17
மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும் எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன் கூட்டியே தெரியாமலிருப்பதுதான்.
மல்லிகைப் பந்தல் நகரத்தின் உயிர்நாடியான பகுதி 'லேக் சர்க்கிள்' எனப்படும் இந்த 'டென் மைல்ஸ் ரவுண்டு' தான். ஒரே வரிசையான அளவொத்த மரம் செடி கொடிகளும் ஏரிக்குக் கரையிட்டாற் போல் பத்துமைல் சுற்றளவும் விளிம்பில் வகுக்கப்பட்டிருந்த சிறு பூங்காவும் எவர் கண்டாலும் மயங்கி விடும்படியான பெருமையை அந்த ஊருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தன. நான்கு பக்கமும் ஆகாயத்தின் நீல விளிம்போடு போய்க் கலக்கும் மலைகளின் நீலச் சிகரங்களுக்குக் கீழே சுற்றிலும் முத்துப் பதித்துக் குழிந்த கண்ணாடியை நடுவே வைத்தாற் போல் அந்த ஏரியும் வீடுகளும் மேலே மலையிலிருந்து பார்க்கிறவர்களுக்குத் தெரியும். பூபதி அவர்களின் கலைக் கல்லூரியும், மாணவர்களின் விடுதிகளும் இந்த மேட்டிலிருந்து கீழே லேக் சர்க்கிளில் போய்க் கலக்கும் சிறிய சாலை ஒன்றில் அப்போது நடந்து சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரியிலிருந்து புறப்படுமுன் தனக்கும், முதல்வருக்கும் இடையே நிகழ்ந்திருந்த உரையாடலை மீண்டும் நினைத்த போது கல்லூரி எல்லைக்குள் தான் மேலும் ஒரு வினாடி கூடத் தங்கியிருப்பது புத்திசாலித்தனமில்லை என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தான் அவன். "சாயங்காலத்துக்குள் நான் வேறு ரூம் பார்த்துக் கொண்டு போய் விடுகிறேன் சார்!" என்று அவன் கல்லூரி முதல்வரிடம் கூறியபோது, "நோ... நோ... நீங்கள் நம் கல்லூரி எல்லைக்குள் தங்கியிருப்பது எங்களுக்கு வசதிக் குறைவாக இருக்கும் என்பதாக நான் நினைக்கிறேனோ என்று என்னைத் தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இங்கே தங்கியிருக்கலாம். என் தலையில் கட்டிக் கொண்டு போவது ஒன்றுமில்லை. உங்கள் சௌகரியத்துக்காகத்தான் சொல்ல வந்தேன்..." என்று மேவாய்க்குக் கீழே நரையும் கருமையுமாகக் கலந்து வளரத் தொடங்கியிருந்த புல்கானின் தாடியைத் தடவிக் கொண்டே உபசாரமாக அவனுக்குப் பதில் சொல்லியிருந்தார் அவர். "ஆமாம்! ஆமாம்! நீங்கள் என் சௌகரியத்துக்காகத் தான் சொல்லுவீர்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன?" என்று அவருடைய பேச்சின் போக்கிலேயே அப்போது அவரை மடக்கிப் பேசி அனுப்பியிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி முதல்வரும் ஹெட்கிளார்க்கும் சரியான ஆஷாட பூதிகள் என்பது காலையில் அவர்களைச் சந்தித்த முதற் பார்வையிலேயே அவனுக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது. அதைப் புரிந்து கொண்ட மறுகணமே அவன் அங்கிருந்து உலாவப் புறப்படுவது போல் வெளியேறித் தங்கி வசிக்க அறை தேடுவதற்காக 'லேக் அவென்யூ'வுக்குப் புறப்பட்டு விட்டான். அவசரத்துக்குத் தனி அறையாகக் கிடைப்பதைப் பார்த்துத் தேடித் தங்கிக் கொண்டாலும் வாடகையைப் பகிர்ந்து கொள்வதற்குப் பின்னால் இரண்டொருவரைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினான் அவன். காலை நேரமாகையால் வெய்யில் வருவதற்கு முன்பாகப் படகில் ஏறிச் சுற்றுகிறவர்களும், சுற்றுவதற்குப் படகு காலியாவதை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுமாக ஏரியும் ஏரிக்கரையும் பரபரப்பாக இருந்தது. கரை ஓரமாக நீலப் பட்டுக்குப் பல வண்ணச் சரிகைக் கரையிட்டதைப் போல் ஊதாவும், சிவப்பும், மஞ்சளும், வெள்ளையுமாகப் பூக்கள் கொள்ளை கொள்ளையாகப் பூத்திருந்தன. வேறு வேறு நிறங்களில் ஸ்வெட்டரும், மப்ளரும், கம்பளிப் போர்வையுமாக அணிந்து கொண்டு சாலையில் மக்கள் நடமாடத் தொடங்கியிருந்தனர். "மாடியில் றூம்கள் வாறகைக்கு வீழப்படும்' என்று கண்ணில் தெரிந்த முதல் விளம்பரப் பலகையே தப்பும் தவறுமாகத் தெரிந்தது. 'றாயல் பேக்கரி' என்று பெயர்ப் பலகை மாட்டிய ஒரு ரொட்டிக் கிடங்கின் கதவுகளில் தான் அந்த விளம்பரம் தொங்கிக் கொண்டிருந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபடியும் நன்றாகப் பார்த்தான் சத்தியமூர்த்தி. 'றூம்கள் வாறகைக்கு வீழப்படும்' என்று தான் இருந்தது. ரொட்டிக் கடைக்காரரோ இல்லையோ, மாவை அழுத்திப் பிசைகிற ஞாபகத்தில் போர்டையும் அழுத்தமாக எழுதியிருக்கிறார். ரூம்கள் அழுத்தமாக இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்காகவோ என்னவோ "றூம்கள்' என்று போட்டிருக்கிறார் என வேடிக்கையாக எண்ணிக் கொண்டே விசாரிப்பதற்குப் படியேறினான் சத்தியமூர்த்தி. பாதி மலையாளமும், பாதி தமிழுமாக வந்து பதில் சொல்லியவர் தெளிவில்லாமல் ஏதோ பேசினார். கால் மணி நேரம் தொண்டைத் தண்ணீர் வற்றிய பின்பே அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மாடியில் போய் அறையைப் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்த மாடியில் மொத்தம் மூன்று அறைகள் இருந்தன. குளியலறை முதலிய வசதிகள் எல்லாம் மூன்று அறைகளுக்கும் பொதுவாகவே இருந்தன. மாடியின் பின்புறமாகக் கீழே ஏராளமான சண்பக மரங்கள் காடு மண்டிக் கிடந்ததனால் அவற்றின் கிளைகள் பின் பக்கத்து வராந்தாவில் குளியலறைக்கு அருகே வந்து கொஞ்சிக் கொண்டிருந்தன. சண்பக மணமும் ரொட்டிக்கடை நறுமணமும் சேர்ந்து மாடியில் வந்து தவிர்க்க முடியாமல் பரவிக் கொண்டிருந்தன. மாடியின் பின் பக்கத்து வராந்தாவிலிருந்து பார்த்தால் எங்கிருந்தோ வேகமாக இறங்கி வந்து கொண்டிருப்பது போல் மிக அருகே நீல மலைகள் தெரிந்தன. ஆளைப் பிடித்துக் கீழே தள்ளி விடுகிறார் போல் குளிர்ந்த காற்று பாய்ந்து பாய்ந்து வீசியது. அறைக்குள் போவதற்கு முன் அவசரமாக ஒரு விநாடி திரும்பிப் பார்த்தாலும் வராந்தாவுக்கு அப்பால் ஏதோ அழகாக நிறைந்து கிடப்பதை மீண்டும் ஒருமுறை நோக்கவோ புரிந்து கொள்ளவோ முடியும். அவசரமாயினும் ஞாபகத்திலும் பார்வையிலும் தாமாகவே வந்து பதிந்து கொள்கிற நுணுக்கமான அழகுகள் அவை. வாடகை முதலிய விவரங்களைக் கூறுவதற்கு முன், 'சத்தியமூர்த்தி எதற்காக எந்த வேலையை ஏற்றுக் கொண்டு அந்த ஊருக்கு வந்திருக்கிறான்?' என்பது போன்ற சில விவரங்களை அறிந்து கொள்வதற்காக அவனிடம் விசாரித்தார் அந்த வீட்டின் சொந்தக்காரர். பூபதி கலைக் கல்லூரியின் பெயரைச் சொல்லிய மறுகணமே அந்த மனிதர் விசாரிப்பதை நிறுத்திக் கொண்டு அடங்கி விட்டதைக் கண்டு சத்தியமூர்த்தியே வியப்படைந்தான். தொழிலதிபர் பூபதியும், அவருடைய கல்லூரியும் அந்த ஊரில் எவ்வளவு கௌரவத்துக்கும், பெருமைக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவன் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒருவாறு விளங்கிக் கொள்ள முடிந்தது. "அறை ஒன்றுக்கு மாதம் நாற்பத்தெட்டு ரூபாய் வாடகை. ஒருவரே அந்த வாடகையைக் கொடுத்துக் கொண்டு தனி ஆளாக இருப்பதானாலும் ஆட்சேபனையில்லை. வாடகையைப் பகிர்ந்து கொள்ள இன்னும் யாராவது வைத்துக் கொள்ள உத்தேசம் இருந்தால் அறை எவர் பெயருக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அவரைத் தவிர இன்னும் இரண்டு பேரை மட்டும் உடன் தங்கச் செய்து கொள்ளலாம். அப்படி உடன் தங்குகிற இருவரிடமும் தலைக்குப் பதினாறு பதினாறு ரூபாய்க்கு மேல் ஒரு சல்லிக் காசுகூட வசூலிக்கக் கூடாது. அதை வசூலிக்கும் பொறுப்பும் முதலில் அறை எடுத்துக் கொள்கிறவரைச் சேர்ந்ததுதான். வீட்டுக்காரர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு முடியாது. முதலில் அறை எடுத்துக் கொள்கிறவர் மாதம் பிறந்ததும் வீட்டுக்காரரிடம் ரூபாய் நாற்பத்தெட்டை எண்ணி வைத்து விட வேண்டும். குளியலறையில் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும். இரவு பத்து மணிக்கு மேல் மின்சார விளக்கை உபயோகிப்பது நல்லதில்லை. அறைச்சுவரில் அநாவசியமாக ஆணிகளை அடித்துப் பாழாக்கக் கூடாது. வீட்டுக்காரர், வசிப்பவர் இருவரில் யார் தரப்பிலிருந்து காலி செய்ய விரும்பினாலும் மூன்று மாதம் முன் தகவல் கொடுத்துவிட்டுக் காலி செய்ய வேண்டும். முதலில் அறை எடுத்துக் கொள்கிறவரோடு உடன் தங்குகிற மற்ற இருவரையும் வெளியேற்றும் உரிமை அவருக்கே உண்டு. இந்த இருவரைப் பற்றி எந்தக் கவலையும் வீட்டுக்காரர் பட முடியாது" என்று 'றூம்கள் வாறகைக்கு வீழப்படுவதற்கு' உரிய நிபந்தனைகள் சத்தியமூர்த்தியிடம் வரிசைக் கிரமமாக ஒப்புவிக்கப்பட்டன. அந்தச் சிறிய அறையை வாடகைக்குப் பேசி முடிப்பதை ஏதோ பெரிய 'நேச தேச உடன்படிக்கை' செய்வது போலச் செய்ய வேண்டியிருந்தது. நிபந்தனைகளைக் கையெழுத்துப் போடுவதற்கு இடம் மட்டும் மீதம் விட்டு முன்னேற்பாடாக ஆங்கிலத்தில் 'டைப்' செய்து வைத்திருந்தார் வீட்டுக்காரர். 'றூம்கள் வாறகைக்கு வீழப்படும்' நிபந்தனைகளின் கீழே கையெழுத்துப் போட்டு வீட்டுக்காரரிடம் முன் பணம் கொடுத்தான் சத்தியமூர்த்தி. "சார், நீங்க பாட்டுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டுப் போயிட்டீங்களே? அந்தம்மா காப்பி கொடுத்தனுப்பியிருக்காங்க. நீங்க குளிச்சுத் தயாரானது தெரிஞ்சப்புறம் என்னைச் சைக்கிளில் புறப்பட்டு வரச் சொல்லியிருக்காங்க. நான் போய் உங்களுக்கு டிபன் கொண்டு வரணும்" என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்த 'வாட்ச்மேனிடம்' பெட்டியைக் கொடுத்து வாசலில் நிற்கும் ரிக்ஷாவில் கொண்டு போய் வைக்கச் சொன்னான் சத்தியமூர்த்தி. "ஏன் சார் வேறே எங்கேயாவது போய்த் தங்கப் போறீங்களா?" என்று கேட்டுவிட்டுக் கேள்வியோடும் பெட்டியோடும் தயங்கி நின்றான் வாட்ச்மேன். "ஆமாம்! லேக் அவென்யூவில் ராயல் பேக்கரி ரொட்டிக் கிடங்கு மாடியில் நல்ல அறையாகக் கிடைத்துவிட்டது. பேசி முன் பணமும் கொடுத்துவிட்டேன். 'அந்தம்மா வந்தாலும் இதைத் தெரிவித்துவிடு' என்று சொல்லிவிட்டுப் பெட்டியை விரைவாக ரிக்ஷாவில் கொண்டு போய் வைக்குமாறு அவனைத் துரிதப்படுத்தினான் சத்தியமூர்த்தி. ஒன்பது மணிக்குள் அவன் மறுபடி லேக் அவென்யூவுக்கு வந்து அந்த ரொட்டிக் கிடங்கின் மாடியறையில் அவசர அவசரமாகக் குடியேறிவிட்டான். அங்கே வந்து தங்கிவிட்டதை உறுதிப்படுத்தும் நிச்சயமான சாட்சியைப் போல் மாடி வராந்தாவில் நிறைந்திருந்த சண்பகப்பூ வாசனை கமகமத்துக் கொண்டிருந்தது. எதிர்ப்புறம் நீலப்பெரும் பரப்பாய் ஏரி தன் அழகிய சிறிய அலைகளை மடித்துக் கொண்டு கிடந்தது. கீழே ரொட்டிக் கிடங்கிலிருந்து சர்க்கரைப் பாகு முறுகுவது போன்ற ஒரு வித வாசனையும் வந்து பரவிக் கொண்டிருந்தது. அதைத் தனி அறையாகத் தன் உபயோகத்துக்கு மட்டும் வைத்துக் கொண்டு நாற்பத்தெட்டு ரூபாய் நிச்சயமாக அவனால் கொடுக்க முடியாது. இன்னும் ஒரு வாரத்துக்குள் வெளியூரிலிருந்து தனிக்கட்டையாக அங்கு தன்னைப் போலவே வந்திருக்கும் ஆசிரியர்களையோ அல்லது வேறு மனிதர்களையோ - இரண்டு பேரை உடன் வசிப்பவர்களாகச் சேர்த்துக் கொண்டுவிட வேண்டும் என்று அவன் தனக்குள் சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான். அன்று முதல் நாளாக இருந்ததனால் பதினோரு மணிக்குக் கல்லூரி திறப்பதாக அறிவித்திருந்தார்கள். லேக் அவென்யூவிலிருந்து கல்லூரிக் காம்பவுண்டை அடைவதற்கு அரைமணி நேரமோ, அல்லது அதற்கும் சிறிது குறைவான நேரமோ நடந்து போக வேண்டியிருக்கும் என்று தோன்றியது. ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டே நடந்து போவதற்கு ஏற்ற சுகமான சாலை அது. எனவே ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று முறை அந்தச் சாலை வழியே நடந்து போய்த் திரும்ப வேண்டியிருக்குமே என்பதை எண்ணிச் சத்தியமூர்த்தி மகிழ்ச்சி அடைந்தானே தவிரக் கவலைப்படவில்லை. அறைக்குள் மொத்தம் நான்கு அலமாரிகள் இருந்தன. ஒன்றில் தன் புத்தகங்களைப் பிரித்து அடுக்கினான் அவன். தன்னுடைய பொருள்களை எல்லாம் அந்த அறைக்குள் ஒழுங்குபடுத்தி வைத்த பின் நீராடச் சென்றான். மல்லிகைப் பந்தலின் குளிர்ந்த நீர் பட்டுப் போல் மென்மையாயிருந்தது. குழாயைத் திறந்ததும் குளிர்ந்த நீர் சில்லென்று சிலிர்த்துக் கொண்டு கொட்டியது. அவ்வளவு அருமையாகத் தண்ணீர் ஏற்பாடு செய்திருக்கும் மல்லிகைப் பந்தல் நகரசபையை வாழ்த்தியது அவன் உள்ளம். நீராடிவிட்டுத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவன் கையில் பிளாஸ்க்குடன் அறை வாசலில் சாய்ந்தாற் போல் நின்று கொண்டிருந்த பாரதியைச் சந்தித்தான். கூச்சமும் பயமுமாக அந்தக் கோலத்தில் அவளைக் கடந்து அறைக்குள் போவதற்கே திகைத்துத் தயங்கினான் அவன். சாதாரணமாக ஆண் பிள்ளைகளுக்கு முன்னிலையிலே திறந்த மார்போடு நிற்பதையோ, நடப்பதையோ கூட விரும்பாதவன் இப்போது அந்தப் பெண்ணுக்கு முன்பாக இன்னும் கூசி நின்றான். பாரதியும் அந்த நிலையில் அவனிடம் என்ன பேசுவதென்று தோன்றாமல் நாணித் தயங்கினாள். ஈரம்பட்டுச் செந்தாமரைப் பூக்களாகச் சிவந்திருந்த அவனுடைய பாதங்களையும் இழைத்த சந்தனத்துண்டு போல் மினுமினுக்கும் பொன்னிறத் தோள்களையும் பாராதது போல் பார்த்து மறுபடியும் பார்க்கத் தவிக்கும் கண்களோடு நின்று கொண்டிருந்தாள் அவள். நாணித் தலையைக் குனிந்து கொள்ளும் பாவனையில் அவனுடைய தங்கத் திருவடிகளையும் அவற்றில் வெண்முத்துப் பதித்தாற் போன்ற நகங்களையும் அவள் சுலபமாகக் காண முடிந்தது. அந்தக் கால்கள் குளியலறையிலிருந்து நடந்து வந்த வழியெல்லாம் சித்திரம் பதித்தாற் போல் நீர்ப் பிரதிகளில் பாதக் கோலமாகப் பதிந்திருந்தன. கண்ணன் பிறப்புக்கு மாக்கோலம் போட்டதுபோல் அளவாகத் தெரிந்த அந்த நீர்ப் பிரதிகளை ஓடிப்போய் இரண்டு கைகளாலும் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டுவிட வேண்டும் போலத் தவித்தாள் அவள். பொன்னில் வார்த்துக் குழைத்தெடுத்தாற் போன்ற அந்தத் தோள்களை இன்னொரு முறை எப்படியும் பார்த்துவிட வேண்டுமென்று அவள் தன் அழகிய கண்களில் பார்வையை நிமிர்த்தி ஓரமாகச் சாய்த்தபோது அவன் தன் கையில் பிழிந்து வைத்திருந்த ஈரத்துண்டை மெல்ல உதறி மேலே போர்த்திக் கொண்டிருந்தான். ஆவலோடு கண்களை திருப்பிய அவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அந்த நிலையில், பாரதிக்கு ஒரு கவிதை நினைவு வந்தது. அம்பிகாபதி - அமராவதி கதையை நவீன காவியமாக எழுதி வெளியிட்டிருந்தார் நவநீத கவி என்ற கவி. அவர் ஒரு மறுமலர்ச்சித் தமிழ்க் கவிஞர். அதில் ஒரு பாட்டு பாரதிக்கு மனப்பாடமே ஆகியிருந்தது. அவளுக்கு மிகவும் பிடித்த பாட்டு அது.
பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும் பாரா திருந்தே தவித்ததுவும் யார்க்கும் தெரியா திணைந்ததுவும் யாரும் அறிந்தே பிரிந்ததுவும் பேசத் தவித்துப் பேசியதுவும் பேசா திருந்தே தவித்ததுவும் நேசம் தெரிந்து மணந்ததுவும் நீசர் கலைக்கக் கலைந்தனவே கவிதை இன்பத்துக்காக நூறு பாடல்களே உள்ள அந்தப் புத்தகத்தை ஏழெட்டுமுறை படித்திருக்கிறாள் அவள். இப்போதும் அவளுக்கு விருப்பமான அந்தப் பாட்டுத்தான் நினைவு வந்தது. அந்தப் புத்தகத்தின் பெயரே 'ஞாபக மலர்கள்' என்று வைக்கப்பட்டிருந்தது. சென்ற வருடம் அவளுடைய பிறந்த நாளன்று கல்லூரித் தோழி ஒருத்தி இந்த 'ஞாபக மலர்களை' அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தாள். 'பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும், பாராதிருந்தே தவித்ததுவும்' என்ற ஒரு வரியை பாரதி இப்போது திரும்பத் திரும்ப நினைத்தாள். சத்தியமூர்த்தியின் இந்தப் பாதங்களைப் பார்க்கும் போதும் அவள் தவித்தாள். பார்க்க முடியாத போதும் தான் அவள் தவித்தாள். இந்த உணர்ச்சியை அந்தக் கவி எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்? "வழி விடுகிறீர்களா? உள்ளே போய் உடை மாற்றிக் கொண்டு வந்துவிடுகிறேன்" என்று கேட்டுக் கொண்டே அவன் மிக அருகில் வந்துவிட்ட பிறகுதான் அவள் சுயநினைவு வரப்பெற்று விலகி நின்று அவனுக்கு வழிவிட்டாள். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துச் சத்தியமூர்த்தி உடைமாற்றிக் கொண்டு மின்னல் எதிரே நிற்பது போலப் பளீரென வெண்மையுடுத்தி நின்றான். சிரித்துக் கொண்டே அவளிடம் பேசலானான் அவன். "உங்களுக்கு மிகவும் சிரமம் கொடுத்துவிட்டேன். நீங்கள் என்னைத் தேடிக் கொண்டு இங்கேயெல்லாம் வந்து நிற்பீர்களென்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் இன்று காலையில் ரூம் தேடி வந்தபோது இந்த இடம் அகப்பட்டது. உடனே முன்பணம் கொடுத்துப் பேசிக் கொண்ட பின் இங்கே குடியேறிவிடத் தீர்மானித்தேன். விடிந்ததும், பிரின்ஸிபலும், ஹெட்கிளார்க்கும் கல்லூரியைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் பேச்சு, பார்வை எல்லாம் ஒரு மாதிரி இருந்தது. எனக்குப் பிடிக்கவில்லை. இங்கே வந்துவிட்டேன்..." "..." "பிரின்ஸிபலையும், ஹெட்கிளார்க்கையும் தான் பிடிக்கவில்லையா? என்னையும் சேர்த்துப் பிடிக்காமல் போய்விட்டதா?" "அதுசரி... உங்கள் தந்தை எஸ்டேட்டிலிருந்து திரும்பி விட்டாரா இல்லையா?" என்று அவள் கேள்விக்குப் பதில் கூறாததோடு சிரித்துக் கொண்டே அதற்குச் சம்பந்தமில்லாத வேறொரு கேள்வியையும் அவளிடம் கேட்டான் சத்தியமூர்த்தி. "அப்பா திரும்பிவிட்டார். காலையில் அவர் திரும்பியதும் நீங்கள் வந்திருப்பதையும் கூடச் சொல்லிவிட்டேன். எதற்காக இப்படிப் பேச்சை மாற்றுகிறீர்கள்? காலையில் எழுந்ததும் எழுந்திராததுமாகச் சமையற்காரரைக் கூட அருகில் நெருங்க விடாமல் நானே என் கையால் காப்பிப் போட்டுப் பிளாஸ்க்கில் ஊற்றி உங்களுக்குக் கொடுத்தனுப்பினேன். நீங்களோ அந்தக் காப்பியைப் பிளாஸ்க்குடன் அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறீர்கள். நேற்றானால் அந்த அகாலத்தில் இருட்டென்றும் குளிரென்றும் பாராமல் நான் உங்களை அழைத்துக் கொண்டு போகப் பஸ் நிலையத்துக்கு வந்தேன். அப்போதும் நீங்கள் என்னிடம் சுமுகமாக இல்லை. பிரியப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்பவர்களை என்னதான் சொல்வது..." என்று சீறுகிறாற் போன்ற வார்த்தைகளால் அவனைச் சாடிக் கொண்டே பிளாஸ்க்கைத் திறந்து அதன் மூடிக்குள்ளே அடங்கியிருந்த சிறிய பிளாஸ்டிக் 'கப்'பில் ஆவி பறக்கும் காப்பியை ஊற்றி நீட்டினாள் அவள். அதை மறுக்காமல் வாங்கிப் பருகிய சத்தியமூர்த்தி, "உங்களுடைய கோபத்தைப் போலவே காப்பியும் சுவையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாவம்...! பிரியப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்பவர்களைப் புரிந்து கொள்ளத் தெரியாத கல்மனம் படைத்தவனைத் தேடி நீங்கள் இதை எடுத்துக் கொண்டு வந்திருக்க வேண்டாம்" என்று குறும்பு தொனிக்க மறுமொழி கூறினான். இதைக் கேட்டு அவள் கன்னங்களில் செம்மை குழம்பி நாணம் கனிந்தது. அவ்வளவு பெரிய செல்வச் செருக்கு நிறைந்த வீட்டில் பிறந்து வளர்ந்திருந்தும் அவளிடம் மிக மென்மையான நாணமும் இருப்பதைக் கண்டு சத்தியமூர்த்தி மகிழ்ந்தான். பெண்களை ஆண்கள் போலப் பிறரிடம் பழகுவதற்குப் பழக்கப்படுத்திவிட்டு ஆண்கள் விலகியிருந்து பெருமைப்பட்டுக் கொள்ளும் பெரிய குடும்பங்கள் பலவற்றைச் சத்தியமூர்த்தி பரிதாபத்தோடு பார்த்திருக்கிறான். 'மாணவ மாணவிகளிடம் நெருப்புக் காய்வதுப் போல் அதிகம் விலகிவிடாமலும், அதிகம் நெருங்கி விடாமலும் பழகவேண்டும்' என்று இண்டர்வ்யூவின் போது பூபதி கூறியிருந்த வாக்கியங்கள் அவனுக்கு இன்னும் மறக்கவில்லை. இதயங்கள் மலர எண்ணங்கள் மலர மெய்யான பிரியத்தைச் சுமந்து கொண்டு எதிரே வந்து நிற்கும் பாரதியையும், அவளுடைய தந்தையின் அறிவுரையையும் இணைத்து நினைத்த போது அவனுடைய நினைப்பு ஒழுங்காக வராமல் நடுவில் ஏதோ சிறிது தடுமாறியது. அந்தப் பெண் அடிக்கடி தன்னைத் தேடி வருவதையும், பார்த்துப் பேசத் தவிப்பதையும் எப்படிக் குறைத்துக் கொள்ளச் செய்யலாமென்று நேற்றிலிருந்தே ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. பிரின்ஸிபலும், ஹெட்கிளார்க்கும் காரணமில்லாமலே தம்மேல் பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கிற சமயத்தில் இந்தப் பெண் தேடி வருவதும், பார்ப்பதும், சிரிப்பதும் அவர்களுடைய பொறாமையை மேலும் வளர்த்து விபரீதமாக்கிவிடக் கூடாதே என்று அவன் தயங்கினான். 'நாணமும் அச்சமும் மடநாய்களுக்கும் அன்றோ வேண்டும்' என்று பாரதியார் ஆவேசமாகப் பாடியிருந்தாலும் சமூக வாழ்க்கையில் ஆண்மகனும் கூட அச்சமும் நாணமும் படவேண்டிய இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பழி வருகிற இடங்களை நினைத்தால் பயப்படாமலும் நாணப்படாமலும் இருக்க முடியாது. தன் மனத்தையும், நேர்மையையும் அரித்துத் தின்று விடுகிற சபலங்கள் தீரனுடைய வாழ்க்கையில் ஒரு போதும் குறுக்கிடக் கூடாது. புகழோடு வாழ முடியாமற் போகலாம்; ஆனால் பழியில்லாமல் வாழவேண்டும். 'பழியில்லாமல் வாழ்வதே வீரம்' என்று இப்படி எல்லாம் அவன் மனத்தில் நினைவுகள் ஓடின. அப்போது பிளாஸ்க்கைத் திருகி மூடியபடியே அவனைக் கேட்டாள் அவள். "இந்த வேளை உங்களுக்கே கிடைத்து நீங்கள் இங்கே வந்துவிட வேண்டுமென்று இராப் பகலாக நான் தவித்த தவிப்பு உங்களுக்குத் தெரியுமா சார்?..." "நன்றாகத் தெரியும். அதற்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய கடிதங்கள் இரண்டும் நீங்கள் தவித்த தவிப்பை எனக்குப் பறைசாற்றுகின்றன. அத்தனை அழகான வாக்கியங்களால் ஒரு கடிதத்தையும் அதுவும் போதாமல் மற்றொரு கடிதத்தையும் எழுதிய உங்களை எப்படிப் பாராட்டுவதென்றே எனக்குத் தெரியவில்லை. அந்தக் கடிதங்கள் இன்னும் அப்படியே பசுமையாக என் மனதில் பதிந்திருக்கின்றன." "கடிதங்கள் மட்டும் மனத்தில் பதிந்து விட்டால் போதுமா? அதை எழுதியவளைப் பற்றிய ஞாபகம் கொஞ்சம் கூடப் பதிந்ததாகத் தெரியவில்லையே...?" என்று அவள் கேட்ட கேள்விக்குச் சத்தியமூர்த்தி பதில் சொல்லாமல் இருந்தான். வெளியே வெயில் பரவியிருந்ததால் பால்கனிக்கு அப்பால் ஏரி நீர் வெள்ளிக்குழம்பாய்ப் பளபளக்கத் தொடங்கியிருந்தது. மணியும் ஏறக்குறையப் பத்தேகால் ஆவதற்கு இருந்தது. "நீங்கள் நவநீதக் கவியின் 'ஞாபகமலர்கள்' என்ற புத்தகம் படித்திருக்கிறீர்களா சார்?" என்று இருந்தாற் போலிருந்து ஒரு புதிய கேள்வியை அவனிடம் கேட்டாள் பாரதி. "ஏன்? படித்திருக்கிறேன். அதில் என்ன?" என்று சிறிது நேரம் பொறுத்துச் சத்தியமூர்த்தி அவளுக்குப் பதில் கூறினான். "ஒன்றுமில்லை! அதில் ஒரு பாட்டு உண்டு. 'பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும்... பாராதிருந்து தவித்ததுவும், பேசத்தவித்து பேசியதுவும், பேசாதிருந்து தவித்ததுவும்' என்று வரும். உங்களைப் பார்த்த நாளிலிருந்தே நானும் அப்படித்தான் இருக்கிறேன். நான் ஏன் இப்படிப் பைத்தியமானேன் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது." "மனித வாழ்க்கையிலிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும், எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன்கூட்டியே தெரியாமலிருப்பதுதான்..." "அந்த ஆச்சரியம் என் வாழ்வில் நேர்ந்துவிட்டது" என்று தைரியமாக அவன் முகத்தைப் நிமிர்ந்து பார்த்துச் சொன்னாள் அவள். அந்தத் துணிவையும் உறுதியையும் பார்த்துச் சத்தியமூர்த்தி மலைத்துப் போனான். கல்லூரிக்கு நேரமாகிவிட்டது என்று அவளே அப்போது அவனுக்கு ஞாபகப்படுத்தினாள். அறையைப் பூட்டிக் கொண்டு அவன் கல்லூரிக்குப் புறப்படத் தயாரானான். மறுக்க முடியாத காரணத்தால் அவன் கல்லூரிக் 'காம்பவுண்ட் கேட்' வரை அவளோடு அவள் காரிலேயே போய் இறங்கிக் கொள்ள நேர்ந்தது. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
Power And Protocol For Getting To The Top வகைப்பாடு : Self Improvement Stock Available விலை: ரூ. 295.00தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |