56
ஆணின் மனத்தில் உணர்வுகள் தோன்றலாம். ஆனால் பெண்ணின் மனத்திலோ உணர்வுகள் மிக மெல்லப் பூக்கின்றன. உள்ளேயே மணந்து மணந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளைப் பெண் தன்னுடைய பலமான நிதியாக்கிக் கொண்டு விடுகிறாள்.
ஆனால், அதே மாலை வேளையில் மல்லிகைப் பந்தலின் டிராவலர்ஸ் பங்களா வாசலில் இன்னும் சற்று நேரத்தில் அங்கிருந்து மதுரைக்குப் புறப்படுவதாயிருந்த சத்தியமூர்த்தியின் முன்னாள் விரிவுரையாளராகிய இன்றைய கலெக்டர் அவனைக் கூப்பிட்டு மிகவும் அந்தரங்கமாக அவனுடைய எதிர்கால நலனுக்குகந்த அறிவுரை ஒன்றை அவனுக்குக் கூறிக் கொண்டிருந்தார். அந்தக் கலெக்டரின் பழைய மாணவனான குமரப்பனும் அப்போது உடனிருந்தான். சத்தியமூர்த்தியை அருகில் வந்து தட்டிக் கொடுத்து விட்டு ஊருக்குப் புறப்படு முன் விடைபெற்றார் கலெக்டர். 'ஜீப்' தயாராக டிராவலர்ஸ் பங்களாவின் முகப்பில் நின்று கொண்டிருந்தது. "மதுரைக்கு வந்தால் வீட்டுக்கு வா சத்தியம்! என்னுடைய யோசனையையும் மனத்தில் வைத்துக் கொள்! உன் எதிர்காலத்தில் மிகவும் நம்பிக்கை உண்டு எனக்கு. நடந்ததையெல்லாம் கெட்ட சொப்பனம் போல மறந்துவிடு! நான் யோசனை கூறிய விஷயமாக இன்னும் ஒரு வாரத்தில் நானே உனக்கு விவரமாக ஒரு கடிதம் எழுதுவேன் அதன் பிறகு உன் முடிவை நீ எனக்கு எழுதினால் போதும்" என்று சத்தியமூர்த்தியிடம் கூறிவிட்டுக் குமரப்பனின் பக்கமாகத் திரும்பி, "நீ விவரமாக எல்லாவற்றையும் உன் நண்பனுக்கு விளக்கிச் சொல் குமரப்பன்! நானும் ஊருக்குப் போய்க் கடிதம் எழுதுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் கலெக்டர். அந்தக் கலெக்டருக்குச் சத்தியமூர்த்தி இப்போது எவ்வளவோ நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருந்தான். விரிவுரையாளராயிருந்த காலத்திலேயே அவருடைய இலக்கியத் திறனையும் அறிவு நுணுக்கத்தையும் விரும்பி நேசித்தவன் அவன். அரசாங்கப் பிரதிநிதியாக ஒரு பொதுக் காரியத்தில் நியாயம் விசாரிக்க வந்திருந்தாலும், 'சத்தியமூர்த்தி' என்ற தன் பெயரைக் கேள்விப்பட்டதுமே தன்னைப் பற்றிய விவரங்களை விசாரித்து அந்தப் பெயருக்குடையவன் தம்முடைய பழைய மாணவனாகத் தான் இருக்க வேண்டுமென்று அநுமானமும் செய்து கொண்டு உடனே தன்னைக் கூப்பிட்டனுப்பி மனம் விட்டுப் பேசிய அந்தக் கலெக்டரின் பெருந்தன்மையை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தான் அவன். அதையெல்லாம் விடப் பெரிதாக அவன் மனத்தைத் தொட்ட பெருந்தன்மை, 'ஏதோ வந்தோம் - விசாரித்தோம் - போனோம்' என்று முறையைக் கழித்துவிட்டுப் போகாமல், மிகவும் உரிமை பாராட்டி, அவனுடைய எதிர்கால நலனுக்குரிய சிறந்த யோசனை ஒன்றையும் வற்புறுத்திக் கூறிவிட்டுப் போயிருந்தார் அந்தக் கலெக்டர். நண்பன் குமரப்பனுக்கும் அந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அன்றிரவு முழுவதும் சத்தியமூர்த்தி அதைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்தான். அவன் தன் எதிர்காலத்தைப் பொருளாக வைத்துச் சிந்திக்கத் தொடங்கியிருந்த இதே இரவில் அவனைப் பொருளாக வைத்துத் தாங்கள் சிந்திக்கத் தொடங்கியிருந்த சிந்தனைக்கு முடிவே கிடைக்காமல் ஒரே வீட்டின் ஒரே அறையில் இரண்டு பெண் மனங்களும் தவித்துக் கொண்டிருந்தன. அன்றிரவு படுத்துக் கொள்வதற்கு முன் மோகினியும் பாரதியும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஹாலில் வேறு யாரும் இல்லை. அவர்கள் இரண்டு பேர் மட்டுமே தனியாக இருந்தார்கள். கண்ணாயிரமும், கணக்குப் பிள்ளைக் கிழவரும் முன்புறம் ஜமீந்தார் படுத்திருந்த அறையருகில் அவருக்கு உதவியாகக் காத்திருந்ததனால் பங்களாவின் உள்கூடத்தில் மோகினியும், பாரதியும் தனியாக அமர்ந்து பேசிக் கொள்ள வசதியாக இருந்தது. பாரதியின் மனத்திலோ அப்போது கல்லூரி வேலை நிறுத்தத்தைப் பற்றிய விசாரணையில் சத்தியமூர்த்திக்கு நியாயம் கிடைத்து அவர் வென்று விட்டார் என்ற பெருமிதமும் மகிழ்ச்சியுமே நிரம்பியிருந்தன. அந்த மகிழ்ச்சிப் பெருமிதத்தை இன்னும் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போலத் தனக்குத்தானே உணர்ந்தவளாக மோகினியிடம் பேச்சுக் கொடுத்தாள் பாரதி. "அக்கா! உங்களுக்குத் தெரியுமா சேதி! நான் சொன்னேனே, அதுதான்... மாணவர்களுக்கு எல்லாம் விருப்பமான ஓர் இளம் விரிவுரையாளரை வெளியேற்றிவிடுவதற்கு ஜமீந்தாரும் எங்கள் பிரின்ஸிபலும் சூழ்ச்சி செய்கிறார்கள் என்றேனே - அது பலிக்கவில்லை. அந்த நல்ல விரிவுரையாளருக்கு நியாயம் கிடைத்துவிட்டது. இவர்கள் அவரை ஒன்றும் அசைக்க முடியவில்லை..." என்று தொடங்கிச் சொல்லிக் கொண்டு வந்த பாரதியைக் குறுக்கிட்டுத் தன் ஆவலை அடக்க முடியாமல் மோகினி ஒரு கேள்வி கேட்டாள். "அது சரி, பாரதி! அந்த விரிவுரையாளரின் பெயர் என்னவென்று எனக்குச் சொல்லவில்லையே நீ" - இப்படி வினவிய போது வேகமாக அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் அவள் பதில் சொல்லப் போகும் பெயருக்காகக் காத்து தவிக்கத் தொடங்கியிருந்தாள் மோகினி. "அவர் கூட உங்கள் ஊர்க்காரர்தான் அக்கா! அவர் பெயர் சத்தியமூர்த்தி என்பார்கள். இன்னொரு விஷயம் கூட எனக்கே நேற்றுத்தான் தெரிந்தது. உங்களை மதுரையிலிருந்து இங்கே அழைத்துக் கொண்டு வந்தாரே, ஒரு கணக்குப்பிள்ளைக் கிழவர் - அவர் தான் சத்தியமூர்த்தியுடைய தந்தையாம். அவரிடம் அந்தக் கிழவரையே அனுப்பியும் மிரட்டிப் பார்த்திருக்கிறார்கள்... பலிக்கவில்லை" என்று சொல்லிக் கொண்டே வந்த பாரதி மோகினியின் முகபாவத்தில் தெரிந்த மாறுதல்களையும், அவளுடைய கண்கள் கலங்குவதையும் பார்த்துப் பேச்சை அவ்வளவில் நிறுத்தினாள். "ஏனக்கா இப்படி? உங்களுக்குச் சத்தியமூர்த்தியைத் தெரியுமா..." பதில் சொல்லாமல் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள் மோகினி. பாரதி மறுபடியும் அருகில் வந்து, "அவரை ஏற்கெனவே உங்களுக்குத் தெரியுமா அக்கா?" என்று வினவியபோது, 'தெரியும்' என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தாள் மோகினி. சிறிது நேரம் கழித்து, "அப்புறம் என்ன நடந்தது பாரதி? மாணவர்கள் வேலை நிறுத்தம் எப்படி நின்றது? அவருக்கு நியாயம் எவ்வாறு கிடைத்தது?" என்று மோகினியே அழுகையை நிறுத்திவிட்டுத் தன்னைத் தூண்டிக் கேட்ட போது பாரதி ஆச்சரியமடைந்தாள். எனினும் தன் ஆச்சரியத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்தவை எல்லாவற்றையும் மோகினிக்குக் கூறினாள் அவள். மோகினியோ மேலும் மேலும் வேதனை கலந்த ஆர்வத்தோடு சத்தியமூர்த்தியைப் பற்றிப் பாரதியிடம் ஒவ்வொன்றாக வினாவிய வண்ணம் இருந்தாள். "இந்த ஊரில் அவர் எங்கே தங்கியிருக்கிறார் பாரதி? அவர் தான் ஹாஸ்டல் உதவி வார்டன் என்று கூறினாயே? அதனால் ஒருவேளை ஹாஸ்டலிலேயே தங்கியிருக்கிறாரோ?" என்று மோகினி கேட்டபோது சத்தியமூர்த்தியைப் பற்றி அவள் காட்டிய அக்கறையும் சிரத்தையும் பரபரப்பும் பாரதியின் மனத்தில் வியப்பையும் சந்தேகத்தையும் வளர்த்தன. 'நேற்றோ முந்தாநாளோ அந்தக் கணக்குப்பிள்ளைக் கிழவரைப் பற்றி, 'இந்த முதியவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா அக்கா?" என்று இவளிடம் நான் விசாரித்த போது, 'எனக்கு ஒன்றுமே தெரியாதம்மா' என்று அப்பாவிபோல் பதில் கூறினாளே? இப்போது அந்த முதியவரின் மகனான சத்தியமூர்த்தியைப் பற்றி மட்டும் இப்படித் தூண்டித் தூண்டி விசாரிக்கிறாளே? சத்தியமூர்த்தியைப் பற்றி மட்டும் இவளுக்கு என்ன இத்தனை அக்கறை?' என்று மனத்துக்குள் எண்ணினாள் பாரதி. 'சத்தியமூர்த்தியை மட்டும் உங்களுக்கு எப்படித் தெரியும் அக்கா?' என்று மோகினியைக் கேட்டுவிடக் கூடப் பாரதியின் நாவு துடிதுடித்துக் கொண்டிருந்தது. ஆனால் மோகினியின் கலைத்திறனாலும் அழகு பெருமையினாலும் அவள் மேல் தன்னையறியாமலே பாரதிக்கு உண்டாகியிருந்த ஒரு விதமான பயபக்தி அப்படிக் கேட்கவும் துணியவிடாமல் அவளைத் தடுத்துவிட்டது. 'அவரைப் பற்றி இவளுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?' என்று மனம் தூண்டித் தூண்டிக் கேட்க மனத்தின் அந்தக் கேள்வியை உள்ளேயே இரகசியக் குரலாகப் புதைத்துவிட்டு வாய் வார்த்தைகளால் மோகினி கேட்பதற்கெல்லாம் இயந்திரம் போல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் பாரதி. பேச்சு முடிந்து படுத்துக் கொள்ளச் சென்ற பின்போ, இருவருமே உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார்கள். பக்கத்துப் பலகணியின் வழியே தோட்டத்தில் அவசர அவசரமாக முன்னிரவிலேயே மலர்ந்து விட்டிருந்த பவழ மல்லிகைப் பூக்கள் நறுமணம் அறைக்குள் வந்து கமழ்ந்து கொண்டிருந்தது. பலகணிக்கு அப்பால் மலைப் பிரதேசத்தின் மங்கிய வானத்தில் எங்கோ ஒரு மூலையில் கீறிவிட்டாற் போல் பிறை நிலா நகர்ந்து கொண்டிருந்தது. மௌனமாக மெல்ல நகரும் அந்தப் பிறை நிலவும், மந்த மாருதம் போன்ற மெல்லிய காற்றின் சிலுசிலுப்போடு கலந்து அறைக்குள் வந்து நிறையும் பவழ மல்லிகைப் பூக்களின் மணமும் சேர்ந்து மோகினியின் இதயத்தில் தாபத்தைப் பெருக்கின. முந்தினம் மாலையில் பட்டுப்புடவைக் கடையின் வாசலில் சத்தியமூர்த்தியைச் சந்தித்த போதே அவள் தவித்த தவிப்பு இப்போது பன்மடங்காகப் பெருகியிருந்தது. 'இந்தப் பாரதியைப் போல்தானே மல்லிகைப் பந்தல் கல்லூரியிலே படிக்கிற ஒவ்வொரு மாணவனும் மாணவியும் என் அன்பரின் மேல் பெருமதிப்பு வைத்திருப்பார்கள்?' என்று எண்ணிப் பெருமைப்பட்டாள் மோகினி. 'பாரதி சத்தியமூர்த்தியைப் பற்றிய பேச்சை மிகவும் ஆர்வத்தோடு பேசியதற்கும் அந்த விரிவுரையாளருக்கு நியாயம் கிடைத்த செய்தியை மகிழ்ச்சிப் பெருக்கோடு தெரிவித்ததற்கும், அவர் அவளுடைய மதிப்புக்கும் அன்புக்கும் உரிய விரிவுரையாளர்' என்பதைத் தவிர வேறு காரணமே இருக்க முடியாதென்றுதான் மோகினி நினைத்தாள். ஆனால் அதே சமயத்தில் பக்கத்தில் உள்ள மற்றொரு படுக்கையில் புரண்டு கொண்டிருந்த பாரதியோ, 'மோகினிக்குச் சத்தியமூர்த்தியிடம் ஏன் இவ்வளவு அக்கறை?' என்று புரியாப் புதிருக்கு விடை காண முடியாமல் மனம் குழம்பிக் கொண்டிருந்தாள். ஓர் ஆணின் மனத்தில் உணர்வுகள் தோன்றலாம். ஆனால் ஒரு பெண்ணின் மனத்திலோ உணர்வுகள் மிக மெல்லப் பூக்கின்றன. உள்ளேயே மணந்து மணந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளைப் பெண் தன்னுடைய பலமான நிதியாக்கிக் கொண்டு விடுகிறாள். மறுநாள் பொழுது புலர்ந்ததும் மோகினி அப்படி ஆகிவிட்டாள். மனத்தின் முழுமையான மகிழ்ச்சியை அரைகுறையாக வெளிப்படுத்துவதாக முறிந்து முறிந்து வெளிப்படும் தற்செயலான சங்கீதத்தைப் போல அவளுடைய இதழ்கள் ஏதேதோ பாடல் வரிகளைப் புதிது புதிதாக இசைத்தன. பாரதி அன்றையிலிருந்து கல்லூரிக்குப் போய்வரத் தொடங்கலாம் என்று புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்போது நீராடிய ஈரக் கூந்தலைக் கோதியவாறே மோகினி அவளிடம் தயங்கித் தயங்கி வந்து நின்றாள். "என்ன அக்கா! உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமா? இன்றிலிருந்து காலேஜுக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்..." என்றாள் பாரதி. மோகினி முதலில் சிறிது நாணித் தயங்கிவிட்டு அப்புறம் கூறலானாள்: "உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டும் பாரதி! சத்தியமாக நீ அதைச் செய்வதாக ஒப்புக் கொண்டால்தான் எனக்கு உன் மேல் நம்பிக்கை உண்டாகும்." "அதென்ன அக்கா, அத்தனை பெரிய காரியம்! உங்களுக்குக் காரியமும் ஆக வேண்டும்; அதே சமயத்தில் சத்தியமும் வேண்டுமாக்கும்? சரி!... உங்கள் விருப்பப்படியே சத்தியமாக நீங்கள் சொல்வதைச் செய்கிறேன்... சொல்லுங்கள்" என்று சிரித்துக் கொண்டே இணங்கினாள் பாரதி. "நான் ஒன்று கொடுக்கிறேன். அதை நீ தயவு செய்து எனக்காக 'அவரிடம்' கொண்டு போய்க் கொடுத்து விட முடியுமா பாரதி?" "அவரிடமென்றால் எவரிடம் அக்கா?" "அவர்தான்! நேற்றுப் பேசிக் கொண்டிருந்தோமே, உங்கள் தமிழ் விரிவுரையாளர்..." "யார்? சத்தியமூர்த்தி சாரிடமா?" "ஆமாம் அவரிடம்தான்..." இதைக் கூறும் போது மோகினியின் முகத்திலிருந்த நாணத்தையும், கனிவையும் கண்டு பாரதி திகைத்துப் போனாள். தன் உணர்ச்சிகளை எப்படி மறைத்துக் கொள்வதென்றே அவளுக்குப் புரியவில்லை. மோகினியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கவே தயக்கமாயிருந்தது பாரதிக்கு. சூறையாடப்பட்டது போன்ற மனநிலையில் எதிரே நிற்பவளுக்குப் பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் கீழே குனிந்த தலையுடன் கால் கட்டை விரலால் தரையைத் தேய்த்துக் கொண்டு நின்றாள் பாரதி. 'கோ' வென்று கதறி அழுதுவிடாமல் மிகவும் சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள் அவள். அவளுடைய நிலையையும் அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் தலைகுனிந்து விட்டதையும் பார்த்துத் தான் கூறிய காரியத்தை 'அவளால் செய்ய முடியாதோ என்னவோ' என்று தானாகவே அநுமானித்துக் கொண்டே மோகினி, "ஏன்? என்ன? உன்னால் முடியாதென்றால், வேண்டாம் பாரதி!" என்று பதற்றத்தோடு கூறினாள். சில விநாடிகள் வரை மோகினியை நிமிர்ந்து பார்க்கத் துணிவின்றித் தலைகுனிந்து நின்றிருந்த பாரதி பின்பு நிதானமாகவும், நிச்சயமான முகபாவத்துடனும் நிமிர்ந்து பார்த்தாள். "அதெல்லாம் ஒன்றும் இல்லை! என்னால் முடியும். நிச்சயமாக முடியும். ஆனால்..." என்று வார்த்தையை மெல்ல இழுத்து நிறுத்தித் தயங்கினாள். "ஆனால்... என்ன...?" "கல்லூரியில் வைத்து அவரை நான் சந்தித்துப் பேச முடியுமென்று தோன்றவில்லை அக்கா! 'லேக் அவின்யூ'விலுள்ள அவருடைய அறையில் போய் அவர் கல்லூரிக்குப் புறப்படுவதற்கு முன்பே வேண்டுமானால் அவரைப் பார்த்துவிட முடியும்..." "எங்கே பார்த்தாலும் பரவாயில்லை! உன்னை என் கூடப் பிறந்த தங்கையாகப் பாவித்துக் கொண்டு நம்பி இதைக் கொடுத்தனுப்புகிறேன் பாரதீ" என்று கூறிக் கொண்டே மோகினி கொடுத்த கடித உறையைக் கை நீட்டி வாங்கிய போது பாரதியின் கை நடுங்கியது. மனமோ கைகளை விட அதிகமாக உள்ளே நடுங்கிக் கொண்டிருந்தது. அதைத் தானே தன் கைகளால் நேரில் கொண்டு போய்ச் சத்தியமூர்த்தியிடம் கொடுக்கப் போகிற காட்சியைக் கற்பனை செய்த போது தலை சுற்றிக் கொண்டு கீழே தள்ளிவிடுவது போல் உலகமே சுழல்வதாகத் தோன்றியது அவளுக்கு. தன் உணர்ச்சிகள் மோகினிக்கு முன்பாகவே குமுறி வெளிப்பட்டு விடாமல் அவள் மிகவும் சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. "மோகினி கொடுத்தனுப்பினாள் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு வா பாரதி! நீ கல்லூரி விட்டு திரும்பிய பின் சாயங்காலம் உனக்கு நானே எல்லாம் விவரமாகச் சொல்கிறேனம்மா!" என்று எதிரே நிற்பவளின் மனக்குமுறல் புரியாமல் நாணமும் சிரிப்பும் பொங்கிடப் பேதையாக ஏதோ சொல்லத் தொடங்கினாள் மோகினி. அதைக் கேட்ட பாரதியோ செயற்கையாக ஏற்படுத்திக் கொண்ட முக மலர்ச்சியோடு ஏதோ ஒப்புக்குச் சிரிக்க முயன்றாள். பாவம்! பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
சிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |