26
துன்பங்களால் மனம் பொறுமையிழந்து தவிக்கும் சில சமயங்களில் நீதி நூல்களையும் அற நூல்களையும் வாழ்க்கையில் நன்றாக ஏமாறிய அப்பாவிகள் ஒன்று சேர்ந்து கொண்டு எழுதி வைத்து விட்டுப் போயிருப்பார்களோ என்று கூட நமக்குத் தோன்றி விடுகிறது.
அந்தச் சாயங்கால வேளையில் எந்த விதமான வேகமும் பரபரப்புமில்லாமல், வாழ்க்கையே மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிற மல்லிகைப் பந்தலைப் போன்ற ஒரு மலைநாட்டு நகரத்தின் மாடி வராந்தாவில் குமரப்பனின் கடிதத்தோடு உட்கார்ந்து அவனைப் பற்றிச் சிந்திப்பதே சுறுசுறுப்பையும் துணிவையும் தருகிற அநுபவமாக இருந்தது. குத்துவிளக்கில் பிரசுரம் செய்வதற்காகக் கண்ணாயிரத்தோடும், உதவியாசிரியரோடும், மோகினியைப் பேட்டி காணச் சென்றதைப் பற்றியும், அப்போது மோகினியின் வீட்டில் நிகழ்ந்தவற்றைப் பற்றியும் அந்தக் கடிதத்தில் சத்தியமூர்த்திக்கு எழுதியிருந்தான் குமரப்பன். அந்தக் கடிதத்தில் மோகினியைப் பற்றி மிகவும் பெருமையாக எழுதியிருந்தான். குத்துவிளக்கில் வெளியிடுவதற்காக, தான் எடுத்த மோகினியின் உருவப்படங்கள் இரண்டிலும் ஓரோர் பிரதி கடிதத்தோடு இணைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தான். அந்தக் கடிதத்தை மற்றொரு முறையும் படிக்கத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. "...சித்திரா பௌர்ணமியன்று இரவு வைகையாற்று மணலில் நீயும் நானும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது நீ கூறியிருந்த ஒரு வாக்கியத்தை மோகினியைப் பேட்டி காண்பதற்காகச் சென்றிருந்த தினத்தில் மறுபடியும் நினைத்தேனடா சத்தியம்! 'மோகினியைப் போன்றவர்களின் துன்பத்துக்காக யாரும் இயக்கம் நடத்தமாட்டார்கள். அவர்கள் இப்படியே இந்தக் கவலைகளோடு வெந்து அழிய வேண்டியதுதான்' என்று நீ அன்று கூறிய போது நான் உன்னை மறுத்துப் பேசினேன். இப்போது நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்த பின்பு எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இந்த மாதிரி வீடுகளில் ஏதோ ஒரு கலையையும் யாரோ பல மனிதர்களையும் நம்பி வாழ்கிற சராசரியான பெண்களைப் போல் மோகினியும் இருந்து விட்டால் வம்பில்லை. அவளால் அப்படி இருக்க முடியாது. நரகத்தின் நடுவே தன் ஒருத்தியினுடைய நினைப்பினாலும் செயல்களாலுமே சொர்க்கத்தைப் படைத்துக் கொண்டு வாழ முயல்கிறாள் அவள். மோகினியைப் பேட்டி காண்பது என்ற பெயரில் கண்ணாயிரமும் முத்தழகம்மாளும் வேறு ஏதேதோ காரியங்களைச் சாதித்துக் கொள்ள முயன்றார்கள். அத்தனை அடக்குமுறைக்கு நடுவிலும் அந்தப் பெண்ணிடம் ஓரளவு தன்னம்பிக்கையும், தைரியமும், மீதமிருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுப் போனேனடா, சத்தியம்! 'உங்களுடைய ஆண்டாள் நடனத்தை நீங்களே மனம் விரும்பி, உணர்ச்சி மயமாகவும் பரிபூரணமாகவும் ஆடிய தினத்தைப் பற்றிய அநுபவத்தை நீங்கள் 'குத்துவிளக்கு' வாசகர்களுடன் பங்கிட்டுக் கொண்டு கூறமுடியுமா?' என்றாற் போல் பேட்டியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'மஞ்சள்பட்டி சமஸ்தானத்தில் நவராத்திரியின் போது ஜமீந்தார் முன்னிலையில் ஆட நேர்ந்த சமயத்தில் தான் இவள் பரிபூரணமாக உணர்ந்து ஆடினாள்' என்று கண்ணாயிரமும் முத்தழகம்மாளும் இந்தக் கேள்விக்குத் தாங்களாகவே முந்திக் கொண்டு பதில் சொன்னார்கள். ஆனால் மோகினி இந்தப் பதிலை மறுத்து விட்டு, 'சித்திரா பௌர்ணமியன்று தமுக்கம் பொருட்காட்சியில் ஆடியபோது தான் நான் என்னை மறந்து இலயிப்போடு ஆண்டாளாகவே மாறி ஆடினேன். அதைப் போல் வேறெந்த தினத்திலும் பெருமிதமாக நான் ஆடியதில்லை' எனப் பதில் கூறினாள். இந்தப் பதில் அவளுடைய துணிவை நான் புரிந்து கொள்ளத் துணை செய்தது. கண்ணாயிரமும் முத்தழகம்மாளும் அவளைப் படுத்திய பாட்டில் பாதிப் பேட்டி நடந்து கொண்டிருந்த போதே அவள் அழுகையை அடக்க முடியாமல் தவித்ததை என் கண்களாலேயே பார்த்தேன். பேட்டி முடிந்ததும் அவள் அழுது கொண்டே எழுந்திருந்து மாடிக்குப் போனாள். இந்தக் கடிதத்தோடு நான் உனக்கு அனுப்பியிருக்கிற படங்களில் சிரித்துக் கொண்டிருக்கிற மோகினியைப் பார்த்தால் இதே படங்களைப் பிடித்து முடித்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் கண்கலங்கி அழுதிருக்க முடியும் என்பதைக் கூட நீ கற்பனை செய்ய முடியாது. ஆனால் வாய்விட்டுக் கதறியோ, அல்லது வாய்விட்டுக் கதற முடியாத மௌனத்துடனோ, அவள் சதா காலமும் எதற்காகவோ அழுது கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உண்மை. அவளுடைய முகத்தையும் கண்களையும் மிக அருகில் பார்க்கும் போது இரவிவர்மா வரைந்திருக்கிற கலைமகளின் தெய்வீகத் திருவுருவம் நினைவு வருகிறதடா சத்தியம். படத்தில் சிரித்துக் கொண்டிருப்பது போல் அவள் எப்போதாவது தப்பித் தவறிச் சிரித்தால் கூட அந்தச் சிரிப்பில் 'இலட்சுமிகரம்' நிறைந்திருக்கிறது. திருமகளைச் சரண் புகுதல் என்ற தலைப்பிலே மகாகவி பாரதியார் எழுதியிருக்கும் கவிதையை நீ படித்திருப்பாயடா சத்தியம். அந்தக் கவிதையிலே திருமகள் எங்கெங்கே வாசம் செய்கிறாள் என்பதைச் சொல்லும் போது 'பரிசுத்தமான கன்னிப் பெண்களின் நகைப்பிலும் அவள் வாசம் செய்வதாக'ப் பாரதியார் பாடியிருக்கிறார். மோகினியின் சிரிப்பிலோ திருமகளும், கலைமகளும் சேர்ந்து வாசம் செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. 'மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன்' என்று கண்களில் நீர் நெகிழக் கதறிக் கொண்டே ஆடும் போது அவளைப் பார்த்தால் மெய் சிலிர்க்கிறது. அவளுடைய அம்மாவும் கண்ணாயிரமும் அவளை எப்படி எப்படியோ ஆட்டிப் படைக்க முயலுகிறார்கள். ஆண் மக்கட் காவல் இல்லாத இந்த மாதிரிக் குடும்பம் ஒன்றும், இதற்கு ஆலோசகராகக் கண்ணாயிரத்தைப் போல் ஒரு வரம்பில்லாத போலி மனிதனும் வாய்த்துவிட்டால் மேலே சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. எந்த வகையிலாவது தன்னைப் பெரிய மனிதனாக நிரூபித்துக் கொண்டு சமூகத்தில் உலாவ வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் கண்ணாயிரம். மோகினியும் முத்தழகம்மாளும் தன் சொற்படி கேட்கிறவர் என்று பிறர் புரிந்து கொள்வதனால் கண்ணாயிரத்துக்குச் சில சௌகரியங்கள் இருந்து வருகின்றன. ஏழு எட்டு இடங்களுக்கு மோகினியோடும் முத்தழகம்மாளோடும் இப்படிப் போய்ப் பார்த்துப் பேசிச் சிரித்துவிட்டு வருவதனால் நாலைந்து இடங்களில் தன்னை ஞாபகம் வைத்துக் கொண்டாலும் கண்ணாயிரத்தின் விளம்பரத் தொழிலுக்கு அல்லது தொழில் விளம்பரத்துக்கு அது இலாபகரமான காரியம் தான். இந்த இலாபகரமான காரியத்துக்குத் தன்னையும் ஒரு கருவியாகக் கண்ணாயிரம் பயன்படுத்திக் கொள்ள முயலுவதும் அப்படிப் பயன்படுத்திக் கொள்வதற்கு அம்மா தெரிந்தும் தெரியாமலும் உடன்படுவதும் புரியப் புரிய மோகினி மனம் குமுறுகிறாள். ஆனால் கண்ணாயிரம் யாருடைய மனக்குமுறலைப் பற்றியும் எதற்காகவும் கவலைப்பட மாட்டான் என்பதை நான் அறிவேன். யார் யாரை எப்படி வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிந்தவன் கண்ணாயிரம். வெண்டைக்காய்ப் பொரியலையும் எலுமிச்சம் பழ ஊறுகாயையும் பற்றியே இருபத்து நான்கு மணி நேரமும் பேசிக் கொண்டு திரிகிற சாப்பாட்டுப் பிரியரான பெரிய மனிதரிடம் கண்ணாயிரம் அதைப் பற்றியே பேசுவான். அப்படிப்பட்டவருக்கு எப்போதாவது எதற்காகவாவது கடிதம் எழுதினால் கூட அந்தக் கடிதத்தில் எங்காவது ஓரிடத்தில் கீழ்க்காணும் வாக்கியத்தைக் கண்ணாயிரம் நிச்சயமாக எழுதியிருப்பான். 'இரண்டு நாளைக்கு முன் நம் வீட்டில் வெண்டைக்காய்ப் பொரியல் வைத்திருந்தார்கள். நன்றாக வாய்த்திருந்தது. ஆனால், அதை ருசித்துச் சாப்பிடுவதற்கு நீங்கள் அருகில் இல்லையே என்று நான் வருந்திய வருத்தம் கொஞ்சம் நஞ்சமில்லை.' கண்ணாயிரம் தானே ஒரு வீட்டுக்கு விருந்துச் சாப்பாடு சாப்பிடப் போய்விட்டுத் திரும்பி வந்த பின்பு அந்த வீட்டுக்குரியவருக்கு நன்றி தெரிவித்து எழுதுகிற கடிதமானால் அதில் மேல்படி வாக்கியம், 'சென்ற வாரம் உங்கள் வீட்டு விருந்துச் சாப்பாட்டில் பரிமாறிய வெண்டைக்காய்ப் பொரியலைப் போல் இந்தப் பிறவியில் இதுவரை வேறெங்கும் நான் சாப்பிட நேர்ந்ததில்லை; இனியும் நேரப் போவதில்லை' என்று மாறி அமைந்திருக்கும். யாரோடு பேசினாலும், யாருக்கு எழுதினாலும் அந்த விநாடி வரையிலும் அதற்கப்பாலும் அவர்களுக்காகவே தான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல் ஒரு பிரமையை உண்டாக்கி விடுவதில் கண்ணாயிரத்துக்கு நிகர் கண்ணாயிரம்தான்." கடிதத்தின் இந்தப் பகுதியைப் படித்துக் கொண்டிருந்த போது, 'கண்ணாயிரத்தைப் போன்றவர்கள் நாலைந்து பேரோ அல்லது கண்ணாயிரத்திடமுள்ள தன்மைகள் உள்ள நாலைந்து பேரோ இல்லாத ஊர் எங்குமே கிடையாது போலிருக்கிறதடா குமரப்பன்! மல்லிகைப் பந்தல் கல்லூரியிலும் அந்த மாதிரி மனிதர்கள் சிலரை நான் சந்தித்து வருந்திக் கொண்டிருக்கிறேன்' என்று வாய்விட்டுக் கதற வேண்டும் போல் இருந்தது சத்தியமூர்த்திக்கு. வாழ்க்கையின் கண்ணெதிரே நடந்து போகிற நல்லவர் கெட்டவர்களைக் குமரப்பன் எவ்வளவு நன்றாகப் படித்து உணர்கிறான் என்றெண்ணி நண்பனை வியக்கவும் தோன்றியது அவனுக்கு. நண்பனுடைய கடிதத்தை ஒரு முறைக்கு இருமுறையாகப் படித்தபின் மோகினியின் புகைப்படங்களை மறுபடியும் பார்த்தான் அவன். அந்தப் படங்களில் அபிநயக் கோலத்தோடு அவள் சிரித்துக் கொண்டிருக்கிற சிரிப்பையும் பார்த்தான். அந்தச் சிரிப்பில் தெரிந்த இலட்சுமீகரத்தையும் தெரியாமல் மறைந்திருந்த சோகத்தையும் கூட அப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற அந்த அழகுப் பல்வரிசை அவன் நினைவில் நிறைந்தது. அதே கடிதத்தில் குமரப்பன் மேலும் எழுதியிருந்தான். "கண்ணாயிரத்தைப் போல் எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டுமென்ற நியாயத்தை மீறிய வேகத்துடன் ஓடி வருகிறவர்களுக்கு வாழ்க்கையின் எல்லா வழிகளும் தாராளமாகவும் எதிர்ப்பின்றியும் திறந்தே வைக்கப்பட்டிருக்கின்றன. மோகினியையும் உன்னையும் என்னையும் போல் நிதானமாக நடந்து வருகிறவர்களுக்கும் நியாயத்தையும் அதனால் வருகிற துன்பங்களையும் ஏற்றுக் கொண்டு செல்ல விரும்புகிறவர்களுக்கும் வாழ்க்கையின் எல்லா வழிகளிலும் ஏதாவதொரு தடை காத்துக் கொண்டிருக்கிறது. 'கார்ட்டூன் படத்தில் யாராவது ஒருவர் சிரிப்பதாக நான் வரைந்தேனானால் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்ற தோற்றம் முக்கியமில்லை! எதற்காக என்ன பாவனையில் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்ற குறிப்பு தான் முக்கியம்.' அதைப் போல மனிதன் வாழ்கிறான் என்பதை விட, எப்படி எதற்காக வாழ்கிறான் என்பதுதான் முக்கியம். ஆனால் கண்ணாயிரத்தைப் போன்றவர்கள் 'எதற்காக வாழ்கிறார்கள்?' என்ற கேள்வி தங்களைப் பற்றிப் பிறரிடம் எழுதுவதற்குக்கூட அவகாசம் கொடுக்காமல் அத்தனை வேகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆமை முயல் கதையில் 'ஸ்லோ அண்ட் ஸ்டடி வின்ஸ் தி ரேஸ்' (மெதுவாகவும், நியாயமாகவும் போய்ப் பந்தயத்தில் வெற்றியடையலாம்) என்று மூன்றாவது வகுப்பில் நீயும் நானும் படித்த நீதி போதனை இப்போது இந்த வயதுக்கும் இந்த நாள் அனுபவங்களுக்கும் ஏற்றாற் போல் புதிய தொனியுடன் எனக்கு இன்றும் ஞாபகம் வருகிறதடா சத்தியம். உலகத்தின் அநியாயங்களையும், பரபரப்பையும் பார்த்து நாம் பொறுமை இழந்து போகிற சமயங்களில் இந்த நீதிக் கதையின் மேலும் இதை எழுதியவன் மேலும் கோபம் கோபமாக வருகிறது. துன்பங்களால் பொறுமை இழந்து தவிக்கும் சில சமயங்களில் நீதி நூல்களையும், அற நூல்களையும் வாழ்க்கையில் நன்றாக ஏமாறிய அப்பாவிகள் ஒன்று சேர்ந்து கொண்டு எழுதி வைத்திருப்பார்களோ என்று கூடத் தோன்றி விடுகிறது. இப்படித் தோன்றுவது பாவமாயிருக்கலாம். ஆனாலும் 'இப்படி நினைப்பது பாவம்' என்ற எச்சரிக்கையோடு சேர்த்தே நாம் நினைக்கிற பாவங்கள் இல்லையா? அவற்றில் இதையும் ஒன்றாக வைத்து நமக்கு நாமே மன்னித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இப்போது நேரமில்லை. அவற்றை இன்னொரு கடிதத்தில் எழுதுகிறேன்" என்று முடித்திருந்தான் குமரப்பன். மாலையும் இரவும் கலந்து மயங்குகிற அந்த வேளையில் மல்லிகைப் பந்தல் நகரத்தின் இதயம் போன்ற பகுதியாகிய 'லேக் சர்க்கில்' கலகலப்பாகவும் இருந்தது. கார்களின் ஹாரன் ஒலிகளும், பச்சையும் சிவப்புமாக மின்னி மறையும் விளக்கு ஒளிகளும், கூட்டம் கூட்டமாக ஆண்களும், பெண்களுமாய்ச் சிரித்துப் பேசிக் கொண்டு போகும் மனிதர்களின் குரல்களும், வானொலி இசையும், ஏரியில் படகுகள் நீரைக் கிழிக்கும் ஓசையுமாகச் சூழ்நிலையில் உயிரோட்டம் நிறைந்திருந்தது. சாலையில் இரு பக்கத்திலும் பாக்கு மரங்கள் பாளை வெடித்துப் பூத்துக் குலை தள்ளியிருந்தன போலும். அந்த வாசனை வீதியெல்லாம் நிறைந்து பெருமைப்படுத்திக் கொண்டிருந்தது. எப்படி எந்தச் சொற்களினால் வருணித்து முடிக்கலாமென்று நினைக்கவும் முடியாத மங்கலமான வாசனையாயிருந்தது அது. கோயில் மூலக்கிரகத்தின் புனிதமும் மல்லிகை பிச்சிப் பூக்களின் மயக்கும் தன்மையும், கஸ்தூரியின் கமகமப்பும் எல்லாம் சேர்ந்தாற் போன்று நறுமணமாயிருந்தது. இந்த நறுமண வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்த போது சத்தியமூர்த்திக்கு வேறு ஒரு வாசனையும் ஞாபகம் வந்தது. மோகினியின் வீட்டில் மல்லிகைப் பூக்களும் அகிற்புகையும் மணத்துக் கொண்டிருந்த சாயங்கால வேளை ஒன்றில் அவளோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை நினைத்தான் அவன். வாசனைக்கும் மனிதனுடைய ஞாபகங்களுக்கும் ஏதோ ஒரு நுணுக்கமான தொடர்பு இருக்க வேண்டும் போலும். லேக் அவென்யூவின் தன்னுடைய மாடி அறையிலிருந்து சத்தியமூர்த்தி ஒவ்வொரு நாள் வைகறையிலும் படியிறங்கிக் கீழே வரும் போது 'ராயல் பேக்கரி' வாசலில் படரவிட்டிருக்கும் கொடி மல்லிகை பொல்லென்று பூத்துக் கொட்டியிருக்கும். காலை நேரத்தின் குளிர்ச்சி நீங்காத சூழலில் அந்தப் பூக்களின் வாசனையை நுகர்கிற முதல் மனிதனாக அதைக் கடந்து மேலே நடந்து தெருவுக்குள் போவதற்கு முன்பாகச் சத்தியமூர்த்தி ஒரு கணம் அந்த இடத்தில் தயங்கி நிற்பது வழக்கம். அந்த இடத்தில் நின்றால் நேர் எதிர்ப்பக்கம் வெள்ளி உருகி மின்னுகிறதோ என ஏரிக்கு அப்பால் தெரியும் மலை முகட்டில் ஓர் அருவி மலையே சிரித்துக் கொண்டிருப்பது போல் தோன்றும். அந்த அருவியைப் பார்த்து வியந்து கொண்டே 'மலை நகைத்தனைய வெள்ளருவி' என்று பாடப்பட்டிருக்கும் அழகிய இலக்கியத் தொடரையும் நினைத்துக் கொண்டு மேலே செல்வது அவன் வழக்கம். அந்தக் கொடி மல்லிகைப் பூக்களின் வாசனையில் தயங்கி நிற்கும் போது, சில வாரங்களுக்கு முன்பு சங்கீதம் விநாயகர் கோயில் தெருவின் அந்தச் சின்னஞ் சிறு வீட்டில் முருகன் படத்திலிருந்து தவறிக் கழுத்தில் விழுந்த மல்லிகைப் பூமாலையும் அந்த மாலையோடு மாலையாகச் சேர்த்துத் தோள்களைப் பற்றிய கைகளும் அவற்றின் நறுமணமும் சத்தியமூர்த்தியின் நினைவில் தோன்றி நிறைவது உண்டு. அந்தப் பூக்களின் வாசனையை நினைக்கும் போது அவனால் மோகினியையும் சேர்த்து நினைக்காமல் இருக்க முடியாது. அன்றிரவு பாக்கு மரங்கள் பூத்து மணக்கும் வீதி வழியே இரவுச் சாப்பாட்டுக்காக உணவு விடுதிக்குச் சென்ற போதும், அதே வழியாகத் திரும்பி வந்த போதும், அவன் நினைவுகளை மோகினியே ஆண்டு கொண்டிருந்தாள். அறைக்குத் திரும்பியதும் மேஜை விளக்கைப் போட்டு டிராயரிலிருந்து அந்தப் புகைப்படங்களை எடுத்துப் பார்த்தான் அவன். நீலப்பட்டுப் போர்த்த மேஜை விளக்கின் அடங்கிய மெல்லொளியில் உயிருள்ள மோகினியே 'கலீவரின் யாத்திரையில்' வருகிற சிற்றுருவம் போலத் தத்ரூபமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள். 'மந்த மாருத நடையிற் - சிந்தும் நகையொடு சிவந்த இதழ்கள்' - என்ற நவநீத கவியின் பாடல் ஒன்று ஆரம்பமாகும். அந்தப் பாடலின் பெயர் 'கன்னிமைக் கனவுகள்' என்பது. அந்தப் பாடல் வரியையும் நினைத்துப் படத்தில் சிரித்துக் கொண்டிருக்கிற மோகினியையும் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்த நிலையில் பதிலுக்குத் தானும் சிரிக்க வேண்டும் போலப் பாவித்துக் கொண்ட காரணத்தால் அப்போது அவன் இதழ்களும் அந்தப் படத்தை நோக்கி மலர்ந்தன. மறுநாள் காலையில் கல்லூரி வகுப்புக்களில் செய்ய வேண்டிய சொற்பொழிவுகளுக்காகச் சிந்தனை செய்தும் இரண்டொரு புத்தகங்களைப் படித்தும் சில குறிப்புக்கள் எடுக்க வேண்டியிருந்தது. இரவு எட்டரை மணியிலிருந்து ஒன்பதரை மணி வரை ஒரு மணி நேரம் அந்தக் காரியத்தைச் செய்துவிட்டுப் படுக்கச் சென்றான் சத்தியமூர்த்தி. அன்றென்னவோ அவனுடைய ஞாபகத்தில் மோகினியே இருந்தாள். சித்திரா பௌர்ணமியன்றே தான் பெருமிதமாக ஆண்டாள் நடனத்தை ஆடியதாகக் குத்துவிளக்கு பேட்டியில் அவள் மறுமொழி கூறினாள் என்று அறிந்ததும் சத்தியமூர்த்தி அவளுடைய அன்புக்காகப் பெருமிதப்பட்டான். சித்திரா பௌர்ணமியன்று நாட்டியம் முடிந்ததும் அவளோடு தனிமையில் பேசிக் கொண்டிருந்த பேச்சும் அவனுக்கு நினைவு வந்தது. அன்று அவன் எதைச் செய்தாலும் அவளுடைய நினைவிலேயே போய் முடிந்தது. எதைத் தொடங்கினாலும் அவளுடைய நினைவோடுதான் ஆரம்பமாயிற்று. குளிர்ந்த காற்றும் பாக்கு மரங்களின் பூத்த நறுமணமுமாக அறைக்குள் படுத்த சில விநாடிகளில் ஆழ்ந்து உறங்கிப் போயிருந்தான் சத்தியமூர்த்தி. அன்றிரவு உறக்கத்தில் அவன் ஒரு கனவு கண்டான். உறங்குவதற்கு முந்திய ஞாபகங்களும், நினைவுகளும் பொருத்தமாகவும், பொருத்தமின்றியும் இணைந்தும், இணையாமலும் அந்தக் கனவாக விளைந்திருந்தது. எல்லாவிதத்திலும் அந்தக் கனவின் நிகழ்ச்சிகள் அபூர்வமாகவும், விளங்கிக் கொள்ள முடியாதனவாகவும் இருந்தன. ***** பிரம்மாண்டமான பெரிய பெரிய கட்டிடங்கள், வரிசை வரிசையாக அணிவகுத்திருக்கும் ஓர் அழகிய வீதி தெரிகிறது. அந்த வீதியின் நடுவே கிழிந்த சட்டையும் அழுக்கடைந்த வேட்டியுமாக அத்தகைய வீதியின் அழகுக்கும் செழிப்புக்கும் சிறிது கூடப் பொருத்தமில்லாத பிரகிருதியாகச் சத்தியமூர்த்தி நடந்து போய்க் கொண்டிருக்கிறான். அவனுடைய முகம் பொலிவிழந்து, தளர்ச்சியாகவும் சோர்ந்து தெரிகிறது. வாழ்க்கையில் நீதி நேர்மைகளுக்காகப் போராடிப் போராடிச் சலித்த சலிப்பு நடையில் தெரிகிறது. ஆனால் அந்தச் சலிப்பான வேளையிலும் அவனுடைய வலது கால் தான் நடப்பதற்கு முந்திக் கொண்டிருக்கிறது. அப்படி அவன் அந்த வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது நடுவழியில் ஒரு சம்பவம் நேரிடுகிறது. வீதியின் வலது சிறகில் உல்லாச மாளிகையாய்த் தெரியும் ஒரு பெரிய வீட்டின் பளபளப்பான சலவைக்கல் படிகளில் பாதசரங்களும், கொலுசுகளும், சலங்கையும் ஒலிக்க - ஒலிகளின் இனிமையெல்லாம் ஒன்றாகி நடந்து வருவது போல அவசர அவசரமாகப் படி இறங்கி ஓடி வந்து ஒரு பெண் மின்னலாய் எதிர் நின்று அவனை வழி மறிக்கிறாள். அவள் விடுபட்டு இறங்கி வந்த வீட்டிற்குள்ளிருந்து சகலவிதமான வாத்தியங்களின் இனிய ஒலிகளும் அவளைத் தேடி மீண்டும் அழைப்பது போல் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த ஒலிகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தன் இதயத்தில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் வேறு ஓர் ஒலிக்கு மதிப்பு அளிக்கிறவளாய் அவனருகே வந்து நின்றாள் அவள். சிறிது நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் கண் கலங்கி நீர் மல்க நின்ற பின் அவள் கீழே குனிந்து, நெடுந்தூரத்து வழி நடையால் புழுதி படிந்து பொலிவும் நிறமுமற்றிருந்த அவனுடைய பாதங்களைத் தொட்டுத் தன் கண்களில் ஒத்திக் கொள்கிறாள். "என்னுடைய புழுதி படிந்த கால்கள் நீ தொழுவதற்குத் தகுதியற்றவை பெண்ணே!" இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது தன்னுடைய சொல்லும் நாவும் குழறிப் போய்த் தடுமாறுகிறான் அவன். அவளோ பிடிவாதமாக அவனையே தொழுகிறாள். "ஐயா! அப்படிச் சொல்லாதீர்கள். இந்தக் கால்களில் வந்து படிந்திருப்பதினாலேயே தூசிக்கும் கூடத் தொழத் தகுந்த மதிப்பு ஏற்படுகிறது" என்று கண்களில் நீர் நெகிழ அவன் கால்களில் வீழ்ந்து கதறுகிறாள் அவள். "இந்த ஏழையைத் தொழுவதனால் ஒரு பயனுமில்லை" என்று தன்னை விடுவித்துக் கொண்டு மேலே நடக்க முயல்கிறான் அவன். "ஆதரவற்றதெல்லாம் ஏழை தான்! அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை" என்கிறாள் அவள். "உன்னுடைய இந்த அன்பு எனக்குப் பூட்டும் விலை மதிப்பற்ற விலங்காக இருக்கிறது பெண்ணே! இந்த விலங்கைக் கழற்றினாலும் எனக்கு வேதனை; கழற்ற முடியாவிட்டாலும் வேதனை" என்று அவன் பதிலுக்குக் கதறுகிறான். ***** இவ்வளவில் அவன் கனவு அரைகுறையாகக் கலைந்து போய் விடுகிறது. சரியாக இந்தக் கனவு தொடங்கிக் கலைந்து சத்தியமூர்த்திக்கு விழிப்பு வந்தபோது விடியற்காலை ஐந்து மணிக்கு மேலாகியிருந்தது. விழித்து எழுந்த பின் நீராடுவதற்காகக் குளியலறைக்குள் புகுந்த போதும், உடை மாற்றிக் கொண்டு தலை சீவுவதற்காகக் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்ட போதும் அவன் மோகினியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். மாடியிலிருந்து காப்பி அருந்தி வருவதற்காகக் கீழே படி இறங்கிய போது, எதிரே தெரிந்த அருவியும், அங்கே பூத்து மலர்ந்திருந்த மல்லிகையும் சேர்ந்து அவன் நினைப்பை ஆண்டன! 'கால் நடையினிலே உந்தன் காதல் தெரியுதடீ' என்று முணுமுணுத்தபடி மெல்ல மேலே நடந்தான் சத்தியமூர்த்தி. பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
ஆப்பிளுக்கு முன் வகைப்பாடு : புதினம் (நாவல்) இருப்பு உள்ளது விலை: ரூ. 170.00தள்ளுபடி விலை: ரூ. 155.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |