21
வாழைக்காய்க் குலை முற்றியவுடன் தாறு வெட்டிக் காய்களைச் சுற்றி வேப்பிலைக் கொத்துக்களால் மூடிக் களிமண்ணால் மூட்டம் போட்டுச் சூடும் வெம்மையும் உண்டாக்கிப் பழுக்கச் செய்வார்கள். அதைப் போல் அந்த வீட்டின் கசப்பினாலும் வெம்மையினாலுமே அவள் மனம் பழுத்து இனிமை கண்டிருந்தது.
அங்கிருந்து விடுபட்டு எங்கோ உடனடியாகப் பறந்து போய்விட வேண்டும் போலத் தவித்துக் கொண்டிருந்தது அவள் மனம். உள்ளே அம்மாவும், கண்ணாயிரமும் கண்ணாயிரத்தோடு வந்திருந்த வேறொரு மனிதரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சிரிப்பும் அரட்டையுமாகக் கண்ணாயிரம் பேசிய விதத்தைப் பார்த்தால் இந்த உலகத்தையே தாம் வம்பளப்பதற்கென்று சாசனம் செய்து கொடுத்துவிட்டது போல் பாவிப்பதாகத் தோன்றியது. அந்த நிலையில் உள்ளே உட்காருவதற்குப் பிடிக்காமல் தான் வாசலுக்கு எழுந்து வந்திருந்தாள் மோகினி. 'அந்த வீட்டில் அந்தச் சூழ்நிலையில் தன் உடம்பையும் மனத்தையும் எப்படிப் பரிசுத்தமாகப் பாதுகாத்துக் கொண்டு வாழ்வதற்கும் முடியப்போகிறது?' என்று எண்ணித் தவித்த போது எதிர்காலம் இருண்டு தெரிந்தது. 'கேளாதே வந்து கிளைகளாய்த் தோன்றி' என்று ஒரு பழைய பாட்டு ஆரம்பமாகும். 'இந்த வீட்டைத் தேடி வந்து இந்த அம்மாவுக்குப் பெண்ணாய்ப் பிறந்து இந்தப் பூமியில் இப்படி அவதிப்பட வேண்டும் என்று யார் தவம் இருந்தார்கள்?' என்று எண்ணும் போது அவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. செந்தாமரைப் பூக்களாய் மலர்ந்த கைகளும், கால்களும் ஒளிரச் சத்தியமூர்த்தி அந்த வீட்டின் வாயிற்படிகளில் ஏறி வந்த இனிய நாட்கள் அவளுக்கு நினைவு வந்தன. கையில் அவனளித்த மோதிரத்தையும் இதயத்தில் அவனைப் பற்றிய நினைவுகளையும் அணிந்து கொண்டு நேரம் போவது தெரியாமல் தெருக்கோடியை வெறித்துப் பார்த்தபடி நின்றாள் அவள். 'இந்த வழியாகத்தான் அவர் கம்பீரமாக நிமிர்ந்து நடந்து வந்தார்! இந்த வழியாகத்தான் திரும்பிப் போனார்' என்று வந்த வழியும் போன வழியும் ஞாபகத்தில் இருந்தன. தெருவில் எங்கிருந்தோ நாத வெள்ளமான மதுர அலைகளோடு பொங்கிய நாதஸ்வரக்காரரின் தோடியும், மழை பெய்து நின்றிருந்த சூழ்நிலையும், இசை வண்டு முரல்வது போல் வீணையின் பக்குவமான ஒலியும், அவளை வேறு உலகத்தில் வேறு ஞாபகத்துக்குக் கொண்டு போயிருந்த போது அம்மா வந்து காதருகில் முணுமுணுத்து இந்த உலகத்தை ஞாபகப் படுத்தினாள். "வீட்டுக் கூடத்திலே பெரிய மனிசங்க... ரெண்டு பேரு வந்து பேசிக்கிட்டிருக்கிறப்போ, இங்கே தெருவிலே என்னா பாழாய் போறதுன்னு வந்து நின்னுக்கிட்டிருக்கிறே? உன்னையத்தாண்டி கேக்குறேனே. உள்ளே வந்து உட்கார்ந்து தொலை. வந்திருக்கிறவங்களுக்கு இதமா ரெண்டு வார்த்தை சிரிக்கப் பேசு. அதிலே ஒண்ணும் கொறைஞ்சு போயிடாது." "நான் என்னம்மா பேச போறேன்? எல்லாம் நீயே பார்த்துப் பேசி அனுப்பிவிடு!" என்று அவள் வேண்டா வெறுப்பாகத் தட்டிக் கழிக்க முயன்ற போது அம்மா கோபித்துக் கொண்டு சீறினாள். "இப்பிடி யாருக்கு வந்த விருந்தோன்னு இருந்திட்டா நாளைப் பின்னே இந்த வீட்டைத் தேடி மனிசாள் யாரும் வரமாட்டாங்க. தொழில் பட்டுப்போய் நீயும் நானும் தெருவிலே பிச்சைக்கு நிற்கலாம்டீ..." "மானங்கெட்டுப் போய் வீட்டுக்குள்ளே நிற்கிறதை விட மானத்தோடு தெருவில் நிற்கலாம்..." இந்த வார்த்தைகளை இவ்வளவு துணிவாக அம்மாவிடம் 'வெடுக்'கென்று நேருக்கு நேர் அவள் சொல்லியிருக்கலாமோ, கூடாதோ? ஆனால் சொல்லியாயிற்று. அம்மா பரபரப்பாக வந்த விதம், 'பெரிய மனுசாள்' வந்திருக்காங்க என்று சொல்லிய விதம் எல்லாமே அவள் மனத்தில் வெறுப்பை ஊட்டின. அந்த வெறுப்பின் விளைவாகத்தான் அவள் இப்படிப் பேசியிருந்தாள். செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து செல்வமும் செல்வாக்கும் உள்ளவரான பெரிய வணிகர் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார் கண்ணாயிரம். அந்தத் தன வணிகர் வீட்டில் கலியாணமாம. கலியாணத்தன்று மாலை வரவேற்பின் போது மோகினியின் நாட்டியம் இருந்தால் நல்லதாம். கண்ணாயிரம் அந்தத் தன வணிகரை அழைத்துக் கொண்டு வந்தது, அறிமுகப்படுத்தியது, பேசியது எல்லாமே, 'நான் ஏற்பாடு செய்கிறேன்' 'நான் தான் இதெல்லாம் ஏற்பாடு செய்ய முடியும்' என்ற திமிர் தெரியும்படி இருந்தன. கண்ணாயிரத்தைப் போல் எந்தத் தகுதியினாலும் கர்வப்பட வழி இல்லாதவர்கள் எதற்காகவோ கர்வப்பட்டுக் கொள்வதை அவள் மனம் பொறுத்துக் கொள்ள முடியாமல் வெறுத்தது. கர்வப்படுவதற்கும் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் ஏதோ ஒரு சிறப்பான காரணம் உள்ளவர்கள் கர்வப்படுவதையே இந்த உலகம் ஏற்றுக் கொள்வதற்கும், அங்கீகரிப்பதற்கும் தயங்குகிறது. அப்படியிருந்தும் கண்ணாயிரத்தைப் போன்றவர்கள் தங்களைத் தாங்களே கர்வப்படுவதற்குரியவர்களாகப் பாவித்துக் கொண்டு திரிவதைச் சமூகமும் பெரிய மனிதர்களும் எப்படி மன்னிக்கிறார்கள்? என்று புரிந்து கொள்ள முடியாமல் மனம் கொதித்தாள் அவள். அந்தக் கொதிப்பினால் தான் அம்மாவுக்குப் பதில் சொல்லும் போது அவ்வளவு கடுமையான வார்த்தைகளாகச் சொல்லிவிட்டாள். அவளுடைய பதில் வார்த்தைகளைக் கேட்டு அம்மா கோபத்தோடு தோள்பட்டையில் முகத்தை இடித்துக் கொண்டு அழகுக் காட்டிவிட்டு உள்ளே போயிருந்தாள். வந்தவர்களும், அம்மாவும், கண்ணாயிரமும் எக்கேடும் கெட்டுப் போகட்டுமென்று வாசலிலிருந்தபடியே சிறுவனை அழைத்து, உள்ளே இருந்து தட்டில் பூவும், தேங்காய் பழமும் எடுத்துக் கொண்டு வரச்சொல்லி அவனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மீனாட்சி கோவிலுக்குப் புறப்பட்டுவிட்டாள் அவள். வடக்குக் கோபுரத்தின் வழியாகக் கோவிலுக்குள் நுழைந்து ஆடி வீதியில் கிழக்கு நோக்கி நடந்து கொண்டிருந்த போது மறுபடியும் மழை பிசுபிசுக்கத் தொடங்கியிருந்தது. அவளும் உடன்வந்திருந்த சிறுவனும் சாமி சந்நிதிக்குள் நுழைவதற்குள் மழை பலமாக வந்துவிட்டது. கோவிலுக்குள்ளும் கூட்டம் அதிகமாக இருந்தது. சாமி சந்நிதியில் தரிசனத்தை முடித்துக் கொண்டு மோகினி அம்மன் சந்நிதி முகப்புக்கு வந்த போதில் கூட்டம் உள்ளே நுழைய முடியாதபடி நெருக்கமாக இருந்தது. அர்ச்சனைச் சீட்டு வாங்குவதற்குப் பையனை வரிசையில் நிற்கச் சொல்லிவிட்டுக் கிளிக்கூண்டு மண்டபத்தை ஒட்டினாற்போல் தயங்கி நின்றாள் அவள். கூட்டிலிருந்த பல கிளிகளில் மிகவும் பெரியதாகிய பஞ்சவர்ணக் கிளி ஒன்று, வருகிறவர்கள் சொல்லித் தனக்குப் பழக்கப்படுத்திவிட்ட ஒரே ஒரு வார்த்தையாகிய, 'மீனாட்சி' 'மீனாட்சி' என்ற பதத்தை கிள்ளைப் பேச்சாக மிழற்றிக் கொண்டிருந்தது. கிழக்குப் பக்கம் பொற்றாமரைக் குளத்துக்கு மேலே திறந்த வானம் இடியும் மின்னலுமாக மழைக்கோலம் பூண்டிருந்தது. மழை நிற்கிற வழியாயில்லை. பொற்றாமரைக் குளத்தின் படிகளில் தண்ணீர் வடிந்து பாயும் ஓசை ஒரே அளவான சுருதியோடு ஒலித்துக் கொண்டிருந்தது. மிகப் பெரிதாகக் கேட்ட இடி ஓசை ஒன்றின் போது கிளிக்கூட்டு மண்டபத்தில் அடைபட்டிருந்த பஞ்சவர்ணக்கிளி மேலே 'படபட'வென்று சிறகடித்துப் பறக்க முயன்று முடியாமல் மறுபடியும் சட்டத்தில் வந்தமர்ந்தது. அப்படிப் பறக்க முயன்று போய்த் தளர்ந்து மறுபடியும் சட்டத்திலேயே அமர்ந்துவிட்ட அந்தக் கிளியையும் தன்னையும் மனத்தில் ஒப்பிட்டுப் பரிதாபத்தை உணர்ந்தாள் மோகினி. 'நீயும் நானும் கூண்டிலிருந்து பறந்து போய்ச் சுதந்திரமாக வாழ முடியாது கிளியே! காரணம் நீயும் நானும் பிறருடைய காட்சிக்குப் பண்டமாகிற அளவுக்கு அழகாயிருப்பதுதான். எங்கே இருக்கிறோமோ அங்கிருந்து பறந்து போய்விடத்தான் நீயும் நினைக்கிறாய். நானும் நினைக்கிறேன். ஆனால் சொல்லிக் கொடுத்தபடி வாழ்ந்து, கட்டுப்படுத்தியபடி கட்டுண்டு மடியவேண்டுமென்று தான் உன் தலையிலும் என் தலையிலும் ஒன்றாக எழுதியிருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வேறுபாடு. நீ இருக்கிற கூட்டை இரும்பு அளியிட்டு மூடியிருக்கிறார்கள். நான் இருக்கிற கூட்டை அப்படி யாரும் மூடிப் பூட்டி வைக்கவில்லை. வாசல், கொல்லை, கூடம், மேசை நாற்காலி, கட்டில், மெத்தை எல்லாம் இருக்கிற சுகமான கூட்டில் நான் அடைப்பட்டிருக்கிறேன். என்னுடைய கூட்டில் வாசலும் புறக்கடையும் திறந்தேயிருந்தாலும் நான் வெளியேற முடியாது. சொல்லிக் கொடுத்தபடி ஆடவும் அம்மாவுக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கவும் நான் அடைப்பட்டிருக்கிறேன். சொல்லிப் பழக்கப்படுத்தப் பெற்ற ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு நீயும் அடைப்பட்டிருக்கிறாய். நீயும், நானும் அழகாயிருக்கிறோம் என்று உலகம் திருப்திபடலாம். ஆனால் சுதந்திரமாயிருக்க முடியாத வரையில் நாம் திருப்திப்பட என்ன இருக்கிறது?' என்று இப்படியெல்லாம் நினைத்துப் பெருமூச்சி விட்டாள் மோகினி. அதே மண்டபத்தின் அருகே முன்பு சத்தியமூர்த்தியைச் சந்தித்ததும், திருச்சுற்றில் வலம் வரும்போது அவன் பாதங்களைத் தொட்டு வணங்கியதும் நினைவு வந்து அவளைக் கண் கலங்கச் செய்தன. அந்தக் கணத்தில் அவளுடைய ஞாபகம் தான் தொட்டு வணங்கிய பாதங்களில் போய்ப் பதிந்தது அல்லது அவளுடைய ஞாபகத்தில் அந்தப் பாதங்கள் வந்து பதிந்தன. மீண்டும் மற்றோர் உரத்த இடியோசையில் மருண்ட அந்தக் கிளி மறுபடியும் சிறகடித்துப் பறக்க முயன்று முடியாமல் ஆற்றாமையோடு சட்டத்தில் வந்து அமர்ந்தது. அந்தப் பஞ்சவர்ணக்கிளியின் வெல்வெட் உடம்பையும் அதில் நிறங்களில் புரண்டெழுந்தாற் போன்ற பளபளப்பையும் பார்த்து, 'மீனாட்சி மீனாட்சி' என்ற ஒரே வார்த்தையைக் கதறி அதைத் தவிரக் கதறுவதற்கு வேறு பதமும், பறப்பதற்கு வேறு இடமும் கிடைக்காமலே தவிப்பதையும் உணர்ந்து, அந்த உணர்ச்சியிலேயே தன் துயரத்தையும் புரிந்து கொண்டவளாய் மலைத்து நின்றாள் மோகினி. மோகினி பதில் சொல்லாமல் உதட்டைக் கடித்துக் கொண்டு மன அழுத்தத்தோடு இருந்தாள். "நீ ஏண்டி இப்படி இருக்கே? பணமும் மதிப்பும் உள்ள பெரிய மனுசாள் வந்து மணிக்கணக்காகக் காத்திருக்காங்க. நான் படிச்சுப் படிச்சுச் சொல்றேன். குத்துக் கல்லாட்டமாச் சும்மா இருக்கியே... கல்யாணத்துக்கு ஆடணுமின்னு பேச வந்திருக்காரு. 'முழுசா அஞ்சு நூறு ரூபா நோட்டை எடுத்து அட்வான்ஸா வச்சிக்குங்க'ன்னு கொடுத்திருக்கிற மனுசாளிட்டே ரெண்டு வார்த்தை சிரிச்சுப் பேசிட்டாத் தான் என்ன குறைஞ்சு போவுதாம்?" செய்ய விருப்பமில்லாத காரியத்தைச் செய்வதற்காகக் கதறி அழுகிற மனத்துடனும் செய்தே தீர வேண்டுமென்று கட்டாயப் படுத்தப்படுகிற அவசியத்துக்காகக் கீழிறங்கும் கால்களுமாக அம்மாவுடன் படிகளில் இறங்கினாள் அவள். கண்ணாயிரத்தின் வாழ்க்கையில் பொய் என்பது ஒரு பகுதியாயில்லை, பொய்யின் வாழ்க்கையில் தான் கண்ணாயிரம் ஒரு பகுதியாயிருக்கிறார் என்று மோகினி அறிந்திருந்தாள். 'உங்கள் வீட்டுக் கல்யாணத்தில் தன் பெண் தான் நாட்டியமாடணும்னு முத்தழகம்மாளுக்கு ஆசை' என்று அங்கே கலியாணம் நடக்கிற பிரமுகர் வீட்டில் பேசியிருப்பார். இங்கே வீட்டில் வந்து 'முத்தழகம்மா! மோகினியோட நாட்டியக் கச்சேரி இருந்தால்தான் இந்தக் கலியாணத்துக்கு நான் சம்மதிக்க முடியும்'னு மாப்பிள்ளைப் பையனே ஒத்தக் காலில் நிற்கிறானாம்' என்று அதையே மாற்றிச் சொல்வார் கண்ணாயிரம். காரியம் ஆவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவர் அவர். புகழுக்காகவும் பணத்துக்காகவும் மானத்தையும் இழக்கலாம் என்ற எண்ணமும் செயலும் உடையவர் தான் கண்ணாயிரம். அம்மாவின் மிரட்டலுக்குப் பயந்து கீழே வந்திருப்பவர்களைப் பார்ப்பதற்காகப் படி இறங்கிக் கொண்டிருந்த போது கோவிலில் கிளிக்கூட்டு மண்டபத்துக்குள் அடைக்கப்பட்டிருந்த அந்தப் பஞ்சவர்ணக் கிளியின் ஞாபகம் வந்தது மோகினிக்கு. அதையும் விடத் தன் நிலைமை இன்னும் மோசம் என்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டாள் அவள். கீழே இறங்கிக் கூடத்துக்குப் போனதும் அம்மா அங்கு வந்து காத்திருந்தவரை விட்டுக் கொடுக்காமல் தன் தேர்ந்த சாமர்த்தியத்தைப் பயன்படுத்திச் சாகஸமாகப் பேசினாள். "கோயிலுக்குப் போய்விட்டு வந்த பொண்ணு மாடியிலே போய்த் தலைவலின்னு சுருண்டு படுத்திருச்சு. நான் போய்ச் சொன்னேனோ இல்லையோ? 'அப்படியா? தேடி வந்தவங்களைப் பார்க்காம அனுப்பறது வளமொறையில்லே'ன்னு தலைவலியோட எழுந்து வந்திருக்கு...?" அம்மாவும் கண்ணாயிரமும் பச்சைப் பொய்களை வந்திருந்தவருக்கு முன்னால் தாராளமாக வாரி வழங்கினார்கள். கேட்கக் கேட்க மோகினி மனம் கொதித்தாள்; வயிறெரிந்தாள். தாம் ஏதோ மிகவும் செல்லமாகவும் உரிமையோடும் கூப்பிடப் பாத்தியப்பட்டவரைப் போல் கண்ணாயிரம் அவளுடையப் பேரைச் சுருக்கி, "என்ன மோகி! நம்ப... இவர் இருக்காரே... (வந்திருந்த சரிகை அங்கவஸ்திரப் பிரமுகரைச் சுட்டிக்காட்டி) ரொம்பப் பெரிய கலாரசிகர். பத்து லட்ச ரூபாய் முதலீடு பண்ணி முழுக்க முழுக்க டான்ஸே வருகிறாற் போல் ஒரு கலர் சினிமாப் படம் எடுக்கணும்னு இவாளுக்கு ஒரு நெனைப்பிருக்கு. அப்பிடி எடுத்தா நீதான் அந்தப் படத்திலே ஹீரோயின்!" என்று குழைந்தார். சரிகை அங்கவஸ்திரம் அசடு வழியச் சிரித்துக் கொண்டிருந்தது. மாமிசத்தைக் கொத்திக் கொண்டு போகிற கழுகுப் பார்வை. மரத்தூணில் புடவையைச் சுற்றி வைத்துவிட்டு எதிரே ஒரு நாற்காலியைப் போட்டு உட்காரச் சொன்னால் உட்கார்ந்து மூன்று நாள் வாய் திறந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கத் தயாராயிருக்கிற அளவுக்குச் சரியான பெண் பிள்ளை கள்ளனாயிருப்பான் போலிருக்கிறது. இரண்டு நிமிஷம் நின்று விட்டு அம்மாவின் வார்த்தைகளையே மெய்யாக்குகிறவளாய்த் "தலைவலி ரொம்ப அதிகமாயிருக்கு.. நான் வரேன்" என்று நடைப்பிணமாய் மாடிக்குத் திரும்பினாள் மோகினி. திரும்பினவள் அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு மாடப் பிறையில் கிடந்த பழைய டைரி ஒன்றிலிருந்து அரைத்தாளைக் கிழித்துப் பென்சிலால் அதில் ஏதோ எழுதலானாள். அப்போது அந்தக் காரியத்தைச் செய்யாவிட்டால் அவளுக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல் இருந்தது. சில வாழைத் தோட்டங்களில் வாழைக்காய் குலை முற்றியவுடன் தாறு வெட்டிக் காய்களைச் சுற்றி வேப்பிலைக் கொத்துக்களால் மூடிக் களிமண்ணால் மூட்டம் போட்டுச் சூடும் வெம்மையும் உண்டாக்கிப் பழுக்கச் செய்வார்கள். அதைப் போல் அந்த வீட்டின் கசப்பினாலும் வெம்மையினாலும் அவள் மனம் பழுத்து இனிமை கண்டிருந்தது. கசப்பான அனுபவங்களிலும் வெம்மையான சூழ்நிலைகளிலும் வெந்து தவித்துக் கொண்டிருந்தவளுக்குக் கிடைத்த ஒரே ஒரு நல்ல ஞாபகம் சத்தியமூர்த்தியாயிருந்தான். அன்றிரவு மோகினி அந்தப் பென்சிலையும் காகிதத்தையும் வைத்துக் கொண்டு நீண்ட நேரமாய்ப் போராடும் மனத்தோடு இருந்தாள். படுக்கையில் விழுந்து குமுறிக் குமுறி அழுதாள். வாழ விரும்பாத போதும் வாழ்க்கையையே ஒரு கனமாகச் சுமையாக உணரும் போது சாவது கூடச் சுகமான காரியமாயிருக்கும் போல் தோன்றியது. கசப்புக்கும் வெம்மைக்கும் அப்பால் வாழ்க்கையின் இனிமைகள் பழுக்கவேயில்லை. யாரோ ஒரு சத்தியமான மனிதருடைய நல்ல கைகள் சாவிலிருந்து தன்னைக் காப்பாற்றிய ஞாபகத்தை மதிப்பதற்காக வாழ வேண்டுமென்றுதான் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள். நீண்ட நாழிகை அழுத பின்பு அந்தக் காகிதத்தில் பென்சிலால் எழுதியதை ஒரு பழைய உறையில் இட்டு நன்றாக ஒட்டி மேலேயும் பென்சிலால் ஏதோ எழுதினாள். வரவு செலவு பணம் காசு எல்லாம் அம்மா கையில் தான். ஸ்டாம்புக்குக் காசு வேண்டும். விடிந்ததும் அம்மாவிடம் என்ன சொல்லி எப்படிக் காசு கேட்பது? ஸ்டாம்பு ஒட்டின கடிதத்தை விட ஸ்டாம்ப் ஒட்டாத கடிதம் கண்டிப்பாகப் போய்ச் சேரும் என்று அவளுக்குத் தெரியும். விடியற்காலையில் மூன்றரை மணிக்குக் தெருக் கதவைத் திறந்து கொண்டு சந்தின் கோடியில் இருந்த பொதுத் தபால் பெட்டியில் அதைக் கொண்டு போய்ச் சேர்த்த போதே அறுபது எழுபது மைலுக்கு அப்பால் இருக்கும் மலை நாட்டு நகரத்தில் தன்னுடைய தெய்வம் அதைக் கையில் வாங்கிப் பிரித்துப் படிப்பது போல் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள் மோகினி. மாணவ மாணவிகள் புடைசூழ அந்தத் தெய்வம் கல்லூரிக்குள் நடந்து போவது போலவும், திரும்பி வருவது போலவும், தன்னுடைய தப்புத்தப்பாக எழுதிய பென்சில் எழுத்துக் கடிதத்தை வாங்குவது போலவும் கற்பனையில் நினைப்பதே சுகமான அநுபவமாக இருந்தது அவளுக்கு. அன்றைய வாழ்க்கையில் ஏதோ போதுமான பெரிய காரியத்தைச் செய்தது போன்ற திருப்தியை அடைந்திருந்தாள் அவள். காலையில் எழுந்ததும் அம்மா வேறு ஒரு செய்தியைச் சொன்னாள். "கண்ணாயிரம் யாரோ பத்திரிகைக்காரங்களைக் கூட்டிக்கிட்டு வரேன்னிருக்காரு. உன் படத்தையும் போட்டு ஏதோ பேட்டியோ போட்டியோ - வெளியிடப் போறாங்களாம்... குளிச்சு நல்லா டிரஸ் பண்ணிக்கோ. பளிச்சிண்ணு தெரியறாப்பலே இரு. அழுது வடியாதே. படம், கிடம் பிடிச்சாலும் பிடிப்பாங்க..." 'இந்த வீட்டுக்கு யாரையாவது கூப்பிட்டுக் கொண்டு வருவதும் போவதும் வெற்றிலைப் பாக்குப் போடுவதுமாக வாழாவிட்டால் கண்ணாயிரத்துக்குத் தலை வெடித்துப் போய் விடுமோ?' என்றெண்ணிக் குமுறுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் அவளால்? பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி வகைப்பாடு : சுயமுன்னேற்றம் இருப்பு உள்ளது விலை: ரூ. 295.00தள்ளுபடி விலை: ரூ. 265.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |