22
சமூகத்தின் அநுபவத்துக்குப் பொதுவான கலைகள் எவையானாலும் அவற்றை நம்பி வாழ்கிறவர்கள் ஊர் நடுவிலிருக்கிற மருந்து மரத்தைப் போன்று பயன்படுவது அதிகமாகவும், பயன்பெறுவது குறைவாகவும் வாழ்கிறார்கள்!
"என்ன குமரப்பன்? எப்படி இருக்கிறீர்கள்?" என்று அவர் விசாரித்தவுடன், "மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று தீர்மானம் செய்கிற உரிமையே உங்களைப் போன்றவர்களிடம் விடப்பட்டிருக்கும் போது நீங்களெல்லாம் இப்படி விசாரிக்கலாமா சார்?" என்று சிறிதும் இடைவெளியின்றி அவருக்கு மறுமொழி கூறினான் குமரப்பன். இந்த வார்த்தைகளில் இருந்த ஆழமான அர்த்தத்தினால் கௌரவமாகத் தாக்கப்பட்டுவிட்ட கண்ணாயிரம் மேலும் பேச சக்தியை இழந்துவிட்டார். மோகினியின் வீட்டில் போய்ப் பேட்டி காண்பதற்காக உடன் வர இருந்த உதவியாசிரியர் கண்ணாயிரத்துக்கு மிகவும் வேண்டியவர். காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது கண்ணாயிரத்தை வாய் ஓயாமல் தூக்கி வைத்துப் புகழ்ந்து கொண்டே வந்தார் அந்த உதவி ஆசிரியர். 'எல்லாரையும் புகழ்கிறவன் யாரோ அவன் எல்லாராலும் புகழப்படுவான்' என்று ஒரு சித்தாந்தம் உண்டு. அந்தச் சித்தாந்தப்படி புகழை ஏற்படுத்திக் கொண்ட உதவியாசிரியர் அவர். அந்தக் காரில் அவர்களோடு காமிராவும் கையுமாகப் போய்க் கொண்டிருந்த குமரப்பன், பொறுமை இழந்திருந்தான். குமரப்பன் ஒன்றும் பேசாமலேயே குறும்புத்தனமான மௌனத்தோடு உடன் வருவதைக் கவனித்த உதவி ஆசிரியர் அவனிடம் ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவன் கையிலிருந்த புகைப்படக் கருவியைச் சுட்டிக்காட்டி, "இது மிகவும் உயர்ந்த ரகத்துக் 'கேமிரா' - குமரப்பன்! 'அட்ஜஸ்ட்மெண்ட்' சரியாக இருந்தால் பிரமாதமாயிருக்கும்" என்றார். குமரப்பன் அவரைச் சும்மா விடவில்லை. "ஆமாம் சார்! நன்றாகச் சொன்னீர்கள். 'அட்ஜஸ்ட்மெண்ட்' சரியாயிருந்தால் எதுவுமே பிரமாதமாகத்தான் இருக்கும்" என்று அந்த ஆள் வாய் ஓயாமல் கண்ணாயிரத்தைப் புகழ்வதையும் சேர்த்துத் துணிவாகவும், குத்தலாகவும் சொல்லிக் காண்பித்தான் குமரப்பன். அதற்கப்புறம் மோகினியின் வீடு வந்து சேர்கிற வரை அந்த உதவி ஆசிரியர் வாயைத் திறக்கவேயில்லை. மோகினியின் தாய் முத்தழகம்மாள் வீட்டு வாசலிலேயே அவர்களை எதிர்கொண்டு வந்து உள்ளே அழைத்துச் சென்றாள். கண்ணாயிரம் முத்தழகம்மாளிடம் 'குத்துவிளக்கின்' உதவியாசிரியரை முதலில் அறிமுகம் செய்து வைத்துவிட்டுக் குமரப்பனின் பக்கமாகத் திரும்பி, "இவர் அந்தப் பத்திரிகையில் கேலிச் சித்திரங்கள் வரைகிறவர். நிரம்பவும் வேடிக்கையாகப் பேசுவார். நல்ல கலை ரசிகர்" என்று அவனைப் பற்றியும் கூறினார். உடனே குமரப்பன் நடுவில் குறுக்கிட்டு, "தயவு செய்து அப்படிச் சொல்லாதீர்கள் சார்? நீங்களெல்லாம் கலை ரசிகரா இருக்கிற உலகத்தில் என்னைப் போன்றவர்களும் கலைரசிகர்களாக இருப்பது முடியாத காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஏதோ மனிதர்களை மட்டும் ரசித்துக் கொண்டிருக்கிற பாமரன் சார்" என்று அதிக விநயமாக ஆரம்பித்து அவரை மடக்கிப் பேசினான். ஒவ்வொரு முறையும் வாயைத் திறந்து பேசும் போது பேச்சில் அவனிடம் வகையாகப் பிடிபட்டுக் கொண்டு விழித்தார் கண்ணாயிரம். அவருக்கு அவன் ஒரு பிரச்சினையாயிருந்தான். நளின கலைகளின் இருப்பிடமான அந்தத் தெருவிலும் அந்த வீட்டுக்குள்ளும் நுழையும் போது குமரப்பன் தன் மனத்தில் ஏதேதோ சிந்தித்தான். மனித நினைவுகளைத் தெய்வீகத்தோடு கொண்டு போய் இணைப்பதற்காகத் தோன்றிய உயர்ந்த கலைகள் எல்லாம் பத்திரிகைப் புகழுக்கும் பணத்துக்கும் ஆட்படுகிறவைகளாகிப் போய்விட்டதை எண்ணி வேதனைப் பட்டான். தன்னுடைய புத்தியின் குறும்புத்தனத்தையும் சிந்தனையின் துறுதுறுப்பையும் அடக்கிக் கொண்டு கலைமகளே குடியிருப்பது போன்ற அந்தச் சிறிய வீட்டை ஒவ்வொரு பகுதியாகக் கூர்ந்து நோக்கினான் குமரப்பன். 'இந்த வீட்டில் இந்த அழகிய கூடத்தில் பாதரசங்களும், கொலுசுகளும் ஒலிக்க எத்தனை எத்தனை அழகிய பாதங்கள் தலைமுறை தலைமுறைகளாக நடந்திருக்கும்? எத்தனை எத்தனை குரல்களும் வாத்தியங்களும் ஒலித்திருக்கும்! இந்த நான்கு சுவர்களும் தோன்றிய பிறகு, இவற்றுக்கிடையே எத்தனை பேருடைய ஆசைகளும், தாபங்களும், அநுதாபங்களும் தோன்றி அடங்கியிருக்கும்? எவ்வளவு சிரிப்பொலிகள் கலகலத்திருக்கும்? எவ்வளவு அழுகுரல் விம்மி ஒலித்து வெடித்துத் தணிந்திருக்கும்?' என்றெல்லாம் எண்ணியபோது அவனுடைய இதயம் ஓயாமல் தவித்தது. ஏதோ ஓர் அதிகாரத்தை மீற முடியாமல் கட்டுப்பட்டு உட்கார்ந்திருப்பவளைப் போல் மோகினி அங்கு அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்திருந்தாள். பத்திரிகைக்காரர்கள் பேட்டி காண வந்திருக்கிறார்கள் என்பதற்காக அவளிடம் எந்த விதமான உற்சாகமும், கிளர்ச்சியுமில்லை. சமூகத்தின் அனுபவத்துக்குப் பொதுவாயிருக்கிற கலைகள் எவையானாலும் அவற்றை நம்பி வாழ்கிறவர்கள் ஊர் நடுவில் இருக்கிற மருந்து மரத்தைப் போன்றவர்கள். பயன்படுவது அதிகமாகவும், பயன்பெறுவது குறைவாகவும் வாழவேண்டிய நியதி தான் அவர்களுக்குப் பெரும்பாலும் நியமிக்கப்பட்டிருக்கிறதென்று குமரப்பனுக்குத் தோன்றியது. ஏதோ ஒரு பதத்துக்கு அபிநயம் பிடிக்கச் சொல்லி இரண்டு மூன்று புகைப்படங்களைப் பிடித்துக் கொண்ட பின் குமரப்பனைப் பொறுத்தவரையில் அங்கு வந்த காரியம் முடிந்து விட்டது. குழந்தைக் குறுகுறுப்பும் தெய்வீகமானதோர் அமைதித் தன்மையும் நிறைந்த மோகினியின் முகத்தைப் பார்த்த போது சித்திரா பௌர்ணமியன்று இரவு வைகையாற்று மணலில் சத்தியமூர்த்தியும் தானுமாக அவளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததெல்லாம் குமரப்பனுக்கு நினைவு வந்தன. மனிதனுடைய ஆசைகளும் சபலங்களும் நெருங்கிய அந்த வீட்டில் சகல கலைகளுக்கும் அதிதேவதையாகிய கலைமகளே வந்து அடைபட்டுக் கிடப்பதுபோல் அவள் அடைபட்டுக் கிடப்பது அவனுக்குப் புரிந்தது. மோகினியைப் பேட்டி காண்பதற்காகத்தான் அவர்களை அழைத்து வந்திருந்தார் கண்ணாயிரம். ஆனால் எல்லாவிதமான பேச்சுவார்த்தைகளுக்கும் கண்ணாயிரமும், முத்தழகம்மாளுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பேசாமல் வீற்றிருக்கும் அழகிய சித்திரத்தைப் போல் குனிந்த தலை நிமிராமல் வீற்றிருந்தாள் மோகினி. பேட்டி காண வந்திருந்த உதவி ஆசிரியர் கண்ணாயிரத்துக்குக் கட்டுப்பட்டுக் கேள்விகளை எழுதிக் கொண்டு வந்திருந்தார் போலிருக்கிறது. மௌனமாகவே இருந்த மோகினி சில கேள்விகளுக்கு அம்மாவும் கண்ணாயிரமும் கூறிய மறுமொழிகளை எதிர்த்துச் சீறினாள். "நாட்டியக் கலையில் நீங்கள் செய்து முடிக்க விரும்புகிற உயர்ந்த சாதனை எதுவோ?" என்று ஒரு கேள்வி இருந்தது. அந்தக் கேள்விக்கு முத்தழகம்மாளும் கண்ணாயிரமும் சேர்ந்து பதில் சொல்லும் போது, 'திரைப்படங்களில் நடிக்க வேண்டும் - உலகமெல்லாம் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்' என்று ஏதேதோ ஆசைகளை வெளியிட்டார்கள். தானே நடுவில் குறுக்கிட்டுப் பேசி மோகினி அதை மறுத்தாள். "உங்கள் கேள்விக்குப் பதில் இப்படி எழுதிக் கொள்ளுங்கள்; என்னுடைய கலையில் பரிபூரணமான திறமை எதுவோ அதை நான் அடைவதுதான் என்னுடைய உயர்ந்த சாதனையாக இருக்க முடியும். ஊர் சுற்றுவதையும் சினிமாப் பாடல்களில் நட்சத்திரமாக மின்னுவதையும் சாமர்த்தியங்களாக நினைக்கலாம். ஆனால் சாதனையாக ஒப்புக் கொள்ள முடியாது" என்று மோகினி கூறிய போது, கண்ணாயிரம் மறுத்து விவகாரம் பேசினார். "அப்படியெல்லாம் புரியாத பதில்களைச் சொல்லாதே மோகினி! இந்தப் பேட்டியில் வெளிவருகிற ஒவ்வொரு வாக்கியமும் நமக்கு நல்ல விளம்பரமாக இருக்க வேண்டும். தயவு செய்து கேள்விகளுக்குப் பதில் சொல்லுகிற பொறுப்பை என்னிடமும் அம்மாவிடமும் விட்டுவிட்டு நீ பேசாமல் உட்கார்ந்திரு. இதெல்லாம் நம்மைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு நாமே செய்து கொள்கிற ஓர் ஏற்பாடு. இப்படியெல்லாம் செய்து கொண்டால் ஒழிய இந்தக் காலத்தில் முன்னுக்கு வர முடியாது. நீயோ குழந்தைப் பெண். உனக்கு இதெல்லாம் புரியவும் புரியாது! என்ன முத்தழகம்மாள்? நான் சொல்றது சரிதானே?" என்று அந்த அம்மாவையும் பேச்சில் இழுத்துத் தம்மோடு ஒத்துப்பாட சொன்னார் கண்ணாயிரம். ஆனால் மோகினி நிச்சயமாகவும், பிடிவாதமாகவும் தான் கூறிய வார்த்தைகளையே சாதித்தாள். "இந்தப் பொய் அடுக்கவே அடுக்காது. யார் பேரை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். ஆனால் எனக்குக் கற்பித்த 'வாத்தியார்' பேரை எழுதாவிட்டால் சும்மா விடமாட்டேன்" என்று மோகினி சீறி விழுந்த பின்பே அவர்கள் வழிக்கு வந்தார்கள். அதுவரை ஒரு நியாயத்துக்குக் கட்டுப்பட்டு ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்த குமரப்பன் தானும் அங்கு இருப்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறாற்போல், ஒரு கனைப்புக் கனைத்து விட்டுக் கண்ணாயிரத்திடம் கேட்கலானான்: "எனக்கு ஒரு சிறிய சந்தேகம் சார்! இந்தப் பேட்டியைக் குத்துவிளக்கில் வெளியிடும் போது, 'நாட்டிய நட்சத்திரம் மோகினியைப் பேட்டி கண்டு நமது நிருபர் அளிக்கும் பதில்கள்' என்று வெளியிடுவீர்களோ அல்லது மோகினிக்காக அவளுடைய தாயையும் கண்ணாயிரம் அவர்களையும் பேட்டி கண்டு நமது நிருபர் அளிக்கும் பதில் என்று வெளியிடப் போகிறீர்களோ? நான் இரண்டாவதாகச் சொன்ன மாதிரிதான் வெளியிடப் போகிறீர்கள் என்று தெரிந்தால், இதுவரை இங்கு பிடித்த புகைப்படங்களெல்லாம் வீணாகிவிடும். புதிதாக உங்களையும் இந்த அம்மாளையும் படம் பிடித்து வெளியிட்டு விடலாம் என்பதற்காகத்தான் கேட்கிறேன்" என்று விநயமாக விசாரிப்பது போல் குறும்புத்தனமாக விசாரித்தான் குமரப்பன். இந்தக் கேள்விக்குப் பின்பு கண்ணாயிரம் விழித்துக் கொண்டார். "அதெல்லாம் ஒன்றுமில்லை. ஏதோ அவளுக்குப் பதில் சொல்ல முடியாத கேள்விகளை நாங்கள் சொல்லி விளக்கியிருப்போம். எங்களுக்குள் நாங்கள் வித்தியாசம் பழகவில்லை குமரப்பன்! மோகினி பதில் கூறினாலும் ஒன்றுதான்; நாங்கள் பதில் கூறினாலும் ஒன்றுதான். நீங்களாகத்தான் அநாவசியமான வேறுபாட்டை உண்டாக்கிப் பேசுகிறீர்கள். எங்களுக்குள் ஒரு வேறூபாடும் கிடையாது." "இருக்கலாம். ஆனால் மோகினியின் நாட்டியத்தை மோகினியிடமிருந்து தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். மோகினிக்குப் பதிலாக அதையும் இன்னொருவர் ஆடிவிட முடியாது." குமரப்பனின் இந்த வாக்கியத்தை வெறும் நகைச்சுவையாக ஏற்றுக் கொண்டு சிரிக்கிறவரைப் போல் சிரித்துவிட்டு அந்தச் சிரிப்பின் மூலம் தனக்குக் கிடைத்த தீவிரமான தாக்குதலை மறைத்துக் கொள்ள முயன்றார் கண்ணாயிரம். மானமும் சுயமரியாதையும் உள்ளவர்கள் தான் விருப்பு வெறுப்புக்களைத் தயங்காமல் எதிர்பார்த்துத் தைரியமாக ஏற்றுக் கொள்வார்கள். கண்ணாயிரத்தைப் போன்றவர்களோ எல்லாவற்றையும் துடைத்துவிட்டு வாழ்கிறவர்கள். எவ்வளவு கூர்மையான வார்த்தைகளால் தாக்கினாலும் தங்களுக்கு ஒன்றுமில்லை என்பது போல் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்து விடுகிற தன்மை உடையவர்களை என்ன செய்ய முடியும்? எந்த வார்த்தைகளால் தாக்க முடியும்? "ஏதேது? போட்டோக்காரர் ரொம்பப் பொல்லாதவராக இருப்பார் போலிருக்கே?" என்று அப்பொழுதுதான் அவனைக் கூர்ந்து கவனித்தவளாக முத்தழகம்மாள் ஏதோ சொல்லி வைத்தாள். குமரப்பன் கைவசம் 'காமிரா' இருந்ததனாலும், அவன் படங்கள் பிடித்ததனாலும் தானாகவே அவனுக்கு 'போட்டோக்காரர்' என்ற ஒரு பெயரையும் முத்தழகம்மாளே உண்டாக்கியிருந்தாள். 'ரொம்பப் பொல்லாதவராயிருப்பார் போலிருக்கே' என்று அந்தம்மாள் தன்னைப் பற்றிக் கூறியதைக் கேட்டுக் குமரப்பன் சும்மாயிருந்து விடவில்லை. மனதில் உறைக்கும்படி நன்றாகப் பதில் கூறினான்: "நல்லவனாக இருப்பவனே தன்னை நல்லவன் என்று நிரூபித்துக் கொள்வது இந்தக் காலத்தில் ஒருவிதமான இலாபத்தையும் தராது அம்மா! எல்லாவிதத்திலும் பொல்லாதவனாக வாழ்கிறவன் தன்னை நல்லவனாக நிரூபித்துக் கொண்டு காலம் தள்ளுவதுதான் இந்தக் காலத்தில் மிகவும் இலாபகரமாக நடைபெறுகிற வியாபாரம். ஏதோ உண்மையைச் சொல்லலாமென்று வாயைத் திறந்தால் உடனே எனக்குப் பொல்லாதவனென்று பட்டம் கட்டுகிறீர்களே!" "ஐயா! நீர் கொஞ்சம் சும்மா இருந்தால் நல்லது. உம்மோடு பேசறதுக்கே பயமாயிருக்கு" என்று கேலியாகச் சிரித்துக் கொண்டே சொன்னாள் முத்தழகம்மாள். "அப்படி நினைக்காதீர்கள் முத்தழகம்மாள்! நம் குமரப்பனுடைய சுபாவமே இப்படித்தான். இவரிடம் எதிலும் ஒளிவு மறைவான பேச்சு இருக்காது. வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவார். அவர் மட்டுமல்ல இவருடைய நண்பர்கள், இவரோடு பழகுகிறவர்கள் எல்லாருமே இப்படித்தான். சத்தியமூர்த்தியைத்தான் உங்களுக்குத் தெரியுமே? இரயிலில் உங்களுக்குப் பழக்கமாகி அப்புறம் உங்கள் பெண் பேனாவைக் கொடுப்பதற்காக அவனைத் தேடிக் கொண்டு போகணுமென்றாளே; அந்தப் பையன் கூடக் குமரப்பனுக்கு நெருங்கிய நண்பன் தான். அவனும் ஏறக்குறைய இவரைப் போலத்தான் பேசுவான்" என்று கண்ணாயிரம் கூறிய செய்தியைக் கேட்டு மோகினியின் முகம் மலர்ந்தது. குமரப்பன் அங்கே வந்ததிலிருந்து அவனை இதற்கு முன்பு எங்கே எப்போது பார்த்திருக்கிறோம் என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது குழப்பம் நீங்கித் தெளிவு பிறந்து விட்டது. சித்திரைப் பொருட்காட்சியில் தன்னுடைய நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்ற தினத்தன்று சத்தியமூர்த்திக்குப் பக்கத்தில் இந்த மனிதன் அமர்ந்திருப்பதை நினைவு கூர்ந்தாள் அவள். மனத்தினால் வெறுத்துக் கொண்டே வாய் வார்த்தையால் புகழ்கிறவர்கள் யாராயிருந்தாலும் அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குமரப்பனுக்குத் தெரியும். கண்ணாயிரம் இருந்தாற் போலிருந்து தன்னையும் சத்தியமூர்த்தியையும் பற்றி முத்தழகம்மாளிடம் கூறிப் புகழ ஆரம்பித்த போது குமரப்பனுடைய மனம் சிந்திக்கத் தொடங்கியது. வெளிப்படையாகப் புகழ்ந்துவிட்டு அந்தப் புகழ்ச்சியினால் எதிரி நலிந்து கவனக்குறைவாக இருக்கும்படி செய்தபின், அவனுக்கு நேர்மாறான காரியங்களை இரகசியமாகச் செய்கிற வஞ்சகத் திறமை கண்ணாயிரத்துக்கும் உண்டு என்று குமரப்பன் அறிவான். 'இவன் நமக்கு மிகவும் வேண்டிய நண்பன்' என்று தன்னைப் பற்றி நம்மைப் புரிந்து கொள்ளும்படி செய்துவிட்டுப் பின்னால் போய்ப் பகைவனாக வேலை செய்கிறவன் தான் சமூக வாழ்க்கையில் தனி மனிதனைப் பாழாக்கி விடுகிற பயங்கர எதிரி. இப்படி எதிரிகள் யார் யாரென்று கண்டுபிடித்து அவர்களைத் தன் வழிகளிலிருந்து விலக்கி விட முடியுமானால் அதற்கப்புறம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பிரச்சினைகளை எதிர்த்துப் போர் புரிய வேண்டிய அவசியம் மட்டும் தான் இருக்கும்; மனிதர்களை எதிர்த்துப் போர் புரிய வேண்டியிருக்காது. கண்ணாயிரம் அப்படி விலக்கிவிட வேண்டிய எதிரிதான் என்பதை நீண்ட நாட்களுக்கு முன் 'குத்துவிளக்கு' காரியாலயத்தில் முதன் முதலாக அவரைச் சந்தித்த சில தினங்களிலே குமரப்பன் தீர்மானம் செய்திருந்தான். அதனால் கண்ணாயிரம் முத்தழகம்மாளிடம் தன்னைப் பற்றித் தூக்கி வைத்துப் பேச ஆரம்பித்ததைக் குமரப்பன் சும்மா சிரித்தபடி, கேட்டுக் கொண்டிருந்தானே தவிர மனமார ஏற்றுக் கொள்ளவில்லை. நவீன யுகத்தில் நாகரிகமான இந்த நூற்றாண்டு மனிதர்களை அடித்து வீழ்த்துவதற்கும் சோம்பேறிகளாக்குவதற்கும் புகழைப் போல் நளினமான பயங்கர ஆயுதம் வேறு இல்லை என்பது குமரப்பனுடைய நம்பிக்கை. அந்தத் திடமான நம்பிக்கையோடுதான் கண்ணாயிரத்தின் வஞ்சகப் புகழ்ச்சிக்குச் செவி சாய்க்காமல் வீற்றிருந்தான் அவன். உதவியாசிரியர் மோகினியிடம் கேட்க வேண்டிய கடைசிக் கேள்வியைக் கேட்டார். "நீங்கள் ஆண்டாள் பாசுரங்களுக்கு அபிநயம் பிடிக்கும் போது தன்னை மறந்த தெய்வீக மலர்ச்சியோடு ஆடுகிறீர்கள் என்பதை எல்லாரும் அறிந்து ஒப்புக் கொண்டு மனமாரப் பாராட்டுகிறார்கள். சிறப்பு வாய்ந்த அந்த ஆண்டாள் நடனத்தை பலமுறை நீங்கள் ஆடியிருந்தாலும் என்றாவது ஒரு நாள்தான் உங்கள் மனமே பரிபூரணமான திருப்தியோடு இலயித்து ஆடியிருக்க முடியும். அப்படி இலயித்து ஆடிய தினத்தைப் பற்றிய எண்ணங்களை நீங்கள் 'குத்துவிளக்கு' வாசர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?" இந்தக் கேள்விக்கு முத்தழகம்மாளும் கண்ணாயிரமும் பதில் தயாராக வைத்திருந்தார்கள். "போன வருடம் நவராத்திரியின் போது மஞ்சள்பட்டி சமஸ்தானத்தில் ஜமீந்தார் முன்னிலையில் ஆண்டாள் நடனத்தை ஆடினாற்போல் மோகினி என்றுமே ஆடியதில்லை. ஜமீந்தாருடைய தாராள மனப்பான்மையும், இரசிகத்தன்மையும் தான் அவ்வளவு சிறப்பாக மோகினி ஆடியதற்குக் காரணம் என்று சொல்ல வேண்டும்" என்று முத்தழகம்மாளும் கண்ணாயிரமும் முன்பே திட்டமிட்டுப் பேசி வைத்துக் கொண்டாற் போலப் பதில் கூறினார்கள். மோகினியைப் பற்றிய பேட்டியில் மஞ்சள்பட்டி ஜமீந்தாருடைய பெயர் எப்படியும் வந்துவிட வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்வது குமரப்பனுக்குப் புரிந்தது. உதவியாசிரியருக்கும் அது புரிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிப் புரிந்து கொள்ளாதது போல இருந்தார். ஜமீந்தாருக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்பதற்காக அவருடைய தாராள மனப்பான்மையால்தான் மோகினியின் நடனமே சிறப்பாக அமைந்தது என்று பல்லாயிரம் பிரதிகள் செலவாகும் ஒரு பத்திரிகையில் அச்சிட்டுத் திருப்திப்பட எண்ணும் சிறுமையை நினைத்துக் குமரப்பன் மனம் குமுறினான். அவனைப் போலவே மோகினியும் மனம் குமுறியிருக்கிறாள் என்பது அப்போது அவள் கூறத் தொடங்கிய வார்த்தைகளிலிருந்து தெரியவந்தது. அவள் உதவியாசிரியரைக் கேட்ட கேள்வியில் சிறிது ஆத்திரமும் ஒலித்தது. "என்னடீது? இப்படிக் கேட்கிறே? நீ என்னை மீறிக்கிட்டுச் சொந்தமாகச் சொல்றதுக்கு வேறே பதில் வச்சிருக்கிறாயா?" என்று மோகினியின் அம்மா அவள் வாயையே மேலே பேசவிடாமல் அடக்கி விடுகிற அதிகாரக் குரலில் மிரட்டினாள். மோகினி அந்த மிரட்டலுக்குப் பயந்து சிறிதும் அடங்கவில்லை. "நீ சும்மா இரும்மா! நீயும் கண்ணாயிரம் மாமாவுமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்கி விடாதீர்கள். இந்த உலகமே மஞ்சள்பட்டி ஜமீந்தாரால் தான் நடக்கிறதென்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள் எனக்குக் கவலையில்லை. என்னைப் பற்றி ஏதோ கேள்வி கேட்டால் அதற்கும் மஞ்சள்பட்டி ஜமீந்தாரால்தான் நான் நாட்டியமே ஆடமுடிகிறதென்று சொல்வதை மட்டும் ஒப்புக் கொள்ளவே முடியாது. நிஜத்தைச் சொல்ல வேண்டுமானால் போன மாதம் சித்ரா பௌர்ணமியன்று தமுக்கம் பொருட்காட்சியில் ஆடினேனே, அன்று தான் நான் என்னை மறந்த இலயிப்போடு ஆண்டாளாகவே மாறி ஆடினேன்... அதைப் போல் வேறெந்த தினத்திலும் பெருமிதமாக நான் ஆடியதில்லை" என்று மோகினி கூறியதும் குமரப்பன் மனதுக்குள் அவள் தைரியத்தைப் பாராட்டினான். மஞ்சள்பட்டி ஜமீந்தாரிடம் பணம் கறப்பதற்காக அவர்கள் இப்படிப் பொய் சொல்வதை எதிர்த்து மோகினி துணிவாகக் குறிக்கிட்டுப் பதில் கூறியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. "மோகினி! நான் சொல்றதிலே ஓர் அர்த்தம் இருக்கு. நீ என்றைக்கு நன்றாக ஆடியிருந்தாலும் கவலையில்லை. பத்திரிகையிலே கொடுக்கிற பதிலில் மட்டும் மஞ்சள்பட்டி அரண்மனை நவராத்திரியில் ஆடின போதுதான் பிரமாதமாக ஆடினேன் என்று கொடுத்து வைப்போமே! அதில் நமக்கென்ன வந்தது? ஜமீந்தார் புகழ் பிரியர். அவருடைய மனம் இதனால் திருப்திபடும்" என்று கண்ணாயிரம் பிடிவாதமாக விட்டுக் கொடுக்காமல் மோகினியைக் கெஞ்சினார். "யாரோ திருப்திப்படறதுக்காக நான் நாட்டியமாடலை." "எதிர்த்துப் பேசாதடீ! நாங்கள் உன் நன்மைக்காகத் தான் சொல்றோம்னு நெனை..." அடக்கமுடியாத கோபத்தோடு அம்மா சீறினாள். மோகினியின் மை தீட்டிய கண்களில் நீர் முத்துக்கள் திரண்டன. மேலும் அங்கே உட்கார்ந்திருக்க விரும்பாமல் அழுது கொண்டே எழுந்து மாடிக்குப் போனாள் அவள். பேட்டி முடிந்து விட்டதாகப் பேர் பண்ணிவிட்டுக் கண்ணாயிரம் உதவியாசிரியரையும் குமரப்பனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். காரில் திரும்பிக் கொண்டிருந்த போது, "பேட்டி மிகவும் நல்லபடியாக ஆயிற்று. உங்களுக்குத்தான் மிகவும் நன்றி சொல்லணும்" என்று உதவியாசிரியர் கண்ணாயிரத்தின் தலையில் தாராளமாக ஐஸ் தூவினார். "ஆமாம்! ஆமாம்! இதில் சாருக்குத்தான் முக்கியமாக நன்றி சொல்லணும். ஏறக்குறைய இந்தப் பேட்டியில் மோகினிக்குச் சிரமமே வைக்காமல் எல்லாப் பதில்களையும் சாரே தயாராகச் சொல்லிவிட்டார் அல்லவா?" என்று வாழைப் பழத்தில் ஊசி இறக்குவது போல் சொல்லித் தன் வயிற்றெரிச்சலை நாசூக்காகத் தீர்த்துக் கொண்டான் குமரப்பன். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
இறுதி இரவு வகைப்பாடு : புதினம் (நாவல்) இருப்பு உள்ளது விலை: ரூ. 160.00தள்ளுபடி விலை: ரூ. 145.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |