51
படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றது தான். எந்தப் பிரச்சினையோடாவது உராயும் போதுதான் அதிலிருந்து சிந்தனைச்சுடர் புறப்படுகிறது. அகங்காரத்திலிருந்துதான் வெறுப்புப் பிறக்கிறது. இவன் நம்மை மதிக்க மாட்டேனென்கிறானே என்னும் காழ்ப்பினால் அந்த வெறுப்பு வளர்கிறது. ஜமீந்தார், கல்லூரி முதல்வர், கண்ணாயிரம், எல்லாரும் சத்தியமூர்த்தியின் மேல் அளவற்ற வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாரதியும் உணர்ந்திருந்தாள். அந்த வெறுப்புக்கும் அவர்களுடைய சொந்த அகங்காரமே காரணமென்பதும் அவளுக்குப் புரிந்திருந்தது. உலகத்தின் சந்தோஷ மயமான விநாடிகள் சந்தர்ப்பங்கள் எல்லாம் அன்று காலையில் சத்தியமூர்த்தியைப் போலீஸ் நிலையத்தின் அருகே சந்தித்த வேளையோடு முடிந்து போய்விட்டதாகத் தோன்றியது அவளுக்கு. அவள் வரையில் அப்படித் தோன்றியிருப்பது தான் உண்மையாக நின்றது. அந்தத் துயரத்தை அவள் இப்போது மனப்பூர்வமாக அங்கீகரித்தேயாக வேண்டும்.
தந்தையின் அகால மரணம் அவளைத் தனிமையோடும், துயரத்தோடும் நிறுத்திவிட்டது. அந்தப் பெரிய துயரத்தில் நடுவே வந்து மனத்தை மறைத்துக் கொண்டிருந்த சிறிய அகந்தை சென்றொழிந்து விட்டது. அவளுடைய மனத்தில் உண்மை அன்பின் பரிசுத்தமான தேவையே ஓர் ஏக்கமாக வந்து நிற்கிறது இப்போது. "அதெல்லாம் நிர்வாக விஷயம்; நீ ஒண்ணும் தலையிடாதே!" என்று ஜமீந்தார் சீறி விழிந்து அவளை மிரட்டியிருந்தாலும் அவளுடைய மனம் சத்தியமூர்த்தியின் வெற்றிக்காகத்தான் இன்னும் ஏங்கிக் கொண்டிருந்தது. சத்தியமூர்த்தியை யாரோ நண்பர்கள் ஜாமீன் கொடுத்துப் போலீஸ் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றார்கள் என்பதையும் அப்போது மாணவர்களின் பெருங்கூட்டம் அநுதாபத்தோடு அவரைச் சூழ்ந்தது என்பதையும் டிரைவர் முத்தையா தானாகவே வந்து தெரிவித்த போது, அவள் மனத்துக்கு ஆறுதலாயிருந்தது. வேலை நிறுத்தம் தீவிரம் அடையவும் கண்ணாயிரமும் முதல்வரும் பதறிச் சர்க்கிள் இன்ஸ்பெக்டரைத் தேடிக் கொண்டு போனதையும், ஜமீந்தாரும் நிர்வாகி என்ற முறையில் மாவட்டக் கலெக்டருக்கு டெலிபோனில் தகவல் தெரிவித்ததையும் அதே வீட்டில் உடனிருந்தே கவனித்துக் கொண்டிருந்தும் ஒன்றுமே அவற்றிற்கெதிராகச் செய்ய முடியாமல் தவித்தாள் பாரதி. கருத்தழகும் காட்சியழகும் மிக்க இந்தச் சத்தியமூர்த்தி என்னும் அபூர்வமான இலட்சிய ஆசிரியர் தங்கள் கல்லூரிக்கே வேலைக்கு வந்துவிட வேண்டுமென்று வருட ஆரம்பத்திலே இண்டர்வியூவின் போது தான் காண்பித்த ஆவல் எல்லாம் இப்போது நினைவு வந்து அவளை அழவைத்தன. 'சுக துக்கங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையின் முடிவற்ற பாதையில் இன்னும் ஓரடி முன்னால் எடுத்து வைக்க எப்போதும் நான் தயார்' என்பது போல் வலது பாதம் முன் இருக்க நிமிர்ந்து உட்கார்ந்து 'யாயும் ஞாயும் யாராகியரோ?' என்று குறுந்தொகைக் கவிதையை அவர் தன் தந்தையிடம் நயமாக விளக்கிச் சொல்லியதெல்லாம் இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தன. பழைய ஞாபகங்களாலும், தந்தையை இழந்த பரிதாப நினைவுகளாலும் தன்னுடைய ஆசையையெல்லாம் கொள்ளை கொண்ட இலட்சிய ஆசிரியருக்கு வந்துவிட்ட துன்பங்களை எண்ணி வருந்தும் வருத்தத்தாலும் நெடுநேரம் மௌனமாய் அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டு கண்ணீர் பெருக்கிய வண்ணம் இருந்தாள் அவள். மாணவர்கள் எந்த விஷயத்தையும் சுயமாகச் சிந்தித்து எதிர்கொள்ளத் தயாராயிருக்க வேண்டும் என்ற கருத்தை வற்புறுத்துவதற்காகச் சத்தியமூர்த்தி தன் வகுப்புக்களில் அடிக்கடி விளக்கமாகச் சொல்கிற உவமை ஒன்று உண்டு. "படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றதுதான். எந்தப் பிரச்சினையோடு உராய்ந்தாலும் அப்படி உராய்வதன் காரணமாகவே சிந்தனைச் சுடர் புறப்படுகிறது. 'அறிவுப் புரட்சி' என்பது புத்தக அறிவை எல்லா இடங்களிலும் பரப்பி விட முயல்வது மட்டுமன்று. ஒவ்வொருவருடைய கஷ்ட நஷ்டங்களையும் மற்றொருவர் அறிந்து உணர்ந்து மனம் நெகிழ்கிற சூழ்நிலையை உண்டாக்கி விட்டாலே அறிவில் புரட்சி விளைந்தாற் போலத்தான். இத்தகைய அறிவுப் புரட்சியால் சுயமரியாதைக்கும் மானாபிமானத்துக்கும் கூட இழுக்கு வர முடியாது. மானாபிமானம் என்றால் தன்மானத்தின் மேல் அபிமானம் இருந்து மட்டும் பயனில்லை. நம்முடைய எல்லா அபிமானங்களிலும் கூட மானமிருக்க வேண்டும். மானமில்லாத அபிமானங்கள் வாழ்க்கைக்கே களங்கம்" என்பார் அவர். 'அப்படிப்பட்டவருடைய மானத்துக்குப் பங்கம் உண்டாக்கி அவமானப்படுத்திவிட வேண்டுமென்றல்லவா இந்தக் கல்லூரி முதல்வரும் ஜமீந்தாரும் இப்போது இப்படிச் சூழ்ச்சி செய்கிறார்கள்?' என்று நினைத்த போது அந்த நினைப்பைத் தாங்கிக் கொள்வதற்கே பொறுமையின்றி வேதனைப்பட்டாள் அவள். சத்தியமூர்த்தியை அரெஸ்ட் செய்துகொண்டு போய் ஜாமீனில் விடுவித்த தினத்தன்று மறுதினம் காலையில் கல்லூரி வேலை நிறுத்த நிலைமை இன்னும் தீவிரமாகியது. சத்தியமூர்த்திக்கு உடந்தையாயிருந்ததாகவும், வேலை நிறுத்தம், தீ வைத்தல் ஆகிய காரியங்களில் ஈடுபட மற்ற மாணவர்களைத் தூண்டியதாகவும் பொய்க் குற்றம் சுமத்தி ஏற்கெனவே வேறு காரணங்களால் அவருக்குப் பிடிக்காத சில மாணவர்களைக் கல்லூரியிலிருந்து 'டிஸ்மிஸ்' செய்திருந்தார் முதல்வர். நோட்டீஸ் போர்டில் இதை அறிவிக்கும் முதல்வருடைய அறிக்கை தொங்கியது. இதனால் வேலை நிறுத்த நிலைமை தீவிரமாகவே கலெக்டருக்குத் தந்திகள் பறந்தன. ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக மல்லிகைப் பந்தலில் முகாம் செய்து நிலைமையை நேரில் கண்டறியுமாறு அரசாங்கம் மாவட்டக் கலெக்டரைக் கேட்டுக் கொண்டிருந்தது. பெற்றோர்கள் படிப்பு வீணாகிறதே என்று கவலைப்பட்டார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்குக் கல்லூரி முதல்வரும், நிர்வாகியும் தங்களது முரட்டுப் பிடிவாதத்தால் மாணவர்களின் படிப்பைப் பாழாக்குகிறார்கள் என்ற அபிப்பிராயம் வலுத்திருந்தது. சத்தியமூர்த்தி ஹாஸ்டலுக்கு நெருப்பு வைக்கும்படி மாணவர்களைத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்திருப்பதாகப் பத்திரிகைகளில் அன்று காலை செய்தி வந்துவிட்டாலும் மாணவர்கள் அந்தச் செய்தி பொய்யாகுமாறு அவ்வளவு வலுவாக ஊரில் உண்மையைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். கல்லூரி முதல்வர் தனியாக நடந்து வெளியே வர அஞ்சுகிற அளவுக்கு அவரே தம்மைச் சுற்றிப் பயங்கரமானதொரு சூழலைப் படைத்துக் கொண்டு விட்டார். ஆனால் மாணவர்கள் எல்லோரும் கட்டுப்பாடாகவும், ஒழுங்காகவும் நடந்து கொண்டார்கள். தங்கள் மேலும் தங்களுடைய மதிப்புக்குரிய விரிவுரையாளர் மீதும் சுமத்தப்பட்டிருந்த பொய்ப் பழிகளை மெய்யோ எனச் சந்தேகிக்கும்படியான எந்தச் சிறிய தவறும் தங்களால் நேர்ந்து விடாதபடி ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு மிக அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். மானாபிமானம் நிறைந்த தங்கள் விரிவுரையாளருக்குத் தங்களுடைய ஆத்திரத்தால் மெய்யாகவே எந்தப் பழியும் வந்துவிடக் கூடாதென்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாயிருந்தார்கள். முதல் நாள் ஜமீந்தார் கோபித்துக் கொண்டு சீறி விழுந்த பின்பு கல்லூரி வேலை நிறுத்தத்தைப் பற்றி அவரிடம் பேச்சை எடுப்பதையே விட்டுவிட்டு உள்ளூர மனம் புழுங்கிக் கொண்டிருந்த பாரதியிடம் மறுநாள் நடுப்பகலில் ஜமீந்தார் தாமாகவே வந்து வலுவில் பேச நேர்ந்தது. "காலையில் மதுரையிலிருந்து மோகினியும் கணக்குப் பிள்ளையும் காரில் புறப்பட்டுவிட்டதாக ஃபோன் வந்தது. அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ளார இங்கே வந்திடுவாங்க - வர்றவங்களை நீதான் கொஞ்சம் கவனிச்சுக்கணும். நானும் கண்ணாயிரமும் பிரின்ஸிபலை அழைச்சுக்கிட்டு காலேஜ் பக்கம் போயிட்டு வர்ரோம்! மனுசன் பெரிய பயந்தாங் கொள்ளியாயில்ல இருக்காரு... பையன்களோட கூச்சலுக்கே நடுங்குகிற பிரின்ஸிபலாப் பார்த்து உங்கப்பா வேலைக்கு வச்சிட்டுப் போயிட்டாரேம்மா..." என்று மிகவும் தன்மையாகப் பேசுகிறாற் போன்ற பாவனையில் சொல்லிவிட்டு அவர் கண்ணாயிரத்தோடு வெளியே புறப்பட இருந்தார். ஆனால் அவர்கள் புறப்படுவதற்குள்ளேயே போர்டிகோவில் கார் வந்து நின்றுவிட்டது. ஜமீந்தாரின் மேலும் கண்ணாயிரத்தின் மேலும் தனக்கு அப்போது இருந்த கோபத்தினால் மோகினியின் மேல் அசிரத்தை காண்பிக்கவில்லை பாரதி. மோகினியின் இணையற்ற நாட்டியக் கலைத் திறமையில் அவளுக்குப் பக்தியும் மரியாதையும் எப்போதுமே உண்டு. கார் வந்து நின்ற ஓசையைக் கேட்டுக் கண்ணாயிரமும் ஜமீந்தாரும் முன் பக்கத்திற்கு விரைந்தார்கள். தயங்கித் தயங்கி அவர்களைப் பின் தொடர்ந்து பங்களாவின் முகப்புக்கு வந்தாள் பாரதி. வந்து நின்ற காரிலிருந்து கணக்குப் பிள்ளை முன்னால் இறங்கிப் பின்புறத்துக் கதவைத் திறந்து விட்டதும் கீழே இறங்கிய மோகினியைப் பார்த்துப் பாரதி அப்படியே திகைத்துப் போனாள். 'வாடிக் கருத்து இளைத்து இவள் ஏன் இப்படிச் சோக ஓவியமாக இறங்கி வருகிறாள்?' என்று பாரதியின் மனம் அவளைப் பார்த்துக் கலங்கியது. காரின் அருகே வந்து நிற்கும் ஜமீந்தாரையும், கண்ணாயிரத்தையும் கவனிக்காதது போலவே அவள் நேரே தன்னை நோக்கி வருவதைப் பார்த்ததும் பாரதிக்கு இன்னும் ஆச்சரியத்தை அளித்தது. ஜமீந்தாரையும், கண்ணாயிரத்தையும், அவர்கள் அங்கு வந்து நிற்பதைத் தெரிந்து கொண்டும், ஓரளவு அலட்சியமாகவும், வெறுப்புடனும், தான் பார்க்க விரும்பாதது போல் அவள் புறக்கணித்து விட விரும்புவதாகத் தோன்றியது பாரதிக்கு. 'ஏதோ நானும் இங்கு வந்து சேர்ந்து விட்டேன்' என்று வேண்டா வெறுப்பாகச் சோர்ந்த பாவனையில் மோகினி காரிலிருந்து இறங்கி நடைப் பிணமாக நகர்ந்து வருவது போலவும், முன் நோக்கிக் கால் எடுத்து வைக்கிற ஒவ்வோர் அடியையும் யோசித்துக் கொண்டே எடுத்து வைப்பது போலவும் தோன்றியது பாரதிக்கு. மோகினியின் அழகையும் எடுப்பான தோற்றத்தையும் பற்றிப் பாரதிக்கு அவளைச் சந்தித்த முதல் நாளிலிருந்து அந்தரங்கமாக ஒரு பொறாமை கூட உண்டு. எப்போதோ சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள்பட்டி ஜமீந்தாரோடும், கண்ணாயிரத்தோடும் அப்பா மதுரையில் தங்கியிருந்த போது மோகினியின் இணையற்ற நடனத்தையும் அவளையும் பாரதி அறிமுகம் செய்து கொண்டிருந்தாள். அதற்கு பின் இரண்டோர் ஆண்டுகளில் மஞ்சள்பட்டி அரண்மனை நவராத்திரி விழாவில் அவளுடைய நடனத்தைக் கண்டு வியந்திருக்கிறாள். அவளிடமோ, அவள் தாயிடமோ தானும் பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆசை கூடப் பாரதிக்கு இருந்ததுண்டு. "உடம்பிற்கு இதமா நல்லா வெந்நீர் வச்சுத் தரச்சொல்லிக் குளி. சாப்பிடு. 'ரெஸ்ட்' எடுத்துக்க" என்று மோகினியிடம் சொல்லியபின் பாரதியின் பக்கம் திரும்பி, "நீ பார்த்துக் கவனிச்சுக்கம்மா! சும்மா நிற்கிறியே..." என்று துரிதப்படுத்தி விட்டுப் போய்ச் சேர்ந்தார் ஜமீந்தார். மோகினியோ ஜமீந்தார் போன பின்பும் நீண்ட நேரம் ஒன்றுமே பேசாமல் தலைகுனிந்து மௌனமாகக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள். பாரதியோடும் கலகலப்பாகப் பேசவோ பழகவோ முயலவில்லை அவள். ஆனாலும் பாரதி அவளை அப்படியே விட்டுவிடவில்லை. "ஏன் அக்கா அழறீங்க...?" இதைக் கேட்டு மோகினியின் அழுகை இன்னும் பெரிதாகியது. அழகின் அரசி போலவும் கலையின் அதிதேவதை போலவும் விளங்கும் அந்த இலட்சுமீகரமான பெண் குமுறிக் குமுறி அழுவதைப் பார்த்துப் பாரதியால் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை. "நீங்கள் அழக்கூடாது அக்கா..." என்று அவள் ஆறுதல் கூறத்தொடங்கவும், "அழாமல் என்ன செய்யறதம்மா! நான் பிறந்த பிறப்பை நினைச்சு அழறேன்" என்று பதில் வந்தது மோகினியிடமிருந்து. "மதுரையை விட்டு இங்கே வந்தது பிடிக்கவில்லையா உங்களுக்கு?" என்று சின்னக்குழந்தை ஆறுதல் கூறுவது போல் பேதமையாக அவளிடம் ஏதோ கேட்டாள் பாரதி. "பிடிக்காதது ஒண்ணுமட்டுமில்லை. எத்தனையோ பிடிக்கலை... வாழ்க்கையே பிடிக்கலை... வாழ்க்கையே பிடிக்காமல் போனப்புறம் பிடிக்காததுன்னு தனியா எதைச் சொல்ல முடியும்?" என்று மோகினி அழுது கொண்டே பதில் கூறிய போது பாரதிக்கு அந்த முடிவிலாச் சோகம் பொறுக்காமல் மனம் நெகிழ்ந்து விட்டது. ஓர் அநாதைக் குழந்தை தற்காலிகமாகத்தான் ஓர் அநாதை என்பதை மறந்து விட்டு இன்னோர் அநாதைக் குழந்தைக்குத் தைரியம் சொல்லி ஆறுதலாக உபசரிப்பது போல், பாரதி மோகினியை உள்ளே அழைத்துக் கொண்டு போய்ச் சமாதானப்படுத்தி முதலில் காப்பி குடிக்க வைத்தாள். அப்புறம் வெந்நீரில் குளிக்க வைத்துக் கட்டிக் கொள்ள மாற்றுப் புடவையும் கொடுத்தாள். "அக்கா! உங்களுக்குத் தலைகொள்ளாமல் கருகருவென்று நிறையக் கூந்தல்! பூ வைத்துக் கொள்ளுங்கள்..." என்று ஒரு பந்து மல்லிகைப் பூவோடு வந்து பாரதி பிடிவாதம் பிடித்த போது மோகினி அந்தப் பூவை வைத்துக் கொள்ள மறுத்துப் பிடிவாதம் பிடித்ததுடன் எதை நினைத்தோ மறுபடியும் அழத் தொடங்கிவிட்டாள். மோகினியிடம் பாரதி பூவும் கையுமாக மன்றாடிக் கொண்டிருந்த அதே வேளையில் முன்பக்கத்து அறையில் ஜமீந்தார் கோபமாக இரைந்து பேசிக் கொண்டிருந்த பேச்சு கல்லூரி வேலை நிறுத்தத்தோடு தொடர்புடைய ஏதோ ஒன்றாக இருப்பது போல தோன்றவே பாரதி அதைச் செவிசாய்த்துக் கவனிக்கலானாள். "ஓய், கணக்குப் பிள்ளை! ஊராருக்கு அடங்காத பிள்ளையை நீரே தான் அடக்கணும். எனக்கு மாலை போடறதுக்கு மனசு வெறுத்துப் பாதிக் கூட்டத்திலே வெளியே எந்திரிச்சுப் போனான் ஐயா அவன்! மனசிலே எத்தினி திமிரு இருந்தா அப்படிச் செய்திருக்கணும்? உம்ம பையன் தான் இப்ப எனக்கு ஒண்ணா நம்பர் விரோதி ஐயா! நீர் அவனை வழிக்குக் கொண்டு வரலியோ எல்லாத்தையும் கூண்டோட தொலைச்சுத் தலை முழுக வேண்டியதுதான்! ஜாக்கிரதை" என்று ஜமீந்தார் இரைந்ததற்குப் பதிலாகத் தணிந்த குரலில் மதுரையிலிருந்து வந்த கணக்குப் பிள்ளை ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நடுநடுவே கண்ணாயிரத்தின் குரலும் ஒலித்தது. மதுரையிலிருந்து மோகினியை அழைத்துக் கொண்டு வந்திருக்கும் அந்தக் கணக்குப் பிள்ளையிடம் யாரைப் பற்றி எதற்காக ஜமீந்தார் இப்படி இரைந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும் பாரதிக்குப் புரியவில்லை. மோகினியை மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்குக் காரில் அழைத்துக் கொண்டு வரச்சொல்லி அந்தப் பேச்சியம்மன் படித்துறைக் கிழவனுக்கு டெலிபோன் செய்த போது ஜமீந்தாருக்கும் கண்ணாயிரத்துக்கும் முன்பு தோன்றாத புது யோசனை ஒன்று இப்போது தோன்றியது. சத்தியமூர்த்தியின் தகப்பனான இந்தக் கிழவனைக் கொண்டே அவனை அடக்கி ஒடுக்க வேண்டுமென்ற யோசனையைக் கண்ணாயிரம் ஜமீந்தாருக்குத் திருவாய் மலர்ந்தருளினார். "அத்தனை திமிராயிருக்கிறவன் எங்கே ஐயா தகப்பன் பேச்சுக்கு அடங்கப் போகிறான்?" என்று ஜமீந்தார் தயங்கினார். "முயன்று பார்ப்போம். தகப்பனும் மகனுமாகச் சேர்ந்து கையெழுத்துப் போட்டு வீடு கட்டறதுக்கு என்னிடம் நெறையக் கடன் வாங்கியிருக்காங்க... அதையும் நினைவுபடுத்திப் பயமுறுத்திப் பார்க்கலாம். கல்லை எறிஞ்சா அப்புறம் மாங்காயோ கல்லோ எது வேணாத் திரும்பி விழுந்திட்டுப் போவுது...!" என்றார் கண்ணாயிரம். எனவே இரண்டு பேருமாகச் சத்தியமூர்த்தியின் தந்தையை நயமாகவும், பயமாகவும் மிரட்டிப் பார்த்தார்கள். பலவிதங்களில் அவர்களுக்குக் கட்டுப்பட்ட அந்த ஏழை மனிதர் தம் மகனுடைய பிடிவாத குணத்தை நன்றாக உணர்ந்திருந்தும், பணம் படைத்த அவர்களுடைய வற்புறுத்தலை மீற முடியாமல், அன்றே அவனைச் சந்தித்து ஜமீந்தாரிடமும் பிரின்ஸிபலிடமும் மன்னிப்புக் கேட்கும்படி புத்தி சொல்லிப் பார்ப்பதாக ஒப்புக் கொண்டார். துணிந்து சத்தியமூர்த்தியைத் தீர்த்துக் கட்டிச் சீட்டுக் கிழித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவது என்ற முயற்சியில் தானும் பிரின்ஸிபலும் இறங்கியிருந்தாலும் மாணவர்களுடைய ஆதரவு சிறிது கூட குறையாமல் அவன் பக்கம் இருப்பதைப் பார்த்து இப்போது ஜமீந்தாருக்குச் சிறிதளவு தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. அதனால் சத்தியமூர்த்தியே தன்னிடமும் பிரின்ஸிபலிடமும் வந்து மன்னிப்புக் கேட்டு விட்டுப் பையன்களையும் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கும்படி செய்கிறாற் போல் அவனுடைய தகப்பனார் மூலமே ஒரு நிர்ப்பந்தத்தை அவனுக்கு உண்டாக்கி விட முடியுமானால் நல்லதென்று தான் அவருக்குத் தோன்றியது. அப்படி நடந்தால் மாணவர்களுக்கும் அவன் மேல் உள்ள பற்றுதல் குறைந்து போகும். கோர்ட், கேஸ் என்று வளர்ந்து ஹாஸ்டலுக்கு நெருப்பு வைத்ததற்குச் சத்தியமூர்த்தியின் தூண்டுதலோ, மாணவர்களின் செயலோ காரணமில்லை என்று நிரூபணமாகிவிட்டால் என்ன செய்வதென்ற பயமும் ஜமீந்தாருடைய மனத்தில் இப்போது மூண்டிருந்தது. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
லீ குவான் யூ வகைப்பாடு : வெற்றிக் கதைகள் இருப்பு உள்ளது விலை: ரூ. 233.00தள்ளுபடி விலை: ரூ. 210.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |