38
ஏழைகள் புதிது புதிதாகக் கவலைப்பட்டுச் செலவுக்குப் பணம் தேடுகிறார்கள். பணக்காரர்களோ புதிது புதிதாக யோசித்துப் பணத்துக்குச் செலவு தேடுகிறார்கள். "வீணாகப் பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. சாயங்காலம் நானும் உன் கூட வருகிறேன். மேற்கே கோச்சடைக்குப் போகிற வழியில் வையைக் கரையோரம் உள்ள ஜமீன் மாளிகையில் ஜமீந்தார் தனியாகத்தான் இருப்பார். போய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்து விடலாம். இனிமேல் நீ அந்த நாட்டியக்காரியைத் தேடிக் கொண்டு செல்லாதே. அதெல்லாம் பெரிய இடத்து விவகாரம். ஜமீந்தார் கோபத்துக்கு ஆளாகக் கூடாது. கண்ணாயிரமும் ஜமீந்தாரும் நினைத்தால் யாருக்கு என்ன கெடுதல் வேண்டுமானாலும் செய்ய முடியும். இந்தக் குத்துவிளக்குப் பத்திரிகையை ஜமீந்தார் விலைக்கு வாங்கறதுக்கு முன்னாலே ஒரு சமயம் இப்ப ஆஸ்பத்திரியிலே படுத்துக்கிட்டிருக்காளே, இந்த நாட்டியக்காரப் பெண்ணைப் பேட்டி கண்டு வருவதற்காக கண்ணாயிரம் குமரப்பனையும் இன்னொரு உதவியாசிரியரையும் அழைச்சிட்டுப் போயிருந்தாராம். அப்படிப் போயிருந்தப்போ கண்ணாயிரத்தையும் வச்சிக்கிட்டே அவரையும் ஜமீந்தாரையும் பற்றி இந்தக் குமரப்பன் ஏதோ குத்தலாகப் பேசினானாம். அந்தப் பகையை மனத்திலே வைத்திருந்து 'குத்துவிளக்கை' விலைக்கு வாங்கினதும் முதல் வேலையா அவனோட வேலைக்குச் சீட்டுக் கிழிச்சிருக்காங்க..." என்று தந்தை கூறியவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி இறுதியாக அவர் சொல்லிய செய்தியால் பொறுமையிழந்தான்.
சத்தியமூர்த்தி இப்படித் தன் தந்தையை எதிர்த்துப் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டுக் குமுறும் மனநிலையோடு இருந்தான். தந்தையும் அவனும் இப்படித் தனியே பிரிந்து வந்து வீட்டின் பின் கட்டில் விவாதித்துக் கொண்டிருந்த போது கூடத்து ஊஞ்சலில் குமரப்பன் தனியே உட்கார்ந்திருந்தான். கண்ணாயிரம் சிகரெட் பிடித்தவாறு குறுக்கும் நெடுக்கும் உலாவிக் கொண்டிருந்தார். நண்பனைக் கூடத்தில் தனியே விட்டுவிட்டு உள்ளே தந்தையிடம் அதிக நேரம் விவாதித்துக் கொண்டிருப்பதைச் சத்தியமூர்த்தி விரும்பவில்லை. அப்போது தந்தைக்கு அவன் கூறிய பதில் கண்டிப்பானதாயிருந்தது. "ஜமீந்தாரிடம் அடிபணிவதோ, மன்னிப்புக் கேட்பதோ முடியாத காரியம். மனிதர்களுக்கும் அவர்களுடைய செல்வாக்குக்கும் பயப்பட்டு நடுங்கிய காலம் மலையேறி விட்டது. நியாயத்துக்கும் உண்மைக்குமே பயப்பட வேண்டிய புதிய சுதந்திரத் தலைமுறையில் நாம் வாழ்கிறோம். ஜமீந்தாரையும் கண்ணாயிரத்தையும் நீங்கள் பெரிய மனிதர்களாக நினைக்கிறீர்கள் அப்பா! நானும், குமரப்பனும் எங்களைப் போல் புதிய சிந்தனை வளத்தை ஒப்புக் கொள்கிற இளைஞர்களும் அவர்களைச் சமுதாய விரோதிகளாக நினைக்கிறோம்!" "இப்படிப் பேசினால் உருப்படாமல் தான் போகப் போகிறாய்; எக்கேடும் கெட்டுப் போ... ஆனால் ஒன்று... மறுபடியும் எப்போதாவது அந்த நாட்டியக்காரியைத் தேடிக் கொண்டு போகாதே... அவர்கள் பரம்பரை பரம்பரையா ஜமீன் குடும்பத்துக்குத்தான் பழக்கம். குடியிருக்கிற வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் ஜமீந்தார் செலவிலே அநுபவிக்கிறவங்க வேறே எப்படியிருக்க முடியும்? ஜமீந்தார் சின்ன வயசிலே தாரமிழந்தவரு... அந்த இடத்திலே இந்தப் பெண்ணை வைத்துக் கொள்ளலாம் என்கிற அபிப்பிராயம் அவருக்கு இருக்கும் போலத் தோன்றுகிறது. முத்தழகம்மா மகளும் மகா சௌந்தரியவதியா இருக்கா. அதனாலே ஜமீந்தார் முழு மனத்தையும் அவளிடம் பறிகொடுத்திருக்கார். அந்தப் பெண்ணை வைத்துச் சினிமாப் படம் கூடப் பிடிக்கப் போகிறாராம். அப்புறம் இன்னும் எங்கேயோ பெரிய 'நாட்டிய கலாகேந்திரம்'னு பரத நாட்டியத்தைப் பரப்புவதற்கு ஒரு கலாசாலை வேறே வைக்கப் போகிறாராம். இதெல்லாம் உன்னை எச்சரித்து வைப்பதற்காக கண்ணாயிரம் எனக்குச் சொன்னார். பேரைக் கெடுத்துக் கொள்ளாதே! படித்தவனாக இலட்சணமாக விலகி இரு. ஜமீந்தார் பகை நமக்கு வேண்டாம்..." தந்தை இதைச் சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பாராமல் கண்ணாயிரத்தோடு வெளியே புறப்பட்டுப் போய்விட்டார். அவர் போனதும் அம்மா அருகே வந்து "அப்பாவுக்கும் உனக்கும் என்னடா சண்டை?" என்று தூண்டி தூண்டிக் கேட்டாள். 'ஒன்றுமில்லை' என்று மழுப்பத் தான் முடிந்ததே ஒழிய அம்மாவுக்குத் தெளிவான பதில் எதுவும் சத்தியமூர்த்தியால் சொல்ல முடியவில்லை. அந்த வேளையில் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்த குமரப்பன் வந்து, "இந்தாடா, சத்தியம்! நீயும் உன் தந்தையும் உள்ளே பேசிக் கொண்டிருந்த போது தபால்காரன் இதைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான்" என்று சொல்லி ஒரு கவரை நீட்டினான். கவரின் மேல் மல்லிகைப் பந்தல் கல்லூரி முத்திரை குத்தியிருந்தது. வார்டன் ஏதாவது அவசர வேலையாகப் பாலக்காட்டுப் பக்கம் புறப்பட்டுப் போயிருப்பார். 'வார்டன் ஊரில் இல்லாத போது உதவி வார்டனாகிய நீங்களும் வெளியூரில் போயிருப்பது நல்லதில்லை. உடனே புறப்பட்டு வாருங்கள்' என்று பிரின்ஸிபால் ஒரு குரல் அழுதிருப்பார். அந்த அழுகையே இந்தக் கடிதமாயிருக்கும் என்பதாக நினைத்துக் கொண்டே கடிதத்தைப் பிரித்தால் கடிதம் கல்லூரி அதிபர் பூபதியிடமிருந்து வந்திருந்தது. அந்தக் கடிதத்தை அவசர அவசரமாக எழுதியிருந்தார் அவர். "அன்புக்குரிய சத்தியமூர்த்திக்கு! இன்று காலை எட்டு மணிக்கு உங்களைப் பார்க்க வேண்டுமென்று தேடி ஆள் அனுப்பினேன். நீங்கள் அதிகாலையிலேயே முதல் பஸ்ஸில் அவசரமாக மதுரைக்குப் போயிருப்பதாகத் தெரிந்தது. காலை ஒன்பதரை மணிக்கு இங்கிருந்து புறப்படுகிற மெயில் பஸ்ஸில் இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்புகிறேன். இன்று மாலைக்குள் இந்தக் கடிதம் உங்கள் கைக்குக் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இதை இவ்வளவு அவசரமாக எழுதுகிறேன். நானும் என் மகள் பாரதியும் இன்று பகலில் இங்கிருந்து கார் மூலம் மதுரைக்குப் புறப்படுகிறோம். இன்று காலை இவ்வளவு அவசரமாகப் புறப்பட்டுச் செல்லாமல் புறப்படுவதற்கு முன் நீங்கள் என்னைச் சந்தித்திருந்தால் உங்களையும் என்னோடு காரில் வரச்சொல்லி வற்புறுத்தியிருப்பேன். இந்தக் கடிதத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றை உங்களுக்குத் தெரிவிக்கப் போகிறேன். பல விதங்களில் நவபாரதத்துக்குத் தொண்டு செய்யும் தொண்டர்களையும், பிரமுகர்களையும் கௌரவித்துப் பாரதக் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்குகிறாரல்லவா? இந்த ஆண்டு வழங்கப் போகிற விருதுகளில் தென்னிந்தியாவிலேயே சிறந்த கலைக் கல்லூரியைச் சிறந்த சூழ்நிலையில் மிகச் சிறந்த விடுதிகளுடன் நடத்தி வருகிற எனக்கும் ஒரு கௌரவம் கிடைக்கப் போகிறது. உங்களுடைய கல்லூரி அதிபர் அடுத்த வாரம் விஜயதசமி நாளிலிருந்து 'பத்மஸ்ரீ'யாகி விடுவார். இந்தச் செய்தியை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் தந்தி நேற்றிரவு தான் டில்லியிலிருந்து எனக்குக் கிடைத்தது. இன்று மாலையோ அல்லது நாளைக் காலையோ செய்தித்தாள்களிலும் இச்செய்தி வெளிவந்து விடும். நானும் என் மகள் பாரதியும் இன்று பகல் இங்கிருந்து காரில் புறப்பட்டு இன்று மாலை அல்லது இரவு மதுரைக்கு வந்துவிடுவோம். நாளை மாலை மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை சென்று அங்கிருந்து இரவு விமானத்தில் உடனே டில்லிக்குப் புறப்படலாம் என்று திட்டம் போட்டிருக்கிறேன். மதுரைக்கு வருகிற வழியில் நிலக்கோட்டையிலும், சோழவந்தானிலும் சில வியாபார நண்பர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வரவேண்டியிருப்பதனால் தான் நான் எந்த நேரத்தில் சரியாக மதுரைக்கு வந்து சேருவேன் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் நான் மதுரையில் தங்குகிற பிரமுகருடைய பங்களாவின் விலாசத்தைக் கீழே குறிப்பிட்டிருக்கிறேன். இன்றிரவு ஏழு மணி சுமாருக்கு உங்களை அங்கே எதிர்பார்க்கிறேன். அல்லது நாளைக்குக் காலையிலாவது கட்டாயம் வந்து சந்தியுங்கள். எப்படியும் நான் டில்லிக்குப் புறப்படுமுன் உங்களை அவசியம் பார்த்துப் பேசியாக வேண்டும்..." என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தின் இறுதிப் பகுதியில் அது முழுவதும் காரியக் கடிதம் இல்லை என்பதை நிரூபிப்பது போல 'சத்தியமூர்த்தியும் அவன் பெற்றோர்களும் சுகமாயிருப்பார்கள் என்று தாம் நம்புவதாக' ஒரு வரி சேர்த்திருந்தார் பூபதி. காலாண்டு விடுமுறைத் தொடக்கத்தில் சத்தியமூர்த்தி மாணவர்களை அழைத்துச் சென்றிருந்த 'சோஷியல் செர்வீஸ் காம்ப்' நன்றாயிருந்ததாகத் தாம் கேள்விப்பட்டதாகவும், எந்தக் கிராமத்தில் மாணவர்களால் சாலை செப்பனிடப்பட்டதோ அந்தக் கிராமத்து மக்களும், பஞ்சாயத்துத் தலைவரும் அதற்கு நன்றி தெரிவித்துக் கல்லூரி நிர்வாகத்தினருக்கு எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டு அவனைப் பாராட்டியும் ஒரு வாக்கியத்தை எழுதி அந்தக் கடிதத்தை முடித்திருந்தார் அவர். கீழே மதுரையில் அவர் வந்து தங்கப் போகிற பங்களாவின் விலாசமும் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருந்தது. "என்ன சங்கதி? நீ ஊருக்குப் புறப்பட்டு வந்ததைப் பற்றிப் பிரின்ஸிபல் ஏதாவது தகராறு செய்கிறாரா?" என்று கடிதத்தைப் படித்து முடித்த சத்தியமூர்த்தியை நோக்கிக் கேட்டான் குமரப்பன். "அதெல்லாம் ஒன்றுமில்லை! கல்லூரி அதிபர் பூபதிக்குப் 'பத்மஸ்ரீ' விருது கிடைத்திருக்கிறதாம். விஜயதசமியன்று டில்லியில் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குகிறாராம். டில்லிக்குப் போக விமானம் ஏறுவதற்காகப் பூபதி இன்று இங்கே வருகிறார். அவரைச் சந்திக்கச் சொல்லிக் கடிதம் எழுதியிருக்கிறார்" என்றான் சத்தியமூர்த்தி. அவனும் குமரப்பனும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே வீட்டு வாசலில் சங்கீத விநாயகர் கோயில் தெருப்பையனின் தலை தெரிந்தது. சத்தியமூர்த்தி வாசற்பக்கம் சென்று பையனை எதிர்கொண்டான். "மோகினி அக்கா சொல்லியபடி மீனாட்சி கோவிலிலே அர்ச்சனை செய்தாச்சு. நவராத்திரிக் கூட்டம் நிலை கொள்ளவில்லை. உள்ளே போய் அர்ச்சனை முடிஞ்சு வெளியில் வர நேரமாயிடிச்சு. நீங்க சாயங்காலம் ஆஸ்பத்திரிக்குப் போகப் போறதாகச் சொல்லியிருந்தீங்களே... போனா அக்காவிடம் இந்த அர்ச்சனைப் பிரசாதத்தைக் கொடுத்திடுங்க..." என்று அர்ச்சனை செய்து வாங்கிய குங்குமப் பொட்டலத்தையும், இலையில் சுற்றிக் கட்டியிருந்த பூவையும் சத்தியமூர்த்தியிடம் கொடுப்பதற்கு வந்தான் பையன். அப்போது சத்தியமூர்த்தி அவற்றைப் பெற்றுக் கொள்ளத் தயங்கினான். "ஆஸ்பத்திரியில் பார்வை நேரம் முடிவதற்குள் சீக்கிரம் போக வேண்டும். தாமதமின்றிப் பக்கத்துப் பஸ் ஸ்டாப்பில் போய்ப் பஸ் ஏறிப் புறப்படு. முடிந்தால் மறுபடியும் நான் நாளைக் காலையில் வந்து பார்ப்பதாக உன் மோகினி அக்காவிடம் சொல்!" என்று கூறிப் பையனை அனுப்பிய பின் பூபதியைப் பார்க்கச் சொல்லலாமென்பதாக நண்பன் குமரப்பனிடம் தெரிவித்தான் சத்தியமூர்த்தி. "நீ மட்டும் போய் வா சத்தியம்! உன்னுடைய கல்லூரி அதிபரை நீ பார்க்கச் சொல்லும்போது நான் கூட வரவேண்டாம். இன்னொரு சேதி. இன்று இரவு இரயிலில் புறப்பட்டு மல்லிகைப் பந்தல் ரோடு வரை போய்த் தங்கிவிட்டு நாளைக் காலை முதல் பஸ்ஸிற்கு நான் மலைமேல் போகப் போகிறேன். உனக்கு இன்னும் நாலைந்து நாட்கள் லீவு இருப்பதால் நீ இஷ்டம் போல் புறப்பட்டு வரலாம். என் பெயரில் ஒரு கடையை வேறு அங்கே திறந்து வைத்துவிட்டு நான் இங்கே வந்து இப்படி எத்தனை நாள் உட்கார்ந்திருப்பது?" என்று அன்று மாலையே தான் மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பத் திட்டமிட்டிருப்பதைத் தெரிவித்தான் குமரப்பன். நண்பன் கூறிய காரணம் சரியாக இருந்ததனால் சத்தியமூர்த்தி அவனைத் தன்னோடு தடுத்து நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஏழரை மணிக்கு நண்பன் இரயிலேற வேண்டும். இரயில் நிலையம் வரை உடன் சென்று நண்பனை இரயிலேற்றி அனுப்பிவிட்டு அப்புறம் பூபதியை அவர் கொடுத்திருந்த விலாசத்தில் போய்ப் பார்க்கலாம் என்று எண்ணினான் சத்தியமூர்த்தி. முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு நண்பன் குமரப்பனோடு அவன் புறப்படுவதற்குச் சிறிது நேரமாயிற்று. நடந்தே இரயில் நிலையத்திற்குச் சென்றார்கள் நண்பர்கள். டிக்கட் வாங்கிக் கொண்டு நிலையத்திற்குள் சென்ற பிறகும் இரயில் வந்து புறப்படுவதற்கு இன்னும் அரை மணி நேரத்துக்கும் மேல் மீதமிருந்தது. பிளாட்பாரத்தில் கூட்டமில்லாத பகுதிக்குச் சென்று நண்பர்கள் இரயில் வருகிறவரை பேசிக் கொண்டிருந்தார்கள். தந்தைக்கும் தனக்கும் இடையே நடந்த கடுமையான விவாதங்களைப் பற்றி நண்பனிடம் சொல்லத் தொடங்கினான் சத்தியமூர்த்தி: "கண்ணாயிரமும், ஜமீந்தாரும் அப்பாவை நன்றாக முடுக்கி விட்டிருக்கிறார்கள். அப்பா என்னிடம் வந்து சீறுகிறார். மோகினியைப் போன்றவர்களுடைய வீடு, வாசல், உணவு, உடையெல்லாம் ஜமீந்தார் அவர்களுக்காக அளித்துக் கிடைக்கும் உதவிகளாம். அவளுடைய அழகும் கலைத்திறனும் ஜமீந்தாருக்கு உரியவைகளாம். அவளைப் பார்க்கப் போவதோ அவள் மேல் அனுதாபப்படுவதோ ஜமீந்தாரின் கோபத்தைக் கிளர்ந்தெழச் செய்யுமாம். 'அவளை மறந்துவிடு! வீணாக ஜமீந்தாரின் கோபத்துக்கு ஆளாகிச் சீரழியாதே!' என்று அப்பா என்னை எச்சரிக்கிறார். நானோ என் இதயத்தில் இருந்து ஒருக்காலும் பிரிக்கவும், விலக்கவும் முடியாத பாசத்தை அவள் மேல் வைத்து விட்டேன். 'ஐ கேன் டை வித் ஹெர் - பட் நாட் லிவ் வித் அவுட் ஹெர்' (நான் அவளோடு சாகவும் முடியும் - ஆனால் அவளின்றி வாழ்வது முடியாத காரியம்) என்று 'ஜான் டிரைடன்' பாடியிருக்கிறானே அப்படி இருக்கிறேன் நான். அவளுடைய தவிப்பும் வேதனையுமோ என்னை விட அதிகம். ஜமீந்தார் சின்ன வயதில் தாரமிழந்தவராம். எனவே மோகினியை இழந்து போன அந்த இடத்தில் வைத்து அவளுடைய அழகுக்கும் கலைத்திறனுக்கும் சொந்தம் கொண்டாட ஆசைப்படுகிறாராம்." சிறிது நேரம் ஒரு பதிலும் சொல்லாமல் சத்தியமூர்த்தி கூறியதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த குமரப்பன் நீண்ட பெருமூச்சு விட்டுப் பின் பேசலானான். "உன் நிலமை புரிகிறது சத்தியம்! முழுவதும் புரியவில்லையானாலும் உங்கள் வீட்டு ஊஞ்சல் பலகையில் நான் உட்கார்ந்திருக்கும் போதே ஏதோ பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது என்று ஜாடைமாடையாகப் புரிந்தது. உன்னைக் கூட அங்கேயே இதைப்பற்றி நான் நடுவில் ஒரு முறை கேட்டேன். நீ ஏதோ சிந்தனையில் என் கேள்வியைக் கவனிக்காமல் இருந்துவிட்டாய். இரண்டு மூன்று நாட்களாக நான் ஓர் ஆச்சரியகரமான விஷயத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய அழகு ஒளிரும் சிவந்த முகம் இந்தச் சில நாட்களாகக் கவலையால் வாடியிருக்கிறதடா சத்தியம். உன்னுடைய தாமரைப் பூப்போன்ற பாதங்கள் தூசி படிந்து பொலிவின்றித் தோன்றுகின்றன. உன் கண்களில் இடைவிடாத சிந்தனை தேங்கியிருக்கிறது. உலகத்துக்காகக் கவலைப்படும் போது ஒளி நிறைந்து தோன்றும் அந்த மேதைகளின் முகம் தங்கள் சொந்தக் கவலைகளின் போது தானே வாடி விடுகிற விந்தையை நினைத்தேன்." "உன்னுடைய படிப்பினாலோ சிந்தனைகளினாலோ, நவீன இலட்சியங்களினாலோ நிச்சயமாக நீ ஓர் இளம் மேதை என்பது என் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை இன்று வரை நான் உன்னிடம் கூடச் சொல்லாமல் என் இதயத்தில் பரம இரகசியமாகவே ஒப்புக் கொண்டு பொதிந்து வைத்திருக்கிறேன். ஆனால் சில சமயங்களில் எனக்கு உன்னைப் பார்த்துப் பரிதாபமாயிருக்கிறது. நீயே உனக்கு ஒரு விலங்கைப் பூட்டிக் கொண்டு அழகு பார்க்க முயல்கிறாயோ என்று கூடப் பயமாயிருக்கிறது. உனக்காக நான் கவலைப்படுகிறேன். சமூகப் பிரச்சினைகளின் மேல் அன்பும், அநுதாபமும் கொண்டு கொதித்துக் குமுறிப் பேசிக் கொண்டிருந்த பழைய சத்தியத்தின் முகத்தை நினைத்துவிட்டு இப்போது உன்னைப் பார்த்தால் உன் முகத்தில் ஏதோ ஒன்று குறைகிறதடா சத்தியம்! உண்மையான அன்பு - அதாவது காதல் கூடப் பல சமயங்களில் மனிதன் தனக்குப் பூட்டிக் கொள்ளும் விலை மதிப்பற்ற விலங்காகத்தான் இருக்கிறது." "உண்மையான அன்பு தான் 'கயஸை' லைலாவுக்காகப் பைத்தியம் பிடித்து அலைய வைத்தது. தேவதாஸைப் 'பாரு'வுக்காக இரத்தம் கக்கிச் சாக வைத்தது. அம்பிகாபதியைக் கழுவேற்றியது. இராமனை இலங்கைவரை படையெடுத்துச் சென்று அலைய வைத்தது. சீதையைத் தூக்கிச் சென்றது போல் குடிசையைப் பெயர்த்துத் தூக்கிக் கொண்டு போகிறவர்கள் தான் இராமாயணக் காலத்தில் இராவணர்கள். ஆனால் இந்தக் காலத்திலோ உன்னுடைய மனத்திலிருந்து மோகினியைப் பிரித்தெடுத்துக் கொண்டு போக முயல்கிற மஞ்சள்பட்டி ஜமீந்தாரைப் போன்ற நாகரிக இராவணர்கள் சமூகத்தில் நிறைய இருக்கிறார்கள். உன்னையும், மோகினியையும் நீங்கள் இருவரும் அன்பு செலுத்துவதையும் நான் மிக அதிகமாக மதிக்கிறேன் சத்தியம்! ஆனால் உனக்கு முன்பாக வந்து நிற்கும் பிரச்சினைகளையும், எதிர்ப்புக்களையும் பார்க்கும் போது என் உயிர் நண்பனாகிய நீ இன்னும் முகத்தில் ஒளியிழந்து, கண்களில் சிந்தனை தேங்கிக் கால்கள் நடை சோர்ந்து வாழ்க்கை வீதியில் அலைய நேரிடுமே என்று தான் பரிதாபமாக இருக்கிறது." பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
நீ பாதி நான் பாதி வகைப்பாடு : இல்லறம் இருப்பு உள்ளது விலை: ரூ. 150.00தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |