55
கொள்கையில்லாத படிப்பு வேரில்லாமல் ஊன்றிய செடியைப் போல் சிறிது காலம் பசுமையாய்த் தோன்றி விரைவில் பட்டுப்போய் விடுகிறது.
இப்போது ஜமீந்தார் கடைவீதியிலிருந்து திரும்பியிருந்தாலும் அவர் கோபமாக உள்ளே நுழைந்த கோலத்தைப் பார்த்து அவரிடம் போய்ப் பேசுவதற்குப் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு. கண்ணாயிரத்திடம் சொல்லி அவர் மூலம் ஜமீந்தாருக்குத் தெரிவிக்கலாம் என்றால் கண்ணாயிரமும் உள்ளே மோகினியிடம் ஏதோ இரைந்து கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். கண்ணாயிரத்தைக் கூப்பிட்டுக் கல்லூரி முதல்வர் டெலிபோன் செய்த விவரத்தைக் கூறலாம் என்று நினைத்த பாரதி உடனே அதைச் செய்யத் தோன்றாமல் ஜன்னலருகிலேயே தயங்கினாள். அடுத்த அறையில் கண்ணாயிரம் பட்டுப்புடவைப் பொட்டலத்தைப் பிரித்துப் பரப்பிக் கொண்டு மோகினியிடம் ஏதோ கத்துவதையும், மோகினி விசும்பி விசும்பி அழுவதையும் பார்த்துப் பரிதாபமாயிருந்தது அவளுக்கு. 'இந்தப் பெண்ணை ஏன் இவர்கள் இப்படிப் பாடாய்ப் படுத்துகிறார்கள்?' என்று அவளுக்கு வருத்தமாகவும் இருந்தது. "ஜவுளிக் கடையிலேயே நீ நடந்துக்கிட்ட தினுசைக் கண்டு ஜமீந்தாருக்கு ரொம்பக் கோபம். நீ நடந்துகிறது கொஞ்சம் கூட நல்லாயில்லே மோகீ! இப்பவாவது இதிலே உனக்குப் பிடிச்ச பொடவை ஒண்ணை எடுத்துக் கட்டிக்கிட்டு இந்தப் பூவை தலையிலே வச்சிக்க. முதல்லே வாடிப்போன பழம் பூவைத் தலையிலேருந்து எறி. முகம் கழுவிப் பொட்டு வச்சிக்கிட்டு ஜமீந்தாரிட்டப் போயி ரெண்டு வார்த்தை சந்தோஷமாகப் பேசு... அவரு கோபம் தணியும்" என்று கண்ணாயிரம் நயமாகவும் பயமாகவும் மிரட்டிக் கொண்டிருந்தார். மோகினியோ பாரதி பகலில் சூட்டிவிட்டு இப்போது வாடிப் போயிருந்த அதே பழம் பூவோடு சுவரோரமாக அழுது கொண்டு நின்றாள். கண்ணாயிரத்தையும் அவரருகே நின்ற சத்தியமூர்த்தியின் தந்தையாகிய அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரையும் அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கண்ணாயிரம் மூட்டையைப் பிரித்து உதறியிருந்த பட்டுப் புடவைகளையோ அவள் இலட்சியமே செய்யவில்லை. சிறிது நேரம் அவளோடு வாய்கொடுத்து அழுகையைத் தவிர ஒரு பதிலும் ஒரு பயனும் கிடைக்காமற் போகவே கண்ணாயிரம் அறையிலிருந்து வெளியே வந்தார். அவர்கள் வெளியே வருவதைப் பார்த்த பாரதி, முதல்வர் டெலிபோன் செய்த விவரத்தைக் கூறி அதை ஜமீந்தாரிடம் தெரிவித்து விடும்படி வேண்டிக் கொண்டாள். "சுத்தச் சோம்பேறி மனுஷனாவில்ல இருக்காரு! அவங்களை எப்படி வரவேற்று நம்ம 'கெஸ்ட் ஹவுஸி'லே தங்க வைக்கிறதுங்கிற விவரத்தைச் சொல்றதுக்காகவே இன்னிக்கு மத்தியானம் இந்தப் பிரின்ஸிபலை இங்கே வரவழைச்சிக் கிளிப் பிள்ளைக்குப் பாடம் சொல்ற மாதிரிச் சொல்லி அனுப்பிச்சிருக்கோம். கடைசியிலே காரியத்தைக் கோட்டை விட்டுப்பிட்டாரே" என்று பாரதி கூறியதைக் கேட்டுக் கல்லூரி முதல்வர் மேல் குறைபட்டுக் கொண்டு போனார் கண்ணாயிரம். அவருடைய தலை மறைந்ததும் மோகினியைச் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறுவதற்காகப் பாரதி அவள் அழுது கொண்டிருந்த அறைக்குள் புகுந்தாள். அவளைப் பார்த்ததும் அங்கே தயங்கி நின்று கொண்டிருந்த சத்தியமூர்த்தியின் தந்தையும் அறையிலிருந்து வெளியேறி விட்டார்ர். தான் படிக்கிற கல்லூரி முதல்வரைத் தன்னிடமே தூற்றுகிற அளவு கண்ணாயிரம் துணிந்ததை எண்ணியபோது பொறாமையும் கெட்ட எண்ணமும் நிறைந்த அந்தக் கொடிய முதல்வர் மேல் கூடச் சிறிது அநுதாபம் கொண்டாள் பாரதி. கண்ணாயிரத்தையும், ஜமீந்தாரையும் போல் படிப்பும் சிந்தனையும் இல்லாத முரடர்களிடம் கூடத் திட்டு வாங்கும்படி ஆகிவிட்ட அவர் நிலைமையை எண்ணி அவளுக்குப் பரிதாபமாகவும் இருந்தது. 'கல்லூரி முதல்வரிடமிருந்த அதிகார வெறி, கர்வம், பொறாமை, கெட்ட எண்ணங்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் அவர் ஒரு டபிள் எம்.ஏ., வெளிநாட்டுப் பல்கலைக் கழக அநுபவமும், டாக்டர் பட்டமும் பெற்றவர். ஆங்கில இலக்கியக் கடலைக் கரை கண்டவர். அப்படி எல்லாம் இருந்தும் அவர் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் செல்வாக்குப் பெறவோ, சோபிக்கவோ முடியாமல் போவதற்குக் காரணம் என்னவென்று பாரதி பலமுறை தனக்குள் சிந்தித்துக் காரணத்தையும் உணர்ந்திருக்கிறாள். ஊன்றிய கொள்கைதான் படிப்பின் உறுதிக்குக் காரணம். கொள்கை இல்லாத படிப்பு வேரில்லாமல் ஊன்றிய செடியைப் போல் சிறிது காலம் பசுமையாய்த் தோன்றி விரைவில் பட்டுப்போய் விடுகிறது. கல்லூரி முதல்வருடைய படிப்புப் பட்டுப் போவதற்குக் காரணம் அதுதான். கண்ணாயிரத்தைப் போல் சந்தர்ப்பத்தினால் முன்னுக்கு வந்தவர்கள் கூடக் குறைத்துப் பேசும்படி நிறையப் படித்தவரான முதல்வர் தாழ்ந்து போய்விட்டாரே' என்று மோகினியின் அறைக்குள் நுழைவதற்கு முன், பாரதி நினைத்தாள். இவ்வாறு நினைத்த போது அவள் ஒரே ஒரு கணம் முதல்வருக்காக அநுதாபப்படவும் செய்தாள். அந்த அநுதாபமும் ஒரு கணம் தான். அடுத்த கணமோ அவளுடைய அநுதாபம் முழுமைக்கும் மோகினி ஒருத்தியே பாத்திரமானாள். மோகினியின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூற வேண்டிய காரியத்தைத் தானாகவே ஏற்றுக் கொண்டு அந்தக் காரியத்தில் மனம் நெகிழ்ந்து ஈடுபட்டாள் பாரதி. அதே நேரத்தில் ஜமீந்தாரும் கண்ணாயிரமும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஏமாற்றமளிக்கும் செய்திகளைத் தெரிந்து கொண்டிருந்தார்கள். அன்று பிற்பகல் சத்தியமூர்த்தியிடம் அவனுடைய தந்தையையே அனுப்பி வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்து அது முடியாமற் போயிற்றென்று அறிந்த போதே, அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. விசாரணைக்காக வருகிற போலீஸ் அதிகாரியையும், கலெக்டரையும் தங்களுடைய விருந்தினராகத் தங்க வைத்துத் தடபுடலாக உபசரித்துக் குளிப்பாட்டிக் காரியத்தைச் சாதித்துக் கொள்ள நினைத்துத் தங்கள் சார்பில் பிரின்ஸிபலை இவர்கள் இருவரையும் அழைக்க அனுப்பியிருந்தார்கள் அவர்கள். அதற்கும் அதிகாரிகள் சம்மதிக்காமல் நழுவிவிட்டார்கள் என்று கேள்விப்பட்டதும் ஜமீந்தாருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. வந்திருக்கிற கலெக்டரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தார் அவர். நேர்மையாளரும், முற்போக்கான மனநிலையுடையவருமான இந்தக் கலெக்டரைச் செல்வாக்கைப் பயன்படுத்தியோ, உபசாரங்களைச் செலவழித்தோ ஒன்றும் நெகிழச் செய்து விட முடியாது என்று பலர் சொல்லியிருந்தது நிஜமாகிவிட்டதை அறிந்து, ஜமீந்தாரும் கண்ணாயிரமும், பிரின்ஸிபலும் பயந்தனர். அடுத்த முயற்சியாக அன்றிரவு அவர்கள் மூவரும் தாங்களாகவே கலெக்டரையும், போலீஸ் அதிகாரியையும் சந்திப்பதற்காக 'டிராவலர்ஸ் பங்களா'வுக்குப் போனார்கள். அப்போது அவர்களுக்கு அங்கே இன்னும் பெரியதோர் அதிர்ச்சி காத்திருந்தது. கலெக்டர் முகாம் செய்திருந்த அறையில் கலெக்டரோடு சத்தியமூர்த்தியும் குமரப்பனும் அமர்ந்து சிரிக்கச் சிர்க்கப் பேசிக் கொண்டிருந்தனர். மறுநாள் கலெக்டரும் டி.எஸ்.பி.யும் காலையில் கல்லூரியைச் சுற்றிப் பார்த்தார்கள். முதலில் மாணவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றைச் சந்தித்துப் பேசினார்கள். அப்புறம் சத்தியமூர்த்தியோடு சேர்ந்து அவனுடைய தூண்டுதலுக்குட்பட்டு ஹாஸ்டல் ஷெட்டுக்கு நெருப்பு வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாணவர்களையும், நெருப்பு வைக்கும் போது பார்த்ததாகச் சாட்சி கூறியிருந்த இரண்டு சமையற்காரர்களையும், ஒரு நைட் வாட்ச்மேனையும், கூப்பிட்டு விசாரித்தார்கள். கலெக்டரை அருகில் வைத்துக் கொண்டு அந்த மூன்று சாட்சிகளையும் மடக்கி மடக்கிக் கேள்வி கேட்டார் டி.எஸ்.பி. "நிஜத்தை அப்படியே சொன்னால் பிழைத்தீர்கள்! உங்களை யாராவது பயமுறுத்துகிறார்கள் என்பதற்காகவோ, பணம் கொடுத்து ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவோ, பொய்ச் சாட்சி சொன்னீர்களோ வருஷக்கணக்கில் உள்ளே இருந்து கம்பி எண்ண நேரிடும்! ஜாக்கிரதை" என்று அவர் மிரட்டிய போது முதலில் சமையற்காரர்கள் அழுது கொண்டே உண்மையைக் கூறிவிட்டார்கள். அப்புறம் வாட்ச்மேனும் பயந்து போய் உண்மையைக் கக்கிவிட்டான். 'நெருப்புப் பிடித்துக் கொண்டு எரிந்தது மட்டும் தான் தங்களுக்குத் தெரியும் என்றும் சத்தியமூர்த்தியும் மாணவர்களும் வந்து நெருப்பு வைத்ததைப் பார்த்ததாகக் கூறியது மேலே உள்ள அதிகாரிகளும் நிர்வாகியும் பயமுறுத்தியதற்காகக் கூறிய பொய்' என்றும் அந்த மூவரும் ஒப்புக் கொண்டு விட்டார்கள். கடைசியாகப் பிரின்ஸிபலைக் கூப்பிட்டு விசாரித்த போது அவரும் மென்று விழுங்கினார். கலெக்டரும், டி.எஸ்.பி.யும் பிரின்ஸிபலுக்கு அறிவுரை கூறினார்கள். பிரின்ஸிபலுக்குத் தலை குனியும்படியான நிலைமையாகி விட்டது. "நாம் படித்தவர்கள் என்பதை நிரூபிக்க ஏதாவது நல்ல காரியங்களைச் செய்தால் மட்டுமே போதும் சார்! மானேஜ்மெண்டிற்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்று பையன்களையும், நல்ல ஆசிரியர்களையும் பகைத்துக் கொண்டு விடக் கூடாது. நீங்கள் நிறையப் படித்தவர். நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாளையிலிருந்து ஒழுங்காகக் காலேஜ் நடைபெற வேண்டும். நீங்களும், நிர்வாகிகளும் ஒத்துழைத்து இப்படியெல்லாம் ஒரு தனி ஆசிரியரையும், மாணவர்களையும் கெட்ட பெயர் வாங்கச் செய்திருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கிற போது ரொம்ப வருத்தமாயிருக்கிறது. நான் ஐ.ஏ.எஸ். பாஸ் செய்து கலெக்டராக வருவதற்கு முன் சத்தியமூர்த்திக்கு விரிவுரையாளராக இருந்திருக்கிறேன். எனக்கு அவனை நன்றாகத் தெரியும். அவனுக்குப் பொய் பேசத் தெரியாது. உண்மைக்காக முரண்டும் பிடிவாதமும் செய்கிறவன் அவன். அவனைப் போல் தங்கமான மாணவனாக அந்த நாளிலேயே நான் வேறொருவனைப் பார்த்ததில்லை. நீங்களும் நிர்வாகிகளும் சத்தியமூர்த்தியைப் பிடிக்கவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்று வெளியே பரவினால் கல்லூரியின் பெயரும், நிர்வாகியின் பெயரும், உங்கள் பெயரும் கெடும்" என்று சொல்லிவிட்டுக் கலெக்டர் தம் பேச்சை ஒரு நிமிஷம் நிறுத்திவிட்டு பிரின்ஸிபலின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார். பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
சிறிது வெளிச்சம் வகைப்பாடு : கட்டுரை இருப்பு உள்ளது விலை: ரூ. 450.00தள்ளுபடி விலை: ரூ. 405.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |