயும் ஏராளமாக 'ஸ்பெஷல் மலபார் ரிஸர்வ் போலீஸ்' காவல் காத்துக் கொண்டிருந்தது. கட்டிடங்களும், விளையாட்டு மைதானமும், புல்வெளிகளும் வகுப்பறைகளும் களையிழந்து தெரிந்தன. 'அப்பா உயிருடன் இருந்திருந்தால் புகழ்பெற்ற இந்தக் கல்லூரியின் வரலாற்றிலேயே இப்படி ஒரு களங்கம் நேர விட்டிருக்க மாட்டார்!' என்று மனத்தில் நினைத்த போது பாரதிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. நியாயத்துக்கு எதிராக தன்னுடைய வலிமையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை அப்பாவுக்கு ஒரு போதும் இருந்ததில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி நேர்ந்து கல்லூரியின் பெயர் கெடுவதை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது! ஜமீந்தார் மாமாவிடமோ எல்லா முரட்டுக் குணங்களும் உண்டு. அதிகம் படிப்பில்லாதவர்களால் தங்களை இன்னொருவன் மதித்துப் பயப்பட வேண்டும் என்கிற ஆசையை ஒரு போதும் இழக்கவே முடியாது. தங்களுடைய சொந்தப் பலத்தை நியாயத்துக்கு எதிராகக் கூடப் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உள்ளவர்களால் வெற்றி கிடைக்க முடியாது. ஜமீந்தார் மாமா சூதாட்டத்தில் ஆசை உள்ளவர். வாழ்க்கையையும் சூதாட்டத்தைப் போலவே ஆடப்பார்க்கிறார். வெற்றி கிடைக்கும் வரை சூதாட்டம் போன்ற அந்த ஆசையை இழக்கவே மாட்டார் அவர்' என்று எண்ணினாள் பாரதி. மாணவிகளின் விடுதியைச் சுற்றியும் கூடப் பலமான போலீஸ் காவல் இருந்தது. கலைக்கூடமாகிய அந்தக் கல்லூரியின் அழகிய கட்டிடங்கள் இப்படிப் போலீஸ்காரர்களின் காவலோடு போர்க்களமாகக் காட்சி தருவதைக் கண்டு அதை நிறுவியவரின் மகள் என்ற உணர்வோடு மனம் வருந்திக் கண்கலங்கினாள் அவள். "நான் கேள்விப்பட்டவரை மாணவ மாணவிகள் எல்லாரும் இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள் பாரதீ! சத்தியமூர்த்தியை 'டிஸ்மிஸ்' செய்து இந்தக் கல்லூரியிலிருந்து வெளியே அனுப்புவதற்குச் சரியான காரணம் வேண்டும் என்பதற்காகக் காலேஜ் பிரின்ஸ்பலும், நிர்வாகியும் ஹாஸ்டலிலிருந்த பழைய கூரை ஷெட்டுக்குத் தாங்களே நெருப்பு மூட்டிவிட்டு அவர் மேல் பழியைச் சுமத்தியிருப்பதாகத்தான் மாணவர்கள் எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். இந்த அநியாயம் தெய்வத்துக்கே அடுக்காது. சத்தியமூர்த்தி எப்போதுமே 'ஸ்ட்ரெயிட் ஃபார்வட்'. அவருக்குப் பொய் பேசத் தெரியாது. பொய்யாகப் புகழத் தெரியாது. பொய்யாக வாழத் தெரியாது. அவரைப் பழி வாங்கி வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு ஏதோ சூழ்ச்சி நடக்கிறது. நீ வீட்டிலேயே இருக்கிறாய்! ஜமீந்தாரும் பிரின்ஸிபலும் அடிக்கடி உன் வீட்டில்தானே சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள்? உனக்குத் தெரியாது? எனக்கென்னடி தெரியும்?" "வீட்டில் சந்தித்தால் எனக்கென்ன தெரிகிறது? நான் எங்கோ ஒரு மூலையில் அடைந்து கிடக்கிறேன். அவர்கள் இன்னொரு மூலையில் சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள். ஜமீந்தார் மாமாவும் கண்ணாயிரமும் வந்து தங்கிய பின் நான் வீட்டின் முன் பக்கத்துக்கு அதிகமாக வருவதே கிடையாது. இன்னும் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ என்னோடு இருந்துவிட்டு அப்புறம் ஜமீந்தார் இந்த ஊரிலேயே இருக்கிற அவரோட சொந்தப் பங்களாவுக்குப் போகப் போகிறார்" என்று பாரதி தன் தோழிக்கு மறுமொழிக் கூறிக் கொண்டிருந்த போது கார் டிரைவர் ஒரு கனைப்புக் கனைத்து விட்டு ஏதோ சொல்லத் தயாரானான். "பெரிய ஐயா... இந்த மலையிலே எஸ்டேட் வாங்கின நாளிலேயிருந்து நான் அவரிட்ட டிரைவராயிருக்கேன் அம்மா! நீ குழந்தையாக இருந்த வயசிலேயிருந்து உன்னை எடுத்து வளர்த்திருக்கேன். உங்கிட்ட மெய் பேசாமற் போனாத் திங்கற சோறு என் வவுத்துல ஒட்டாது. ஆனாலும் இப்போ நான் சொல்லப் போறதை நான் சொன்னேனின்னு நீ யாரிட்டேயும் சொல்லப்படாது. நான் ஏழை. வல்லமை உள்ளவர்களை விரோதிச்சுக்கிட்டு வாழ முடியாதவன். நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு வர்ற விஷயத்தைக் கேட்டதினாலே அதைப் பற்றி எனக்குத் தெரிந்த நெசத்தை நான் உங்ககிட்டச் சொல்லிடனுமுன்னு தோணுது. பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதிரா நெஜமும், நியாயமும் கூட நிற்கிற காலமில்லேம்மா இது..." "நீ என்ன சொல்லப் போகிறாய், முத்தையா?" என்று பாரதி வியப்போடு அந்த டிரைவரைக் கேட்டாள். "வேறொண்ணுமில்லையம்மா! நீங்க பேசிக்கிட்டிருக்கிற அதே விஷயம் தான்!" என்று மேலே பேச வேண்டியதைப் பேசத் தயங்கினாற் போல் சிறிது நேரம் மௌனம் சாதித்தான் அவன். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
நூல் பதிப்பித்தல் வகைப்பாடு : நூல் பதிப்பித்தல் இருப்பு உள்ளது விலை: ரூ. 2000.00தள்ளுபடி விலை: ரூ. 2000.00 அஞ்சல் செலவு: ரூ. 0.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |